ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:32

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 9:30

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:59

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:32

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:05

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 21:17

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:45

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:25

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 20:09

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 19:03

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:48

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 14:45

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Yesterday at 0:01

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:07

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:28

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:26

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:20

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:11

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:10

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:00

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 20:54

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 16:19

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 15:14

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 14:56

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 14:53

Top posting users this week
ayyasamy ram
புனித சவேரியார் Poll_c10புனித சவேரியார் Poll_m10புனித சவேரியார் Poll_c10 
heezulia
புனித சவேரியார் Poll_c10புனித சவேரியார் Poll_m10புனித சவேரியார் Poll_c10 
mini
புனித சவேரியார் Poll_c10புனித சவேரியார் Poll_m10புனித சவேரியார் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

புனித சவேரியார்

3 posters

Go down

புனித சவேரியார் Empty புனித சவேரியார்

Post by சிவா Mon 31 Jan 2011 - 18:22

உலகம் போற்றும் நமது இந்தியத் தாய் திருநாட்டில், கிறிஸ்தவ மதம் வளரவும் தழைக்கவும் வித்திட்ட பல மேலை நாட்டினர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர், புனிதர் பிரான்சிஸ் சவேரியார்.

இவர் 1506ஆம் ஆண்டு, ஏப்ரல் 7ஆம் நாள், ஸ்பெயின் நாட்டில் வாழ்ந்த ஒரு பிரபுக்கள் குடும்பத்தில், யுவான் தெயாசு- டோனா மரியா என்ற தம்பதியின் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவரது தந்தை யுவான் தெயாசு, அந்நாட்டின் அரசவையில் நிதியமைச்சராகப் பணியாற்றி வந்தார்; சட்டவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.

சவேரியார் தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, உயர்கல்வி கற்க விரும்பினார்; 1525ஆம் ஆண்டு, உலகப் புகழ் பெற்ற பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார்; மெய்யியல் மற்றும் இறையியல் கற்கத் தொடங்கினார். 1530ஆம் ஆண்டு மெய்யியல் முதுகலைப்பட்டம் பெற்றார். அதே பல்கலைக் கழகத்தில், "தான் ஒரு சிறந்த பேராசிரியராக வர வேண்டும்' என்ற ஆசை கொண்டிருந்தார்.

இந்த நேரத்தில் 39 வயது நிரம்பிய "இனிகோ' என்ற "லொயோலா' என்பவரை சந்திக்க சவேரியாருக்கு வாய்ப்பு கிடைத்தது. இனிகோ, குருவாவதற்காக அங்கு படித்துக் கொண்டிருந்தார். அவர், சவேரியாரைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வார்த்தையைச் சொல்வார். அதாவது ""பிரான்சிஸ், ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்துவிட்டால் அதனால் அவனுக்கு என்ன பயன்?'' என்பதே அந்த வாசகம். இந்த வார்த்தைகள் சவேரியாரின் மனதில் ஆழமாகப்பட்டது.

ஒரு நாள் சவேரியார், "தனது பணம், புகழ், பட்டம், ஆசை, ஆடம்பரம், உலக இன்பம் அனைத்தையும் துறக்க வேண்டும்; தானும் ஒரு குருவாக வேண்டும்; இறை மகன் இயேசுவின் பணியை-அவரது அன்பு, பாசம், பெருமை, இரக்கம், விட்டுக் கொடுக்கும் மனம் இவற்றை உலகமெங்கும் அறிவிக்க வேண்டும்' என்ற அணையாத தாகத்தைப் பெற்றார்; உடனே இயேசு சபையில் சேர்ந்தார். 1537ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் நாள், குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

கி.பி. 72ல் புனித தோமையார் இந்தியாவிற்கு வந்து இறைமகன் இயேசுவின் போதனைகளை அறிவித்தார். அதன் பிறகு இயேசுவை பற்றியும், அவரது அன்புப் பணியைப் பற்றியும் அறிவிப்பதற்காக 1541ஆம் ஆண்டு, ஏப்ரல் 7ஆம் நாள், ஸ்பெயின் நாட்டிலிருந்து சவேரியார் புறப்பட்டார்; 1542ஆம் ஆண்டு, மே மாதம் 6-ம் நாள் கோவா வந்து சேர்ந்தார். சிறிய மணியை கையில் எடுத்து அடித்துக் கொண்டே கோவாவின் தெருக்களில் சென்று அனைத்துச் சிறுவர், சிறுமியர்களையும் அழைத்தார்; அவர்களுக்கு மறைக் கல்வி போதித்தார்; திருமறை நூலை விளக்கினார். நோயாளிகளைச் சந்தித்தார்; சிறையில் கைதிகளை பார்த்து ஆறுதல் கூறினார்.

பிறகு கோவாவிலிருந்து கேரளா வழியாக தென் தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கி இறைப்பணியாற்றினார் சவேரியார். குறிப்பாக கன்னியாகுமரி, கோட்டயம், குளச்சல், ஆலந்தலை, தூத்துக்குடி மற்றும் மணப்பாடு பகுதிகளில் தங்கி இறைப் பணியாற்றி வந்தார்.

மணப்பாட்டில் அவர் தங்கியிருந்த குகை, மற்றும் அதற்குள் இருக்கும் சிறிய கிணறு ஆகியன இன்றும் உள்ளன. அந்தக் கிணறு, கடற்கரையில் உள்ளது. ஆனால் அதன் தண்ணீர் உப்பு இல்லாத நல்ல குடிநீராக இன்றும் புதுமையாக இருக்கிறது. 1545ல் சென்னை மயிலாப்பூரில் ஐந்து மாதங்கள் பணியாற்றினார் சவேரியார். பிறகு 1545ஆம் ஆண்டு "மலக்கா' தீவிற்குச் சென்று இறை பணியாற்றினார். பிறகு மீண்டும் இரண்டு ஆண்டுகள் கொச்சியிலும், கோவையிலும் சேவை செய்தார். மீண்டும் 1545-ல் ஜப்பான் சென்று, அங்கும் இயேசுவின் பணியைச் செய்து வந்தார்.

சவேரியாருக்கு, "எப்படியும் சீனாவிற்கு செல்ல வேண்டும்; அங்கும் இயேசுவின் அன்புப் பணியை செய்ய வேண்டும்' என்ற ஆசை இருந்தது. அதன்படி 1552ஆம் ஆண்டு, ஏப்ரல் 17ஆம் நாள் சவேரியார் சீனாவிற்கு புறப்பட்டார். ஆனால் செல்லும் வழியில், சான்சியான் தீவில், 1552-ம் ஆண்டு- நவம்பர் 21ஆம் நாள், நோயுற்றுப் படுத்தார். காய்ச்சல் தீவிரமடைந்தது. அவருக்கு உதவியாக "அந்தோணியோ' என்பவர் கூடவே இருந்தார். 1552ஆம் ஆண்டு, டிசம்பர் 3ம் நாள், சவேரியார் தனது கையில் வைத்திருந்த சிலுவையை தூக்கிப் பிடித்தவராக, ""ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்! நான் ஒரு போதும் வெட்கமடைய விடாதேயும்'' என்ற வசனத்தை சொன்னவாறே தனது உயிரை இறைவன் கையில் ஒப்படைத்தார்.

இறந்த புனிதரின் உடல், முதலில் சான்சியன் தீவில் அடக்கம் செய்யப்பட்டது. 1553ம் ஆண்டு, பிப்ரவரி 17ம் நாள், சாந்தா குரூஸ் கப்பல் அங்கிருந்து புறப்படும்போது, சவேரியாரின் கூடவே இருந்த அந்தோணியோ, புனிதரின் கல்லறையைத் தோண்டி அவரது எலும்பையாவது இந்தியாவிற்கு கொண்டு செல்வோம் என்று முயற்சித்தார். அப்போது மிகப் பெரிய அதிசயம் அங்கே நிகழ்ந்தது. சவேரியாரின் உடல் எப்படி அடக்கம் செய்யப்பட்டதோ, அதேபோல இருந்தது.

எந்தவித மாற்றமோ, துர்நாற்றமோ இல்லை. 1554ஆம் ஆண்டு, மார்ச் 16ஆம் நாள், சாந்தா குரூஸ் கப்பலில் புனிதரின் உடல், கோவா கொண்டு வரப்பட்டது. "பாம் இயேசு தேவாலயத்தில்' மிகவும் பாதுகாப்புடன், கோவா அரசாங்கத்தின் உதவியுடன் இன்றுவரை அந்த உடல் பாதுகாக்கப்படுகிறது. அந்த அழியாத புனிதரின் உடல், பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றது. இந்தப் புனிதரிடம் யார் விசுவாசத்துடன் கேட்டாலும் அதை அவர்கள் கட்டாயம் அடைவார்கள்.

இத்தகைய புகழ் பெற்ற புனிதரின் ஆலயங்கள், இந்தியாவில் பல ஊர்களில் இருக்கின்றன. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், புனல்வாசல் கிராமம்! ஏறக்குறைய ஐந்தாயிரம் கிறிஸ்தவ மக்கள், பிற மத சகோதரர்களுடன் ஒற்றுமையோடு வாழும் ஊர்! இங்கேயும் 100 ஆண்டுகளுக்கு மேலான புனித சவேரியாரின் ஆலயம் புதிய பொலிவுடன் காட்சியளிக்கிறது.

- அ. பிரான்சிஸ்


புனித சவேரியார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புனித சவேரியார் Empty Re: புனித சவேரியார்

Post by மஞ்சுபாஷிணி Sat 5 Mar 2011 - 1:23

உண்மையே நாங்களும் கோவா போயிருந்த போது இந்த சர்ச் போய் இவர் புனித உடலையும் கண்டோம். வேண்டியதும் நிறைவேறியது...

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு சிவா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

புனித சவேரியார் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

புனித சவேரியார் Empty Re: புனித சவேரியார்

Post by கலைவேந்தன் Sat 5 Mar 2011 - 1:29

முடிந்தால் நானும் சென்று கோவாவில் அவரது ஆலயத்தையும் புனித உடலையும் தரிசிப்பேன்... இன்ஷா அல்லாஹ்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

புனித சவேரியார் Empty Re: புனித சவேரியார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum