ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த நிஜங்கள்

+46
ஹாசிம்
றினா
ராஜா
அகல்
கரூர் கவியன்பன்
noorvkr
முஹைதீன்
சந்திரகி
ARR
dhilipdsp
sinthiyarasu
இரா.பகவதி
பது
யினியவன்
ரா.ரா3275
தம்பி வெங்கி
சார்லஸ் mc
பிரசன்னா
ரேவதி
ஹர்ஷித்
Bobshan returns
Dr.சுந்தரராஜ் தயாளன்
Thiraviamurugan
ரபீக்
positivekarthick
சுரேஷ்குமார்
krishnaamma
ஜாஹீதாபானு
kitcha
அருண்
கா.ந.கல்யாணசுந்தரம்
அப்துல்லாஹ்
ந.கார்த்தி
அசுரன்
Manik
மஞ்சுபாஷிணி
பிரகாசம்
கலைவேந்தன்
varsha
நியாஸ் அஷ்ரஃப்
இளமாறன்
ஸ்ரீஜா
SK
உதயசுதா
தமிழ்ப்ரியன் விஜி
சிவா
50 posters

Page 22 of 32 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 27 ... 32  Next

Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 22 Empty நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Tue Feb 08, 2011 10:02 am

First topic message reminder :

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 22 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 22 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Sun Apr 29, 2012 7:48 am

வருந்தினார்கள்... திருந்தினார்கள்...

அந்த காம்பவுண்டில் பத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன. எல்லாருமே நன்கு அனுசரித்து பழகி வந்தனர். விதிவிலக்காக ஒரு குடும்பத்தினர் மட்டும் பிறரை மதிக்காத குணம் கொண்டவர்களாக இருந்தனர்.

குப்பைகளை பொது இடத்திலே போடுவது, தொலைக்காட்சியை சத்தமாக வைத்து படம் பார்ப்பது என்று எதையும் தங்கள் இஷ்டத்திற்கு செய்து வந்தனர்.

சமயங்களில், `தொலைக்காட்சி சத்தம் பக்கத்தில் படிக்கும் பிள்ளைகளின் படிப்பை பாதிக்கிறது. கொஞ்சம் வால்யூமை குறைத்துக் கொள்ளுங்கள்' என்றால், `எங்கள் வீட்டில் நாங்கள் கேட்கிறோம். உங்களுக்கென்ன?' என்று அலட்சியமாக பதில் வரும்.

அவர்களுக்கு பள்ளியில் படிக்கும் ஒரு மகனும் கல்யாண வயதில் ஒரு மகளும் இருந்தார்கள். அந்த மகள் மிகவும் அமைதியான குணவதியான பெண். அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தனர். நாலைந்து மாப்பிள்ளை வீட்டார் வந்து பார்த்தார்கள். பெண் பிடித்துப்போய், `மற்ற விஷயங்ளை பேச இன்னொரு நாளில் வருகிறோம்' என்று சிரித்த முகமாய் போவார்கள். ஆனால் வர மாட்டார்கள்.

இதனால் அந்த பெண்ணின் பெற்றோர் கவலைப்படத் தொடங்கினார்கள். எதனால் இப்படி என்று ஆராய்ந்தார்கள். அப்போது தான் பெண் பார்க்க வந்தவர்கள் புறப்பட்டுப் போகும்போது இவர்கள் குடும்பம் பற்றி அக்கம்பக்கத்து வீடுகளில் விசாரித்ததும், அவர்கள் இவர்களை அடாவடிக் குடும்பம் என்று சொன்னதும் தெரிய வந்தது.

இது தெரிந்ததோ இல்லையோ, அவர்கள் போக்கே மாறி விட்டது. `அடடா, எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறோம்...மற்றவர்களுக்கு உதவாவிட்டாலும் உபத்திரவமாக அல்லவா இருந்திருக்கிறோம்' என்று வருந்தியவர்கள், ஒவ்வொரு வீட்டிலும் சென்று மன்னிப்பு கேட்டதோடு, வீட்டை காலி செய்து விட்டார்கள்.

-ஓ.எஸ்.மசூது, சென்னை-1


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 22 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 22 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Sun Apr 29, 2012 7:48 am

இழப்பு நேரத்திலும் கடமை தவறாத நெஞ்சங்கள்

எங்கள் பகுதியில் அண்ணாச்சி ஒருவர் மளிகைக் கடை வைத்திருந்தார். அவருக்குத் துணையாக அவரது மனைவியும் அவ்வப்போது கடைக்கு வந்துவியாபாரத்தை கவனித்துக் கொள்வார். இந்த தம்பதிகளுக்கு எட்டாவது படிக்கும் ஒரு மகன் இருந்தான். அந்த சிறுவன் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று பால் பாக்கெட், காலை நாளிதழ்களையும் வினியோகித்து விட்டு 8 மணிக்கெல்லாம் பள்ளிக்கும்
தயாராகி விடுவான்.

சமீபத்தில் ஒருநாள் அண்ணாச்சிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்வதற்குள் இறந்து போனார்.

மறுநாள் காலையில் வழக்கம்போல் எல்லாருடைய வீட்டிலும் பால் பாக்கெட்டும் காலை நாளிதழும் போடப்பட்டு இருந்தது. தங்களுக்கு ஏற்பட்ட தனிப்பெரும் இழப்பையும் தாங்கிக்கொண்டு, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதனால் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று அண்ணாச்சியின் குடும்பம் நினைத்ததே இதற்குக் காரணம்.

இப்படியும் கடமை தவறாத மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

-சுமதிபாபு, கோவூர்


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 22 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 22 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Sun Apr 29, 2012 7:49 am

ஜீன்ஸ் போட்ட அம்மா... நடந்து வந்த குழந்தை..!

சென்னை போன்ற பெருநகரங்களில் ஐ.டி. கால் சென்டர் போன்ற மேலை நாட்டு அலுவலகங்களில் பணிபுரியும் இளம் தலைமுறை தம்பதிகள் ஏராளம். இவர்களில் பெண்களும் ஆண்களைப் போன்றே ஜீன்ஸ் பேண்ட், முழுக்கை சட்டை, அல்லது டாப்ஸ் என ஏதோ ஒன்றை அணிகின்றனர். அது அவர்களின் உடை சுதந்திரம்.

சமீபத்தில் இப்படியான ஒரு இளம் தம்பதிகள் பிரபல ஜவுளிக்கடைக்கு வந்திருந்தார்கள். அந்தப்பெண் ஜீன்ஸ், பனியன் அணிந்திருந்தாள். அவர்கள் குழந்தைக்கு அதிகபட்சம் 11/2 வயது இருக்கலாம். ஜீன்ஸ் போட்ட இடுப்பில் குழந்தை யை தூக்கி வைப்பது அவளுக்கு அவமானமாக இருந்ததோ என்னவோ, குழந்தையைஅவள் தூக்கவில்லை. தம்பதிகள் ஆளுக்கொரு கையாக பிடித்தபடி அந்தக் குழந்தையை நடத்தி அழைத்து வந்தார்கள். அந்தக் குழந்தையோ தத்தித்தத்தி அடியெடுத்து வைத்தும் கீழே விழுந்தும் பெற்றோருடன் சேர்ந்து நடக்க ஒரு போராட்டமே நடத்தியது. அதோடு நாகரீக தம்பதிகளின் வாரிசு என்பதால் அந்தக்குழந்தையும் தன் எடைக்கு மேல் ரெடிமேட்ஆடை, கனத்த பூட்ஸ் என்று சுமந்து கொண்டிருந்தது. இதில் தானே நடந்தாக வேண்டிய அவலம் வேறு!

ஐந்து, ஆறு வயது வரையில் தாயின் இடுப்பிலேயே உட்கார்ந்து கொண்டு ஊரெல்லாம் சுற்றி வந்த நமக்கு கிடைத்த தாய்மையின்பம் இக்கால குழந்தைகளுக்கு கிட்டவில்லையே என்பது தான் என் வேதனையாக இருந்தது.

-எஸ்.ஜெ.சீனிவாசன், சேலம்.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 22 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 22 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Wed May 16, 2012 9:17 am

வேண்டாமே நோயுடன் விளையாட்டு!

பக்கத்து ஊரில் உள்ள என் தோழியை பார்ப்பதற்காக அவள் வீட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது கண்ட காட்சி என்னை திடுக்கிட வைத்தது. அங்குள்ள சாலைகள் நேர்த்தியாக சிமென்ட் சாலைகளாக காட்சி தந்தது. ஆனால் சாக்கடையை தூர் வாரி ஒவ்வொருவரின் வீட்டு வாசல்களுக்கும் நேராக குவியலாக வைத்திருந்தனர். அதாவது சாக்கடையை வாரி ஒவ்வொரு வீட்டின்முன்பும் குவியலாக சேர்த்ததோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக எண்ணிக் கொண்டு விட்டார்கள் போலும். அதை உடனே அள்ளிச்செல்ல எந்த ஏற்பாடும் செய்யவில்லை என்பதை அறிந்தபோது அவர்களின் அறியாமை வருந்த வைத்தது.

இப்படி கூட்டி வைத்திருக்கும் சாக்கடையால் எவ்வளவு நோய்த்தொற்று ஏற்படும். அதோடு கோழிகள் கிண்டி அதை மறுபடியும் சாக்கடைக்குள் தள்ளியதையும் பார்க்க முடிந்தது. இதற்கு ஏன் தூர்அள்ள வேண்டும்? குப்பைகளை உடனுக்குடன் அள்ளினால் இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

அந்த தெருவில் சிறு குழந்தைகள் வேறு அந்த சாக்கடைக் குவியல் மீது ஏறி விளையாடியதை பார்த்தபோது இன்னும் அதிர்ந்து போனேன். இதன் மூலம் காய்ச்சல் போன்ற நோய்த்தொற்றுகள் ஏற்படவும் வாய்ப்பு அதிகம். நான் என் தோழியிடம் இந்த சாக்கடையை தூர்வாரி அப்படியே விட்டு வைத்திருப்பதால் ஏற்படும் அபாயம் பற்றி கூறி அவளளவில் விழிப்புணர்வு எற்படுத்தி விட்டு வந்தேன்.

-வி.உமாராணி, தென்காசி


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 22 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 22 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Wed May 16, 2012 9:18 am

வெள்ளை மனம்... பிள்ளை குணம்...

எங்கள் உறவினர் வீட்டுப்பெண்ணுக்கு வயது முப்பதுக்கு மேல் தான் திருமணம் நடந்தது. அவளுக்கு பித்தநரை இருந்ததால் முப்பது வயதுக்குள் தலைமுடி வெளுக்கத் தொடங்கி விட்டது. வாரம் ஒருமுறை சாயம் பூச வேண்டும். இதை மறைத்து திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள்.

மாப்பிள்ளைக்கு வெளிநாட்டில் வேலை. கைநிறைய சம்பளம். விடுப்பு முடிந்து மனைவியை அழைத்துக் கொண்டு வெளிநாடு போனார். முன்று மாதகாலம் கணவருக்குத் தெரியாமல் சாயம் பூசி வந்தவள், ஒரு நாள் மாட்டிக்கொண்டாள். அதன்பிறகு அழுதுகொண்டே தன் பித்தநரை பற்றி சொல்ல, அவள் கணவரோ, "அடி அசடே! இதற்கா பயந்தாய்? இதுமாதிரி குறை என்பது இப்போதெல்லாம் சகஜம். அதனால் நீயே சாயம் அடித்து சங்கடப்படுவதை விட பிïட்டிபார்லர் போய் தலைமுடியை கருமைப்படுத்திக் கொள்ளலாமே என்றிருக்கிறார்.அதோடு அவரே பிïட்டி பார்லருக்கும் அழைத்துச் சென்றிருக்கிறார்.

பெண்களிடம் சிறு குறை இருந்தாலே பேனைப்பெருமாளாக்கி ஆட்டம் போடும் இந்த நாளில் உறவுக்கார பெண்ணின் கணவனின் பெருந்தன்மைக்கு ஒரு ராயல் சல்ïட் அடிக்கத்தோன்றியது.

வள்ளிமயில் பிரபாகரன், புதுக்கோட்டை


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 22 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 22 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Wed May 16, 2012 9:18 am

வருந்த வைத்த `வளர்ந்த' குழந்தை

எனது உறவினர் ஒருவருக்கு 2 மகள்கள். ஒரு மகன். ஒரே பையன் என்பதால் அம்மா நிறைய செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். மகனை வெளியில் எங்கும் அனுப்ப மாட்டார். பக்கத்து வீட்டு பிள்ளைகள் விளையாட அழைத்தால் கூட அவர்களுக்குத்தான் திட்டு விழும்.

மகன் பள்ளிக்குப் போகும் வயது வந்தபோது தாயாரும்கூடவே போவார். பள்ளி முடியும்முன்பே முதல்ஆளாகப் போய் மகனுக்காக காத்திருப்பார். பையனும் வளர்ந்தான். கல்லூரிப்பருவம் வந்ததும் திருச்சியில் உள்ள பெரிய கல்லூரி ஒன்றில் எம்.சி.ஏ. சேர வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் இருந்தது திருச்சிக்கு அருகே உள்ள சிறிய கிராமம். அங்கிருந்தபடி தினமும் கல்லூரி போனான். `அம்மா பிள்ளை'யாகவே வளர்ந்து விட்டதால் அவனால் சக மாணவர்களுடன் ஒட்ட முடியவில்லை. மாணவர்கள் ஏதாவது கேட்டால் கூட பேசவே கூச்சப்படும் நிலை தான் நீடித்தது. ஒரு சில நாட்களுக்குள் மனநிலை பாதிக்கப்புடும் அளவுக்கு போனது. இதனால் மனநல டாக்டர்கள், சிகிச்சை என்று போனதில் ஒரு வருட படிப்பு வீணானது. பிறகு எப்படியோ கஷ்டப்பட்டு கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மகனுக்காக பெற்றோரும் கல்லூரிக்கு அருகில் ஒரு வாடகை வீட்டை பிடித்து குடியேறினர்.

தற்போது கல்லூரிப் படிப்பை முடித்த நிலையில் வெளிïரில் இருந்து வரும் வேலை வாய்ப்புக்களை ஏற்க மறுக்கிறான்.அந்த பையனின் அப்பா கடன் வாங்கி மகளை படிக்க வைத்திருக்கிறார். அவர்தான் அவன் எதிர்காலம் பற்றி கவலைப்படுகிறார். அம்மாபாசத்தில் அவனைப் பொறுத்த வரையில் இன்னமும் குழந்தையாகவே இருக்கிறான். பெற்றோரே உங்கள் பிள்ளைகளை அந்தந்த வயதுக்கே உரிய அனுபவங்களுடன் வளரவிடுங்கள். அப்போது தான் தங்களைச்சுற்றியுள்ள வெளியுலகையும் அவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

-கே.சரண்யா, காட்டூர்.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 22 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 22 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Wed May 16, 2012 9:19 am

நன்றி சொன்னாலும் போதாது!

நான் இப்போது ஓய்வு பெற்ற ஆசிரியை. சில ஆண்டுகளுக்கு முன்பு நான் ஆசிரியையாக பணியாற்றிய போது நடந்த மறக்க முடியாத சம்பவம் இது.

என் கணவரிடம் என் ஊழியப் பதிவேட்டைக் கொடுத்து முக்கிய கையெழுத்து பெற்று வரும்படி சென்னையில் உள்ள பள்ளிக்கு அனுப்பினேன். அவரும் கையெழுத்தை பெற்றுக்கொண்டு ரெயிலில் வர, ரெயிலில் அவர் அருகில் இருந்தவர் சகஜமாக பேசிக் கொண்டு வந்திருக்கிறார். இவரும் அந்த உரையாடலில் கலந்து கொண்டிருக்கிறார். காட்பாடி ஸ்டேஷன் வந்ததும் பேச்சு சுவாரசியத்தில் எனது ஊழியப்பதிவேட்டை மறந்து வைத்துவிட்டு இறங்கியிருக்கிறார், என் கணவர். அங்கிருந்து பஸ் பிடித்து வேலூருக்கு வந்து சேர்ந்தார்.

அவர் எனது ஊழியப் பதிவேட்டை தொலைத்தது வீட்டுக்கு வந்தபிறகு தான் தெரிந்தது. எனக்கு பெரிய அதிர்ச்சி. அந்த பதிவேட்டில் நான் அதுவரை பணியாற்றிய அனைத்துப் பள்ளிகள் பற்றிய குறிப்பும் உள்ளன. என்னிடம் உள்ள அலுவலக குறிப்புகளை வைத்துக் கொண்டு இறுதியாய் பணியாற்றிய சேலம் ஜங்ஷன் சாரதா வித்யாலயா பள்ளித்தலைமை ஆசிரியருக்கும், நிர்வாகிக்கும் எனக்கு மாற்று ஊழியப்பதிவேடு தயாரித்துக் கொடுக்கும்படி கடிதம் எழுதினேன்.

மேற்படி பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து ஒருசில நாட்களில் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் எனது ஊழியப் பதிவேடு சேலம் ஜங்ஷன் ஸ்டேஷன் மாஸ்டர் மூலமாக அவர்கள் பள்ளிக்கு வந்திருப்பதாக குறிப்பிட்டவர்கள் என் கடிதம் கிடைத்ததும் அதை பதிவுத்தபாலில் அனுப்பி வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டு இருந் தார்கள்.

எனது ஊழியப் பதிவேட்டை ரெயிலில் என் கணவரிடம் பேசிக்கொண்டு வந்த நபர் எடுத்து ஸ்டேஷன் மாஸ்டரிடம் கொடுத்திருக்க வேண்டும். அவர் அதை இந்த பள்ளிக்கு தனது செலவில் அனுப்பி வைத்திருக்க வேண்டும். இவர்களின் பொறுப்பான செயலால் தான் என் ஊழியப்பதிவேடு எனக்கு திரும்பக் கிடைத்தது. ஓய்வு பெற்ற நிலையில் இன்று நான் வாங்கும் பென்ஷன், அந்த நல்ல உள்ளம் படைத்த ஸ்டேஷன் மாஸ்டரால் தான் என்பதை சொல்லவும் வேண்டுமோ!

- விபார்வதி, ராசிபுரம்



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 22 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 22 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by dhilipdsp Wed May 16, 2012 3:57 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 22 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Thu Jul 12, 2012 1:34 pm

சேமிக்க ஒருவர்.. செலவழிக்க ஒருவர்...

என் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் துபாயில் வேலை பார்த்து வந்தார், மாதாமாதம் தவறாமல் மனைவிக்கு பணம் அனுப்பி விடுவார். ஆனால் மனைவியோ சிக்கனமாக இருந்து சேமிக்காமல், ஊதாரித்தனமாக செலவழித்து வந்தார்.

பெரும்பாலும் வீட்டில் சமையல் செய்யாமல், கடைகளிலேயே வாங்குவார். தெருவில் விற்கும் எந்தப் பொருளையும், பேரம் பேசாமல் வாங்கி விடுவார். போதாக்குறைக்கு சேலை, துணிமணிகள், ஆபரணங்கள் என்று எந்த பொருட்காட்சிக்கு சென்றாலும் வாங்கி வந்து விடுவார்.

இதனால் பணத்தட்டுப்பாடு ஏற்படவே, நகைகளை, வங்கியில் அடகு வைத்து பணம் வாங்கியுள்ளார். மேலும் வட்டிக்கு கொடுப்பவர்களிடமும், வாங்கி வட்டிக்கு மேல் வட்டி கட்டி சமாளித்து வந்துள்ளார்.

விடுமுறையில் ஊருக்கு வந்த கணவர், வங்கியில் பணம் இல்லாததால், பணம் எங்கே? என்று கேட்க, மனைவி எல்லாம் சரியாகி விட்டது என்று பதில் சொல்லியுள்ளார். நிலைமையை அறிந்து, அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் விசாரிக்கவும், கடன் காரர்கள் வீடு தேடி வரவும், கணவருக்கு நிலவரம் புரிந்து விட்டது.

இதனால் தகராறாகி, விவாகரத்து செய்யும் அளவுக்கு வந்து விட்டது. இதை அறிந்த மனைவியின் பெற்றோர் வந்து சமாதானம் பேசி, தங்களிடமிருந்த நிலங்களை விற்று கொஞ்சம் உதவியுள்ளார்கள். ஆனாலும் கணவர் சமாதானமடையவில்லை. பிறகு உறவினர்கள் வந்து, பஞ்சாயத்து பேசி, குழந்தைகளின் நலனை முன்னிட்டாவது, சேர்ந்து வாழுங்கள் என்று சேர்த்து வைத்தார்கள். அவரும் வேண்டாவெறுப்பாக இருந்து மீண்டும் வெளிநாடு சென்று விட்டார்.

குடும்பத்தலைவிகளே! குடும்பத்தை பிரிந்து, வெளிநாடுகளில் வேலை செய்யும் உங்கள் கணவர்மார்களின் வருமானத்தை சிக்கனமாக இருந்து சேர்த்து வைக்க முயலுங்கள். ஊதாரித்தனமாக செலவு செய்தால், குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் கடினமாய் உழைத்த உங்கள் கணவரின் உழைப்பு அர்த்தமில்லாததாய் ஆகி விடுகிறதே.

ஆர்.யாஸ்மின், உறையூர்.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 22 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 22 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Thu Jul 12, 2012 1:34 pm

நிற்குமா, நிற்காதா?

எனது பெண் தோழி ஒருவர் அவரது வீட்டில் இருந்து டைடல் பார்க் வழி செல்லும் பேருந்தில் பயணம் செய்தபோது, கண்டக்டர் டைடல் பார்க்கில் பேருந்து நிற்காது என்று கூறியுள்ளார். எனது தோழி அதனை கேட்ட உடன் அவரோடு வாக்குவாதம் செய்யாமல் புகார் கொடுக்கும் போன் நம்பரில் பேசியுள்ளார்.

அவர் பேருந்து எண், எங்கு தற்போது சென்று கொண்டிருக்கிறது என்று விசாரித்துக் கொண்டு தோழியிடம் போனை துண்டிக்க சொல்லியுள்ளார். சிறிது நேரத்தில் டிரைவரின் பக்கத்தில் இருந்த ஒலி பெருக்கியில் சத்தம் வந்தது. சற்றுமுன் போனில் தகவல் கேட்டவர்தான் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பேசியுள்ளார். ஏன் அந்த நிறுத்தத்தில் பேருந்து நிற்காது? டிரைவரிடம் அவர் கேட்க, பதட்டம் அடைந்த டிரைவர், "பேருந்து அந்த நிறுத்தத்தில் நிற்கும். கண்டக்டர் புதியவர் என்பதால் தவறுதலாக கூறி விட்டார் என்று சொல்லி சமாளித்துள்ளார்.

இப்படி ஒலிபெருக்கியுடன் கூடிய கட்டுப்பாடு அறை தொடர்பு இருப்பது பயணிகள் பலருக்கும் அன்றுதான் தெரிந்து இருக்கிறது. சக பயணிகள் தோழியிடம் எப்படி புகார் செய்தீர்கள் என்று விசாரித்து கேட்டு தெரிந்து கொண்டனர்.

ஆர்.அருண், ஓசூர்.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 22 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 22 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 22 of 32 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 27 ... 32  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum