Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெகிழ வைத்த நிஜங்கள்
+46
ஹாசிம்
றினா
ராஜா
அகல்
கரூர் கவியன்பன்
noorvkr
முஹைதீன்
சந்திரகி
ARR
dhilipdsp
sinthiyarasu
இரா.பகவதி
பது
யினியவன்
ரா.ரா3275
தம்பி வெங்கி
சார்லஸ் mc
பிரசன்னா
ரேவதி
ஹர்ஷித்
Bobshan returns
Dr.சுந்தரராஜ் தயாளன்
Thiraviamurugan
ரபீக்
positivekarthick
சுரேஷ்குமார்
krishnaamma
ஜாஹீதாபானு
kitcha
அருண்
கா.ந.கல்யாணசுந்தரம்
அப்துல்லாஹ்
ந.கார்த்தி
அசுரன்
Manik
மஞ்சுபாஷிணி
பிரகாசம்
கலைவேந்தன்
varsha
நியாஸ் அஷ்ரஃப்
இளமாறன்
ஸ்ரீஜா
SK
உதயசுதா
தமிழ்ப்ரியன் விஜி
சிவா
50 posters
Page 19 of 32
Page 19 of 32 • 1 ... 11 ... 18, 19, 20 ... 25 ... 32
நெகிழ வைத்த நிஜங்கள்
First topic message reminder :
வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'
நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.
சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.
சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.
`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.
``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.
``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.
சுமதி பாபு, கோவூர்.
நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி
வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'
நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.
சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.
சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.
`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.
``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.
``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.
சுமதி பாபு, கோவூர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நெகிழ வைத்த நிஜங்கள்
பயணம் ஒன்று... ஆச்சரியம் இரண்டு!
நான் அரசு பணியில் இருக்கிறேன். அலுவலக வேலையாக ஊழியர்களுடன் சென்னைக்கு பயணம் செய்தோம். நாங்கள் தங்கியிருந்த லாட்ஜில் இருந்து அதிகாரிகள் அலுவலகம் செல்வதற்காக ஒரு ஆட்டோக்காரரை அழைத்தோம். எவ்வளவு கட்டணம்? என்று கேட்டோம். `உங்கள் விருப்பம்போல் கொடுங்கள்' என்றார். நாங்கள் இறங்கிய பிறகு 50 ரூபாயைக் கொடுத்தோம், அவர் மறுப்பு சொல்லாமல் வாங்கிக் கொண்டார். நாங்கள் அவரை ஆச்சரியமாகப் பார்த்தோம்.
அன்று லாட்ஜ் திரும்பிய பிறகு ஊழியர் ஒருவரின் செல்போன் காணாமல் போயிருந்தது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. திடீரென ஊரில் உள்ள அவரது மனைவியிடம் இருந்து எங்களது நண்பர் ஒருவருக்கு போன் வந்தது. ஆட்டோவில் போனை தவற விட்டுவிட்டதாகவும், ஆட்டோக்காரர் நம்பரில் தொடர்பு கொண்டு போனை பெற்றுக் கொள்ளும்படியும் கூறிவிட்டு ஆட்டோக்காரர் எண்ணைத் தந்தார். நாங்கள் ஆட்டோக்காரரை தொடர்பு கொண்டு செல்போனை பெற்றுக் கொண்டோம்.
அவரது நல்ல குணத்தைப் பாராட்டி பணத்தை பரிசாக கொடுக்க முன்வந்தோம். ஆனால் அவரோ பணத்தை வாங்க மறுத்து சென்றுவிட்டார். நாங்கள் மீண்டும் ஒருமுறை அவரை வியந்து பார்த்தபடி நின்றோம்.
ஆ.முனியப்பன் சேகர், தூத்துக்குடி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நெகிழ வைத்த நிஜங்கள்
முதல் கதை ஏற்கனவே இங்க யாரோ போட்டுட்டாங்க சிவா.
இரண்டாவது - சூப்பர் - இவர்தான் ரியல் "ஆட்டோகாரன்" அத விட சிறந்த "மனிதன்".
இரண்டாவது - சூப்பர் - இவர்தான் ரியல் "ஆட்டோகாரன்" அத விட சிறந்த "மனிதன்".
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நெகிழ வைத்த நிஜங்கள்
ஆட்டோக்காரர்களில் அற்புத மனிதர்களும் உண்டு...
நல்ல நெகிழ்ச்சியான நிஜம்...
பகிர்விற்கு நன்றி சிவா...
நல்ல நெகிழ்ச்சியான நிஜம்...
பகிர்விற்கு நன்றி சிவா...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: நெகிழ வைத்த நிஜங்கள்
படிப்பைத் தடுத்த தந்தை... ஜெயித்துக் காட்டிய மகள்!
என் பக்கத்து வீட்டினர் நடுத்தர குடும்பம். அந்த தம்பதிக்கு ஒரு மகள். நன்றாக
படிப்பாள். அவர்கள் வீட்டில் மின்சாரஇணைப்பு கிடையாது. சிம்னிவிளக்கு வைத்துதான் படிப்பாள்.
அவளுடைய தந்தை மது அருந்தும் பழக்கம் உடையவர். தினமும் குடித்துவிட்டு அவருடைய வீட்டு கஷ்டத்தையும், அடுத்தவர்கள் செய்த கெடுதலையும் சொல்லி சத்தம் போடுவார். இதனால் அவரது மகள் படிப்பில் முழுகவனம் செலுத்த முடியாமல் சிரமப்பட்டாள்.
`மகள் படிக்கிறாள், கொஞ்சம் அமைதியாக இருங்கள்'' என்று அவரது மனைவி சொல்லிப் பார்ப்பாள். ஆனால் அவரோ, "அவள் அதிகம் படித்தால் என்னை மதிக்க மாட்டாள்'' என்பார்.
இதை தினம் தினம் காதில் கேட்கும் அவரது மகளோ தன் தந்தை தன்னைப்பற்றி இப்படி எதிர்மறையாக சொன்னதை உடைத்துக் காட்ட வேண்டும் என்று வைராக்கியம் கொண்டாள். அதன்பிறகு தன் குடிகாரத் தந்தை என்னதான் கத்தினாலும் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் படிப்பு ஒன்றே குறியாக இருந்திருக்கிறாள். அந்த முயற்சி கைகொடுத்ததில் நன்றாகப் படித்து முடித்து இப்போது பெரிய கம்பெனியில் நல்ல வேலை கிடைத்து மாதம் 15 ஆயிரம் சம்பாதிக்கிறாள். அவள் மாதம் தோறும் சம்பளம் வாங்கியதும் முதலில் அப்பாவிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்குகிறாள்.
"உன்னைப் படிக்க விடாமல் தடுத்தவரிடம் போய் சம்பளத்தைக் கொடுக்கிறாயே?'' என்று கேட்டால், "அவர் திட்டியதால் தான் நான் ஜெயித்துக் காட்ட வேண்டும் என்று நினைத்து வைராக்கியத்துடன் படித்தேன். படித்தால் மதிக்க மாட்டேன் என்று சொன்னதை பொய்யாக்க, அவரிடமே சம்பளத்தைக் கொடுத்து அவர்மீது வைத்திருக்கும் மரியாதையை உறுதிப்படுத்திக் கொள்கிறேன். அதோடு அப்பாவும் இப்போது மாறி விட்டார். அந்த மாற்றத்துக்கும் மரியாதை கொடுத்துத்தானே ஆக வேண்டும்'' என்றாள்.
அந்தப் பெண்ணின் `அப்பா பாசம்' என்னை' நெகிழ வைத்துவிட்டது.
-எஸ்.கவுரி, பெரியகுப்பம்.
என் பக்கத்து வீட்டினர் நடுத்தர குடும்பம். அந்த தம்பதிக்கு ஒரு மகள். நன்றாக
படிப்பாள். அவர்கள் வீட்டில் மின்சாரஇணைப்பு கிடையாது. சிம்னிவிளக்கு வைத்துதான் படிப்பாள்.
அவளுடைய தந்தை மது அருந்தும் பழக்கம் உடையவர். தினமும் குடித்துவிட்டு அவருடைய வீட்டு கஷ்டத்தையும், அடுத்தவர்கள் செய்த கெடுதலையும் சொல்லி சத்தம் போடுவார். இதனால் அவரது மகள் படிப்பில் முழுகவனம் செலுத்த முடியாமல் சிரமப்பட்டாள்.
`மகள் படிக்கிறாள், கொஞ்சம் அமைதியாக இருங்கள்'' என்று அவரது மனைவி சொல்லிப் பார்ப்பாள். ஆனால் அவரோ, "அவள் அதிகம் படித்தால் என்னை மதிக்க மாட்டாள்'' என்பார்.
இதை தினம் தினம் காதில் கேட்கும் அவரது மகளோ தன் தந்தை தன்னைப்பற்றி இப்படி எதிர்மறையாக சொன்னதை உடைத்துக் காட்ட வேண்டும் என்று வைராக்கியம் கொண்டாள். அதன்பிறகு தன் குடிகாரத் தந்தை என்னதான் கத்தினாலும் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் படிப்பு ஒன்றே குறியாக இருந்திருக்கிறாள். அந்த முயற்சி கைகொடுத்ததில் நன்றாகப் படித்து முடித்து இப்போது பெரிய கம்பெனியில் நல்ல வேலை கிடைத்து மாதம் 15 ஆயிரம் சம்பாதிக்கிறாள். அவள் மாதம் தோறும் சம்பளம் வாங்கியதும் முதலில் அப்பாவிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்குகிறாள்.
"உன்னைப் படிக்க விடாமல் தடுத்தவரிடம் போய் சம்பளத்தைக் கொடுக்கிறாயே?'' என்று கேட்டால், "அவர் திட்டியதால் தான் நான் ஜெயித்துக் காட்ட வேண்டும் என்று நினைத்து வைராக்கியத்துடன் படித்தேன். படித்தால் மதிக்க மாட்டேன் என்று சொன்னதை பொய்யாக்க, அவரிடமே சம்பளத்தைக் கொடுத்து அவர்மீது வைத்திருக்கும் மரியாதையை உறுதிப்படுத்திக் கொள்கிறேன். அதோடு அப்பாவும் இப்போது மாறி விட்டார். அந்த மாற்றத்துக்கும் மரியாதை கொடுத்துத்தானே ஆக வேண்டும்'' என்றாள்.
அந்தப் பெண்ணின் `அப்பா பாசம்' என்னை' நெகிழ வைத்துவிட்டது.
-எஸ்.கவுரி, பெரியகுப்பம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நெகிழ வைத்த நிஜங்கள்
மணவிழாவில் மகிழ்ச்சி தந்த இசைவிழா... !
எனது உறவினரின் மகளுக்குச் சமீபத்தில் திருமணம் நடந்தது. வரவேற்பு விழாவுக்கு மெல்லிசைக் குழு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அக்குழுவினரைப் பார்த்த எனக்கு வியப்பு. அவர்கள் அனைவருமே மாற்றுத் திறனாளிகள்.
ரிஷப்ஷனுக்கு வந்தவர்கள் அனைவருமே அவர் களுடைய இன்னிசை மழையில் நனைந்து சிலிர்த்துப் போனார்கள். இதுபற்றி உறவினரிடம் கேட்டபோது, "மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப் பளிக்கும்போது அவர்களுக்கு தன்னம்பிக்கையும், வருமானமும் கிடைக்கிறது. மேலும் மாற்றுத் திறனாளிகள் என்றாலே கேலியாகப் பார்ப்பவர்களுக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் சவுக்கடியாக அமையும்'' என்றார்.
மாற்றுத் திறனாளிகளை மதிக்கவும், அவர்களுக்கு நல்ல வாய்ப்பளிக்கவும் நாமும் முன்வருவோமே!
-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
எனது உறவினரின் மகளுக்குச் சமீபத்தில் திருமணம் நடந்தது. வரவேற்பு விழாவுக்கு மெல்லிசைக் குழு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அக்குழுவினரைப் பார்த்த எனக்கு வியப்பு. அவர்கள் அனைவருமே மாற்றுத் திறனாளிகள்.
ரிஷப்ஷனுக்கு வந்தவர்கள் அனைவருமே அவர் களுடைய இன்னிசை மழையில் நனைந்து சிலிர்த்துப் போனார்கள். இதுபற்றி உறவினரிடம் கேட்டபோது, "மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப் பளிக்கும்போது அவர்களுக்கு தன்னம்பிக்கையும், வருமானமும் கிடைக்கிறது. மேலும் மாற்றுத் திறனாளிகள் என்றாலே கேலியாகப் பார்ப்பவர்களுக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் சவுக்கடியாக அமையும்'' என்றார்.
மாற்றுத் திறனாளிகளை மதிக்கவும், அவர்களுக்கு நல்ல வாய்ப்பளிக்கவும் நாமும் முன்வருவோமே!
-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நெகிழ வைத்த நிஜங்கள்
கீழே விழுந்த வரும் மனதில் நின்றவரும்...
மெயின்ரோட்டில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது வாகன நெரிசல் மிகுந்த அந்த சாலையின் குறுக்காக கடக்க முயன்றார் ஒரு பெரியவர். சாலையின் நடுவில் வரும்போது திடீரென எதிர்பாராமல் கீழே விழுந்து விட்டார்.
அதேநேரம் வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் `சடன் பிரேக்' போட்டு வண்டியை நிறுத்தி வேகமாக இறங்கினார். அதே வேகத்தில் விழுந்து கிடந்த பெரியவரை நெருங்கிப்போய் அவரை தூக்கி விட்டார். தன்னிடம் இருந்த தண்ணீர் பாட்டிலை கொடுத்து தண்ணீரை பருகச் செய்தார். கொஞ்சம் தன்னை ஆசுவாசம் செய்துகொண்டு பெரியவர் இயல்பானதை உணர்ந்து கொண்டதும், வாகன இளைஞர் பெரியவரிடம், "அய்யா...என்னாயிற்று உங்களுக்கு? நன்றாகத்தானே சாலையை கடந்து கொண்டிருந்தீர்கள்...எதிர்பாராமல் விழுந்து விட்டீர்களே'' என்று கனிவாக கேட்டார்.
பெரியவரோ தனக்கு ரத்தக்கொதிப்பு நோய் உண்டென்றும், மதியம் சாப்பிடாமல் வந்ததால் இப்படி ஆகி விட்டது என்றும் கூறினார்.
உடனே இரு சக்கரவாகனத்தில் வந்தவர், பக்கத்தில் இருந்த ஓட்டலில் பெரியவருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தார். `சாப்பிட்டு முடித்ததும் நிதானமாய் செல்லுங்கள்' என்று செல்லிவிட்டு தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு பயணித்தார்.
பத்து நிமிட நேரம் நடந்த இந்த பாசப்பரிவு காட்சியை பார்த்த எனக்கு வாகனத்தில் வந்த அந்த இளைஞர் மேல் மரியாதை கூடியது. வழக்கமாக இப்படி மற்றவர்கள் வாகனத்தில் வரும் நேரத்தில் யாராவது இப்படி குறுக்கே வந்து விட்டால், ஆத்திரத்தில் வள்ளென்று விழுவார்கள். அதை மட்டுமே இதுவரை பார்த்த என் கண்களுக்கு இந்தக்காட்சி ஆச்சரியமாகவே இருந்தது.
-கு.நவரோஜி, மேற்கு தாம்பரம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நெகிழ வைத்த நிஜங்கள்
டிக்கெட் பணத்தை `லபக்'கிய திருடி!
காலை நேர பரபரப்பில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. அதனால் ஒரு பெண்ணிடம் பத்து ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுக்கச் சொன்னேன். இரண்டு நிறுத்தம் சென்றும் பயணச்சீட்டு வரவில்லை. அந்தப் பெண்ணிடம் கேட்டால், "கொடுத்திருக்கிறேன் வரும், பொறுங்கள்''
என்றாள்.
நான் இறங்குமிடம் நெருங்கிக் கொண்டிருந்ததால் மீண்டும் பயணச்சீட்டை நினைவுபடுத்தினேன். "நான் கொடுத்த பணத்தை எடுத் துக்கொண்டு அந்தப் பெண்மணி அப்போதே இறங்கிவிட்டாள்'' என்று பக்கத்தில் நின்ற பெண் கூறினார்.
என் கையில் வேறு பணமும் இல்லை.ளஅடுத்த நிறுத்தத்திலோ பயணச்சீட்டு பரிசோதகர்கள் நின்றனர். எனக்கு அழுகையே வந்துவிட்டது. "அம்மா பதற்றப்படாம அமைதியா இருங்க. பரிசோதகர் உள்ளே வந்து கேட்டால் நாங்கள் விவரம் சொல்கிறோம், அழாதீங்க" என்று மற்ற பயணிகள் கூறினர். அது ஒரு கல்லூரி நிறுத்தமாக இருந்ததால் கீழே நின்றபடியே டிக்கெட்டை பரிசோதித்து விட்டு சென்று விட்டனர். பஸ் நகர்ந்து நான் இறங்கும் நிறுத்தம் வரும்வரை எனக்கு மனம் திக்திக்கென்று பதற்றமாகவே இருந்தது. எப்படியோ டிக்கெட் பரிசோதகரிடம் சிக்கி அவமானப்படாமல் தப்பித்தேன்.''
முடிந்தவரை பயணச்சீட்டை நாமே வாங்குவது நல்லது என்பதை அந்த அனுபவம் எனக்குக் கற்றுத் தந்தது.
-த.காமாட்சி, கடம்பநல்லூர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நெகிழ வைத்த நிஜங்கள்
மிகவும் சிறப்பாக உள்ளது sivaa
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: நெகிழ வைத்த நிஜங்கள்
மாமியாருக்கு மரியாதை
சமீபத்தில் என் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். உறவினர் வீட்டில் அவர் மாமியாரும் இருந்தார். அவருக்கு அதிக வயது காரணமாக கண்பார்வை மங்கி விட்டது. காதும் சரிவர கேட்காமல் இருந்தது.
நான் அவர்கள் வீட்டுக்கு சென்றிருந்தபோது நான் சென்றதோ, உறவினரிடம் பேசிக் கொண் டிருந்ததோ அந்த பாட்டிக்கு தெரியாது. இருப்பி னும் என் உறவுக்கார பெண் தன்மாமியாரிடம் என்னை அழைத்துச்சென்றார்.காதருகில் சத்த மாக என்அம்மா பெயரையும் உறவுமுறையையும் சொல்லி அறிமுகப்படுத்தினார். அந்த பாட்டியும் என் கரங்களைப் பற்றிக்கொண்ட என் அம்மா, எங்கள் குடும்பம் பற்றியெல்லாம் சில மலரும் நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண் டார். அவர்களிடம் விடைபெறும்போது கைளை தலையில் வைத்து ஆசியும் வழங்கினார். மகிழ்ச்சியுடன் விடை பெற்றேன்.
இன்றைக்கு பெரும்பாலான முதியவர்கள் பிள்ளைகளின் அரவணைப்பின்றி முதியோர் இல்லங்களுக்கு பார்சல் பண்ணப்பட்டு விடுகிறார்கள். ஆனால் என் உறவினர்பெண் தன் மாமியாரை எந்தக்குறையும் இன்றி பராமரிப்பதோடு, வீட்டுக்கு வருகிற என் போன்ற உறவினர்களையும் அறிமுகப்படுத்தி வைத்து அவர்களின் மகிழ்ச்சிக்கு வகை செய்கிறார். நிஜமாகவே இப்படி ஒரு அன்பான மருமகள் கிடைக்க அந்த மாமியார் கொடுத்து வைத்தவர் தான்.
-பி.மரகதவள்ளி, வள்ளியூர்.
சமீபத்தில் என் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். உறவினர் வீட்டில் அவர் மாமியாரும் இருந்தார். அவருக்கு அதிக வயது காரணமாக கண்பார்வை மங்கி விட்டது. காதும் சரிவர கேட்காமல் இருந்தது.
நான் அவர்கள் வீட்டுக்கு சென்றிருந்தபோது நான் சென்றதோ, உறவினரிடம் பேசிக் கொண் டிருந்ததோ அந்த பாட்டிக்கு தெரியாது. இருப்பி னும் என் உறவுக்கார பெண் தன்மாமியாரிடம் என்னை அழைத்துச்சென்றார்.காதருகில் சத்த மாக என்அம்மா பெயரையும் உறவுமுறையையும் சொல்லி அறிமுகப்படுத்தினார். அந்த பாட்டியும் என் கரங்களைப் பற்றிக்கொண்ட என் அம்மா, எங்கள் குடும்பம் பற்றியெல்லாம் சில மலரும் நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண் டார். அவர்களிடம் விடைபெறும்போது கைளை தலையில் வைத்து ஆசியும் வழங்கினார். மகிழ்ச்சியுடன் விடை பெற்றேன்.
இன்றைக்கு பெரும்பாலான முதியவர்கள் பிள்ளைகளின் அரவணைப்பின்றி முதியோர் இல்லங்களுக்கு பார்சல் பண்ணப்பட்டு விடுகிறார்கள். ஆனால் என் உறவினர்பெண் தன் மாமியாரை எந்தக்குறையும் இன்றி பராமரிப்பதோடு, வீட்டுக்கு வருகிற என் போன்ற உறவினர்களையும் அறிமுகப்படுத்தி வைத்து அவர்களின் மகிழ்ச்சிக்கு வகை செய்கிறார். நிஜமாகவே இப்படி ஒரு அன்பான மருமகள் கிடைக்க அந்த மாமியார் கொடுத்து வைத்தவர் தான்.
-பி.மரகதவள்ளி, வள்ளியூர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 19 of 32 • 1 ... 11 ... 18, 19, 20 ... 25 ... 32
Similar topics
» நெகிழ வைத்த நிஜங்கள் - தொடர் பதிவு
» "நெகிழ வைத்த நிஜம்"
» நெகிழ வைத்த நிஜம்"
» நெகிழ வைத்த அஜித்!
» நெஞ்சை நெகிழ வைத்த போட்டோகிராபர்
» "நெகிழ வைத்த நிஜம்"
» நெகிழ வைத்த நிஜம்"
» நெகிழ வைத்த அஜித்!
» நெஞ்சை நெகிழ வைத்த போட்டோகிராபர்
Page 19 of 32
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|