புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Poll_c10 
51 Posts - 46%
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Poll_c10 
51 Posts - 46%
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த நிஜங்கள்


   
   

Page 4 of 32 Previous  1, 2, 3, 4, 5 ... 18 ... 32  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 08, 2011 10:02 am

First topic message reminder :

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 16, 2011 8:26 am

காதல் கசந்தது .. வாழ்க்கை இனித்தது ..

என் தோழி கல்லூரியில் படித்தபோது அவளுடன் படித்த மாணவனை காதலித்தாள். இருவரும் பல இடங்களில் சந்தித்து மனம் விட்டுப் பேசியிருக்கிறார்கள். தோழியின் காதல் அவள் வீட்டிற்கு தெரிய வரவே, அவளிடம் பெற்றோர் விசாரித்திருக்கிறார்கள். அவளும் உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறாள். அவன் ரொம்ப நல்லவன் என்று புகழ்ந்திருக்கிறாள்.

மகளின் காதல் பெற்றோருக்கு அதிர்ச்சி தந்தாலும், அவர்கள் காதலைப் பிரிக்க நினைக்கவில்லை. மகள் விரும்பியபடியே வாழ்வு அமையட்டும். திருமணம் செய்துவைத்துவிடலாம் என்று முடிவு செய்தார்கள். அந்த பையன் வீட்டுக்கு முறைப்படி திருமணம் பேச உறவினர்களுடன் சென்றார்கள்.

ஆனால் பையன் வீட்டிலோ நடந்தது வேறு. யாரை தன் உயிருக்கும் மேலானவன் என்று என் தோழி நினைத்துக் கொண்டிருந்தாளோ அவனே தோழியின் பெற்றோரிடம், "நான் உங்கள் மகளை ஒருபோதும் காதலிக்கவில்லை. உங்கள் மகளிடம் பொழுதுபோக்காகத்தான் பழகினேன். எனக்கு அவளை திருமணம் செய்துகொள்ளும் ஆசை எல்லாம் கிடையாது. விவரம் தெரியாத பொண்ணு. அதனால் தான் என்மேல் ஆசை வைத்திருக்கிறது. அவளுக்கு கல்யாண ஆசை இருந்தால் வேறு பையனைப் பார்த்து திருமணம் செய்துவைத்துவிடுங்கள்'' என்று கூறி விட்டான்.

இதனை அறிந்த என் தோழி அதிர்ச்சியில் தற்கொலைக்கு முயன்றாள். பின்பு எப்படியோ காப்பாற்றப்பட்டாள். பின்பு அவளுக்கு ஆறுதல் கூறி கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைத்தனர். அவளும் மனதை தேற்றிக் கொண்டு படித்து முடித்தாள். இப்போது பிரபல நிறுவனத்தில் கை நிறைய சம்பாதிக்கிறாள்.

ச.கோகிலா, மயிலாடுதுறை.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 16, 2011 8:26 am

போதையில் ஆண், பொங்கினாள் பெண்

எங்கள் தெருவில் ஒரு குடிகாரர் வசித்தார். எப்போதுமே போதையில்தான் இருப்பார். தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் சண்டை போடுவதே அவர் வேலை. அதோடு நில்லாமல் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடமும் வம்புச் சண்டைக்கு போவார்.

அன்று எங்கள் தெருவுக்கு ஈயம் பூசுபவர் ஒருவர் வந்தார். அவர் ஈயம் பூசிக்கொண்டிருந்தபோது குடிகாரர் அங்கே வந்தார். ``என் வீட்டு வாசலில் யார் ஈயம் பூசுவது?'' என்று கோபமாய் கேட்டவர், அதே வேகத்தில் அங்கே ஈயம் பூச வைத்திருந்த அண்டாவைத் தூக்கி கீழே போட்டு மிதித்தார்.

அந்தஅண்டாவை ஈயம் பூசக்கொடுத்திருந்தது பக்கத்து வீட்டுப் பெண்மணி. அவர் தனது அண்டா ரோட்டில் உருண்டுவருவதை கண்டதும் பதறியபடி வீட்டில் இருந்து ஓடிவந்தார். "ஏன் என் அண்டாவை உடைத்தாய்?'' என்று கேட்டார். குடிகாரரோ, "அப்படித்தான் உடைப்பேன்... அதைக் கேட்க நீ யார்?'' என்று தெனாவெட்டாக சொன்னார்..

அந்த பெண்மணிக்கு வந்ததே கோபம். ஓங்கி அந்த குடிகாரர் கன்னத்தில் நாலு அறை விட்டார். அப்படியும் ஆத்திரம் அடங்காமல் அவர் கழுத்தில் துண்டை போட்டுப் பிடித்துக் கொண்டவர், "மன்னிப்புக் கேட்டால் தான் விடுவேன்'' என்றார், ஆவேசமாய்! அந்தப் பெண்ணுக்கு வந்த தைரியத்தைப் பார்த்து குடிகாரர் வெல வெலத்து போய்விட்டார். ஏதாவது பேசினால், மேலும் நாலு சாத்து சாத்திவிடுவாள் என்று பயந்தார்.

அதற்குள் தெருவே கூடிவிட, அவமானம் அடைந்த குடிகாரர், வேறுவழியின்றி மன்னிப்புக் கேட்டார். அந்த அவமானத்தால் இரண்டு நாட்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தவர் இப்போது அமைதியாக இருக்கிறார். குடிப்பதும் இல்லை.

என்.ராமசாமி, கொடுமுடி.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 16, 2011 11:19 am

உண்மை சம்பவங்கள் அண்ணா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 23, 2011 12:05 pm

இன்பம் அவளுக்கு.. துன்பம் எங்களுக்கு...

நாங்கள் ஒரு கிராமப்பகுதியில் வசிக்கிறோம். அவசரத்திற்கு ஒரு ஆட்டோ பிடிக்கவேண்டும் என்றால் கூட இரண்டு கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். பஸ் வசதியும் சரிவர கிடையாது.

அன்று திடீரென பக்கத்து வீட்டு குழந்தைக்கு உடல்நிலை மோசமானது. அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய கட்டாயம். எங்கள் தெருவில் ஒரு கடையில் ஒரு ரூபாய் நாணயம் போட்டு பேசும் போன் பெட்டி உள்ளது. என் நண்பர் ஒருவர் ஆட்டோ வைத்திருக்கிறார். போனில் பேசி அவரை அழைக்கலாம் என்று ஓடோடி சென்றேன்.

நான் போன நேரத்தில் ஒரு பெண்மணி யாருடனோ சுவாரசியமாய் அந்த போனை பயன்படுத்தி பேசிக்கொண்டிருந்தார். அவரிடம் குழந்தையின் சீரியஸ் நிலைமையைக் கூறி, `ஒரு நிமிடம் கொடுங்கள். குழந்தைக்கு ஆபத்து தகவல் மட்டும் கூறி ஆட்டோவை வரவழைக்க வேண்டும்' என்றேன். அந்தப் பெண் சிவபூஜையில் புகுந்த கரடிபோல் என்னைப் பார்த்தார். ஆனாலும் தொடர்பை துண்டிக்கவில்லை. மறுபடியும் சிரித்து, சிரித்து பேசிக்கொண்டிருந்தார்.

இதைப் பார்த்த எங்களுக்கு ஆத்திரம் வந்தது. `இப்படியுமா ஈவிரக்கம் இல்லாத பெண் இருப்பாள்?' என்ற கோபத்தில் அவளை திட்டத் தொடங்கியதும், தூரத்தில் ஒரு ஆட்டோ வருவது தெரிந்தது.

உடனே ஓடிச் சென்று அதை கைகாட்டி நிறுத்தி, விஷயத்தைக் கூறி, குழந்தையை ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றோம்.

`சரியான நேரத்தில் குழந்தையை கொண்டு வந்திருக்கிறீர்கள். அதனால்தான் குழந்தையை காப்பாற்ற முடிந்தது' என்று டாக்டர் கூறினார். நிலவரம் தெரியாமல் போன் பேசிய அந்தப் பெண்ணை நினைத்தால் இப்போதும் நெஞ்சம் பற்றி எரிகிறது.

க. பன்னீர் செல்வம், மாப்படுகை.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 23, 2011 12:06 pm


`என் சோக கதையைக்கேளு தாய்க்குலமே...'


நான் ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக உள்ளேன். எங்கள் நிறுவனத்தின் பொருட்களை தினமும் வீடு வீடாக எடுத்துச் சென்று அதன் முக்கியத்துவத்தை உணரச் செய்து பொருட் களை விற்பனை செய்வது என் வேலை.

தினமும் குறைந்தது பதினைந்து பொருட்களையாவது விற்பனை செய்ய வேண்டும் அல்லது நான் சென்ற தெருக்களின் முகவரி போன்ற விவரங்களை தெரிவித்தால்தான் எனக்கு ஒரு நாளைக்கு படியாக ரூ.50 கிடைக்கும்.

சமீபத்தில் ஒருநாள் குறிப்பிட்ட தெருவிற்கு சென்று பொருட்களை விற்பனை செய்யத் தொடங்கினேன். அப்பொழுது அந்த தெருவில் உள்ள ஒருவர் கூட சரியான பதில் அளிக்கவில்லை. `உங்களுக்கெல்லாம் வேறு வேலை இல்லையா? எங்களிடம் பணம் என்ன கொட்டியா கிடக்கிறது? கையில் ஒரு பையை எடுத்து வந்து எங்கள் உயிரை வாங்குவதே உங்களுக்கு வழக்கமாகி விட்டது. வேண்டுமானால் பழைய சோறு இருக்கிறது. உன் கையில் உள்ள பையைக் காட்டு. அதில் சோற்றைக் கொட்டுகிறோம்' என்று நாலைந்து பெண்கள் நக்கலாகக் கூறி சிரித்தனர். எனக்கு மிகவும் அவமானமாகி விட்டது.

உடனே நான் கோபத்துடன், `ஒன்று, பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் வேண்டாம் என்று கூறி விடுங்கள். நான் உங்களை ஒன்றும் கட்டாயப்படுத்தவில்லை. கண்டபடி பேசாதீர்கள்' என்று கூறிவிட்டு வேகமாக வந்து விட்டேன்.

விற்பனை பிரதிநிதிகளான நாங்களும் தன்மானம் கொண்ட மனிதர்கள் தான். எங்களையும் மரியாதையுடன் நடத்துங்கள்.

-எஸ்.சுரேஷ், மஞ்சக்குப்பம்.




நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 23, 2011 12:06 pm

ஆடம்பர மகன்! அன்னக்காவடி பெற்றோர்!

வெளிïரில் வசிக்கும் என் உறவினரின் வயது அறுபது. மனைவி, ஒரே மகனுடன் வசித்து வருகிறார். நகரின் பிரதான இடத்தில் சொந்தமாய் வீடும் கடையும் இருந்தது. உர வியாபாரம் செய்து வந்தார். அது பூர்வீக வியாபாரம்.

அமைதியாய் சென்று கொண்டிருந்த இவரது வாழ்வில் `விதி' மகன் உருவில் சிரித்து விளையாடியது. மகனுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்த்ததால். வீட்டுக்கு அடங்காத பிள்ளையாய் வளர்ந்த அவன் கெட்ட நண்பர்களின் சகவாசத்தில் சிக்கினான். பெண் சேர்க்கை, குடி, சீட்டாட்டம், ஆடம்பரம் போன்ற பல வழிகளில் பணத்தை செலவழித்தான்.

அதற்கெல்லாம் பெரிய அளவில் பணம் தேவைப்படும் போது பைனான்ஸ், கந்து வட்டி, மீட்டர் வட்டி என கடன் வாங்கினான். அதற்காக நீட்டிய பேப்பர்களில் எல்லாம் கையொப்பம் போட்டுக் கொடுத்திருக்கிறான்.

இவை எல்லாம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, இன்னொரு புறத்தில் அவனுக்கு பெண் தேடினார்கள். அவன் கேரக்டர் அறிந்ததால் யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. பெற்றோர், அவனது சீர்கெட்டபோக்கை தட்டிக் கேட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினான். அதனால் அவர்களும் பயந்து ஓரளவுக்கு மேல் தட்டிக்கேட்காமல் விட்டுவிட்டார்கள்.

இதன் விளைவு விபரீதத்தில் முடிந்தது. நண்பர்களுடன் ஜாலி டூர் சென்ற அவன் விபத்து ஒன்றில் சிக்க, ஆஸ்பத்திரியில் ஒரு காலையே எடுக்க வேண்டியதாகி விட்டது. மூன்றுமாத சிகிச்சைக்குப்பிறகு பெற்றோர் அவனை வீட்டிற்கு அழைத்து வந்த பின்புதான் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்தன. காலை இழந்த அவனிடம் அசல், வட்டிகளை வசூல் செய்ய ஒரு கூட்டமே வீட்டுக்கு படை எடுத்து வந்தது.

பணம் கேட்க வந்தவர்களிடம் அவன் தன் நிலையை விவரிக்க, `அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. உன் அப்பா, அம்மாவைக் கொடுக்கச் சொல். இல்லையெனில் உன்னை `கோர்ட்டில் ஏற்றுவோம்... ஜெயிலில் தள்ளுவோம்' என்றெல்லாம் பேசினார்கள்.

மானம், மரியாதைக்கு பயந்த இளைஞனின் பெற்றோர் கடன்களை அடைக்க முன்வந்தார்கள். கடன்காரர்கள் அசல்-வட்டி என பகல் கொள்ளையாய் இருபது லட்சத்திற்கு மேல் கேட்டனர். திடுக்கிட்ட பெற்றோர்களிடம் சமரசம் என்ற பெயரில் 15 லட்சம் தாருங்கள் என்றார்கள்.

வேறு வழி தெரியாததால் அந்த அப்பாவி பெற்றோர் பூர்வீகச் சொத்தான வீடு, கடை இரண்டையும் விற்று கடனை அடைத்தனர். மகனால் வந்த கடன் பிரச்சினை ஒழிந்தது. ஆனால் வயிற்று பிரச்சினை வந்துவிட்டது. இப்போது வாடகை வீடு ஒன்றில் குடி போய், காலிழந்த மகனை வைத்து வைத்தியம் பார்த்து வருகிறார்கள். அவனது பெற்றோர் இருவரும் இப்போது வெவ்வேறு கடைகளில் வேலை பார்த்து வருகிறார்கள்.

-ஜி.கே.எஸ்.மூர்த்தி, கோபிசெட்டிபாளையம்



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 23, 2011 12:07 pm


கடுமை வார்த்தைகள்... கலங்கிய பிஞ்சுகள்..


எழுது பொருட்கள் விற்கும் கடை ஒன்றில் பேனா, பென்சில் வாங்கச் சென்றேன். அங்கு பள்ளி சிறுவர் இருவர் சீருடையில் நின்றிருந்தனர். கடைக்காரர் கோபத்துடன் திட்டி அவர்களை விரட்டிக் கொண்டிருந்தார். சோகத்துடன் பரிதாபமாக நின்று கொண்டிருந்த அந்த மாணவர்களை அழைத்து என்னவென்று விசாரித்தேன்.

பிரபல தனியார் பள்ளியில் தாங்கள் 3-ம் வகுப்பு படிப்பதாகவும், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒவ்வொரு மாணவ- மாணவியரும் நன்கொடை வசூல் செய்து கொண்டு வரவேண்டும் என்று ஆசிரியைகள் சொன்னதாகவும் கூறினார்கள். `அதற்காகத்தான் நாங்கள் நன்கொடை கேட்க வந்தோம். அதுக்குத்தான் இவர் திட்டுகிறார்' என்றார்கள். அந்த சிறுவர்களைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

இப்படிப்பட்ட சிறுவர்களை அவர்களுக்கு பழக்கமில்லாத வேலைகளில் ஈடுபடுத்துவதும், பிறரிடம் போய் கையேந்தி நிற்கச் செய்வதும், மனதளவில் அவர்களை எவ்வளவு வேதனைப்படுத்தும்!

படிப்பில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு அவர்கள் நன்கொடை பேப்பரை தூக்கிக் கொண்டு மன உளைச்சலுடன் அலைந்து திரிவதை பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.

-ஓ.எஸ்.மசூது, சென்னை.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 23, 2011 1:05 pm

சிவா wrote:
கடுமை வார்த்தைகள்... கலங்கிய பிஞ்சுகள்..


எழுது பொருட்கள் விற்கும் கடை ஒன்றில் பேனா, பென்சில் வாங்கச் சென்றேன். அங்கு பள்ளி சிறுவர் இருவர் சீருடையில் நின்றிருந்தனர். கடைக்காரர் கோபத்துடன் திட்டி அவர்களை விரட்டிக் கொண்டிருந்தார். சோகத்துடன் பரிதாபமாக நின்று கொண்டிருந்த அந்த மாணவர்களை அழைத்து என்னவென்று விசாரித்தேன்.

பிரபல தனியார் பள்ளியில் தாங்கள் 3-ம் வகுப்பு படிப்பதாகவும், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒவ்வொரு மாணவ- மாணவியரும் நன்கொடை வசூல் செய்து கொண்டு வரவேண்டும் என்று ஆசிரியைகள் சொன்னதாகவும் கூறினார்கள். `அதற்காகத்தான் நாங்கள் நன்கொடை கேட்க வந்தோம். அதுக்குத்தான் இவர் திட்டுகிறார்' என்றார்கள். அந்த சிறுவர்களைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

இப்படிப்பட்ட சிறுவர்களை அவர்களுக்கு பழக்கமில்லாத வேலைகளில் ஈடுபடுத்துவதும், பிறரிடம் போய் கையேந்தி நிற்கச் செய்வதும், மனதளவில் அவர்களை எவ்வளவு வேதனைப்படுத்தும்!

படிப்பில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு அவர்கள் நன்கொடை பேப்பரை தூக்கிக் கொண்டு மன உளைச்சலுடன் அலைந்து திரிவதை பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.

-ஓ.எஸ்.மசூது, சென்னை.
இது நிறைய பள்ளி கூடத்துல நடக்குது. இந்த மாதிரி ஒவ்வொருத்தர் கிட்டயும் கை ஏந்தவா நாம நம்ம பிள்ளைகளை படிக்க அனுப்புறோம். ஏதோ உங்க பெற்றோர்களால் முடிஞ்ச நன்கொடைய வாங்கிட்டு வாங்கன்னு சொன்னா பரவாயில்லை.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Uநெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Dநெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Aநெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Yநெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Aநெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Sநெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Uநெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Dநெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 Hநெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 23, 2011 1:16 pm

காதலிக்கும்போதே நல்லவரை தேர்ந்தெடுத்தால் அது கல்யாணத்தில் முடியும்... நல்லவேளை அந்த பெண் தப்பித்ததால் இன்னிக்கு சௌக்கியமா இருக்கார்...

குடிகாரர் ஒரேடியா குடியை விட அந்த அம்மா காரணமா இருந்ததுக்கு அந்த அம்மாவுக்கு அன்பு நன்றிகள்...

அவசிய தேவைக்கு இருக்கும் பப்ளிக் பூத்தை இப்படி தன் பொழுதுபோக்காக உபயோகப்படுத்துபவரை தண்டிக்கணும்....நல்லவேளை உயிர் தப்பியது....

இல்லாத கொடுமைக்கு தெரு தெருவாய் வெயில் மழைன்னு பார்க்காம உழைக்கும் இவர்களுக்கு உதவலன்னாலும் பரவாயில்லை... புருஷன் சம்பாதிக்க நல்லா வீட்ல ஜம்பமா உட்கார்ந்து சாப்பிட்டு, சாப்பிட்டதை ஜீரணிக்க அக்கம்பக்கத்தோருடன் சேர்ந்து எல்லார் தலையையும் உருட்டுவதே வாடிக்கையாக கொண்டோருக்கு சரியான அடி இந்த வார்த்தைகள்....

பிள்ளைகளை செல்லம் கொடுப்பது தவறில்லை.. ஆனால் தவறு செய்தால் அப்பவே கண்டித்து வளர்த்தி இருந்தால் இப்படி ஒரு நிலைமைக்கு ஆளாகி இருந்திருகாம இருந்திருக்கலாம்... மானம் இழந்து காலை இழந்து இப்ப சம்பாதிக்கும் வழியும் இல்லாம கடன் அடைக்க வீடு கடை எல்லாம் விற்று இப்ப வாடகை வீட்டில் சோகம் பெற்றோர் பாவம்...

படிக்க அனுப்பும் குழந்தைகளை இப்படி மிஸ் யூஸ் செய்யும் ஆசிரியர்களை முதலில் தண்டிக்கவேண்டும்....

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா... நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 224747944



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 4 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 23, 2011 1:19 pm

படிக்கும் குழந்தைகளை இப்படி வசூல் பன்ன சொல்றாங்களே அவங்கள்ளாம் ஓரு ஆசிரியரா இருக்க முடியாது கடவுள்தான் இவர்களை திருத்த வேண்டும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 4 of 32 Previous  1, 2, 3, 4, 5 ... 18 ... 32  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக