புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_m10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10 
1 Post - 50%
heezulia
கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_m10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_m10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10 
284 Posts - 45%
heezulia
கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_m10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_m10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_m10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_m10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10 
20 Posts - 3%
prajai
கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_m10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_m10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_m10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_m10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_m10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரை மேல் பிறக்க வைத்தான்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Feb 02, 2011 2:25 pm

தமிழக மீனவர்களை இனிமேல் சுடமாட்டோம் என்று இலங்கை உறுதி கூறியிருக்கிறது. 2008-ம் ஆண்டு வரை மீனவர்கள் சுடப்பட்ட போது விடுதலைப்புலிகளுக்குத் தேவையான பொருட்களைக் கடத்துகிறார்கள், அதனால் சுட்டோம் என்றார்கள். வருத்தப்பட்டோம். பிறகு எங்களுக்குப் பயந்து உதவி செய்யாத மீனவர்களை புலிகளே சுட்டுக் கொல்கிறார்கள் என்றார்கள். பேசாமல் இருந்தோம். பின்னர், போரில் புலிகள் அழிக்கப்பட்டனர் என்று பறைசாற்றிய பின்பும் சுட்டுக் கொல்கிறார்கள். மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்புகிறோம்.

தமிழக மீனவர்கள் ஒவ்வொருமுறை சுடப்பட்டபோதும் மத்திய அரசின் மென்மையான கண்டிப்பும், கடிதம், தந்தி மட்டுமே அனுப்பும் தமிழக அரசின் நடவடிக்கைகளும் சனவரி-12ம் தேதியும், சனவரி 22ம் தேதியும் நடந்த படுகொலைச் சம்பவங்களின் பின்பு மாறியிருக்கிறது. இருமுறையும் சற்றே வேகம் காட்டியிருக்கும் மத்திய, மாநில அரசுகளைப் போன்று இலங்கை அரசும் துரிதமாகச் செயல்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்வுகளில் கவனிக்க வேண்டியது 3 விடயங்கள். முதலில், இம்முறை மீனவர் செயக்குமார் என்பவர் சுடப்படவில்லை. கயிற்றால் கழுத்து இறுக்கிக் கொல்லப்பட்டிருக்கிறார். அதாவது தெரியாமலோ அல்லது தவறுதலாகவோ சுடப்படவில்லை என்பது தெளிவாகிறது. இரண்டாவது, சனவரி 12 அன்று மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட போது இலங்கைத் தூதரை அழைத்துக் கண்டனம் தெரிவித்த பின்னும் கவனத்தில் கொள்ளாமல் மீண்டும் படுகொலை செய்ததற்கு மத்திய அரசு மீண்டும் கடும்கண்டனம் தெரிவித்துள்ளது(எச்சரிக்கை அல்ல்!). மூன்றாவது, இலங்கை அரசு இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம் மூலம் இனிமேல் சுடமாட்டோம் என உறுதி அளித்திருக்கிறது. அதாவது ‘இதுவரை சுட்டது நாங்கதான்’ என்பதை எங்கப்பன் குதருக்குள் இல்லை என்பதைப்போல ஒத்துக்கொண்டிருக்கிறது.

மீனவர் கொல்லப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள இலங்கை மகாபோதி சங்கத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிலர் காயமடைந்தது குறித்து அரசு தலைமைச் செயலரிடம் மேற்கண்ட உறுதியைக் கூறியிருக்கிறார் இலங்கைத் தூதர்.

முதலில் ஒரு மீனவர் கொல்லப்படுகிறார். பிறகு ஒரு கும்பல் இலங்கை சங்கத்தின்மீது தாக்குதல் நடத்துகிறது. ஆனால், தூதரோ தாக்குதல் நடத்தப்பட்டதை முதன்மைப்படுத்தி மாநில அரசைச் சந்திக்கிறார். ஒரு தாக்குதலுக்கே இலங்கை அரசு தூதுவரை அனுப்பி விளக்கம் கேட்கிறது. ஆனால், 400க்கும் மேலான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டபோதும் மத்திய அரசு எடுத்த உறுதியான நடவடிக்கை என்ன என்பதுதான் தெரியவில்லை. எப்படிச் சொன்னாலும் இலங்கையில் யாரும் கேட்கமாட்டார்கள் என்று மென்மையான கண்டிப்புடன் நிறுத்திவிட்டார்கள் போலும்!

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடாது என்று இலங்கை கடற்படையினரை அறிவுறுத்தியிருக்கிறோம் என்கிறார் இலங்கைத் தூதர். இலங்கைக் கடற்படையினரும் சுடவில்லை, அங்கு இல்லாத புலிகளும் சுட வாய்ப்பில்லை. அப்படியெனில் யார் இந்தப் படுகொலைகளைச் செய்திருப்பார்கள் என்பது விசாரணையின் முடிவில்தான் தெரியவரும் என்று மூடி மறைக்கப் பார்க்கிறார் அவர்.

கடற்படையும் அல்ல, புலிகளும் அல்ல என்றால் அப்பகுதியில் வேறு நாடு ஏதாவது கப்பலில் ரோந்து சுற்றுகிறதா? அப்படியே இருந்தாலும் அது இந்தியக் கடர்படைக்குத் தெரியாதா? அல்லது சோமாலியக் கடற்கொள்ளையர்கள் யாரேனும் வழி தவறி வந்துவிட்டார்களா? அல்லது சீன வீரர்களும் இலங்கைக் கடற்படையுடன் வருகிறார்கள் என்று சில மாதங்களுக்கு முன் மீனவர்கள் கூறியதாக ஊடகங்களில் செய்தி வந்ததே, அவர்கள் செய்த வேலையா?

கடந்த காலங்களிலும் மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் கடும் கண்டனம் தெரிவிக்காத இந்திய அரசு இம்முறை தெரிவித்திருக்கிறது. அதே போல் எப்போதும் வராத இலங்கைத் தூதர் இப்போது வந்து விளக்கம் தருகிறார் என்றால் அதற்கு காரணம் என்ன என்பதை இந்தியத் ‘தேர்தல்’ ஆணையத்திடம்தான் கேட்கவேண்டுமோ என்னவோ!

வேதாரண்யத்தில் இருந்து சென்றவர்கள் சுற்றுலாப் பயணிகளும் அல்ல. அவர்கள் சென்றது சொகுசுக் கப்பலும் அல்ல. மீன் வலையை வீசினால்தான் பசி வலையை அறுத்தெறிய முடியும் என்று வாழும் மீனவர்கள். அவர்களுக்கு நடுக்கடலில் நடந்ததை தப்பி வந்த 2 மீனவர்களும் விரிவாகக் கூறிய பின்னரும் வந்தது நாங்கள் அல்ல, இருந்தாலும் இனி சுடமாட்டோம் என்று இலங்கை அரசு என்று இலங்கை அரசு கூரினால் அதை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது.

ஈரானியப் பெற்றோருக்குப் பிறந்த அமெரிக்கப் பத்திரிக்கை நிருபர் ரோக்சானா சபேரி ஈரானில் உளவு பார்த்ததாகக் கைது செய்யப்பட்டபோது அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் முயற்சி எடுத்ததால் அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், 2008ம் ஆண்டு இந்தியா இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி மீனவர்கள்மீது தாக்குதல் நடத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று இந்தியா கண்டனம் தெரிவித்த 10வது நாள் மீண்டும் ஓர் இந்தியக் குடிமகனை நடுக்கடலில் இலங்கை படுகொலை செய்கிறது என்றால், அதை மத்திய அரசின் மெத்தனப்போக்கு என்பதா அல்லது இலங்கை அரசின் அலட்சியம் என்பதா எனத் தெரியவில்லை. குசராத் மீனவர்களுக்கோ, மேற்குவங்க மீனவர்களுக்கோ இப்படி நடந்தால் மத்திய அரசு சும்மா இருக்குமா? என்று விரக்தி அடையும் ஒட்டுமொத்த தமிழக மக்களின்(ஒரு சில அறிவாளிகள் தவிர) உள்ளக் குமுறலையும் யார் தடுப்பது?

யூலை 2008ம் ஆண்டு இதுபோல் இராமேசுவரம் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது ‘இராமேசுவரத்தில் வருந்தத்தக்க, கண்டிக்கத்தக்க நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்ருக் கொண்டிருக்கின்றன. அதைப் பற்றி தமிழக அரசு அக்கறையோடு பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கிரது. மத்திய அரசுக்கும் தெரிவித்துக் கொண்டிருக்கிறது. ஏதாவது சுமூகமான முடிவு ஏற்பட்டாக வேண்டும். அது பிரதமர் மன்மோகன் சிங் கைகளில்தான் இருக்கிறது. இந்தப் பிரச்சனைப் பற்றி இங்கே செய்தியாளர்களிடம் ஆழமாக விவாதிக்க முடியாது. சில விடயங்களை நான் இங்கே வெளிப்படையாகச் சொல்ல விரும்பவில்லை’ என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.(9 யூலை 2008, தினமணி)

2009 யூலையில் இருந்து அதேநிலை இப்போதும் தொடர்கிறது. இப்போது முடிவு பிரதமர் கையில் மட்டுமல்ல, முதல்வர் கையிலும் உள்ளது. விரைவில் சுமூகமான முடிவு ஏற்பட்டாக வேண்டும். இல்லையெனில், கரை மேல் பிறக்க வைத்தான், எங்களைக் கண்ணீரில் மிதக்க வைத்தான் என்ற வரிகல் உண்மையாகி, மீனவர்கள் தங்கள் வாழ்வின் முடிவை நடுக்கடலில் சந்திக்கும் பேரவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக