Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள்
+21
guruprasath
eegaraiviswa
Aathira
அப்துல்
இளமாறன்
RAJESH KANNAN.R
velupandi
தேனி சூர்யாபாஸ்கரன்
arsad
அருண்
பிளேடு பக்கிரி
திவா
விஜயராகவன்.
நியாஸ் அஷ்ரஃப்
ஸ்ரீஜா
அகீல்
சிவா
ஹாசிம்
jdsingh26
SK
sathikdm
25 posters
Page 7 of 15
Page 7 of 15 • 1 ... 6, 7, 8 ... 11 ... 15
உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள்
First topic message reminder :
இங்கு ஏழு வித்தியாசமான அலைவரிசைகளில் உலகக்கோப்பை மற்றும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் நேரடியாக ஒளிபரப்பாகும்.அதோடு இங்கு அப்போது நடக்கும் ஆட்டம் பற்றி கலந்துரையாடும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.தயவு செய்து இந்த பக்கத்தின் இணைப்பை உங்களது அனைத்து நண்பர்களுக்கும் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.மற்றும் தாங்களும் புக்மார்க் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
இங்கு ஏழு வித்தியாசமான அலைவரிசைகளில் உலகக்கோப்பை மற்றும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் நேரடியாக ஒளிபரப்பாகும்.அதோடு இங்கு அப்போது நடக்கும் ஆட்டம் பற்றி கலந்துரையாடும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.தயவு செய்து இந்த பக்கத்தின் இணைப்பை உங்களது அனைத்து நண்பர்களுக்கும் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.மற்றும் தாங்களும் புக்மார்க் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
Last edited by sathikdm on Sun Feb 20, 2011 7:47 pm; edited 1 time in total
Re: உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள்
இளமாறன் wrote:இளமாறன் wrote:Goto Our Popular Online Tlelevision Wepsite Now
இதில் ஏதோ எழுத்து பிழை உள்ளது போல இருக்கே
"television website"
எழுத்துப் பிழையா? நான் ஒளிபரப்பில் தவறு என நினைத்தேன்..
இது ஏற்கனவே இவரது தளத்தில் உள்ள எழுத்துப்பிழையைச் சுட்டிக் காட்டியும் இவர் மாற்றவில்லை. அதனால் இந்த முறை நானும் கண்டுகொள்ள வில்லை!
இளா கூறியுள்ளாதுதானே சரி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள்
இன்று இந்திய நேரம் மாலை மணி 5-க்கு இலங்கை Vs கென்யா..!!!
இலங்கையின் வெற்றி நிச்சயம்!
இலங்கையின் வெற்றி நிச்சயம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள்
எப்படி வெற்றி நிச்சயம்னு சொல்றீங்க ?
eegaraiviswa- இளையநிலா
- பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011
Re: உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள்
eegaraiviswa wrote:எப்படி வெற்றி நிச்சயம்னு சொல்றீங்க ?
இதுவரை நிகழ்ந்த ஆட்டங்களின் அடிப்படையில் எந்த அணி பலாமகவும், எந்த அணி பலவீனமாகவும் உள்ளது என்பதைக் கணித்துக் கூறினேன் மாப்ளை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள்
பெங்களூரு: இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் "மெகா' இலக்கை எட்டிய போதும், இந்தியா அணி அநியாயமாக வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டது. பவுலிங் மற்றும் பீல்டிங்கில் சொதப்பியதால், போட்டி வீணாக "டை' ஆனது. இது இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று முன் தினம் பெங்களூருவில் நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி, சச்சின் சதம் கைகொடுக்க, 338 ரன்கள் குவித்தது. இதையடுத்து இங்கிலாந்தை மிக எளிதாக வீழ்த்திவிடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், ஸ்டிராஸ் சதம் அடிக்க, இங்கிலாந்தும் 338 ரன்கள் எடுக்க, போட்டி "டை' ஆனது.
இப்போட்டியில் ஒட்டுமொத்தமாக 676 ரன்கள், 18 விக்கெட்டுகள் வீழ்ந்தன. தவிர, இரு வீரர்கள் சதம் அடித்தது போன்றவை ரசிக்கும்படியாக இருந்தது. ஆனால், வெற்றி வாய்ப்பை நழுவிதை தான் சாமான்ய இந்திய ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முதல் லீக் போட்டியில் சாதாரண வங்கதேச அணி, இந்தியாவுக்கு எதிராக 280 ரன்கள் எடுத்தது. அப்போதே நமது பவுலர்கள் சுதாரித்துக் கொள்ளவில்லை. இம்முறை உலகின் "நம்பர்-2' அணியான இந்தியாவுக்கு எதிராக, ரேங்கிங் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ள இங்கிலாந்து 338 ரன்கள் எடுத்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற வலிமையான அணிகளை எப்படி நாம் சமாளிக்க முடியும்.
ஜாகிர் கானை தவிர்த்து மற்றவர்களது பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. பீல்டிங்கும் படுமோசமாக உள்ளது. ஸ்டிராஸ் கொடுத்த "கேட்ச்சை' ஹர்பஜன் நழுவிட்டார். அப்போது ஸ்டிராஸ் 22 ரன்கள் தான் எடுத்திருந்தார். இது போன்ற தவறுகள் தொடராமல் இருக்க அதிரடி திட்டம் வகுக்க வேண்டும். முக்கியமான கட்டத்தில் இயான் பெல்லுக்கு அவுட் தர மறுக்கப்பட்டது. அம்பயர் தீர்ப்பை எதிர்த்து மறுபரீசிலனை செய்தும் பலன் கிடைக்கவில்லை. இதுவும் வெற்றிக்கு தடையாக அமைந்தது.
இது குறித்து இந்திய கேப்டன் தோனி அளித்த பேட்டி: இங்கிலாந்து வீரர் இயான் பெல்லுக்கு அம்பயர் அவுட் தரவில்லை என்று தான், யு.டி.ஆர்.எஸ்., மூலம் அவுட் கேட்டோம். ஆனால் தொழில்நுட்பமும் தவறு செய்கிறது. "ஹாக் ஐ' தொழில் <நுட்பத்தில் பந்து "ஸ்டம்சை' தாக்குகிறது என்றால், அப்புறம் எதற்கு அவுட் தர மறுத்தார்கள் என்று தான் தெரியவில்லை. அடுத்த போட்டியில் தொழில் நுட்பமோ, அம்பயர்களே யாராவது சரியான முறையில் அவுட் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
முன்னேற்றம் தேவை:
இந்த "டை' ஒன்றை எங்களுக்கு நன்றாக உணர்த்தியுள்ளது. அதாவது இந்திய அணி பல்வேறு திறமை பெற்றிருந்தாலும், பீல்டிங்கில் இன்னும் முன்னேறவில்லை. ஒருசிலர் மெதுவாக செயல்படுகின்றனர். இருப்பினும், பவுலிங்கிலும் அதிக முன்னேற்றம் தேவைப்படுகிறது. இதற்கான திறமை நம்மிடம் உள்ளது.
வேகப்பந்து வீச்சாளர்கள் பவுலிங் செய்யும் போது, அவர்களே பீல்டிங் வியூகம் அமைக்க விட்டு விடுவேன். ஒருவேளை அவர்கள் மறுத்தால், நான் பீல்டிங் அமைப்பேன். ஆஷிஸ் நெஹ்ரா இன்னும் முழுமையாக தயாராகவில்லை. அதனால் தான் இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்கவில்லை. அதேநேரம் பேட்ஸ்மேன் அல்லது பவுலர் என யாராக இருந்தாலும், களத்தில் இறங்கி சிறப்பாக விளையாடாதவரை, 100 சதவீத உடற்தகுதி உள்ளது என முன்கூட்டியே கணிக்க முடியாது.
சிறந்த முடிவு:
மற்றபடி அணியில் சிறப்பான அனுபவ வீரர்கள் பலர் உள்ள நிலையில், அணியின் வெற்றிக்காக சிறந்த முடிவுகளை, எடுக்க முயற்சித்துக்கொண்டு தான் உள்ளோம். கடைசி நேரத்தில் 49 வது ஓவரை வீசுவதற்கு சேவக், யுவராஜ் இருந்தாலும், எப்போது "ஸ்பெஷலிஸ்ட்' பவுலருக்குத் தான் முன்னுரிமை கொடுப்பேன். இதனால் தான் பியுஸ் சாவ்லாவை வீசச் செய்தேன்.
ஏமாற்றம் இல்லை:
போட்டியின் முடிவு குறித்து ஏமாற்றம் அடையவில்லை. இந்த முடிவை எதிர்பார்க்கவும் இல்லை. ஏனெனில் இரு அணிகளுக்குமே ஒரு கட்டத்தில் தோற்கும் நிலை இருந்தது. பின் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டது. மொத்தத்தில் போட்டி "திரில்லிங்காக' இருந்தது. இருந்தாலும், இங்கிலாந்து அணியினரின் பேட்டிங்கை பாராட்டித் தான் ஆகவேண்டும்.
இவ்வாறு தோனி கூறினார்.
---
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று முன் தினம் பெங்களூருவில் நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி, சச்சின் சதம் கைகொடுக்க, 338 ரன்கள் குவித்தது. இதையடுத்து இங்கிலாந்தை மிக எளிதாக வீழ்த்திவிடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், ஸ்டிராஸ் சதம் அடிக்க, இங்கிலாந்தும் 338 ரன்கள் எடுக்க, போட்டி "டை' ஆனது.
இப்போட்டியில் ஒட்டுமொத்தமாக 676 ரன்கள், 18 விக்கெட்டுகள் வீழ்ந்தன. தவிர, இரு வீரர்கள் சதம் அடித்தது போன்றவை ரசிக்கும்படியாக இருந்தது. ஆனால், வெற்றி வாய்ப்பை நழுவிதை தான் சாமான்ய இந்திய ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முதல் லீக் போட்டியில் சாதாரண வங்கதேச அணி, இந்தியாவுக்கு எதிராக 280 ரன்கள் எடுத்தது. அப்போதே நமது பவுலர்கள் சுதாரித்துக் கொள்ளவில்லை. இம்முறை உலகின் "நம்பர்-2' அணியான இந்தியாவுக்கு எதிராக, ரேங்கிங் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ள இங்கிலாந்து 338 ரன்கள் எடுத்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற வலிமையான அணிகளை எப்படி நாம் சமாளிக்க முடியும்.
ஜாகிர் கானை தவிர்த்து மற்றவர்களது பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. பீல்டிங்கும் படுமோசமாக உள்ளது. ஸ்டிராஸ் கொடுத்த "கேட்ச்சை' ஹர்பஜன் நழுவிட்டார். அப்போது ஸ்டிராஸ் 22 ரன்கள் தான் எடுத்திருந்தார். இது போன்ற தவறுகள் தொடராமல் இருக்க அதிரடி திட்டம் வகுக்க வேண்டும். முக்கியமான கட்டத்தில் இயான் பெல்லுக்கு அவுட் தர மறுக்கப்பட்டது. அம்பயர் தீர்ப்பை எதிர்த்து மறுபரீசிலனை செய்தும் பலன் கிடைக்கவில்லை. இதுவும் வெற்றிக்கு தடையாக அமைந்தது.
இது குறித்து இந்திய கேப்டன் தோனி அளித்த பேட்டி: இங்கிலாந்து வீரர் இயான் பெல்லுக்கு அம்பயர் அவுட் தரவில்லை என்று தான், யு.டி.ஆர்.எஸ்., மூலம் அவுட் கேட்டோம். ஆனால் தொழில்நுட்பமும் தவறு செய்கிறது. "ஹாக் ஐ' தொழில் <நுட்பத்தில் பந்து "ஸ்டம்சை' தாக்குகிறது என்றால், அப்புறம் எதற்கு அவுட் தர மறுத்தார்கள் என்று தான் தெரியவில்லை. அடுத்த போட்டியில் தொழில் நுட்பமோ, அம்பயர்களே யாராவது சரியான முறையில் அவுட் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
முன்னேற்றம் தேவை:
இந்த "டை' ஒன்றை எங்களுக்கு நன்றாக உணர்த்தியுள்ளது. அதாவது இந்திய அணி பல்வேறு திறமை பெற்றிருந்தாலும், பீல்டிங்கில் இன்னும் முன்னேறவில்லை. ஒருசிலர் மெதுவாக செயல்படுகின்றனர். இருப்பினும், பவுலிங்கிலும் அதிக முன்னேற்றம் தேவைப்படுகிறது. இதற்கான திறமை நம்மிடம் உள்ளது.
வேகப்பந்து வீச்சாளர்கள் பவுலிங் செய்யும் போது, அவர்களே பீல்டிங் வியூகம் அமைக்க விட்டு விடுவேன். ஒருவேளை அவர்கள் மறுத்தால், நான் பீல்டிங் அமைப்பேன். ஆஷிஸ் நெஹ்ரா இன்னும் முழுமையாக தயாராகவில்லை. அதனால் தான் இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்கவில்லை. அதேநேரம் பேட்ஸ்மேன் அல்லது பவுலர் என யாராக இருந்தாலும், களத்தில் இறங்கி சிறப்பாக விளையாடாதவரை, 100 சதவீத உடற்தகுதி உள்ளது என முன்கூட்டியே கணிக்க முடியாது.
சிறந்த முடிவு:
மற்றபடி அணியில் சிறப்பான அனுபவ வீரர்கள் பலர் உள்ள நிலையில், அணியின் வெற்றிக்காக சிறந்த முடிவுகளை, எடுக்க முயற்சித்துக்கொண்டு தான் உள்ளோம். கடைசி நேரத்தில் 49 வது ஓவரை வீசுவதற்கு சேவக், யுவராஜ் இருந்தாலும், எப்போது "ஸ்பெஷலிஸ்ட்' பவுலருக்குத் தான் முன்னுரிமை கொடுப்பேன். இதனால் தான் பியுஸ் சாவ்லாவை வீசச் செய்தேன்.
ஏமாற்றம் இல்லை:
போட்டியின் முடிவு குறித்து ஏமாற்றம் அடையவில்லை. இந்த முடிவை எதிர்பார்க்கவும் இல்லை. ஏனெனில் இரு அணிகளுக்குமே ஒரு கட்டத்தில் தோற்கும் நிலை இருந்தது. பின் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டது. மொத்தத்தில் போட்டி "திரில்லிங்காக' இருந்தது. இருந்தாலும், இங்கிலாந்து அணியினரின் பேட்டிங்கை பாராட்டித் தான் ஆகவேண்டும்.
இவ்வாறு தோனி கூறினார்.
---
eegaraiviswa- இளையநிலா
- பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011
Re: உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள்
இந்தக் கட்டுரை முற்றிலும் உண்மைதான்!
எனக்கும் சந்தேகம் உள்ளது, இந்திய அணி பலமாக உள்ளதா அல்லது பணபலத்தால் பலமான அணியாக காட்டப்படுகிறதா?
பேட்டிங்கில் இந்திய அணிக்கு நிகராக இல்லை என்றே கூற வேண்டும். அதுவும் சில நேரத்தில் சரிந்துவிடுகிறது!
பவுலிங் மற்றும் பீல்டிங்கில் இந்திய அணி மிகவும் பலவீனமாக உள்ளது. இலங்கையின் பீல்டிங் மிகவும் துடிப்பாக உள்ளது! அது இன்று நிரூபிக்கப்படும் என்று நம்புகிறேன்!
இந்தியாவிற்கு உலகக் கோப்பை என்பது கனவாகிவிடுமோ என்ற எண்ணம் அனைவருக்கும் தோன்றியுள்ளது!
எனக்கும் சந்தேகம் உள்ளது, இந்திய அணி பலமாக உள்ளதா அல்லது பணபலத்தால் பலமான அணியாக காட்டப்படுகிறதா?
பேட்டிங்கில் இந்திய அணிக்கு நிகராக இல்லை என்றே கூற வேண்டும். அதுவும் சில நேரத்தில் சரிந்துவிடுகிறது!
பவுலிங் மற்றும் பீல்டிங்கில் இந்திய அணி மிகவும் பலவீனமாக உள்ளது. இலங்கையின் பீல்டிங் மிகவும் துடிப்பாக உள்ளது! அது இன்று நிரூபிக்கப்படும் என்று நம்புகிறேன்!
இந்தியாவிற்கு உலகக் கோப்பை என்பது கனவாகிவிடுமோ என்ற எண்ணம் அனைவருக்கும் தோன்றியுள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள்
உலக அரங்கில் கால்பந்துக்கு அடுத்து அதிக ரசிகர்களை கொண்டது கிரிக்கெட் தான்.விரைவில் கால்பந்துக்கு நிகராக கிரிக்கெட்டுக்கு ரசிகர் பட்டாளம்விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கியகாரணம்"டுவென்டி-20' போட்டிகள் தான். இது வளமான வளர்ச்சிஎன்றாலும், மறுபுறம் பாரம்பரியமிக்க டெஸ்ட், ஒரு நாள் போட்டிகள் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டுள்ளன. எதிர்காலத்தில் "டுவென்டி-20' போட்டிகள் மட்டுமே இருக்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பல்வேறு பரிமாணம்
கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ் ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு பரிமாணங்கள் இல்லை. ஆனால் கிரிக்கெட்டில் மட்டும் டெஸ்ட்,ஒரு நாள் மற்றும்"டுவென்டி-20' என மூன்று பரிமாணங் கள் காணப்படுகிறது. இதில் ஒன்று எழுச்சி பெற்றால், மற்றொன்று வீழ்ச்சி அடைய துவங்குகிறது. "டுவென்டி-20' போட்டிகளின் அசுர வளர்ச்சியின் காரணமாக, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் தொய்வை எதிர் கொண் டுள்ளன.
காயம்காரணம்
கிரிக் கெட் என் றாலே டெஸ்ட் போட்டிகள் என்ற காலம் தற் போது மலையேறி விட்டது. வீரர்களின் உண்மையான திறமையை வெளிக் கொணரும் ஆற்றல் டெஸ்ட் போட்டிகளுக்கு உண்டு. ஓவர்வரையறை இல்லாததால், பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் திறமையை நிரூபிக்க அதிக காலம் எடுத்துக் கொள்வர். இதன் மூலம் பெரும்பாலான வீரர்கள் அடிக்கடி காயத்துக்கு உள்ளாயினர். அதற்குப் பின் வந்த ஒரு நாள் போட்டிகளில், 50 ஓவர்கள் என்ற வரையறை இருந்தது.தற்போது "டுவென்டி-20' போட்டிகளில் 20 ஓவர்மட்டுமே என்பதால், பவுலர்கள் தலா 4 ஓவர்கள் மட்டுமேவீச வேண்டிய நிலை ஏற்பட்டது. தவிர, இவ்வகைப் போட்டிகளில் விளையாடுவதால் வீரர்கள்காயத்திலிருந்து தப்ப முடிகிறது.
பணம் முக்கியம்
இதன் காரணமாக பெரும்பாலான வீரர்கள் ஒரு நாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளில் மட்டுமே பங்கேற்க விரும்புகின்றனர். சமீபத்தில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பிளின்டாப், டெஸ்ட் போட்டிகளிலிருந்து மட்டும் ஓய்வு பெற்றார். இதற்கு முக்கிய காரணம் காயம் தான். காயம் தொடர்பான பிரச்னை ஒரு புறம் இருக்க, மற்றொரு முக்கிய காரணம் பணம். ஒரு டெஸ்ட் போட்டிக்கு வீரர்கள் பெறும் சம்பளம் சுமார் 2 லட்சம் ரூபாய். ஒரு நாள் போட்டிக்கு 1.5 லட்சம் ரூபாய். ஆனால் இந்தியன் பரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) உள்ளிட்ட "டுவென்டி-20' போட்டிகளில் வீரர்கள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்படுகின்றனர். இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்களையும் புறக்கணித்து விட்டு, இவ்வகைப் போட்டிகளில் பங்கேற்க வீரர்கள் விரும்புகின்றனர். கடந்த 2008 ம் ஆண்டு இந்தியாவில் நடந்த முதல் ஐ.பி.எல்., தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, தான் அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் ரூ. 1.5 லட்சம் ரூபாய் பெற்றார்.
நன்மை உண்டு
ஐ.பி.எல்., என்ற ஒரு அமைப்பு துவங்கியதற்கே, டெஸ்ட் போட்டிகள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் இங்கிலாந்து பிரிமியர் லீக் (இ.பி.எல்.,), அமெரிக்கன் பிரிமியர் லீக் (ஏ.பி.எல்.,) அமைப்புகள் துவங்கப்பட உள்ளன. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகள் கூடுதலாக பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது.
எதிர்காலம்
பணம் மற்றும் காயத்தின் அடிப்படையில் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர். இதே கருத்தை சமீபத்தில் இந்திய அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டனும் தெரிவித்துள்ளார். வீரர்களின் மனநிலை மற்றுமின்றி ரசிகர்களின் மனநிலையும் மாறத் துவங்கி உள்ளது. டெஸ்ட் போட்டிகளை பார்க்க ரசிகர்கள் தற்போது விரும்புவதில்லை. ஒரு போட்டியின் முடிவுக்கு ஐந்து நாட்கள் காத்திருக்க அவர்கள் விரும்பவில்லை. 3 மணி நேரத்தில் முடிவு கிடைக்கும் டுவென்டி-20' போட்டிகள் ரசிகர்களை பெருமளவு கவர்ந்து விட்டது. இதே நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் "டுவென்டி-20' போட்டிகள் மட்டுமே நிலைத்து இருக்கும். பாரம்பரியமிக்க டெஸ்ட் போட்டிகள் பெயரளவுக்கு மட்டுமே இருக்கும்
பல்வேறு பரிமாணம்
கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ் ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு பரிமாணங்கள் இல்லை. ஆனால் கிரிக்கெட்டில் மட்டும் டெஸ்ட்,ஒரு நாள் மற்றும்"டுவென்டி-20' என மூன்று பரிமாணங் கள் காணப்படுகிறது. இதில் ஒன்று எழுச்சி பெற்றால், மற்றொன்று வீழ்ச்சி அடைய துவங்குகிறது. "டுவென்டி-20' போட்டிகளின் அசுர வளர்ச்சியின் காரணமாக, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் தொய்வை எதிர் கொண் டுள்ளன.
காயம்காரணம்
கிரிக் கெட் என் றாலே டெஸ்ட் போட்டிகள் என்ற காலம் தற் போது மலையேறி விட்டது. வீரர்களின் உண்மையான திறமையை வெளிக் கொணரும் ஆற்றல் டெஸ்ட் போட்டிகளுக்கு உண்டு. ஓவர்வரையறை இல்லாததால், பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் திறமையை நிரூபிக்க அதிக காலம் எடுத்துக் கொள்வர். இதன் மூலம் பெரும்பாலான வீரர்கள் அடிக்கடி காயத்துக்கு உள்ளாயினர். அதற்குப் பின் வந்த ஒரு நாள் போட்டிகளில், 50 ஓவர்கள் என்ற வரையறை இருந்தது.தற்போது "டுவென்டி-20' போட்டிகளில் 20 ஓவர்மட்டுமே என்பதால், பவுலர்கள் தலா 4 ஓவர்கள் மட்டுமேவீச வேண்டிய நிலை ஏற்பட்டது. தவிர, இவ்வகைப் போட்டிகளில் விளையாடுவதால் வீரர்கள்காயத்திலிருந்து தப்ப முடிகிறது.
பணம் முக்கியம்
இதன் காரணமாக பெரும்பாலான வீரர்கள் ஒரு நாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளில் மட்டுமே பங்கேற்க விரும்புகின்றனர். சமீபத்தில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பிளின்டாப், டெஸ்ட் போட்டிகளிலிருந்து மட்டும் ஓய்வு பெற்றார். இதற்கு முக்கிய காரணம் காயம் தான். காயம் தொடர்பான பிரச்னை ஒரு புறம் இருக்க, மற்றொரு முக்கிய காரணம் பணம். ஒரு டெஸ்ட் போட்டிக்கு வீரர்கள் பெறும் சம்பளம் சுமார் 2 லட்சம் ரூபாய். ஒரு நாள் போட்டிக்கு 1.5 லட்சம் ரூபாய். ஆனால் இந்தியன் பரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) உள்ளிட்ட "டுவென்டி-20' போட்டிகளில் வீரர்கள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்படுகின்றனர். இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்களையும் புறக்கணித்து விட்டு, இவ்வகைப் போட்டிகளில் பங்கேற்க வீரர்கள் விரும்புகின்றனர். கடந்த 2008 ம் ஆண்டு இந்தியாவில் நடந்த முதல் ஐ.பி.எல்., தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, தான் அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் ரூ. 1.5 லட்சம் ரூபாய் பெற்றார்.
நன்மை உண்டு
ஐ.பி.எல்., என்ற ஒரு அமைப்பு துவங்கியதற்கே, டெஸ்ட் போட்டிகள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் இங்கிலாந்து பிரிமியர் லீக் (இ.பி.எல்.,), அமெரிக்கன் பிரிமியர் லீக் (ஏ.பி.எல்.,) அமைப்புகள் துவங்கப்பட உள்ளன. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகள் கூடுதலாக பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது.
எதிர்காலம்
பணம் மற்றும் காயத்தின் அடிப்படையில் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர். இதே கருத்தை சமீபத்தில் இந்திய அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டனும் தெரிவித்துள்ளார். வீரர்களின் மனநிலை மற்றுமின்றி ரசிகர்களின் மனநிலையும் மாறத் துவங்கி உள்ளது. டெஸ்ட் போட்டிகளை பார்க்க ரசிகர்கள் தற்போது விரும்புவதில்லை. ஒரு போட்டியின் முடிவுக்கு ஐந்து நாட்கள் காத்திருக்க அவர்கள் விரும்பவில்லை. 3 மணி நேரத்தில் முடிவு கிடைக்கும் டுவென்டி-20' போட்டிகள் ரசிகர்களை பெருமளவு கவர்ந்து விட்டது. இதே நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் "டுவென்டி-20' போட்டிகள் மட்டுமே நிலைத்து இருக்கும். பாரம்பரியமிக்க டெஸ்ட் போட்டிகள் பெயரளவுக்கு மட்டுமே இருக்கும்
eegaraiviswa- இளையநிலா
- பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011
Re: உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள்
சிவா wrote:இந்தக் கட்டுரை முற்றிலும் உண்மைதான்!
எனக்கும் சந்தேகம் உள்ளது, இந்திய அணி பலமாக உள்ளதா அல்லது பணபலத்தால் பலமான அணியாக காட்டப்படுகிறதா?
பேட்டிங்கில் இந்திய அணிக்கு நிகராக இல்லை என்றே கூற வேண்டும். அதுவும் சில நேரத்தில் சரிந்துவிடுகிறது!
பவுலிங் மற்றும் பீல்டிங்கில் இந்திய அணி மிகவும் பலவீனமாக உள்ளது. இலங்கையின் பீல்டிங் மிகவும் துடிப்பாக உள்ளது! அது இன்று நிரூபிக்கப்படும் என்று நம்புகிறேன்!
இந்தியாவிற்கு உலகக் கோப்பை என்பது கனவாகிவிடுமோ என்ற எண்ணம் அனைவருக்கும் தோன்றியுள்ளது!
அது கனவு தானே தல.. அப்புறம் என்ன
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள்
இந்த நிலைமையில் சென்றாள் கால் இறுதி சுற்றில் முதலில் வெளியேறிவிடும் நிலைமை உள்ளது. அடுத்த போட்டியில் என்ன செய்ய இருக்கிறார்கள் என்று பார்ப்போம்.
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள்
பெங்களூரு: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், இந்திய வெற்றி பறிபோனதற்கு கேப்டன் தோனியின் தவறும் முக்கிய காரணம். பேட்டில், பந்து பட்ட சத்தத்தை கவனிக்க தவறிய இவர், இரண்டு முறை ஸ்டிராசுக்கு எதிராக "அவுட்' கேட்கவில்லையாம்.
பெங்களூருவில் இந்தியா, இங்கிலாந்து மோதிய உலக கோப்பை லீக் போட்டி நடந்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 338 ரன்கள் எடுத்தது. பின் கேப்டன் ஸ்டிராஸ் 158 ரன்கள் விளாச, இங்கிலாந்தும் 338 ரன்கள் எடுக்க, போட்டி "டை' ஆனது. இதையடுத்து, இந்திய அணியின் வெற்றிக் கனவு கலைந்தது. இதற்கு மோசமான பீல்டிங், பவுலிங் காரணம். தவிர, கேப்டன் தோனி அப்பீல் செய்யாததும் ஒரு காரணம் என்பது அம்பலமாகியுள்ளது.
இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜாகிர் கான் வீசிய பந்தை அடித்தார். அதனை கீப்பராக இருந்த தோனி பிடித்தார். ஆனால் "அப்பீல்' செய்ய தவறினார். "ரீப்ளேவில்' பந்து, பேட்டில் பட்டுச் சென்றது தெரிய வந்தது. தோனியை தவிர, ஜாகிர் கான் மற்றும் பேட்ஸ்மேன்களுக்கு மிக அருகில் இருந்த இந்திய "பீல்டர்களும்' அப்பீல் செய்யாதது ஆச்சரியமான விஷயம்.
பின் ஸ்டிராஸ் 111 ரன்கள் எடுத்திருந்த போது, மீண்டும் ஜாகிர் பந்தை அடிக்க, தோனி பிடித்தார். இம்முறையும் அம்பயரிடம் "அவுட்' கேட்கவில்லை. இப்படி தோனி உள்ளிட்ட நமது வீரர்களுக்கு சரியாக காது கேட்காததை பயன்படுத்திய ஸ்டிராஸ் 158 ரன்கள் விளாசி, அணியை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்றார்.
இதனை பார்த்த "டிவி' வர்ணனையாளர்கள் அரங்கில் இருந்த ரசிகர்கள் எழுப்பிய இரைச்சல் காரணமாக தான் தோனி உள்ளிட்டோர் பேட்டில், பந்து பட்ட சத்தத்தை சரியாக கேட்க முடியவில்லை என அச்சம் தெரிவித்தனர். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால், இந்திய மைதானங்கள் எப்போதுமே நிரம்பி வழியும். ரசிகர்களும் கோஷம் எழுப்புவர். இது இந்திய வீரர்களுக்கு பழக்கப்பட்ட ஒன்று. அப்படியிருக்கையில் தோனி உள்ளிட்ட நமது வீரர்களுக்கு சரியாக கேட்க தவறியது சரி தானா
eegaraiviswa- இளையநிலா
- பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011
Page 7 of 15 • 1 ... 6, 7, 8 ... 11 ... 15
Similar topics
» காணொளி வடிவில் உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள்!
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
» கபடி விளையாட்டில் பெண்களுக்கான முதல் உலகக் கோப்பை போட்டிகளை இந்திய மகளிர் கபடி அணி வென்றுள்ளது.
» உலகக் கோப்பை யாருக்கு? - கணிப்பு!!
» உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
» கபடி விளையாட்டில் பெண்களுக்கான முதல் உலகக் கோப்பை போட்டிகளை இந்திய மகளிர் கபடி அணி வென்றுள்ளது.
» உலகக் கோப்பை யாருக்கு? - கணிப்பு!!
» உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள்
Page 7 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|