Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெகிழ வைத்த நிஜங்கள்
+46
ஹாசிம்
றினா
ராஜா
அகல்
கரூர் கவியன்பன்
noorvkr
முஹைதீன்
சந்திரகி
ARR
dhilipdsp
sinthiyarasu
இரா.பகவதி
பது
யினியவன்
ரா.ரா3275
தம்பி வெங்கி
சார்லஸ் mc
பிரசன்னா
ரேவதி
ஹர்ஷித்
Bobshan returns
Dr.சுந்தரராஜ் தயாளன்
Thiraviamurugan
ரபீக்
positivekarthick
சுரேஷ்குமார்
krishnaamma
ஜாஹீதாபானு
kitcha
அருண்
கா.ந.கல்யாணசுந்தரம்
அப்துல்லாஹ்
ந.கார்த்தி
அசுரன்
Manik
மஞ்சுபாஷிணி
பிரகாசம்
கலைவேந்தன்
varsha
நியாஸ் அஷ்ரஃப்
இளமாறன்
ஸ்ரீஜா
SK
உதயசுதா
தமிழ்ப்ரியன் விஜி
சிவா
50 posters
Page 7 of 32
Page 7 of 32 • 1 ... 6, 7, 8 ... 19 ... 32
நெகிழ வைத்த நிஜங்கள்
First topic message reminder :
வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'
நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.
சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.
சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.
`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.
``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.
``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.
சுமதி பாபு, கோவூர்.
நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி
வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'
நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.
சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.
சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.
`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.
``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.
``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.
சுமதி பாபு, கோவூர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நெகிழ வைத்த நிஜங்கள்
கதவைத் தட்டிய திருடன்... கண்டு கொள்ளாத பக்கத்து வீட்டார்!
புறநகரில் வீடு கட்டி நான் என் கணவர், 2 குழந்தைகள் உட்பட மொத்தம் 4 பேர் குடியேறினோம். அக்கம்பக்கத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில வீடுகளே இருந்தன. சில வீடுகள் பாதி கட்டியநிலையில் வேலை நடந்து கொண்டிருந்தன. என்றாலும் ஏதோ ஒரு தைரியத்தில் அங்கே குடியேறி விட்டோம்.
ஒரு நாள் நள்ளிரவு ஒரு மணியளவில் கதவருகே ஏதோ சத்தம். கூர்ந்து கவனித்தபோது திருடன் ஒருவன் கதவில் உள்ள பூட்டை இரும்புக் கம்பி வைத்து திறக்க முயற்சி செய்ததை உணர்ந்தேன். என் கணவரை எழுப்பி விஷயத்தை சொன்னதும், அவர் ஜன்னல் வழியே `பேய்... பேய்' என்று தெருவே அதிர கத்தினார்.
அதன்பிறகு கொஞ்ச நேரம் சத்தம் எதுவும் இல்லாததால் ஒருவழியாக நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மெதுவாக கதவை திறந்து பார்த்தேன். அப்போது சுவர்மறைவில் ஒளிந்திருந்த திருடன் என்னைப் பார்த்ததும் கையில் வைத்திருந்த இரும்புக்கம்பியால் என்னை குத்த ஓடிவந்தான். நான் சட்டென்று கதவை மூடினேன். பிறகு என் 2 பிள்ளைகளையும் சட்டென்று கட்டிலின் அடியில் படுக்க வைத்து விட்டு எங்கள் எதிர்வீட்டுக்கு போன் பண்ணி, எங்கள் வீட்டை திருடர்கள் ரவுண்டு கட்டியிருக்கிறார்கள். எங்களுக்கு உதவுங்கள். போலீசுக்கும் தகவல் சொல்லுங்கள் என கேட்டுக்கொண்டேன்.
அதற்கு அவர்கள் `ம்... ம்...' என்று கேட்டுக் கொண்டார்களே தவிர, இதுவிஷயத்தில் எந்த முடிவும் எடுத்ததாக தெரியவில்லை. இந்த இடைப்பட்ட நேரத்திற்குள் வந்திருந்த 4 திருடர்களும் கொல்லைப்புற கதவைத் தட்டினர். பிள்ளைகளோ விபரீதம் புரிந்து அலறினார்கள். ஆனது ஆகட்டும் என்ற நிலையில் பின்பு நானே போலீசுக்கு போன் செய்தேன். போலீஸ் என்ற வார்த்தையைக் கேட்டதும் திருடர்கள் கதவைத் தட்டுவதை நிறுத்தினார்கள். கொஞ்ச நேரத்தில் அவர்கள் `தபதப'வென்று ஓட்டம் பிடிப்பது கேட்டது.
-க.சித்ரா, இளங்குடி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நெகிழ வைத்த நிஜங்கள்
ஒடிந்து போனார்... உயர்ந்து வந்தார்
நாங்கள் முன்பு விழுப்புரத்தில் வசித்தோம். அப்போது எங்கள் வீட்டின் ஒருபகுதியில் மளிகை கடை வைக்க ஒருவருக்கு இடம் கொடுத்தோம். அவருக்கு கல்யாண வயதில் ஒரு பெண் இருந்தாள். என்ன காரணத்தினாலோ, அவளது திருமணம் தடைபட்டுக்கொண்டே இருந்தது.
எனது அம்மா அவரிடம் `கவலைப்படாதீங்க. உங்க பெண்ணுக்கென்று ஒருவன் எங்கேயாவது பிறந்திருப்பான்!' என ஆறுதல் கூறுவார். அவரும் `உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்.. பார்க்கலாம்..!' என விரக்தியாய் சிரிப்பார்.
இதற்கிடையில் அவரது கடையிலும் வியாபாரம் சரியாக நடக்கவில்லை. வாடகையும் கொடுக்க முடியாத சூழ்நிலை. மிகுந்த மனப் போராட்டங்களுக்கு பிறகு அவர் தனது சொந்த ஊருக்கே செல்ல முடிவெடுத்தார். லாரியில் சாமான்கள் ஏற்றும்போது எங்களைப்பார்த்து அழுதே விட்டார்.
இந்நிலையில் நாங்களும் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு குடி பெயர்ந்து விட்டோம்.
சமீபத்தில் ஒரு நாள் அவர் எங்கள் முகவரியை தேடிக் கண்டுபிடித்து சென்னைக்கு வந்திருந்தார். `மதுரையில் இட்லிக் கடை நடத்துவதாகவும், வியாபாரம் நன்றாக போவதாகவும் திருமணம் தள்ளிப்போன தன் மகளுக்கு மதுரையில் மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும் திருமணத்திற்கு அவசியம் வந்து பெண்ணை வாழ்த்த வேண்டுமென்றும்' கூறினார். அதோடு, தாம்பாள தட்டில் பூ, பழம், புடவை, ஜாக்கெட், ஆறாயிரம் ரூபாய் ரொக்கம்.. இவைகளுக்கு மத்தியில் திருமண பத்திரிகை வைத்து தந்தார்.
`பணமெல்லாம் எதுக்குங்க அண்ணாச்சி?' என என் அம்மா கேட்டார்.
அதற்கு அவர், `மூன்று மாத வாடகைப்பணம் பாக்கி நிலுவையில் இருந்தபோதும் அதை மனசுல வச்சிக்காம நீங்க நல்லாயிருந்தாப் போதும் என எங்களை வாழ்த்தி ஊருக்கு அனுப்பி வைத்தீர்களே.. அதை எப்படி மறக்க இயலும்?' என்று கேட்டார் கண்ணில் நீர் ததும்ப. நன்றி மறவாத மனிதர்கள் இப்பவும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
-சுமதிபாபு, கோவூர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நெகிழ வைத்த நிஜங்கள்
இரவில் தவித்த இளம்பெண்
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு டிபனை முடித்து விட்டு, வெளியே வந்தேன். வரும் வழியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க, கிராமத்து தோற்றம் கொண்ட ஒரு அழகான இளம் பெண், ஒரு பெண் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தாள். கண்கள் கலங்கியிருந்தன. பார்வையில் ஒரு தவிப்பும், பதட்டமும் தெரிந்தது. அவளுக்குச் சற்று தூரத்தில் ஒரு ஆட்டோவில் சாய்ந்து நின்று கொண்டிருந்த இருவர், அந்த பெண்ணை பார்ப்பதும், பிறகு தங்களுக்குள் ஏதோ பேசிக்கொள்வதும் தெரிந்தது.
அந்தச் சூழ்நிலை எனக்கு சற்று விபரீதமாகப் பட்டது. நேரம் இரவு 10 மணியைக் கடந்திருந்தது. அந்தப் பெண்ணைப் பற்றி விசாரிக்கலாமா? என்று நான் யோசித்த வேளையில், அவளாகவே என்னிடம் வந்து பேசினாள். ``சார் என் சொந்த ஊர் மணப்பாறைக்கு அருகில் உள்ள கிராமம். என் கணவர் வியாபார விஷயமாக அடிக்கடி ஊட்டி வருவார். இந்த முறை என்னிடம் சண்டையிட்டு கோபித்துக் கொண்டு வந்து விட்டார். 10 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் ஊர் திரும்பாததால், நான் ஏதோ ஒரு அசட்டுத் துணிச்சலில் அவரைத் தேடிப் புறப்பட்டு வந்து விட்டேன். பஸ்சிலிருந்து இறங்கும் போது, கூட்டத்தில் என் கையிலிருந்த பையை யாரோ திருடி விட்டார்கள். அதற்குள்தான் பர்சும், பணமும் இருந்தது. எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. காலையிலிருந்து நானும், என் குழந்தையும் பட்டினி!'' என்று கூறி கண்கலங்கினாள்.
நான் உடனடியாக அருகிலிருந்த ஓட்டலுக்கு அழைத்துச் சென்று, அவர்கள் இருவரையும் சாப்பிட வைத்தேன். பின்பு பேருந்து நிலையம் அழைத்து வந்து, "எப்படியும் உன் கணவர் வந்து விடுவார்! இனிமேல் நீ ஊட்டிக்கு செல்ல பஸ் கிடையாது. சொந்த ஊருக்கே சென்று விடு! கோவையிலிருந்து திருச்சி சென்று, அங்கிருந்து மணப்பாறை சென்று விடலாம். நீ என்னிடம் உதவி கேட்டது நல்லதாய் போயிற்று! அந்த ஆட்டோ ஸ்டாண்டில் நின்றிருந்த இருவரிடம் சிக்கியிருந்தால் உன் நிலைமை என்ன ஆகியிருக்கும்? ஒரு இளம் பெண் இது போன்று தனியாகக் கிளம்பி வருவது தவறும்மா'' என்று கூறி கோவை செல்லும் பேருந்தில் அவர்கள் இருவரையும் ஏற்றி அமர வைத்து, பிரயாணத்திற்கு தேவைப்படும் பணத்தையும் அவளின் கையில் கொடுத்தேன். அவள் கலங்கிய கண்களுடனும், நன்றிப் பெருக்குடனும் என்னைக் கையெடுத்துக் கும்பிட்டாள். பேருந்து புறப்பட்டு மறையும் வரை அவளின் குழந்தை எனக்கு நன்றி சொல்லும் விதமாக டாட்டா காண்பித்துக் கொண்டிருந்தது!
கோ.குப்புசாமி, மேட்டுப்பாளையம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: நெகிழ வைத்த நிஜங்கள்
SK wrote:இது போல உங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்ததை பதியுங்கள் தல
அது இன்னும் சில வருடங்களில் நான் எழுதவிருக்கும் என் சுயசரிதையாகிய "சிவா புராணம்" புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நெகிழ வைத்த நிஜங்கள்
சிவா wrote:SK wrote:இது போல உங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்ததை பதியுங்கள் தல
அது இன்னும் சில வருடங்களில் நான் எழுதவிருக்கும் என் சுயசரிதையாகிய "சிவா புராணம்" புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!
அப்போ பல கற்பளிப்பு வழக்குகள் முடிவுக்கு வரும்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: நெகிழ வைத்த நிஜங்கள்
பிறர்க்கின்னா முற்பகல் செயின்
தமக்கின்னா பிற்பகல் தாமே விளையும்.
எதையும் எதிர்நோக்காவண்ணம் செய்த உங்களின் உதவிகள் உங்களுக்கு மேன்மயைத் தரும். உறுதி.
தமக்கின்னா பிற்பகல் தாமே விளையும்.
எதையும் எதிர்நோக்காவண்ணம் செய்த உங்களின் உதவிகள் உங்களுக்கு மேன்மயைத் தரும். உறுதி.
Re: நெகிழ வைத்த நிஜங்கள்
SK wrote:சிவா wrote:SK wrote:இது போல உங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்ததை பதியுங்கள் தல
அது இன்னும் சில வருடங்களில் நான் எழுதவிருக்கும் என் சுயசரிதையாகிய "சிவா புராணம்" புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!
அப்போ பல கற்பளிப்பு வழக்குகள் முடிவுக்கு வரும்
ஓ, கற்பளிப்பா... நான் கற்பழிப்பு எனப் பயந்துவிட்டேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நெகிழ வைத்த நிஜங்கள்
உண்மையில் அவர் செய்த காரியம் மனதை நெகிழச் செய்து விட்டது!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நெகிழ வைத்த நிஜங்கள்
அட நம்மல மாதிரி நல்லவங்க இந்த நாட்டுல இருக்கிறார்கள்.நம்மல அப்படின்னு சொன்னது நம்ம ஈகரை குடும்பத்தை.சரிதானே
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Page 7 of 32 • 1 ... 6, 7, 8 ... 19 ... 32
Similar topics
» நெகிழ வைத்த நிஜங்கள் - தொடர் பதிவு
» "நெகிழ வைத்த நிஜம்"
» நெகிழ வைத்த நிஜம்"
» நெகிழ வைத்த அஜித்!
» நெஞ்சை நெகிழ வைத்த போட்டோகிராபர்
» "நெகிழ வைத்த நிஜம்"
» நெகிழ வைத்த நிஜம்"
» நெகிழ வைத்த அஜித்!
» நெஞ்சை நெகிழ வைத்த போட்டோகிராபர்
Page 7 of 32
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|