ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த நிஜங்கள்

+46
ஹாசிம்
றினா
ராஜா
அகல்
கரூர் கவியன்பன்
noorvkr
முஹைதீன்
சந்திரகி
ARR
dhilipdsp
sinthiyarasu
இரா.பகவதி
பது
யினியவன்
ரா.ரா3275
தம்பி வெங்கி
சார்லஸ் mc
பிரசன்னா
ரேவதி
ஹர்ஷித்
Bobshan returns
Dr.சுந்தரராஜ் தயாளன்
Thiraviamurugan
ரபீக்
positivekarthick
சுரேஷ்குமார்
krishnaamma
ஜாஹீதாபானு
kitcha
அருண்
கா.ந.கல்யாணசுந்தரம்
அப்துல்லாஹ்
ந.கார்த்தி
அசுரன்
Manik
மஞ்சுபாஷிணி
பிரகாசம்
கலைவேந்தன்
varsha
நியாஸ் அஷ்ரஃப்
இளமாறன்
ஸ்ரீஜா
SK
உதயசுதா
தமிழ்ப்ரியன் விஜி
சிவா
50 posters

Page 1 of 32 1, 2, 3 ... 16 ... 32  Next

Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Tue Feb 08, 2011 10:02 am

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.


நெகிழ வைத்த நிஜங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Tue Feb 08, 2011 10:03 am

பஸ்சில் தவறிய பட்டுப் புடவை

என் பெற்றோர் கடலூரில் புது வீடு கட்டியிருந்தார்கள். கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்காக வரும் சொந்த பந்தங்களுக்கு புதுத் துணிகள் கொடுத்து மரியாதை செய்ய விரும்பினார்கள். அதற்காக சென்னையில் உள்ள பிரபலமான ஜவுளிக்கடையில் விலை உயர்ந்த பட்டுப்புடவைகளை வாங்கினார்கள். அவைகளை எடுத்துக்கொண்டு கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் ஊருக்கு செல்வதற்காக காத்திருந்தனர்.

இவர்களுக்கு அருகிலேயே பட்டுக்கோட்டைக்கு செல்வதற்காக வயதான ஒரு தம்பதியினரும் காத்திருந்திருந்திருக்கிறார்கள். எனது பெற்றோர் வைத்திருந்த பையும் அந்த தம்பதியினர் வைத்திருந்த பையும் ஒரே மாதிரியாக இருந்திருக்கிறது. அந்த தம்பதியினர் பேருந்தில் ஏறும் அவசரத்தில் எனது பெற்றோர் வைத்திருந்த பையை தவறுதலாக எடுத்துச் சென்று விட்டனர்.

அந்த பையில் பட்டுப்புடவைகளைத் தவிர எனது அப்பாவின் வங்கி பாஸ்புக் உட்பட சில முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளது. வீட்டுக்கு வந்ததும் பை மாறியதைக் கண்டு திடுக்கிட்ட எனது பெற்றோர் செய்வதறியாது திகைத்துள்ளனர். இது பற்றி யாரிடமும் சொல்லவில்லை. சொன்னால் அபசகுனம் என்று கூறிவிடுவர் என அஞ்சியிருக்கிறார்கள்.

அந்த சுபநிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு எனது அப்பாவின் செல்போனில் தொடர்பு கொண்ட அந்த தம்பதியினர் ``பையை தவறுதலாக மாற்றி எடுத்து வந்துவிட்டோம் மன்னித்து விடுங்கள் `கூரியரில்' பையை உங்கள் முகவரிக்கு அனுப்பி விட்டோம். பெற்றுக் கொள்ளுங்கள். எங்கள் பையையும் அனுப்பிவைத்துவிடுங்கள்'' என்று கூறியிருக்கிறார்கள்.

`பையை' பெற்றுக்கொண்ட பிறகுதான் அப்பா எங்களிடம் இதைக் கூறினார். அந்த பட்டுப்புடவைகள் விலைமதிப்புள்ளவை என்றாலும் அதை அனுப்பிவைத்த அந்த முதிய தம்பதியினரை நாங்கள் பாராட்டினோம்.

சோ.மீரா, சென்னை-37.


நெகிழ வைத்த நிஜங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by தமிழ்ப்ரியன் விஜி Tue Feb 08, 2011 10:21 am

நெகிழ வைத்த நிஜங்கள் 678642


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Tue Feb 08, 2011 10:30 am

பாட்டு கேட்டது! பண்பு பறந்தது!

எனது நண்பர் தனியார் நிறுவனம் ஒன்றில் நிர்வாக இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கண்ணியமானவர். ஒவ்வொரு சொல்லிலும், செயலிலும் அவர் நேர்மை தெரியும்.

சமீபத்தில் ஒருநாள் அவரிடம் பேச செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது மறுமுனையில் அழைப்புமணிக்கு பதிலாக `தோழியா என் காதலியா யாரடி நீ...' என்ற பாடல் ரிங்டோனாக ஒலித்தது. இதைக்கேட்டதும் எனக்கு அதிர்ச்சியும் கூடவே ஆச்சரியமும் ஏற்பட்டது. அன்று அவர் போனை எடுத்து பேசவில்லை. நானும் அதோடு விட்டுவிட்டேன்.

அடுத்த சில நாட்களில் சிற்றுண்டி விடுதி ஒன்றில் நான் உணவருந்திக் கொண்டிருந்தேன். என் அருகில் இருந்து இருவர் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அவர்கள் பேச்சைக் கவனித்தபோது அவர்கள் இருவரும் நான் மேலே குறிப்பிடும் அந்த நண்பரின் நிறுவனத்தில் முன்பு வேலை பார்த்தவர்கள் என்பது தெரிந்தது. அவர்கள் இருவரும் `நமது பழைய எம்.டி. செல்போனில் எப்படிப்பட்ட பாட்டு வைத்திருக்கிறார் தெரியுமா? இந்த வயசுலே இப்படிப்பட்ட பாட்டு தேவையா?' என்று கிண்டலடித்து அந்த நண்பரின் பெயரையும் குறிப்பிட்டு பேசிக் கொண்டிருந்தனர்.

மேலும் பொறுமைகாக்க முடியாமல் அந்த ரிங்டோன் விஷயத்தைக்கூற அந்த நண்பரின் வீட்டிற்கு சென்றேன். அந்த செய்தியை அவரிடம் கூற, அதிர்ந்து போனார். தனக்கே தெரியாமல் இது எப்படி நடந்தது? என்று குழம்பியவர், சட்டென நினைவுக்கு வந்தவராய் `சென்ற மாதம் எனது மகள் தனது மகனை அழைத்துக் கொண்டு வந்து இரண்டு நாட்கள் என்வீட்டில் தங்கியிருந்தாள். எனது பேரன் செல்போனை எடுத்து கேம் விளையாடிக் கொண்டிருந்தான். அவன் விளையாட்டாக ஸ்டார் பட்டனை அழுத்தி இருக்கலாம்' என்றவர், அவமானத்தால் கூனிக் குறுகி போனார்.

நான் அவரிடம் "உடனே கஸ்டமர் பிரிவுக்கு போன் செய்து சொல்லுங்கள். தானாகவே பாட்டு கேன்சல் ஆகிவிடும்'' என்று சொல்லி விட்டு திரும்பினேன்.

செல்போனை ஒவ்வொருவரும் தங்கள் பாதுகாப்பிலே வைத்துக் கொள்வது நல்லது. இல்லையென்றால் இதுபோன்ற கேலி, கிண்டல் நிறைந்த அனுபவங்களை சந்திக்க வேண்டி வரும்!

ஆர். ரவீந்திரன், காப்பரத்தான்பட்டி.


நெகிழ வைத்த நிஜங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Tue Feb 08, 2011 10:32 am

வழங்கலாமே, `வங்கி அன்பளிப்பு காசோலை'!

என் உறவினர் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொண்டேன். வந்திருந்த அன்பளிப்புகள் ஏராளம். அதைக்கண்டு மகிழ்ந்த மணப்பெண் அவற்றை பிரித்ததும் மனம் வருந்தினாள். காரணம் வந்ததில் பாதிக்கும் மேல் கடிகாரம்... பிளாஸ்டிக் டின்னர் செட்... பிளாஸ்டிக் சாமான்கள் தான். இரண்டு பேர் அடங்கிய ஒரு குடும்பத்தினர் ஒரே பொருளில் பத்து செட்டுகளை வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள்?

ஒரே பொருளை பலரும் வாங்கிக் கொடுப்பதற்கு பதிலாய் பணமாய் கொடுத்திருந்தாலாவது நன்றாக இருந்திருக்குமே, அதை வைத்து தேவைப்படும் பொருளை வாங்கியிருக்கலாமே என்று பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த அன்பளிப்பு பொருட்களை எல்லாம் பார்த்த நெருங்கிய உறவினர்கள் சிலர், `இத்தனையையும் வைத்து நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?' என்று கேட்டு, பணம் கொடுக்காமலே பாதிப் பொருட்களை தங்களுக்காக எடுத்துக்கொண்டார்கள்.

இதனை பார்த்த எனக்கு வருத்தமாய் இருந்தது. 250 ரூபாய்க்கு மேல் அன்பளிப்பு வழங்க நினைப்பவர்கள் அதனை வங்கி அன்பளிப்பு காசோலையாக வழங்கினால், புதுமண தம்பதியினர், தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கிக்கொள்வார்களே! பல அரசு, தனியார் வங்கிகள் வழங்கும் இந்த அன்பளிப்பு காசோலைகளை பயன்படுத்திக் கொள்ள அனைவரும் முன்வர வேண்டும். அதுவே புதுமண தம்பதியினருக்கு சிறந்த, பயனுள்ள அன்பளிப்பாகவும் அமையும்.

ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூர்-34.


நெகிழ வைத்த நிஜங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by உதயசுதா Tue Feb 08, 2011 12:28 pm

எல்லாமே நெகிழ வைக்கும் நிஜங்கள்தான் சிவா.
பகிர்ந்தமைக்கு நன்றி


நெகிழ வைத்த நிஜங்கள் Uநெகிழ வைத்த நிஜங்கள் Dநெகிழ வைத்த நிஜங்கள் Aநெகிழ வைத்த நிஜங்கள் Yநெகிழ வைத்த நிஜங்கள் Aநெகிழ வைத்த நிஜங்கள் Sநெகிழ வைத்த நிஜங்கள் Uநெகிழ வைத்த நிஜங்கள் Dநெகிழ வைத்த நிஜங்கள் Hநெகிழ வைத்த நிஜங்கள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by SK Tue Feb 08, 2011 3:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Thu Feb 24, 2011 9:54 am

சைக்கிளை சாய்த்தது, தாவணி

நாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியின் மாணவிகளுக்கு பாவாடை, தாவணி தான் சீருடை. பள்ளி சற்று தூரம் என்பதால் மாணவிகள் பெரும்பாலும் சைக்கிளில் தான் செல்வார்கள்.

அன்று ஒரு மாணவி பள்ளிக்கு சைக்கிளில் போய்க்கொண்டிருந்தார். பள்ளிக்கு நேரமாகி விட்ட அவசரத்தில் தாவணியின் முந்தானையை எடுத்து செருகாமல் சைக்கிளை வேகமாக ஓட்டி வந்தார். அப்போது தாவணி சைக்கிள் சக்கரத்தில் சிக்கி, நிலைகுலைய வைத்து மாணவியை நடுரோட்டில் சாய்த்துவிட்டது.

மாணவியின் வலது கையில் முறிவு ஏற்பட்டது. நல்லவேளையாக அப்பகுதியில் வாகனங்களின் வருகை குறைவு என்பதால், மாணவியின் உயிருக்கு ஆபத்தில்லை. பாவாடை, தாவணி அணிந்து கொண்டு சைக்கிளில் செல்லும் மாணவிகள் கவனமாக செல்ல வேண்டும். பெற்றோரும் அவசரகதியில் மாணவிகள் பள்ளிக்கு செல்லாத அளவிற்கு பார்த்துக்கொள்ளவேண்டும்.

-ம. தமயந்தி, கீழக்குமரேசபுரம்.


நெகிழ வைத்த நிஜங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by ஸ்ரீஜா Thu Feb 24, 2011 11:47 am

இவை அனைத்தையும் நான் ஏற்கனவே படித்தது என்றாலும் மீண்டும் ஒரு முறை படிக்க வைத்த சிவா அண்ணாவுக்கு நன்றிகள் பல............... நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by இளமாறன் Thu Feb 24, 2011 4:36 pm

சிவா wrote:வழங்கலாமே, `வங்கி அன்பளிப்பு காசோலை'!

என் உறவினர் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொண்டேன். வந்திருந்த அன்பளிப்புகள் ஏராளம். அதைக்கண்டு மகிழ்ந்த மணப்பெண் அவற்றை பிரித்ததும் மனம் வருந்தினாள். காரணம் வந்ததில் பாதிக்கும் மேல் கடிகாரம்... பிளாஸ்டிக் டின்னர் செட்... பிளாஸ்டிக் சாமான்கள் தான். இரண்டு பேர் அடங்கிய ஒரு குடும்பத்தினர் ஒரே பொருளில் பத்து செட்டுகளை வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள்?

ஒரே பொருளை பலரும் வாங்கிக் கொடுப்பதற்கு பதிலாய் பணமாய் கொடுத்திருந்தாலாவது நன்றாக இருந்திருக்குமே, அதை வைத்து தேவைப்படும் பொருளை வாங்கியிருக்கலாமே என்று பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த அன்பளிப்பு பொருட்களை எல்லாம் பார்த்த நெருங்கிய உறவினர்கள் சிலர், `இத்தனையையும் வைத்து நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?' என்று கேட்டு, பணம் கொடுக்காமலே பாதிப் பொருட்களை தங்களுக்காக எடுத்துக்கொண்டார்கள்.

இதனை பார்த்த எனக்கு வருத்தமாய் இருந்தது. 250 ரூபாய்க்கு மேல் அன்பளிப்பு வழங்க நினைப்பவர்கள் அதனை வங்கி அன்பளிப்பு காசோலையாக வழங்கினால், புதுமண தம்பதியினர், தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கிக்கொள்வார்களே! பல அரசு, தனியார் வங்கிகள் வழங்கும் இந்த அன்பளிப்பு காசோலைகளை பயன்படுத்திக் கொள்ள அனைவரும் முன்வர வேண்டும். அதுவே புதுமண தம்பதியினருக்கு சிறந்த, பயனுள்ள அன்பளிப்பாகவும் அமையும்.

ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூர்-34.

நான் வசிக்கும் நாட்டில் உள்ள முறையை சொல்லட்டுமா..

பெண்ணும் மாப்பிள்ளையும் சேர்ந்த்து ஒரு லிஸ்ட் எடுத்து கொடுத்து விடுவார்கள். கடையிலும் ஒரு காப்பி இருக்கும் . பர்சு வாங்க போகிறவர்கள் அந்த கடைக்குள் போனதும் யாரும் செலெக்ட் பண்ணாத பொருளை வாங்கி கொடுப்பார்கள். கடை நிறுவனர் உதவியுடன் அவர்கள் திருமணம் அன்று அவர்கள் விரும்பிய பொருள்கள் கிடைக்கும்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நெகிழ வைத்த நிஜங்கள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 32 1, 2, 3 ... 16 ... 32  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum