ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகர ஜோதி’ மோசடி அம்பலம்

+2
அருண்
கண்ணன்3536
6 posters

Go down

மகர ஜோதி’ மோசடி அம்பலம் Empty மகர ஜோதி’ மோசடி அம்பலம்

Post by கண்ணன்3536 Sun Jan 30, 2011 5:29 pm

கட்டுரை
‘மகர ஜோதி’ மோசடி அம்பலம்
[ ஞாயிற்றுக்கிழமை, 30 சனவரி 2011, 06:54.46 AM GMT +05:30 ]
அய்யப்பன் விரதம் இருந்து சபரிமலைக்கு லட்சக் கணக்கில் குவிகிறார்கள் பக்தர்கள். பயணத்தின்போது சாலையில் வாகன விபத்துகளில் பலர் உயிரிழக்கிறார்கள். இப்போது வாகன விபத்துகளோடு மகர ஜோதியை தரிசிக்கச் சென்ற பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 102 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற துயரமான செய்தி வெளி வந்துள்ளது. உண்மையிலே இந்த பக்தர்களின் மரணத்துக்காக நாம் வேதனைப்படுகிறோம்.
அவர்களின் குடும்பத்துக்கு எமது ஆழ்ந்த வேதனையையும், துயரங் களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அய்யப்பனுக்கோ, அல்லது அய்யப்பன் விரதத்துக்கோ, ஏதேனும் சக்தி இருந்திருந்தால், இப்படி மனித உயிர்கள் மடிவதை தடுத்திருக்க மாட்டானா, இவ்வளவுக்குப் பிறகும், அய்யப்பன் சக்தியை நம்பிக் கொண்டிருக்கலாமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம். குடும்ப உறுப் பினர்கள் - குறிப்பாக பெண்கள், இத்தகைய ஆபத்துகளை விலைக்கு வாங்க வேண்டாம் என்று மாலை போடுகிற, குடும்ப ஆண்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

மிக மோசமான காட்டுப் பாதையில் பக்தர்கள் நடந்து செல்கிறார்கள். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லை என்றெல்லாம் புகார்கள் வருகின்றன. ஆண்டவன் காப்பாற்றுவான் என்று நம்புவதில் அர்த்தமில்லை என்பதைத் தெளிவாக புரிந்து கொண்ட ஊடகங்கள், நீதிமன்றங்கள், அரசுதான் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து பக்தர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று வலி யுறுத்தி வருகின்றன. இது பக்தி உணர்வைப் புண்படுத்தும் நடவடிக்கை என்று எவரும் புகார் கூற முடியாது.

“அய்யோ, அய்யப்பா உன்னை நம்பித்தானே கடும் விரதமிருந்து எங்கள் அண்ணனும், தம்பிகளும், கணவர்களும், குடும்பத்தினரும் வந்தார்கள்; இப்படிக் கைவிடலாமா?” என்று உறுப்பினர்களை இழந்து தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்தினரும் நிச்சயம் கதறியிருப்பார்கள்!

இந்த விபத்தால் பதறிப் போன கேரளாவின் உயர்நீதிமன்றமே தானாகவே முன் வந்து, இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. விபத்து பற்றி விளக்கமளிக்குமாறு கேரள காவல்துறை, வனத்துறை, கோயிலை நிர்வகிக்கும் தேவஸ்வம்போர்டு ஆகிய வற்றுக்கு தாக்கீது அனுப்பியது. காவல்துறை தலைமை இயக்குனர் தாக்கல் செய்த அறிக்கையில் போதிய விளக்கு வசதி செய்யப்படவில்லை. கார், ஆட்டோ போன்ற வாகனங்களை நிறுத்துவதற்கு வனத்துறை, போதிய இடவசதி செய்து தரவில்லை என்று கூறிவிட்டார். கோயில் நிர்வாகக் குழு தாக்கல் செய்த அறிக்கையில், காவல் துறையையும், வனத்துறையையும் குற்றம் சாட்டியது. விபத்து நடந்த இடம், புலிகள் வாழும் பாதுகாப்புப் பகுதி என்பதால், தங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும், கோவிலுக்கு செல்லவும், திரும்பவும் உள்ள பாதை குறுகலானது என்பதால், வாகன நிறுத்தங்களுக்கு ஏற்பாடு செய்ய முடியவில்லை என்றும் சமாதானம் கூறியது.

இவ்வளவு ஆபத்துகள் நிறைந்த பகுதியில் ‘மகர ஜோதி’ என்ற ‘புனித நட்சத்திரம்’ அய்யப்பன் அருளால் தோன்று கிறது என்ற ஒரு நம்பிக்கையைப் பரப்பி, பக்தர்களை நம்ப வைத்து, பெரும் கூட்டத்தை திரட்டுகிறார்கள். இதற்கு கேரள அரசும், கோயில் நிர்வாகமும் உடந்தையாக உள்ளது. திட்டமிட்டு பரப்பப்படுகிற, மூடநம்பிக்கைகளை கேள்விக் குள்ளாக்க வேண்டியது மனித நேயக் கடமை என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள், கோயில் நிர்வாகத்தின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞரிடம் நேரடியாகவே ஒரு கேள்வியை கேட்டுள்ளனர்.

இந்த மகரஜோதி, உண்மையிலேயே தோன்றும் புனித நட்சத்திரமா? அல்லது மனிதர்களால் செயற்கையாக ஏற்றப்படும் ஒளியா என்று நீதிபதிகள் கேட்டுள்ளனர். இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத கோயில் நிர்வாகத்தின் வழக்கறிஞர், “தெய்வீக நட்சத்திரமாக பக்தர்கள் தான் நம்பு கிறார்கள். ஆனால் அதுபோல் கோயில் நிர்வாகம் விளம்பரம் செய்யவில்லை” என்று கூறி நழுவிக் கொண்டு விட் டார். ஆம், அது தெய்வீக நட்சத்திரம் என்று நீதிமன்றத்தில், வழக்கறிஞர் பொய் கூற முடியாது. ஆனால், உண்மை என்ன என்பதை பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று உயர்நீதி மன்ற நீதிபதிகள் கண்டிப்பாகக் கூறியுள்ளார்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த அச்சுதானந்தன் முதல்வர்; அவரது தலைமையில் கேரள இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.

நீதிமன்றமே, இப்படி நியாயமான அறிவார்ந்த கேள்விகளை கவலை யுடன் முன் வைக்கும் போது மார்க்சிஸ்ட் கட்சி முதல்வரோ, “மக்களின் நம்பிக்கையில் நாங்கள் தலையிட மாட்டோம்; மகரஜோதியின் உண்மையைக் கண்டறிய சோதிடர் களிடமோ அல்லது வானியல் துறை விஞ்ஞானிகளிடமோ விசாரணையும் நடத்த மாட்டோம்; பொன்னம்பலமேடு பகுதி முழுதும் வானில் தெரியும் ‘மகர ஜோதியை’ புனித நட்சத்திரம் என்றே பக்தர்கள் நம்புகிறார்கள். எனவே நாங்கள் தலையிட மாட்டோம்” என்று கூறிவிட்டார்.

இதேபோன்ற தீர்ப்பைத்தான் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அலகாபாத் நீதிபதிகளும், பாபர் மசூதி உள்ள இடம்தான் ராமன் பிறந்த இடம் என்று பக்தர்கள் நம்பு கிறார்கள் என்று கூறினர். அலகாபாத் தீர்ப்பை கடுமையாக எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கட்சிதான், இப்போது அதே கருத்தை - மகரஜோதி மோசடியை மறைப்பதற்கும் முன் வைக்கிறது என்றால், இந்த அவலத்தை எங்கே போய் அழுது தொலைப்பது? குஜராத் மோடியின் குரலை கேரளாவில் அச்சுதானந்தன் அப்படியே எதிரொலிப்பது தான் மதச்சார்பின்மையா? வகுப்புவாத எதிர்ப்பா? என்று கேட்கிறோம்.

இந்த நிலையில், பார்ப்பன ஏடான ‘இந்து’ (ஜன.22) மகர ஜோதியின் தெய்வீக மோசடியை ஆதாரத்துடன் அம்பலப் படுத்தியிருக்கிறது. திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் இராஜகோபால நாயர், மகர ஜோதி, மனிதர்களால் ஏற்றப்படும் விளக்குதான் என்று ஒப்புக் கொண்டுள்ளார். இதில் தேவஸ்வம் போர்டுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூறி விட்டார்.

“ஒரு காலத்தில் பொன்னம்பலமேடு பகுதியில் மலைகளில் வாழ்ந்த மலைவாசிகள் ஆண்டுதோறும் மகரவிளக்கு ஏற்றி, விழா நடத்துவார்கள். பிற்காலங்களில் அவர்கள் மலைப் பகுதியிலிருந்து வெளியேறி விட்டனர்” என்று கூறியுள்ளார்.

அய்யப்பன் கோயிலோடு பாரம்பர்யமாக நெருக்கமான உறவு கொண்டவர்கள், பாண்டலம் அரண்மனையும், அதில் வாழ்ந்த மன்னர்களின் வாரிசுகளும். அந்த அரண்மனை யின் நிர்வாகக் குழு தலைவரான பி. இராமவர்ம ராஜாவும், மூத்த அர்ச்சகரான (தாந்திரி) கண்டரேறு மகேசுவரரு என்பவரும் மகரஜோதி மனிதர்களால் ஏற்றப்படும் விளக்குதான் என்று ஒப்புக் கெண்டுள்ளனர். கடந்த காலங்களில் மலை உச்சியில் வாழ்ந்த பழங்குடி மக்களின் ‘மகர விளக்கு’ விழா கொண்டாட்டத்தின் தொடர்ச்சியே இது என்பதை அவர்களும் உறுதிப்படுத்தினர்.

“மகர ஜோதி சம்பவத்தில் பாண்டலம் அரண்மனை வாரிசுகள் எப்போதுமே விலகியே நிற்கிறார்கள். மனிதர்களால் ஏற்றப்படும் இந்த ஒளி சில சுயநல சக்திகளால், திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாகும். பாண்டலம் அரண்மனையிலிருந்து புனித நகைகளைக் கொண்டு வந்து, அய்யப்பனை அலங்கரித்து, “தீப ஆராதனை” நடப்பது வழக்கம். இந்த தீப ஆராதனையின் சிறப்பைக் குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, பாண்டலம் அரண்மனை வாரிசுகளின் முக்கியத்துவத்தைக் குலைக்க, சில சுயநல சக்திகள் ‘மகர ஜோதி’யை உருவாக்கினார்கள்” என்று அவர்கள் இருவரும் கூறியுள்ளனர்.

அய்யப்ப சேவா சங்க தேசிய துணைத் தலைவராக உள்ள டி. விஜயகுமார் என்பவரும், “இது மனிதர்களால் ஏற்றப்படுவதுதான். அதற்காக, மக்களின் நம்பிக்கையில் நீதிமன்றங்கள் குறுக்கீடுவதை ஏற்க முடியாது” என்று கூறியுள்ளார்.

நாயர் சேவைக் கழக செயலாளர் ஜி. சுகுமாறன் நாயர் கூறுகையில், “மலை உச்சியில் வாழ்ந்த பழங்குடி மக்கள் ஆண்டுதோறும் நடத்திய விழாவின் தொடர்ச்சிதான் இது. அவர்கள் தான் விளக்கு ஏற்றி கொண்டாடி வந்தார்கள். பொன்னம்பலமேடு பகுதியில் தான் முதலில் ‘அய்யப்பன்’ கோயில் இருந்தது. பிறகு இடமாற்றம் செய்யப்பட்டது” என்று கூறினார்.

எஸ்.என்.டி.பி. என்ற நாராயண குரு நிறுவிய சிறீ நாராயணன் தர்ம பரிபாலன யோகம் என்ற அமைப்பின் செயலாளர் வெள்ளப் பள்ளி நடேசன், “ஜோதியை மனிதர்கள் ஏற்றுகிறார்களா அல்லது ஆன்மிக நட்சத்திரமா என்ற விவாதமே தேவையற்றது; அரசின் பாதுகாப்பு குறைபாடுகளை திசை திருப்பும் நடவடிக்கை” என்று கூறி நழுவி விட்டார்.

1990 ஆம் ஆண்டு கோயில் நிர்வாகம் ‘மகரஜோதி’ ஏணியை உருவாக்க மலை உச்சியில் ரகசியமாக ‘சிமெண்ட் திண்ணை’ ஒன்றை கட்டியது. மலை உச்சியில் ஏறிப் போய் அதிகாரிகள் அனுமதி பெற்று, 2006 ஆம் ஆண்டு, இந்த ‘சிமெண்ட் திண்ணை’ படம் எடுக்கப்பட்டது. அந்தப் பகுதியில் எவரும் அனுமதிக்கப்படுவது இல்லை. அந்த சிமெண்ட் திண்ணைப் படத்தையும், ‘இந்து’ நாளேடு வெளியிட்டுள்ளது.



நன்றி: புரட்சிப்பெரியார் முழக்கம்
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

மகர ஜோதி’ மோசடி அம்பலம் Empty Re: மகர ஜோதி’ மோசடி அம்பலம்

Post by அருண் Sun Jan 30, 2011 5:48 pm

சிந்தியுங்கள் மக்களே!! ரிலாக்ஸ்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மகர ஜோதி’ மோசடி அம்பலம் Empty Re: மகர ஜோதி’ மோசடி அம்பலம்

Post by உதயசுதா Sun Jan 30, 2011 5:54 pm

நம்ம மக்களுக்கு எப்பவும் உள்ளூரில் இருக்கும் சாமிகளை கும்பிடனும்ன்னு தோணாது இவர்களை பொறுத்த வரை மற்ற மாநில கடவுள்கள்தான் சக்தி வாய்ந்தவர்கள் .இந்த எண்ணம் இருக்கும் வரை இப்படி கூட்டம் கூட்டமா போய் சாக வேண்டியதுதான்.


மகர ஜோதி’ மோசடி அம்பலம் Uமகர ஜோதி’ மோசடி அம்பலம் Dமகர ஜோதி’ மோசடி அம்பலம் Aமகர ஜோதி’ மோசடி அம்பலம் Yமகர ஜோதி’ மோசடி அம்பலம் Aமகர ஜோதி’ மோசடி அம்பலம் Sமகர ஜோதி’ மோசடி அம்பலம் Uமகர ஜோதி’ மோசடி அம்பலம் Dமகர ஜோதி’ மோசடி அம்பலம் Hமகர ஜோதி’ மோசடி அம்பலம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மகர ஜோதி’ மோசடி அம்பலம் Empty Re: மகர ஜோதி’ மோசடி அம்பலம்

Post by அசோகன் Sun Jan 30, 2011 6:40 pm

உதயசுதா wrote:நம்ம மக்களுக்கு எப்பவும் உள்ளூரில் இருக்கும் சாமிகளை கும்பிடனும்ன்னு தோணாது இவர்களை பொறுத்த வரை மற்ற மாநில கடவுள்கள்தான் சக்தி வாய்ந்தவர்கள் .இந்த எண்ணம் இருக்கும் வரை இப்படி கூட்டம் கூட்டமா போய் சாக வேண்டியதுதான்.
சரிதான் அக்கா,எனக்கும் இதே கருத்துதான் தமிழகத்தில் இருப்போர் சபரிமலை மற்றும் திருப்பதிக்கும், ஆந்திராவினர் சபரிமலைக்கும்,கேரளாவினர் பழனிக்கும் படையெடுப்பதன் நோக்கம்தான் என்ன? உள்ளூரில் இருக்கும் சாமிகளிடம் நம்பிக்கை இல்லையா?
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

மகர ஜோதி’ மோசடி அம்பலம் Empty Re: மகர ஜோதி’ மோசடி அம்பலம்

Post by பிரகாசம் Sun Jan 30, 2011 7:17 pm

சரிதான் அக்கா,எனக்கும் இதே கருத்துதான் தமிழகத்தில் இருப்போர் சபரிமலை
மற்றும் திருப்பதிக்கும், ஆந்திராவினர் சபரிமலைக்கும்,கேரளாவினர்
பழனிக்கும் படையெடுப்பதன் நோக்கம்தான் என்ன? உள்ளூரில் இருக்கும்
சாமிகளிடம் நம்பிக்கை இல்லையா?
-----------------------------------------------------------------------
ஈகரைக்கு அக்கறை பச்ச... மகர ஜோதி’ மோசடி அம்பலம் 502589
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

மகர ஜோதி’ மோசடி அம்பலம் Empty Re: மகர ஜோதி’ மோசடி அம்பலம்

Post by மோகன் Sun Jan 30, 2011 7:24 pm

மகர ஜோதி’ மோசடி அம்பலம் 677196 மகர ஜோதி’ மோசடி அம்பலம் 677196


மகர ஜோதி’ மோசடி அம்பலம் Mமகர ஜோதி’ மோசடி அம்பலம் Oமகர ஜோதி’ மோசடி அம்பலம் Hமகர ஜோதி’ மோசடி அம்பலம் Aமகர ஜோதி’ மோசடி அம்பலம் N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

மகர ஜோதி’ மோசடி அம்பலம் Empty Re: மகர ஜோதி’ மோசடி அம்பலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum