புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று காங்கிரஸ் ! குமுதம் சர்வே! Poll_c10இன்று காங்கிரஸ் ! குமுதம் சர்வே! Poll_m10இன்று காங்கிரஸ் ! குமுதம் சர்வே! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
இன்று காங்கிரஸ் ! குமுதம் சர்வே! Poll_c10இன்று காங்கிரஸ் ! குமுதம் சர்வே! Poll_m10இன்று காங்கிரஸ் ! குமுதம் சர்வே! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
இன்று காங்கிரஸ் ! குமுதம் சர்வே! Poll_c10இன்று காங்கிரஸ் ! குமுதம் சர்வே! Poll_m10இன்று காங்கிரஸ் ! குமுதம் சர்வே! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்று காங்கிரஸ் ! குமுதம் சர்வே! Poll_c10இன்று காங்கிரஸ் ! குமுதம் சர்வே! Poll_m10இன்று காங்கிரஸ் ! குமுதம் சர்வே! Poll_c10 
21 Posts - 4%
prajai
இன்று காங்கிரஸ் ! குமுதம் சர்வே! Poll_c10இன்று காங்கிரஸ் ! குமுதம் சர்வே! Poll_m10இன்று காங்கிரஸ் ! குமுதம் சர்வே! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இன்று காங்கிரஸ் ! குமுதம் சர்வே! Poll_c10இன்று காங்கிரஸ் ! குமுதம் சர்வே! Poll_m10இன்று காங்கிரஸ் ! குமுதம் சர்வே! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இன்று காங்கிரஸ் ! குமுதம் சர்வே! Poll_c10இன்று காங்கிரஸ் ! குமுதம் சர்வே! Poll_m10இன்று காங்கிரஸ் ! குமுதம் சர்வே! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
இன்று காங்கிரஸ் ! குமுதம் சர்வே! Poll_c10இன்று காங்கிரஸ் ! குமுதம் சர்வே! Poll_m10இன்று காங்கிரஸ் ! குமுதம் சர்வே! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இன்று காங்கிரஸ் ! குமுதம் சர்வே! Poll_c10இன்று காங்கிரஸ் ! குமுதம் சர்வே! Poll_m10இன்று காங்கிரஸ் ! குமுதம் சர்வே! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்று காங்கிரஸ் ! குமுதம் சர்வே! Poll_c10இன்று காங்கிரஸ் ! குமுதம் சர்வே! Poll_m10இன்று காங்கிரஸ் ! குமுதம் சர்வே! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று காங்கிரஸ் ! குமுதம் சர்வே!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 06, 2011 6:52 pm

""தமிழக காங்கிரஸ் தேர்தலில் தனியாக நின்று இரண்டு மகாமகம் ஆகிவிட்டது. கடைசியாக 1989-ம் வருடம் சட்டமன்றத் தேர்தலில்,"மூப்பனார் முதல்வர் வேட்பாளர்' என்ற கோஷத்துடன் கூட்டணியின்றி தனியாக நின்றது. சொல்லப்போனால் எல்லா பிரதான கட்சிகளுமே அப்போது தனியே போட்டியிட்டன. அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி பதிமூன்று முறை தமிழகத்திற்கு வந்து பிரசாரம் செய்தார்.

அந்தத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 16.6 சதவிகிதம் தான். இருபத்தாறு சீட்களை மட்டுமே காங்கிரஸ் வென்றது. கடந்த இருபது வருடங்களாக தொடர்ந்து கழகங்கள் முதுகில் ஏறி சவாரி செய்வதில் தன் தனித்தன்மையை இழந்ததோடு, அந்த வாக்குவங்கியில் கணிசமான சதவிகிதத்தையும் பறி கொடுத்துவிட்டது'' என்றார் காங்கிரஸிலிருந்து விலகி தற்போது "காந்திய மக்கள் இயக்க'த்தை நடத்தி வரும் தமிழருவி மணியன்.

பழைய கதையை சற்று மறந்துவிட்டு இன்றைய நிஜத்திற்கு வந்தால் தமிழக காங்கிரஸ் கட்சியின் இன்றைய ஓட்டு வங்கி ஏறத்தாழ எட்டு சதவிகிதத்திலிருந்து பத்து சதவிகிதத்திற்குள் என்கிறது ஒரு புள்ளிவிபரம். இன்றும் "நாங்கள் காலம் காலமாக காங்கிரஸ் கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுகிறோம்' என்று உறுதியாகச் சொல்லும் பாரம்பரிய குடும்பங்கள் கிராமங்களிலும், சிறிய டவுன்களிலும் நிறையவே உண்டு. அது அந்தக் கட்சியின் பெரிய உரம் என்பதில் சந்தேகமில்லை. அடுத்தது, அண்மைக்காலமாக ராகுல் காந்தியின் தமிழக சுற்றுப்பயணங்கள் இளைஞர் காங்கிரஸ் மத்தியில் சற்று வேகத்தை கிளப்பி விட்டிருக்கிறது. என்றாலும், இங்குள்ள கட்சியின் அடிப்படை கட்டமைப்பை மாற்றியமைக்கும் போதுதான் பொதுமக்களிடம் அதுபெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

கட்சி ரீதியாக தமிழக காங்கிரஸ் சந்திக்கும் பெரிய பிரச்னை, "கோஷ்டிகள்.' வாசன், சிதம்பரம், ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன், தங்கபாலு என்று அங்கே பெரிய கோஷ்டிகளே அரை டஜன் உள்ளன.

""நேற்று வந்த தே.மு.தி.க.வினர் கூட தங்கள் தலைவர் விஜயகாந்தின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வாக்களிப்பார்கள். அங்கே வாக்குகள் சிதற வாய்ப்பில்லை. ஆனால், பாரம்பரிய கட்சி என்று சொல்லிக்கொள்ளும் காங்கிரஸூக்குத் அந்த கட்டுக்கோப்பு கிடையாது. மாவட்டந்தோறும் உள்ளடி வேலைகள் ஜரூராக நடக்கும். அவர்கள் தலைவலியே அதுதான்'' என்று கூறுகிறார் ஓர் மூத்த பத்திரிகையாளர்.

ஏற்கெனவே தி.மு.க.வுடன் கூட்டணி என்பது உறுதியாகிவிட்ட நிலையில், காங்கிரஸின் இப்போதைய பிரச்னை கணிசமான சீட்டுகள். ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதையும் இம்முறை இன்னும் சற்று அழுத்தமாகவே ஒலிக்க எல்லோருமே தயாராகிவிட்டதாக செய்திகள். நாளொரு மேனியும் எகிறிக்கொண்டிருக்கும் விலைவாசியும், அலைவரிசை விவகாரத்திற்கு உடந்தை என்ற குற்றச்சாட்டும் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சந்திக்க இருக்கும் முக்கியமான சவால்கள். இலங்கைப் பிரச்னையில் முழு அக்கறை காட்டாமல் காங்கிரஸ் கை விட்டு விட்டதாக எழுந்துள்ள அதிருப்தியும் காங்கிரஸ் வாக்கு வங்கியை பலவீனப்படுத்தும்! அதே போல் நமது மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதும், அந்த சமுதாயத்தினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

""காங்கிரஸ், தி.மு.க., பா.ம.க., விடுதலைச்சிறுத்தைகள் பலமான கூட்டணியாக அமையும். இதற்கு எதிராக விஜயகாந்த் ஜெயலலிதாவுடன் கூட்டணியமைத்தால் கூட வெல்ல முடியாது. இவர்கள் பேசும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை தவிடு பொடியாக்க எங்களிடம் நியாயமான வாதங்கள் நிறைய இருக்கின்றன'' என்கிறார் ஜி.கே.வாசனின் வலதுகரமாக கருதப்படும் காங்கிரஸ் பிரமுகர் கோபண்ணா. கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.விடம் 48 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் இம்முறை 70 சீட்களுக்கு குறையாமல் கேட்குமாம்! 1980-ம் வருட பொதுத் தேர்தலில் தி.மு.க.வும், காங்கிரஸூம் தலா 110 தொகுதிகளில் போட்டியிட்டதையும் நம்மிடம் பேசிய சில காங்கிரஸ் தலைவர்கள் நினைவுபடுத்தினார்கள்.

சமீப காலம்வரை தி.மு.க.வின் செயல்பாடுகளை விமரிசித்துக் கொண்டிருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை மத்திய அமைச்சர் குலாம் நபி ஆஸாத் மூலம் சோனியா காந்தி, "இன்னும் மூன்ரை ஆண்டுகள் மத்திய அரசு நடக்க வேண்டும். பொறுமை காக்க வேண்டும்' என்று அறிவுறுத்தியதாக ஓர் தகவல்! எதிர்ப்புப் பேச்சுகளை நிறுத்திக்கொண்டுள்ள இளங்கோவனை தொடர்பு கொண்டபோது ஜாக்கிரதையாகப் பேசினார்!

""காங்கிரஸ் கட்சியின் மேம்பாட்டுக்காக சில கருத்துக்களை பேசி வந்தேன். பல்வேறு காரணங்களுக்காகவும், அகில இந்திய அளவில் காங்கிரஸ் நன்மைக்காவும் மேலிடம் ஒரு முடிவு. எடுக்கும்போது, அதற்க ஒரு ராணுவ வீரனைப் போல் கட்டுப்படுவேன். அதே சமயம் ஆட்சியில் பங்கு என்பது எங்கள் உரிமை. அதைக் கேட்போம்'' என்றார் !

""ராகுல் காந்தியின் சுற்றுப்பயணங்கள் தமிழக காங்கிரஸில் புத்துயிரைத் தந்துள்ளது. குறிப்பாக இளைஞர் காங்கிரஸ் சுறுசுறுப்பாகியுள்ளதை கண் கூடாகப் பார்க்க முடிகிறது. இன்று பதினான்கு லட்சம் பேர் இளைஞர் காங்கிரஸில் புதியதாக சேர்ந்துள்ளார்கள். மேலும், இரண்டு லட்சம் பேர் சேர விண்ணப்பம் தந்துள்ளனர். இலங்கைப் பிரச்னையில் எங்களைக் குறை கூறி தேவையற்ற பிரசாரம் செய்கிறார்கள். அதற்கு தகுந்த பதிலடியை தருவோம்'' என்று கூறும் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ், கழகங்கள் ஸ்டைலில் கட்சிப் பணியில் வேகம் காட்டுகிறார். ராகுலிடம் நேரடித் தொடர்பு கொண்டு, ஆலோசனைகளைக் கேட்டு வருகிறார்.

காங்கிரஸ் பற்றிய அலசல் ஒரு புறமிருக்க, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வது சரியா, காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி அமைத்தால் வெற்றி வாய்புள்ளதா, உட்கட்சிப் பூசலால் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுமா, ராகுலின் சமீபத்திய சுற்றுப்பயணங்கள் தமிழக இளைஞர்களிடம் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா, இலங்கைத் தமிழர் பிரச்னையை கையாண்ட விதம் பாதிப்பை ஏற்படுத்துமா? ஊழல் விவகாரங்களை மக்கள் கவனிக்கிறார்களா - ஆகிய கேள்விகளுடன் ஏறத்தாழ ஆயிரம் பேர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தினோம். அரக்கோணம் முதல் ஆண்டிப்பட்டி வரை ஆர்வத்துடன் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களும் மனந்திறந்து பேசினார்கள். அவற்றில் நச்சென்று சில் விஷயங்கள்.

* 75 சதவிகிதத்தினர் தி.மு.க. கூட்டணியை விரும்புகின்றனர். இதில் நகர்ப்புறத்தினரைவிட கிராமப்புற மக்கள் அதிகம். காரணம் தி.மு.க.கூட்டணியில் உள்ளதால் இலவச திட்டங்கள் மக்களைச் சென்றடைந்துள்ளது. அதனால் இந்தக் கூட்டணி தொடர்ந்ததால் மீண்டும் இலவசங்கள் தொடரும் என்றார்கள்.

*ராகுலின் சுற்றுப் பயணங்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று எழுபது சதவிகிதத்தினர் கருத்து தெரிவித்தனர். அதே சமயம் கொங்கு மண்டலத்தில் கோவை, பொள்ளாச்சி, ஊட்டி பகுதிகளில் ராகுல் காந்தியால் காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக இளைஞர்கள், கல்லூரி மாணவிகள் கிடைத்துள்ளது கட்சிக்கு பலம் என்று 60 சதவிகிதத்தினர் தெரிவித்தனர். அதே போல் மதுரை மற்றும் சுற்று வட்டாரங்களில் "தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ராகுலின் தனி கவனம் கட்சி வளர்ச்சிக்கு பெரும் பலம்' என்றார்கள்.

*"அலைவரிசை பிரச்னையை தேர்தல் சமயத்தில் மக்கள் மறந்து விடுவார்கள். அது கிராம மக்களுக்கு என்னவென்றே தெரியவில்லை' என்று பாதிபேரும், மீதி பாதி பேர் இதை மறுத்தும் சொன்னார்கள்.

* இலங்கைத் தமிழர் பிரச்னை மற்றும் நமது மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குவது தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிசமான பேர் தெரிவித்தார்கள்.

* கலைஞர் காப்பீட்டுத் திட்டம், 108 அவசர சிகிச்சை, இலவச டி.வி. உள்பட தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் காங்கிரஸூக்கும் வாக்குகளை அள்ளித் தரும் என்றார்கள் நகரங்களில்!

* காமன்வெல்த், அலைவரிசை, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவை கூட்டணியை பாதிக்கும் என்று 48 சதவிகித மதுரை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.

-வி.சந்திரசேகரன்



இன்று காங்கிரஸ் ! குமுதம் சர்வே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 06, 2011 7:26 pm

வருகின்ற சட்டமன்ற தேர்தல் சுவாரஸ்யமாக இருக்கும்..மக்கள் தான் பார்த்து ஒரு நல்ல தலைவரை தேர்தேடுக்க வேண்டும்...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக