புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விளிம்பிலிருந்து தள்ளப்படும் விளிம்புநிலை மனிதர்கள்!! Poll_c10விளிம்பிலிருந்து தள்ளப்படும் விளிம்புநிலை மனிதர்கள்!! Poll_m10விளிம்பிலிருந்து தள்ளப்படும் விளிம்புநிலை மனிதர்கள்!! Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
விளிம்பிலிருந்து தள்ளப்படும் விளிம்புநிலை மனிதர்கள்!! Poll_c10விளிம்பிலிருந்து தள்ளப்படும் விளிம்புநிலை மனிதர்கள்!! Poll_m10விளிம்பிலிருந்து தள்ளப்படும் விளிம்புநிலை மனிதர்கள்!! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
விளிம்பிலிருந்து தள்ளப்படும் விளிம்புநிலை மனிதர்கள்!! Poll_c10விளிம்பிலிருந்து தள்ளப்படும் விளிம்புநிலை மனிதர்கள்!! Poll_m10விளிம்பிலிருந்து தள்ளப்படும் விளிம்புநிலை மனிதர்கள்!! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
விளிம்பிலிருந்து தள்ளப்படும் விளிம்புநிலை மனிதர்கள்!! Poll_c10விளிம்பிலிருந்து தள்ளப்படும் விளிம்புநிலை மனிதர்கள்!! Poll_m10விளிம்பிலிருந்து தள்ளப்படும் விளிம்புநிலை மனிதர்கள்!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விளிம்பிலிருந்து தள்ளப்படும் விளிம்புநிலை மனிதர்கள்!! Poll_c10விளிம்பிலிருந்து தள்ளப்படும் விளிம்புநிலை மனிதர்கள்!! Poll_m10விளிம்பிலிருந்து தள்ளப்படும் விளிம்புநிலை மனிதர்கள்!! Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
விளிம்பிலிருந்து தள்ளப்படும் விளிம்புநிலை மனிதர்கள்!! Poll_c10விளிம்பிலிருந்து தள்ளப்படும் விளிம்புநிலை மனிதர்கள்!! Poll_m10விளிம்பிலிருந்து தள்ளப்படும் விளிம்புநிலை மனிதர்கள்!! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
விளிம்பிலிருந்து தள்ளப்படும் விளிம்புநிலை மனிதர்கள்!! Poll_c10விளிம்பிலிருந்து தள்ளப்படும் விளிம்புநிலை மனிதர்கள்!! Poll_m10விளிம்பிலிருந்து தள்ளப்படும் விளிம்புநிலை மனிதர்கள்!! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
விளிம்பிலிருந்து தள்ளப்படும் விளிம்புநிலை மனிதர்கள்!! Poll_c10விளிம்பிலிருந்து தள்ளப்படும் விளிம்புநிலை மனிதர்கள்!! Poll_m10விளிம்பிலிருந்து தள்ளப்படும் விளிம்புநிலை மனிதர்கள்!! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளிம்பிலிருந்து தள்ளப்படும் விளிம்புநிலை மனிதர்கள்!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 06, 2011 1:10 pm

தனது பிரஜைகளான மீனவர்களைச் சிங்கள வல்லூறுகள் வேட்டையாடுவதை வேடிக்கை பார்க்கும் இந்திய அரசு

துனீசியாவில் 24 வருட கொடுங்கோன்மை ஆட்சியைக் கவிழ்த்திருக்கிறார்கள். எகிப்தில் 30 வருடங்களாக ஆட்சி செய்து வந்த ஒரு அரசியல்வாதிக்கு எதிராகக் கலகம் பிறந்திருக்கிறது. ஆனால் 36 வருடங்களாகச் சொந்த நாட்டின் பிரஜைகள் இலங்கைக் கடலில் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கும் இந்திய அரசாங்கத்திற்குக் கடிதங்களும் தந்திகளும் அறிக்கைகளும் அனுப்பப்படுகின்றன. இறந்தவன் புள்ளி விவரம், இருப்பவன் ஓட்டு எண்ணிக்கை என்ற யாரோ ஒருவரின் ட்விட்டர் கருத்து இந்த தருணத்தில் நினைவுக்கு வருகிறது. அந்தப் புள்ளி விவரம் அரை ஆயிரத்தைத் தாண்டி வளர்ந்துகொண்டே இருக்கிறது. எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே மீனவர்கள் அ.தி.மு.க. அபிமானிகள் என்பதால் தி.மு.க.விற்கு பெரிய கவலை இல்லை. போயஸ் தோட்டத்து அம்மாவுக்கோ இவர்களைச் சிறிய நடிப்பு மூலம் திருப்திப்படுத்திவிடலாம் என நினைப்பு. அழுகிறவர்களைக் கட்டிப் பிடித்து, போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டால் முடிந்து போச்சு.

வாழ்வா, சாவா சந்தர்ப்பங்களை அடிக்கடி எதிர்கொள்ள வேண்டியிருக்கும் ரவுடிகளின் அகராதியில் ஒரு தத்துவம் உண்டு. எண்ணிக்கையிலும் பலத்திலும் எதிரிகள் நம்மை விஞ்சும்போது செய்ய வேண்டிய முதல் காரியம், ஓட்டமெடுப்பது. இரண்டாவது காரியம், கூட்டாளிகள் எல்லோரையும் மறந்துவிட்டு நம்மை நாம் காப்பாற்றிக்கொள்வதற்கு என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்வது. சிங்கள ராணுவத்தினரால் தினமும் துப்பாக்கி முனையில் வாழும் மீனவர்கள் இந்நேரம் இந்தத் தத்துவத்தை உணர்ந்திருப்பார்கள். ஆனால் இந்த இரண்டுமே அவர்கள் கையில் இல்லை: எதிரியிடமிருந்து தப்பித்து ஓடுவது, தங்களைத் தாங்களே காத்துக்கொள்வது. அதிநவீன, அதிவேக சிங்கள கடற்படைக் கப்பல்களிலிருந்து மீன் படகுகளில் இருக்கும் இவர்கள் எவ்வாறு தப்பியோடுவது? இந்தியக் கடற்படையின் உதவி அவர்களுக்குக் கிடைப்பதும் இல்லை. தங்களைக் காத்துக்கொள்ளும் அளவுக்கு மீனவ சமூகத்திற்குப் பலமும் இல்லை. படிப்பறிவிலும் விழிப்புணர்விலும் அரசியல் ஒருங்கிணைப்பிலும் பலவீனமான அந்த சமூகம் நிராயுதபாணியாக நிற்கிறது.விளிம்பிலிருந்து தள்ளப்படும் விளிம்புநிலை மனிதர்கள்!! 40537201828a6a03615b1
'பேராசையால் எல்லை தாண்டி மீன் பிடிக்கிற மீனவர்கள்' என்ற வாதத்தை முன்வைப்பது மூலம் மத்திய அரசும் ஆங்கில ஊடகங்களும் இந்திய-தமிழக மீனவர்கள் கொலையை நியாயப்படுத்துகின்றன. ஆனால் மீனவர்கள் எல்லை தாண்டுவது உலகம் முழுவதும் நிகழ்கிற ஒரு விஷயம், வெறுமனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டிய குற்றத்திற்காக அவர்களைக் கொலை செய்வது ஏன் என்பதுதான் நாம் கேட்க வேண்டிய கேள்வி. கடல் எல்லையற்றது. எல்லையற்ற கடலில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் மீன் பிடிப்பது உலகம் முழுவதும் மீனவர்களின் வாழ்வுரிமையாகவே இருந்துள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளாக மீனவர்கள் அனுபவித்து வந்த இந்த சுதந்திரத்தையும் உரிமையையும் நேற்று பிறந்த தேசிய எல்லைகள் மூலம் ஒரேயடியாக மறுத்துவிட முடியாது. பூவுலகின் பல்லாயிரம் ஆண்டு வரலாற்றில் தேசம் என்ற தெளிவான சிந்தனை பிறந்த கடந்த நூற்றாண்டு என்பது ஒரு சில மணித் துளிகளுக்குச் சமம் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். பல நூறு ஆண்டுகளாக பாக் நீரிணை, மன்னார் பகுதிகளில் எல்லா மீனவர்களும் (தற்போதைய இந்திய-சிங்கள) தடையின்றி மீன் பிடித்திருக்கிறார்கள். கடல், சுதந்திரத்தின் அடையாளமாக இருந்தது. அதையும் தேசம் என்ற குறுகிய அடையாளத்திற்குள் அடைப்பதால் அதிகம் பாதிப்பது மீனவர்கள்தான். கடல் வாணிபம், உலகைக் கண்டுபிடிக்க உதவிய சாகசப் பயணங்கள் மூலம் இந்த உலகின் முதல் உலக வரைபடத்தை உருவாக்க உதவியவர்களில் கணிசமானவர்கள் இன்று மீனவர்கள் என்ற அடையாளத்தை தாங்கி நிற்கிறார்கள். கடல் மீதான தீராத காதலாலோ, அதில் கிடைத்து வந்த நல்ல வருமானத்தாலோ மீனவர்கள் பொதுவாக அவர்கள் மழைக்குக்கூட பள்ளிகள் பக்கம் ஒதுங்குவதில்லை. அதுவே இன்று அந்த சமூகம் தன்னைக் காத்துக்கொள்வதற்குத் தடையாக இருக்கிறது.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 06, 2011 1:12 pm

விளிம்பிலிருந்து தள்ளப்படும் விளிம்புநிலை மனிதர்கள்!! Fishermen500
நவீன தேசங்களையும் அதன் கட்டுப்பாட்டை வைத்திருக்கும் அரசாங்கத்தையும் எவ்வாறு வழிக்குக் கொண்டு வருவது என்று தெரிந்துகொள்வதற்குக் கல்வி என்ற நவீன கருவி தேவைப்படுகிறது. அரசியல்ரீதியாகத் தங்களை ஒருங்கிணைத்துக்கொண்டு அரசுகளுக்கு எவ்வாறு நெருக்கடி கொடுக்க முடியும் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. வலையையும் படகையும் மட்டுமே தங்கள் கருவியாகக் கொண்ட மீனவ சமூகம் அத்தகைய வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளத் தவறிவிட்டது. மைய நிலப் பரப்பிலிருந்து ஒதுங்கி, கடலின் விளிம்பில் இருக்கும் மீனவர் சமூகமும் அரசியல் மைய நீரோட்டத்திலிருந்து விளிம்பிற்குத் தள்ளப்பட்டுவிடுகிறது. உலகையே வலம் வரும் மீனவர்கள் தங்களின் பின்தங்கிய சமூகச் சூழலின் கைதியாக மாறிவிடுகிறார்கள்.

சிங்களக் கடற்படையினர் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை ஒரு வன்மத்துடன் தாக்கி வருகிறார்கள் என்பதை சந்தர்ப்பவாத தமிழக அரசியல் கட்சிகளுக்கும், தூங்குவது போல் நடிக்கும் மத்திய அரசுக்கும் உணர்த்த முடியாது. விடுதலைப் புலிகளோ, வேறு தமிழ் அமைப்போ மீண்டும் தலைதூக்கி இலங்கையைப் பிரிக்கக்கூடும். அதற்குத் தமிழ் மீனவர்கள் உதவக்கூடும் என்று அஞ்சி சிங்கள அரசு இதைச் செய்யலாம். பாகிஸ்தானுக்குக்கூட தங்கள் எல்லைக்குள் வரும் இந்திய (குறிப்பாக குஜராத் மீனவர்கள்) மீனவர்கள் பற்றி அப்படி ஒரு பயம் இருக்கிறது. ஆனால் பாகிஸ்தானியர்கள்கூட செய்யாத காரியத்தை தீப்பெட்டி அளவே இருக்கும் இலங்கை செய்ய இந்திய அரசு அனுமதிப்பது ஏன்? இந்தியாவின் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இலங்கையின் சிங்கள அரசுக்கு நிகராகத் தமிழர்கள் மீது வெறுப்பும் பயமும் சந்தேகமும் இருக்கிறதா? தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் மீனவர் படுகொலை விஷயத்தில் நிஜமான நெருக்கடி கொடுத்தால்தான் இந்தக் கேள்விக்கான பதில் கிடைக்கும். ஆனால் ஒன்று, இந்தியாவின் மிகப் பெரிய கடல் எல்லையை அன்னிய ஊடுருவல்களிலிருந்து காப்பது மீனவர்களே. அவர்களைக் கைவிடுவது என்பது இந்தியாவைக் கூறு போடுவதற்கு வசதியாக வைத்திருப்பதற்குச் சமம்.

இந்தியா தனது நாட்டின் வரி செலுத்தும், மீன் ஏற்றுமதிகள் மூலம் அன்னியச் செலாவணி ஈட்டிக் கொடுக்கும் மீனவர்களைப் பாதுகாப்பதற்காக மட்டுமின்றி, சீனாவின் மயக்கத்தில் இருக்கும் இலங்கைக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவும் இந்தப் பிரச்சினைக்குப் போதிய முக்கியத்துவம் கொடுப்பது அவசியம். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து தாங்க முடியாத நெருக்கடி வராமல் அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எதுவும் எடுப்பதில்லை என்பது இந்திய அரசு இயந்திரத்தின் மரபணுவிலேயே ஊறிய பண்பு; வேடிக்கை பார்க்கும் நிலையில் உள்ள பாதிக்கப்படாத பிரிவினர் கொடுக்கும் நெருக்கடிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. மீனவர் படுகொலைக்காகத் தார்மீக ஆவேசம் கொள்ளும் தனிநபர்களும், இயக்கங்களை நடத்தும் குழுக்களும்கூட புரட்சியை மீனவ சமூகத்திற்குள் ஏற்றுமதி செய்யமுடியாது. ஏனெனில் புரட்சிகள் வெளியிலிருந்து திணிக்கப்படுவதில்லை, உள்ளேயிருந்து பிறக்கின்றன.

நன்றி : உயிரோசை..
மாயா..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக