புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மாவை தேடி Poll_c10ஆன்மாவை தேடி Poll_m10ஆன்மாவை தேடி Poll_c10 
81 Posts - 67%
heezulia
ஆன்மாவை தேடி Poll_c10ஆன்மாவை தேடி Poll_m10ஆன்மாவை தேடி Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஆன்மாவை தேடி Poll_c10ஆன்மாவை தேடி Poll_m10ஆன்மாவை தேடி Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
ஆன்மாவை தேடி Poll_c10ஆன்மாவை தேடி Poll_m10ஆன்மாவை தேடி Poll_c10 
5 Posts - 4%
viyasan
ஆன்மாவை தேடி Poll_c10ஆன்மாவை தேடி Poll_m10ஆன்மாவை தேடி Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஆன்மாவை தேடி Poll_c10ஆன்மாவை தேடி Poll_m10ஆன்மாவை தேடி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மாவை தேடி Poll_c10ஆன்மாவை தேடி Poll_m10ஆன்மாவை தேடி Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஆன்மாவை தேடி Poll_c10ஆன்மாவை தேடி Poll_m10ஆன்மாவை தேடி Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஆன்மாவை தேடி Poll_c10ஆன்மாவை தேடி Poll_m10ஆன்மாவை தேடி Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆன்மாவை தேடி Poll_c10ஆன்மாவை தேடி Poll_m10ஆன்மாவை தேடி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆன்மாவை தேடி Poll_c10ஆன்மாவை தேடி Poll_m10ஆன்மாவை தேடி Poll_c10 
18 Posts - 3%
prajai
ஆன்மாவை தேடி Poll_c10ஆன்மாவை தேடி Poll_m10ஆன்மாவை தேடி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆன்மாவை தேடி Poll_c10ஆன்மாவை தேடி Poll_m10ஆன்மாவை தேடி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆன்மாவை தேடி Poll_c10ஆன்மாவை தேடி Poll_m10ஆன்மாவை தேடி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆன்மாவை தேடி Poll_c10ஆன்மாவை தேடி Poll_m10ஆன்மாவை தேடி Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆன்மாவை தேடி Poll_c10ஆன்மாவை தேடி Poll_m10ஆன்மாவை தேடி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மாவை தேடி


   
   
cortext
cortext
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 03/02/2011

Postcortext Thu Feb 03, 2011 4:45 am

மனிதர்கள், விலங்குகள் போன்ற இயக்கமுடைய பொருட்களுக்கும், பாறை, நாற்காலி, தாவரங்கள் போன்ற இயக்கமில்லாத பொருட்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடு என்ன? இயக்கமுடைய பொருட்களுக்கு புதிரான ஒரு உயிர் சக்தி இருப்பதாகவும், அதனாலேயே அவை இயக்கமடைகின்றன என்றும் நம்முடைய முன்னோர்கள் நினைத்தனர். அந்த புதிரான உயிர் சக்தியை ஆன்மா என்றழைத்தனர். அந்த கருதுகோளை மேலும் விரிவுபடுத்தி, மரணத்திற்கு பின் ஆன்மா உடலை விட்டு பிரியும் என்றும், அது ஒருபோதும் சாவதில்லை என்றும் நம்பினர் (பாவம் செய்யாதவர்கள், குழந்தைகள் படும் துன்பங்களை விளக்க உருவான முன்-ஜென்ம-பாவம் என்ற யோசனைகளுக்கும், நரகம்-சொர்க்கம் போன்ற யோசனைகளுக்கும் அது ஏதுவாக உதவியது).

பிறகு தாவரங்கள் உயிர் என்பதையும், மேலும் பல்லாயிரக்கணக்கான நுண்ணுயிரிகளையும் கண்டறிந்து கொண்டோம். இப்பொழுது, உயிர் என்பது ஒரு சிக்கலான தொடர்ச்சியாக நிகழும் வேதிவினைகளின் தொகுப்பு என்பதையும், மேலும் அது எவ்வாறு பாக்டீரியா போன்ற எளிய அமைப்பிலிருந்து தாவரங்கள், மீன்கள், விலங்குகள் மனிதர்கள் உட்பட பலவகை உயிரினங்களாக இயற்கை-தேர்வு-முறையில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன என்பதையும் அறிந்துள்ளோம். பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களையும் இணைக்கும், உயிரின் இரகசிய மரபியல் மூலக்கூறையும் (DNA), அதன் நான்கு எழுத்துக்களை (A, C, G, T) கொண்ட மரபு குறிப்புகளையும் அறிவோம். மரபியல் மூலக்கூறு உட்பட, உயிரின் அனைத்து மூலப்பொருட்களையும் நம்மால் செயற்கையாக தயாரிக்க முடியும். 50 கோடி மக்களை கொன்ற, முற்றிலும் மறைந்து போன 1918 தொற்று வைரஸை (Flu virus), ஆராய்ச்சிக்காக விஞ்ஞானிகள் மீண்டும் உயிர் கொண்டு வந்துள்ளனர். நம் உடலின் ஒரு செல்லை (உயிரணு) கொண்டு, நம்முடைய உருப்புகளையோ அல்லது ஒத்த மரபணுக்களை உடைய மற்றொரு நபரையோ (Clone) உருவாக்க முடியும்.

உயிரின் அடிப்படையை நாம் புரிந்து கொள்ளும் வேளையில், ஆன்மா என்ற கருதுகோள் மெதுவாக நம் மனதிற்கு நகர்த்தப்பட்டது. உடல் வேறு மனம் வேறாக, நாம் உணரும் உடல்-மனது இருமை (Mind-body dualism) இந்த யோசனை துளிர் விட வைத்தது. மனம் என்பது உடலிலிருந்து முற்றிலும் வேறுபட்ட, தனித்த ஒன்று என்று மக்கள் நினைத்தனர்; இன்றும் பலர் நினைக்கின்றனர் (இதயம் தான் ஆன்மாவின், அன்பின், காதலின் மையம் என்றும் மக்கள் நினைத்ததுண்டு). மூளை ஏதோ ஒரு மாயமான முறையில் ஆன்மாவுடன் தொடர்பு கொண்டு உருவாகுவது தான் மனம் என்று நம்பினர். மரணத்தை-தொட்டு-வந்தவர்களின் அனுபவங்கள் (Near-death experience), உடலை விட்டு மனம் பிரியும் அனுபவங்கள் (Out-of-body experience) (அதன் விரிவுபடுத்தப்பட்ட கதையான கூடுவிட்டு கூடு பாய்தல்) போன்ற பலவகையான வினோதமான நிகழ்வுகள் இந்த யோசனையை மேலும் கொழுந்துவிட்டு எரிய வைத்தது.

கால்கள் செயல்படும் போது 'நடத்தல்' வெளிபடுவது போல், மூளை செயல்படுதலின் வெளிப்பாடு தான் மனம். இப்பொழுது, மூளை செயல்படுவதை fMRI (functional Magnetic Resonance Imaging) எனப்படும் 'வினைசார் காந்த ஒத்ததிர்வு வரைவு' எந்திரம் மூலம் நேரடியாக பார்க்கலாம். நம்முடைய உணர்வுகள் மூளையில் எங்கு அறியப்படுகின்றன, உணர்ச்சிகள் எப்படி கையாளப்படுகின்றன, எந்த வழிகளில்...எப்படி நம்முடைய தற்காலிக அனுபவ நினைவுகள் நீண்ட கால நினைவுகளாக சேமிக்கப்படுகின்றன போன்றவற்றை நாம் அறிவோம். இப்பொழுது, மரணத்தை-தொட்டு-வந்தவர்களின் அனுபவங்கள் (மூளையின் செல்களில் ஆக்ஸிஜன் குறைவால் ஏற்படும் குகைவழியின்-கடைசியில்-தெரியும்-ஒளி போன்ற அறிகுறிகள்), உடலை விட்டு மனம் பிரியும் அனுபவங்கள் (உடலை விட்டு மனம் பிரிவது போன்ற மாயை) போன்ற பலவகையான வினோதமான நிகழ்வுகளை நம்மால் விளக்க முடியும். உடலை விட்டு மனம் பிரியும் அனுபவத்தை காந்த அலைத்துடிப்புகளை கொண்டு நம்மால் எளிதாக தூண்ட வைக்கமுடியும்.

நம் மூளை வலது-இடது என இரண்டு அரைக்கோளங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. வலது-அரைக்கோளம் நம் இடப்பக்க உடலையும், இடது-அரைக்கோளம் நம் வலப்பக்க உடலையும் கட்டுப்படுத்துகின்றது. இந்த இரண்டு அரைக்கோளங்களையும் இணைப்பு-மெய்யம் (Corpus Callosum) எனப்படும் ஒரு கட்டான நரம்பிழைகள் இணைக்கின்றன. பலவகைகளில், இந்த இரண்டு அரைக்கோளங்களையும் இரண்டு தனி மூளைகளாக பாவிக்கலாம். சில காரணங்களுக்காக, இவற்றை இணைக்கும் இணைப்பு-மெய்யம் துண்டிக்கப்பட்டால், இரண்டு அரைக்கோளங்களின் இரு வேறுபட்ட பண்புகளையும், விருப்பு வெறுப்புகளையும், ஆசா பாசங்களையும், நம்பிக்கைகளையும் கவனிக்க முடியும். உதாரணமாக, இந்த நிலையில் உள்ள சில நோயாளிகள், ஒருபக்க அரைக்கோளத்தில் கடவுளை நம்பிக்கை உள்ளதாகவும், மறுபக்க அரைக்கோளத்தில் கடவுளை நம்பிக்கை இல்லை எனவும் கூறுகின்றனர் (நம் இரண்டு கண்களிலிருந்து செல்லும் குறிப்பலைகள் மூளையின் வெவ்வேறு அரைக்கோளத்தில் பகுத்து அறியப்படுவதால், ஒரு கண்ணை மூடிவிட்டு இச்சோதனையை செய்ய முடியும்). ஆன்மா என்ற ஒன்று இருந்தால், இங்கு அது பாதியாக பகுக்கப்பட்டிருக்க வேண்டும் (ஒருவேளை, அவர்களின் ஒருபாதி ஆன்மா சொர்க்கத்திற்கும், மறுபாதி ஆன்மா நரகத்திற்கும் செல்லலாம்!).

எனினும், மற்றொரு கோணத்தில், ஆன்மா என்ற ஒன்று உண்மையிலே உண்டு! அது எந்த ஒன்றிலிருந்தும் வெளிப்படும் ஒரு சாரம் அல்லது ஜீவன் ஆகும். அது ஒரு புத்தகத்தின் ஆன்மாவாக இருக்கலாம், அல்லது ஒரு திரைப்படத்தின் ஆன்மாவாக இருக்கலாம். அது பல நுண்ணிய புள்ளிகளை (படத்துணுக்குகள்) கொண்டு ஒரு படம் வெளிப்படுவது போன்றது; பல எழுத்துக்களை கொண்டு ஒரு புத்தகத்தில் கதை வெளிப்படுவது போன்றது; சில தொடர்ந்த வேதிவினைகளின் தொகுப்பை கொண்டு ஒரு உயிருள்ள செல் வெளிப்படுவது போன்றது. ஒரு உயிருள்ள செல் என்பது எந்தவித விருப்பு-வெறுப்பு அற்ற, ஆசா-பாசங்கள் அற்ற வேதிவினைகளின் தொகுப்பு. ஆனால், இப்படிப்பட்ட பலகோடி செல்களின் ஒன்று கூடிய செயல்பாட்டின் வெளிப்பாடே... உணர்ச்சி, நம்பிக்கை, விருப்பு-வெறுப்பு, ஆசா-பாசங்கள், வலி-சுகம் கொண்ட மனம்! அது ஒரு மனிதனின் சாரம், ஜீவன், ஆன்மா!


புலி: நம் மரணத்திற்குப் பின் வேறு ஒன்றுமே இல்லை என்கின்றாயா?

ஆமை: ஆனால், நம்முடைய பங்களிப்புகள், கண்டுபிடிப்புகள், மரபணுக்கள் (ஜீன்கள்), மீம்கள் (கோட்பாடுகள், யோசனைகள், அறிமுறைகள்) என நம்மை தாண்டி வாழக்கூடிய பலவற்றை விட்டு செல்லலாம். இது ஒன்றுதான் நம் வாழ்கை. அதனால், இப்பூமியை நம்மால் முடிந்த மட்டும் சொர்க்கமாக்கலாம். இதில் நமக்குள் ஏன் போர்களும், சண்டை சச்சரவுகளும்? இயன்றவரை சந்தோசமாகவும் முழுமையாகவும் வாழுவோம்; அதை மற்றவருக்கும் கொடுப்போம்.

முயல்: நாம் நம்மை பற்றி அறிந்து கொள்வது போல், நம் பாசத்திற்கு சொந்தமானவர்களின் விருப்பு-வெறுப்புகள், ஆசா-பாசங்கள், அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என பலவற்றையும் அறிந்து கொள்கின்றோம். நாம் நம்முடைய மாதிரியை மூளையில் அமைப்பது போல், நம்முடைய நெருக்கமானவர்களின் மாதிரிகளையும் நம் மூளையில் அமைக்கின்றோம். நம் பாசத்திற்கு சொந்தமானவர்கள் நம்மை விட்டு பிரிந்தாலும், ஒருவிதத்தில் அவர்களின் ஆன்மாவின் சுவடுகளை நம்மிடம் விட்டுத்தான் செல்கின்றனர். நாம் நினைவில் வைத்திருக்கும் வரை, அவர்கள் நம்முடன் வாழ்கின்றார்கள்.

புலி: ஆனால், எனக்கு என்னுடைய சமய நூல்கள் மீது நம்பிக்கை உள்ளது. அதனால், என் மரணத்தை தாண்டி உயிர் வாழும் ஆன்மாவை நம்புகின்றேன்.

ஆமை: உன்னுடைய புனித/சமய நூல்களை ஒருமுறையாவது முழுமையாக படித்துள்ளாயா? அது உன் வாழ்கையில் மிக முக்கியமான நூல் அல்லவா? சமீபத்திய ஒரு வாக்கெடுப்பு, பெரும்பான்மையானவர்களுக்கு அவர்களது புனித/சமய நூல்களை பற்றிய எளிய அடிப்படை விசயங்கள் கூட தெரிவதில்லை என்று காட்டுகின்றது. ஆனாலும், அவர்கள் பலவிதமான சமூக, பொருளாதார விசயங்களில் புனித/சமய நூல்களளின் பேரைச் சொல்லி அதற்காக போராடுகின்றார்கள்.

புலி: நம்பிக்கை எப்படி செயல்படுகின்றது என்று உனக்கு தெரியவில்லை. அதற்கு உன்னுடைய காரண-காரிய தருக்க அறிவையெல்லாம் பயன்படுத்த முடியாது. வாழ்கையின் சூழ்நிலைக்கேற்ப, சமய நூலிலிருந்து ஒரு சில பகுதியை படித்து, அதை தன்னுடைய அறிவை, ஞானத்தை, வாழ்கையின் அனுபவத்தை கொண்டு ஒவ்வொருவரும் புரிந்து கொள்கின்றனர். அப்படியே நானும். அது எனக்கு வாழ்கையில் ஒரு நம்பிக்கையை, ஊக்கத்தை, அர்த்தத்தை, ஆதாரத்தை தருகின்றது!

ஆமை: புனித/சமய நூல்கள் வேறொரு காலகட்டத்தில் எழுதப்பட்டவை. மொழி, கலாச்சாரம், வாழ்கை முறைகளெல்லாம் அப்பொழுது வேறு. ஆக, ஒரு நூலை உண்மையிலேயே புரிந்து கொள்ள வேண்டுமென்றால், அதன் வரலாற்றை, அன்றைய சூழ்நிலைகளை தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான், அந்த நூலின் உண்மையான ஆன்மாவை... அதை எழுதியவரின் உண்மையான ஆன்மாவை உணர முடியும். அப்படியின்றி, அதை பலவழிகளில் அவரவருக்கு ஏற்றபடி மாற்றி, திரித்து புரிந்து கொள்ள விழைவது, அந்த நூலின்...அதை எழுதியவரின் ஆன்மாவை சாகடிப்பது போல் அல்லவா?

முயல்: கால கட்டத்திற்கேற்ப மாற்றி... அவரவர் பார்வைக்கேற்ப மாற்றி அர்த்தம் காணுவதால் தான் அவை ஏதோ ஒருவிதத்தில் இன்றும் வாழ்கின்றன. அது உண்மையான ஆன்மாவா, இல்லையா என்பது வேறு விசயம். அதை உண்மையாக தேடும் போது, அவை இல்லாமல் போகலாம்.

http://icortext.blogspot.com/2011/01/blog-post_31.html

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 03, 2011 12:11 pm

பதிவு மிக அருமை தங்களை பற்றி அறிமுகம் தாருங்கள்
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



cortext
cortext
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 03/02/2011

Postcortext Fri Feb 04, 2011 7:46 am

கருத்திற்கு மிக்க நன்றி SK!
என் அறிமுகம்:
http://icortext.blogspot.com/p/blog-page.html

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக