புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10 
59 Posts - 55%
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10 
54 Posts - 55%
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த நிஜங்கள்


   
   

Page 26 of 32 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 32  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 08, 2011 10:02 am

First topic message reminder :

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 10, 2012 1:00 pm

பொம்மைக்காக நடந்த உயிர்ப் போராட்டம்

என் பள்ளிக்கூட பருவத்தில் நடந்த சம்பவம் இது. நானும் என் தங்கையும் அம்மாவுடன் ஆற்றுக்கு குளிக்க செல்வது வழக்கம். அப்படி ஒரு நாள் குளிக்க செல்லும் போது ஒரு பொம்மையை கையில் எடுத்து சென்றோம். அந்த பொம்மையை ஆற்றில் தூக்கிப்போட்டு எறிந்து விளையாடினோம். அப்போது திடீரென அலை அடிக்க, பொம்மை நடு ஆற்றுக்குள் சென்று விட்டது.

நானும் என் தங்கையும் நீந்தி நடுஆறு வரை சென்று விட்டோம். சரிவர நீந்த தெரியாததால் ஆற்றின் நீரோட்டத்தை எதிர்த்து பொம்மையை எங்களால் பிடிக்க முடியவில்லை. நான் நீரில் மூழ்கும் போது தங்கை என் தலையை பிடிப்பதும் அவள் மூழ்கும் போது நான் அவள் தலையை பிடிப்பதுமான மரணப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தோம். அம்மா, அம்மா என்று கத்தியும் என் அம்மாவுக்கு நாங்கள் கூப்பிட்டது கேட்கவில்லை.

அப்போது கடவுள் அருளால் ஒரு அண்ணன் ஆற்றிற்கு குளிக்க வந்தார். அவர் நாங்கள் நடு ஆற்றில் மூழ்கி தத்தளிப்பதை கண்டு எங்க இருவர் தலையையும் பிடித்து இழுத்து கரை சேர்த்தார். கடவுள் கருணையால் உயிர் பிழைத்து கொண்டோம்.

ஆதலால் தோழிகளே! சிறுபிள்ளைகளை அழைத்துக் கொண்டு நீர்நிலைகளில் குளிக்க செல்லும் போது பிள்ளைகள் மேல் ஒரு கண் வைத்துக் கொள்ளுங்கள். அதோடு உரிய வயதில் பிள்ளைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுங்கள்.

- சஜி பிரபு, கன்னியாகுமரி.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 18, 2012 5:56 am

அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்

எனது உறவினர் ஒருவர் தனது உறவினர் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். என்னதான் உறவாக இருந்தாலும் மாமியார், மருமகளுக்கிடையே ஒத்து வராமல் சண்டை வந்ததில், ஒரே காம்பவுண்டில் மாமியாரும், மருமகளும் தனித்தனி வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த சமயத்தில் மருமகள் கர்ப்பமாகி இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தாள். இரட்டை குழந்தைகளை அவளால் சரிவர கவனிக்க முடியவில்லை. இதை உணர்ந்தாவது அவள் மாமியாருடன் சேர்ந்திருக்க வேண்டும். அவள் அவ்வாறு செய்யவில்லை. ஒருநாள் அழுத குழந்தைக்கு பால் கொடுத்தவள், உடனடியாக உறங்க வைத்து விட்டு வீட்டு வேலைகளை கவனிக்க சென்று விட்டாள்.

குழந்தைக்கு பால் கொடுக்கிறவர்கள் பால் கொடுத்து முடித்ததும், குழந்தையை தோளில் தட்டிக் கொடுத்து பால்இறங்கும்வரை காத்திருப்பார்கள். குழந்தை ஏப்பம் விட்டு பால் வயிற்றுக்குள் இறங்கியதை ஊர்ஜிதம் செய்த பிறகே குழந்தையை படுக்கவைக்க வேண்டும்.

ஆனால் அந்தப் பெண்ணோ உடனடியாக குழந்தையை படுக்கையில் கிடத்தியதால் பால் இறங்காத குழந்தை மூச்சுத் திணற ஆரம்பித்திருக்கிறது. இதை கவனிக்காமல் அவள் வேலையையே கவனித்துக் கொண்டிருந்திருக்கிறாள். மூச்சுத் திணறல் அதிகமாகி கடைசியில் குழந்தை இறந்தே விட்டது.

எனவே குடும்ப உறவுகளில் என்னதான் பிரச்சினைகள் இருந்தாலும் நாம் ஒருவரை ஒருவர் அனுசரித்து ஒற்றுமையுடன் செயல்பட்டால் இது போன்ற சம்பவங்கள் நிகழாது.

- எஸ்.மகாராணி, தூத்துக்குடி.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 18, 2012 5:56 am

பேரன் ஓட்டிய ஸ்கூட்டர்

நானும் எனது கணவரும் ஷாப்பிங் செய்ய வீட்டிலிருந்து கடைத்தெருவிற்கு ஸ்கூட்டரில் சென்றோம். ஸ்கூட்டரில் எங்கள் பேரனையும் வண்டியில் அழைத்துச் சென்றோம். கடை வாசலில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு நானும் கணவரும் எதிரில் இருந்த கடைக்குச் சென்றோம். எங்கள் ஆறு வயது பேரன் ஸ்கூட்டரிலேயே அமர்ந்து கொண்டிருந்தான்.

பத்து நிமிடம் கடந்திருக்கும். நாங்கள் ஸ்கூட்டர் நிறுத்தியிருந்த இடத்தில் மக்கள் சல சலப்பு கேட்க, நாங்கள் அவசரமாக ஓடி வந்து பார்த்தோம். எங்கள் பேரனை சிலர் தூக்கி வைத்துக் கொண்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தனர். எங்களுக்கு தூக்கி வாரிப் போட்டது. என்ன நடந்தது என்று பதட்டத்துடன் விசாரித்தோம். என் கணவர் ஞாபகமறதியாக ஸ்கூட்டர் சாவியை எடுக்காமல் வந்து விட்டார். என் பேரன் சாவியை திருப்பி அப்படியே ஆக்ஸிலேட்டரையும் திருப்ப, ஸ்கூட்டர் ஸ்டார்ட் ஆகி எதிரில் இருந்த கரண்ட் கம்பத்தில் மோதி கீழே சாய்ந்திருக்கிறது. இதில் வண்டியில் இருந்த பேரன் கீழே விழுந்து லேசாக அடிபட்டு விட்டது. பிறகு நாங்கள் பேரனை தூக்கிக் கொண்டு ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு உதவியவர்களுக்கு நன்றி கூறிவிட்டு வீடு வந்து சேர்ந்தோம். வாகனங்களில் குழந்தைகளை அழைத்து செல்கிறவர்கள் வீடு வந்து சேரும்வரை அவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்கவேண்டும்.

- சுந்தராம்பாள் மகாலிங்கம், கும்பகோணம்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 18, 2012 5:57 am


மருந்தும், மனிதாபிமானமும்!


சில மாதங்களுக்கு முன் என்னுடைய நண்பர் நாக்பூர் போயிருந்தார். அப்போது அவர் நாக்பூர் தபால் ஆபீசுக்கு போனபோது அங்கே ஒரு அட்டை பெட்டிக்குள் காலாவதி ஆகாத மாத்திரை மருந்துகள் இருப்பதை பார்த்திருக்கிறார்.

அவர் பார்த்துக் கொண்டிருந்த நேரத்திலேயே தபால் ஆபீசுக்கு வந்தவர்களில் சிலர், தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த மாத்திரை அட்டைகள், டானிக்குளை அந்த பெட்டிக்குள் போட்டிருக்கிறார்கள். இதனால் ஆச்சரியமான நண்பர் இதுபற்றி போஸ்ட் மாஸ்டரிடம் கேட்டபோது, இது இந்த பகுதி மக்களின் பரோபகார சிந்தனை. உடல் நலக் குறைவுக்கு டாக்டர் ஜந்து நாட்களுக்கு மருந்து மாத்திரை எழுதிக்கொடுப்பார் என்று வைத்துக் கொள்ளுங்கள். நோயாளி மூன்றே நாட்களில் குணமாகும் பட்சத்தில் இன்னும் சாப்பிட வேண்டிய 2 நாள் மருந்து மாத்திரைகளை தபால் ஆபீசில் உள்ளே இருக்கும் பெட்டியில் சேர்த்து விடுகிறார்கள்.

மாத முடிவில் அட்டைப் பெட்டியில் சேர்ந்த மருந்து மாத்திரைகளை அவர்கள் பகுதி டாக்டரிடம் கொண்டு போய் கொடுத்து விடுகிறார்கள்.அவர், சிகிச்சைக்கு வந்தவர்களுக்கு எந்த மருந்து தேவைப்படுகிறதோ, அதை இலவசமாய் கொடுத்து விடுவார் என்று சொன்னார். இதை போல் நம் ஊரில் தபால் ஆபீசில் கொடுத்தால் ஏழை - எளியவர்களுக்கு பயன்படாதா!

- போளூர் அப்துல் சமத், ஆம்பூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 18, 2012 5:57 am

மாற்றுத் திறனாளிகளை மதியுங்கள்

கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் தனியார் பேருந்தில் பயணம் மேற்கொண்டேன். முகூர்த்த நாளாக இருந்ததால் பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பேருந்தில் ஒரு நடுத்தரவயதுப் பெண்மணியும், கால் ஊனமுற்ற 15 வயதுடைய அவரது மகனும் பயணம் செய்து கொண்டிருந்தனர். ஆடுதுறை நிறுத்தத்தில் பேருந்து நின்றவுடன் பயணிகள் இறங்குவதற்குள், கீழே நின்றிருந்தவர்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறினார்கள். நின்றவாறு பயணம் செய்தவர்களும் ஒதுங்கி வழிவிடாததால் அந்தப் பெண்மணியும், அவரது மகனும் இறங்க முடியாமல் கஷ்டப்பட்டனர்.

நடத்துனர், பயணிகளை ஏற்றுவதிலேயே கவனம் செலுத்தினாரேயொழிய, இறங்கவேண்டியவர்களைப் பற்றி கவலை கொள்ளவில்லை. சற்றுகால அவகாசம் எடுத்துக் கொண்டு அந்தப் பெண்மணியும், அவரது மகனும் இறங்கியதால், நடத்துனர், "இதுங்கல்லாம் வீட்ல கெடக்காம வந்து எங்க கழுத்தை அறுக்குதுங்க!'' என சலித்துக் கொண்டார்.

மாற்றுத் திறனாளிகளை அரசு அங்கீகரித்து ஊக்கம் அளித்தாலும், இம்மாதிரி இரக்கமற்ற நபர்களின் அவமதிப்பு தொடர்வது வேதனையளிக்கிறது. நடத்துனர் கருத்தை ஒன்றிரண்டு பயணிகள் ஆமோதித்தது மனித நேயப் படுகொலையின் உச்சகட்டமாக இருந்தது! மாற்றுத் திறனாளிகளும் வேலை விஷயமாக பல இடங்களுக்கு இம்மாதிரி போகவர வேண்டியிருக்கிறது. அப்போது முடிந்தவரை அவர்களுக்கு பயணத்தில் உதவலாம். அதை விட்டுவிட்டு வார்த்தைகளால் சவுக்கு சுழற்றுவது வேண்டாமே!

- எஸ்.பானுமதி, தஞ்சாவூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 24, 2012 7:43 am

பாசத்தை வென்ற பணம்

என் நண்பனின் தந்தை திடீரென காணாமல் போய்விட்டார். என் நண்பன் என்னிடம் இதை கூற, நானும் அவனும் சேர்ந்து பல இடங்களில் தேடினோம். ஆனால் அவர் கிடைக்கவில்லை. போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தும் பயன் இல்லை.

அவர் எப்படி காணாமல் போனார் என்பதை விசாரித்த போது கிடைத்த தகவல் அதிர்ச்சி யானது. என் நண்பனின் தங்கை அவருடைய அப்பாவிடம் ரூபாய் 5 ஆயிரம் கொடுத்துள்ளார். `அப்பா அதை வாங்கி அவருடைய நண்பரிடம் கொடுத்து விட்டாராம். அந்தப் பணத்தை இரண்டு வருடம் ஆகியும் வாங்க முடியவில்லை. என் நண்பனின் அப்பாவிடம் பணம் வாங்கிய நபர் விவசாயத்திற்காக வாங்கினாராம். நஷ்டமாகி விட்டதால் திருப்பித்தர முடியவில்லை. பணம் வாங்கிய நபரும் வேறு ஊருக்குச் சென்றுவிட்டார். இந்த பணத்தை வாங்கித்தரச் சொல்லி தினமும் தொல்லை கொடுத்துள்ளார், என் நண்பனின் தங்கை.

இதனால் மனம் வெறுத்த என் நண்பனின் தந்தை எங்கோ சென்று விட்டார். இதுவரை எங்கிருக்கிறார் என்பதே தெரியவில்லை. பெற்று வளர்த்தது முதல் கல்வி அறிவை தந்த தந்தையை இப்படியா பணத்திற்காக விரட்டுவது?

- ஜி.குப்புசாமி, சென்னை.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 24, 2012 7:43 am


தங்க ஹெல்மெட்

எங்கள் வீட்டில் வழக்கமாக எனது மனைவி காலையில் அருகில் உள்ள உழவர்சந்தை மார்க்கெட்டிற்குச் சென்று காய்கறி வாங்கி வருவது வழக்கம். இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து இப்படி செல்வது உண்டு.

ஒரு நாள் கவலையோடு காய்கறி வாங்கி வந்தாள். காரணம் காதில் அணிந்து இருந்த தங்க தோடுகளில் ஒன்றை காணவில்லை. உடனே திரும்பவும் சென்ற இடமெல்லாம் தேடியும் கிடைக்கவில்லை. கவலையோடு வீடு வந்தாள்.

மறு நாள் காலையில் எழுந்து ஹெல்மெட்டை அணியச் சென்றவள் ஆச்சரியத்தோடு `என்னுடைய தோடு கிடைத்து விட்டது' என்றாள். காலையில் ஹெல்மெட் போட எடுத்த போது அதன் உட்பகுதியில் ஒரு ஓரமாக தோடு சொருகிக் கொண்டு இருந்திருக்கிறது. தலையை மட்டும் பாதுகாக்காமல் காதுகளில் அணியும் தங்கத்தையும் பாதுகாத்த அந்த ஹெல்மெட்டுக்கு அப்புறமாய் எங்கள் வீட்டில் தனி மரியாதை.

- ஜி.டி.தங்கராஜ், நெல்லை.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 24, 2012 7:43 am


திருட்டுபோன பணம் திரும்பக் கிடைத்தது

சமீபத்தில் நானும் என் மாமியாரும் சென்னைக்கு அரசு பேருந்தில் சென்றோம். என் மாமி அவருடைய மகளுக்கு செமஸ்டர் பீஸ் கட்டுவதற்காக ரூ.15 ஆயிரம் எடுத்து வந்திருந்தார். பேருந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென என் மாமி அதிர்ச்சியில் கத்தினார். ஏனெனில் கைப்பையில் பர்ஸ் இல்லை. கைப்பை மட்டும் திறந்திருந்தது.

என் மாமியார் கூச்சலை கேட்ட நடத்துனர் என்னவென்று விசாரித்தார். என் அத்தை நடந்தவற்றை கூறினார். உடனே அந்த நடத்துனர் வாசல் பக்கம் பூட்டப்பட்டிருக்கும் அந்த அரசு பேருந்தில் அனைவரையும் சோதனை செய்ய முடிவெடுத்தார்.

இதனை பார்த்த களவு செய்த பெண்மணி எங்கே மாட்டிவிடுவோமோ என்ற பயத்தில் பர்ஸை கீழே போட்டுவிட்டார். இதனை பார்த்த என் மாமி அந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தார். நடத்துனரின் உதவியால் ரூபாய் 15 ஆயிரம் எங்களுக்கு திரும்ப கிடைத்தது.

ஆதலால் தோழிகளே, பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். கவனக்குறைவினால் உங்கள் பணத்தையும் உடைமைகளையும் இழந்து விடாதீர்கள்.

- சஜிபிரபு மாறச்சன், கன்னியாகுமரி.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 24, 2012 7:44 am


பாட்டி போட்ட போடு!

பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள் ஒரு கூட்டுக் குடும்பத்தினர். குழந்தைகளின் பாட்டி பையிலிருந்து பெரிய வாழைப்பழங்களை எடுத்து தன் பேரக்குழந்தைகள், இரண்டு மகன்கள், மருமகளுக்கும் கொடுத்தார். எல்லோரும் சாப்பிட்ட கையோடு ஒவ்வொருவர் கையிலிருந்தும் வாழைப்பழ தோல்களை வாங்கி ஒரு கவரில் போட்டு வைத்துக் கொண்டார்.

இதை பார்த்ததும் பஸ்சுக்காக காத்திருந்த கல்லூரி மாணவிகள் சிலர் தங்களுக்குள் சிரித்துக்கொண்டு "காற்கறி விக்கிற விலையில் வாழைப்பழத் தோலைக் கூட கூட்டு வைப்பாங்க போலிருக்கு...'' என்று கிண்டலடித்தனர்.

இதை கவனித்த பாட்டி சிறிது நேரம் கழித்து "காலேஜ் படிக்கிறீங்களா கண்ணுங்களா... எங்க வீட்டில் இரண்டு கறவை மாடுங்க இருக்கு... வாயில்லா சீவனுங்க... வாழைப்பழ தோலை சும்மா ரோட்டுல போட்டா யாராவது வழுக்கி விழுவாங்க... மாட்டுக்கு போட்டா அதுங்க சாப்பிடும் இல்ல... வாழைப்பழ தோலை கூட்டெல்லாம் வைக்க மாட்டோம்... எங்க தோட்டத்தில பயிராகிற காய்கறிகளை உழவர் சந்தைக்கே கொண்டு போகிறோம்... என்று ஒரு போடு போடவும், கிண்டலடித்த மாணவிகள் "துண்டைக்காணும்... துணியைக்காணும்'' என்ற ரேஞ்சுக்கு ஓடிப்போய் பஸ்ஸில் ஏறிக் கொண்டார்கள்!

- ஜி.நிலா, சென்னை.





நெகிழ வைத்த நிஜங்கள் - Page 26 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 24, 2012 8:40 am

பாட்டி போட்ட போடு அருமை...பதிவுக்கு நன்றி சிவா மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 26 of 32 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 32  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக