புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
Page 2 of 8 •
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
#நேதாஜி #சுபாஸ் #சந்திரபோஸ் #சுதந்திரம் #இந்திய_சுதந்திர_போராட்டம் #நேதாஜி_சுபாஸ்_சந்திரபோஸ் #சுபாஷ்_சந்திர_போஸ் #Subhash_Chandra_bose #Netaji
பிறப்பு: ஜனவரி 23, 1897
மறைவு: ஆகஸ்ட் 18 1945
மறைவு: ஆகஸ்ட் 18 1945
#நேதாஜி #சுபாஸ் #சந்திரபோஸ் #சுதந்திரம் #இந்திய_சுதந்திர_போராட்டம் #நேதாஜி_சுபாஸ்_சந்திரபோஸ் #சுபாஷ்_சந்திர_போஸ் #Subhash_Chandra_bose #Netaji
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
பிஞ்சு மனத்தின் தவிப்பு
குறிக்கோள் நிர்ணயம், சுய முன்னேற்றம், மோட்டிவேஷன் என்றெல்லாம் சொல்பவர்கள், சில நேரங்களில் கொஞ்சம் மிகையாகவே செய்து விடுவதாகத் தோன்றுகிறது. சுபாஷின் பள்ளியில் ஒரு பயிற்சி கொடுத்தார்கள் "எதிர்காலத்தில் நீ என்னவாக விரும்புகிறாய்?" இது பற்றி விரிவாக எழுத வேண்டும். இந்தக் கட்டுரை, போட்டிக்கானது. சுபாஷுக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஏதோ நீதிபதியாவது என் குறிக்கோள் என்று எழுதிவிட்டார். பிற்பாடு அவர் சொல்கிறார்: " பத்து வயதில் ஒரு குழந்தைக்கு இது பற்றி எல்லாம் எப்படி யோசிக்கத்தெரியும்?" யோசிக்க யோசிக்க சுபாஷுக்கு ஒரே குழப்பமாகவே இருந்திருக்கிறது. நீதிபதியாக வேண்டும் என்பது ஆசை. அது எப்படி லட்சியமாகும்? இது குறித்து சுபாஷ் சொல்வது: "விவரம் அறியாப் பருவத்தில் பெரிய பிரச்னை பற்றிக் கேட்டால் இப்படித்தான் நிகழும். லட்சியத்தின் பல பரிமாணங்களையும் அளவிடத் தெரிந்த வயது வரும்போதுதான் தனி மனிதனின் சுயநல ஆசைக்கும், சேவை மனப்பான்மையுள்ள லட்சியத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரிய வரும்."
வாழ்க்கையில் பிடிப்புப் பெற ஒரு லட்சியம் வேண்டும். அது மட்டுமல்லாமல், என்ன இடையூறு வந்தாலும், லட்சியத்தை விட்டு விலகாமல் இருக்கும் மன உறுதி வேண்டும். (சுபாஷின் இந்த இளவயது சிந்தனைகள்தாம், பிற்காலத்தில் அவரது பல செயல்பாடுகளுக்கும் ஆதாரமாக அமைந்தன என்பதைப் பின்னால் பார்க்கப் போகிறோம்.)
ஏதாவது ஒரு லட்சியத்துடன்தான் வாழவேண்டும் என்பது சுபாஷுக்குப் பிடிபட்டுவிட்டது. என்ன லட்சியத்தைக் கைக்கொள்வது என்பதில்தான் குழப்பம். வேணி மாதவதாஸ் சொல்வது போல, இயற்கையைத் துதிப்பதும், அனுபவிப்பதும் மனத்துக்கு இதமாகவும் இனிமையாகவும் இருக்கும். மனத்தைத் தூய்மைப்படுத்தும். என்றாலும் அது எப்படி வாழ்க்கையின் லட்சியம் ஆகும்?
இப்படியே சிந்தனை வயப்பட்டிருந்ததால் அவரது முகமே ஒரு சிந்தனைப் பட்டறை ஆகிவிட்டதாம். சொல்கிறார் அவர்!
ஒளி கிடைத்தது; வழி தெரிந்தது!
நெஞ்சில் வேட்கை மட்டும் தீவிரமாக - தண்ணீரில் மூழ்கியவன் வெளியே வரத் தவிப்பது போல - இருந்தால் வழி தானாகக் கிடைக்கும் என்பார்கள். உண்மைதான். தவித்துக் கொண்டிருந்த சுபாஷின் வழியில் விவேகானந்தர் வந்து சேர்ந்தார். உறவினர் வீட்டு அலமாரியிலிருந்து அவர் எதிர்ப்பட்டார். யதேச்சையாகக் கிடைத்த புத்தகத்தில் அவர் கண்ணில் பட்ட சில வரிகள் சுபாஷைப் பிரமிக்க வைத்தன. தமது பிரச்சினைக்கு தீர்வு அந்த புரட்சித் துறவியிடம்தான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார். மனிதனின் இயல்பு தெய்வீகமானது, அந்த தெய்வீகத்தை வெளிப்படுத்துவதே குறிக்கோள். அறையில் உட்கார்ந்து கொண்டு கீதை படித்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும், வறியவர்க்கு சேவை செய்வதே மேலானது. ஒரு நாய் பசித்திருந்தால் கூட, நாம் ஆன்மீகம் பேசிக்கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை. ஏழை இந்தியன், பிராமண இந்தியன், தாழ்த்தப்பட்ட இந்தியன் எல்லாருமே என் உயிரில் கலந்தவர்கள் என்று முழங்கு. தரித்திர நாராயணனுக்கு செய்யும் சேவையே இறைவனுக்குச் செய்யும் சேவை என்பதை உணர்.
இப்படியெல்லாமா ஒரு சாமியார் சொல்லுவார்? படிக்கப் படிக்க அதிசயமாயிற்று சுபாஷுக்கு. விவேகானந்தரின் மொத்தக் கருத்துகளையும் படித்து முடித்ததும், தானாகவே ஒரு வெளிச்சம் கிட்டிவிட்டது. அவரது அத்தனை போதனைகளின் சாராம்சமும், எளியவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தெளிவாயிற்று. அதுவே தமது வாழ்க்கையின் லட்சியம் என்று புரிந்துகொண்டார் சுபாஷ்.
பதினைந்தாவது வயதில், வீரத்துறவியின் பாதைக்கு வந்து விட்டார், நமது காவிய நாயகன். விவேகானந்தரின் வழியாக, அவரது குருநாதர் ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடமும் ஈர்க்கப்பட்டார். ராமகிருஷ்ண பரமஹம்ஸர் எழுதப்படிக்கத் தெரியாதவர். அவர் எதையும் எழுதி வைக்கவில்லை. என்றாலும் அவரது வாழ்க்கையே அவரது செய்தி. பரமஹம்ஸரிடமிருந்து என்ன கற்றுக் கொண்டார் சுபாஷ்? ஒழுக்க நெறி தவறி நடப்பவர்கள் என்னதான் படிப்பாளிகளாய் இருந்தாலும், பதவி வகிப்பவர்களாய் இருந்தாலும் பயனற்றவர்கள். ஒழுக்கமுள்ளவனே முடிந்த அளவுக்கு நல்லவர்களை உருவாக்க முடியும். இதுவே ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடமிருந்து தாம் கற்றுக்கொண்ட பாடம் என்று சுபாஷ் சொல்கிறார்.
இந்தக் காலகட்டத்தில் சுபாஷுடன் சேர்ந்து ஒரு சத்சங்கமே உருவாகி விட்டது. விவேகானந்தர், ராமகிருஷ்ணரின், போதனைகளைப் படிப்பது, விவாதிப்பது, இப்படி ஒரு அருள்நெறித் திருக்கூட்டமாக அமைந்து விட்டது அவரது நண்பர் குழாம். ஆரம்பத்தில் எள்ளி நகையாடியவர்கள்கூட, அவருடன் சேர்ந்து கொண்டார்கள். அல்லது வியந்து பாராட்ட ஆரம்பித்தார்கள். நடத்தை, பண்பாடு இவை காரணமாக, பள்ளியில் சக மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் இவர்களுக்கு நல்ல மதிப்பு.
ஆனால், வீட்டிலோ இதற்கு எதிர்ப்பு அதிகமாகி விட்டது. சகவாசங்களை விட்டு விட வேண்டும், அடிக்கடி வெளியில் செல்லக் கூடாது' என்றெல்லாம் ஆணையிடத் தொடங்கினார்கள். குடும்பப் பெரியவர்களின் பயம் சுபாஷ் கெட்ட வழியில் சென்று விடுவார் என்பதல்ல, உடம்பைக் கெடுத்துக் கொள்வார், படிப்பைக் கோட்டை விட்டுவிடுவார் என்பதே. அவரைப் பெரிய பதவியில் வைத்துக் காணவேண்டும் என்பதல்லவா அவர்களது கனவு?
சுபாஷுக்கோ மேற்கொண்ட லட்சியத்தில் உறுதி குலையவில்லை. வீட்டில் இருந்தால்தானே இந்தக் கட்டுப்பாடு? வீட்டை விட்டு எப்போது வெளியேறுவது என்று உரிய சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
குறிக்கோள் நிர்ணயம், சுய முன்னேற்றம், மோட்டிவேஷன் என்றெல்லாம் சொல்பவர்கள், சில நேரங்களில் கொஞ்சம் மிகையாகவே செய்து விடுவதாகத் தோன்றுகிறது. சுபாஷின் பள்ளியில் ஒரு பயிற்சி கொடுத்தார்கள் "எதிர்காலத்தில் நீ என்னவாக விரும்புகிறாய்?" இது பற்றி விரிவாக எழுத வேண்டும். இந்தக் கட்டுரை, போட்டிக்கானது. சுபாஷுக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஏதோ நீதிபதியாவது என் குறிக்கோள் என்று எழுதிவிட்டார். பிற்பாடு அவர் சொல்கிறார்: " பத்து வயதில் ஒரு குழந்தைக்கு இது பற்றி எல்லாம் எப்படி யோசிக்கத்தெரியும்?" யோசிக்க யோசிக்க சுபாஷுக்கு ஒரே குழப்பமாகவே இருந்திருக்கிறது. நீதிபதியாக வேண்டும் என்பது ஆசை. அது எப்படி லட்சியமாகும்? இது குறித்து சுபாஷ் சொல்வது: "விவரம் அறியாப் பருவத்தில் பெரிய பிரச்னை பற்றிக் கேட்டால் இப்படித்தான் நிகழும். லட்சியத்தின் பல பரிமாணங்களையும் அளவிடத் தெரிந்த வயது வரும்போதுதான் தனி மனிதனின் சுயநல ஆசைக்கும், சேவை மனப்பான்மையுள்ள லட்சியத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரிய வரும்."
வாழ்க்கையில் பிடிப்புப் பெற ஒரு லட்சியம் வேண்டும். அது மட்டுமல்லாமல், என்ன இடையூறு வந்தாலும், லட்சியத்தை விட்டு விலகாமல் இருக்கும் மன உறுதி வேண்டும். (சுபாஷின் இந்த இளவயது சிந்தனைகள்தாம், பிற்காலத்தில் அவரது பல செயல்பாடுகளுக்கும் ஆதாரமாக அமைந்தன என்பதைப் பின்னால் பார்க்கப் போகிறோம்.)
ஏதாவது ஒரு லட்சியத்துடன்தான் வாழவேண்டும் என்பது சுபாஷுக்குப் பிடிபட்டுவிட்டது. என்ன லட்சியத்தைக் கைக்கொள்வது என்பதில்தான் குழப்பம். வேணி மாதவதாஸ் சொல்வது போல, இயற்கையைத் துதிப்பதும், அனுபவிப்பதும் மனத்துக்கு இதமாகவும் இனிமையாகவும் இருக்கும். மனத்தைத் தூய்மைப்படுத்தும். என்றாலும் அது எப்படி வாழ்க்கையின் லட்சியம் ஆகும்?
இப்படியே சிந்தனை வயப்பட்டிருந்ததால் அவரது முகமே ஒரு சிந்தனைப் பட்டறை ஆகிவிட்டதாம். சொல்கிறார் அவர்!
ஒளி கிடைத்தது; வழி தெரிந்தது!
நெஞ்சில் வேட்கை மட்டும் தீவிரமாக - தண்ணீரில் மூழ்கியவன் வெளியே வரத் தவிப்பது போல - இருந்தால் வழி தானாகக் கிடைக்கும் என்பார்கள். உண்மைதான். தவித்துக் கொண்டிருந்த சுபாஷின் வழியில் விவேகானந்தர் வந்து சேர்ந்தார். உறவினர் வீட்டு அலமாரியிலிருந்து அவர் எதிர்ப்பட்டார். யதேச்சையாகக் கிடைத்த புத்தகத்தில் அவர் கண்ணில் பட்ட சில வரிகள் சுபாஷைப் பிரமிக்க வைத்தன. தமது பிரச்சினைக்கு தீர்வு அந்த புரட்சித் துறவியிடம்தான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார். மனிதனின் இயல்பு தெய்வீகமானது, அந்த தெய்வீகத்தை வெளிப்படுத்துவதே குறிக்கோள். அறையில் உட்கார்ந்து கொண்டு கீதை படித்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும், வறியவர்க்கு சேவை செய்வதே மேலானது. ஒரு நாய் பசித்திருந்தால் கூட, நாம் ஆன்மீகம் பேசிக்கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை. ஏழை இந்தியன், பிராமண இந்தியன், தாழ்த்தப்பட்ட இந்தியன் எல்லாருமே என் உயிரில் கலந்தவர்கள் என்று முழங்கு. தரித்திர நாராயணனுக்கு செய்யும் சேவையே இறைவனுக்குச் செய்யும் சேவை என்பதை உணர்.
இப்படியெல்லாமா ஒரு சாமியார் சொல்லுவார்? படிக்கப் படிக்க அதிசயமாயிற்று சுபாஷுக்கு. விவேகானந்தரின் மொத்தக் கருத்துகளையும் படித்து முடித்ததும், தானாகவே ஒரு வெளிச்சம் கிட்டிவிட்டது. அவரது அத்தனை போதனைகளின் சாராம்சமும், எளியவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தெளிவாயிற்று. அதுவே தமது வாழ்க்கையின் லட்சியம் என்று புரிந்துகொண்டார் சுபாஷ்.
பதினைந்தாவது வயதில், வீரத்துறவியின் பாதைக்கு வந்து விட்டார், நமது காவிய நாயகன். விவேகானந்தரின் வழியாக, அவரது குருநாதர் ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடமும் ஈர்க்கப்பட்டார். ராமகிருஷ்ண பரமஹம்ஸர் எழுதப்படிக்கத் தெரியாதவர். அவர் எதையும் எழுதி வைக்கவில்லை. என்றாலும் அவரது வாழ்க்கையே அவரது செய்தி. பரமஹம்ஸரிடமிருந்து என்ன கற்றுக் கொண்டார் சுபாஷ்? ஒழுக்க நெறி தவறி நடப்பவர்கள் என்னதான் படிப்பாளிகளாய் இருந்தாலும், பதவி வகிப்பவர்களாய் இருந்தாலும் பயனற்றவர்கள். ஒழுக்கமுள்ளவனே முடிந்த அளவுக்கு நல்லவர்களை உருவாக்க முடியும். இதுவே ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடமிருந்து தாம் கற்றுக்கொண்ட பாடம் என்று சுபாஷ் சொல்கிறார்.
இந்தக் காலகட்டத்தில் சுபாஷுடன் சேர்ந்து ஒரு சத்சங்கமே உருவாகி விட்டது. விவேகானந்தர், ராமகிருஷ்ணரின், போதனைகளைப் படிப்பது, விவாதிப்பது, இப்படி ஒரு அருள்நெறித் திருக்கூட்டமாக அமைந்து விட்டது அவரது நண்பர் குழாம். ஆரம்பத்தில் எள்ளி நகையாடியவர்கள்கூட, அவருடன் சேர்ந்து கொண்டார்கள். அல்லது வியந்து பாராட்ட ஆரம்பித்தார்கள். நடத்தை, பண்பாடு இவை காரணமாக, பள்ளியில் சக மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் இவர்களுக்கு நல்ல மதிப்பு.
ஆனால், வீட்டிலோ இதற்கு எதிர்ப்பு அதிகமாகி விட்டது. சகவாசங்களை விட்டு விட வேண்டும், அடிக்கடி வெளியில் செல்லக் கூடாது' என்றெல்லாம் ஆணையிடத் தொடங்கினார்கள். குடும்பப் பெரியவர்களின் பயம் சுபாஷ் கெட்ட வழியில் சென்று விடுவார் என்பதல்ல, உடம்பைக் கெடுத்துக் கொள்வார், படிப்பைக் கோட்டை விட்டுவிடுவார் என்பதே. அவரைப் பெரிய பதவியில் வைத்துக் காணவேண்டும் என்பதல்லவா அவர்களது கனவு?
சுபாஷுக்கோ மேற்கொண்ட லட்சியத்தில் உறுதி குலையவில்லை. வீட்டில் இருந்தால்தானே இந்தக் கட்டுப்பாடு? வீட்டை விட்டு எப்போது வெளியேறுவது என்று உரிய சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
யோக நிஷ்டை
யோகத்திலும் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. தக்க குரு கிடைக்காததால், புத்தகத்தைப் படித்துவிட்டு யோகம் பயில ஆரம்பித்து விட்டார். ஒரு சமயம் ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி நடந்தது. இரவு தனி அறையில் யோகநிஷ்டையில் அமர்ந்துவிட்டார். வீட்டுப் பணிப்பெண் இவர் நிஷ்டையில் இருப்பது தெரியாமல், இவர் மேல் படுக்கையை விரித்துவிட்டார். தட்டுவதற்காகத் தலையணையை எடுத்தபோது, ஏதோ உடம்பு தட்டுப்படவே, அலறியடித்துக் கொண்டு வெளியேற, குடும்பம் முழுதும் திரண்டு விட்டது. அப்படியும் ஸ்வாமி நிஷ்டை கலைந்து எழுந்திருக்கவே இல்லை. இது நெடுநாள் வரைக்கும் ஒரு குடும்ப நகைச்சுவை ஆகிவிட்டது.
யோகத்திலும் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. தக்க குரு கிடைக்காததால், புத்தகத்தைப் படித்துவிட்டு யோகம் பயில ஆரம்பித்து விட்டார். ஒரு சமயம் ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி நடந்தது. இரவு தனி அறையில் யோகநிஷ்டையில் அமர்ந்துவிட்டார். வீட்டுப் பணிப்பெண் இவர் நிஷ்டையில் இருப்பது தெரியாமல், இவர் மேல் படுக்கையை விரித்துவிட்டார். தட்டுவதற்காகத் தலையணையை எடுத்தபோது, ஏதோ உடம்பு தட்டுப்படவே, அலறியடித்துக் கொண்டு வெளியேற, குடும்பம் முழுதும் திரண்டு விட்டது. அப்படியும் ஸ்வாமி நிஷ்டை கலைந்து எழுந்திருக்கவே இல்லை. இது நெடுநாள் வரைக்கும் ஒரு குடும்ப நகைச்சுவை ஆகிவிட்டது.
குரு சொன்னதை அப்படியே..
குரு இல்லாத யோகப்பயிற்சிதான் விபரீதம் தந்தது. குரு தேடும் படலம் ஆரம்பம் ஆயிற்று. கட்டாக்குக்கு 90 வயது சாமியார் ஒருவர் வந்தார். பெரிய மனிதர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்து உபதேசங்கள் செய்தார். அவர் அளித்தது மூன்று போதனைகள். 1) புலால் உண்ணாமை. 2) தினசரி பஜனை; இது இரண்டிலும் சிக்கல் எதுவும் இல்லை. மூன்றாவதுதான் கொஞ்சம் வித்தியாசமானது. தினமும் காலையில் எழுந்ததும் பெற்றோரைத் துதித்து அவர்கள் எதிரில் நின்று தியானம் செய்து விட்டே வேறு வேலைகளைக் கவனிக்கவேண்டும். தயங்காமல் இந்த வேடிக்கையை ஆரம்பித்துவிட்டார். பெற்றோர்களுக்கு இது வியப்பாக இருந்தது. அப்பா தூங்கிக் கொண்டிருந்தாலும், படித்துக் கொண்டிருந்தாலும், கவலையே படாமல், நமஸ்கரித்து தியானம் செய்து விட்டுத்தான் போவார் சுபாஷ். என்ன சுபாஷ் இதெல்லாம்? என்று தந்தை ஒரு முறை கேட்டார். சுபாஷ் பதில் சொன்னால்தானே? ஏதோ சாமியார் உபதேசம் என்று பெற்றோர்களும் விட்டு விட்டார்கள்.
குரு இல்லாத யோகப்பயிற்சிதான் விபரீதம் தந்தது. குரு தேடும் படலம் ஆரம்பம் ஆயிற்று. கட்டாக்குக்கு 90 வயது சாமியார் ஒருவர் வந்தார். பெரிய மனிதர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்து உபதேசங்கள் செய்தார். அவர் அளித்தது மூன்று போதனைகள். 1) புலால் உண்ணாமை. 2) தினசரி பஜனை; இது இரண்டிலும் சிக்கல் எதுவும் இல்லை. மூன்றாவதுதான் கொஞ்சம் வித்தியாசமானது. தினமும் காலையில் எழுந்ததும் பெற்றோரைத் துதித்து அவர்கள் எதிரில் நின்று தியானம் செய்து விட்டே வேறு வேலைகளைக் கவனிக்கவேண்டும். தயங்காமல் இந்த வேடிக்கையை ஆரம்பித்துவிட்டார். பெற்றோர்களுக்கு இது வியப்பாக இருந்தது. அப்பா தூங்கிக் கொண்டிருந்தாலும், படித்துக் கொண்டிருந்தாலும், கவலையே படாமல், நமஸ்கரித்து தியானம் செய்து விட்டுத்தான் போவார் சுபாஷ். என்ன சுபாஷ் இதெல்லாம்? என்று தந்தை ஒரு முறை கேட்டார். சுபாஷ் பதில் சொன்னால்தானே? ஏதோ சாமியார் உபதேசம் என்று பெற்றோர்களும் விட்டு விட்டார்கள்.
கிராம சேவையும் அரசியலும்
16 வது வயதில் கிராம முன்னேற்ற வேலைகளில் ஈடுபடுவது என்று தீர்மானித்துக் கொண்டு ஒரு கிராமத்துக்கு நண்பர்களுடன் போனார். பிள்ளைகளை அழைத்து வைத்துக்கொண்டு பாடம் கற்பித்தார். நல்ல வரவேற்பு. அடுத்த கிராமத்திலோ படு ஏமாற்றம். இவர்களைப் பார்த்தவுடனே கிராம மக்கள் எல்லாம் ஓடி ஒளிந்து கொண்டு விட்டார்கள். புதிதாக யாராவது நல்ல உடை உடுத்துக்கொண்டு கிராமத்துக்குப் போனால், அரசாங்க அதிகாரிகள் வரிவசூல் செய்ய, அல்லது வேறு ஏதாவது காரணமாக வந்திருக்கிறார்கள் என்று எண்ணி ஓடி ஒளிவது அந்தக் காலத்து வழக்கமாம். பாரதியார் தான் பாடி வைத்திருக்கிறாரே,
"சிப்பாயைக் கண்டஞ்சுவார், ஊர்ச் சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பார்... நெஞ்சு பொறுக்குதில்லையே.." என்று? அடிமை நாட்டில் அதுதான் நிலை.
1912 ல் கல்கத்தாவிலிருந்து கட்டாக்குக்கு ஓர் அரசியல் இயக்கத்தைச் சார்ந்த மாணவன் ஒருவன் வந்திருந்தான். அவனோடு தொடர்பு கொண்டு பல ஆண்டுகள் கடிதப் போக்குவரத்து வைத்திருந்தார் சுபாஷ். இதுதான் அவரது முதல் அரசியல் நுழைவு என்று சொல்லலாம் போல..
16 வது வயதில் கிராம முன்னேற்ற வேலைகளில் ஈடுபடுவது என்று தீர்மானித்துக் கொண்டு ஒரு கிராமத்துக்கு நண்பர்களுடன் போனார். பிள்ளைகளை அழைத்து வைத்துக்கொண்டு பாடம் கற்பித்தார். நல்ல வரவேற்பு. அடுத்த கிராமத்திலோ படு ஏமாற்றம். இவர்களைப் பார்த்தவுடனே கிராம மக்கள் எல்லாம் ஓடி ஒளிந்து கொண்டு விட்டார்கள். புதிதாக யாராவது நல்ல உடை உடுத்துக்கொண்டு கிராமத்துக்குப் போனால், அரசாங்க அதிகாரிகள் வரிவசூல் செய்ய, அல்லது வேறு ஏதாவது காரணமாக வந்திருக்கிறார்கள் என்று எண்ணி ஓடி ஒளிவது அந்தக் காலத்து வழக்கமாம். பாரதியார் தான் பாடி வைத்திருக்கிறாரே,
"சிப்பாயைக் கண்டஞ்சுவார், ஊர்ச் சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பார்... நெஞ்சு பொறுக்குதில்லையே.." என்று? அடிமை நாட்டில் அதுதான் நிலை.
1912 ல் கல்கத்தாவிலிருந்து கட்டாக்குக்கு ஓர் அரசியல் இயக்கத்தைச் சார்ந்த மாணவன் ஒருவன் வந்திருந்தான். அவனோடு தொடர்பு கொண்டு பல ஆண்டுகள் கடிதப் போக்குவரத்து வைத்திருந்தார் சுபாஷ். இதுதான் அவரது முதல் அரசியல் நுழைவு என்று சொல்லலாம் போல..
பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி..
மெட்ரிகுலேஷன் தேர்வில் சுபாஷாவது, தேறுவதாவது என்றுதான் பெற்றோர் நினைத்துக்கொண்டிருந்தார்கள். பேப்பரில் முடிவுகள் வந்ததும், மூன்றாம் வகுப்பில் அவர் நம்பரைப் பார்த்து இல்லாமல் போகவே தோல்வி என்றே முடிவுகட்டி விட்டார்கள். ஆனால், அவர் தேறியுள்ளதோ, முதல் வகுப்பில், மாகாணத்தில் இரண்டாவதாக என்று தெரிந்தபோது அவர்களுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. இன்ப அதிர்ச்சி. இந்த சந்தோஷத்தில் அவருக்கு வெகுமதியாக கல்கத்தாவுக்கு விடுமுறைக்கு அனுப்பிவைத்தார்கள்.
மெட்ரிகுலேஷன் தேர்வில் சுபாஷாவது, தேறுவதாவது என்றுதான் பெற்றோர் நினைத்துக்கொண்டிருந்தார்கள். பேப்பரில் முடிவுகள் வந்ததும், மூன்றாம் வகுப்பில் அவர் நம்பரைப் பார்த்து இல்லாமல் போகவே தோல்வி என்றே முடிவுகட்டி விட்டார்கள். ஆனால், அவர் தேறியுள்ளதோ, முதல் வகுப்பில், மாகாணத்தில் இரண்டாவதாக என்று தெரிந்தபோது அவர்களுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. இன்ப அதிர்ச்சி. இந்த சந்தோஷத்தில் அவருக்கு வெகுமதியாக கல்கத்தாவுக்கு விடுமுறைக்கு அனுப்பிவைத்தார்கள்.
உள்நோக்கிய பயணம்
விடுமுறைக்காக கல்கத்தா வந்த சுபாஷ் 1913ம் வருஷம், பதினாறாவது வயதில் பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். இந்தச் செய்தியைச் சொல்லிவிட்டுக் கதையை முன்னோக்கிச் செலுத்துவது வரலாறு என்ற அளவில் போதுமானது. எனினும், சுபாஷ் தாம் கல்லூரியில் சேர்ந்ததைச் சொல்லுவதற்கு முன்னால் தமது பல சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கிறார். அவற்றையெல்லாம் இங்கு சுருக்கமாகவாவது குறிப்பிடுவது, புறவாழ்வில் பல சாகசங்கள் புரிந்த அவரது அக வாழ்வை- உள்நோக்கிய பயணத்தைப் -புரிந்துகொள்ள உதவும்.
விடுமுறைக்காக கல்கத்தா வந்த சுபாஷ், கடைசிவரை, தமக்கு அந்த நகரத்துடன் தொடர்பு நீடிக்கும் என்று அந்த சமயம் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. பலவகைக் கேளிக்கைகளும், அதிசயங்களும் நிறைந்த ஊர் கல்கத்தா. திட்டவட்டமான கொள்கைப் பிடிப்பு இல்லாமல் துவளும் மனோபாவம் கொண்டவராகத் தாம் இருந்திருந்தால், திசை மாறிப் போயிருப்போம் என்று சுபாஷ் குறிப்பிடுகிறார்.
அவரது லட்சியம் மனிதகுல சேவை. அதன் அடிப்படை புனித வாழ்வு. அதனைச் செயலாக்கத் தத்துவப் பயிற்சி வேண்டும் என்ற திட்டத்துடன் அவர் தமது கல்கத்தா வாழ்வைத் தொடங்கினார்.
ஆழ்ந்த சிந்தனைகளால் மனச்சுமை. குடும்பத்தாரின் புரிந்துகொள்ளாத மனோபாவம். தாம் ஓர் இருமுனைப் போராட்டத்தில் இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார். அந்தப் போராட்டத்துக்கும் அவர் நன்றி பாராட்டுகிறார். அதன் விளைவாகவே அவருக்கு வாழ்வில் தன்னம்பிக்கை பிறந்தது.
இந்தச் சிந்தனைகளோடு இணைத்து குழந்தைகளைப் பெரியவர்கள் எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றிய தமது எண்ணங்களை அவர் பகிர்ந்து கொள்கிறார். “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே; அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே." என்ற பாடலை எம்.ஜி.ஆர் வாயிலாகக் கேட்டிருக்கிறோம். இதே கருத்தைத்தான் சுபாஷ¤ம் சொல்லியிருக்கிறார். குழந்தைகளின், ஆரம்ப எண்ணங்கள் நல்லபடி இருக்க வேண்டும் என்பதில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளின் மனப்போக்கைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களின் இயற்கையான ஆர்வத்தையும் போக்கையும் மாற்றி பலவந்தமாகத் தம் வழியில் திருப்ப முனைந்தால், நன்மையில்லாமல் தீமையே விளையும். குழந்தைகளின் பிடிவாதத்தை அடக்க, பேய் பிசாசு பூதம் என்று சொல்லிவைப்பது தவறு. (“வேப்ப மர உச்சியிலெ பேயண்ணு இருக்குதுன்னு சொல்லி வைப்பாங்க; அதை நம்பி விடாதே, நீயும் வெம்பிவிடாதே".. என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாட்டு ஞாபகத்துக்கு வருகிறதா?)
விடுமுறைக்காக கல்கத்தா வந்த சுபாஷ் 1913ம் வருஷம், பதினாறாவது வயதில் பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். இந்தச் செய்தியைச் சொல்லிவிட்டுக் கதையை முன்னோக்கிச் செலுத்துவது வரலாறு என்ற அளவில் போதுமானது. எனினும், சுபாஷ் தாம் கல்லூரியில் சேர்ந்ததைச் சொல்லுவதற்கு முன்னால் தமது பல சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கிறார். அவற்றையெல்லாம் இங்கு சுருக்கமாகவாவது குறிப்பிடுவது, புறவாழ்வில் பல சாகசங்கள் புரிந்த அவரது அக வாழ்வை- உள்நோக்கிய பயணத்தைப் -புரிந்துகொள்ள உதவும்.
விடுமுறைக்காக கல்கத்தா வந்த சுபாஷ், கடைசிவரை, தமக்கு அந்த நகரத்துடன் தொடர்பு நீடிக்கும் என்று அந்த சமயம் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. பலவகைக் கேளிக்கைகளும், அதிசயங்களும் நிறைந்த ஊர் கல்கத்தா. திட்டவட்டமான கொள்கைப் பிடிப்பு இல்லாமல் துவளும் மனோபாவம் கொண்டவராகத் தாம் இருந்திருந்தால், திசை மாறிப் போயிருப்போம் என்று சுபாஷ் குறிப்பிடுகிறார்.
அவரது லட்சியம் மனிதகுல சேவை. அதன் அடிப்படை புனித வாழ்வு. அதனைச் செயலாக்கத் தத்துவப் பயிற்சி வேண்டும் என்ற திட்டத்துடன் அவர் தமது கல்கத்தா வாழ்வைத் தொடங்கினார்.
ஆழ்ந்த சிந்தனைகளால் மனச்சுமை. குடும்பத்தாரின் புரிந்துகொள்ளாத மனோபாவம். தாம் ஓர் இருமுனைப் போராட்டத்தில் இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார். அந்தப் போராட்டத்துக்கும் அவர் நன்றி பாராட்டுகிறார். அதன் விளைவாகவே அவருக்கு வாழ்வில் தன்னம்பிக்கை பிறந்தது.
இந்தச் சிந்தனைகளோடு இணைத்து குழந்தைகளைப் பெரியவர்கள் எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றிய தமது எண்ணங்களை அவர் பகிர்ந்து கொள்கிறார். “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே; அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே." என்ற பாடலை எம்.ஜி.ஆர் வாயிலாகக் கேட்டிருக்கிறோம். இதே கருத்தைத்தான் சுபாஷ¤ம் சொல்லியிருக்கிறார். குழந்தைகளின், ஆரம்ப எண்ணங்கள் நல்லபடி இருக்க வேண்டும் என்பதில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளின் மனப்போக்கைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களின் இயற்கையான ஆர்வத்தையும் போக்கையும் மாற்றி பலவந்தமாகத் தம் வழியில் திருப்ப முனைந்தால், நன்மையில்லாமல் தீமையே விளையும். குழந்தைகளின் பிடிவாதத்தை அடக்க, பேய் பிசாசு பூதம் என்று சொல்லிவைப்பது தவறு. (“வேப்ப மர உச்சியிலெ பேயண்ணு இருக்குதுன்னு சொல்லி வைப்பாங்க; அதை நம்பி விடாதே, நீயும் வெம்பிவிடாதே".. என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாட்டு ஞாபகத்துக்கு வருகிறதா?)
சுபாஷின் சிந்தனைகள் பாரதியைத்தான் நினைவு படுத்துகின்றன. “தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறுகதைகள் பேசி.. வாடித் துன்பம் மிக உழன்று.. நரை கூடிக் கிழப்பருவம் எய்திப் பின் கூற்றுக்கிரையென" மாய என்று ஏற்பட்டதல்ல இந்த மனித வாழ்க்கை. இது இறைவன் தந்த பரிசு என்று கொண்டு வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதே சுபாஷின் கொள்கை. ஆழ்ந்த சமயப் பற்றும் யோகப் பயிற்சியும் அவருக்கு இந்த உள்நோக்கிய பயணத்தில் பெரிதும் துணை நின்றன.
மண்ணில் பிறந்த மனிதன் மகத்தான செயல் புரிவதை லட்சியமாகக் கொள்ள வேண்டும். அத்தகைய சாதனையை மேற்கொள்ளும்போது இன்னல்கள் வராமல் இருக்காது. அந்த இன்னல்களை சமாளித்து முன்னேறுவதற்குப் பெயரே புரட்சி. தான் கொண்ட லட்சியத்துக்காகப் பிறருக்குத் துன்பம் தருவதல்ல புரட்சி. பிறர் நலனுக்காகத் துன்பத்தை தான் ஏற்றுக்கொள்பவனே புரட்சிக்காரன். இது ஆன்மிகம் அரசியல் இரண்டுக்குமே பொருந்தும். (சுபாஷின் இந்தக் கருத்து அடிப்படையில் மகாத்மா காந்தியின் சத்தியாக்கிரஹ தத்துவத்துடன் ஒத்துப்போவது போலவே தோன்றுகிறது. காந்தியின் தத்துவம் மாற்றுக் கருத்துக் கொண்டவனைப் பகைவனாகக் கருதக் கூடாது. செயலையும், செயல் புரிபவனையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். சத்தியம் என்று நாம் கருதுவதை நிலைநாட்ட, எதிராளியின் மீது வன்முறையை ஏவி விடக் கூடாது. துன்பத்தை நாம் வலிந்தேற்றுக்கொண்டு, அவனது மன மாற்றத்துக்கு முயலவேண்டும். சத்தியாக்கிரகப் போரில் அன்பே ஆயுதம்.... இது போகிற போக்கில்.. நாம் நேதாஜிக்குத் திரும்புவோம்.) இத்தகைய புனித செயல்பாட்டுக்கு மனக்கட்டுப்பாடு அவசியம். மனிதனுக்கு மனம்தான் மன்னன் எனில், மனத்துக்கு தூய எண்ணமே மன்னன். சேவை நோக்கமும் தூய எண்ணமும் கொண்டவனுக்கு மனத்தை அடக்கியாள்வது சிரமமே அல்ல.
இலட்சியவாதிக்குப் பருவ உணர்வுகள் தடை என்பது சுபாஷின் தீவிரமான கருத்து. “காமினி, காஞ்சனம்" என்பார் ராமகிருஷ்ண பரமஹம்சர். புலனடக்கத்தின் சக்தியில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர் விவேகானந்தர். சிகாகோ மாநாட்டில் தாம் அனைவரையும் ஈர்க்க முடிந்ததற்குக் காரணம் தமது சிறிதும் வழுவாத பிரம்மசரியமே என்பார் அவர். சுபாஷ் பருவ உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்குத் தீவிரமாக முயன்று வெற்றி கண்டார்.
இந்த இடத்திலும் மகாத்மாவின் செயல்பாடுகளை ஒப்புநோக்குவது பொருத்தமானதே. தென் ஆப்பிரிக்காவில் பொதுப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட மகாத்மா, இல்லற வாழ்வு பொதுப்பணிக்குத் தடையாக இருக்கும் என்று கருதினார். தான், தன் மனைவி குடும்பம் என்று உழல்வது இலட்சிய வாழ்வுக்கு ஏற்றதல்ல என்று கொண்டார். குடும்பத்தை, நண்பர்கள், சகாக்கள் கொண்ட, பெரிய குடும்பமாகவும், பின்னர், பலரும் கூடி வாழும் ஆசிரமமாகவும் விஸ்தரித்துக்கொண்டார். மனைவியிடமே அன்பு செலுத்தும் இல்லற வாழ்க்கை, அன்பைப் பரவலாகச் செலுத்துவதற்குத் தடையாகும் என்று கருதி, 1906 ல் தமது 37 வது வயதில் பிரம்மசரிய விரதத்தை வலிந்தேற்றுக் கொண்டார்.
மண்ணில் பிறந்த மனிதன் மகத்தான செயல் புரிவதை லட்சியமாகக் கொள்ள வேண்டும். அத்தகைய சாதனையை மேற்கொள்ளும்போது இன்னல்கள் வராமல் இருக்காது. அந்த இன்னல்களை சமாளித்து முன்னேறுவதற்குப் பெயரே புரட்சி. தான் கொண்ட லட்சியத்துக்காகப் பிறருக்குத் துன்பம் தருவதல்ல புரட்சி. பிறர் நலனுக்காகத் துன்பத்தை தான் ஏற்றுக்கொள்பவனே புரட்சிக்காரன். இது ஆன்மிகம் அரசியல் இரண்டுக்குமே பொருந்தும். (சுபாஷின் இந்தக் கருத்து அடிப்படையில் மகாத்மா காந்தியின் சத்தியாக்கிரஹ தத்துவத்துடன் ஒத்துப்போவது போலவே தோன்றுகிறது. காந்தியின் தத்துவம் மாற்றுக் கருத்துக் கொண்டவனைப் பகைவனாகக் கருதக் கூடாது. செயலையும், செயல் புரிபவனையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். சத்தியம் என்று நாம் கருதுவதை நிலைநாட்ட, எதிராளியின் மீது வன்முறையை ஏவி விடக் கூடாது. துன்பத்தை நாம் வலிந்தேற்றுக்கொண்டு, அவனது மன மாற்றத்துக்கு முயலவேண்டும். சத்தியாக்கிரகப் போரில் அன்பே ஆயுதம்.... இது போகிற போக்கில்.. நாம் நேதாஜிக்குத் திரும்புவோம்.) இத்தகைய புனித செயல்பாட்டுக்கு மனக்கட்டுப்பாடு அவசியம். மனிதனுக்கு மனம்தான் மன்னன் எனில், மனத்துக்கு தூய எண்ணமே மன்னன். சேவை நோக்கமும் தூய எண்ணமும் கொண்டவனுக்கு மனத்தை அடக்கியாள்வது சிரமமே அல்ல.
இலட்சியவாதிக்குப் பருவ உணர்வுகள் தடை என்பது சுபாஷின் தீவிரமான கருத்து. “காமினி, காஞ்சனம்" என்பார் ராமகிருஷ்ண பரமஹம்சர். புலனடக்கத்தின் சக்தியில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர் விவேகானந்தர். சிகாகோ மாநாட்டில் தாம் அனைவரையும் ஈர்க்க முடிந்ததற்குக் காரணம் தமது சிறிதும் வழுவாத பிரம்மசரியமே என்பார் அவர். சுபாஷ் பருவ உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்குத் தீவிரமாக முயன்று வெற்றி கண்டார்.
இந்த இடத்திலும் மகாத்மாவின் செயல்பாடுகளை ஒப்புநோக்குவது பொருத்தமானதே. தென் ஆப்பிரிக்காவில் பொதுப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட மகாத்மா, இல்லற வாழ்வு பொதுப்பணிக்குத் தடையாக இருக்கும் என்று கருதினார். தான், தன் மனைவி குடும்பம் என்று உழல்வது இலட்சிய வாழ்வுக்கு ஏற்றதல்ல என்று கொண்டார். குடும்பத்தை, நண்பர்கள், சகாக்கள் கொண்ட, பெரிய குடும்பமாகவும், பின்னர், பலரும் கூடி வாழும் ஆசிரமமாகவும் விஸ்தரித்துக்கொண்டார். மனைவியிடமே அன்பு செலுத்தும் இல்லற வாழ்க்கை, அன்பைப் பரவலாகச் செலுத்துவதற்குத் தடையாகும் என்று கருதி, 1906 ல் தமது 37 வது வயதில் பிரம்மசரிய விரதத்தை வலிந்தேற்றுக் கொண்டார்.
இலக்கு நோக்கிய பயணம்
கல்லூரியில் ஆரம்ப நாட்களில் நகர்ப்புறத்து மாணவர்களின் பொறாமை நிறைந்த கவனம் சுபாஷ் மீது படிந்தது. நகர்ப்புறத்து மாணவர்களை விட அவர் அதிக மதிப்பெண் வாங்கியிருந்ததுதான் காரணம். எனினும் இது அதிக நாள் நீடிக்கவில்லை. சுபாஷ¤க்கு நாளடைவில் அதிக நண்பர்கள் சேர்ந்துவிட்டார்கள். கல்லூரி மாணவர்களிடையே பல்வேறு சுபாவங்கள் கொண்ட குழுக்கள் இருந்தன. மிகவும் கர்வமாக, வேறு யாருடனும் கலந்து கொள்ளாத மேட்டுக்குடியினர் ஒரு குழு; கையில் எப்போதும் புத்தகமும் கனத்த மூக்குக் கண்ணாடியுமாக புத்தகப்பூச்சிகள் ஒரு குழு; புரட்சிக்காரர்கள் ஒரு பக்கம்; சுபாஷைப் போல படிப்பில் ஆர்வம், அதே நேரத்தில் விவேகானந்தரிடம் பற்று, ஆன்மீகத்தில் நாட்டம் இப்படி ஒரு குழு. அந்தக் கல்லூரியில் நிறைய புரட்சிக்காரர்கள் இருந்தபடியால் சி.ஐ.டி.,களின் கண்காணிப்பு, சோதனைகள், புரட்சி சம்பந்தமான பிரசுரங்கள், குறிப்புகள் பறிமுதல் மாமூலாக நடக்கும். சுபாஷின் குழு ஆன்மீகத்தோடு சமுதாய சேவையிலும் ஈடுபட்டதால் எங்கே ஆன்மீகம் என்ற பேரில் புரட்சிக்கு வித்தூன்றுகிறார்களோ என்ற சந்தேகத்தில் அவரது குழுவும் சோதனைக்கு உள்ளாகி, பின்னர் ஐயம் விலகப் பெற்றது.
நாட்டின் முன்னேற்றத்துக்கு வழி, முதல்தரமான கல்விக் கழகங்களை நிறுவுவதுதான் என்று சுபாஷ¤ம் அவரது நண்பர்களும் கருதினார்கள். இதற்காக ரவீந்திரநாத் தாகூரின் சாந்தி நிகேதன் ஆஸ்ரமத்துக்குச் சென்று பார்வையிட்டார்கள். சுபாஷ¤க்கு அடிக்கடி ரவீந்திரரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவரைத் தரிசித்த ஒவ்வொரு தருணத்திலும் அவரிடமிருந்து ஆசிகளையும் அபரிமிதமான உற்சாகத்தையும் பெற்றார். கிராம முன்னேற்றம் தான் நாட்டின் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும் என்பதில் இருவரும் ஒத்த கருத்துடன் இருந்தார்கள். கிராம முன்னேற்றத்துக்காகச் செய்ய வேண்டிய பணிகளையும் செயல்முறைகளையும் பற்றி பலமுறை தாகூர் சுபாஷ¤க்கு அறிவுறுத்தியிருக்கிறார்.
அக்கால மணவர்களுக்கு அரவிந்தர் ஓர் ஆதர்ச புருஷர். அவர் நடத்திய சூர்யா பத்திரிகையை சுபாஷ¤ம் அவரது நண்பர்களும் தவறாது வாசித்து வந்தனர். அரவிந்தர் அரசியலில் ஒரு தீவிரவாதியே. நாட்டின் முதல் தேவை பூரண சுதந்திரமே, அதில் ஒரு மாற்றுக் குறைந்தாலும் அது போலியே, நமக்குத் தேவையில்லை என்பது அவரது கருத்து. காங்கிரசில் அவர் இடதுசாரி. தீப்பொறி பறக்கவும், அதே நேரத்தில் கண்ணியமாகவும் அவர் பேசிய பேச்சுக்கள் அவரை மக்கள் மனநாயகன் ஆக்கின. அரசியலைப் போலவே ஆன்மீகத்திலும் தீவிரமானவர் அரவிந்தர். அரசியலும் ஆன்மீகமும் பிரிக்க முடியாதவை என்பது அவரது திடமான எண்ணம். எனவே சுபாஷை அவர் கவர்ந்ததில் வியப்பில்லை.
“தெய்வீக ஒளியில் நாம் ஆன்ம உணர்வோடு மூழ்கி எழுந்தால், நம்மைச் சுற்றி பல ஆன்மீகச் சுடர்கள் மின்வெட்டுவதைக் கண்டு மகிழலாம். மக்கள் சேவையை விரும்பினால் ஆன்மீகப் பயிற்சி மூலம் நம்மை நாம் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாத வரை, தெய்வத்தின் நடமாடும் உருவங்களான மக்களுக்கு உண்மையில் பயன் தரும் சேவை செய்வதற்கான மனநிலையும் உடல் தென்பும் ஏற்படாது.”
கல்லூரியில் ஆரம்ப நாட்களில் நகர்ப்புறத்து மாணவர்களின் பொறாமை நிறைந்த கவனம் சுபாஷ் மீது படிந்தது. நகர்ப்புறத்து மாணவர்களை விட அவர் அதிக மதிப்பெண் வாங்கியிருந்ததுதான் காரணம். எனினும் இது அதிக நாள் நீடிக்கவில்லை. சுபாஷ¤க்கு நாளடைவில் அதிக நண்பர்கள் சேர்ந்துவிட்டார்கள். கல்லூரி மாணவர்களிடையே பல்வேறு சுபாவங்கள் கொண்ட குழுக்கள் இருந்தன. மிகவும் கர்வமாக, வேறு யாருடனும் கலந்து கொள்ளாத மேட்டுக்குடியினர் ஒரு குழு; கையில் எப்போதும் புத்தகமும் கனத்த மூக்குக் கண்ணாடியுமாக புத்தகப்பூச்சிகள் ஒரு குழு; புரட்சிக்காரர்கள் ஒரு பக்கம்; சுபாஷைப் போல படிப்பில் ஆர்வம், அதே நேரத்தில் விவேகானந்தரிடம் பற்று, ஆன்மீகத்தில் நாட்டம் இப்படி ஒரு குழு. அந்தக் கல்லூரியில் நிறைய புரட்சிக்காரர்கள் இருந்தபடியால் சி.ஐ.டி.,களின் கண்காணிப்பு, சோதனைகள், புரட்சி சம்பந்தமான பிரசுரங்கள், குறிப்புகள் பறிமுதல் மாமூலாக நடக்கும். சுபாஷின் குழு ஆன்மீகத்தோடு சமுதாய சேவையிலும் ஈடுபட்டதால் எங்கே ஆன்மீகம் என்ற பேரில் புரட்சிக்கு வித்தூன்றுகிறார்களோ என்ற சந்தேகத்தில் அவரது குழுவும் சோதனைக்கு உள்ளாகி, பின்னர் ஐயம் விலகப் பெற்றது.
நாட்டின் முன்னேற்றத்துக்கு வழி, முதல்தரமான கல்விக் கழகங்களை நிறுவுவதுதான் என்று சுபாஷ¤ம் அவரது நண்பர்களும் கருதினார்கள். இதற்காக ரவீந்திரநாத் தாகூரின் சாந்தி நிகேதன் ஆஸ்ரமத்துக்குச் சென்று பார்வையிட்டார்கள். சுபாஷ¤க்கு அடிக்கடி ரவீந்திரரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவரைத் தரிசித்த ஒவ்வொரு தருணத்திலும் அவரிடமிருந்து ஆசிகளையும் அபரிமிதமான உற்சாகத்தையும் பெற்றார். கிராம முன்னேற்றம் தான் நாட்டின் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும் என்பதில் இருவரும் ஒத்த கருத்துடன் இருந்தார்கள். கிராம முன்னேற்றத்துக்காகச் செய்ய வேண்டிய பணிகளையும் செயல்முறைகளையும் பற்றி பலமுறை தாகூர் சுபாஷ¤க்கு அறிவுறுத்தியிருக்கிறார்.
அக்கால மணவர்களுக்கு அரவிந்தர் ஓர் ஆதர்ச புருஷர். அவர் நடத்திய சூர்யா பத்திரிகையை சுபாஷ¤ம் அவரது நண்பர்களும் தவறாது வாசித்து வந்தனர். அரவிந்தர் அரசியலில் ஒரு தீவிரவாதியே. நாட்டின் முதல் தேவை பூரண சுதந்திரமே, அதில் ஒரு மாற்றுக் குறைந்தாலும் அது போலியே, நமக்குத் தேவையில்லை என்பது அவரது கருத்து. காங்கிரசில் அவர் இடதுசாரி. தீப்பொறி பறக்கவும், அதே நேரத்தில் கண்ணியமாகவும் அவர் பேசிய பேச்சுக்கள் அவரை மக்கள் மனநாயகன் ஆக்கின. அரசியலைப் போலவே ஆன்மீகத்திலும் தீவிரமானவர் அரவிந்தர். அரசியலும் ஆன்மீகமும் பிரிக்க முடியாதவை என்பது அவரது திடமான எண்ணம். எனவே சுபாஷை அவர் கவர்ந்ததில் வியப்பில்லை.
“தெய்வீக ஒளியில் நாம் ஆன்ம உணர்வோடு மூழ்கி எழுந்தால், நம்மைச் சுற்றி பல ஆன்மீகச் சுடர்கள் மின்வெட்டுவதைக் கண்டு மகிழலாம். மக்கள் சேவையை விரும்பினால் ஆன்மீகப் பயிற்சி மூலம் நம்மை நாம் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாத வரை, தெய்வத்தின் நடமாடும் உருவங்களான மக்களுக்கு உண்மையில் பயன் தரும் சேவை செய்வதற்கான மனநிலையும் உடல் தென்பும் ஏற்படாது.”
“நீங்கள் பெரிய மனிதர்கள் ஆக வேண்டும்; உங்களுக்காக அல்ல, இந்தியாவை உயர்த்துவதற்காக. உலக நாடுகளின் முன்னே இந்தியா தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். இந்தியா செழித்தோங்க வேண்டும். இதற்காகப் பணிபுரியுங்கள். இந்தியாவின் வளத்துக்காக நீங்கள் துன்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.” போன்ற அரவிந்தரின் அறிவுரைகள் சுபாஷின் மனத்தில் நீங்கா இடம்பெற்றன.
லாலா லஜபதி ராய், ‘சுயராஜ்யமே நமது பிறப்புரிமை' என்று முழங்கிய லோகமான்ய பாலகங்காதர திலகர், விபின சந்திர பாலர், மூவரும், “லால், பால், பால்(Lal, Bal, Pal)என்று மும்மணிகளாகப் போற்றப்பட்டனர். இவர்களது பேச்சுகளும், எழுத்துகளும் சுபாஷின் நண்பர்களுக்கு வீர உணர்வை ஊட்டின. இந்தக் காலகட்டத்தில், மகாத்மா காந்தியின் தென்னாப்பிரிக்க சத்தியாகிரக போராட்டத்தை ஒட்டி கல்கத்தாவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் சுரேந்திரநாத் பானர்ஜியின் பேச்சைக் கேட்கும் வாய்ப்பு சுபாஷ¤க்குக் கிடைத்தது. அவரது வார்த்தைகளிலிருந்த மின் சக்தி சுபாஷை வசீகரித்தது, என்றாலும் சுபாஷின் முதல் வோட்டு, அரவிந்தரின் எளிமை நிரம்பிய பேச்சுக்குத்தான்.
கல்லூரி விடுமுறை நாட்களில் சமூக சேவையாக, பொருள், துணிமணிகளை வீடுவீடாகச் சென்று இறைஞ்சி இரந்து அவைகளை வறியவர்களுக்காகப் பயன்படுத்தினார். வெள்ள நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டார் சுபாஷ். விடுமுறைக்காக கட்டாக் சென்றிருந்த போது அருகிலுள்ள ஊர்களில் காலரா பரவி வருவதை அறிந்தார். கிராமம் கிராமமாக சென்று காலரா நோய் பரவுவதைத் தடுப்பதிலும், நோயுற்றவர்களுக்குப் பணிவிடை செய்வதிலும் தீவிரமாக ஈடுபட்டார்கள் சுபாஷ¤ம் அவரது நண்பர்களும். சுபாஷின் பெற்றோர்களுக்கு இதிலெல்லாம் சிறிதும் இஷ்டமில்லை. மகனுக்குத் தொற்று வியாதி வந்துவிடக்கூடாதே என்ற பெற்றோரின் இயல்பான ஆதங்கம்தான். அவரைத் தடுக்கவும் முடியாமல், கவலைப்படாமல் நிம்மதியாக இருக்கவும் முடியாமல் அவதிப்பட்டார்கள்.
சமுதாயப் பணியோடு இணைந்த ஆன்மீகம், தேசிய சிந்தனை இவை இருந்தபோதும், உலகம் மாயை என்ற தத்துவம் அவரது மனத்தில் அடிநாதமாக இருந்து சங்கடப்படுத்திக் கொண்டுதான் இருந்தது. சரியானதொரு குருவை, அவர் இமயமலைச் சாரல்களில், காடுகளில் தேடி அலைந்தார். ரிஷிகேசம், ஹரித்வார், மதுரா, பிருந்தாவன், காசி, கயை போன்ற புனிதத் தலங்களுக்குச் சென்றார். பல சாது சன்னியாசிகளை சந்தித்து அவர்களது போதனைகளைக் கேட்டறிந்தார். ஆனால் யாரிடமும் அவர் மனம் லயிக்கவில்லை. இரண்டு மாதத் தேடுகையில் சுபாஷ¤க்குப் பல அனுபவங்கள் கிடைத்தன. ஜாதி மதம் போன்ற பிரிவினைகள் சாதுக்கள் வட்டாரத்திலும் நடைமுறையில் இருப்பதைக் கண்டார். மனிதன் பல விஷயங்களில் மிருகங்களை விடக் கேவலமாக வாழ்கிறான் என்பதையும், எப்படி வாழவேண்டும் என்பதையும் அனுபவப்பூர்வமாகக் கண்டுணர்ந்து கொண்டார்.
“தேய்ந்து போன கரடுமுரடான பாதையில் சென்று உனது சக்தியை வீணாக்கிக் கொள்ளாதே. உன் அருகிலேயே உள்ள செப்பனிட்ட பாதையில் செல். பரிபூர்ண சக்தியின் தோற்றத்தை உன் உள்ளத்திலே கொள். அடிமை குணங்களான சந்தேகம், அச்சம், பொறாமை, பலவீனம் இவற்றை விட்டு விலகி வா. நாம் தொண்டர்கள். இறைவனின் குழந்தைகள். இந்த ஆழ்ந்த நம்பிக்கையுடன் சேவை செய்யப் புறப்படு." என்ற விவேகானந்தரின் வீர வரிகள் புதுப்பொலிவோடு அவரது மனதில் வந்து நிலைத்தன.
துறவுநிலை மனப்பான்மையுடன், உலக வாழ்வில் ஈடுபட்டுக்கொண்டே சேவை செய்யவேண்டும் என்ற உறுதியுடன் வீடு திரும்பினார்.
இடையே அவரைக் காணாமல் பெற்றோர்கள், சோதிடம், ஜாதகம் என்று அலைந்து கொண்டிருந்தார்கள். இவரைக் கண்டதும் மகிழ்ச்சிப் பெருக்குடன் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தபடி அவரை ஆரத் தழுவிக்கொண்டார்கள்.
லாலா லஜபதி ராய், ‘சுயராஜ்யமே நமது பிறப்புரிமை' என்று முழங்கிய லோகமான்ய பாலகங்காதர திலகர், விபின சந்திர பாலர், மூவரும், “லால், பால், பால்(Lal, Bal, Pal)என்று மும்மணிகளாகப் போற்றப்பட்டனர். இவர்களது பேச்சுகளும், எழுத்துகளும் சுபாஷின் நண்பர்களுக்கு வீர உணர்வை ஊட்டின. இந்தக் காலகட்டத்தில், மகாத்மா காந்தியின் தென்னாப்பிரிக்க சத்தியாகிரக போராட்டத்தை ஒட்டி கல்கத்தாவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் சுரேந்திரநாத் பானர்ஜியின் பேச்சைக் கேட்கும் வாய்ப்பு சுபாஷ¤க்குக் கிடைத்தது. அவரது வார்த்தைகளிலிருந்த மின் சக்தி சுபாஷை வசீகரித்தது, என்றாலும் சுபாஷின் முதல் வோட்டு, அரவிந்தரின் எளிமை நிரம்பிய பேச்சுக்குத்தான்.
கல்லூரி விடுமுறை நாட்களில் சமூக சேவையாக, பொருள், துணிமணிகளை வீடுவீடாகச் சென்று இறைஞ்சி இரந்து அவைகளை வறியவர்களுக்காகப் பயன்படுத்தினார். வெள்ள நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டார் சுபாஷ். விடுமுறைக்காக கட்டாக் சென்றிருந்த போது அருகிலுள்ள ஊர்களில் காலரா பரவி வருவதை அறிந்தார். கிராமம் கிராமமாக சென்று காலரா நோய் பரவுவதைத் தடுப்பதிலும், நோயுற்றவர்களுக்குப் பணிவிடை செய்வதிலும் தீவிரமாக ஈடுபட்டார்கள் சுபாஷ¤ம் அவரது நண்பர்களும். சுபாஷின் பெற்றோர்களுக்கு இதிலெல்லாம் சிறிதும் இஷ்டமில்லை. மகனுக்குத் தொற்று வியாதி வந்துவிடக்கூடாதே என்ற பெற்றோரின் இயல்பான ஆதங்கம்தான். அவரைத் தடுக்கவும் முடியாமல், கவலைப்படாமல் நிம்மதியாக இருக்கவும் முடியாமல் அவதிப்பட்டார்கள்.
சமுதாயப் பணியோடு இணைந்த ஆன்மீகம், தேசிய சிந்தனை இவை இருந்தபோதும், உலகம் மாயை என்ற தத்துவம் அவரது மனத்தில் அடிநாதமாக இருந்து சங்கடப்படுத்திக் கொண்டுதான் இருந்தது. சரியானதொரு குருவை, அவர் இமயமலைச் சாரல்களில், காடுகளில் தேடி அலைந்தார். ரிஷிகேசம், ஹரித்வார், மதுரா, பிருந்தாவன், காசி, கயை போன்ற புனிதத் தலங்களுக்குச் சென்றார். பல சாது சன்னியாசிகளை சந்தித்து அவர்களது போதனைகளைக் கேட்டறிந்தார். ஆனால் யாரிடமும் அவர் மனம் லயிக்கவில்லை. இரண்டு மாதத் தேடுகையில் சுபாஷ¤க்குப் பல அனுபவங்கள் கிடைத்தன. ஜாதி மதம் போன்ற பிரிவினைகள் சாதுக்கள் வட்டாரத்திலும் நடைமுறையில் இருப்பதைக் கண்டார். மனிதன் பல விஷயங்களில் மிருகங்களை விடக் கேவலமாக வாழ்கிறான் என்பதையும், எப்படி வாழவேண்டும் என்பதையும் அனுபவப்பூர்வமாகக் கண்டுணர்ந்து கொண்டார்.
“தேய்ந்து போன கரடுமுரடான பாதையில் சென்று உனது சக்தியை வீணாக்கிக் கொள்ளாதே. உன் அருகிலேயே உள்ள செப்பனிட்ட பாதையில் செல். பரிபூர்ண சக்தியின் தோற்றத்தை உன் உள்ளத்திலே கொள். அடிமை குணங்களான சந்தேகம், அச்சம், பொறாமை, பலவீனம் இவற்றை விட்டு விலகி வா. நாம் தொண்டர்கள். இறைவனின் குழந்தைகள். இந்த ஆழ்ந்த நம்பிக்கையுடன் சேவை செய்யப் புறப்படு." என்ற விவேகானந்தரின் வீர வரிகள் புதுப்பொலிவோடு அவரது மனதில் வந்து நிலைத்தன.
துறவுநிலை மனப்பான்மையுடன், உலக வாழ்வில் ஈடுபட்டுக்கொண்டே சேவை செய்யவேண்டும் என்ற உறுதியுடன் வீடு திரும்பினார்.
இடையே அவரைக் காணாமல் பெற்றோர்கள், சோதிடம், ஜாதகம் என்று அலைந்து கொண்டிருந்தார்கள். இவரைக் கண்டதும் மகிழ்ச்சிப் பெருக்குடன் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தபடி அவரை ஆரத் தழுவிக்கொண்டார்கள்.
முதல் உலகப் போரும் அரசியல் சிந்தனைகளும்
கடும் அலைச்சலினாலும், மன உளைச்சலினாலும் சுபாஷின் உடல்நிலை சீர்குலைந்து போனது. டைபாய்டு காய்ச்சலில் படுத்த படுக்கையானார். மருந்துகள், ஓய்வு, அம்மாவின் பரிவும் பாசமும் இவை அனைத்தும் துணையாக, சில மாதங்களில் சுபாஷ் உடல்நிலை தேறப் பெற்றார்.
இந்தக் காலகட்டம் இந்திய வரலாற்றில் முக்கியமானதொன்றாகும். இந்திய அரசியல் அமைப்பில் சில சீர்திருத்தங்களைப் பற்றி விவாதிப்பதற்காக இந்திய தேசிய காங்கிரசின் பிரதிநிதிகளாக பூபேந்திரநாத் பாசு, ஜின்னா, லஜபதி ராய் மற்றும் மூவர் லண்டனில் இருந்தார்கள். இந்த சீர்திருத்தங்கள் பற்றி இருவேறு கருத்துகள் நிலவின. சிவில் நிர்வாகம் இந்தியர்களுக்குத் தரப்பட வேண்டும், பாதுகாப்புப் பொறுப்பு பிரிட்டிஷாரிடம் இருக்கட்டும் என்பது ஒரு கருத்து. இதற்கு மாற்றுக் கருத்து இத்தகைய சீர்திருத்தம் பயனில்லை என்பது. இந்தியாவின் விசுவாசத்தின் விலை முழு சுதந்திரமே என்று முழங்கினவர் அன்னி பெசண்ட் அம்மையார். இவரை ஜின்னாவும் லஜபதி ராயும் ஆதரித்தார்கள். இந்த நிலையில் முதல் உலகப் போர் பிரகடனம் வந்தது. இந்திய காங்கிரஸ் பிரதிநிதிகள் போர் முயற்சியில் அரசுக்கு முழு ஆதரவு தெரிவித்துக் கடிதம் கொடுத்தார்கள்.
ஆறு வருஷம் மாண்டலே தனிமைச் சிறையில் வாடிவிட்டு ஜூன் 17, 1914ல் விடுதலையாகி வந்த திலகருக்கு அன்பு நிறைந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. பதிலளித்துப் பேசிய திலகர், மக்கள் தம்மை இன்னும் மறக்காமல் அன்பு செலுத்தி வருவதற்கு நன்றி தெரிவித்தார். முன்பு போலவே பணியில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் இருக்கக் கூடும் என்றும் கூறினார். போர் சம்பந்தமான அவரது கருத்து, பெரியவரோ சின்னவரோ, ஏழையோ பணக்காரரோ அனைவரது கடமையும் இந்த சந்தர்ப்பத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பதே என்பதுதான். புரட்சியாளர்களைத் தவிர அத்தனை பேரும் பொதுவாக, போர் வந்துள்ள சூழ்நிலையில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதாகவே கருதினர். காந்தியின் தலைமையில் 80 தொண்டர்கள் முதலுதவி பயிற்சி பெற்று போரில் அடிபட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தார்கள். சரோஜினி நாயுடுவும் கஸ்தூர்பா காந்தியும் போர் வீரர்களுக்கு உடைகள் தைத்துத் தந்தார்கள்.
இன்றைக்கு யோசித்துப் பார்த்தால் இந்த நிலைப்பாடு பொருத்தமற்றதாகவும், வியப்பை ஊட்டுவதாகவும் இருக்கும். எனவே இது சம்பந்தமாக சில கருத்துகளை சொல்ல வேண்டியதாக இருக்கிறது. 1919ல் நாம் பின்னால் விவரிக்கப் போகும் சில சம்பவங்கள் நிகழ்ந்தன. அதற்கு முன் வரை, காந்தி மற்றும் பெரும்பாலான இந்தியர்களின் சிந்தனை இவ்வாறே அமைந்தது. நாம் பிரிட்டிஷ் அரசின் விசுவாசமிக்க பிரஜைகள். எனவே, அந்த அரசின் பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு அளிக்கப்படுவது போன்ற சம உரிமைகளைத் தருவது அவர்களது கடமை. கேட்பது நமது உரிமை. அதே நேரத்தில், அந்த அரசின் பிரஜைகள் என்ற முறையில் நாம் நமது கடமைகளைச் செய்ய வேண்டும் (“உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்" - என்று இதைச் சொல்லலாமா?)
கடும் அலைச்சலினாலும், மன உளைச்சலினாலும் சுபாஷின் உடல்நிலை சீர்குலைந்து போனது. டைபாய்டு காய்ச்சலில் படுத்த படுக்கையானார். மருந்துகள், ஓய்வு, அம்மாவின் பரிவும் பாசமும் இவை அனைத்தும் துணையாக, சில மாதங்களில் சுபாஷ் உடல்நிலை தேறப் பெற்றார்.
இந்தக் காலகட்டம் இந்திய வரலாற்றில் முக்கியமானதொன்றாகும். இந்திய அரசியல் அமைப்பில் சில சீர்திருத்தங்களைப் பற்றி விவாதிப்பதற்காக இந்திய தேசிய காங்கிரசின் பிரதிநிதிகளாக பூபேந்திரநாத் பாசு, ஜின்னா, லஜபதி ராய் மற்றும் மூவர் லண்டனில் இருந்தார்கள். இந்த சீர்திருத்தங்கள் பற்றி இருவேறு கருத்துகள் நிலவின. சிவில் நிர்வாகம் இந்தியர்களுக்குத் தரப்பட வேண்டும், பாதுகாப்புப் பொறுப்பு பிரிட்டிஷாரிடம் இருக்கட்டும் என்பது ஒரு கருத்து. இதற்கு மாற்றுக் கருத்து இத்தகைய சீர்திருத்தம் பயனில்லை என்பது. இந்தியாவின் விசுவாசத்தின் விலை முழு சுதந்திரமே என்று முழங்கினவர் அன்னி பெசண்ட் அம்மையார். இவரை ஜின்னாவும் லஜபதி ராயும் ஆதரித்தார்கள். இந்த நிலையில் முதல் உலகப் போர் பிரகடனம் வந்தது. இந்திய காங்கிரஸ் பிரதிநிதிகள் போர் முயற்சியில் அரசுக்கு முழு ஆதரவு தெரிவித்துக் கடிதம் கொடுத்தார்கள்.
ஆறு வருஷம் மாண்டலே தனிமைச் சிறையில் வாடிவிட்டு ஜூன் 17, 1914ல் விடுதலையாகி வந்த திலகருக்கு அன்பு நிறைந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. பதிலளித்துப் பேசிய திலகர், மக்கள் தம்மை இன்னும் மறக்காமல் அன்பு செலுத்தி வருவதற்கு நன்றி தெரிவித்தார். முன்பு போலவே பணியில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் இருக்கக் கூடும் என்றும் கூறினார். போர் சம்பந்தமான அவரது கருத்து, பெரியவரோ சின்னவரோ, ஏழையோ பணக்காரரோ அனைவரது கடமையும் இந்த சந்தர்ப்பத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பதே என்பதுதான். புரட்சியாளர்களைத் தவிர அத்தனை பேரும் பொதுவாக, போர் வந்துள்ள சூழ்நிலையில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதாகவே கருதினர். காந்தியின் தலைமையில் 80 தொண்டர்கள் முதலுதவி பயிற்சி பெற்று போரில் அடிபட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தார்கள். சரோஜினி நாயுடுவும் கஸ்தூர்பா காந்தியும் போர் வீரர்களுக்கு உடைகள் தைத்துத் தந்தார்கள்.
இன்றைக்கு யோசித்துப் பார்த்தால் இந்த நிலைப்பாடு பொருத்தமற்றதாகவும், வியப்பை ஊட்டுவதாகவும் இருக்கும். எனவே இது சம்பந்தமாக சில கருத்துகளை சொல்ல வேண்டியதாக இருக்கிறது. 1919ல் நாம் பின்னால் விவரிக்கப் போகும் சில சம்பவங்கள் நிகழ்ந்தன. அதற்கு முன் வரை, காந்தி மற்றும் பெரும்பாலான இந்தியர்களின் சிந்தனை இவ்வாறே அமைந்தது. நாம் பிரிட்டிஷ் அரசின் விசுவாசமிக்க பிரஜைகள். எனவே, அந்த அரசின் பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு அளிக்கப்படுவது போன்ற சம உரிமைகளைத் தருவது அவர்களது கடமை. கேட்பது நமது உரிமை. அதே நேரத்தில், அந்த அரசின் பிரஜைகள் என்ற முறையில் நாம் நமது கடமைகளைச் செய்ய வேண்டும் (“உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்" - என்று இதைச் சொல்லலாமா?)
- Sponsored content
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 8
|
|