புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதை மழை இல்லை இல்லை மழை கதை Poll_c10கவிதை மழை இல்லை இல்லை மழை கதை Poll_m10கவிதை மழை இல்லை இல்லை மழை கதை Poll_c10 
19 Posts - 49%
ayyasamy ram
கவிதை மழை இல்லை இல்லை மழை கதை Poll_c10கவிதை மழை இல்லை இல்லை மழை கதை Poll_m10கவிதை மழை இல்லை இல்லை மழை கதை Poll_c10 
17 Posts - 44%
mohamed nizamudeen
கவிதை மழை இல்லை இல்லை மழை கதை Poll_c10கவிதை மழை இல்லை இல்லை மழை கதை Poll_m10கவிதை மழை இல்லை இல்லை மழை கதை Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
கவிதை மழை இல்லை இல்லை மழை கதை Poll_c10கவிதை மழை இல்லை இல்லை மழை கதை Poll_m10கவிதை மழை இல்லை இல்லை மழை கதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை மழை இல்லை இல்லை மழை கதை Poll_c10கவிதை மழை இல்லை இல்லை மழை கதை Poll_m10கவிதை மழை இல்லை இல்லை மழை கதை Poll_c10 
19 Posts - 49%
ayyasamy ram
கவிதை மழை இல்லை இல்லை மழை கதை Poll_c10கவிதை மழை இல்லை இல்லை மழை கதை Poll_m10கவிதை மழை இல்லை இல்லை மழை கதை Poll_c10 
17 Posts - 44%
mohamed nizamudeen
கவிதை மழை இல்லை இல்லை மழை கதை Poll_c10கவிதை மழை இல்லை இல்லை மழை கதை Poll_m10கவிதை மழை இல்லை இல்லை மழை கதை Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
கவிதை மழை இல்லை இல்லை மழை கதை Poll_c10கவிதை மழை இல்லை இல்லை மழை கதை Poll_m10கவிதை மழை இல்லை இல்லை மழை கதை Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை மழை இல்லை இல்லை மழை கதை


   
   
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Sat Jan 29, 2011 12:08 pm

கவிதை மழை இல்லை இல்லை மழை கதை Rain%2Bplay

மழை நின்று வெகுநேரம் ஆகிவிட்டது. இன்னும் சொட்டிக் கொண்டிருக்கிறது துளிகள் தாழ்வாரங்களிலும், செடிகளிலும், எனக்கு ஓடிப்போய் அந்த கிலுவை மரத்தை உலுக்கவேண்டும் என்ற ஆசை எழுந்த மூன்றாம் விநாடியில் கிலுவையின் கீழே போய் நின்றேவிட்டேன். பற்றிப் பிடித்து பரவசமாய் உலுக்கிய நொடியில் தேக்கி வைத்திருந்த சந்தோசத்தை கள்ளம் கபடமின்றி என் மீது பரவவிட்டு எதுவுமற்று நின்றிருந்தது கிலுவை.

சாலையின் நடுவிலும், சில இடங்களில் ஓரத்திலும் ஓடிக்கொண்டிருந்த மழை நீர் மண்ணோடு உறவாடி சில இடங்களில் குளம்பி தன்னை சகதியாக்கி வைத்திருந்தது. நான் அண்ணார்ந்து வானத்தைப் பார்த்தேன்.. வானம் குனிந்து என்னைப் பார்த்தது.

கருமையையாய் அலைந்து கொண்டிருந்த மேகங்கள் கல்யாண வேலைக்காக அங்கும் இங்கும் நகரும் ஆட்களைப் போல கூட்டம் கூட்டமாய் போய்க்கொண்டிருந்ததின் பின்னணியில் நீல நிற வானத்தை வெளியே வரவிடமாட்டோம் என்று பிடிவாதம் கொண்டிருப்பதாக எனக்குப்பட்டது. நிலையற்ற ஆசையாய் இருந்தாலும் அதைச்செய்வதிலும் ஒரு முழுமை இருப்பதாக தோன்றியது எனக்கு.

வீட்டுக்குள் அடைந்து கிடந்த சிறார் பட்டாளங்கள் புற்றிலிருந்து வரும் ஈசலைப் போல ஒவ்வொன்றாய் வெளிக்கிளம்பி வந்தன. சேறும், சகதியும், தேங்கிய நீரும், குளுமையும், மழை நீர் தேக்கிய மரங்களும் வளர்ந்து நிற்கும் பெரியவர்களுக்கு அறிவால் தூரப்பட்டது.. ஆனால் சிறுவர்கள் எல்லாவற்றிலும் தங்களின் மகிழ்ச்சியை நிறைத்து மழையின் விளைவுகளை தங்களின் சந்தோசமாக்கிக் கொண்டிருந்தர்கள்.

பக்கத்து வீட்டு குமார் என்னிடம் வந்து செய்து தரச்சொன்ன கத்திக் கப்பல் இதோ மிதக்கத்தொடங்கிவிட்டது...கூடவே என் மனமும்......! அதோ அந்த கத்திக் கப்பல் தத்தி தத்தி... ஆடி ஆடி.. சிறுவர் கூட்டத்தின் உற்சாகத்துக்கு காசு வாங்காமல் படியளக்கிறதே எப்படி? ஓ....பொருள் கொடுத்து வாங்குவதால் வருவது உற்சாகத்தை போலத்தான் இருக்குமே அன்றி அது எப்போதும் மனக்கிலேசத்தை கொடுத்து இருக்குமா என்றால் இல்லை என்றுதான் நான் சொல்வேன்...

எதிர்த்த வீட்டு ஜோயல் அம்மா காலையில் இருந்து மழையைத் திட்டிவிட்டு.. சாக்கு விரித்து நெல்லை காயவைத்தாலும் சுட்டெரிக்கும் சூரியன் வருமா? இல்லை மீண்டும் மழை வந்து அவளின் நெல்லை காயவிடாமல் நாசம் செய்யுமா? என்ற யோசனையில் வாசலுக்கும் ஹாலுக்கும் நடந்ததோடு இல்லாமல் பக்கத்து வீட்டு அனுபவம் நிறைந்த ஆச்சியிடம்.... பத்து முறையாவது கேட்டிருப்பாள்.. மழைவருமா என்று? வராது என்று ஆச்சி சொன்னாலும் வரவேண்டிய மழை வந்துதான் தீரும். வரும் என்று சொன்னால் வரமால் போகும் மழை வராமலேயேதான் போகும் என்பது ஜோயல் அம்மாவுக்கும் தெரியாது பக்கத்து வீட்டு ஆச்சிக்கும் தெரியாது...அவர்களுக்கு பொருள் மழை இல்லை... காயவைக்க வேண்டிய நெல்....

நிரம்பிவிட்ட அண்டாவின் மழைத்தண்ணீரை உள்ளே கஷ்டப்பட்டு தூக்கிக் கொண்டிருந்தார் மூன்று வீடு தள்ளிய சகாயராஜ்..மழைத்தண்ணீராம் சூடு செய்து குளிரவைத்து குடித்தால் நல்ல ருசியாம். அவருக்கும் கொஞ்சம் கவலைதான் இரண்டு அண்டா இருந்திருந்தால் நன்றாய் இருந்திருக்குமே என்று.... நிரம்பிய ஒரு அண்டா ஏன் அவருக்கு சந்தோசம் கொடுக்கவில்லை என்று என்னை நானே கேட்டுக் கொண்ட போதுதான்

பானுமதியின் தாத்தா டீ கடைக்கு டீ குடிக்கப்போவதாய் வீட்டில் சொல்லிவிட்டு, வழுக்கி விழுந்துடாம பாத்து போய்ட்டு வாங்க என்ற பாட்டியின் கட்டளையை காதில் கவனமாய் சொருகிக்கொண்டு என்னை கடக்கையில் இன்னும் 24 மணி நேரத்துக்கு மழை விடாதாம் தம்பி என்று வார்த்தைகளை பரவிட்டுப் சென்றார்.

மழையில், அல்லது மழைக்காலத்தில் சூடான தேநீர் எப்போதும் சுகம்தான். வைரமுத்து கூட எழுதியிருபார் தனது சிகரங்களை நோக்கி என்னும் கவிதைத் தொகுப்பில்.. மழையில் கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருக்கும் சிலர்...அந்த குளிரில் சூடான தேநீரை தொண்டைக்குள் செலுத்தும் போது, அந்த சுகத்தில் தவணை முறையில் சமாதி நிலையை அடைந்தார்கள் என்று...

நிம்மதியும் சந்தோசமும் எப்படி ஒரு செயலை வாங்கிக் கொள்கிறோம் அல்லது ஆழ்ந்து அனுபவிக்கிறோம் அதில்தான் இருக்கிறது. பெரிய பெரிய விலைகள் கொடுத்து செய்யும் செயல்களில் நிச்சயாமாய் இல்லை சந்தோசங்கள்.. ஆனால் சின்ன சின்ன நிகழ்வுகளில் அது ஒளிந்து கொண்டிருக்கிறது ஆனால் நாம்தான் அவற்றை தேடிக் கண்டு பிடிப்பதேயில்லை....

நான் யோசித்துக் கொண்டே இருக்கும் போது என்னைக் கடந்த வாகனம் என்மீது சாலை நீரை வாரி இறைத்துவிட்டு சென்றது...! மனம் கோபப்பட்டது...யார் இவன் ஆள் நிற்பது தெரியாமல் இப்படி போறானே என்று...!சட்டென்று சுதாரித்து..

அட.. என் கோப வார்த்தையிலேயே இதற்கு பதில் ஒளிந்திருக்கிறதே......

ஆள் நிற்பது தெரியவில்லை அதனால்தான் அப்படி சென்றுவிட்டார். வேண்டுமென்று என் மீது நீரை வாரி இறைக்க அவருக்கு என்ன என் மீது கோபம்? என்று யோசித்த நொடியில் அந்த வண்டி ஓட்டிச் சென்றவர் மீது பாசமும், அன்பும் வந்து சாரி அண்ணா ....என்று மனதுக்குள் சொல்ல வைத்தது இல்லை இப்போது விசயம்...அதோ அந்த கிணற்று மீது நிற்கும் ஒற்றைக் காகத்தைப் பாருங்கள்.....

மழையில் நன்றாக நனைந்து சிறகெல்லாம் ஒட்டிப் போய்...ஈனஸ்வரத்தில் கத்திக் கொண்டு.. ஒடுங்கி நிற்கிறது.....! என்னை மீறி எட்டிபார்த்த கண்ணீர்த்துளியில் அறியாமை இருந்தது நன்றாகத்தெரிந்தும் வாய்விட்டே கேட்டுவிட்டேன்...." உனக்கு குளிருதா காக்கா ? ' என்று.....

மழைக்காலங்களில் பறவைகளுக்கு சிரமம்தான்..இரை தேடிப் பறக்க முடியாது. ஏதோ ஒரு மரத்துக்குள் அல்லது கூட்டுக்குள் தம்மை உள்ளேயே இருத்திக் கொள்ள வேண்டும். மனிதனைப் போல திட்டமிட்டு சேர்த்தா வைத்திருக்கிறது பறவைகளும் விலங்குகளும்.....? மழை முடியும் வரை பசியோடுதானிருக்கும்.....எப்படி இருந்தாலும் அவை இயற்கையோடு ஒத்துதான் போகும்...முரண் கொள்ள மனிதனைப் போல மனமா இருக்கிறது அவைகளுக்கு.....?

சைக்கிளில் போன யாரோ வழுக்கி விழுந்து விட கை கொட்டி சிரித்த சிறார்கள் கூட்டத்தின் சப்தம் என்னை வெளியே இழுத்துப் போட்டது....விழுந்தவரும்ம் சிரித்துக் கொண்டே....சைக்கிளை எடுத்துக் கொண்டு ' வழுக்கி விட்டிருச்சு 'என்று சொல்லிக்கொண்டே நகர்ந்து விட்டார்.

வெகு நேரமாய் தெருவோரமாய் நின்று கொண்டிருந்த என்னை ஜன்னலின் வழியே இருந்து எட்டிப்பார்த்த இரு கண்களுக்குச் சொந்தக்காரிதான் ' கயல்.....'!

'ஏய் லூசு மழை நேரத்துல என்ன பண்ற ரோட்ல ? ' கேலியோடு சேர்ந்து அவள் காதலையும் பலதடவை எனக்கு அனுப்பியிருக்கிறாள்....! எனக்குத்தான் அவளை மட்டும் காதலிக்கும் ஒரு பக்குவம் இல்லாமல்..செடி, கொடி, மலை, மண், இசை, என்று திணைகள் தாண்டி விரிந்து பரந்து கிடந்தது காதல்...!

மீண்டும் வானம் இருட்டத் தொடங்கியிருந்தது...! சிலருக்கு மகிழ்ச்சி, சிலருக்கு துக்கம், சிலருக்கு எரிச்சல், சிலருக்கு காதல் என்று தோன்றின எல்லாம் அவரவர் மனதில் இருந்து தோன்றினாலும் மழை என்னவோ....எதிலும் பந்தப்படாமல்தான் இருந்தது.....

மங்கிய வெளிச்சமும்...சிலாகிக்க வைக்கும் குளிரும்....எனக்கு இனிமையாகத்தான் இருந்தது.......

இல்லாமல் இருந்து கொண்டு..
சொல்லாமல் கொள்ளாமல்
தன்னை இழக்கும்..தண்ணீர் மேகங்கள்...
எப்போதும் எதைத்தான்
எதிர்பார்த்திருக்கின்றன மனிதர்களிடமிருந்து?

மனம் ஒரு கவிதையை எழுதி முடித்து இருந்த அதே நேரம் அனிசையாய் வேண்டத் தொடங்கியிருந்தது....ஏக்கத்தோடு....

' மீண்டும் வா மழையே...'

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக