ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?

2 posters

Go down

 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Empty தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?

Post by சிவா Wed Feb 02, 2011 8:43 am


தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் சாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா? ஜி.ராமகிருஷ்ணன்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏற்பட்டது இழப்புதான் ஊழல் அல்ல என்று மாநில முதல்வர் கருணாநிதி பேசியும், எழுதியும் வருகிறார்.திமுக தலைவர்களும் இதையே கூறி வருகிறார்கள்.

முதல்வர் தில்லிக்கு சென்றிருந்த அதே நாளில்தான் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிடம் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் குறித்து மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். அவரிடம் இவ்வாறு விசாரணை நடத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

இதே நாளில்தான் ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சிவராஜ்பட்டீல் தலைமையிலான ஒரு நபர் குழு தனது அறிக்கையை மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபிலிடம் அளித்துள்ளது.

இந்த அறிக்கையில் தவறிழைத்தவர் பட்டியலில் ஆ.ராசாவின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இவ்வளவு நடந்த பிறகும் இன்னமும் கூட திமுக, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விஷயத்தில் ஊழல் எதுவும் நடக்கவில்லை. இழப்புதான் ஏற்பட்டுள்ளது என்று கொஞ்சம்கூட கூச்சநாச்சமின்றி கூறிவருகின்றனர்.

மக்களுக்கு மானியம் வழங்குவதால் ஏற்படும் இழப்பு போன்றதுதான் இதுவும் என்று விசித்திரமான முறையில் வியாக்கியானம் செய்கின்றனர். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எத்தனை ஏழை-எளிய மக்கள் பயன்பெற்றார்கள். இல்லையே - பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் அல்லவா கொழுத்த ஆதாயம் அடைந்துள்ளனர்.

மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேட்டால் நாட்டின் கஜானாவிற்கு வந்திருக்கவேண்டிய ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மட்டும் கூறவில்லை. குறிப்பிட்ட சில நிறுவனங்கள் ஆதாயம் அடைவதற்காக பல்வேறு விதி மீறல்கள் நடந்துள்ளன என்றும் விரிவாக கூறப்பட்டுள்ளது.

முந்தைய பாஜக கூட்டணி ஆட்சிக்காலத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறையான முதலில் வருபவருக்கே முன்னுரிமை, என்ற நடைமுறைதான் 2ஜி ஒதுக்கீட்டிலும் பின்பற்றப்பட்டது என்று அப்பாவி போல ஆ. ராசா திரும்ப திரும்ப கூறிவருகிறார்.

ஏற்கனவே பின்பற்றப்பட்ட நடைமுறை தவறு என்ற நிலையில் திரும்பச் செய்வதன் மூலம் நியாயப்படுத்தி விட முடியாது என்பது ஒருபுறமிருக்க முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற முறைக்கூட 2ஜி ஒதுக்கீட்டு விஷயத்தில் சரியாக பின்பற்றப்படவில்லை என்று சிஏஜி தனது அறிக்கையில் கூறியுள்ளது.

ஏலம் விடும் தேதி குறிப்பிட்ட சில கம்பெனிகள் ஆதாயம் பெறும் வகையில் பலமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 21 நிறுவனங்கள் 232 மனுக்கள் செய்திருந்த நிலையில் தொலைதொடர்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஏலத்தேதியை மாற்றியமைத்து மெயில் அனுப்பப்பட்டுள்ளது.

ஏலத்தேதியன்று பிற்பகல் 3.30 மணிக்கு வரைவோலையை சமர்ப்பிக்க வேண்டுமென்று பிற்பகல் 2.45 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில நிறுவனங்கள் மட்டும் 2.45 மணிக்கு முன்பே வரைவோலையை எடுத்து மும்பையில் உள்ள அலுவலகத்தில் செலுத்தியுள்ளன.

இதன் மூலம் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் அல்ல, சிலர் மட்டுமே முதலில் வரும்வகையில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

சில நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்கும் வகையிலும் மற்ற நிறுவனங்களை தடுக்கும் வகையிலும் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சிஏஜி தெளிவாகக் கூறியுள்ளது. இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது மட்டுமல்ல, எவ்வாறு திட்டமிட்டு அந்த இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும் சிஏஜி தமது அறிக்கையில் கூறியுள்ளது.

செல்பேசி இணைப்புகள் பெருமளவு அதிகரித்திருந்த நிலையில், தொலை தொடர்பு கட்டமைப்பு பெருமளவு விரிவடைந்திருந்த நிலையில் 2001-ஆம் ஆண்டு விலையிலேயே 2008-ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்தது என்ற கேள்விக்கு இதுவரை தெளிவான பதில் இல்லை.

மக்களின் நலன் கருதியே இவ்வாறு செய்யப்பட்டதாக திமுக தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இவ்வாறு அடிமாட்டு விலைக்கு அலைவரிசை ஒதுக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு நயா பைசா கூட தொலைபேசி கட்டணம் குறைக்கப்படவில்லை. மாறாக குறிப்பிட்ட சில நிறுவனங்கள்தான் கோடிக்கணக்கான ரூபாயை கொள்ளையடித்துள்ளன.

சரியான விலை நிர்ணயிக்குமாறு பிரதமர் ஆ.ராசாவுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் பிரதமரின் வழிகாட்டுதல் மீறப்பட்டுள்ளது. ஆ.ராசா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் பிரதமருடனும் அன்றைய அயல்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடனும் பேசிய அடிப்படையிலேயே காரியங்கள் நடக்கின்றன என்று கூறியுள்ளார்.

அவ்வாறு ஆலோசிக்கப்பட்ட விஷயம் என்ன என்பது குறித்து பிரதமரோ, பிரணாப்முகர்ஜியோ இதுவரை எதுவும் கூறாமல் மவுனம் சாதிக்கின்றனர்.

ஆ.ராசா தலித் என்பதால் தான் இவ்வாறு பழிவாங்கப்படுகிறார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். இந்த காரணத்திற்காகத்தான் இந்தியாவின் பெருமுதலாளிகளான டாடாவும், அம்பானியும், அதிகாரத் தரகர் நீராராடியா மூலம் மீண்டும் ஆ.ராசாவை அமைச்சராக்க துடித்தார்களா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

தலித் மக்களின் பால் திமுகவின் அணுகுமுறை என்ன என்பதற்கு உத்தப்புரத்தில் ஆலய வழிபாட்டு உரிமையை மறுக்க ஆயிரக்கணக்கான போலீசாரை குவித்த சம்பவமே சாட்சியம் கூறும்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தபோது மத்திய தொலை தொடர்புத்துறை செயலாளராக இருந்த பி.ஜே.தாமசை ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையத்தின் ஆணையராக நியமித்தது மன்மோகன் சிங் அரசு. தாமஸ் ஏற்கனவே பாமாயில் இறக்குமதி ஊழலில் சிக்கியவர்.

அது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இவரது நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண அறிக்கையில் தாமஸ் மீது பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கு இருப்பது தெரியவே தெரியாது என்று ஓங்கி ஒரே போடாக போட்டது.

ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தாமஸ் மீது குற்றச்சாட்டு இருப்பது தேர்வுக்குழுவுக்கு தெரியும் என்கிறார். ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. ஊழல் செய்வதிலும் அதை மறைக்க முயல்வதிலும் இவர்களை மிஞ்ச ஆள் இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.


 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Empty Re: தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?

Post by அசோகன் Wed Feb 02, 2011 9:37 am

அய்யோ இந்த பெருசுக்கு ஒரு சாவே வராதா?தமிழின் வாழ்வில் தழைக்கவே முடியாதா?
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» ராசாவை காப்பாற்றுதன் மூலம் தலித்களை கருணாநிதி அவமானப்படுத்துகிறார்
» என்னை முதல்-அமைச்சராக்க ஜெயலலிதா விரும்பினார்: விஜயசாந்தி
» இந்திய அரசியலைக் கலக்கும் நீரா ராடியாவும், அரசியல் தொடர்புகளும்
» ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்
» மலேசியாவில் 80 முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் கண்டுபிடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum