ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த நிஜங்கள்

+46
ஹாசிம்
றினா
ராஜா
அகல்
கரூர் கவியன்பன்
noorvkr
முஹைதீன்
சந்திரகி
ARR
dhilipdsp
sinthiyarasu
இரா.பகவதி
பது
யினியவன்
ரா.ரா3275
தம்பி வெங்கி
சார்லஸ் mc
பிரசன்னா
ரேவதி
ஹர்ஷித்
Bobshan returns
Dr.சுந்தரராஜ் தயாளன்
Thiraviamurugan
ரபீக்
positivekarthick
சுரேஷ்குமார்
krishnaamma
ஜாஹீதாபானு
kitcha
அருண்
கா.ந.கல்யாணசுந்தரம்
அப்துல்லாஹ்
ந.கார்த்தி
அசுரன்
Manik
மஞ்சுபாஷிணி
பிரகாசம்
கலைவேந்தன்
varsha
நியாஸ் அஷ்ரஃப்
இளமாறன்
ஸ்ரீஜா
SK
உதயசுதா
தமிழ்ப்ரியன் விஜி
சிவா
50 posters

Page 17 of 32 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 24 ... 32  Next

Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 17 Empty நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Tue Feb 08, 2011 10:02 am

First topic message reminder :

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 17 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Tue Feb 21, 2012 12:59 pm

கலகல திருமணம்... சலசலத்த மொய்ப்பணம்!

எனது நண்பரின் மகள், திருமண விழாவுக்கு போயிருந்தேன். தாலிகட்டியதும் சாப்பிட்டுவிட்டு மொய் எழுதப் போனேன். அங்கு மொய் எழுதும் இடத்தில் ஒரே சச்சரவாக இருந்தது.

என்னவென்று கேட்டபோது, நண்பரின் தூரத்து உறவினர் ஒருவர் பிரச்சினையை உண்டு பண்ணியிருக்கிறார் என்பது தெரிந்தது. அது என்னவென்றால், `அவரது மகனின் திருமணம் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கிறது. அங்கு தனது மனைவி, இரண்டு மகன்களுடன் சென்ற எனது நண்பர் மொய்ப்பணமாக ரூபாய் 21-ஐ கொடுத்து இருக்கிறார். (மொய் செய்தவர் வீட்டில் விசேஷம் நடக்கும்போது அதே தொகையை திருப்பி மொய் செய்வது எங்கள் பகுதியில் பலரது வழக்கம்.) அவரும் அதுபோலவே நண்பர் வீட்டு திருமணத்திற்கு 21 ரூபாயை கொண்டு வந்திருக்கிறார்.

மொய் பெற்றுக் கொள்ளும் இடத்தில் தன் பெயரை சொல்லி அவர் பணம் கொடுத்தபோது , "இத்தனை பேர் சாப்பிட்டுவிட்டு இவ்வளவு கம்மியா மொய் எழுதுகிறாயே'' என்று கேட்டிருக்கிறார்கள். "அவர் எனக்கு அவ்வளவு தான் செய்தார். நானும் அதே தொகையை செய்கிறேன்'' என்றிருக்கிறார் உறவினர். "ஏம்பா நக்கலா? அன்னிக்கு வெலவாசி என்ன...இன்னிக்கு வெலவாசி என்ன?'' என்று பேசியிருக்கிறார். உடனே இரு தரப்புக்கும் வாக்குவாதம் வர, பெரியவர்கள் கூடி சமரசம் செய்து வைத்தனர்.

மொய்ப்பணம் கொடுப்பது அவரவர் விருப்பம். இருந்தாலும், காலமறிந்து நடந்து கொள்ளாத உறவினரும், பொருளறிந்து பேசாத மொய் பெற்றவரும் கலகலப்பான திருமண வீட்டை சலசலப்பாக்கி விட்டனர்.

- வே.மாரியப்பன், முக்காணி.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 17 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Tue Feb 21, 2012 1:00 pm

வழியறியாத வழிகாட்டி... சுற்றியலைந்த பயணி!

நான் சமீபத்தில் ஹைதராபாத் சென்றிருந்தேன். முதல்முறையாக அங்கு சென்றிருந்ததால் எனக்கு நான் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியாக வழி தெரியவில்லை.

அங்கே சென்று இறங்கியதும் ஒவ்வொருவரிடமாக விசாரித்து விசாரித்து சென்று கொண்டிருந்தேன். கொஞ்சம் மொழிப்பிரச்சினையும் இருந்ததால் சிரமமாக உணர்ந்தேன். அந்த நேரத்தில் ஒரு தமிழரை சந்தித்தேன். அவரிடம் விசாரித்தால் எளிதாக புரியும்படி வழிகாட்டுவார் என்று எண்ணி அவரிடம் வழி கேட்டேன். அவரும் நான் கேட்ட விலாசம் தெரிந்தது போல் வழி சொன்னார். அவர் சொன்னபடி நான் சென்றேன். ஆனால் 2 மணி நேரத்திற்கு மேல் சுற்றியலைந்தும் நான் சேர வேண்டிய இடத்தை அடைய முடியவில்லை. ஒருவழியாக அலைந்து திரிந்து சேரவேண்டிய இடத்தைச் சேர்ந்தேன். சரியான நேரத்திற்கு போக முடியாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.

ஊர், பேர் தெரியாத இடத்தில் மொழியறிந்த ஒருவரை சந்தித்தபோது சொந்தத்தை சந்தித்ததுபோல சந்தோஷமாக இருந்தது. ஆனால் அவரே தவறான வழிகாட்டிவிட்டு சென்றபோது சொல்ல முடியாத அளவுக்கு எரிச்சலும் வந்து விட்டது.

வழி தெரியாவிட்டால் `தெரியாது' என்று சொல்லி விடுங்களேன்.

க.சுல்தான், காயல்பட்டினம்.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 17 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Tue Feb 21, 2012 1:00 pm

மாணவர்களே இப்படி செய்யலாமா?

நான் எங்கள் ஊரில் இருந்து புளியங்குடிக்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தேன். பஸ் சிந்தாமணி அருகே சென்று கொண்டிருந்தது. அந்த வழியில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு கல்லூரி உள்ளது. அது பிற்பகல் நேரம் என்பதால் கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரியை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தனர். கல்லூரி அருகே இரு வேகத் தடைகள் இருந்ததால் பஸ் மெதுவாக சென்றது. அதைப் பயன்படுத்தி இரண்டு மாணவர்கள் பஸ்ஸில் ஏறினார்கள். இன்னும் சிலரும் அதுபோல் ஏறுவதற்காக பஸ்ஸை துரத்தினர்.

உடனே கண்டக்டர், "இது எல்.எஸ்.எஸ். பஸ். இங்கே நிற்காது. கீழே இறங்குங்கள்'' என்று பஸ்சில் ஏறிய மாணவர்களை கண்டித்தார். ஆனால் அவர்கள் ஏதும் கூறாமல் பஸ் படிக்கட்டில் நின்றபடியே வந்தனர். பஸ் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றதும் டிரைவர் பஸ்ஸை நிறுத்திவிட்டு இறங்கினார்.

மாணவர்களை கீழே இறங்கச் சொன்னவர், "உங்க ரெண்டுபேருக்காகத்தான் பஸ்ஸை இங்கே நிறுத்தியிருக்கிறேன். இங்கே இறங்கி நடந்துபோங்க. அப்பதான் உங்களுக்கு புத்தி வரும்'' என்றார். ஒரு மாணவன் இறங்கினான், மற்றொருவன் முறைத்துப் பார்த்தான். "உனக்குத் தனியா சொல்லுவாங்களோ, இறங்கு கீழே'' என்று அதட்டும் தொனியில் பேசினார் டிரைவர். உடனே இரு மாணவர்களும் "எங்களை அடிச்சிருவியோ'' என்று எகிறினர். டிரைவரும் "மாணவர்கள் என்றால் சேட்டை செய்யலாமா? என்ன செய்வீங்கன்னு பாத்துருவோம்'' என்று கூறிவிட்டு பஸ்ஸை கிளப்பப் போனார்.

உடனே ஒரு மாணவன், பஸ் முன்பு ஓடி வந்து எகிறி குதித்தபடி கண்ணாடியை கையால் தட்டிக் கொண்டு "ஏய் பஸ்ஸை நிறுத்து'' என்று மறித்து ஆவேசப்பட்டான். அப்போது பஸ்ஸில் இருந்தவர்களோ, "ஐய்யய்யோ... காலேஜ் பசங்ககிட்டபோய் பிரச்சினை வச்சிக்கிட்டீங்களே! நாளைக்கு இந்த வழியாத்தானே திரும்ப போகணும், ஏதாவது செய்யப்போறாங்க'' என்றனர்.

உடனே கண்டக்டரும், டிரைவரும், "ஆமாய்யா இப்ப பேசுங்க. ஓடுற பஸ்ல ஏறக்கூடாது இறங்குன்னு கண்டக்டர் கத்தினார். அப்ப யாரும் சொல்லல. பஸ்ஸை நிறுத்தி நான் மரியாதையா சொல்லிப் பார்த்தேன், அப்பவும் அவங்க கேட்கல. நீங்களும் ஒண்ணும் சொல்லல. ஓடுற பஸ்ல ஏறுறப்ப தவறி கீழே விழுந்து கையை காலை உடைச்சிக்கிட்டாங்கன்னா அப்பவும் நாங்க தானே பதில் சொல்ல வேண்டியிருக்கும்....படிக்கிற பையங்களுக்கு ஒழுக்கம் வேண்டாமா? எனக்கும் காலேஜ் படிக்கிற பையன் இருக்கான்...'' என்று பொரிந்து கொண்டே வண்டியை கிளப்பினார்.

அப்போது தான் அந்த டிரைவரின் கோபம் ஒரு பொறுப்புள்ள தந்தையின் ஆதங்கமாக வெளிப்பட்டதை உணர்ந்து கொண்டோம். நாளைய தேசத்தை ஆளப்போகும் இளைஞர்களே இப்படி அத்துமீறி நடந்து கொண்டால் எப்படி?

மா.களஞ்சியம், அருணாசலபுரம்.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 17 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by இளமாறன் Tue Feb 21, 2012 1:04 pm

சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நெகிழ வைத்த நிஜங்கள் - Page 17 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 17 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by ஜாஹீதாபானு Tue Feb 21, 2012 5:51 pm

உடனே கண்டக்டரும், டிரைவரும், "ஆமாய்யா இப்ப பேசுங்க. ஓடுற பஸ்ல ஏறக்கூடாது இறங்குன்னு கண்டக்டர் கத்தினார். அப்ப யாரும் சொல்லல. பஸ்ஸை நிறுத்தி நான் மரியாதையா சொல்லிப் பார்த்தேன், அப்பவும் அவங்க கேட்கல. நீங்களும் ஒண்ணும் சொல்லல. ஓடுற பஸ்ல ஏறுறப்ப தவறி கீழே விழுந்து கையை காலை உடைச்சிக்கிட்டாங்கன்னா அப்பவும் நாங்க தானே பதில் சொல்ல வேண்டியிருக்கும்....படிக்கிற பையங்களுக்கு ஒழுக்கம் வேண்டாமா? எனக்கும் காலேஜ் படிக்கிற பையன் இருக்கான்...'' என்று பொரிந்து கொண்டே வண்டியை கிளப்பினார்.

அப்போது தான் அந்த டிரைவரின் கோபம் ஒரு பொறுப்புள்ள தந்தையின் ஆதங்கமாக வெளிப்பட்டதை உணர்ந்து கொண்டோம். நாளைய தேசத்தை ஆளப்போகும் இளைஞர்களே இப்படி அத்துமீறி நடந்து கொண்டால் எப்படி?

இப்படி நடந்தால் தான் ஓரளவுக்காவது திருந்துங்க என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 17 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by அருண் Tue Feb 21, 2012 5:57 pm

இப்ப இருக்க பசங்க ஒழுக்கத்த எங்க கத்துகிறங்க குடிக்க மட்டும் கத்து வச்சிருக்காங்க( எல்லாரையும் குறிப்பிட வில்லை )
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 17 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Tue Feb 21, 2012 6:50 pm

அருண் wrote:இப்ப இருக்க பசங்க ஒழுக்கத்த எங்க கத்துகிறங்க குடிக்க மட்டும் கத்து வச்சிருக்காங்க( எல்லாரையும் குறிப்பிட வில்லை )

ஆமா, அவரு அவரையே சொல்லிக்கிட்டாரு!


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 17 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by அருண் Tue Feb 21, 2012 6:58 pm

ஆமா, அவரு அவரையே சொல்லிக்கிட்டாரு!

கோர்த்து விடாதீங்க பாஸ்..! அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 17 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by யினியவன் Sat Feb 25, 2012 11:25 pm

அருண் wrote:
ஆமா, அவரு அவரையே சொல்லிக்கிட்டாரு!

கோர்த்து விடாதீங்க பாஸ்..! அதிர்ச்சி

சிவா பாருங்களேன் இந்தப் புள்ளைய
கோர்த்து விட வேண்டாமாம் - ஊத்திக் குடுப்பீங்களாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 17 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by ரா.ரா3275 Sat Feb 25, 2012 11:33 pm

நல்ல முதலாளி...நல்ல ஊழியர்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பகிர்ந்த சிவாவிற்கு நன்றி


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 17 224747944

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 17 Rநெகிழ வைத்த நிஜங்கள் - Page 17 Aநெகிழ வைத்த நிஜங்கள் - Page 17 Emptyநெகிழ வைத்த நிஜங்கள் - Page 17 Rநெகிழ வைத்த நிஜங்கள் - Page 17 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 17 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 17 of 32 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 24 ... 32  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum