ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Today at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Today at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் புத்த மடாலயம் மீதான தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை - சீமான்

4 posters

Go down

சென்னையில் புத்த மடாலயம் மீதான தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை - சீமான் Empty சென்னையில் புத்த மடாலயம் மீதான தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை - சீமான்

Post by நிசாந்தன் Tue Jan 25, 2011 4:21 pm

சிங்கள‌ர்களா‌ல் நட‌த்த‌ப்படு‌ம் பு‌த்த மடாலய‌ம் ‌மீது நேற்று நள்ளிரவு தா‌க்கு‌த‌ல் நட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது. இத்தாக்குதலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தொடர்பில்லை. என நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதல் குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை:

சிங்கள‌ர்களா‌ல் நட‌த்த‌ப்படு‌ம் பு‌த்த மடாலய‌ம் ‌மீது நேற்று நள்ளிரவு தா‌க்கு‌த‌ல் நட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது. நம் மீனவர்கள் ஒவ்வொரு முறை சுடப்படும் பொழுதும் தமிழக மீனவரை சுட்டுக் கொன்றது இலங்கை கடற்படையினர் அல்ல என்றும் இலங்கை கடற்படை ஒருபோதும் எல்லையைத் தாண்டுவது இல்லை என்றும் சிங்கள அரசு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறது.

600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள இனவெறிப் படையால் கொல்லப்பட்ட நிலையிலும், இந்திய அரசும் தமிழக அரசும் அதற்கெதிரான உறுதியான நடவடிக்கைக்கு தயாரில்லை. அறிக்கை, வேண்டுகோள், கடிதம், தந்தி என்ற ஒன்றுக்கும் உதவாத வழிமுறைகள் மூலம், சிங்கள இனவெறிக்கு மேலும் ஊக்கமளித்துக்கொண்டிருக்கின்றன.
நேற்று முன் தினம், மீனவர் ஜெயக்குமார் சிங்கள இராணுவத்தால் கழுத்தில் சுருக்கிட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், தமிழக மக்களிடையே ஆளும் அரசுகளுக்கு எதிரான கொதிப்பை உருவாக்கியுள்ளது.

இந்த கொதிநிலை, சிங்கள இனவெறிக்கும்,ஆதரவாய் நிற்கும் காங்கிரஸ், திமுக அரசுகளுக்கும் எதிரான நெருப்பாய் வளர்ந்து வருகிறது.இந்நிலையில்தான், சென்னை எழும்பூரிலுள்ள புத்த மடாலயம் தாக்கப்பட்டுள்ளது.

இதற்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தொடர்பில்லை. மேலும் புத்த மட தாக்குதல் தொடர்பாக, சென்னை பெரம்பூர் ஜோசப்,திலீபன் என்ற நாம் தமிழர் கட்சியினர் 2 பேரை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று கருதி உரிய வழிமுறைகள் பின்பற்றப்படாமல் சட்டவிரோதமாக சென்னைக் காவல்துறை அழைத்துச் சென்றுள்ளது.

சென்னையில் நடைபெற்ற எண்ணற்ற குற்றச் செயல்களில் வருடக் கணக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க முடியாத காவல்துறை,ஆளுங்கட்சியின் நிர்ப்பந்தத்தால் கைகட்டி நிற்கும் காவல்துறை நள்ளிரவு நடந்த சம்பவத்தில் அதிகாலைக்குள் துப்புத் துலக்கி எங்கள் கட்சியினரைக் கைது செய்யும் நோக்கில் அழைத்துச் சென்றுள்ளது வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருக்கிறது.

ஆட்சியாளர்களின் அடக்குமுறை குறித்து நாங்கள் துளியும் அஞ்சவில்லை. அதே நேரத்தில் எம் தம்பிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டால் நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்து சட்ட்த்தின் படியும்,நியாயத்தின் படியும் தங்கள் தரப்பில் தவறு இல்லை என்று நிருபித்து வெற்றியுடன் வெளி வருவார்கள்.

தமிழர்களின் கோபம், சிங்கள இனவெறிக்கும்,இங்கு அதற்கு துணை நின்றவர்களையும் ஜனநாயக வழியில் தண்டிப்பதற்காக நெறிப்படுத்தப்படவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

எந்த ஆட்சி அதிகாரத்தின் மூலம் இவர்கள் தமிழர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க வில்லையோ அந்த ஆட்சி அதிகாரத்தினை இவர்களிடம் இருந்து பறிக்கும் நோக்கத்தில் நாம் அணி திரள வேண்டும்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

சென்னையில் புத்த மடாலயம் மீதான தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை - சீமான் Empty Re: சென்னையில் புத்த மடாலயம் மீதான தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை - சீமான்

Post by ப்ரியா Tue Jan 25, 2011 4:39 pm

நிச்சயமாக தமிழர் ஒரு அணியில் திரண்டால் தான் உலக அரங்கில் தமிழரின் குரலை ஓங்கி ஒலிக்க செய்யலாம் ...
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

சென்னையில் புத்த மடாலயம் மீதான தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை - சீமான் Empty Re: சென்னையில் புத்த மடாலயம் மீதான தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை - சீமான்

Post by கண்ணன்3536 Tue Jan 25, 2011 6:03 pm

நித்திரையா தமிழா நிமிர்ந்துநில்
இதனை வாசியுங்கள்
ஹிட்லரை ஆதரித்தவர்!

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற அற்புத வரிகளுக்குச் சொந்தக்காரர் கணியன் பூங்குன்றனார் என்பதறிவோம்; ஆனால் அவரைப்பற்றி மேலதிக விபரங்கள் எதுவும் அறிய இயலவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டதால் அன்று வரலாற்றை எழுதிவைக்கும் வழக்கம் இல்லாததால் அவ்வாறு நேர்ந்தது எனலாம்.

எங்கெல்லாம் அடக்குமுறை கோலோச்சுகிறதோ- எங்கெல்லாம் பாசிசம் கவ்வுகிறதோ- எங்கெல்லாம் சர்வாதிகாரம் கோலோச்சு கிறதோ- எங்கெல்லாம் மத, இன, பிரதேச வெறி ஆட்டிவைக்கிறதோ அங்கெல்லாம் மேற்கோள்காட்டப் படும் கவிதை ஒன்று உண்டு.

“முதலில் அவர்கள் யூதர்களைப் பிடிக்கவந்தனர், நான் பேசவில்லை; ஏனெனில் நான் யூதன் அல்ல. பின்னர் அவர்கள் கம்யூனிஸ்டுகளைப் பிடிக்க வந்தனர், நான் பேசவில்லை; ஏனெனில் நான் கம்யூனிஸ்டு அல்ல. பின்னர் அவர்கள் தொழிற்சங்க வாதிகளைப் பிடிக்க வந்தனர். அப்போதும் நான் பேசவில்லை; ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியும் அல்ல. பின்னர் அவர்கள் என்னைப் பிடிக்க வந்தனர். அப்போது எனக்காகப் பேச யாரும் இல்லை”

மனித மனங்களை நுட்பமாகப் படம் பிடித்து பாசிசத்துக்கு எதிராக ஆவேச உணர்வை ஊட்டிய இக் கவிதை வரிகளை எழுதியவர்யார்? அவர் வரலாறு என்ன? எதுவுமே தெரியாமல் கூட அன்றாடம் உலகெங்கும் பலரால் இக்கவிதை மேற்கோள் காட்டப்பட்ட வண்ணம் உள்ளது.

இக்கவிதையை எழுதியவர் பாஸ்டர் மார்டின் - நீய்- மொல்லர். இவர் ஒரு கிறிஸ்தவ மதபோதகர். இதில் வேடிக்கை என்னவெனில் இவர் கப்பற்படை அதிகாரியாக பணி புரிந்தவர் என்பதும், முதலில் ஹிட்லரின் தேசிய வாதத்தை ஆதரித்தவர் என்பதும் நாமறிய வேண்டிய செய்தி.

1892 ஜனவரி 14 ஆம்நாள் ஜெர்மனியில் லிப்ஸ்டாப் என்ற சிறிய கிராமத்தில் லூத்தரன் தேவாலய பாதிரியாரின் மகனாக மார்டின் பிறந்தார். இவர் கல்வியில் சிறந்து விளங்கினார். 1915 ஆம் ஆண்டு ஜெர்மன் சாம்ராஜ்ய இம்பீரியல் கப்பற்படையில் ஒரு அதிகாரியாகச் சேர்ந்தார். தாய் நீர் மூழ்கி கப்பல் என அழைக்கப்படும் வல்கன் நீர்மூழ்கிக் கப்பலில் தளபதிக்கு அடுத்த நிலைக்கு விரைவில் உயர்ந்தார்.

இவர் போர்க்களத்தில் பல்வேறு தாக்குதல்களுக்கு தலைமையேற்று வெற்றி பெற்றார். பிரெஞ்சு கப்பலை மூழ்க வைத்து பிரெஞ்சு துறைமுகத்தை தற்காலிகமாக மூடவைத்தார். இவருடைய தொடர் சாதனைகளுக்காக இவருக்கு முதல்தர இரும்புச் சிலுவை (ஐயர்ன் கிராஸ் ஃபர்ஸ்ஃட் கிளாஸ்) விருது வழங்கப்பட்டது. ஆனால் அவர் மனம் யுத்தங்களை விட மக்கள் மனதில் பீடித்திருக்கும் கொந்தளிப்புகளை அமைதிப்படுத்தும் போதனைகளிலேயே நாட்டம் கொண்டது. அவர் மதபோதகராக விரும்பினார். அவர் எழுதிய சுயசரிதை அவர் போதகரான கதையைக் கூறும்.

1919 ஜூலை 20 ஆம் நாள் எலிஸா-நீ பெர்ல் என்பவரை மணந்து கொண்டார். மூனஸ்டர் பல்கலைக்கழகத்தில் புராட்டஸ்டண்ட் இறையியல் பட்டம் பயின்றார்.

அதன்பின் தேவாலயப்பணிகளிலும் மதபோதனைகளிலும் ஈடுபட்டு அதில் பல பொறுப்புகளை ஏற்று திறம்பட செயலாற்றலானார்.

ஆரம்பத்தில் ஜெர்மன் குடியரசுக் கட்சியின் தீவிர தேசியவாதத்தை புராட்டஸ்ட்டண்ட் சர்ச்சுகள் பகிரங்கமாகவே ஆதரித்தன. மொல்லரும் ஆதரித்தார். 1933 ஆம் ஆண்டு ஹிட்லர் பதவிக்கு வர விழைந்தார். பதவிக்கு வந்ததை வரவேற்றார். தேசிய உணர்வு வலுப்பெறுமென புகழ்ந்தார்.

ஆனால் விரைவிலேயே தன் தவறை உணரலானார். ஆரியர்களின் மேன்மை குறித்து தற்பெருமையும் யூதர்களுக்கு எதிரான விஷமும் மிகுந்த ஹிட்லரின் போதனைகள் வழி தவறுவதாக உணரலானார். இதே போல் மேலும் பல மதபோதகர்கள் எதிர்க்கலானார்கள்.

வெகுண்ட ஹிட்லர் தன் குணத்தை காட்டினான். மொல்லர் உட்பட 800 மதபோதகர்களைக் கைது செய்து வழக்குத் தொடர்ந்தான். மொல்லர் இதர சர்ச்சுகளை ஒருங்கிணைத்து யூத கிறிஸ்தவர்கள் மீது காட்டப்படும் பாரபட்சத்துக்கு எதிராகவும் புராட்டஸ்ட்டண்ட் மதத்தையே நாசிச கருத்தோட்டத்திற்கு திருப்புவதை எதிர்த்தும் வலுவான ஒன்றுபட்ட குரல் எழுப்பினார். இவரது மனவலிமை எல்லோராலும் பாராட்டப்பட்டது.

ஆயினும் முதலில் சுயபாதுகாப்பு என்கிற தன் சர்ச் நிலைபாட்டிலிருந்து நாசிசித்தை எதிர்க்கத் துவங்கியவர் படிப்படியாக முழுமையாக நாசிசத்தை, ஹிட்லரை எதிர்த்து குரல் எழுப்பலானார். யூதர்களை எதிர்ப்பது சரியென்று கருதியே ஹிட்லரை ஆதரித்த மொல்லர், அனுபவ பட்டறையில் அடிபட்டு அதற்கு எதிராக எழுந்தார் என்பதே வரலாற்று உண்மை.

ஆரம்பத்தில் ஹிட்லரை ஆதரித்த போதிலும் எதிர்க்க துவங்கியதும் ஒரு பரந்த ஒற்றுமையைக் கட்ட பல்வேறு சர்ச்சுகளை ஒருங்கிணைத்து ஜனநாயக மேடை அமைத்தார். இதனால் ஹிட்லர் சினம் கொண்டார்.

1937 ஜூன் முதல் நாள் மொல்லர் கைது செய்யப்பட்டார். அரசுக்கு எதிராகசதி செய்ததாக குற்றஞ் சாட்டப்பட்டு நீதிவிசாரணை என்ற நாடகம் நடத்தப்பட்டு 2000 ஜெர்மன் ரூபாய் அபராதமும் 7 மாத கடுஞ் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டன. சிறையிலிருந்து விடுதலையாகிற நாளில் மீண்டும் கைதுசெய்யப்பட்டு 1938 முதல் 1945 வரை சித்ரவதைக்கு ஆளானார். 1945 ஆம் ஆண்டு நேசநாட்டுப் படைகள் இவரையும் இவரோடு 140 பிற கைதிகளையும் விடுதலை செய்தன. அதுவரை வதை முகாமில் கொடுமைகளுக்கு ஆளானார்.

லியோஸ்டின் என்ற சக வதை முகாம் கைதி ஒரு முறை மொல்லரிடம் தாங்கள் ஒரு போதும் ஹிட்லரை ஆதரித்ததில்லையா என்று கேட்டபோது, மொல்லர் சொன்ன பதிலை அவர் பதிவு செய்திருக்கிறார்.

அதில் ஹிட்லரை தான் நம்பியதாகவும், யூதர்களுக்கு கட்டுப்பாடு மட்டுமே விதிப்பார் அழித்தொழிக்கமாட்டார் என அவர்கொடுத்த வாக்குறுதிகளை நம்பியதாகவும் கூறியுள்ளார். ஆனால் ஹிட்லர் நம் பிக்கை மோசம் செய்து விட்டதாக குற்றஞ் சாட்டியுள்ளார். அதுமட்டுமல்ல, அன்று ஜெர்மனியில் நாத்திகவாதமும் கம்யூனிசமும் வளர்ந்து வந்ததால் அதிலிருந்து சர்ச்சுகளை பாதுகாக்க ஹிட்லர் தேவை என்று தாம் கருதியதாகவும், அது தவறென உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

“என் தவறுகளுக்கு நான் இப்போது விலை கொடுத்துக் கொண்டிருக்கிறேன்; நான் மட்டுமல்ல இங்கு வதை முகாமில் உள்ள பலர் நிலையும் அது தான்” என்றார். ஆம் பாசிசமும் நாசிசமும் வரம் கொடுத்தவனையே பதம் பார்க்கும் என்பதுதான் வரலாறு. விடுதலைக்குப் பிறகு மதபோதனைகளிலும் ஈடுபட்டு உலக அளவில் பல பொறுப்புகள் வகித்தார். 92வது வயதில் 1984 மார்ச் 6 ஆம் நாள் மரணமடைந்தார்.

அவரது கவிதை வரிகள் அவ்வளவு உயிர்த்துடிப்புடன் இன்றும் வாழ்வதன் ரகசியம்; அது அவரது வாழ்க்கை அனுபவத்தின் சாரமாக பிழியப்பட்ட வரிகள் என்பது தான்.


கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

சென்னையில் புத்த மடாலயம் மீதான தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை - சீமான் Empty Re: சென்னையில் புத்த மடாலயம் மீதான தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை - சீமான்

Post by Guest Tue Jan 25, 2011 6:11 pm

இந்த நெருபூதான் எல்லறக்குள்ளாயும் எறிஞ்சுகிட்டே இருக்கும் ... அ தமிழர்களே ஒரு அணியில் அணி திரளுங்கள்...
avatar
Guest
Guest


Back to top Go down

சென்னையில் புத்த மடாலயம் மீதான தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை - சீமான் Empty Re: சென்னையில் புத்த மடாலயம் மீதான தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை - சீமான்

Post by தமிழ்ப்ரியன் விஜி Tue Jan 25, 2011 6:17 pm

ப்ரியா wrote:நிச்சயமாக தமிழர் ஒரு அணியில் திரண்டால் தான் உலக அரங்கில் தமிழரின் குரலை ஓங்கி ஒலிக்க செய்யலாம் ...

ஓன்று பட்டால் உண்டு வாழ்வு ...... சென்னையில் புத்த மடாலயம் மீதான தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை - சீமான் 733974
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

சென்னையில் புத்த மடாலயம் மீதான தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை - சீமான் Empty Re: சென்னையில் புத்த மடாலயம் மீதான தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை - சீமான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும்
» சென்னையில் இலங்கைத் துணைத்தூதரகம் தேவையில்லை - சீமான் சீற்றம்
» எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சென்னையில் தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது
» வேலூர் ஜெயிலில் சந்திப்பு: டைரக்டர் சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; சசிகலா கணவர் நடராஜன் பேட்டி
» பெட்ரோல் மீதான 200%, டீசல் மீதான 500% கலால் வரியை குறைத்திடுக" - பிடிஆர் தியாகராஜன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum