Latest topics
» கருத்துப்படம் 27/09/2024by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு
2 posters
Page 1 of 1
இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு
இந்தியர்கள் போதுமான அளவிற்கு பேசியுள்ளனர், போதுமான அளவிற்கு மனுக்கள் கொடுத்துள்ளனர் – ஆனால் போதுமான அளவிற்குச் செயல்படவில்லை. “ஆகவே, வாருங்கள், இப்போது செயல்படுவோம்!”
இண்டர்லோக் என்ற மலாய் பாடநூலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க நேற்று இரவு கூடியிருந்த இந்திய அரசு சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் இவ்வாறான நிலைப்பாட்டை வலியுறுத்தினர்.
அரசாங்கம் இப்புத்தகத்தை மீட்டுக்கொள்வதை உறுதிப்படுத்துவதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் பேசிய ஒவ்வொருவரும் அறைகூவல் விடுத்தனர்.
பெட்டாலிங் ஜெயா, மலேசிய இந்து சங்கத்தின் தலைமையகத்தில் நடந்த இக்கூட்டத்தில் 50 அமைப்புகளைச் சேர்ந்த 70 க்கு மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இரண்டு மணி நேரத்திற்குமேல் நடந்த அக்கூட்டத்தில் இண்டர்லோக் விவகாரத்தில் இந்து சங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்விதத் தடுமாற்றமும் இருந்ததில்லை என்று கூறப்பட்டது.
“நூல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும்”
“மாணவ இளைஞர்களின் சிந்ததனை மாசுப்படுத்தி வன்முறை பண்பாட்டிற்கு வழிகாட்டும் இந்நூல் கண்டிப்பாக அகற்றப்பட வேண்டும்”, என்று இந்து சங்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் பாலா தம்பிலிங்கம் அவரின் தொடக்க உரையில் கூறினார்.
“எங்களுடைய நிலைப்பாட்டில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இவ்விவகாரத்தில் நமது பொதுவான நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு முன்பு இதர இந்திய அரசு சார்பற்ற அமைப்புகளின் கருத்தை அறிந்துகொள்ள விரும்புகிறோம்”, என்றாரவர்.
மஇகாவால் நியமிக்கப்பட்ட குழுவினர் கல்வி அமைச்சின் அதிகாரிகளோடு நடத்திய சந்திப்பு பற்றி குறிப்பிட்ட அவர், அப்பிரதிநிதிகள் அப்புத்தகம் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்று ஏகமனதான கோரிக்கை விடுத்தனர் என்றார்.
ஆனால், கல்வி அமைச்சர் முகைதின் யாசின் வேறுபட்ட நிலையை குறிப்பிட்டுள்ளார். அந்நூலில் இந்திய சமூகத்தை இழிவுபடுத்தும் எதுவும் இல்லை என்ற ஒருமித்த கருத்தை அச்சந்திப்பு கண்டதாக தெரிவித்தார்.
“இது உண்மையல்ல”, என்று பாலா கூறினார். மஇகா தலைவர் ஜி. பழனிவேல் அந்நூல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இக்கோரிக்கை புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, அடுத்த நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, என்ன முடிவு எடுக்கப்படும் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு காத்திருப்போம்”, என்று அவர் மேலும் கூறினார்.
தெனாங் இடைத் தேர்தல் முடிவடைவதற்குமுன் அமைச்சரவை எந்த முடிவையும் எடுக்காது என்பதோடு இறுதியில் “அது இயற்கையாகவே மறைந்துவிடும்” என்று சிலர் வாதிட்டனர்.
இந்திய மலேசியர்கள் “எங்கு காயப்படுத்துமோ அங்கு அடிக்க வேண்டும்” என்று கூறிய செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன், அரசாங்கத்திற்குத் தேவைப்படும் வாக்குச் சீட்டுகளை அளிக்க இந்தியர்கள் மறுக்க வேண்டும் என்றார்.
“இண்டர்லோக் நூலுக்கு எதிராக போலீஸ் புகார் செய்வதற்கு தெனாங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது”, என்று அவர் தெரிவித்தார்.
“பிஎன்னின் 2008 பேரழிவு மீண்டும் வரும்”
2007 ஆம் ஆண்டில் அதன் நடத்தைக்கு 2008 ஆம் ஆண்டில் கற்றுக்கொண்ட பாடத்தை அரசாங்கம் மறந்து விட்டது. அடுத்த பொதுத் தேர்தல் வரட்டும், அதன் தற்போதைய நடத்தைக்கான தண்டனையைப் பெறும் என்று சில பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
“சமயத்தால் நான் ஒரு முஸ்லிம், தேசியத்தால் நான் ஒரு மலேசியன், மொழியால் நான் ஒரு தமிழன். இண்டர்லோக் நாவலில் இந்திய சமூகத்தின்மீது வீசப்பட்டிருக்கும் இழிவுகளை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்”, என்று வணிகரான ஹாஜி தஸ்லிம் முகமட் இப்ராகிம் அவரது உரையில் கூறினார்.
முடிவு எடுக்கும் நிலையிலுள்ள சிலரிடம் தாம் இவ்விவகாரம் குறித்து தொடர்பு கொண்டு இந்நூலை மீட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“எனக்கு, ‘இண்டர்லோக்’ நூலுக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுள்ள ஆட்சேபங்கள் குறித்து அரசாங்கம் கவலைப்படுவதாக தெரியவில்லை. அதைத்தான் 2007 ஆம் ஆண்டில் அது செய்தது. 2008 ஆம் ஆண்டில் அதற்கான விலையைக் கொடுத்தது. அது இப்போது செய்துக்கொண்டிருப்பதற்கான பலனை 2013 ஆம் ஆண்டில் அனுபவிக்கும்”, என்று அவர் மேலும் கூறினார்.
மலேசிய இந்தியர் இயக்கங்கள் ஒருங்கிணைப்பு பேரவையின் தலைவர் டாக்டர் வி. சுப்பையா, பழனிவேலும் இதர மஇகா தலைவர்களும் இந்திய சமூகத்திற்கு அவர்களின் கடமையை ஆற்றத் தவறியதற்காக அவர்களைக் கடுமையாக சாடினார்.
“டிசம்பர் 29 ஆம் தேதி எங்களுடையப் புகாரை பழனிவேலுவிடம் கொடுத்தோம். பிரதமரிடம் பேசப்போவதாக அவர் கூறினார். ஆனால், இதுவரையில் எதுவும் நடைபெறவில்லை. இப்போது புத்தகம் மாணவர்களின் கைக்குச் சென்று விட்டது!”, என்று கடிந்துரைத்தார்.
இண்ட்ராப் ஐவரில் ஒருவரான கணபதி ராவ் எப்படி “இண்டர்லோக்” நூல் “ஒட்டுமொத்த இந்திய சமூகத்தையும்” இழிவுபடுத்துகிறது என்பதை விளக்கியதோடு ஆளுங்கட்சியைக் காயப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் இந்தியர்களை கேட்டுக்கொண்டார்.
உண்ணாவிரதம் மேற்கொள்ளுதல், சட்ட நடவடிக்கை எடுத்தல், கையெழுத்து வேட்டை போன்ற நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இந்த விவகாரம் அரசியலாக்கப்படக்கூடாது என்று தெரிவிக்கப்பட்ட கருத்து நிராகரிக்கப்பட்டது. “எங்கு நலன்களுக்கிடையில் மோதல்கள் இருக்கின்றனவோ, அங்கு அரசியல் இருக்கும்”, என்று சுட்டிக் காட்டப்பட்டது.
அடுத்து, இவ்விவகாரத்தில் மெத்தனப் போக்கை விடுத்து உடனடியான நடவடிக்கைகள் எடுப்பதில் ஈடுபாடு காட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இண்டர்லோக் நூல் மீட்டுக்கொள்ளப்படுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளயும் மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கை குழு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
“இண்டர்லோக் நடவடிக்கை குழு” (Interlok Action Committee) கீழ்க்கண்டவர்களை உறுப்பினராக் கொண்டிருக்கும்:
பாலா தம்பிலிங்கம், சிஎம் கோபாலன் மற்றும் அருண் துரைசாமி (மலேசிய இந்து சங்கம்), ஹாஜி தஸ்லிம் முகமட் இப்ராகிம் (சுயேட்சை), ஜி.கிஷோர் (மலேசிய இந்திய மாணவர்கள் கழகம்), அழகேஷ் பத்துமலை (மலேசிய இந்திய இளைஞர் கழகம்), எ.முரளி (தமிழன் உதவும் கரங்கள்), எபி இராஜரத்தினம் மற்றும் வி.சுப்பையா (மலேசிய இந்தியர் இயக்கங்கள் ஒருங்கிணைப்பு பேரவை).
இண்டர்லோக் நூல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்று கோரும் கடிதம் ஒன்று இன்று பிற்பகல் மணி 12.30 அளவில் பிரதமர்துறை இலாகாவில் தாக்கல் செய்யப்படும் என்று பாலா தெரிவித்தார்.
மலேசியாஇன்று!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு
இந்த நூல் பத்தி இப்பத்தான் கேள்விப்ப்டுறேன். என்ன நூல் இது?
சிப்பி- புதியவர்
- பதிவுகள் : 25
இணைந்தது : 19/01/2011
Re: இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு
சிப்பி wrote:இந்த நூல் பத்தி இப்பத்தான் கேள்விப்ப்டுறேன். என்ன நூல் இது?
எப்படிப்பட்ட புத்தகம் என்பதை இங்கு பாருங்கள் சிப்பி!
http://www.eegarai.net/t50343-topic
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» இண்டர்லோக்-எதிர்ப்புக் கூட்டம்: போலீஸ் நடவடிக்கை தொடர்கிறது.
» அமெரிக்காவின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு தலைவராக இந்திய வம்சாவளி டாக்டர் நியமனம்
» நூலை போல சேலை
» இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது
» இண்டர்லோக்: சர்ச்சைக்குரிய வார்த்தைகள் மட்டும் நீக்கப்படும்
» அமெரிக்காவின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு தலைவராக இந்திய வம்சாவளி டாக்டர் நியமனம்
» நூலை போல சேலை
» இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது
» இண்டர்லோக்: சர்ச்சைக்குரிய வார்த்தைகள் மட்டும் நீக்கப்படும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|