புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த நிஜங்கள்


   
   

Page 29 of 32 Previous  1 ... 16 ... 28, 29, 30, 31, 32  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 08, 2011 10:02 am

First topic message reminder :

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 25, 2012 11:25 am

மனிதாபிமானம் வேண்டும்!

அன்று நானும் எனது நண்பரும் அலுவல் நிமித்தம் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தோம். ஸ்கூட்டர் தஞ்சாவூர் மேம்பாலத்தில் ஏறும்போது தடுமாறி கீழே விழுந்து விட்டோம். இரண்டு பேரும் எழ முடியாமல் கீழே கிடந்தோம். அப்பொழுது அந்த இடத்தில் போவோர் வருவோர் மட்டுமல்லாது அருகில் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தவர்கள் கூட எங்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.

பிறகு நான் சுதாரித்துக் கொண்டு எழுந்து நண்பரை தூக்கி அருகில் ஒரு இடத்தில் அமரச் செய்தேன்.

அவருக்கு காலில் பலத்த அடிபட்டிருந்தது. பிறகு பக்கத்தில் உள்ள ஒரு கடையில் சென்று தண்ணீர் கொண்டுவந்து அவருக்கு கொடுத்தேன். அதுவரையில் கூட பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த யாரும் வந்து என்ன நடந்தது என்று கேட்கவில்லை. ஸ்கூட்டர் கொஞ்சம் டேமேஜ் ஆகி இருந்தது. பிறகு அதனை ரிப்பேர் செய்து கொண்டு அதன்பின் மருத்துவரிடம் சென்று முதலுதவி பெற்று சென்றோம்.

பொதுவாக யாராக இருந்தாலும் விபத்து நடந்து விட்டது என்று சொன்னால் அவர்களுக்குப் போய் உதவி செய்வதுதான் மனிதாபிமானம். அதை விடுத்து நமக்கென்ன என்று நின்று வேடிக்கை பார்த்தால், தனக்கு அதே போன்று நிலை ஏற்படும் போது தான் தெரியும்.

மனிதம் மரத்து விட்டதா?

இரா.பாரதிதாசன், தஞ்சாவூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 25, 2012 11:30 am

மனிதம் மரத்து விட்டதா?
மரத்துபோகவில்லை இல்லை , இப்போவெல்லாம் காசுக்கு விற்கபடுகிறது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 25, 2012 11:32 am

குடும்பத்தை இணைத்து வைத்த கூரியர் பையன்!

வெளியூரில் வசிக்கும் என் நண்பருக்கு ஒரே ஒரு தம்பி. ஏழு வருடங்களுக்கு முன் சொத்துப் பிரச்சினை காரணமாக நண்பரும், அவர் தம்பியும் எதிரெதிர் துருவங்களாக மாறி, தீராத வன்மம் கொண்டு நிரந்தர எதிரிகளாகி விட்டனர். சொந்தபந்தங்கள் நட்பு வட்டாரங்கள் எனபலர் சமாதானம் பேசியும் பகை வளர்ந்ததே தவிர, குறையவில்லை.

கடந்த வாரம் நடந்த என் நண்பரின் இல்லத்திருமண விழாவிற்கு சென்றிருந்தபோது, நண்பரின் தம்பி குடும்பத்தினரும் மண்டபத்தில் மகிழ்ச்சியாய் வலம் வந்தனர். பிரிந்திருந்த குடும்பம் இணைந்ததை பார்த்ததும் நண்பரிடம் மகிழ்ச்சி தெரிவித்தேன். அண்ணன் தம்பி குடும்பம் இணைந்த பிறகு தான் உங்கள் முகத்திலும் இதுவரை இல்லாத சந்தோஷத்தை பார்க்கிறேன். நீங்களே போய் திருமணப் பத்திரிகை வைத்து அழைத்தீர்களா? என்று கேட்டேன்.

அவரோ சிரித்தபடி, அதற்கு முன்பே எங்கள் இருவர் குடும்பமும் இணைந்து விட்டது. எங்களை இணைத்து வைத்தது கூரியர் தபால் கொண்டு வந்த ஒரு பையன் என்றார்.

கூரியர் பையனா? எப்படி? என்று நான் ஆச்சரியமாய் கேட்க, நண்பரோ இன்னும் நிதானமாக சொன்னார். மூன்று மாதத்திற்கு முன் தம்பி குடும்பம், வெளியூர் சென்றிருந்த போது, தம்பிமகனுக்கு முக்கியமான அரசுத் தபால் ஒன்று வந்தது. இரண்டு நாட்கள் வீடு பூட்டியிருக்கிறது என தபாலை திரும்பக் கொண்டு போன கூரியர் பையன் மூன்றாம் நாள் என் வீட்டுக் கதவைத் தட்டி, சார்... இது முக்கியமான தபால் போல தெரிகிறது, கடிதத்தில் போன் நம்பரும் இல்லை. நீங்கள் கையெழுத்துப் போட்டு வாங்கி அவர்கள் வந்ததும் கொடுத்து விடுங்கள் என்றான்.

அவன் எனக்குத் தம்பிதான். ஆனா, அவன் வீட்டில் அடித்த காற்று கூட என் வீட்டிற்கு வரக் கூடாது என்றேன் நான். என் கோபத்தை பொருட்படுத்தாத அந்தப் பையன், அப்படிச் சொல்லாதீங்க சார். நீர் அடித்து நீர் விலகாது. ஆண்டவன் கொடுப்பது ஒரே ஒரு பிறவி. அதை உறவுகளுடன் அனுசரித்து வாழ வேண்டுமே தவிர, கோபம், ஈகோ கொண்டு பிரிந்திருக்கக்கூடாது. அடுத்த பிறவியில் நீங்களும் உங்கள் தம்பியும் ஒரே தாய் வயிற்றில் பிறக்கப் போகிறீர்கள் என்பது என்ன நிச்சயம்? என்றான். அந்தப் பையனின் பேச்சு என்னை சாட்டையால் அடிக்க, கையெழுத்துப் போட்டு வாங்கிய அந்த தபாலை ஈகோ பார்க்காமல் என் தம்பியிடம் நான் தர, அவன் மனதி லும் இருந்த பாச உணர்வு எங்களை இணைத்தது. இப்போது நாங்கள் பிரிந்திருந்த காலத்துக்கும் சேர்த்து அன்பைக் கொட்டுகிறோம் என்றார் நண்பர்.

அந்த நேரத்தில் தன் சென்டிமென்ட் பேச்சால் இரு குடும்பங்களை இணைத்த முகம் தெரியாத அந்த கூரியர் பையன் என்னை நெகிழவைத்தான்.

ஜி.கே.எஸ்.மூர்த்தி, கோபிசெட்டிபாளையம்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 25, 2012 11:49 am

போதை வந்த போது புத்தி இல்லையே!

எங்கள் ஊரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் பஸ் ஸ்டாண்ட் அருகே இரண்டு குடிமகன்கள் குடிபோதையில் ரோட்டிலேயே தகராறு செய்து கொள்வதும், மதுபாட்டில்களைக் கண்ட இடத்தில் போட்டு உடைப்பதும் வாடிக்கையாக உள்ளது.

ஒரு நாள் மதியம், நான்கைந்து பேர் ஒன்றாகவே வந்து மது அருந்திவிட்டு, மிதமிஞ்சிய போதையில் வம்பு செய்து கொண்டு, குடித்த மது பாட்டில்களையும், உடைத்து விட்டுப் போய்விட்டனர். அன்றிரவு சித்தாள் வேலை செய்து விட்டு, வீடு திரும்ப சில பெண்கள் அந்த பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தனர். அப்போது அவர்கள் செல்லும் மினி பஸ் வரவே, பஸ்ஸைப் பிடிக்கும் அவசரத்தில் ஓடிச்சென்று ஏறும்போது, ஒரு பெண்ணின் காலில் கண்ணாடிச் சில்லுகள் குத்தி அதிகளவில் ரத்தம் வழிந்தது.

அதிகமான ரத்தப் போக்கைக் கண்ட மற்றொரு பெண் மயக்கம் வந்து தரையிலேயே உட்கார்ந்து விட்டார். ‘குடி மகன்கள் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும்படி இவ்வாறு நடந்து கொள்ளலாமா?

போதை அறிவையுமா மறைக்கும்?

சுப.செல்வராஜ், பாபநாசம்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Nov 25, 2012 11:51 am

அந்த குரியர் பய்யன் சொன்னதை கேட்டு உறவை புதிப்பித்துக் கொண்டது நன்று.




றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Nov 25, 2012 7:00 pm

"குடி"மக்கள் என்றால் அப்படித்தான்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Nov 25, 2012 7:11 pm

புதியவர்களுக்கும் கொடுப்பதால்
பழையவர்களாவார்களே இது புரியாத விற்பனையாளர்



நேசமுடன் ஹாசிம்
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 22, 2013 6:02 pm

தொலைந்த நாணயம்... மறந்த நேர்மை...

டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தேன். கடைக்கு முன்பாக ஒரு நூறு ரூபாய் நோட்டு கிடந்தது. அதை யாரும் கவனிக்கவில்லை. நான் ரூபாயை எடுத்து கல்லாவில் உட்கார்ந்திருந்த டீக்கடைக்காரரிடம் “யாராவது ரூபாயைத் தேடிக்கொண்டு வந்தால் கொடுத்து விடுங்கள்” என்று கொடுத்தேன். அவரும் அதை வாங்கி வைத்துக் கொண்டார்.

இதையெல்லாம் கவனித்த உள்ளே இருந்த ஒருவர் தன் நண்பரிடம் “அவர் சுத்த ஏமாளி போலிருக்கு. கீழே கிடந்த ரூபாயை எடுத்து கொடுத்துவிட்டு போகிறதைப் பார்” என்று என் காது பட சொன்னார்.

“இன்னொருத்தர் காசு நமக்கு வேண்டாமே” என்று சொல்லி விட்டு நான் போய் விட்டேன்.

இரண்டு நாள் கழித்து டீக்கடையில் பார்த்த நண்பரை கடைவீதியில் சந்தித்தேன். என்னைப் பார்த்தவர் “அன்றைக்கு நீங்க எடுத்துக் கொடுத்த பணத்தை தேடிக்கிட்டு கொஞ்ச நேரத்தில் ஒருத்தர் வந்தார். டீக்கடைக்காரரிடம் பணம் பற்றி விசாரித்தபோது அவரோ நான் பார்க்கவில்லை. எங்கே தொலைச்சீங்களோ...! என்று கூலாக சொல்லி விட்டார். நானும் டீக்கடைக்காரரைக் காட்டிக்கொடுக்காமல் அவர் புத்தி இவ்வளவு தான் என்று பேசாமல் இருந்து விட்டேன்” என்றார்.

எனக்கு அதிர்ச்சி. நான் எடுத்துக் கொடுத்த பணம் உரியவர் வந்து கேட்டும் அவரிடம் போய்ச்சேரவில்லை என்ற வருத்தம் இன்னமும் எனக்குள் இருக்கிறது.

நேர்மையை தொலைத்துவிட்டு நியாயத்தை எங்கே போய்த் தேடுவது?

என்.ஏ.பாலகிருஷ்ணன், நாமக்கல்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 22, 2013 6:05 pm

உடனடி நடவடிக்கைக்கு உதவும் லேபிள்

சிநேகிதியின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். பிரிட்ஜ் ரிப்பேராகி விட்டது என்று கூறிக் கொண்டே பிரிட்ஜின் பின்புறம் எதையோ துழாவினாள். ஒரு வேளை தானே ரிப்பேரில் இறங்கி விட் டாளோ? என்றபடி எட்டிப் பார்த்தேன். அங்கோ பிரிட்ஜ் வாங்கிய கடை, தேதியுடன் கஸ்டமர் சர்வீஸ் தொலைபேசி எண் என அனைத்தும் எழுதப்பட்டு, பின்புறம் ஒட்டப்பட்டிருந்த லேபிள் பளீரிட்டது.

“டி.வி, மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின் என வீட்டில் உள்ள எல்லாப் பொருட்களிலும் வாங்கின கையோடு இப்படி லேபிளை ஒட்டி விடுவோம். ஏதாவது பிரச்சினை என்றால் அதை சரி செய்பவரை உடனடியாக அழைக்க உதவும். அதோடு கியாரண்டி எப்போது முடிகிறது என்று தெரிந்து கொள்ளவும் இம்முறை உதவும்” என்று விளக்கம் தந்தாள் தோழி.

இப்போதெல்லாம் என் வீட்டிலிருக்கும் பொருட்களிலும் லேபிள்கள் சிரிக்கின்றன!

எஸ்.நித்யா, சென்னை.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 29 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 22, 2013 6:05 pm

நேர்மையை தொலைத்துவிட்டு நியாயத்தை எங்கே போய்த் தேடுவது?

அருமை அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 29 of 32 Previous  1 ... 16 ... 28, 29, 30, 31, 32  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக