Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:36 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
+6
M.Saranya
தாமு
ramesh.vait
ராஜா
Admin
சிவா
10 posters
Page 4 of 8
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
First topic message reminder :
#நேதாஜி #சுபாஸ் #சந்திரபோஸ் #சுதந்திரம் #இந்திய_சுதந்திர_போராட்டம் #நேதாஜி_சுபாஸ்_சந்திரபோஸ் #சுபாஷ்_சந்திர_போஸ் #Subhash_Chandra_bose #Netaji
பிறப்பு: ஜனவரி 23, 1897
மறைவு: ஆகஸ்ட் 18 1945
மறைவு: ஆகஸ்ட் 18 1945
#நேதாஜி #சுபாஸ் #சந்திரபோஸ் #சுதந்திரம் #இந்திய_சுதந்திர_போராட்டம் #நேதாஜி_சுபாஸ்_சந்திரபோஸ் #சுபாஷ்_சந்திர_போஸ் #Subhash_Chandra_bose #Netaji
Last edited by சிவா on Fri Jan 27, 2023 6:02 pm; edited 2 times in total
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
Appreciated Really Good Posting
ramesh.vait- தளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
Re: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
சி.ஆர்.தாஸுக்கு ஒரு கடிதம்
1921ம் ஆண்டு ஜுலை மாதம் 16ம் தேதி பம்பாய் துறைமுகத்தில் வந்து இறங்கினார் சுபாஷ்.
அதற்கு முன்னரே தமது செயல்பாடுகள் குறித்து ஒரு தெளிவான முடிவுக்கு வந்திருந்தார்.
முன்கூட்டியே அவர் சித்தரஞ்சன் தாஸுக்கு எழுதியிருந்த கடிதம் இதை வெளிப்படுத்துகிறது.
16.2.1921 அன்றே எழுதிய அந்தக் கடிதத்தில் தம்மை சுருக்கமாக அறிமுகப்படுத்திக் கொண்டார். ஐ.ஏ.எஸ். பதவியை விட்டுவிடத் தாம் உத்தேசித்திருப்பதையும் குறிப்பிட்டார். மேலும் அவர் எழுதியது.
"கல்கத்தாவிலும், டாக்காவிலும் தாங்கள் இரண்டு தேசியக் கல்லூரிகளைத் தொடங்கியிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரிய வந்துள்ளது. ஆங்கிலத்திலும் வங்காளியிலும், "சுயராஜ்யா" என்ற பத்திரிகையைத் தாங்கள் தொடங்கி நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் அறிகிறேன். வங்காளத்தின் கிராமங்களில் கிராமிய சமுதாயப் பணிகளையும் பல இடங்களில் தாங்கள் தொடங்கி நடத்துவதாகவும் கேள்விப்படுகிறேன்..
"நம்முடைய தாய்நாட்டுச் சேவையில் எனக்கு நீங்கள் என்ன வேலை கொடுக்க முடியும் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு நிறைந்த கல்வியும் மிகுந்த அனுபவமும் இல்லாதிருக்கலாம். ஆனால் ஓர் இளைஞனுக்கே உரிய சக்தியும் வேகமும் எனக்கு உண்டு. நான் திருமணமாகாதவன். கல்லூரியில் தத்துவ சாஸ்திரம் பயின்றிருக்கிறேன்.. பி.ஏ.ஆனர்ஸ் பட்டம் பெற்றுள்ளேன். ஐ.சி.எஸ்.படிப்பில் பொருளாதாரம், அரசியல் விஞ்ஞானம், ஐரோப்பிய வரலாறு, ஆங்கிலச் சட்டம், பூகோளம், சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றைப் படித்திருக்கிறேன். என்னைப் பொருத்தவரை, இந்தியாவுக்கு வந்ததும் கல்லூரி ஆசிரியர், பத்திரிகை ஆசிரியர் ஆகிய இரண்டு துறைகளிலும் என்னால் சிறப்பாகப் பணி புரிய முடியும் என்று நினைக்கிறேன். வங்காளத்தில் நீங்கள்தான் முன்னோடித் தலைவர். அதனால்தான் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
இந்தியாவில் தாங்கள் எழுப்பியுள்ள தேசபக்தி அலைகள் பிரிட்டனையும் எட்டியுள்ளன. தேசத்தின் அறைகூவல் இங்கேயும் கேட்கிறது. நமது அன்னை பூமியின் சேவையிலும் தியாகத்திலும் ஈடுபட்டுள்ள தலைவர்களில் முதல்வர் நீங்கள். உங்களிடம் என்னை ஒப்படைக்கிறேன். எனக்குள்ள மிகக் குறைந்த அறிவு, பொது அறிவு, சக்தி, ஆர்வம் ஆகியவற்றைத் தங்களிடம் சமர்ப்பிக்கிறேன். அன்னையின் காலடியில் சமர்ப்பிக்க உடலையும் உள்ளத்தையும் தவிர என்னிடம் அதிகமாக வேறொன்றும் இல்லை.
சுயராஜ்யா பத்திரிகையை நீங்கள் ஆரம்பித்தால் அதில் நான் உதவி ஆசிரியராகப் பணி ஆற்ற முடியும். தேசியக் கல்லூரியில் கீழ்வகுப்புகளுக்கு ஆசிரியராகவும் என்னால் பணியாற்ற முடியும்.'
இப்படி எழுதிய அவர் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் மேம்படத் தம்முடைய கருத்துகளையும் எழுதினார்.
மேலும் ஜுன் மாதம் தாயகம் திரும்பிவிட உத்தேசித்திருப்பதாகவும், தம்மை எப்படிப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதை முன்கூட்டியே எழுதினால் நலமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
சித்தரஞ்சன் தாஸ் மிகுந்த மகிழ்ச்சியுடன் சுபாஷைப் பாராட்டி எழுதினார். "தேச சேவையிலே இப்படிப்பட்ட இளைஞர்கள், கற்றறிந்த இளைஞர்கள் முன்னுக்கு வர வேண்டும். அவ்வகையில் நீங்கள் பதவியைத் தியாகம் செய்ய முன்வந்துள்ளது மகத்தானதாகும். உங்களைப் பின்பற்றிப் பலரும் இத்தகைய தியாகங்கள் செய்ய முன்வருவார்கள் என்பது திண்ணம்.' என்று எழுதினார் அவர். "இந்தியாவுக்கு வந்ததும், என்னைச் சந்தியுங்கள். உங்களுக்காகப் பல பொறுப்புகள் காத்திருக்கின்றன' என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆக, ஒரு தெளிவான திட்டத்துடன்தான் இருந்திருக்கிறார் சுபாஷ்.
சுபாஷ், சித்தரஞ்சனைத் தமது ஆதர்ச புருஷராகவும் குருநாதராகவும் வரித்துக் கொண்டார்.
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பவர்கள், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப் பற்றித் தெரிந்து கொண்டே ஆகவேண்டும். அதே போல, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கையைப் பற்றிப் படிப்பவர்களுக்கு, சித்தரஞ்சன் தாஸைப்பற்றிய அறிமுகம் தேவை.
1921ம் ஆண்டு ஜுலை மாதம் 16ம் தேதி பம்பாய் துறைமுகத்தில் வந்து இறங்கினார் சுபாஷ்.
அதற்கு முன்னரே தமது செயல்பாடுகள் குறித்து ஒரு தெளிவான முடிவுக்கு வந்திருந்தார்.
முன்கூட்டியே அவர் சித்தரஞ்சன் தாஸுக்கு எழுதியிருந்த கடிதம் இதை வெளிப்படுத்துகிறது.
16.2.1921 அன்றே எழுதிய அந்தக் கடிதத்தில் தம்மை சுருக்கமாக அறிமுகப்படுத்திக் கொண்டார். ஐ.ஏ.எஸ். பதவியை விட்டுவிடத் தாம் உத்தேசித்திருப்பதையும் குறிப்பிட்டார். மேலும் அவர் எழுதியது.
"கல்கத்தாவிலும், டாக்காவிலும் தாங்கள் இரண்டு தேசியக் கல்லூரிகளைத் தொடங்கியிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரிய வந்துள்ளது. ஆங்கிலத்திலும் வங்காளியிலும், "சுயராஜ்யா" என்ற பத்திரிகையைத் தாங்கள் தொடங்கி நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் அறிகிறேன். வங்காளத்தின் கிராமங்களில் கிராமிய சமுதாயப் பணிகளையும் பல இடங்களில் தாங்கள் தொடங்கி நடத்துவதாகவும் கேள்விப்படுகிறேன்..
"நம்முடைய தாய்நாட்டுச் சேவையில் எனக்கு நீங்கள் என்ன வேலை கொடுக்க முடியும் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு நிறைந்த கல்வியும் மிகுந்த அனுபவமும் இல்லாதிருக்கலாம். ஆனால் ஓர் இளைஞனுக்கே உரிய சக்தியும் வேகமும் எனக்கு உண்டு. நான் திருமணமாகாதவன். கல்லூரியில் தத்துவ சாஸ்திரம் பயின்றிருக்கிறேன்.. பி.ஏ.ஆனர்ஸ் பட்டம் பெற்றுள்ளேன். ஐ.சி.எஸ்.படிப்பில் பொருளாதாரம், அரசியல் விஞ்ஞானம், ஐரோப்பிய வரலாறு, ஆங்கிலச் சட்டம், பூகோளம், சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றைப் படித்திருக்கிறேன். என்னைப் பொருத்தவரை, இந்தியாவுக்கு வந்ததும் கல்லூரி ஆசிரியர், பத்திரிகை ஆசிரியர் ஆகிய இரண்டு துறைகளிலும் என்னால் சிறப்பாகப் பணி புரிய முடியும் என்று நினைக்கிறேன். வங்காளத்தில் நீங்கள்தான் முன்னோடித் தலைவர். அதனால்தான் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
இந்தியாவில் தாங்கள் எழுப்பியுள்ள தேசபக்தி அலைகள் பிரிட்டனையும் எட்டியுள்ளன. தேசத்தின் அறைகூவல் இங்கேயும் கேட்கிறது. நமது அன்னை பூமியின் சேவையிலும் தியாகத்திலும் ஈடுபட்டுள்ள தலைவர்களில் முதல்வர் நீங்கள். உங்களிடம் என்னை ஒப்படைக்கிறேன். எனக்குள்ள மிகக் குறைந்த அறிவு, பொது அறிவு, சக்தி, ஆர்வம் ஆகியவற்றைத் தங்களிடம் சமர்ப்பிக்கிறேன். அன்னையின் காலடியில் சமர்ப்பிக்க உடலையும் உள்ளத்தையும் தவிர என்னிடம் அதிகமாக வேறொன்றும் இல்லை.
சுயராஜ்யா பத்திரிகையை நீங்கள் ஆரம்பித்தால் அதில் நான் உதவி ஆசிரியராகப் பணி ஆற்ற முடியும். தேசியக் கல்லூரியில் கீழ்வகுப்புகளுக்கு ஆசிரியராகவும் என்னால் பணியாற்ற முடியும்.'
இப்படி எழுதிய அவர் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் மேம்படத் தம்முடைய கருத்துகளையும் எழுதினார்.
மேலும் ஜுன் மாதம் தாயகம் திரும்பிவிட உத்தேசித்திருப்பதாகவும், தம்மை எப்படிப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதை முன்கூட்டியே எழுதினால் நலமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
சித்தரஞ்சன் தாஸ் மிகுந்த மகிழ்ச்சியுடன் சுபாஷைப் பாராட்டி எழுதினார். "தேச சேவையிலே இப்படிப்பட்ட இளைஞர்கள், கற்றறிந்த இளைஞர்கள் முன்னுக்கு வர வேண்டும். அவ்வகையில் நீங்கள் பதவியைத் தியாகம் செய்ய முன்வந்துள்ளது மகத்தானதாகும். உங்களைப் பின்பற்றிப் பலரும் இத்தகைய தியாகங்கள் செய்ய முன்வருவார்கள் என்பது திண்ணம்.' என்று எழுதினார் அவர். "இந்தியாவுக்கு வந்ததும், என்னைச் சந்தியுங்கள். உங்களுக்காகப் பல பொறுப்புகள் காத்திருக்கின்றன' என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆக, ஒரு தெளிவான திட்டத்துடன்தான் இருந்திருக்கிறார் சுபாஷ்.
சுபாஷ், சித்தரஞ்சனைத் தமது ஆதர்ச புருஷராகவும் குருநாதராகவும் வரித்துக் கொண்டார்.
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பவர்கள், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப் பற்றித் தெரிந்து கொண்டே ஆகவேண்டும். அதே போல, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கையைப் பற்றிப் படிப்பவர்களுக்கு, சித்தரஞ்சன் தாஸைப்பற்றிய அறிமுகம் தேவை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 4 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
காவிய நாயகனின் லட்சிய நாயகர்
சுபாஷ் போசின் மனதை ஈர்த்த தலைவர் 'தேசபந்து' என்று புகழ் பெற்ற சித்தரஞ்சன்தாஸ்.
அவர் 1870ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி கல்கத்தாவில் ஒரு செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர். கல்கத்தாவிலேயே பட்டக்கல்வி வரை பயின்ற அவர், இங்கிலாந்தில் சட்டக்கல்வி பயின்று நாடு திரும்பினார். இங்கிலாந்தில் அவர் பயின்றது, காந்திஜி படித்த அதே 'இன்னர் டெம்பிள்'தான். திறமை வாய்ந்த வக்கீலாகப் பேரும் புகழும் பெற்றார்.
இந்திய விடுதலைக்கு 'வன்முற ஏற்புடைய வழிமுறை அல்ல- என்று தீவிரமாக நம்பியவர். என்றாலும், வன்முறையில் ஈடுபட்டு உயிரையும் தியாகம் செய்யத் துணிந்தவர்களின் உத்வேகத்தையும் தியாக உணர்வையும் பெரிதும் மதிக்கவே செய்தார்.
வெற்றிகரமான வக்கீலாக லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருந்த அவர், தேசியவாதிகள், புரட்சியாளர்கள் சம்பந்தமான வழக்குகளில், கட்டணம் எதுவும் பெறாமல் இலவசமாகவே ஆஜர் ஆனார். அரவிந்தகோஷ், அலிப்பூர் வெடிகுண்டு வழக்கில் (1908)விடுதலை பெற்றதற்கு, இவரது வாதத்திறமை முக்கிய காரணமாகும்.
தமது மரணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்னால், பரிதாபாதில் நடந்த வங்காள மாநில காங்கிரசில் 2.5.1925 அன்று அவர் சொன்னது, "வன்முறை பலனளிக்காது- பொருத்தமற்றது என்பது மட்டுமல்ல, அது சரியான வழிமுறையல்ல என்பதே என்னுடைய தீர்மானமான கருத்து, வழிமுறை என்பது, எப்போதும் குறிக்கோளின் ஒரு பகுதியே"
காந்திஜியின் கருத்தை அப்படியே எதிரொலிக்கவில்லை!
தாசினது நெஞ்சில் தேசப்பற்றுக்கான வித்தினை ஊன்றியது, புகழ்பெற்ற 'வந்தேமாதரம்' கீத ஆசிரியரான பங்கிம் சந்திர சாட்டர்ஜீ அவர்களது எழுத்துக்களே.
முன்னாலேயே காங்கிரசில் உறுப்பினராக இருந்தாலும், 1917 முதலே சுதந்திரப் போராட்டத்திலும் காங்கிரஸ் நடவடிக்கைகளிலும் தீவிரமாகக் கலந்து கொண்டார், தாஸ். 1917ல் வங்காள மாகாண காங்கிரசின் தலைவராக அவர் ஆற்றிய சொற்பொழிவு இலட்சிய வெறியும், தேசபக்திக் கனலுமாக, 'கள்ளையும் தீயையும் சேர்த்துக் காற்றையும் வானவெளியையும் சேர்த்து' அளித்த உணர்ச்சிப் பிழம்பாக அமைந்தது.
அந்த காங்கிரஸில்- தேசபந்து, நாட்டு நிர்மாணத்துக்காக வெளியிட்ட பத்து அம்சத்திட்டங்கள், அன்றைய காலகட்டத்தில் புதுமையானவை. காந்தியக் கருத்துக்களோடு ஒத்திசைந்தவை. இன்றைக்கும் கூட மிகப் பொருத்தமானவை. அவர் சொன்ன திட்டங்களின் முக்கிய அம்சங்கள்: ஐரோப்பிய மாதிரி தொழில்மயமாதலை மறுதலிப்பது, கிராமப் பொருளாதாரத்தை மீட்டெடுத்து, கிராமவாசிகள் நகருக்குக் குடிபெயரும் போக்கைத் தவிர்ப்பது, கிராம வாழ்வை மேம்படுத்தி விவசாயிகள் தங்கள் பணியை நோய்நொடியின்றி நன்கு ஆற்ற வகை செய்வது, கிராமக் கைத்தொழில்களைமேம்படுத்துவது, தேச இயல்புக்கும் திறமைக்கும் பொருத்தமான தேசீயக்கல்வி அளிப்பது, மிக அவசியமான தேவைகளுக்குத் தவிர, வணிகப் பொருள்கள் எதையும் அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதைத் தவிர்ப்பது, குறைந்த முதலீட்டுடன், நமது மக்களுக்கு இயல்பாகக் கைவந்த தொழில்களை ஊக்குவிப்பது, கிராமங்களுக்குத் தன்னாட்சி அளிப்பது ஆகியன.
ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு, காந்திஜியின் கட்டளையை மேற்கொண்டு பல லட்சக்கணக்கான ரூபாய் வருமானம் தந்துகொண்டிருந்த வக்கீல் தொழிலை உதறிவிட்டு எளிய வாழ்க்கையை மேற்கொண்டார், தாஸ். அரசாங்கக் கல்லூரிகளிலிருந்து வெளியேறிய மாணவர்களின் வசதிக்காக தேசியக் கல்லூரி ஒன்றைத் தொடங்கி நடத்தினார். தேசியக் கொள்கைகளையும், ஆன்மீகச் சிந்தனைகளையும் வெளிப்படுத்த 'சுயராஜ்யா' என்ற பத்திரிகை ஒன்றைத் தொடங்கி நடத்தினார்.
தேசபந்து சித்தரஞ்சனதாஸ், கேட்டார்ப் பிணிக்கும் தகைய சொல்வன்மை பெற்றவர். நல்ல கவிஞர். ஆன்மிக நாட்டம் கொண்டவர்.
தமிழக விடுதலைப் போர்வீரர்களான, பாரதியார், சுப்ரமணிய சிவா, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆகியோரிடம் பாசமும் நேசமும் உள்ளவர்.
காந்திஜியோடு அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், 'சுயராஜ்யக் கட்சி' என்று ஒரு கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படும் அமைப்பாகத் தொடங்கி நடத்தியது, மற்றும் அவரது அரசியல் செயல்பாடுகள், வகித்த பதவிகள், சுபாஷ¤ம் அவரும் சேர்ந்து ஆற்றிய பணிகள், சிறை சென்றது இவை பற்றியெல்லாம், நாம் வரலாற்றை முன்னோக்கிச் செலுத்துகையில் பார்ப்போம்.
நல்ல கவிஞரும் ஒழுக்கசீலருமான- இவரது எளிமை, பண்பாகப் பழகிய விதம், நேர்மை, கட்டுப்பாடு இவையே, இவரை நோக்கி சுபாஷை ஈர்த்தது. 1925 ஜூன் 16ம் தேதி அவர் மரணம் அடைந்தபோது, சுபாஷ் விடுத்த அறிக்கை இதைத் தெளிவுபடுத்துகிறது.
"எனது ஆழ்ந்த ஒட்டுறவையும், பக்தி மிக்க அன்பையும் அவருக்கு நான் நல்கியது, நான் அவரது அரசியல் சிஷ்யன் என்பதால் அல்ல, அவரது தனிப்பட்ட வாழ்வையும் நன்கு அறிந்திருந்ததாலேயே. சரியாகச் சொல்லப்போனால், அவருக்கு சகாக்கள், அடியற்றி நடப்பவர்களைத்தவிர, குடும்பம் என்று ஒன்றே கிடையாது. எட்டு மாதங்கள் நாங்கள் ஜெயிலில் கூடஇருந்தோம். இரண்டு மாதங்கள் ஒரே அறையில், ஆறு மாதங்கள் அடுத்தடுத்த அறைகளில். இப்படி அவரை நான் அறிந்திருந்ததாலேயே அவர் பாதங்களில் சரண் அடைந்தேன்."
சுபாஷ் போசின் மனதை ஈர்த்த தலைவர் 'தேசபந்து' என்று புகழ் பெற்ற சித்தரஞ்சன்தாஸ்.
அவர் 1870ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி கல்கத்தாவில் ஒரு செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர். கல்கத்தாவிலேயே பட்டக்கல்வி வரை பயின்ற அவர், இங்கிலாந்தில் சட்டக்கல்வி பயின்று நாடு திரும்பினார். இங்கிலாந்தில் அவர் பயின்றது, காந்திஜி படித்த அதே 'இன்னர் டெம்பிள்'தான். திறமை வாய்ந்த வக்கீலாகப் பேரும் புகழும் பெற்றார்.
இந்திய விடுதலைக்கு 'வன்முற ஏற்புடைய வழிமுறை அல்ல- என்று தீவிரமாக நம்பியவர். என்றாலும், வன்முறையில் ஈடுபட்டு உயிரையும் தியாகம் செய்யத் துணிந்தவர்களின் உத்வேகத்தையும் தியாக உணர்வையும் பெரிதும் மதிக்கவே செய்தார்.
வெற்றிகரமான வக்கீலாக லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருந்த அவர், தேசியவாதிகள், புரட்சியாளர்கள் சம்பந்தமான வழக்குகளில், கட்டணம் எதுவும் பெறாமல் இலவசமாகவே ஆஜர் ஆனார். அரவிந்தகோஷ், அலிப்பூர் வெடிகுண்டு வழக்கில் (1908)விடுதலை பெற்றதற்கு, இவரது வாதத்திறமை முக்கிய காரணமாகும்.
தமது மரணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்னால், பரிதாபாதில் நடந்த வங்காள மாநில காங்கிரசில் 2.5.1925 அன்று அவர் சொன்னது, "வன்முறை பலனளிக்காது- பொருத்தமற்றது என்பது மட்டுமல்ல, அது சரியான வழிமுறையல்ல என்பதே என்னுடைய தீர்மானமான கருத்து, வழிமுறை என்பது, எப்போதும் குறிக்கோளின் ஒரு பகுதியே"
காந்திஜியின் கருத்தை அப்படியே எதிரொலிக்கவில்லை!
தாசினது நெஞ்சில் தேசப்பற்றுக்கான வித்தினை ஊன்றியது, புகழ்பெற்ற 'வந்தேமாதரம்' கீத ஆசிரியரான பங்கிம் சந்திர சாட்டர்ஜீ அவர்களது எழுத்துக்களே.
முன்னாலேயே காங்கிரசில் உறுப்பினராக இருந்தாலும், 1917 முதலே சுதந்திரப் போராட்டத்திலும் காங்கிரஸ் நடவடிக்கைகளிலும் தீவிரமாகக் கலந்து கொண்டார், தாஸ். 1917ல் வங்காள மாகாண காங்கிரசின் தலைவராக அவர் ஆற்றிய சொற்பொழிவு இலட்சிய வெறியும், தேசபக்திக் கனலுமாக, 'கள்ளையும் தீயையும் சேர்த்துக் காற்றையும் வானவெளியையும் சேர்த்து' அளித்த உணர்ச்சிப் பிழம்பாக அமைந்தது.
அந்த காங்கிரஸில்- தேசபந்து, நாட்டு நிர்மாணத்துக்காக வெளியிட்ட பத்து அம்சத்திட்டங்கள், அன்றைய காலகட்டத்தில் புதுமையானவை. காந்தியக் கருத்துக்களோடு ஒத்திசைந்தவை. இன்றைக்கும் கூட மிகப் பொருத்தமானவை. அவர் சொன்ன திட்டங்களின் முக்கிய அம்சங்கள்: ஐரோப்பிய மாதிரி தொழில்மயமாதலை மறுதலிப்பது, கிராமப் பொருளாதாரத்தை மீட்டெடுத்து, கிராமவாசிகள் நகருக்குக் குடிபெயரும் போக்கைத் தவிர்ப்பது, கிராம வாழ்வை மேம்படுத்தி விவசாயிகள் தங்கள் பணியை நோய்நொடியின்றி நன்கு ஆற்ற வகை செய்வது, கிராமக் கைத்தொழில்களைமேம்படுத்துவது, தேச இயல்புக்கும் திறமைக்கும் பொருத்தமான தேசீயக்கல்வி அளிப்பது, மிக அவசியமான தேவைகளுக்குத் தவிர, வணிகப் பொருள்கள் எதையும் அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதைத் தவிர்ப்பது, குறைந்த முதலீட்டுடன், நமது மக்களுக்கு இயல்பாகக் கைவந்த தொழில்களை ஊக்குவிப்பது, கிராமங்களுக்குத் தன்னாட்சி அளிப்பது ஆகியன.
ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு, காந்திஜியின் கட்டளையை மேற்கொண்டு பல லட்சக்கணக்கான ரூபாய் வருமானம் தந்துகொண்டிருந்த வக்கீல் தொழிலை உதறிவிட்டு எளிய வாழ்க்கையை மேற்கொண்டார், தாஸ். அரசாங்கக் கல்லூரிகளிலிருந்து வெளியேறிய மாணவர்களின் வசதிக்காக தேசியக் கல்லூரி ஒன்றைத் தொடங்கி நடத்தினார். தேசியக் கொள்கைகளையும், ஆன்மீகச் சிந்தனைகளையும் வெளிப்படுத்த 'சுயராஜ்யா' என்ற பத்திரிகை ஒன்றைத் தொடங்கி நடத்தினார்.
தேசபந்து சித்தரஞ்சனதாஸ், கேட்டார்ப் பிணிக்கும் தகைய சொல்வன்மை பெற்றவர். நல்ல கவிஞர். ஆன்மிக நாட்டம் கொண்டவர்.
தமிழக விடுதலைப் போர்வீரர்களான, பாரதியார், சுப்ரமணிய சிவா, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆகியோரிடம் பாசமும் நேசமும் உள்ளவர்.
காந்திஜியோடு அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், 'சுயராஜ்யக் கட்சி' என்று ஒரு கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படும் அமைப்பாகத் தொடங்கி நடத்தியது, மற்றும் அவரது அரசியல் செயல்பாடுகள், வகித்த பதவிகள், சுபாஷ¤ம் அவரும் சேர்ந்து ஆற்றிய பணிகள், சிறை சென்றது இவை பற்றியெல்லாம், நாம் வரலாற்றை முன்னோக்கிச் செலுத்துகையில் பார்ப்போம்.
நல்ல கவிஞரும் ஒழுக்கசீலருமான- இவரது எளிமை, பண்பாகப் பழகிய விதம், நேர்மை, கட்டுப்பாடு இவையே, இவரை நோக்கி சுபாஷை ஈர்த்தது. 1925 ஜூன் 16ம் தேதி அவர் மரணம் அடைந்தபோது, சுபாஷ் விடுத்த அறிக்கை இதைத் தெளிவுபடுத்துகிறது.
"எனது ஆழ்ந்த ஒட்டுறவையும், பக்தி மிக்க அன்பையும் அவருக்கு நான் நல்கியது, நான் அவரது அரசியல் சிஷ்யன் என்பதால் அல்ல, அவரது தனிப்பட்ட வாழ்வையும் நன்கு அறிந்திருந்ததாலேயே. சரியாகச் சொல்லப்போனால், அவருக்கு சகாக்கள், அடியற்றி நடப்பவர்களைத்தவிர, குடும்பம் என்று ஒன்றே கிடையாது. எட்டு மாதங்கள் நாங்கள் ஜெயிலில் கூடஇருந்தோம். இரண்டு மாதங்கள் ஒரே அறையில், ஆறு மாதங்கள் அடுத்தடுத்த அறைகளில். இப்படி அவரை நான் அறிந்திருந்ததாலேயே அவர் பாதங்களில் சரண் அடைந்தேன்."
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 4 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
மிக அருமை.
எவ்வளவு அறிந்தாலும் அவருடைய இறப்பு குறித்த தகவல் மர்மமாகவே உள்ளது.
அவர் உயிரோடிரிந்திருந்தால் தன்னை மீண்டும் இந்தப்போராட்டத்தில் ஈடுபடுத்தி கொண்டிருப்பார்.
அவர் நிலை என்ன ஆனது என்றே தெரிய வில்லை.
எவ்வளவு அறிந்தாலும் அவருடைய இறப்பு குறித்த தகவல் மர்மமாகவே உள்ளது.
அவர் உயிரோடிரிந்திருந்தால் தன்னை மீண்டும் இந்தப்போராட்டத்தில் ஈடுபடுத்தி கொண்டிருப்பார்.
அவர் நிலை என்ன ஆனது என்றே தெரிய வில்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 4 W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
![நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 4 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 4 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 4 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
அமிர்தசரஸ் காங்கிரஸ்
1921 ஜூலை 16ஆம் தேதியன்று பம்பாய்த் துறைமுகத்தில் வந்து இறங்கிய சுபாஷ், நேராக அங்கு மணிபவனத்தில் தங்கியிருந்த காந்திஜியைச் சந்தித்தார். இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான சந்திப்பு இது. தேச பக்தியிலும் நேர்மையிலும் குறைவற்ற இரு தலைவர்களிடமும் கருத்து ஒற்றுமை ஏன் இல்லை என்ற காரணத்தைத் தெரிந்து கொள்வதற்கும், (இந்த இடத்தில் இருவருக்கும், ஒருவருக்கு ஒருவர் தனிப்பட்ட முறையில் மரியாதை இருக்கவே செய்தது என்பதை மறந்து விடக்கூடாது.) அந்தக் காலகட்டத்திலான சுதந்திரப் போராட்ட வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கும், அப்போது நிலவிய அரசியல் சூழ்நிலையைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம்.
1919 டிசம்பர் இறுதி வாரத்தில் அமிர்தசரஸில் காங்கிரஸ் மாநாடு கூடியது. லோக மான்ய திலகர் கலந்து கொண்ட கடைசி மாநாடு அது. மோதிலால் நேரு அந்த மாநாட்டுக்குத் தலைமை வகித்தார், பிரிட்டிஷார் துருக்கி கலிபாவின் மதரீதியான தலைமையைக் குலைத்தது, இந்திய முஸ்லீம்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. ஜாலியன்வாலாபாக் படுகொலையும் அதற்குப் பின் இழைக்கப்பட்ட அநீதிகளும் மக்கள் மனத்தில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியிருந்தன. இந்தச் சந்தர்ப்பத்தில் மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக பிரிட்டிஷார், அரசியல் சீர்திருத்தச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார்கள். அது அரைகுறையாக இருந்தது. மதரீதியில் மத்தியில் மந்திரிசபையும், மாநிலங்களுக்கு போதுமான அதிகாரங்களும் இல்லாமலுமாக இருந்த ‘கண்துடைப்பு’ சீர்திருத்தம் அது.
அமிர்தசரஸ் மாநாடு, கொடுமை இழைத்த டயரையும் அப்போதைய லெப்டினண்ட் கவர்னர் மைக்கேல் ஓட்வையரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரியது.
அரசியல் சீர்திருத்தங்களைப் பொறுத்தவரை, பண்டித மாளவியாவும் காந்தியும் அரசு எந்த அளவுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கிறதோ, அதே அளவுக்கு ஒத்துழைத்து சீர்திருத்தங்களை ஏற்றுக் கொண்டு பார்க்கலாம் என்றார்கள். தேசபந்து சித்தரஞ்சன் தாசும் திலகரும் இந்த சீர்திருத்தங்கள், “போதுமானவை அல்ல, திருப்தி அளிக்கவில்லை!, ஏமாற்றம் அளிப்பன.”என்று தீர்மானம் போட விரும்பினார்கள். அதோடு, சீர்திருத்தங்களை ஏற்றுக் கொண்டு, சட்டசபையில்(கவுன்சிலில்) நுழைந்து, முட்டுக்கட்டைகள் போடலாம் என்ற கருத்தும் நிலவியது. காந்தி இதை எதிர்த்தார். ஒன்று, சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்டு, அதன் முழுப்பலனை அடைய முயலவேண்டும். உள்ளே நுழைந்து முட்டுக்கட்டைகள் போடுவதாக இருந்தால் செய்யப் போவதை முன்கூட்டியே அறிவித்து விடவேண்டும். நம்பகத்தன்மை, பூரண நம்பகத்தன்மைதான் இந்திய கலாசாரத்தின் அடிப்படை என்றார் காந்தி. மனத்தில் ஒன்றை வைத்துக்கொண்டு வேறு ஒன்றைச் சொல்லக்கூடாது என்றார் அவர்.
அவரது சிந்தனையைச் சாமான்யர்கள் புரிந்துகொள்வது கஷ்டம்தான். என்னது, துளிக்கூட ராஜதந்திரம் இல்லையே என்று எண்ணத் தோன்றும். ஆனால் சத்தியமும் நேர்மையும்தான் அவரது ராஜதந்திரத்தின் அடிப்படைகள் என்று பல நிகழ்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.
இறுதியாக சமரசமாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சீர்திருத்தம் திருப்தியளிக்கவில்லை, ஏமாற்றம் தருகின்றன, சுய நிர்ணய அடிப்படையில் விரைவில் முழுதும் பொறுப்பேற்றுக் கொள்ளும் அரசாங்கஅதிகாரம் இந்தியர்களுக்கு வழங்கப்பட வேண்டும், அந்த நம்பிக்கையில் இந்தியர்கள் இந்தச் சீர்திருத்தங்களை ஏற்றுக் கொண்டு உழைப்பார்கள் என்று தீர்மானம் போடப்பட்டது.
1921 ஜூலை 16ஆம் தேதியன்று பம்பாய்த் துறைமுகத்தில் வந்து இறங்கிய சுபாஷ், நேராக அங்கு மணிபவனத்தில் தங்கியிருந்த காந்திஜியைச் சந்தித்தார். இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான சந்திப்பு இது. தேச பக்தியிலும் நேர்மையிலும் குறைவற்ற இரு தலைவர்களிடமும் கருத்து ஒற்றுமை ஏன் இல்லை என்ற காரணத்தைத் தெரிந்து கொள்வதற்கும், (இந்த இடத்தில் இருவருக்கும், ஒருவருக்கு ஒருவர் தனிப்பட்ட முறையில் மரியாதை இருக்கவே செய்தது என்பதை மறந்து விடக்கூடாது.) அந்தக் காலகட்டத்திலான சுதந்திரப் போராட்ட வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கும், அப்போது நிலவிய அரசியல் சூழ்நிலையைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம்.
1919 டிசம்பர் இறுதி வாரத்தில் அமிர்தசரஸில் காங்கிரஸ் மாநாடு கூடியது. லோக மான்ய திலகர் கலந்து கொண்ட கடைசி மாநாடு அது. மோதிலால் நேரு அந்த மாநாட்டுக்குத் தலைமை வகித்தார், பிரிட்டிஷார் துருக்கி கலிபாவின் மதரீதியான தலைமையைக் குலைத்தது, இந்திய முஸ்லீம்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. ஜாலியன்வாலாபாக் படுகொலையும் அதற்குப் பின் இழைக்கப்பட்ட அநீதிகளும் மக்கள் மனத்தில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியிருந்தன. இந்தச் சந்தர்ப்பத்தில் மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக பிரிட்டிஷார், அரசியல் சீர்திருத்தச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார்கள். அது அரைகுறையாக இருந்தது. மதரீதியில் மத்தியில் மந்திரிசபையும், மாநிலங்களுக்கு போதுமான அதிகாரங்களும் இல்லாமலுமாக இருந்த ‘கண்துடைப்பு’ சீர்திருத்தம் அது.
அமிர்தசரஸ் மாநாடு, கொடுமை இழைத்த டயரையும் அப்போதைய லெப்டினண்ட் கவர்னர் மைக்கேல் ஓட்வையரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரியது.
அரசியல் சீர்திருத்தங்களைப் பொறுத்தவரை, பண்டித மாளவியாவும் காந்தியும் அரசு எந்த அளவுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கிறதோ, அதே அளவுக்கு ஒத்துழைத்து சீர்திருத்தங்களை ஏற்றுக் கொண்டு பார்க்கலாம் என்றார்கள். தேசபந்து சித்தரஞ்சன் தாசும் திலகரும் இந்த சீர்திருத்தங்கள், “போதுமானவை அல்ல, திருப்தி அளிக்கவில்லை!, ஏமாற்றம் அளிப்பன.”என்று தீர்மானம் போட விரும்பினார்கள். அதோடு, சீர்திருத்தங்களை ஏற்றுக் கொண்டு, சட்டசபையில்(கவுன்சிலில்) நுழைந்து, முட்டுக்கட்டைகள் போடலாம் என்ற கருத்தும் நிலவியது. காந்தி இதை எதிர்த்தார். ஒன்று, சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்டு, அதன் முழுப்பலனை அடைய முயலவேண்டும். உள்ளே நுழைந்து முட்டுக்கட்டைகள் போடுவதாக இருந்தால் செய்யப் போவதை முன்கூட்டியே அறிவித்து விடவேண்டும். நம்பகத்தன்மை, பூரண நம்பகத்தன்மைதான் இந்திய கலாசாரத்தின் அடிப்படை என்றார் காந்தி. மனத்தில் ஒன்றை வைத்துக்கொண்டு வேறு ஒன்றைச் சொல்லக்கூடாது என்றார் அவர்.
அவரது சிந்தனையைச் சாமான்யர்கள் புரிந்துகொள்வது கஷ்டம்தான். என்னது, துளிக்கூட ராஜதந்திரம் இல்லையே என்று எண்ணத் தோன்றும். ஆனால் சத்தியமும் நேர்மையும்தான் அவரது ராஜதந்திரத்தின் அடிப்படைகள் என்று பல நிகழ்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.
இறுதியாக சமரசமாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சீர்திருத்தம் திருப்தியளிக்கவில்லை, ஏமாற்றம் தருகின்றன, சுய நிர்ணய அடிப்படையில் விரைவில் முழுதும் பொறுப்பேற்றுக் கொள்ளும் அரசாங்கஅதிகாரம் இந்தியர்களுக்கு வழங்கப்பட வேண்டும், அந்த நம்பிக்கையில் இந்தியர்கள் இந்தச் சீர்திருத்தங்களை ஏற்றுக் கொண்டு உழைப்பார்கள் என்று தீர்மானம் போடப்பட்டது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 4 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
மிகவும் அருமை
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்...
» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்- தெரிந்துக்கொள்ளுங்கள் தமிழர்களே
» சுபாஷ் சந்திர போஸின் போராட்ட வியூகங்கள்
» ஜகதீஷ் சந்திர போஸ் என்ன கண்டுபிடித்தார்?
» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்- தெரிந்துக்கொள்ளுங்கள் தமிழர்களே
» சுபாஷ் சந்திர போஸின் போராட்ட வியூகங்கள்
» ஜகதீஷ் சந்திர போஸ் என்ன கண்டுபிடித்தார்?
» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
Page 4 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|