Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்.....
+12
திவா
nandhtiha
கண்ணன்3536
சிவா
Nallathambi
கலைவேந்தன்
கோவை ராம்
krishnaamma
உதயசுதா
மஞ்சுபாஷிணி
அன்பு தளபதி
நிசாந்தன்
16 posters
Page 3 of 8
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்.....
First topic message reminder :
ஒரு தேசிய இனம் அடிமைப்பட்டிருக்கிறதா அல்லது ஆளும் இறையாண்மை பெற்றிருக்கிறதா என்பதை அதன் தாய்மொழி பெற்றிருக்கும் தகுதியை வைத்து அறிந்து கொள்ளலாம்.
அனைத்து நிலையிலும் அலுவல் மொழியாக அவ்வினத்தின் மொழி இருந்தால் அந்தத் தேசிய இனம் தன்னைத் தானே ஆண்டு கொள்கிறது என்று பொருள். அயல்மொழிதான் முதன்மை அலுவல் மொழியாக இருக்கும், அந்த அயல்மொழியின் தலைமைக்குக் கீழ்பட்டு சொந்த மொழி சிற்சில இடங்களில் பணிவாகத் தலைகாட்டும் என்றால் அந்த இனம் அடிமைப்பட்டிருக்கிறது என்று பொருள்.
இந்தியாவெங்கும் இந்தி கோலோச்சுகிறது. அது கொல்லைப்புற வழியாகக் கோலோச்சவில்லை. இறையாண்மையுள்ள ஓர் அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் படி அது ஆட்சி புரிகிறது. தமிழ்? அந்த அரசமைப்புச் சட்டத்தின் கொல்லைப்புறத்தில் – பின்னிணைப்பு என்ற பெயரில் எட்டாவது அட்டவணையில் மொட்டையாக “மொழிகள்” என்ற தலைப்பின் கீழ் அகரவரிசைப்படி 16ஆவது இடத்தில் செருகப்பட்டுள்ளது.
அரசமைப்பு விதி 343(1)இன் படி அனைத்து இந்தியாவுக்கும் இந்தி ஆட்சி மொழி. தற்காலிகமாக ஆங்கிலம் கூடுதல் ஆட்சி மொழியாக இருக்கும்.[343(3)
இந்திய அரசு நிறுவனங்களில் ஆங்கிலம் பயன்படுத்துவதை எந்த அளவு முடியுமோ அந்த அளவு குறைக்க வேண்டும் என்கிறது அந்தச் சட்டம். [344-2(3)] இதன் பொருள் இந்தியை எந்த அளவு கூடுதலாகத் திணிக்க முடியுமோ அந்த அளவு திணிக்க வேண்டும் என்பதாகும்.
எட்டாவது அட்டவணையில் உள்ள மாநில அலுவல் மொழிகளை உயர்நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாகப் பயன்படுத்த வழி கூரும் விதி 348(2). அதிலேயும் இந்திக்குத்தான் தனிச்சிறப்புரிமை. அந்த விதி இவ்வாறு கூறுகிறது:
“348(2) மேலே உள்ள உட்பிரிவு (a)யின் கிளை(1)இல் யாது கூறப்பட்டிருந்தாலும் ஒரு மாநிலத்தின் ஆளுநர், குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன் இந்தி அல்லது ஏதாவதொரு மாநில அலுவல் மொழியை அம்மொழி பேசும் மாநிலத்தில் அமைந்துள்ள உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்த அதிகாரம் வழங்கலாம்.
ஆனால் உயர்நீதிமன்றத் தீர்ப்புகள், ஆணைகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்”.
இவ்விதியைப் புரிந்து கொள்ள இவ்வாறு விளக்கலாம்.
குடியரசுத் தலைவரின் முன் அனுமதி பெற்று, தமிழக ஆளுநர், தமிழக உயர்நீதிமன்றத்தில் இந்தி மொழியை அல்லது தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்கலாம்.
இந்த விதியின்படி, தமிழக உயர்நீதிமன்றத்தில் இந்தியை வழக்காடு மொழியாக அனுமதிக்குமாறு தமிழக அரசு கோரியிருந்தால் உடனடியாக அனுமதி வழக்கியிருக்கும் இந்திய அரசு. தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக் கேட்டதால்தான் இந்திய அரசு மறுத்துவிட்டது.
இந்திய அரசமைப்புச் சட்டம் பல்வேறு சூழ்ச்சிகளையும் மறைமுகச் சதிகளையும் உள்ளடக்கியிருக்கிறது. விதி 348(2ஐ மேம்போக்காகப் பார்த்தால், அது மாநில மொழிகளை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்கிட வாய்ப்பளித்திருப்பது போல் தோன்றும். ஆனால் அவ்விதியிலும் இந்திக்குத்தான் முன்னுரிமை. இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியும் ஒரு மாநில மொழிதான். இந்தி அல்லது மாநில மொழி என்று போட வேண்டிய தேவையே இல்லை.
மாநில மொழிக்கு வாய்ப்பளிப்பது போல் காட்டிவிட்டு, இந்தியை இந்தி பேசாத மாநிலத்திலும் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக ஆக்கிட உறுதி அளிப்பதே 348(2) விதியின் உள்நோக்கம்.
அதனால்தான் பீகார், உத்திரபிரதேசம், மத்தியப் பிரதேசம், இராயத்தான் மாநிலங்களில் இதே 348(2) விதியைப் பயன்படுத்தி உயர்நீதிமன்ற மொழியாக இந்தியைச் செயல்படுத்திவிட்டது இந்திய அரசு.
இந்த விதியைப் பயன்படுத்தி தமிழக அரசு 2006ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழி ஆக்கிடக்கோரி இந்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்பியது. ஓராண்டுக்குப் பின் அம்மனுவை இந்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. குடியரசுத் தலைவராக அப்போதிருந்த முனைவர் அப்துல் கலாம் பார்வைக்கே அந்த விண்ணப்பத்தை அனுப்பாமல் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
குடியரசுத் தலைவர் அம்மனுவைத் திருப்பி அனுப்பிவிட்டதாக இந்திய அரசு அதிகாரிகள் அறிவித்தனர். அச்செய்தியை ஏடுகளில் பார்த்த அப்துல்கலாம் தம் பார்வைக்கே அம்மனு வரவில்லை என்று தம் செயலாளர் மூலம் அறிக்கை கொடுத்தார்.
மீண்டும் தமிழக அரசு விண்ணப்பம் போட்டுள்ளது. “மேற்கு வங்காளத்தில் வங்க மொழியை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகக் கேட்டார்கள். அக்கோரிக்கையை ஏற்கவில்லை. எனவே தமிழகத்தின் கோரிக்கையையும் ஏற்க முடியாது” என்று இந்திய அரசு கூறுயுள்ளது.
வங்க மொழியை ஏன் ஏற்கவில்லை? அதற்கான அரசமைப்புச் சட்டக் காரணம் என்ன? மேற்கு வங்கத்தைக் காரணம் காட்டி தமிழகத்திற்கு மறுப்பதற்கு அரசமைப்பில் ஏதாவது விதி இருக்கிறதா? இல்லை; இந்திய ஆளும் வர்க்கத்தின் சூதுதான் இருக்கிறது; ஆதிக்க இனத்திமிர்தான் இருக்கிறது.
இதே 348(2) விதியைப் பயன்படுத்தித்தானே மேற்சொன்ன நான்கு மாநிலங்களில் உயர்நீதிமன்ற வழக்காடு மொழி என்ற தகுதியை இந்திக்கு வழங்கியிருக்கிறார்கள்.
உயர்நிதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக் கோரி மதுரையில் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் ஆறு வழக்கறிஞ்சர்கள் 9.6.2010 முதல் சாகும் வரை பட்டினிப் போராட்டம் தொடங்கினர். அக்கோரிக்கையை ஆதரித்து சென்னையிலும் ஏழு வழக்கறிஞர்கள் காலவரம்பற்ற உண்ணாப் போராட்டம் தொடங்கினர். இரு இடங்களிலும் வழக்கறிஞர்கள் தளைப்படுத்தப்பட்டனர். சிறையிலும் உண்ணாப் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர். 21.06.2010 முதல் தமிழில் வழக்காட வாய்மொழி வாக்குறுதி அளித்தார் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு.இக்பால்.
ஆனால் இந்திய அரசு அசையவில்லை. தமிழக முதல்வர் வெற்று வேண்டுகோளோடு தம் கடமையை முடித்துக் கொண்டார். தமிழக அரசு அனுப்பிய விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்று தோண்டி துருவி செய்திகள் வெளியிட்டன ஏடுகள்.
உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட அனுமதி கோரிய தமிழக அரசின் விண்ணப்பம் முதலில் அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, கே.யி.பாலகிருட்டிணன்(தற்போது கையூட்டு மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக விசாரணையில் இருப்பவர்) கருத்துரைக்கு அனுப்பப்பட்டது. அவர், மாநில மொழியில்(தமிழில்) வழக்காட அனுமதிக்கக் கூடாது. எல்லா மாநிலமும் அதே போல் உரிமை கேட்கும். அப்படிச் செய்தால் அது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தாகும். இந்தியா முழுவதும் நீதித்துறை ஒரே சீராக இருப்பதைப் பாதிக்கும் என்று கூறினார்.
பிறகு, சட்ட அமைச்சகத்திலிருந்து உள்துறை அமைச்சகத்தின் ஆய்வுக்கு அனுப்பியுள்ளார்கள்.
தலைமை நீதிபதியின் கருத்தைக் கேட்க வேண்டிய தேவையே இல்லை. அதே போல் உள்துறை அமைச்சகத்திற்கும் விதி 348(2)க்கும் என்ன தொடர்பிருக்கிறது? ஒன்றுமில்லை.
காலம் கடத்தி, கைவிரிப்பதற்காக ஏகாதிபத்திய மனங்கொண்ட ஆட்சியாளர்கள் ‘அடிமைகளின் மொழியான தமிழுக்கு அரியணையா’ என்ற எண்ணத்தில் சூழ்ச்சி செய்கிறார்கள். சுற்றி அடிக்கிறார்கள்.
இதே ஏகாதிபத்திய அரசு இந்தியில் அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரம் படைத்த மொழியாக்கத்தை வெளியிட 1988இல் விதி 394A என்ற சட்டதிருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. இவ்விதியின் படி இன்றைக்கே உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் இந்தியில் தீர்ப்பு எழுதினால் அதைச் செல்லாது என்று கூற முடியாது.
தமிழினம் தில்லிக்கு காலணியாக அடிமைப்பட்டிருக்கிறது என்பதற்கான சான்றுகள்தாம் மேற்சொன்னவை அனைத்தும்.
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கடும் மொழியாக, தீர்ப்பெழுதும் மொழியாகக் கொண்டு வரத் தொடர்ந்து போராடுவோம். அதே வேளை இந்திய ஏகாதிபத்தியத்தின் காலணியத் தளைகளிலிருந்து தமிழ்த் தேசம் விடுபடுவதற்கான போராட்டத்தை விரைவு படுத்துவோம்!
ஒரு தேசிய இனம் அடிமைப்பட்டிருக்கிறதா அல்லது ஆளும் இறையாண்மை பெற்றிருக்கிறதா என்பதை அதன் தாய்மொழி பெற்றிருக்கும் தகுதியை வைத்து அறிந்து கொள்ளலாம்.
அனைத்து நிலையிலும் அலுவல் மொழியாக அவ்வினத்தின் மொழி இருந்தால் அந்தத் தேசிய இனம் தன்னைத் தானே ஆண்டு கொள்கிறது என்று பொருள். அயல்மொழிதான் முதன்மை அலுவல் மொழியாக இருக்கும், அந்த அயல்மொழியின் தலைமைக்குக் கீழ்பட்டு சொந்த மொழி சிற்சில இடங்களில் பணிவாகத் தலைகாட்டும் என்றால் அந்த இனம் அடிமைப்பட்டிருக்கிறது என்று பொருள்.
இந்தியாவெங்கும் இந்தி கோலோச்சுகிறது. அது கொல்லைப்புற வழியாகக் கோலோச்சவில்லை. இறையாண்மையுள்ள ஓர் அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் படி அது ஆட்சி புரிகிறது. தமிழ்? அந்த அரசமைப்புச் சட்டத்தின் கொல்லைப்புறத்தில் – பின்னிணைப்பு என்ற பெயரில் எட்டாவது அட்டவணையில் மொட்டையாக “மொழிகள்” என்ற தலைப்பின் கீழ் அகரவரிசைப்படி 16ஆவது இடத்தில் செருகப்பட்டுள்ளது.
அரசமைப்பு விதி 343(1)இன் படி அனைத்து இந்தியாவுக்கும் இந்தி ஆட்சி மொழி. தற்காலிகமாக ஆங்கிலம் கூடுதல் ஆட்சி மொழியாக இருக்கும்.[343(3)
இந்திய அரசு நிறுவனங்களில் ஆங்கிலம் பயன்படுத்துவதை எந்த அளவு முடியுமோ அந்த அளவு குறைக்க வேண்டும் என்கிறது அந்தச் சட்டம். [344-2(3)] இதன் பொருள் இந்தியை எந்த அளவு கூடுதலாகத் திணிக்க முடியுமோ அந்த அளவு திணிக்க வேண்டும் என்பதாகும்.
எட்டாவது அட்டவணையில் உள்ள மாநில அலுவல் மொழிகளை உயர்நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாகப் பயன்படுத்த வழி கூரும் விதி 348(2). அதிலேயும் இந்திக்குத்தான் தனிச்சிறப்புரிமை. அந்த விதி இவ்வாறு கூறுகிறது:
“348(2) மேலே உள்ள உட்பிரிவு (a)யின் கிளை(1)இல் யாது கூறப்பட்டிருந்தாலும் ஒரு மாநிலத்தின் ஆளுநர், குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன் இந்தி அல்லது ஏதாவதொரு மாநில அலுவல் மொழியை அம்மொழி பேசும் மாநிலத்தில் அமைந்துள்ள உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்த அதிகாரம் வழங்கலாம்.
ஆனால் உயர்நீதிமன்றத் தீர்ப்புகள், ஆணைகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்”.
இவ்விதியைப் புரிந்து கொள்ள இவ்வாறு விளக்கலாம்.
குடியரசுத் தலைவரின் முன் அனுமதி பெற்று, தமிழக ஆளுநர், தமிழக உயர்நீதிமன்றத்தில் இந்தி மொழியை அல்லது தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்கலாம்.
இந்த விதியின்படி, தமிழக உயர்நீதிமன்றத்தில் இந்தியை வழக்காடு மொழியாக அனுமதிக்குமாறு தமிழக அரசு கோரியிருந்தால் உடனடியாக அனுமதி வழக்கியிருக்கும் இந்திய அரசு. தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக் கேட்டதால்தான் இந்திய அரசு மறுத்துவிட்டது.
இந்திய அரசமைப்புச் சட்டம் பல்வேறு சூழ்ச்சிகளையும் மறைமுகச் சதிகளையும் உள்ளடக்கியிருக்கிறது. விதி 348(2ஐ மேம்போக்காகப் பார்த்தால், அது மாநில மொழிகளை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்கிட வாய்ப்பளித்திருப்பது போல் தோன்றும். ஆனால் அவ்விதியிலும் இந்திக்குத்தான் முன்னுரிமை. இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியும் ஒரு மாநில மொழிதான். இந்தி அல்லது மாநில மொழி என்று போட வேண்டிய தேவையே இல்லை.
மாநில மொழிக்கு வாய்ப்பளிப்பது போல் காட்டிவிட்டு, இந்தியை இந்தி பேசாத மாநிலத்திலும் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக ஆக்கிட உறுதி அளிப்பதே 348(2) விதியின் உள்நோக்கம்.
அதனால்தான் பீகார், உத்திரபிரதேசம், மத்தியப் பிரதேசம், இராயத்தான் மாநிலங்களில் இதே 348(2) விதியைப் பயன்படுத்தி உயர்நீதிமன்ற மொழியாக இந்தியைச் செயல்படுத்திவிட்டது இந்திய அரசு.
இந்த விதியைப் பயன்படுத்தி தமிழக அரசு 2006ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழி ஆக்கிடக்கோரி இந்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்பியது. ஓராண்டுக்குப் பின் அம்மனுவை இந்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. குடியரசுத் தலைவராக அப்போதிருந்த முனைவர் அப்துல் கலாம் பார்வைக்கே அந்த விண்ணப்பத்தை அனுப்பாமல் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
குடியரசுத் தலைவர் அம்மனுவைத் திருப்பி அனுப்பிவிட்டதாக இந்திய அரசு அதிகாரிகள் அறிவித்தனர். அச்செய்தியை ஏடுகளில் பார்த்த அப்துல்கலாம் தம் பார்வைக்கே அம்மனு வரவில்லை என்று தம் செயலாளர் மூலம் அறிக்கை கொடுத்தார்.
மீண்டும் தமிழக அரசு விண்ணப்பம் போட்டுள்ளது. “மேற்கு வங்காளத்தில் வங்க மொழியை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகக் கேட்டார்கள். அக்கோரிக்கையை ஏற்கவில்லை. எனவே தமிழகத்தின் கோரிக்கையையும் ஏற்க முடியாது” என்று இந்திய அரசு கூறுயுள்ளது.
வங்க மொழியை ஏன் ஏற்கவில்லை? அதற்கான அரசமைப்புச் சட்டக் காரணம் என்ன? மேற்கு வங்கத்தைக் காரணம் காட்டி தமிழகத்திற்கு மறுப்பதற்கு அரசமைப்பில் ஏதாவது விதி இருக்கிறதா? இல்லை; இந்திய ஆளும் வர்க்கத்தின் சூதுதான் இருக்கிறது; ஆதிக்க இனத்திமிர்தான் இருக்கிறது.
இதே 348(2) விதியைப் பயன்படுத்தித்தானே மேற்சொன்ன நான்கு மாநிலங்களில் உயர்நீதிமன்ற வழக்காடு மொழி என்ற தகுதியை இந்திக்கு வழங்கியிருக்கிறார்கள்.
உயர்நிதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக் கோரி மதுரையில் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் ஆறு வழக்கறிஞ்சர்கள் 9.6.2010 முதல் சாகும் வரை பட்டினிப் போராட்டம் தொடங்கினர். அக்கோரிக்கையை ஆதரித்து சென்னையிலும் ஏழு வழக்கறிஞர்கள் காலவரம்பற்ற உண்ணாப் போராட்டம் தொடங்கினர். இரு இடங்களிலும் வழக்கறிஞர்கள் தளைப்படுத்தப்பட்டனர். சிறையிலும் உண்ணாப் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர். 21.06.2010 முதல் தமிழில் வழக்காட வாய்மொழி வாக்குறுதி அளித்தார் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு.இக்பால்.
ஆனால் இந்திய அரசு அசையவில்லை. தமிழக முதல்வர் வெற்று வேண்டுகோளோடு தம் கடமையை முடித்துக் கொண்டார். தமிழக அரசு அனுப்பிய விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்று தோண்டி துருவி செய்திகள் வெளியிட்டன ஏடுகள்.
உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட அனுமதி கோரிய தமிழக அரசின் விண்ணப்பம் முதலில் அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, கே.யி.பாலகிருட்டிணன்(தற்போது கையூட்டு மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக விசாரணையில் இருப்பவர்) கருத்துரைக்கு அனுப்பப்பட்டது. அவர், மாநில மொழியில்(தமிழில்) வழக்காட அனுமதிக்கக் கூடாது. எல்லா மாநிலமும் அதே போல் உரிமை கேட்கும். அப்படிச் செய்தால் அது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தாகும். இந்தியா முழுவதும் நீதித்துறை ஒரே சீராக இருப்பதைப் பாதிக்கும் என்று கூறினார்.
பிறகு, சட்ட அமைச்சகத்திலிருந்து உள்துறை அமைச்சகத்தின் ஆய்வுக்கு அனுப்பியுள்ளார்கள்.
தலைமை நீதிபதியின் கருத்தைக் கேட்க வேண்டிய தேவையே இல்லை. அதே போல் உள்துறை அமைச்சகத்திற்கும் விதி 348(2)க்கும் என்ன தொடர்பிருக்கிறது? ஒன்றுமில்லை.
காலம் கடத்தி, கைவிரிப்பதற்காக ஏகாதிபத்திய மனங்கொண்ட ஆட்சியாளர்கள் ‘அடிமைகளின் மொழியான தமிழுக்கு அரியணையா’ என்ற எண்ணத்தில் சூழ்ச்சி செய்கிறார்கள். சுற்றி அடிக்கிறார்கள்.
இதே ஏகாதிபத்திய அரசு இந்தியில் அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரம் படைத்த மொழியாக்கத்தை வெளியிட 1988இல் விதி 394A என்ற சட்டதிருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. இவ்விதியின் படி இன்றைக்கே உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் இந்தியில் தீர்ப்பு எழுதினால் அதைச் செல்லாது என்று கூற முடியாது.
தமிழினம் தில்லிக்கு காலணியாக அடிமைப்பட்டிருக்கிறது என்பதற்கான சான்றுகள்தாம் மேற்சொன்னவை அனைத்தும்.
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கடும் மொழியாக, தீர்ப்பெழுதும் மொழியாகக் கொண்டு வரத் தொடர்ந்து போராடுவோம். அதே வேளை இந்திய ஏகாதிபத்தியத்தின் காலணியத் தளைகளிலிருந்து தமிழ்த் தேசம் விடுபடுவதற்கான போராட்டத்தை விரைவு படுத்துவோம்!
நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
nan.thiru இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்.....
விவாதங்கள் யார் மனதையும் புண்படுத்துவதாக இருக்க வேண்டாம் உறவுகளே!
சாந்தமாக உரையாடுங்கள்!
சாந்தமாக உரையாடுங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்.....
நிஷாந்தன் இனி நீங்கள் எந்த பிரிவினை வாத கட்டுரைகள் இட்டாலும் நான் மறுமொழி தரப்போவதில்லை.நான் துபாயில் இருந்தாலும் நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொண்டுதான் இருக்கிறேன்.என் நாட்டு அரசுக்கு ஆதரவாக பேசாமல் உங்களை போல சொந்த நாட்டுக்கும் ஆதரவாக பேசாமல்நிசாந்தன் wrote:சுதா அவர்களே நான் இந்த நாட்டில் பிறந்தவன். எனக்கு இங்கு குடியுரிமை உள்ளது. அதற்காக இந்த இந்தியா செய்யும் கீழ்தரமான வேளைகளை நியாயப்படுத்த முடியாது. நீங்கள் துபாயில் உட்கார்ந்து கொண்டு இந்தியாவில் என்ன நடக்கிறது என்று எதுவே தெரியாமல் பேசக் கூடாது. முதலில் வடமேற்கு மாநிலங்களில் நடப்பதையும், காசுமீரில் நடப்பதையும் அறிந்துகொண்டு வந்து பேசுங்கள். சன் செய்திகள், கலைஞர் டிவி, இந்து, தினமலர் பத்திரிக்கைகளை படித்துவிட்டு இந்திய அரசுக்கு ஒத்து ஊதமல் தெளிவுடன் பேசுங்கள்
வாழ்வு கொடுத்த நாட்டுக்கும் ஆதரவாக பேசாமல் நன்றி கெட்ட தனமாக இருக்க என்னால் இயலாது.என் நாடு என்ன செய்தாலும் எனக்கு உயர்ந்ததுதான்.
யார் என்ன சொன்னாலும் என் நாட்டை எதுவும் செய்திட யாராலும் முடியாது.
நீங்கள் இடும் பதிவுகள் சூரியனை பார்த்து நாய் குறைத்திட்ட கதைதான்.
உங்களுக்கு நான் மறுமொழி இட்டால் அந்த நாயை பார்த்து நான் திரும்ப குறைத்த கதை ஆகிடும்.இத்தனை காலமும் நான் அதைத்தான் செய்துள்ளேன் என்று நினைத்து நான் வெட்கி தலை குனிகிறேன்.அதனால் இனி உங்கள் பதிவுகளுக்கு எதிர்வாதமோ இல்லை மறுமொழியோ என்னிடம் இருந்து வராது.
இதுதான் உங்களோட பதிவுகளுக்கு என் கடைசி மறுமொழி
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்.....
நன்றி. இங்குள்ள பலருக்கு இந்தியாவின் உண்மை முகம் தெரியாது. எனது பதிவுகளின் தலைப்பை மட்டும் படித்துவிட்டு பேசாமல், முழுவதுமாக படித்துவிட்டு பேசவும்.
நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
Re: ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்.....
நிசாந்தன் wrote:நன்றி. இங்குள்ள பலருக்கு இந்தியாவின் உண்மை முகம் தெரியாது. எனது பதிவுகளின் தலைப்பை மட்டும் படித்துவிட்டு பேசாமல், முழுவதுமாக படித்துவிட்டு பேசவும்.
நான் எப்பவும் உங்க பதிவ முழுசா படிச்சுட்டுதான் பின்னூட்டம் போடுறேன். ஆனா இனி உங்கள் பதிவுகள் எதையும் நான் உள்ளிட்ட சில நண்பர்கள் படிப்பதில்லைன்னு முடிவு செய்து இருக்கோம்.உங்க பதிவ படிச்சாதானே திரும்பவும் பதிலடி தரனும்ன்னு தோணும்.அதனால நீங்க பாட்டுக்கு இனி பதிவு போடலாம்,
எந்த எதிர்ப்பும் இருக்காது.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்.....
ஒரு பொறுப்புள்ள நடத்துனராக நீங்களும் தலைமை நடத்துனராக நானும் இவர் அளிக்கும் பிரிவினை வாதத்தை மௌனமாகக்கூட இருந்து அங்கீகரித்தல் கூடாது சுதா.. அனைத்தையும் வாசிக்கவேண்டும். எல்லை கடக்கும் போது அந்த பதிவை உரியமுறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இது நம் கடமை சுதா... அதற்காக இவர் என்ன சொன்னாலும் பதில் சொல்லவேண்டாம் என்று அமைதியாகப் போவதும் சரியிலலை.
எனக்கு ஒரு விடயம் புரியவில்லை. இந்த பிரிவினை வாதங்கள் மூலமும் சோகால்ட் இந்தியாவின் உண்மை முகம் பற்றி சொல்லவும் இவர் யார்?
தமிழகத்தில் இருப்பவர் அங்கே மேடை போட்டு இதை எல்லாம் முழங்கட்டும்.
இங்கே பல்லாயிரக்கணக்கானோர் வாசிக்கும் ஈகரையில் விஷ விதைகளை அனுமதிக்க இயலாது.
இனியும் இவரது இது போன்ற பிரிவினைகள் தொடர்ந்தால் இவரை நீக்குவேன் ... அல்லது நானே விலகுவேன்... இது மட்டும் உறுதி..!
இது நம் கடமை சுதா... அதற்காக இவர் என்ன சொன்னாலும் பதில் சொல்லவேண்டாம் என்று அமைதியாகப் போவதும் சரியிலலை.
எனக்கு ஒரு விடயம் புரியவில்லை. இந்த பிரிவினை வாதங்கள் மூலமும் சோகால்ட் இந்தியாவின் உண்மை முகம் பற்றி சொல்லவும் இவர் யார்?
தமிழகத்தில் இருப்பவர் அங்கே மேடை போட்டு இதை எல்லாம் முழங்கட்டும்.
இங்கே பல்லாயிரக்கணக்கானோர் வாசிக்கும் ஈகரையில் விஷ விதைகளை அனுமதிக்க இயலாது.
இனியும் இவரது இது போன்ற பிரிவினைகள் தொடர்ந்தால் இவரை நீக்குவேன் ... அல்லது நானே விலகுவேன்... இது மட்டும் உறுதி..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்.....
நான் தமிழன் என்பதற்கப்பால் எனக்கு உரிமை இல்லை என்பதல்ல .யாரும் கோவிக்க வேண்டாம் .
நாங்கள் பறந்து விரிந்து சிந்திப்பதில் தப்பில்லை .ஆனால் குனியக்குனிய குட்டக்குடாது .எனக்கு சரியான விபரங்கள் தெரியாது விஜெகாந்த் போல .ஆனாலும் சொல்கிறேன் இந்தியா சுகந்திரம் அடையமுன்னர் அது தனித்தனி ராஜாங்கமாக ஒவ்வொருவரும் தங்களை தாங்களே ஆண்டுவந்தனர் .இது அடிப்படையில் எல்லோருக்கும் தெரிந்த வரலாறு .தமிழர்களை தமிழர்களே ஆண்டுவந்தனர் .படையெடுப்புகளை திறம்பட நடத்தினர் கடாரம் வரை சோழக்கொடிஏற்றினர் என்பதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.அதன்பிறகு அரேபிய படையெடுப்பு .போர்த்துக்கேய படையெடுப்பு ஒல்லாந்தர் ஆங்கிலேயர் என எல்லோரும் கொள்ளையடித்து சாறுபிழிந்து சக்கை ஆக்கியபின்னரே .1947 சுகந்திரம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது .அதற்கான காரணம் உண்மையில் சுபாஸ் சந்திர போசின் ஆயுதப்போராட்ட முஸ்தீபு தான் .ஏனென்றால் 1947 அளவில் இந்திய சனத்தொகை 30 கோடிக்குமேல் .வெள்ளைக்காரர் ஆயிரக்கணக்கில் தான் இருந்தார்கள் .அவர்கள் இருந்த நேரத்திலேயே உணர்வுமிக்க போராட்டக்காரர்களை அளித்திருந்தனர் ,முளுமக்களையும் அடிமைப்படுத்திவைத்திருன்தனர் .இப்போ மீண்டும் முளைத்தேளுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை .அத்துடன் 2 ம் உலகப்போறால் உலகம் பலமாறரன்களை கண்டிருந்தது .அவ்வேளையில் காகம் இருக்க பனம்பழம் விளுந்தகதைபோல காந்தியை முன்னிலைப்படுத்தி சுகந்திரம் வழங்கப்பட்டது .இதனை முதலில் அனைவரும் விளங்கிக்கொள்ளுங்கள்.பிறகு திட்டமிட்டவகையில் சுபாஸ் ஓரளவு மறக்கடிக்கப்பட்டார் .
நான் நினைக்கிறேன் தலித் என குறிப்பிடப்படும் அம்பேத்கார் என்பவரால் தான் இந்திய சட்டதிட்டங்கள் வரையப்பட்டன .உண்மையிலேயே புண்படுத்தவில்லை .அடிமைகள் எஜமானர்களுக்கு கடும்விசுவாசமாக இருப்பார்கள் .அந்தவகையில் ஹிந்தி அரசுக்கு காவடிதுக்கி எழுதப்பட்டுள்ளது .சரி அதைவிடுவோம்
முதலில் நாங்கள் தமிழர்கள் அதன் பின்னரே இந்தியர்கள் .உங்களுக்கு அந்த உணர்வு இருக்காது இருக்கலாம் ஏனென்றால் .......ஆனான் ஒரு கட்டத்துக்கு மேல்மீண்டு வரும் தமிழ் உணர்வு
ஹிட்லர காலத்தில் ஒரு பாதிரிக்கதை சொல்வார்கள் .ஒவ்வொருவராக தேடி வந்து கைதுசெய்து கொண்டுபோய் அளிப்பார்கள் .அப்போது சும்மா இருந்தேன் .இறுதியில் என்னை தேடி வந்தார்கள் எனக்காக ஒருவருமே இல்லை .இந்தநிலை வரவேண்டாம் தமிழர்களே
நன்றி
நாங்கள் பறந்து விரிந்து சிந்திப்பதில் தப்பில்லை .ஆனால் குனியக்குனிய குட்டக்குடாது .எனக்கு சரியான விபரங்கள் தெரியாது விஜெகாந்த் போல .ஆனாலும் சொல்கிறேன் இந்தியா சுகந்திரம் அடையமுன்னர் அது தனித்தனி ராஜாங்கமாக ஒவ்வொருவரும் தங்களை தாங்களே ஆண்டுவந்தனர் .இது அடிப்படையில் எல்லோருக்கும் தெரிந்த வரலாறு .தமிழர்களை தமிழர்களே ஆண்டுவந்தனர் .படையெடுப்புகளை திறம்பட நடத்தினர் கடாரம் வரை சோழக்கொடிஏற்றினர் என்பதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.அதன்பிறகு அரேபிய படையெடுப்பு .போர்த்துக்கேய படையெடுப்பு ஒல்லாந்தர் ஆங்கிலேயர் என எல்லோரும் கொள்ளையடித்து சாறுபிழிந்து சக்கை ஆக்கியபின்னரே .1947 சுகந்திரம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது .அதற்கான காரணம் உண்மையில் சுபாஸ் சந்திர போசின் ஆயுதப்போராட்ட முஸ்தீபு தான் .ஏனென்றால் 1947 அளவில் இந்திய சனத்தொகை 30 கோடிக்குமேல் .வெள்ளைக்காரர் ஆயிரக்கணக்கில் தான் இருந்தார்கள் .அவர்கள் இருந்த நேரத்திலேயே உணர்வுமிக்க போராட்டக்காரர்களை அளித்திருந்தனர் ,முளுமக்களையும் அடிமைப்படுத்திவைத்திருன்தனர் .இப்போ மீண்டும் முளைத்தேளுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை .அத்துடன் 2 ம் உலகப்போறால் உலகம் பலமாறரன்களை கண்டிருந்தது .அவ்வேளையில் காகம் இருக்க பனம்பழம் விளுந்தகதைபோல காந்தியை முன்னிலைப்படுத்தி சுகந்திரம் வழங்கப்பட்டது .இதனை முதலில் அனைவரும் விளங்கிக்கொள்ளுங்கள்.பிறகு திட்டமிட்டவகையில் சுபாஸ் ஓரளவு மறக்கடிக்கப்பட்டார் .
நான் நினைக்கிறேன் தலித் என குறிப்பிடப்படும் அம்பேத்கார் என்பவரால் தான் இந்திய சட்டதிட்டங்கள் வரையப்பட்டன .உண்மையிலேயே புண்படுத்தவில்லை .அடிமைகள் எஜமானர்களுக்கு கடும்விசுவாசமாக இருப்பார்கள் .அந்தவகையில் ஹிந்தி அரசுக்கு காவடிதுக்கி எழுதப்பட்டுள்ளது .சரி அதைவிடுவோம்
முதலில் நாங்கள் தமிழர்கள் அதன் பின்னரே இந்தியர்கள் .உங்களுக்கு அந்த உணர்வு இருக்காது இருக்கலாம் ஏனென்றால் .......ஆனான் ஒரு கட்டத்துக்கு மேல்மீண்டு வரும் தமிழ் உணர்வு
ஹிட்லர காலத்தில் ஒரு பாதிரிக்கதை சொல்வார்கள் .ஒவ்வொருவராக தேடி வந்து கைதுசெய்து கொண்டுபோய் அளிப்பார்கள் .அப்போது சும்மா இருந்தேன் .இறுதியில் என்னை தேடி வந்தார்கள் எனக்காக ஒருவருமே இல்லை .இந்தநிலை வரவேண்டாம் தமிழர்களே
நன்றி
Re: ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்.....
சுதந்திரம் வழங்கப்பட்டது... நாம் அதை வாங்கவில்லை...
சிலருக்கு அது புரிந்தால் சரி....
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்...
விழ விழ எழுவோம் .....
சிலருக்கு அது புரிந்தால் சரி....
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்...
விழ விழ எழுவோம் .....
Guest- Guest
Re: ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்.....
சூதந்திரம் வழங்கப்பட்டதா ?உங்கள் ரவுசுக்கு அளவே இல்லயா ?போராடி பெற்றது சுதந்திரம் .வேறு வழி இல்லாமல் வெள்ளைக்காரன் சுதந்திரம் வழங்கினான் . தயவு செய்து கொச்சை படுத்தாதீர்கள்
ராம்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்.....
நீங்கள் காந்திக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சுபாஸ் அவர்களுக்கு கொடுக்கிறீர்களா?
Re: ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்.....
எதுக்கு கொடுக்கணும் .சுபாஷ் தொற்று போனவர் .காந்தி வெற்றி பெற்றவர் .வெற்றி பெற்ற வருக்குதான் வரலாற்றில் எப்போதும் மதிப்பு .
அதற்காக சுபாசுக்கு மதிப்பே கொடுக்கவில்லை என அற்தம் இல்லை.
சுபாஷ் ஜப்பானின் உதவியுடன் இந்தியா விடுதலை பெற நினத்தார் .
அண்ணல் காந்தி தன் மக்கள் தானாகவே விடுதலை பெற நினத்தார் .
காந்தி நினத்ததுதான் நடந்தது .
பணம் பழம் தானாகவே வந்தது எல்லாம் ரொம்ப ஓவர்
ராம்
அதற்காக சுபாசுக்கு மதிப்பே கொடுக்கவில்லை என அற்தம் இல்லை.
சுபாஷ் ஜப்பானின் உதவியுடன் இந்தியா விடுதலை பெற நினத்தார் .
அண்ணல் காந்தி தன் மக்கள் தானாகவே விடுதலை பெற நினத்தார் .
காந்தி நினத்ததுதான் நடந்தது .
பணம் பழம் தானாகவே வந்தது எல்லாம் ரொம்ப ஓவர்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» அஞ்சல் வழியில் இந்தி மொழி ரூ.50 ல் கற்கலாம். (தமிழ் வழி)
» வேலன்:-எளிய முறையில் தமிழ்,ஆங்கிலம். இந்தி மற்றும் தெலுங்கு மொழி கற்க
» இந்தி மொழி தேசிய மொழியா ?
» இலங்கையில் அதிகரிக்கும் இந்தி மொழி பயன்பாடு
» தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
» வேலன்:-எளிய முறையில் தமிழ்,ஆங்கிலம். இந்தி மற்றும் தெலுங்கு மொழி கற்க
» இந்தி மொழி தேசிய மொழியா ?
» இலங்கையில் அதிகரிக்கும் இந்தி மொழி பயன்பாடு
» தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
Page 3 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|