புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது Poll_c10ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது Poll_m10ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது Poll_c10ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது Poll_m10ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது Poll_c10ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது Poll_m10ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது Poll_c10ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது Poll_m10ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது Poll_c10ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது Poll_m10ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது Poll_c10ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது Poll_m10ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது Poll_c10ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது Poll_m10ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது Poll_c10ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது Poll_m10ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 05, 2011 9:27 am

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது. நீதிபதி விசாரணை கமிட்டி பரபரப்பு தகவல்


ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறுகள் நடந்து இருப்பதாக, நீதிபதி சிவராஜ் பட்டீல் தலைமையிலான விசாரணை கமிட்டி அறிக்கையில் பரபரப்பான தகவல் வெளியாகி இருக்கிறது.

புதுடெல்லி, பிப்.5-

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

ஆ.ராசா கைது


எனவே இந்த முறைகேடு புகார் தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு ஆகிய அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் தொலைத் தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா, அவரிடம் முன்பு தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியா, முன்னாள் தொலைத் தொடர்பு துறை செயலாளர் சித்தார்த்த பெகுரா ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். மூவரும் நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் சிலர் கைதாகிறார்கள்

அவர்களிடம் நடைபெறும் விசாரணையின் அடிப்படையில் மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது. ஆ.ராசாவையும் மற்ற 2 அதிகாரிகளையும் காவல் முடிந்து வருகிற 8-ந் தேதி தனிக் கோர்ட்டில் சி.பி.ஐ. ஆஜர்படுத்த இருக்கிறது. அதற்கு முன்னதாக இந்த கைது நடவடிக்கை இருக்கும் என்று கருதப்படுகிறது.

தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் (டிராய்) முன்னாள் தலைவர் பிரதீப் பைஜாலை கைது செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

பரபரப்பான தகவல்

இதற்கிடையே, 2001-ம் ஆண்டில் இருந்து (தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி காலம் முதல்) 2009-ம் ஆண்டு வரை நடந்த ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் விதிமுறைகள் மீறப்பட்டதா? முறைகேடுகள் நடந்ததா? என்பது பற்றி ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு அமைத்த நீதிபதி சிவராஜ் பட்டீல் தலைமையிலான ஒரு நபர் கமிட்டி, கடந்த ஜனவரி 31-ந் தேதி தனது அறிக்கையை தொலைத் தொடர்பு துறை மந்திரி கபில் சிபலிடம் தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையை கபில் சிபல் நேற்று வெளியிட்டார். அதில் சில பரபரப்பான தகவல்கள் இடம்பெற்று உள்ளன.

அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முறைகேடுகள்

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விஷயத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 2004-ம் ஆண்டு வரையிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2008-ம் ஆண்டு வரையிலும் சரியான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்து உள்ளன.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான விலை நிர்ணயத்தில் சட்ட அமைச்சகத்தின் ஆலோசனையையோ அல்லது நிதி அமைச்சகத்தின் கருத்துக்களையோ தொலைத் தொடர்பு துறை பின்பற்றவில்லை.

2003-ம் ஆண்டு முதல் தவறுகள்

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான லைசென்சுகள் வழங்குவது தொடர்பாக 2003-ம் ஆண்டு முதல் தொலைத் தொடர்பு துறை எடுத்த நடவடிக்கைகள் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் சிபாரிசுகளுக்கோ அல்லது மத்திய மந்திரிசபையின் முடிவுக்கோ உகந்ததாக இல்லை. தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் சிபாரிசுகளும், மந்திரிசபையின் முடிவும் பின்பற்றப்படவில்லை. தவறுகள் நடந்துள்ளன.

லைசென்சு வழங்குவதில் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அளிப்பது என்று 24.11.2003 தேதி அப்போதைய மந்திரி எடுத்த முடிவு, ஏற்கனவே வகுக்கப்பட்ட கொள்கைகளுக்கு விரோதமானது ஆகும். 2009-ம் ஆண்டு வரை 25 விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன.

வெளிப்படை இல்லை

2007-2008-ம் ஆண்டில் மந்திரிசபையின் முடிவுக்கு விரோதமாக அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான லைசென்சு வழங்கும் கடைசி தேதியை முன்கூட்டியே நிர்ணயித்தது நடைமுறைகளுக்கும், விதிமுறைகளுக்கும் முரணானது மட்டும் இன்றி, வெளிப்படையான தன்மைக்கும் விரோதமானது ஆகும். அலைவரிசை ஒதுக்கீடு லைசென்சுக்கான விண்ணப்பங்களை பெற கடைசி தேதி 1.10.2007 என்று அறிவித்து விட்டு, பின்னர் அந்த தேதியை 25.9.2007 என்று மாற்றி இருக்கிறார்கள்.

விண்ணப்பங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் இவ்வாறு மாற்றப்பட்டு உள்ளது. லைசென்சு வழங்குவதில் கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும், ஒளிவு மறைவற்ற வெளிப்படையான தன்மை வேண்டும் என்பது மீறப்பட்டு இருப்பது இதன் மூலம் தெரிகிறது.

சிபாரிசுகள்

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் எதிர் காலத்தில் இது போன்ற முறைகேடுகள், குறைபாடுகள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற முறையை மாற்றி தகுதியின் அடிப்படையில், ஏல முறையில் ஒளிவு மறைவற்ற முறையில் லைசென்சுகள் வழங்கப்பட வேண்டும். இதுபற்றிய விவரங்கள் முறைப்படி தணிக்கை செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அறிக்கையை வெளியிட்டு கபில் சிபல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தவறான கொள்கை

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக 2003-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் தவறானவை என்று சிவராஜ் பட்டீல் கமிட்டி தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது. `முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் அலைவரிசை ஒதுக்கும் முறையை தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் அறிமுகப்படுத்தியது. பிழையான இந்த முடிவின் காரணமாக பல தவறுகள் நடந்துள்ளன. 1999-ம் ஆண்டின் தொலைத் தொடர்பு கொள்கையை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பின்பற்றவில்லை.

அலைவரிசை ஒதுக்கீடு விஷயத்தில் முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது பின்பற்றப்பட்ட கொள்கையைத்தான் தான் பின்பற்றியதாகவும், அதில் இருந்து விலகிச் செல்லவில்லை என்றும் ஆ.ராசா கூறி இருக்கிறார். ஆனால் கடந்த ஆட்சியின் போது பின்பற்றப்பட்ட கொள்கையே தவறானது என்பதுதான் இதில் பிரச்சினை ஆகும்.

பதில் அளிக்க வேண்டும்


ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் உரிய கொள்கைகளை பின்பற்றாததற்கும் முறைகேடுகள் நடந்ததற்கும் முன்னாள் தொலைத் தொடர்பு மந்திரிகள், உயர் அதிகாரிகள் உள்பட 17 பேர் பொறுப்பு என்று கமிட்டி தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி காலத்தில் இருந்தே வெளிப்படை தன்மை மற்றும் தொலைத்தொடர்பு கொள்கை பின்பற்றப்படவில்லை. விதி மீறல்கள் தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் தொலைத் தொடர்பு மந்திரிகளாக பதவி வகித்தவர்கள் பதில் அளிக்க வேண்டும்.

சி.பி.ஐ.க்கு அனுப்புவோம்

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் சில சீர்திருத்தங்களை கொண்டு வரவேண்டும் என்ற சிவராஜ் பட்டீல் கமிட்டி சிபாரிசு செய்து உள்ளது. இந்த கமிட்டியின் அறிக்கையை சி.பி.ஐ.க்கு அனுப்பி வைப்போம். 2001-ம் ஆண்டு முதல் விதிமுறைகளுக்கு மாறாகவும், மந்திரிசபையின் முடிவுகளை பின்பற்றாமலும் மேற்கொண்ட முடிவுகளுக்கு பொறுப்பானவர்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்படும்.

இவ்வாறு கபில் சிபல் கூறினார்.

பாரதீய ஜனதா கருத்து

நீதிபதி சிவராஜ் பட்டீல் கமிட்டியின் அறிக்கை பற்றி பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கருத்து தெரிவிக்கையில்; இது முன்னாள் தொலைத் தொடர்பு மந்திரி ஆ.ராசாவை காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்றும், அறிக்கையில் உள்ள முழு விவரங்களையும் படித்துப் பார்த்து விட்டு பின்னர் விரிவாக பாரதீய ஜனதா கருத்து தெரிவிக்கும் என்று கூறினார்.

இந்த பிரச்சினையில் தேசிய ஜனநாயக கூட்டணி எதையும் மறைக்க விரும்பவில்லை என்றும், அதனால்தான் 1998-ம் ஆண்டு முதல் இதுவரை நடந்த ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடுகள் பற்றி விசாரணை நடத்த பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறோம் என்றும் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.



ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 05, 2011 1:26 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக