புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த நிஜங்கள்


   
   

Page 31 of 32 Previous  1 ... 17 ... 30, 31, 32  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 08, 2011 10:02 am

First topic message reminder :

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 06, 2013 2:58 am

எதிரே வந்தவர்...
எகிற வைத்தவர்...


சென்ற வாரம் ஒருநாள் மாலை நானும் என் கணவரும் வேலை முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தோம். வழியில் உள்ள ஒரு பள்ளியின் மாணவ, மாணவிகள் வகுப்புகள் முடிந்து அவரவர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது பக்கத்து தெருவில் இருக்கும் என் தோழியின் 9-ம் வகுப்பு படிக்கும் மகள் பள்ளியின் வாசல் அருகில் தனது தந்தையின் வரவிற்காக காத்துக் கொண்டிருந்தாள்.

அதேநேரம் பள்ளியில் இருந்து சற்றுத் தொலைவில் அவளது தந்தை இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவர் பள்ளியை நெருங்கும் சமயத்தில் எதிரே இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் வந்த நபர் அவரை இடித்துவிட்டுத் திரும்பிப்பார்க்காமலே போய் விட்டார். தந்தை வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததைப் பார்த்த அவரது மகள் அதிர்ச்சியடைந்து அப்பா என்று அலறிக் கொண்டே ஓடி வந்தாள். ரோட்டில் சென்ற சிலரும், நாங்களும் அவரை தூக்கி தண்ணீர் கொடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்து அந்த மாணவியை அவளது தந்தையுடன் வீட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைத்தோம்.

பொறுப்பற்ற சிலர் இப்படி வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவதால் தான் இப்போது விபத்துக்களும் சகஜமாகி விட்டன. இதுவே லேசான விபத்து என்றளவில் பாதிப்பு இல்லாமல் போனாலும், அந்தநேரத்தில் அந்த மாணவி அப்பா என்று அலறிய அலறல் இப்போதும் காதுக்குள்ளேயே நிற்கிறது. நேச குடும்பங்களை அஜாக்கிரதை விபத்து மூலம் ஒருபோதும் பிரித்து விடாதீர்கள்.

சத்தியமாலா, திருச்சி.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 06, 2013 3:02 am

மிஸ்டு கால் பெண்

என் நண்பர் மளிகைக்கடையுடன் இணைத்து பொது தொலைபேசி ஒன்று வைத்துள்ளனர். பேன்சி ஸ்டோருக்கு வேலைக்கு செல்லும் ஒரு பெண் தினமும் அந்த பொது தொலைபேசியில் குறைந்தது முக்கால் மணிநேரம் வரை பேசியிருக்கிறாள். கடை வேலைப்பளுவால் அவளை அன்றாடம் கூர்ந்து கவனிக்க முடியவில்லை.

ஒருநாள், கடையில் கூட்டம் இல்லாத நேரத்தில் தற்செயலாக அவளை கவனித்தபோது அரை மணி நேரத்திற்கு மேல் பேசியும் அவள் காசு போடவே இல்லை என்பதை கண்டு பிடித்தார் நண்பர். உடனடியாக அவளை விசாரித்ததில் அவள் சொன்ன தகவல் எங்களுக்கெல்லாம் படு அதிர்ச்சி! அவள் பேன்சி கடையில் வேலை செய்கிறாளாம். காதலனுடன் காசு செலவில்லாமல் தினம் பேசுவது அவள் இயல்பாம். அதன்படி தினம் குறிப்பிட்ட நேரத்தில், ஒரு ரூபாய் காயின் போட்டு, அவளின் காதலன் செல்போனுக்கு இரண்டு மிஸ்டு கால் விட்டு இணைப்பை துண்டித்து விடுவாளாம். உடனே அந்தக் காதலன் அந்த பொது தொலைபேசி இணைப்புக்கு டயல் செய்வானாம். மணி அடித்ததும், இவள் இணைப்பைப் பெற ஒரு ரூபாய் காயினை உள்ளே போட்டு விட்டு மணிக்கணக்காய் அளவளாவி பேசுவாளாம். இணைப்பைத் துண்டிக்கும்போது அவள் போட்ட அந்த நாணயமும் வெளியில் வந்து விழுந்து விடும்.

ஆக மணிக்கணக்காய் பேசினாலும் செலவு அந்த பெண்ணுக்கு ஒன்றுமில்லை. மளிகைக்கடை எப்போதும் பிசியாக இருப்பதால் எவரும் கவனிக்காமல் இருப்பதை இவள் சாதகமாக்கிக் கொண்டு பேசி வந்த விபரம் அன்று தெளிவாகியது. எப்படியெல்லாம் உட்கார்ந்து யோசிக்கிறார்கள் பாருங்கள்.

பொன்.ராஜேந்திரன், முருங்கப்பேட்டை




நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 06, 2013 3:07 am

இந்தக் காலத்திலுமா இப்படி....!

சில நாட்களுக்கு முன்பு, புதுக்கோட்டையில் உள்ள என் நண்பர் ஒருவரின் திருமண விழாவிற்கு சென்றிருந்தேன்! அப்போது அங்கு திருமண மண்டபத்தில் நடந்த காட்சி என்னை வியப்படையச் செய்தது!

காலை 9.30 முதல் 10.30 வரை முகூர்த்தம் என்பதால் மண மேடையில் மாப்பிள்ளையை அழைத்து வந்து அமர்த்தினார்கள். சற்று நேரத்தில் மணப் பெண்ணின் சகோதரர் பெட்ரோமாக்ஸ் விளக்குடன் மணப்பெண்ணை அழைத்துக் கொண்டு மணமேடைக்கு வந்தார்.

திருமணம் முடிந்ததும் இதுவிஷயமாய் நான் விசாரித்த போது ஆச்சரியமான தகவல் கிடைத்தது.

மணப்பெண்ணை மணமேடைக்கு அழைத்து வரும்போது, திடீரென்று கரண்ட்கட் ஆகி, வெளிச்சம் இல்லாமல் போனால், பொண்ணு வரும்போதே அபசகுனமா? கரண்ட் நின்னு போச்சே என்று யாரும் சொல்லாமல் இருக்க வேண்டும் என் பதற்காகவே, இப்படி விளக்கு வெளிச்சத்தோடு மணப்பெண்ணை மணமேடைக்கு அழைத்து வருவது எங்கள் ஊர் பழக்கம் என்றார்கள்! இதைக் கேட்ட நான் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனேன்.

பீ.ஆர்.பூஜாரமேஷ், சென்னை.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon May 06, 2013 7:31 am

சிவா wrote:இந்தக் காலத்திலுமா இப்படி....!

சில நாட்களுக்கு முன்பு, புதுக்கோட்டையில் உள்ள என் நண்பர் ஒருவரின் திருமண விழாவிற்கு சென்றிருந்தேன்! அப்போது அங்கு திருமண மண்டபத்தில் நடந்த காட்சி என்னை வியப்படையச் செய்தது!

காலை 9.30 முதல் 10.30 வரை முகூர்த்தம் என்பதால் மண மேடையில் மாப்பிள்ளையை அழைத்து வந்து அமர்த்தினார்கள். சற்று நேரத்தில் மணப் பெண்ணின் சகோதரர் பெட்ரோமாக்ஸ் விளக்குடன் மணப்பெண்ணை அழைத்துக் கொண்டு மணமேடைக்கு வந்தார்.

திருமணம் முடிந்ததும் இதுவிஷயமாய் நான் விசாரித்த போது ஆச்சரியமான தகவல் கிடைத்தது.

மணப்பெண்ணை மணமேடைக்கு அழைத்து வரும்போது, திடீரென்று கரண்ட்கட் ஆகி, வெளிச்சம் இல்லாமல் போனால், பொண்ணு வரும்போதே அபசகுனமா? கரண்ட் நின்னு போச்சே என்று யாரும் சொல்லாமல் இருக்க வேண்டும் என் பதற்காகவே, இப்படி விளக்கு வெளிச்சத்தோடு மணப்பெண்ணை மணமேடைக்கு அழைத்து வருவது எங்கள் ஊர் பழக்கம் என்றார்கள்! இதைக் கேட்ட நான் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனேன்.

பீ.ஆர்.பூஜாரமேஷ், சென்னை.

அப்ப இந்த மின்சார வெட்டு நமது தமிழ் பண்பாடு பழக்கவழக்கதையே மாற்றியமைக்கும் அளவிற்கு போய்விட்டதோ.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon May 06, 2013 7:49 am

இன்று தான் இந்த பதிவை காண நேர்ந்தது

நல்ல பதிவு




நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Mநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Uநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Tநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Hநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Uநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Mநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Oநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Hநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Aநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Mநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Eநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 13, 2013 10:50 am

இப்படியும் ஒரு நடத்துனர்!

பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால் குழந்தைகளை அவர்கள் பாட்டி ஊருக்கு அழைத்து செல்ல பேருந்தில் ஏறி அமர்ந்திருந்தோம். சிறிது நேரத்தில் பஸ் கிளம்பியதும் நடத்துனர் டிக்கெட் தந்தார்.

நாங்கள் கொடுத்த பணத்திலிருந்து டிக்கெட்டிற்கு போக மீதி 5 ரூபாய் எங்களுக்கு அவர் தர வேண்டும். நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் மீதிசில்லறையை கேட்கக்கூட தோன்றாமல் இறங்கினோம்.

பஸ் கிளம்பிய அடுத்த நொடியில் நடத்துனர் பஸ்சை நிறுத்தி விட்டு இறங்கி வேகமாய் எங்களை நோக்கி வந்தார். நாங்கள் என்னவென்று திகைத்து நிற்க, எங்கள் அருகில் வந்தவர், எங்களுக்கு தர வேண்டிய 5 ரூபாயை தந்து விட்டுப் போனார். வெளியூர் பயண நேரத்தில் ஒவ்வொரு ரூபாயும் முக்கியமானது என்பதை உணர்ந்து, கேட்காமலே ஓடிவந்து பணத்தை தந்த கண்டக்டர் நிச்சயம் பாராட்டுக்குரியவர்.

எஸ்.பிரியங்கா, திருநெல்வேலி.




நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 13, 2013 10:51 am

உயர்ந்த உள்ளம்...!

நான் சில நாட்களுக்கு முன்னர் பெரியப்பாவை பார்ப்பதற்காக கிருஷ்ணகிரி சென்றிருந்தேன். அவர்களை பார்த்துவிட்டு திரும்பி வரும்போது என் பர்ஸ் எங்கோ தவறி கீழே விழுந்திருக்கிறது. வீட்டில் வந்து பார்த்தபோதுதான் பர்ஸ் தவறியது எனக்கு தெரிந்தது. அதில் ஐடி கார்டு, பேன் கார்டு, இரண்டு ஏ.டி.எம். கார்டு போக கொஞ்சம் பணமும் இருந்தது. என்றாலும் தொலைந்து போனதை யாரிடம் போய் கேட்க முடியும்? போனது போனது தான் என்று விஷயத்தை அத்தோடு விட்டு விட்டேன்.

சில நாள்களுக்குப் பின்பு ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு எங்கள் வீட்டின் முன் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்து நின்றார். விசாரித்த போது தொலைந்துபோன என் பர்சை கொடுப்பதற்காக வந்ததாக கூறினார். பர்ஸ் அவர் கையில் கிடைத்த நேரத்தில் அவர்அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால் உடனே தகவல் தர முடியவில்லை. அதனால் ஊருக்கு வந்ததும் இதில் இருந்த முகவரி பார்த்து ஓடோடி வந்தேன் என்றார். அவருக்கு நன்றி கூறி கொஞ்சம் பணத்தை கொடுத்தேன். அவரோ பணத்தை பெற்றுக் கொள்ளாமல் கடமையைச் செய்ததற்கு எனக்கெதற்கு பணம்? என்று கூறி சிரித்தபடியே விடைப்பெற்றுப் போனார்.

பர்ஸ் வைத்திருப்பவர்கள் அதில் தங்கள் வீட்டு முகவரி, செல்போன் நம்பரை எழுதி வைக்கலாம். நான் முகவரி அடங்கிய அட்டையை மட்டும் வைத்திருந்ததால்நல்லவர் கையில் சிக்கிய பர்ஸ் எனக்கு நாட்கள் சிலவானாலும் திரும்பக் கிடைத்து விட்டது.

ம.கோவிந்தசாமி, தருமபுரி.






நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 13, 2013 10:51 am

காதலில் புரியவில்லை... கல்யாணத்தில் புரிந்தது...

என்னுடன் கல்லூரியில் படித்த தோழி பெற்றோர்களை எதிர்த்து காதலித்து திருமணம் செய்தவள். அவளது கணவன் திருமணத்திற்கு முன்பே குடிப்பழக்கம் உள்ளவர் என்பது அவளுக்கு தெரியும். நான் அவளிடம் சில அறிவுரைகள் சொன்னேன். ஆனால் அவளோ நான் அவரை சரி செய்து விடுவேன் என்று கூறி திருமணம் செய்தாள்.

ஆனால் அதுவே அவளது வாழ்க்கையை சீர்குலைத்து விட்டது. அவளது கணவன் திருமணத்திற்கு பிறகு அதிகமாக குடித்ததோடு, அவளுடன் அலுவலகத்தில் வேலை செய்பவருடன் சேர்த்து சந்தேகப்பட்டு அடிக்கிறார், சண்டை போடுகிறார் என்று கூறிவேதனைப்பட்டாள்.

பெற்றோரின் ஆதரவு இல்லாமலும், காதலித்த கணவனின் கொடுமையாலும் தினமும் என் தோழி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளாள்.

எனவே, தோழிகளே... குடிப்பழக்கம் உள்ள ஆண்மகன்களைப் பற்றி தெரிந்தும் திருத்தி விடலாம் என்ற எண்ணத்தில் இதுபோல் ரிஸ்க் எடுத்து வாழ்க்கை முழுக்கவும் வருத்தத்தை சுமந்து கொள்ளாதீர்கள்.

ப.மரகதவள்ளி, வள்ளியூர்.





நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 13, 2013 10:52 am

அக்கா மறந்தாள்.. அம்மா நெகிழ்ந்தாள்...

ஒரு நாள் நானும் என் அம்மாவும் தி.நகருக்கு சென்று இருந்தோம். தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது வழியில் ஒரு சிறுமி அழுது கொண்டிருந்தாள்.

நானும் என் அம்மாவும் அவள் அருகில் சென்று ஏனம்மா அழுகிறாய் என்று கேட்டோம் அதற்கு அவள், நான் என் அக்காகூட துணி வாங்க வந்தேன். என் அக்கா போன் பேசிக்கொண்டே என்னை விட்டுவிட்டு போய்விட்டாள் என்று கூறினாள்.

உன் வீடு எங்கே இருக்கிறது? என்று கேட்டபோது, அவள் சைதாப்பேட்டையில் இருக்கிறது என்று கூறினாள்.

எங்க கூட வா! நாங்கள் உன் வீட்டில் விட்டுவிட்டு போகிறோம் என்று அவளிடம் சொன்னோம். அவளும் எங்களுடன் பேருந்தில் வந்தாள். சைதாப்பேட்டை வந்தவுடன் இறங்கி அவள் வீட்டு விலாசம் கேட்டு நடந்து சென்றோம்.

அப்போது அவளது உறவினர்கள் அவளை தேடிக் கொண்டு பேருந்து நிலையத்திற்கு வந்தனர். திடீரென்று அவள் உற்சாகமாக அதோ என் அம்மாவும் பாட்டியும் வருகிறார்கள் என்று கூறினாள். இதற்குள் மகளை பார்த்த தாய் ஓடோடி வந்து கட்டியணைத்துக் கொண்டார். சிறுமியின் பாட்டி எங்கள் கையை பிடித்துக் கொண்டு, நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.

பிறகு நாங்கள் எங்களுடைய வீட்டுக்கு வந்து விட்டோம். குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லும்போது பெற்றோர்களோ, உறவினர்களோ கவனமாக கையில் பிடித்துக்கொண்டு செல்லுங்கள்.

ந.மோகனா, அடையாறு.





நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 13, 2013 10:56 am

துணி மீது இருந்த அக்கறை தங்கச்சி மீது இல்லாம போச்சே!!! என்ன கொடுமை???

(நீங்க சொல்றது கேக்குது சிவா - வீட்ல துணி எடுக்க போறப்ப நாம எத்தன தடவ தொலைக்கப் பட்டுள்ளோம் - காசு குடுக்கற நேரம் மட்டும் கபால்ன்னு நம்மள கண்டுபிடிச்சிடுவாங்க - அது எப்படி?) புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 31 of 32 Previous  1 ... 17 ... 30, 31, 32  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக