புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Poll_c10 
51 Posts - 46%
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Poll_c10 
51 Posts - 46%
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த நிஜங்கள்


   
   

Page 18 of 32 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 25 ... 32  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 08, 2011 10:02 am

First topic message reminder :

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sun Feb 26, 2012 2:17 pm

மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 02, 2012 12:28 am

சூடான தோசைக்கல்லால் வந்த ஆபத்து

எனது உறவினர் வீட்டில் நடந்த சம்பவம் இது. ஒருநாள் காலை வேளையில் தோசை வார்த்த உறவினர் பெண்மணி சூடான கல்லை தரையில் வைத்துவிட்டு அவசர வேலையாக வெளியே போய்விட்டார். தன் தாயை தேடிக்கொண்டு அடுக்களைக்குள் வந்த அவரின் 2 வயது மகள் கீழேயிருந்த தோசைக்கல்லில் காலை வைத்து விட, குழந்தையின் கால் வெந்து புண்ணாகி விட்டது.

மருத்துவரிடம் காட்டி, பின்பு பூரணமாக குணமாவதற்கு ஒரு மாதம் ஆகிவிட்டது. இதற்கிடையில் நடக்க முடியாமல் வலியில் குழந்தை துடித்த துடிப்பை வார்த்தைகளில் சொல்ல முடியாது. இதுபோன்ற சூடான பாத்திரங்களை கீழே வைக்காமல் மேடை மேலேயே வைப்பது நல்லது. குறிப்பாக சிறுபிள்ளைகள் இருக்கும் வீட்டில் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

எஸ்.ராமலெட்சுமி, நாகப்பட்டினம்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 02, 2012 12:28 am

செல்போன் தனிமை...

ஒரு கல்யாணத்திற்காக நான் மும்பையில் இருந்து பெங்களூருக்கு ரெயிலில் போய்க்கொண்டிருந்தேன். என் பெட்டியில் பத்து கல்லூரி மாணவர்கள் தங்கள் ஆசிரியருடன் ஒரு புராஜக்டிற்காக பெங்களூர் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் மகாராஷ்டிரா தவிர ராஜஸ்தான், வங்காளம், குஜராத், தமிழ்நாடு என்று பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். ஒவ்வொருவரிடமும் வித விதமான செல்கள். அவற்றில் வித்தியாசமான ரிங்டோன்கள்.

ஒருவன் அதை காதில் பொருத்திக்கொண்டு பாட்டு கேட்டுக்கொண்டிருக்க, மற்றொருவன் எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டிருந்தான். அடுத்தவன் அதில் வந்த ஜோக்குகளுக்கு சிரித்துக் கொண்டிருந்தான். மற்றொருவன் நாங்கள் போகும் வழியைக் காட்டும் வரைபடம், எங்கள் வண்டியின் பாதை, பெங்களூரைப் பற்றிய செய்தியைக் காட்டும் படங்கள் இவற்றை எனக்கும் காட்டி மகிழ்ந்தான். சின்னப்பையனாகத் தெரிந்தவனோ வீடியோ கேமில் மூழ்கியிருந்தான். ஒருவன் தான் எடுத்த இயற்கை காட்சிகளை என்னுடன் பகிர்ந்து கொண்டான். மற்றொருவன் பேச்சில் ஈடுபட்டிருந்தான்.

பன்னிரெண்டு மணி நேரம் கழிந்த பின் நான், "பலவித மாநிலங்களில் இருந்து வந்திருக்கும் நீங்கள், ஒருவருக்கொருவர் பேசி உங்கள் ஊர், மக்கள், வாழ்க்கை முறை, உணவு வகைகள் பற்றியெல்லாம் அவர்களுக்குக் கூறி அவர்களைப் பற்றி அறிந்து கொண்டு ஒரு குறுகிய வட்டத்திற்குள் வந்து இந்த பிரயாணத்தை மகிழ்ச்சியாக மாற்றியிருக்கலாமே! இந்த இயந்திரத்துடன் உறவாடிக்கொண்டு நேரத்தை வீணாக்குகிறீர்களே! இதை வீட்டிலே கூட உபயோகிக்கலாமே!'' என்று கேட்டேன். "ஆன்டி, இப்போதெல்லாம் பேச ஆரம்பித்தால், வாக்குவாதங்களும், ஏன் விதண்டாவாதங்களும் தான் எழுகின்றன. தேவையற்ற உறவுமுறிவை தவிர்க்கவே இதை கட்டிக்கொண்டு அழுகிறோம்'' என்றான் ஒருவன். இது எப்படி இருக்கு?

எஸ்.ராஜலட்சுமி. ஸ்டார் காலனி.




நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 02, 2012 12:30 am

வராத மணமகன்...நடக்காத திருமணம்...

மும்பையில் இருந்து என் அம்மாவின் தோழி எங்களை பார்க்க வந்திருந்தார். அவர்கள் தங்கை பெண்ணின் திருமணம் நின்று போனதை கேட்டு அதிர்ச்சி அடைந்தோம்.

முறைப்படி பெண் பார்த்து, நிச்சயம் செய்து திருமண ஏற்பாடுகள் செய்து உள்ளனர். மணமகனுக்கு வெளிநாட்டில் வேலை. கைநிறைய சம்பளம். மிகவும் மகிழ்ந்து போயிருக்கிறார்கள். திருமணத்திற்கு முதல் நாள் வரை மாப்பிள்ளை வரவில்லை. பெண் வீட்டிற்கு சந்தேகம் வந்துள்ளது. மணமகனின் தந்தை மகன் வந்து விடுவான் என்று நம்பியுள்ளார். மகன் வெளிநாட்டில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்திருந்ததால் இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை வீணடிக்க மனமில்லாமல் அங்கேயே இருந்து விட்டான். பெற்றோருக்கு பயந்து திருமண ஏற்பாடு செய்ய ஒத்துழைத்துள்ளான். திருமணம் நின்ற வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும், பெண்ணின் வாழ்வு பறி போகாமல் இருந்ததை எண்ணி, பெண் வீட்டார் நிம்மதிப்பெருமூச்சுவிட்டனர். என்றாலும் மனக்கஷ்டமும், பணக்கஷ்டமும் வீண்தானே..!

விஜயா சுவாமிநாதன், உறையூர்




நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 02, 2012 12:30 am

குழந்தைகளை வருத்தாதீர்கள்

அலுவலகத்தில் வேலை பார்க்கும் என் நெருங்கிய நண்பரை வேறு ஊருக்கு மாற்றினார்கள். இரண்டொரு மாதம் கழித்து என் சொந்த பணி காரணமாக அந்த நகரத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. என் வேலை முடிந்ததும் நண்பரை பார்க்கச் சென்றேன். அவருடைய பத்து வயது மகன் எப்போதும் கலகலப்பாக பேசுவான். ஆனால் அன்று எதையோ பறிகொடுத்தது போல இருந்தான். நண்பரிடம் தனியாக விசாரித்தேன்.

அந்த பள்ளியில் வாங்கியதைவிட மதிப்பெண்களும், ரேங்கும் குறைவாக எடுத்ததால் பிரம்பால் விளாசி விட்டேன் என்றார். நான் என் நண்பனை திட்டினேன். புதிய இடம், புதிய சூழல், பழைய நண்பர்கள் பிரிவு, புதிய நண்பர்கள் கிடைக்காத ஏக்கம், பாடம் நடத்தும் முறை இவற்றைத் தாண்டி உன் மகன் சாதித்ததே பெரிது என்பதை புரிய வைத்தேன். தவறை உணர்ந்த நண்பன் மகனை ஊக்கப்படுத்தி வருகிறான். பிள்ளைகளை எந்த சூழ்நிலையிலும் அன்புடன் நடத்துங்கள். அடித்துத்திருத்த அவசியம் இல்லாமல் அவர்கள் அந்த அன்பின் ஆளுமைக்குள் வந்து விடுவார்கள்.

ந.அருண்குமார், பவானி.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Mar 02, 2012 8:33 am

நன்றி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 02, 2012 1:20 pm

நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 14, 2012 9:09 am

அலட்சிய அதிகாரிகள்... அவதிப்பட்ட மாணவன்!

நான் 12-ம் வகுப்பு தேர்வை பிரைவேட்டாக எழுதிக்கொண்டிருக்கிறேன். இதற்காக நான்பட்டபாடு பெரும் பாடு. முதலில் பரீட்சை எழுதுவதற்கான `ஹால் டிக்கெட்' பிப்ரவரி இறுதிவரை வரவில்லை. இதனால் பயந்து போய் உடனடியாக தஞ்சாவூரில் உள்ள சி.ஓ. அலுவலகத்திற்கு சென்றேன். அங்கு என்னை திருச்சி தலைமை அலுவலகத்திற்கு போகச் சொன்னார்கள். அங்கும் போனேன்.

அங்கோ, எனது `ஹால் டிக்கெட்` கும்பகோணத்திற்கு சென்றுள்ளது என்றார்கள். `நான் தஞ்சாவூர் முகவரி தானே கொடுத்துள்ளேன்' என்றதும், `நீ சென்னை தேர்வு மண்டல ஆணையத்தை தந்தி அல்லது போன் மூலம் தொடர்பு கொள்' என்று கூறினர். நானும் அவர்கள் சொன்னபடி தந்தி அனுப்பினேன்.

இரண்டு நாட்களாகியும் பதில் வராததால் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தேன். மீண்டும் தஞ்சாவூர் சி.ஓ. அலுவலகம் போனேன். அவர்கள் டி.ஓ. அலுவலகத்திற்கு அனுப்பி, பிறகு ஒரு குறிப்பிட்ட பள்ளிக்கு சென்று `ஹால் டிக்கெட்` வாங்கிக் கொள்ளச் சொன்னார்கள். ஆவலோடு போனேன். அங்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் பள்ளியிலும் ஹால் டிக்கெட் வரவில்லை என்று சொல்லி விட்டார்கள். பின்னர் மீண்டும் சுழற்சி முறையில் சி.ஓ. அலுவலகம் வந்தேன்.

அவர்கள் மீண்டும் என்னை சென்னை அலுவலகத்திற்கு போன் செய்யச் சொன்னார்கள். நான் சென்னை அலுவலகத்திற்கு காலை முதல் மாலை வரை தொடர்ந்து போனில் தொடர்பு கொண்டேன். அநேக முறை எனது அழைப்புகள் ஏற்கப்படவே இல்லை. இடையில் மூன்று முறை மட்டுமே அழைப்பு ஏற்கப்பட்டது. முதல்முறை பேசாமலே அழைப்பு துண்டிக்கப்பட்டது. `மறுமுறை கரண்ட் இல்லை அப்புறம் பேசுங்கள்' என்று வைத்து விட்டார்கள். மூன்றாம் முறை பேசியவர் எரிச்சலுடன் பேசினாலும் `ஹால் டிக்கெட்' நம்பரைக் கொடுத்து விட்டார்.

இதில் அதிர்ச்சி என்னவென்றால், ஹால் டிக்கெட்டுக்காக இப்படி ஊர்ஊராய் அலைந்ததில் தேர்வுக்கு நான் படித்ததெல்லாம் மறந்து போய் விட்டது தான்.

- வி.ராஜேஷ், சருக்கை.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 14, 2012 9:09 am


களவு போனது கேமரா... கலைந்தது கர்ப்பிணி கனவு!

எனது கணவரின் தங்கை வங்கித் தேர்வு எழுதுவதற்காக ஒரு கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு சென்றார். அவருக்கு தேர்வுக்கு முந்தைய நாள்தான் வளைகாப்பு நடந்திருந்தது. கணவருடன் தேர்வு மையத்துக்கு வந்தவர், தனது கைப்பையை தேர்வறைக்கு வெளியே மற்றவர்கள் பைகளை வைத்த இடத்தில் வைத்து விட்டுச் சென்றார்.

தேர்வு முடிந்து வந்து பார்த்தபோது அவரது கைப்பையைக் காணவில்லை. அதில் கேமரா, ஏ.டி.எம். கார்டு உள்பட சுமார் 30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் இருந்துள்ளன. இதனால் பதற்றமடைந்த அவள் கணவரிடம் விவரத்தைக் கூறிக் கொண்டிருந்தபோதே மயக்கமடைந்து விழுந்து விட்டாள்.

உடனே அவளை தூக்கிக் கொண்டு சென்று சிகிச்சை அளித்திருக்கிறார்கள். பிறகு போலீசில் புகார் செய்திருக்கிறார்கள். வளைகாப்புக்கு எடுத்த புகைப்படங்கள் அடங்கிய `சிப்`பும் கைப்பையில் இருந்துள்ளது. காணாமல் போன கேமராவை திரும்ப வாங்கிக் கொள்ளலாம், ஆனால் வாழ்வின் முக்கிய தருணத்தை நினைவுபடுத்தும் வளைகாப்பு படங்கள் திரும்ப கிடைக்குமா? என்ற வேதனை தான்அவரை ரொம்பவே பாதித்து விட்டது.

தேர்வெழுதும் மையத்திற்கு அவசியம் இல்லாமல் விலை உயர்ந்த பொருட்களை கொண்டு சென்று விட்டு யாரும் இதுபோல் அவதிப்படக் கூடாது! அடுத்தவர்கள் பொருளுக்கு ஆசைப்படுபவர்கள் இருக்கிறவரை இம்மாதிரியான சம்பவங்கள் நிகழவே செய்யும்.

மா.மேனகா, செங்கோட்டை.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 14, 2012 9:10 am


பசியை துரத்திய கருணை!

காலையில் ரோட்டு ஓரமாக சென்று கொண்டிருந்தேன். எனக்கு முன்பு ஒரு அம்மாவும் ஐந்தாறு வயது மதிக்கத்தக்க சிறுவனும் சென்று கொண்டிருந்தார்கள். அந்த அம்மா தன் மகனிடம், "மதியம் டிபன் பாக்சில் இருக்கும் டிபன் முழுவதையும் சாப்பிட்டுவிட வேண்டும். மீதம் வைக்கக்கூடாது'' என்று கூறிக் கொண்டே பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.

கொஞ்ச தூரம் சென்றதும், ரோட்டு ஓரத்தில் ஒரு தாய் இரண்டு வயது பெண் குழந்தையை வைத்துக்கொண்டு, `குழந்தை பசியால் அழுகிறாள், ஏதாவது தர்மம் பண்ணுங்கய்யா' என்று போவோர் வருவோரை கையெடுத்து கும்பிட்டு பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது அந்த சிறுவன், தன் சாப்பாட்டுக் கூடையில் இருந்த டிபன் பாக்சை எடுத்து அந்தப் பெண்ணிடம் நீட்டி `இதில் இட்லி இருக்கிறது. இதை பாப்பாவுக்கு ஊட்டி விடுங்கள்` என்றான். அந்தப் பெண் தயக்கத்துடன் நின்றாள். சிறுவனின் அம்மாவோ, "உனக்கு மதிய சாப்பாட்டுக்கு வைத்திருக்கிறேன்" என்று வாய் திறந்தார். "அதான் எனக்கு பிஸ்கட் இருக்குல்ல, அதை மதியம் சாப்பிடுறேன். இந்த இட்லியை பாப்பாக்கு கொடுத்து விடுவோம்" என்றான். பிறகு சிறுவனின் தாய் டிபன் பாக்சில் இருந்த இட்லியை அந்த சிறுமிக்கு கொடுத்தாள்.

அவர்கள் பின்னாலேயே வந்த எனக்கு நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது. சிறுவனுக்குத்தான் எவ்வளவு இரக்க குணம்! என்று வியந்தேன்.

ச.சோமசுந்தரி, கோவில்பட்டி.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 18 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 18 of 32 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 25 ... 32  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக