ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது தீர்வு?

2 posters

Go down

எது தீர்வு?  Empty எது தீர்வு?

Post by ஸ்ரீஜா Sat Jan 29, 2011 11:57 am

எது தீர்வு?  14fishermen
















கொதிக்கும் இரத்தத்தோடு தமது உறவுகள் கொல்லப்படுவதைப் பார்த்துக் கொண்டிருப்பது அதுவும் அநீதி என்று தெரிந்தே நெரிக்கப்பட்ட குரல்வளைகளோடு பிதுங்கிய விழிகளோடு சப்தங்கள் எழுப்பக்கூட திரணிகளற்று கிடப்பது.... என்பது ந்மக்கு வழமையாகிப்போய்விட்டது. சகிப்புத்தன்மையையும் விருந்தோம்பலையும் ஜீன்களோடு சேர்த்து கொடுத்துவிட்டுப் போன நமது மூதாதையர்கள் வீரத்தையும்தான் கொடுத்து சென்றிருக்கிறார்கள் என்பதை எபடி மறந்தீர் தோழர்காள்?

ஒவ்வொரு ஐந்து வருடமும் தேர்தல் வரும் கும்பல் கும்பலாய் கொள்ளைக்காரர்கள் கொடி பிடித்துக் கொண்டு வீடுகள்தோறும் வந்து வாக்குகள் சேகரிப்பார்கள்.

மான ரோசமுள்ள தமிழனும் கொடிபிடித்து, கூச்சலிட்டு தன்னை தொண்டனென்றும் அபிமானியென்றும் உடல் மண்ணுக்கென்றும், உயிர் தன் தன்மானத் தலைவனுக்கென்றும் கொடி பிடித்து கத்தி தானே எல்லாமுமாய் நினைத்து ஒரு குவார்ட்டர் பிராந்தியிலும், கோழி பிரியாணியிலும் தனது உச்ச பட்ச சந்தோசத்தை எட்டி விடுவான் அல்லது கொடுக்கும் பணத்தை நன்றியுணர்ச்சியோடு வாங்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு விசுவாசத்தை வாக்குகளாக்கும் போது தனக்கே ஒரு சவக்குழியை வெட்டி தானே ஒரு ஐந்து வருடங்களுக்கு இறங்கி அமர்ந்து கொண்ட விபரத்தை உணர்ந்திருக்க மாட்டான்...?

கோழி பிரியாணி விடிந்தவுடன் செரித்திருக்கும் கொடுத்த காசும் 3 நாளில் தீர்ந்திருக்கும், மீதமிருக்கும் நாளேல்லாம் ஒரு அடிமை நாயைப் போல கையைக் கட்டிக் கொண்டு ஐயா வாழ்க, அம்மா வாழ்க என்றூ கோசங்களிட்டும் இல்லையேல் அதிருப்தியை மனதில் வைத்துக் கொண்டு ஒரு பிணம் போல வாழ்ந்து கொண்டிருப்பான்.

ஒரு கணம் நில்லுங்கள் சகோதரர்களே...! யார் இந்த மத்திய மாநில அரசுகள்....? கடந்து போன குடியரசு தினத்துக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லையென்றா நினைக்கிறீர்கள் குடிகளே? குடிகளின் அரசு இது... இங்கே ராசாக்களின் ஸ்பெக்ட்ரம்கள் நமது இரத்தம் உறிஞ்சப்பட்ட நிகழ்வுகள் என்றும் நமக்கு ஏன் உறைப்பதில்லை? ஊழலும் அதிகார துஷ்பிரோயோகமும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஒரு கேவலமான ஆட்சிக்கு கீழே நிங்களும் நானும் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம் ஐந்து வருடங்களுக்கு முன் நாம் செய்த தவறு.

திமிர் பிடித்த ஏகாதிபத்தியத்தின் குணத்தினை தன்னுள் மறைத்து வைத்துக் கொண்டு அதை சூசகமாய் இந்திய மூளைகளுக்குள் செலுத்தி தன் கணவரின் மறைவுக்கு காரணமானவர்களை பொடிப்பொடியாக்கிவிட்டு இன்னும் எந்த மண்ணில் தன் கணவர் மறைவுக்கு காரணமானவர்கள் இருக்கிறார்களோ அவர்களையும் கிள்ளுக்கீரையாக எண்ணும் போக்கு இன்னுமா பிடிபடவில்லை....என் உறவுகளே?

கடலுக்குள் செல்லும் மீனவன் உயிர் வாழ பிழைப்புத் தேடிப் போனானா? இல்லை சிங்கள மிருகங்களின் இயந்திரத் துப்பாக்கிகளுக்கு உணவாகப் போனானா? ஒற்றை உயிர் போவதற்குப் பின்னால் எத்தனை குடும்பங்களின் வாழ்க்கை இருக்கிறது என்று இத்தாலிய மூளைக்கும், இத்தாலிய மூளைகளால் ஆட்சிப்பொறுப்பில் சுகவாசம் காணும் இந்திய கோழைகளுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று ஒத்துக்கொள்ளும் அதே நேரத்தில் தமிழன் பெயர் சொல்லி பிழைப்பு நடத்தும் திராவிட கட்சிகள் என்று தம்மை வரிந்து கொண்டு... தன் வீட்டு சோத்துக்கு உப்பை தமிழனின் கண்ணீரில் எடுக்கும் தழிழக அரசியல், மற்றூம் ஆளும் கட்சிகளூக்குமா உறைக்கவில்லை...?

என்னங்கடா உங்கள் நியாயம்? உங்கள் வீட்டில் விழுந்தால் அதற்கு பெயர் எழவு ஆனால் நித்தம் குருவிகளைப் போலச் சுடப்படும் என் மீனவ நண்பனின் உயிர் போனால் அது செய்தியா? லாப நஷ்டக்கணக்குகள் சர்வ நிச்சயமாய் உம்மை நோக்கியும் திரும்பும் அதிகார வர்க்கமே......அப்போது உமது மரணங்களும் உம்மைச்சுற்றி நிகழும் நிகழ்வுகளும் போதிக்கும்.......வலி என்றால் என்னவென்று....

கடிதங்கள் எழுதியும், தந்திகள் கொடுத்தும் நவீன யுகத்தில் ஒரு விளையாட்டு காட்டி முடித்தது தமிழக அரசு.....விளைவு சில ஆயிரக்கணக்கில் தமிழனின் உயிர் சுட்டுச் சுண்ணாம்பாக்கப்பட்டது.....

வல்லரசு வேசமிடும் இந்திய அரசின் ஒற்றை கண்டிப்பு போதும் இலங்கை அரசினை கண்டித்து மீனவர்களை காப்பாற்ற....ஆனால் வெளியுறவுத் துறை செயலரை இலங்கைக்கு அனுப்பி வைத்து மற்றொமொரு கேணத்தனமான அரசியலை நடத்துகிறது மத்திய அரசு....

இந்தமுறை நமது குறிகள் தப்பக்கூடாது உறவுகளே.....! தமிழகக் கட்சிகள் இவற்றையும் அரசியலாக்க திட்டமிட்டு..வாக்கு சேகரிக்கும் உத்தியாக மாற்றும் அபாயமுமிருக்கிறது...சரியான தீர்வை எட்டி நிரந்தரமாய் நம் சகோதரர்கள் மீன் பிடிக்க ஒன்றும் நிகழவில்லையெனில்...

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை புறக்கணித்துதான் ஆகவேண்டும்.....! கடுமையான முடிவுதான்.......எல்லோரும் ஒருமித்து செயல்படுவது கடினம்தான்.......ஆனால்....இப்படிப்பட்ட நிகழ்வுகளை நிகழ்த்தினால்தான்........நாம் குடிகள்......இந்த தேசமும் குடியரசு தேசம்.....!

மறைந்து போன மீனவ தோழர்களுக்கு ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகளும்....இனி இதுபோன்ற நிகழ்வுகள் நிகழா வண்ணம் தடுக்கும் படி அரசை வலியுறுத்தியும் இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது.

படித்ததில் பிடித்தது....................
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எது தீர்வு?  Empty Re: எது தீர்வு?

Post by கலைவேந்தன் Sat Jan 29, 2011 7:43 pm

இந்த காட்ட சாட்டமான கருத்துரை யை வழங்கிய பெருந்தகை யாரென்று பெயர் குறிப்பிடுங்கள் ஸ்ரீஜா... பிரச்சினைக்குரிய பகுதிகளைப் பகிரும் போது இன்னாரது இது என்று குறித்திடல் மிக அவசியம்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum