புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_c10ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_m10ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_c10 
32 Posts - 82%
heezulia
ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_c10ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_m10ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_c10 
5 Posts - 13%
viyasan
ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_c10ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_m10ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_c10ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_m10ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_c10ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_m10ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_c10 
209 Posts - 41%
heezulia
ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_c10ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_m10ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_c10ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_m10ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_c10ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_m10ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_c10 
21 Posts - 4%
prajai
ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_c10ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_m10ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_c10ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_m10ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_c10ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_m10ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_c10ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_m10ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_c10ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_m10ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_c10ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_m10ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat 22 Jan 2011 - 12:13

அனைவருக்கும் வணக்கம்
தினமலரி. ஒரு வாசகர் எழுதிய கடிதம் ஸ்பெக்ட்ரம் 2 ஜி பற்றி விளக்கமாக உள்ளது, ஈகரை அன்பர்களுக்கு உதவும் என்ற எண்ணத்தில் பதிவிடுகிறேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=171021


Sivakumar.M - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

2011-01-22 00:24:52 IST Report Abuse



"2G ஸ்பெக்ட்ரம்"
ஒரு இந்தியன் மூலம் செய்யபட்ட முறைகேடு, ஊழல் ஒவ்வொரு இந்தியனையும் வெகுவாக
பாதித்துள்ளது. அதில் தலித், முதலியார், பிராமிணர், வன்னியர், முஸ்லிம்,
கிறித்துவன் என்று பாகுபாடு இல்லை. ஊழல் செய்தவருக்கே தான் செய்யபோகும்
இந்த ஊழல் தன்னை சார்ந்த ஜாதி மக்களையும் சேர்த்துதான் பாதிக்கும் என்பதை
தெள்ள தெளிவாக தெரிந்துகொண்டுதான் இந்த ஊழலை சுயநலத்துடன் செய்துள்ளார்.
அப்படி இருக்கையில் எங்கிருந்து தனியாக வந்தது "தலித்" என்னும் மந்திர
சொல். மன்னிக்கவும் தந்திர சொல். அனைத்து தகுதிகளுடனும், போதிய அனுபவமும்
உள்ள S.Tel நிறுவனம் சுமார் 13,000 கோடிக்கு வங்கி காசோலை கொடுத்து 2G
உரிமத்தை வாங்க முன்வந்தது. கிடைக்காமல் பிரதமர் அலுவலகத்துக்கே நியாயம்
கேட்டு கடிதம் எழுதி உள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இருந்து நியாயமோ அல்லது
பதில் கடிதமோ வரவில்லை. இதனால்தான் அந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தை அணுகி
நியாயம் கேட்டுள்ளது. அதன் பின்னர் தான் பத்திரிகைகள், எதிர்கட்சிகள்,
பொதுநல அமைப்புகள், CAG ,PAC போன்றவை முழித்தனர் . பல தகுதி இல்லாத
நிறுவனங்களுக்கு விதிகளுக்கு முரணாக உரிமங்கள் வழங்கபட்டுள்ளது. அதுவும்
வெறும் 1200, 1300,1650 கோடிகளுக்கு வழங்கபட்டுள்ளது. உண்மை இவ்வாறு
இருக்க சில அரசியல் தேசதுரோகிகள் 2G - யில் ஊழல் செய்யப்படவில்லை
கைபேசியில் பேசுவதற்கு உண்டான கட்டணம் குறைக்கபட்டு புரட்சி
செய்யபட்டுள்ளது என்று பொய்களை மக்களிடம் பரப்புவது தெரிந்தே தவறு
செய்வதில் நல்ல புலமை அடைந்தவர்கள் என்பது நிரூபணம் ஆகிறது. மக்களை பற்றியோ
நாட்டை பற்றியோ எள்ளளவும் கவலை படாதவர்கள் என்பது நன்கு புலப்படுகிறது.
இந்த கட்டணம் குறைந்தது சந்தையில் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியின்
காரணம் என்பது படித்த அறிவார்ந்த மக்களுக்கு நன்றாக தெரியும். அதை போதிய
விளக்கங்களுடன் விவரிக்க விரும்புகிறேன்.

இதை 1999 ஆண்டில் இருந்து ஆரம்பம் செய்வது நல்லது. இந்த ஆண்டில்
தான் தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று வெறும் பணம்
படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின் எண்ணிக்கை
மிக குறைவு. பலலட்சங்கள், சில கோடிகள் மட்டுமே. தொழில் நுட்பவளமான 1G
அல்லது 2G அலைவரிசை மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது.
ஆனால் உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை
கொடுத்து உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு
ரூபாய் 1.40 கட்டணம் வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க
வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தான் வாதி படைத்தவர்களாச்சே
என்று இஷ்டத்திற்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள்
விரையம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.
நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற
அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை
தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின்
எண்ணிக்கை அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. 2010
நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும்
மேல். இதற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள்
அரசிடம் இன்றும் உள்ளனர். ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60
கோடிதான். 122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது.
தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி
டெபொசிட் அது மட்டும் இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை
தொடங்க வேண்டும். இந்த குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால்
உதவும். டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம்
வாங்கியுள்ளனர். இதோடு அந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து
கொள்ளுங்கள்.

நியாய கணக்கு:

இந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல்
உள்ளது. எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது
கைபேசியை ஒரு நாளைக்கு வெறும் ஐந்து நிமிடங்கள் பயன்படுத்துவதாக
வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம். அப்போ 5x0.40 =2.0
ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x2 = 120
கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30x120 = 3600 கோடிகள்.
ஒரு வருடத்திற்கு 365x3600 = 13,14,000 கோடிகள். 2008 இல் 2G ஏலம்
விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ குறைந்தபட்ச
வருமானம் இன்றுவரை 26,28,000 கோடிகள். இதுதான் கணக்கு. இது ஒரு நாளைக்கு
வெறும் ஐந்து நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு
கிடைத்திருக்கும் வருமானம். இதோடு SMS, MMS, ISD மற்றும் ஐந்து
நிமிடத்திற்கு அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி
கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.
என்னால் கணக்கிடவே முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி
காண்பிப்பது "INFINITIVE". இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு
கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும்.
கிடைத்ததா? மக்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு
மக்களும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்திற்கு
புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சில
ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது. விலைவாசி உயரும்.
பொருளாதாரம் நாசாகும். "Above middle Class" மக்கள் நடுத்தர மக்களாகவும்,
நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் மேலும் பரம ஏழைகளாகவும்
மாறுவார்கள்.

துரோகம்-1: உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும்
அதிகம் பொறுமானம் உள்ள(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு வாங்க
முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300
,1650 கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டிய,
மக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.
துரோகம்-2: பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி
நாட்டு நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால்
அரசுக்கு அதாவது பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில
சுய நல தனி மனிதர்களை சென்று அடைந்துள்ளது.
துரோகம்-3: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான
நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan" போன்ற லெட்டர் பேட்
நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை
என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி
இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்ற
பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர்
பேட் நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இவைகள் சேவையை தொடங்கி
இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது
இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு
"S.TEL போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம்
தெளிவாக எழுகிறது.
துரோகம்-4: MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில்
அலைகற்றைகளை ஒதுக்கி போதிய ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில்
பேசும் கட்டணம் நிமிடத்திற்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள்
அரசினால் பயன் அடைந்து இருப்பார்கள்.
துரோகம்-5: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது
பங்குகளை பல வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான்
போன்ற நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும்
பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய
அச்சுறுத்தல்.
துரோகம்-6: நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG ,தொலைதொடர்பு
சம்பந்தபட்ட, கைபற்றபட்ட ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள்
புறகணிப்பு, சட்ட,நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள்
புறகணிப்பு இப்படி கோடி கணக்கில் ஆதாரங்கள், சாட்சிகள் சுளையாக இருந்தும்
குற்றவாளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காதது மக்களுக்கு இழைக்கபட்ட ஆறாவது
துரோகம். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள்
வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில்லை. அதிலும் முறைகேடு.
துரோகம்-7: இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த
தவறை ஒப்பு கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய்
பிரச்சாரம் செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன்
உச்சகட்டம்தான் 2G யில் ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய
அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி
வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள் என்ற ஆணவ நினைப்பு.
துரோகம்-8: நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை
பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி
மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.
துரோகம்-9: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள்
பெரும்பாலானவை இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய
நாடுகளில்,வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம்
அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால் ஏராளமான அரசு கல்லூரிகள், பள்ளிகள்,
பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என்று உருவாக்கி அனைவருக்கும்
கல்வி,வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத
நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை கண்டிருக்கலாம்.
துரோகம்-10: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற இனத்தை
சேர்ந்த ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு
வாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்து. ஒரு
முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு
செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும்
துன்பங்களுக்கு இதை விட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால்
வலையில் தங்காது. இதுதான் ஊழலின் விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும்
கொசுக்கள் மாதிரி. நம்மிடம் உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டும் இல்லை
அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும் நமது ரத்தத்தில் விட்டு செல்கின்றனர்.

இப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது.
இந்த ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுத்தி சுத்தி
அடிக்கும். எப்படி? ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு
விலைக்கு வாங்கப்பட்டு அதை பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து
விற்கப்படுகிறது. ஒரு ஏக்கரை குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை
வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட
வாங்க முடியவில்லை. இதுதான் ஊழலின் விளைவு. இப்போது புரிந்து இருக்கும்
ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்று. இது மட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து
அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து
அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான் செய்கின்றனர். அவர்கள்
சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல. அனைத்தும் மிக மிக
செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை மூடி
மறைக்கும் செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து
பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும்
பணக்காரர்கள் ஆவார்கள். அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள்
மேலும் ஏழைகளாக ஆவார்கள். இந்த ஏழை, பணக்காரன் இடை வெளியை குறைக்கத்தான்
அரசாங்கம் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். இன்று ஆளும் வர்க்கத்தினரே
அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள். சொல்லபோனால் அரசின் கடமைகளை
அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களும்
தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின் செல்கின்றனர். இலவசம் வாங்கும்
மக்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் உழைப்பு என்னும்
மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் நீங்கள்
ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள் வாழ்கை தரமும் உயரபோவதில்லை.
இலசவசம் கொடுக்க தேவையான வரிபணத்தை செலுத்தும் உழைக்கும் மக்களின் வாழ்கை
தரமும் உயரபோவதில்லை. இது நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது. இலவசம்
மாறவில்லை என்றால் உங்கள் வாழ்கை தரமும் மாறபோவதில்லை.

மக்கள்தொகை நாளுக்கு நாள் பெருகுகிறது. ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம்
அதை விட அதிகமாகிறது. ஊழலை ஒழிக்காமல் 5 %, 6 % வளர்ச்சி என்று அரசு
கூறுவது ஒரு வகையிலும் இந்தியாவை வல்லரசாக்காது. இந்த எண்ணிக்கையிலும்
எவ்வளவு உண்மை உள்ளதோ! இறைவனுக்கே வெளிச்சம்.

எனது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள்
என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும்
நண்பர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான். எனவே
தெரிந்துகொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும்
தெரியபடுத்துங்கள். நன்றி.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat 22 Jan 2011 - 12:29

தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி நந்திதா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Sat 22 Jan 2011 - 12:52

உங்கள் கட்டுரையின் மூலம் நான் 2ஜி ஊழல் பற்றி மிக நன்றாக தெரிந்து கொண்டேன். என்னால் முடிந்தவரை அனைவருக்கும் இது பற்றி கூறுவேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.............



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat 22 Jan 2011 - 13:43

இப்படி நீங்கள் விலாவாரியாக போட்டிருக்கிறீர்கள் .ஸ்ராலின் ஊழலே நடக்கவில்லைஎன்ருசொல்லி காகிதாலை தொடகுகிறார் .கபில்சிபல் மாவரைக்கிறார் .நான் நேற்று தொலைக்காட்சியில் பார்த்தேன் இலவசதொளைக்காட்சிக்கு ஆ தி மூ க ஆட்கள் சாலைமறியலில் கிடைக்கவில்லை என்பதற்காக ஈடுபடுகிறார்கள் .என்ன தமிழா இது ?உணர்வு செத்துவிட்டதா ?அப்துல் கலாம் அவர்களின் கனவு கனவாகவே போய்விடும் என்பது மட்டும் உண்மை .இன்னும் கொஞ்ச காலத்தில் மக்கள் தொகை கூட என்பதற்காக கலைஞர் (கொலைஞர் )இலவச நஞ்சு கொடுப்பார் வாங்கி குடித்திட்டு படு தமிழா .....

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat 22 Jan 2011 - 14:21

இவனுங்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராது
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat 22 Jan 2011 - 15:05

பட்டதாரி ஆன எனக்கு இந்த விவகாரம் பற்றி முழுமையாக தெரியாது.உங்க கட்டூரைய படிச்சுதான் தெரிஞ்சுக்கிட்டேன்.ஆனா படிக்காத பாமர மக்கள் இந்த மிக பெரிய ஊழலை எப்படி புரிஞ்சுக்க போறாங்க?

அதனால் நம்மால் முடிந்தவரை இந்த ஊழல் பற்றி அனைவருக்கும் எடுத்து சொல்லுவோம்.

நன்றி நந்திதாக்கா



ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Uஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Dஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Aஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Yஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Aஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Sஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Uஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Dஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Hஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் A
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat 22 Jan 2011 - 16:07

அனைவருக்கும் வணக்கம்
நானே இதைப் படித்து விட்டுத் தான் இதன் ஆழத்தைப் புரிந்து கொண்டேன், இதனை தினமலருக்கு எழுதிய திரு சிவ குமாரும் அதனை இங்கு பதிவு செய்ய வசதி செய்து தந்த பெருமதிப்புக்குரிய டாக்டர் சிவாவும் நன்றிக்கு உரியவர்கள், என்னிடம் வந்த நன்றிகள் அனைத்தையும் இந்த இருவருக்கும் அர்ப்பணிக்கிறேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat 22 Jan 2011 - 16:09

இந்த கட்டுராயை அனைத்து மக்களுக்கும் போயி சேரட்டும் முடிந்தவரை நண்பர்களுக்கு லிங்க் கொடுங்கள் மின்னஞ்சலில் அனுப்புங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 22 Jan 2011 - 16:12

அனைவரும் அறியும் வண்ணம் ஸ்பெக்ட்ராம் பற்றிய விளக்கக் கட்டுரையைப் பதிந்ததற்கு நன்றி அக்கா!



ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat 22 Jan 2011 - 22:45

உங்கள் கட்டுரையின் மூலம் நான் 2ஜி ஊழல் பற்றி மிக நன்றாக தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.............

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக