ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதி விளையாடும் போது... (ஆன்மிகம்)

4 posters

Go down

விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Empty விதி விளையாடும் போது... (ஆன்மிகம்)

Post by சரண்.தி.வீ Thu Aug 27, 2009 10:33 am

- வைரம் ராஜகோபால்
ஞானானந்தம்


மனிதனாகப் பிறந்தவர்கள் எல்லாரும் சுகமாக வாழவே விரும்புகின்றனர். மனிதனுக்கு எதிர்காலத்தைப் பற்றி தெரிந்துகொள்ள பயன்படுவது, ஜாதகம், ஜோசியம், குறி சொல்லுதல் போன்றவை தான்.


ஒருவன், சுகமாக இருக்கும்போது, தன் வாழ்க்கை இப்படியே இருக்குமா; எதிர்காலம் எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருப்பதில்லை; எந்த ஜோசியரிடமும் போய், தன் ஜாதகத்தைக் காண்பித்து, "சார், நான் இவ்வளவு சுகமாக இருக்கிறேனே! இதற்கு என்ன காரணம்? எதிர்காலத்திலும் நான் இதே மாதிரி இருப்பேனா?' என்று கேட்பதில்லை; ஆனால், ஏதாவது சிரமம் ஏற்பட்டு,
வாழ்க்கையில் ஒரு தாழ்வு ஏற்படும்போது தான் ஜோசியரை தேடி ஓடுகிறான்.
இவர்களுக்கு ஆறுதல் அளிக்க தான், எத்தனை வகை ஜோசியம் இருக்கிறது.
சிலர் சொல்வதில், சில விஷயங்கள் சரியாக இருக்கிறது; சிலர் சொல்வதில், எதுவுமே நடப்பதில்லை. இது யாருடைய தவறு அல்லது குற்றம் என்பதைப் பற்றி விவாதிப்பதில் பிரயோஜனமில்லை. அவரவர் ஏதோ ஒருமுறையைப் பின்பற்றி ஜோசியமோ, ஆருடமோ, குறியோ சொல்கின்றனர். அது பலிப்பதும், பலிக்காததும் கேட்பவனுடைய விதியையும் பொறுத்துள்ளது.


நீதிமன்றத்தில் பெரிய வியாபாரியின் வழக்கு நடந்து கொண்டிருந்தது. வழக்கு சாதகமானால், பல லட்சங்கள் கிடைக்கும்; பாதகமானால், பல லட்சங்கள் நஷ்டமாகும். வழக்கின் தீர்ப்பும் அடுத்த வாரம் சொல்லப்படுவதாக இருந்தது!
இவருக்கு அபிமான ஜோசியர் ஒருவர் இருந்தார். அவரிடம் இதுபற்றி கேட்டார். அவரும், இவருடைய ஜாதகத்தை அலசி ஆராய்ந்து. "சார், இப்போ இருக்கிற கிரக நிலைப் பிரகாரம் உங்கள் வழக்கு தீர்ப்பு சொல்வதாயிருந்தால், உங்களுக்கு பாதகமாகவே முடியும்; இன்னும் இரண்டு மாதங்களுக்குப் பின் தீர்ப்பு வழங்குவதானால், அப்போது கிரகங்கள் சாதகமான இடங்களுக்கு வந்து விடுமாதலால், தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்...' என்றார்.

வியாபாரிக்கு என்ன செய்வதென்று தோன்றவில்லை. "அடுத்த வாரம் தீர்ப்பு ல்லிடுவாங்களே... இப்போ, என்ன செய்யலாம்?' என்று கேட்டார்.

மறுபடி இரண்டு பக்கம் கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டு, "சார், இது ஆகஸ்ட்
மாதம். வருகிற அக்டோபர் மாதம் உங்கள் வழக்கு தீர்ப்பு சொல்வதானால்,
உங்களுக்கு வெற்றி! எப்படியாவது முயற்சி செய்து, தீர்ப்பு சொல்வதை
ஒத்திவைக்க ஏற்பாடு செய்து விடுங்கள். அது போதும்...' என்றார் ஜோசியர்.


வியாபாரியும் எப்படியெல்லாமோ சிரமப்பட்டு, அடுத்த வாரம் சொல்ல வேண்டிய தீர்ப்பை அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைக்க ஏற்பாடு செய்துவிட்டார். அக்டோபர் பத்தாம் தேதிக்கு தீர்ப்பு என்று சொன்னார். ஜோசியரும், "பயமே வேண்டாம். வெற்றி உங்களுக்குத் தான்...' என்றார். அந்த நாளும் வந்தது. வியாபாரியும், தன் வக்கீலோடு கோர்ட்டுக்குப் போனார். அங்கு ஒரு அதிர்ச்சி! பழைய நீதிபதி, ஒரு மாதம் முன்பே ரிடையர்மெண்டுக்கு முன் விடுமுறையில் சென்று விட்டார். இனிமேல் அவர் கோர்ட்டுக்கு வரமாட்டார். புதிய நீதிபதி வந்து விட்டார்.


இந்த வழக்கு சம்பந்தமான விபரங்களை படித்துப் பார்த்து, அன்றே தீர்ப்பும் சொல்லி விட்டார். வியாபாரிக்கு பாதகமாகவே தீர்ப்பு அமைந்து விட்டது!
வியாபாரிக்கும், வக்கீலுக்கும் தலை சுற்றியது!


ஜோசியரை தேடி, அவர் வீட்டுக்கு ஓடினார் வியாபாரி. அதற்கு முன்னமேயே வீட்டை காலி செய்து, வெளியூருக்கு போய் விட்டார் ஜோசியர்.


விதி
என்று ஒன்று விளையாடும்போது, ஜாதகம் என்ன செய்யும், ஜோசியம் என்ன
செய்யும், கிளி என்ன செய்யும்...இதெல்லாம் மன ஆறுதலுக்கானது தான்.
* * *

நன்றி வாரமலர்
avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Back to top Go down

விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Empty Re: விதி விளையாடும் போது... (ஆன்மிகம்)

Post by kirupairajah Thu Aug 27, 2009 1:25 pm

நடைமுறை வாழ்க்கையை பிரதிபலிக்கும் சிறந்த பதிவு


விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Empty Re: விதி விளையாடும் போது... (ஆன்மிகம்)

Post by VIJAY Thu Aug 27, 2009 2:31 pm

மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Empty Re: விதி விளையாடும் போது... (ஆன்மிகம்)

Post by ramesh.vait Sat Aug 29, 2009 2:09 am

மகிழ்ச்சி
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Empty Re: விதி விளையாடும் போது... (ஆன்மிகம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum