புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_c10 
5 Posts - 63%
heezulia
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_c10 
289 Posts - 45%
heezulia
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_c10 
20 Posts - 3%
prajai
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_c10 
7 Posts - 1%
mruthun
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 10 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "


   
   

Page 10 of 13 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12, 13  Next

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Jan 24, 2011 11:07 pm

First topic message reminder :

அன்பு நண்பர்களே
இரண்டு ஆண்டுகளுக்கு முன் மின் தமிழ் குழுமத்தில்
எனக்குப் புரிந்தது இதுவே ! என்ற பெயரில் மனித மனத்தின் மாண்புகளைப்பற்றியும் ,சித்தர்கள்மனித உடலைப் பற்றி கூறிய தத்துவங்களையும் , உண்மைகளைப்பற்றியும் தொடராக சுமார் நாற்பது பகுதிகள் எழுதினேன் .

அதை மீள்பதிவாக நண்பர்களுக்கு வழங்கி பின் ,இதைத் தொடர எண்ணி இருக்கிறேன் .

தொடர் குறித்து அன்பர்கள் தங்கள் கருத்துக்களை வழங்கலாம் .

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்


எனக்குப் புரிந்தது இதுவே !---1
---அண்ணாமலை சுகுமாரன்


யாருடனும் உன்னை ஒப்பிடாதே !
ஒவ்வொருவரும் அவரவர்
நிலையில் தனித்தனியே !
நீயும் உன் மகனும்
கூட வேறு வேறுதான்
அவரவர் வினையைப்
போக்கி ஞானம் பெறவே
அவரவர் வருகிறார்கள் !

உன் கடமை
உனது பாத்திரம் இப்போது தந்தை !
கொஞ்ச நாளுக்கு முன் நீயே
மகன்எனும் பாத்திரத்தில் இருந்தாய் !
இருக்கும் வரை கொடுத்த பாத்திரத்தை
குறைவரச் செய்வதே சுதர்மம் !

இதில் மற்றவருடன் உன்னை
ஒப்பிடுவது நாடகத்தில் அடுத்தவர்
வசனத்தை நீ பேசுவது போல் !,
அது உன் பணி அன்று !
அது உன்னையே நீ
அவமதித்துக் கொள்வது ஆகும் !

சுதர்மத்தில் வரும் தடைகளை
எண்ணி அதிகம் கலங்காதே !
எங்காவது சாவி இல்லாது
பூட்டுச் செய்கிறார்களா ?

எந்த பிரச்னையும் தீர்வுடன்தான்
வருகிறது ! சில சமயம் சாவியை
மறந்து விட்டுத் தேடுவது போல் ,
பல சமயம் நாம் தீர்வைத் தேடி அலைகிறோம் !
எப்போதும் தீர்வு ,பிரச்சனைக்கு
அருகில்தான் இருக்கும் !
பிரச்சினையை ஊன்றிப் பார் !

நீ சோகமாக இருந்தால்
வாழ்க்கை உன்னைப்
பார்த்துச் சிரிக்கிறது !
கையால் ஆகாதவன் என்று !

நீ சந்தோஷமாக இருந்தால்
வாழ்க்கை உன்னைப் பார்த்து
மகிழ்கிறது ! நீ மற்றவரை
சந்தோஷப் படுத்தினால்
வாழ்க்கை உன்னை
வாழ்த்துகிறது ! வணங்குகிறது !

ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனின்
பின்னணியிலும் அவன் ஏறி வந்த
ஒரு கடினமான சோகக் கதை இருக்கும் !
ஒவ்வொரு துயரக் கதையிலும்
நிச்சயம் ஒரு வெற்றிகரமான
முடிவிருக்கும் !நீ அந்தச் சுழற்சியில்
எங்கு இருக்கிறாயோ ! கஷ்டத்தை
ஒப்புக்கொள் ! வெற்றிக்குத் தயார் ஆகு !

மற்றவர் செய்யும் தவறுகளைப்
பேச நமக்கு ரொம்ப ஆசைதான் !
ஆனால் நம் தவறுகளை நாம்
உணர நமக்கு நேரமில்லை !
அதைத் தெரிந்து கொள்ளும் கடைசி ஆளாக
நாம்தான் இருப்போம் !
அனைவருக்கும் தெரிந்த பிறகுதான்
நமக்குப் புரியும் நம் தவறுகள் !
அப்போது தெரிந்து கொண்டும் பலன் இராது !
சுற்றி யாரும் இருக்க மாட்டர்கள் நம்மைத்
தொந்தரவு செய்ய !
தனிமையில்தான் இனிமை காணவேண்டி இருக்கும் !!

உஷாராக நாம் காலுறை அணிவதுதான்
புத்திசாலித்தனம் !
சாலை முழுவதும் முள் இல்லாது கமபளம்
விரிக்க முடியுமா ?
ஊரைத் திருத்தப் போவதை விட
நம்மை திருத்திக் கொள்வது
மிகச் சுலபம் !

யாரும் பின்னால் சென்று நடந்த
நிகழ்வின் ,மோசமான ஆரம்பத்தை
மாற்ற முடியாது !
எனவே சென்றதை எண்ணிச்
செயலிழக்க வேண்டாம் !
ஆனால் யாராலும் புதிய ஒரு மாற்றத்தால்
ஒப்பில்லாத சந்தோஷ முடிவை அடைய முடியும் !
முடிந்து விட்ட பிரச்னையைப் பற்றி
வருந்தி என்ன பயன் ?
ஒரு பிரச்சனை முடியாது என்றால்
அதைக் குறித்துப் புலம்பி என்ன பயன் !

நம்மைத் தேடி வரும் பிரச்னையை
மகிழ்வுடன் எதிர்கொண்டு
சந்தோஷத்துடன் வழியனுப்பு !
அதில் நீ மட்டும் பட்டும் படாமல் இருக்கப்
பயின்று கொள் !

தவற விட்ட வாய்ப்புகளை எண்ணிக்
கண்ணீரால் கண்களை குளமாக்காதே !
எதிரில் வந்து நிற்கும் நல்ல ஒரு
புதிய வாய்ப்பை அந்தக் கண்களின்
கண்ணீர் மறைத்து விடக்கூடும் !

முகத்தை மட்டும் மாற்றினால்
ஏதாவது மாற்றம் வருமா ?
மாற்றத்தை எதிர் கொள்ளும்
முகம்தான் மறுமலர்ச்சி தரும்
யாரைப் பற்றியும் குறையில்லை ,
நாம் மாறினால் போதும் ,
வாழ்வின் இனிமைக்கு
பிறரைச் சார்ந்து இராதீர்கள் !

மற்றவர் அபிப்ராயம் உங்களுக்கு,
உங்கள் மன நிம்மதிக்கு
நிச்சயம் தேவையானால்
நீங்கள் மகிழ்ச்சி கொள்ள வாய்ப்பே இல்லை !
மற்றவர்களுக்கு வேறு பல வேலை உண்டு
உங்களை மகிழ்விப்பதைத் தவிர !
-------------------------------------------


*இது முதலில் கவிதை அன்று !
கருத்துக்களை சுருக்கமாக சொன்னதால்
கவிதையாகிவிடாது .
நான் நடந்து வந்த பாதையில்
கண்டெடுத்த கற்கள் இவை ! பாதத்தில்
தைத்ததில் சில வைரக் கற்களும் உண்டு !
இந்தக் கருத்துக்கள் எதுவும் புதியன இல்லை !
பலரும் பகர்ததுவே !
கொள்வோர் இருப்பின் தொடரும்
உத்தேசம் உண்டு !

அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Sep 09, 2011 8:33 pm

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Sep 09, 2011 8:38 pm

எனக்கு புரிந்தது இதுவே ! (36)-



சென்ற இழையில் காலம் ,இடம் இவைகளைப்பற்றிப்பார்த்தோம் .

நான் கூறியவை உங்களுக்கு எந்த அளவிற்கு பயனாக இருந்தது என்று எனக்கு சரிவர புலப்படவில்லை .இன்னும் கொஞ்சம் அவைகளைப்பற்றி மீண்டும் பேசுவோம் .



பரிணாம வளர்ச்சியை சற்று கவனமாக ஆழ்த்துப பார்த்தோமானால்
இயற்கையுடன் நடக்கும் போராட்டம் தான் அதன் மாற்றத்திற்கு
காரணமாக அமைந்து இருக்கிறது என்பதுபுலப்படும் .

எப்போதும் எல்லா உயிர்களும் தம்மை மேம்படுத்திக்கொள்ள சதா முயன்றுவருகின்றன .

இயற்கையுடன் சதா ஒரு போராட்டம் நிகழ்ந்துதான் வருகிறது .
எல்லா உயிர்களும் தம்மை மாற்றிக்கொள்வதன் மூலமே
இயற்கையை எப்படியாவது வெல்லுகின்றன .!


அதேப்போல் ஒவ்வருவரும் தன்னை மாற்றிக்கொள்வதன் மூலமே
சூழ்நிலையால் வரும் தீமையை வெல்லமுடியும் .!
சூழ்நிலை என்பது நமதிஷ்ட்டதால் வருவதில்லை ..

சூழ்நிலைகளை அப்படியே ஒப்புக்கொண்டு நாம் சும்மாஇருந்திடவும் இயலாது

எல்லா உயிரினமும் மாற்றத்திற்கு முயலும் போது நாமும் ஒருபடி மேலேப் போக முயலவேன்டாமா ?அப்படியானால் நமது சூழ்நிலைகளை நாம் எப்படி வெற்றிகொள்வது ?

வாட்டும் வறுமையையில் இருந்து எப்ப்டி வெளிவருவது ?
தொடரும் துன்ப சூழ்நிலையை எவ்வாறு மாற்றுவது என்றால் எல்லா சூழ்நிலையையும் நம்மால் மாற்ற முடியாது .!

இதை நாம் ஒப்பு கொள்வதும் புரிந்து கொள்வதும் தான் நல்லது !
இதை புரியவைக்கத்தான் கர்ம பலன் ,சமஸ்காரம் என
பல தத்துவகளை இதுவரை பார்த்தோம் .

ஆனால் மாற்றம் என்பது ஒரு படிபரிணாம வளர்ச்சியில் முன்னேபோகும் ,மனிதனில் இருந்து தேவனாகும் வழியில் இருக்கவேண்டும் .அகநிலை மற்றம் வேண்டும் .புரத்தில் வநது சேரும் சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டால் அவை ,நமக்கு அத்தனை துன்பமாக இராது .

இந்த சூழ்நிலை நமக்கு வாய்ப்பதே நாம் பெறவேண்டியப்பாடத்தை பெறுவதகாகத்தான் .

நாம் இப்போது படித்துக்கொண்டிருப்பதும் நம்மிடையே ஒரு சரியானப் புரிதலை உண்டாக்கத்தான் .

ஆனால் நம்மிடம் உள்ள பெரிய குறைபாடு என்னவென்றால் படிப்பது எதுவும் நமக்கு சம்பந்தம் இல்லை என நினைப்பதே !

பெரும்பாலும் படிக்கும் இன்பத்திற்காகவே படிக்கிறோம் .
ஆனால் அதை உணர்வதோ படிப்பதில் இருக்கும்
படிப்பினைகளை உணர்வதோ மிகக் குறைவு .!
படிப்பினைகளை அவ்வப்போது தனது வாழ்வில்
பொருத்திப் பார்த்துக் கொண்டே இருப்பவன்
மட்டும் தான் மேலே மேலே போகிறான் .!

படித்து கொண்டே இருப்பவன் படித்துக்கொண்டே தான் இருக்கிறான் .
அவனுக்கு அதில் கிடைக்கும் இன்பம் மட்டும்
போதுமானதாக இருக்கிறது .இன்னும்
அதிகப்படியாக அதைப்பற்றி பேசி பேசி வேறு இன்பம் அடைகிறான் !
ஆனால் அவனது பூர்வ கர்மபலம் படி அவனது ஜீவிதம் அமைகிறது ,

இப்பிறவியின் புருஷார்த்தம் அவன் மேலே மேலே படித்து
மேலும் சில மடிப்புகளை மூளையில் பெருக்கிகொள்வதில் தான் முடிகிறது !
இந்தப் படிப்பு அடுத்தமுறை படிக்கும் போது அவனுக்கு சுலபமாக
புரியவைக்கும் ! ஆனாலும் அவன் அதை உணராதவரையில்
அதை தனது வாழ்வில் பொருத்தி அதை ஒரு அங்கமாக ஆக்காத
வரையில் அவனுக்கு அந்தப்படிப்பால் ஏதும் ஆதாயம் இல்லை !

ஆனால் படிப்பதனால் வரும் அகங்காரம் மட்டும்
மேலும் மேலும் சேர்ந்து கொண்டே வரும் !
அவனை அலட்டவைக்கும் !பிறரை அதிகாரம் செய்யும் !
பார்த்தாயா என் அறிவை, நானே அடக்கமாக
இருக்கிறேன் என வெளிச்சம் போடும் !
பின் மதிக்கவில்லை என கூச்சல் போடும் !
மற்றவர் கவனத்தை ஈர்ப்பதும் ,
அடுத்தவரின் பொறாமையை பெறுவதிலேயும் தானே
நமது வாழ்வின் வெற்றி உள்ளது என நினைக்கிறோம் இது தானே நமது வெற்றியின் இலக்கணம்எனக்கருதப்படுகிறது !
அப்படித்தானே உலகம் நினைக்கிறது !

videocon விளம்பரம் நினையில் உள்ளதா ? அது எப்போதும்
அடுத்தவர் பொறாமை படும் T. V வாங்க உங்களை தூண்டும் !

நாம் உண்பது உடுப்பது ,பிள்ளைகளை படிக்கவைப்பது ,
அவர்களை வாட்டி வதைத்து அவர்களின் இளமையை தொலைத்து ,
அவர்களை அதிக மதிப்பெண் எடுக்கவைத்து
பெரியவேலையில் சேர்த்து பெரிய சம்பளம் வாங்க வைப்பது எல்லாம்
அடுத்தவர் மெச்ச வாழ துடிக்கும் அவாதானே !

நாம் பிறந்த பிறவியின் பலன் என்ன என்பது
நமக்கு நினைவில் இருப்பதில்லை !
நடப்பது எல்லாம் சென்ற பிறவியில் சேர்த்துவைத்த
இருப்பின் செலாவணிதான் ! ஆனால் பெருமை
மட்டும் எல்லாம் என் திறமையால் ,அறிவால்
வந்தது என சொல்லிசொல்லி நம்மை மெச்சிக் கொள்கிறோம்

சொல்லிக்கொடுத்த ஆசிரியர்
இன்னும் அழுக்கு சட்டையுடன் சுற்றுவது நினைவில் வராது .

ஆனால் அவர் சொல்லிக்கொடுத்த கல்விதான் நம்மை காசு சம்பாதிக்கவைத்தது என நினைக்கிறோம் .

நம்முடனேயே ப படித்த நம்மைக் காட்டிலும் நன்றாகப்படித்த எத்தனையோ பேர் இன்னமும் செல்வ நிலையிலும் ,பெரும் புகழிலும் கிழே இருப்பது நம் நினைவிற்கு வராது .

நாம் மட்டும் ஒருத்தனிப் பிறவி ,மேதை என நினைப்போம் .

நமக்க௮உ வாய்த்திருக்கும் நல்ல சூழலை வைத்து மேலேப்போகும் ,அதை மட்டும் மறந்து ,அந்த செல்வம் தரும் இன்பத்தில் வரும் கசடுகளால் ,இன்னமும் சுமையை சேர்ப்போம் .

நல்ல சூழல் அமைவது நமக்கு கிடைத்த வரம் ,ஆனால் நாம் வந்தது இன்னமும் மேலேப்போக .



ஏப்போதும் நமக்கிருக்கும் ,இடப்பட்டிருக்கும் ,சுதர்மம் எனும் கடமையை செய்யவேண்டியதான் !
கூடவே தனக்கும் கொஞ்சம் அடுத்தப் பிறவிக்கு என
சேர்த்துவைப்பது தானே நல்லது ! காஞ்சி பெரியவர்
முன்பெல்லாம் பார்ப்பவரை எல்லாம் கேட்டும் கேள்வி உனக்கு
என்ன செர்த்துவைதிருக்கிராய் ? என்பது தான் !

அப்போது வந்து வாய்த்த சுழ்நிலையில் அதனுடன்
சகித்துத்தான் வாழ வேண்டுமா ? வேறுவழி இல்லையா எனில் ,
கடலில் வாழும் சிறிய மீன் கூட தொடர்ந்து தன எதிரிகளால்
உண்ணப்படும் போது அது அதனிடம் இருந்து தப்ப முயல்கிறது !

அது கடலையோ ,தன எதிரிகளையோ மாற்ற முயற்சி செய்வதில்லை
மாறாக தொடர்ந்து உயரே பறந்து தப்பிக்க எண்ணுகிறது
பரிணாம வளர்ச்சியில் அது சிறிய இறக்கையை அடைந்துவிடுகிறது !

வளார்ச்சியின் உச்சக்கட்டத்தில் உள்ள மனிதனால்
சூழ்நிலையின் கொடுமையில் இருந்து மாற முடியும் !
அல்லது அதன் கொடுமையை உணராதுஇருக்குமாறு மாறமுடியும் !
அந்த வித்தையைவாழும் போதே பயிலமுடியும் ! பிறப்பு இல்லாத
இறப்பையும் கூடவே அடையமுடியும் !

ஆனால் அவன் சூழ்நிலையை மாற்ற முயல்வதை விடுத்து
அவன் தன்னை மாற்றிக்கொளவேண்டும் !
உலகத்தை மாற்ற முயற்சி செய்து கொண்டே இருக்கக் கூடாது !

உலகத்தையோ ,சூழ்நிலையையோ குறைகூறிக்கொண்டு சும்மா இருந்துவிடக்கூடாது .

இயன்றவரை ,இருக்கும் சூழ்நிலையில் ,அதிகபட்சம் எனன நல்லவைதனக்கு

செய்து கொள்ளமுடியுமோ அதைத் தொடர்ந்து செய்துவரவேண்டும் .

என்றும் விழிப்புணர்வுடன் வாழவேண்டும் .தளர்ந்துவிடக்கூடாது .

இந்தக் கோணத்தில் இருந்து பிரச்சனைகளை அணுகுவதுதான்
பிரச்னையை நீக்கும் வழியாகும் !]

கோபத்தையும் ,வெறுப்பையும் அலச்சியம் செய்யும் மனவலிமையை
நாம் பெற்றுவிட்டால் , நாம் கோபமோ வெறுப்போ அடைவதில்லை !
மாறாக கோபத்தை வெறுப்பை அழிப்பேன் என அதனுடன்
போராடுவது நமக்கு தளர்வையும் தோல்வியையுமே தரும் !

ஆகவே வெற்றியடைய ஒரே வழி
நம்மை முழுமை ஆக்கிக்கொள்வது தான் !
முழுமையடைய முதலில் முழுமையாக
நம்மை புரிந்து கொள்ளவேண்டும்.

நம்மை நாம் சரிவர புரிந்து கொள்ள நாம்
ஆன்மீக வாழ்வில் உயர்ந்த படிக்கு செல்லவேண்டும் .
ஆன்மிகம் என்பது உணர்வுடன் வாழ்தல், விழிப்புணர்வு தான் .


அந்தப்பாதையில் பல படிகள் உள்ளது ,இயமம் நியமம் என அஷ்டாங்க யோகத்தை
நமக்கு பதஞ்சலியும் திருமூலரும் அருளியிருக்கிறார்கள் !
இதில் தியானம் என்பது மிக உயர்ந்த நிலை அந்த நிலையை அடைவதற்கு
சில தகுதிகள் மனத்தளவிலும்
உடல் ரீதியிலும் தேவை
சில நிபந்தனைகள்கூடவே நிறைவேற்றப்படவேண்டும் !

தியானத்தை இருவகையாக பிரிக்கலாம் ,
உலகியல் தியானம் எனப்படும் மன ஒருமைப்பாடு

இரண்டாவது ஆன்மீகத் தியானம் .

மனதை ஏதாவது ஒரு புறப்பொருளில் குவிப்பது
உலகியல் தியானம் எனப்படும் .கருத்தூர்ன்றி ஒரு கதைப்புத்தகம் படிக்கும் போது கூட சில
சமயம் இந்த நிலை அமைத்து விடுகிறது .
மனம் இயல்பாகவே வெளியே செல்லுமாறு
படைக்கப்பட்டிருப்பதாக கடோபநிடதம் கூறுகிறது .

எனவே புறப்பொருள் மேல் பற்றி அதில் மனதை
குவிப்பது சற்று சுலபம் தான் ! மனதை புறத்தே இருக்கும்
எந்த பொருள் மேல் வேண்டுமானாலும் சுலபமாகவேக் குவிக்கலாம் !
இதனால் மன அமைதி கிடைக்கும் ! எண்ணத்தின் கொதிப்பு அடங்கும் !
இதனால் உடல் நலம் கிடைக்கும் ,
ரத்தக்கொதிப்பு குறையும் ,உணர்ச்சிகளின் கட்டுப்பாடு கிடைக்கும் !
இதுவே உலகியல் தியானம்.
அதுவும் பெருமைக்குரியதே .

ஆன்மீக தியானம் என்பது மனதை அதன் உண்மையான
பிறப்பிடம் அல்லது மையத்தில் குவிப்பது.
வெளிமுகமாக ஓடும் மனதை உள்முகமாக்கி
அதன் இருப்பிடத்தை நாடச்செய்வதே .

ஆன்மாவின் ஒளியால்தான் புறத்தில் இருக்கும்
பொருள்களையும் , மனத்தில் எழும் எண்ணத்தின்
ஓட்டங்களையும் நாம் உணரமுடியும்.
ஆன்மாவின் ஆன்மாவான இறைவைனை
காணவேண்டிடின் அந்த ஆன்மாவின் ஒளியை
உள்பக்கமாக செலுத்தவேண்டும் அதுவே
ஆன்மீக தியானம் .

அங்கும் இங்கும் புறேத்தே பாயும் மனம் என்னும்
அடங்காப்பிடாரியை உள்முகமாக்குவது அத்துணை சுலபமா எனன ?
மனத்தைதிருப்பி அதை உள்ளேக்குவிக்க நமக்கு
அகத்தே ஒரு இடம் வேண்டுமே ! உடலின் எந்த இடத்தில்
அகத்தில் குவிப்பது ?
அந்த மையம் இன்னும் நம்மில் உருவாகவில்லை !


பலருக்கு இது புதிராக இருக்கலாம் !
அந்த மையம் தான் இதயம்.
இதய தாமரை ! அதுவே ஆன்மீக இதயம் !

அங்குமட்டுமே உண்மையில் தியானிக்கமுடியும்.
நம்மில் பலருக்கு இந்த ஆன்மீக இதயம் இன்னும் மலரவில்லை !
இன்னும் மொட்டாகவே இருக்கிறது !
அதை முதலில் மலரச்செய்யவேண்டும் !
மலர்ந்த பின் அதை மேல்நோக்கி நிமிரச் செய்யவேண்டும் !
அதற்க்கு ஜபம் பக்தி பிரார்த்தனை ,பிரமச்சரியம் போன்ற நிபந்தனைகள்
நிறைவேற்றப்படவேண்டும் .
அஷ்டாங்க யோகமும் முறைப்படி சாத்னமாகவேண்டும் !
தக்க ஒரு குரு தொட்டுக்காடவேண்டும் !
அஷ்டாக யோகமும் முறைப்படி நிறைவேறும் போதே
அஷ்டமா சித்திகளும் உடம்பில் குடி கொள்ளும் !
ஆனால் சித்திகள் சாதகனின் சித்தமலவே !

மேலும் தியானத்தைப் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம் !
கூடவே பயணித்தற்கு நன்றி ! கூடவே ஒரு சொல் கூறினால்நீங்கள் கூடவே

வருவதும் என்க்கும் புரியும் .

அன்புடன்

அண்ணாமலை சுகுமாரன்


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Sep 09, 2011 8:50 pm

அய்யா தியானம் பற்றி கூறுவதை கேட்க்க ஆவலுடன் இருக்கிறேன் ஆனால் தியானம் எடுத்த உடன் வந்து விடுமா இல்லை அதற்க்கு உடலை பழக்க படுத்த வேண்டுமா பலர் படித்து விட்டு தனி அறையில் அப்படியே அமர்ந்து பார்த்து தியானம் வரவில்லை யென அலுத்து கொள்கிறார்கள் அவர்களுக்கும் கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கள்

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Thu Sep 22, 2011 9:05 pm

எனக்குப புரிந்தது இதுவே ! (37)-

உண்மையான தியானம் என்று கூறும்போதே
அது என்ன உண்மையான தியானம் ?
அப்போ பொய்யான தியானம் என்று ஒன்று உண்டா ? எனும் கேள்வி எழத்தான் செய்யும் ..
ஆமாம் அப்படிதான் இருக்கும்போலிருக்கிறது ..

உண்மையில் தியானம் என்பது என்ன ?
நாம் அறிந்து கொள்ளவேண்டிய பொருளைப பற்றிய உண்மையை நோக்கி தொடர்ந்து
செல்லும் பயணம் தான் தியானம் ஆகும் .

தொடர்ந்து செல்வது என்றால் எப்படி என நமது சமய நூல்கள் தெளிவாக கூறுகின்றன

தொடர்ந்து என்பது பின்பற்றுவதுஎன்பது மட்டும் அல்ல ,அது ஒரு இடைவிடாத தொடரல் . .
ஒரு பாத்திரத்தில் இருந்து மற்றொரு பாத்திரத்திற்கு எண்ணையை
மாற்றும் பொது அது துண்டு துண்டாக விழாது .

அது ஒரு கம்பியை போல் தொடர்ந்து விழுவது
தான் சீராக விழுவது என்பது ஆகும் ..

ஒழுக்கம் எனும் பெயர் ஒழுகல் எனும் வேரில் இருந்துதான் வந்ததது .

இடைவிடாது கொள்கையைக் கடைபிடிப்பது ஒழுக்கம் .

அதேப் போல் தியானம் செய்ய்பவர்களிடம் இருந்து
தியானம் செய்யப்படும் பொருள் எனும் பாத்திரத்திற்கு தியானம் செய்பவரது எண்ணம்
சீராக ஒரு கம்பி போல் தொடர்ந்து பாய்கிறது .!

தியானம் சீராகனடைபெரும் போது ,

எண்ணுபவர், எண்ணப்படும் பொருள் , எண்ணுவது,

இந்த மூன்றும் ஒரே கம்பியாக மாறிவிடுகிறது .

எனவேதான் தியானம் எப்போதும் நிகழ காலத்தில் இருக்கிறது என்கிறோம் .!

அது இறந்த காலமாகவோ ,
எதிர்காலமாகவோ மாறுவதில்லை

தியானம் எப்போதும் ஒரே நிலை
அது காலம் கடந்தது ,காலத்தை வென்றது .

மனதை படிப்படியாக உயர்த்தி
காலமற்ற நிலைக்கு எடுத்துச் சென்று
காலத்தின் கொடுமையில் இருந்து
மனிதனை விடுவிக்கும் முயற்சிதான்
தியானம் ! அது காலமற்ற நிலையில் செய்யப்படுவது !

தியானம் செய்வதற்கு காலை நாலரை மணியோ மாலை
நாலரை மணியோ ஏதாவது ஒரு நேரம் தொடர்ந்து செய்ய
எப்போதும் தேர்ந்தெடுக்க வேண்டும் !.

ஏதாவது ஒரு இடம் தொடர்ந்து
ஒரே இடம் தேர்நதெடுக்கவேண்டும் .
இத்தகையசில ஒழுக்கங்கள் தியானம் உடனடியாக கை கூட உதவி செய்யும் .

தினமும் ஒரே நேரம் ஒரு மணி நேரம் என்றால் தினமும்
ஒரு மணி தியானம் செய்ய பழகவேண்டும் .

ஒருமணி நேரம் தியானம் செய்பவர்
தியானம் முடிக்கும் போது ஐந்து நிமிடம் தான்
சென்றதாக உணவேண்டும் !
அப்போதுதான் அவர் உண்மையான தியானத்தில் அனுபவித்து ஈடுபட்டிருக்கிறார் எனப்
பொருள் !

அவ்வாறு இல்லாமல் ஐந்து நிமிடம் ஆவதற்குள் ஒரு மணி ஆகி விட்டதா என அடிக்கடி
கை கடி காரத்தை பார்த்துக்கொண்டால்
அவர் தியான அனுபவத்தில் இன்னும் புகவே இல்லை எனப்பொருள் .!

தியான அனுபவத்திற்கு காலவரம்பு கிடையாது
காலம் மட்டுமல்ல இடம் கூட
தியான அனுபவத்தில் மறைந்துவிடும் !
தியானிப்பவரும் மறைந்து விடுவார் !

அப்போது எல்லாம் மறந்து விட்டால்
தியான அனுபவம் பெறுவது எப்பாடி தெர்யும் என்றால்,
தியானம் வசப்படும்போது சில அடையாளங்கள் தோன்றும் !
எந்தப்பொருளை நிறுத்தி தியானிக்கிரோமோ அது தொடர்பான
அழகிய காட்சிகள் முதலில் சில தோன்றும் !

சில சமயம் கடல் அலையின் முழக்கம்
சங்கின் நாதம் , ,நாதசுரத்தின் நாதம்
விவரிக் இயலாத அரும் பெரும் காட்சிகளும் ,
ஓசைகளும் கேட்க்கும் கண்டறியாதன காண இயலும் !

தியான நிலையில் கைகூட ,முதல் படியாக இந்திரிய ஒழுக்கம்
இரண்டாம் படியாக கரணஒழுக்கம்
முன்றாம் படியாக ஜீவ ஒழுக்கம்
நான்காம் படியாக தான் தியான உச்சம் !
இதுவே வள்ளல் பெருமான்
தியானத்திற்கு வகுக்கும் நான்கு பாதைகள் .
அதுவே பதஞ்சலி கூறும் அஷ்டாக யோகமும் ஆகும் !

மனிதனில் ஆன்ம ஒளி எப்போது பிரகாசிக்கும் என்றால் ,
மனிதனின் மன அலைகள் எல்லாம் அடங்கிய பிறகே ஆகும் .
எப்போதும் அமைதியான மன நிலை ஆன்மீக வாழ்வின் அடையாளம்

ஆனால் தியானம் என்பது வெறும் மன அமைதியை மட்டும் தருவது அல்ல !
தியானத்தின் நோக்கமும் அதுமட்டும் அல்ல !
இந்த அமைதியை ஒரு கருவியாக்கி ,
அதன் மூலம் மனதை அதன் மூலமாகிய
பரமாத்த்மாவின் சன்னதியுடன் இணைப்பதுவே தியானம் ஆகும் !

நமக்கும் மூலத்திற்கும் ஒரு உண்மையான உயிரோட்டமான
பிணைப்பு இருந்தால் தான் உண்மையான தியானம் கைகூடும் !
சிலர் பிறப்பிலேயே இந்தப் பிணைப்பை பெற்றுவிடுகின்றனர் !
கண்ணால் பார்க்காத , அவரைப் பற்றி ஏதும் தெரியாமலேயே
ஒரு பிணைப்பு வந்து விடுகின்றது .!அவர்களே ஜிவன் முக்தர்எனப்படுவர் !

இது காலம் காலமாக ,பிறவிகள்தோறும்
கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துவரும் அவனருளாலே தான்
இத்தகைய பிணைப்பு இப்போது கைகூடுகிறது !
இயபாகவே அவர்களுக்கு மூலத்தின் பால் ஒரு ,அன்பு எனும் பிணைப்பு அமைகிறது !

அவர்கள் கருவிலே திருவுடயோர் !

மற்றவர்களுக்கோ பிரார்த்தனை பூஜை பக்தி
என கொஞ்சம்கொஞ்சம் சேர்த்து அதன் மூலம் வாய்த்த அறிவினால் இந்த
பிறவியில் கொஞ்சம் புருஷார்த்தம் தேவைப்படுகிறது !
பிரார்த்தனையும் ,பக்தியும்
இதய தாமரையை மலரச்செய்கிறது !

பிரார்த்தனையும் பக்தியும் ஆழமான பகுதியை விழிக்கசெய்து
மனதின் எல்லா பகுதியும் தூண்டி
ஒவ்வொரு பகுதியும் தியானத்தின் பலனை பெறச்செய்கிறது !
தியானம் என்பது பிரார்த்தனை ,பக்தியின்
தொடர்ந்த நுண்ணிய ஒரு தொடர்ச்சியே !

முமுஷூ எனும் பயணிக்கு பிரார்த்தனையும்
பக்தியும் இரு ஊன்றுகோல்கள் !
செல்லுமிடமோ தியானம் என்னும்
ராஜப்பட்டைக்கு ,

தியானம் வசப்பட்டபிறகு ஊன்றுகோல்களைத் தூக்கி எறிந்துவிடலாம் .

வைத்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள் ,அது அவர்கள் நிலையைப்பொருத்தது

நிகழ காலத்தில் என்றும் நடை பெறும்
ஜீவாத்த்மா ,பரமாத்த்மா உறவே தியானம் !
அது எப்போதும் நிகழ் காலம் தான் !

பிரார்த்தனையோ பூஜையோகூட நாம்
கடந்த காலத்தில் இருந்து செய்ய முடியாது .
எதிர்காலத்தில் இருந்தும் செய்ய முடியாது .
நிகழ காலத்தில் இருந்து நம்மை மறக்க ஆரமித்ததும்
பிரார்த்தனை தடைபட்டுவிடுகிறது .
ஆக விழிப்புணர்வே பிரார்த்தனையாகும் !

தியானம் என்பது அன்றாட வாழ்வுடன் ஒன்றாகவேண்டும் !
இருவேறு நிலை என்றும் போராட்டம் தான் !
தியானம் என்பது வாழ்வின் போராட்டம் ,எதிர்பார்ப்பு
அத்துனையுடன் பின்னி பிணைய வேண்டும் !

முழுவாழும் அடக்கியதே ஆன்மீக வாழ்க்கை !

ஒருமணிநேரம் மட்டும் ஆன்மீகவாதி என்பது நடைபெறாது .

மற்றநேரத்திலும் செய்யும் செயல்களில் ஆன்மீக நியதிகள் பின்பற்றப்படவேண்டும் .

அவ்வாறு இல்லாமல் வேறு வேறு நிலை உடலிலும் ,மனதிலும் ஒவ்வாத்தன்மை
ஏற்ப்படுத்தி உடலையும் மனத்தையும் வருத்தும் !

அவ்வாறு வருத்தவில்லை என்றால் அந்த ஒருமணி நேரம்கூட

ஆன்மீக வாழ்வு வாழவில்லை என்றுதான் பொருள் .

அர்த்தமற்ற வாழ்வு வாழ நமக்கு நேரம் இல்லை ,

ஆன்மீக நெறியில் புகுந்தபின் ,அதைத்தவிர வேறு எதிலும் நாட்டம்

இருத்தல் ஆகாது .ஆனால் இதில் செய்யும் செயல்கள் எதுவேண்டுமானாலும் இருக்கலாம்

ஆனால் ஆன்மீக வாழ்வு தியானத்தை மையமாக கொண்டு தான் அமையவேண்டும் !

தியானம் இல்லாமல் ஆன்மீக வாழ்வில் உயர்வு இல்லை !
இத்தக தியானம் கைகூட அஷ்ட்ட்டாக யோகமும் கைகூட வேண்டும் .
அந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படவேண்டும் !
இல்லயேல் சருக்குமர விளையாட்டுதான் அமையும் .

ஆன்மீக நெறிகளைப் பின்பற்றும் எந்த உலகியல் செயல்களும் வெற்றிபெறும் .ஆன்மீக வாழ்வில்

அமைதியும் ,ஈடுபாடும் மட்டுமே இருக்கும் .அவசரமும் ஆடம்பரமும் பதட்டமும் அங்கே இராது .

சாதாரணமாக நமது வாழ்வு ஏமாற்றமும் , போராட்டமும் கொண்டதாகத்தான் இருக்கிறது !
அது முதலில் சீர் செய்யப்படவேண்டும் !
எந்த முயர்ச்சியானாலும் முழுமனதான வாழ்வுடன் ஈடுபடுபோதே அதில் வெற்றி அடைய முடியும் !

நமது வாழ்க்கை முறை நமது ஒவ்வரு செயலையும் பாதிக்கிறது .
உற்றுப்பார்த்தால் நமது பிரச்சனைகளுக்கு ,தோல்விகளுக்கு
நாம் சிந்திக்கும் பாங்கு ,
நாம் செயல் படும் விதம்
நமது வாழ்க்கை முறை
இவையே காரணம் என்று தெரியும் .

வாழ்வில் வெற்றி பெறுபவர்கள் எல்லாம்
அறிவு மிகுந்தவர்கள் அல்லர் !
ஆற்றல் மிகுந்தவர் அல்லர் !
ஆனால் மிக முக்கியமாக அவர்கள்
வாழ்க்கையை சரியாக புரிந்து வைத்திருப்பவர்கள் !

அவர்கள் முயற்ச்யின் பின்னால் முழு வாழ்வும் இருக்கும் .
முழு ஆளுமையும் இருக்கும் ! முழுமனதும் இருக்கும் .

அரைகுறை மனதுடன் ஏதும் செய்யமாட்டார்கள் .

உலகியல் வாழ்வின் வெற்றிகள் புற சூழநிலையை சார்ந்தது !
ஆனால்புற சூழல்கள் முழுவதும் நமது கட்டுப்பாட்டில் இல்லை !

ஆன்மீக வாழ்வின் வெற்றிகள் அக உணர்வை பொறுத்தது !
அவனருள் மட்டுமே அதிகம் தேவை ! மீதி அத்தனையும் நமது
ஆளுமை ! நமது முயற்ச்சிகள் .
ஆன்மீக வாழ்வில் போட்டிகள் இல்லை !
புறவாழ்வில் இருப்பது போல் காலைப்பிடித்து
அல்லது இழுப்பது போன்றஇழி நிலை இதில் இல்லை !அங்கே கைத்தூக்கி விடுவதுதான் உண்டு !

தக்க ஒரு குரு ஆன்மீக முயற்ச்சியில் கைத்தூக்கிவிடுவார்கள் .
புறஉலகின் தோல்விகள் அதை பாதிப்பதில்லை !

ஆனால் சிலநிபந்தனைகள் மட்டும்அதில் உண்டு !
முதல் நிபந்தனை தேடல் !தீவிர தாகம் !

இரண்டாவது நிபந்தனை முழு ஆளுமை !
முன்றாவது பிரபஞ்ச வாழ்வுடன் இணைப்பு !

இவ்வ்று தான் வாழும் புற வாழ்வில்
முழு வெற்றி பெற்ற திருப்பதி வந்த பிறகே,
பூரண அமைதி கிடைத்தபிறகே ,
புறத்தே நிகழும் எதுவும் ,எந்த செயலும் , எவராலும்
தன்னை பாதிக்காத மனதின் சமநிலை வாய்க்கும் போதே
ஆன்மீக வாழ்வின் வெற்றிகள் கைகூட துவங்கும் .

முதல் மாற்றம் மனதில் ,தன்னில் தோன்றவேண்டும் !
ஆசை பட்டவைகளை அடையத் தெரியவேண்டும் !
அல்லது அடைந்த பின் கிடைக்கும் அமைதி
ஆசைப்பட்டவைகளை அடையாத போதும் அமைதியை ,

எப்படி அடைவது என்று தெரியவேண்டும் !
மனதில் சமநிலை வாய்க்கும் போதே ,
மண்ணில் சொர்க்கம் புலப்படத்தொடங்கும் !

ஆன்மீக வாழ்வு என்றதும் அது வயதானப்போதுதானே வேண்டும்

இப்போது எனன அவசரம்என்ற எண்ணம் வேண்டாம் .

வாழ்வின் வெற்றிக்கு ,உலகியலில் அமைதியுடனும் ,

திருப்பதியுடனும் நினைத்தவை வெற்றியடைவதர்க்கும் ,

ஆன்மீக நியதிகளேப்பின்பற்றப்படவேண்டும்

இருவேறு வழிகள் வெற்றிக்குக் கிடையாது .



இன்னும் கொஞ்சம் அடுத்த பகுதியில் அடுத்தவாரம் !

அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்


sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Oct 07, 2011 9:11 pm



எனக்கு புரிந்தது இதுவே ! (38)-

பொதுவாக ஆன்மீக பாதையில் பலரிடத்தும் ஒரு பெரிய மூட நம்பிக்கை உண்டு
ஒரு குறிப்பிட்ட நபர் ஆன்மீக பாதையில் போகிறார் என்றதும்
மற்றவர் அந்தசாதகரைப் பற்றி என்ன புரிந்து கொள்கிறார்கள் ,
என்ன அவரிடம் எதிர்ப்பார்க்கிறார்கள் என்றால் ,
அந்த ஆன்மீக பாதையில் செல்ல முயலும் சாதகர் மற்றவர் போல்
இருக்கமாட்டார் , எப்போதம் வித்தியாசமாகவே இருப்பார் ,

சாதரணமாக அனைவரைப் போலவும் சாப்பிடமாட்டார் ,

ஒரே இடத்தில் அசையாமல் உட்கார்ந்திருப்பார்
அவர் எப்போதும் மிகவும் கடு கடுப்பாகவே இருப்பார் ,
அவரிடம் நகைச்சுவை உணர்வு இராது ,

அன்பு என்பது இல்லாது வறட்டு ஆசாமியாக இருப்பார்
முக்கியமாக ஏதாவது குடிசையில் மிக ஏழ்மையாக
தரித்திர நிலையில் வசிப்பார் ,

மேலும் அவர் நாகரீகமாக இருக்கக்கூடாது
தாடி மீசையுடன் தான் இருக்கவேண்டும் .சாதரண மனிதர் போல் இருப்பது
ஆன்மீக பாதையில் செல்வதற்கு தகுதியில்லை என்பது தான் பெரும்பாலோரது .முடிவு ..


மேலும் தனது உடமைகளை பிறருக்கு தானம் செய்து விட்டு
தனக்கு என்று ஒன்றும் இல்லாமல் இருப்பார்
இதுவே ஆன்மீக வாதி என்றதும் அநேகருக்கு வரும் கற்ப்பனை சித்திரம் .

அவரிடம் பிறருக்கு உதவி செய்யவோ அல்லது தனது ஆன்மீக சாதனைகளைத்தொடர

தேவையான பொருள் வைப்போ இருத்தல் ஆகாது என்று எண்ணுகிறார்கள் .

ஆனால் அத்தகைய ஜீவன்முக்தர்கள் பொருள் இருப்பினும் அதன்மேல் பற்றற்ற ,

துறவு நிலையிலேயே எப்போதும் இருப்பதும் ,பொருள் இருப்பினும் ,இல்லாதுதிருப்பினும்

அவர்களது சமநிலை மாறுவதில்லை என்பது மற்றவர்களுக்குப் புரிவதில்லை .

அனேக திருத்தலங்களுக்கு தேரும்,திருப்பணிகளும் செய்துகொண்டு சாக்குக் கட்டிக்கொண்டு வாழ்ந்த சித்தரும் உண்டு ,பட்டுத்துணி உடுத்தி ராஜரிஷிபோல் வாழும் ஞானிகளும் உண்டு

அவர்களின் நிலையைப்பற்றி விமரிசிக்க,நாமும் அவர்தம் நிலை அறிந்திருக்கவேண்டும் .ஆயினும்

நமக்கு அவர்களின் உபதேசங்களும் ,வாழிகாட்டளுமேத் தேவை .

அவரவர் கருமப்படி ஞானியர்தம் வாழும் வழி அமைகிறது .

உண்மையில் கடும் நோன்பு ,ஆன்மீக வாழ்வு இவைகளுக்கு இடையில் இருக்கும்

வித்தியாசத்தை புரிந்து கொள்ளாததால் இத்தகைய விமரிசனங்கள் வருகின்றன
சில நிலைகளை அடைவதற்கு இத்தகைய நோன்புகள் அவசியம் தான் ,
ஆனால் வாழ்வு எப்போதும் நோன்பு மயமாகவே இருப்பதில்லை ,
வாழ்க்கை என்பது நோன்பால் மட்டும் ஆனதில்லை


எளிய வாழ்க்கை என்பது வேறு , வறுமையில் வாடுவது என்பது வேறு !

வீட்டில் உணவு இருந்தும் உண்ணாமல் இருப்பதுதான் உண்ணாவிரதம் !
வீட்டில் ஒன்றும் இல்லாத போது உண்ணாமல் இருப்பது பட்டினி எனப்படும் .


அது போல் ஆன்மீக வாதி அவ்வப்போது நோன்புஎனும் விரதம் இருக்கலாம் ,
ஆனால் வறுமையில் தன்னை வருத்திகொள்வது ஆன்மீக வழி இல்லை .
உண்மையான ஆன்மீக வாதிக்கு தான் விரும்பும் வாழ்வை
அமைத்துக்கொள்ள மற்றஅனைவரை விட நன்றாகத் தெரியும் .
விதிஎன்னும் வினையை எப்படி தன வழி கொண்டுவருவது

என்பதுஅத்தகைய ஞானிகளுக்குப் புரியும் .

ஆன்மிகம் என்பது ஒரு மதிக்கத்தக்க நிலைஅது அனைத்தையும் புரிதல்எனும் அரிய ஒரு நிலை ..
பரிணாமத்தில் அடுத்த நிலைக்கு போகும் முயற்சி !
ஆனால் மனிதன் மட்டும் தன முயற்ச்சியால்தான் பரிணாமத்தின்
அடுத்த படிக்கு போகமுடியும் . .
மனித ஜன்மத்தின் வாழ்க்கையின் அர்த்தமே அது தான் !
அதில் முதல் படி தன்னை அறிதல் !
அதாவது தன்னிடன் இருப்பதை stock எடுத்தல் ,
என்னென்ன தேவை என அறிதல் ,
என்ன என்ன தள்ளவேண்டியது என்பதை புரிதல் ,
DO"S AND DONT தெரிந்து கொள்ளுவது .!

பெற வேண்டியவைகளை பெற வேண்டுமானால் ,
தள்ளவேண்டியத்தை தள்ளவேண்டும் .தேவையற்றதை செதுக்கி அகற்றினால்தான் பாறை சிலையாகிறது .



பிறகு என்ன செய்யவேண்டும் என தெரிந்து கொள்ளவேண்டும் !
அதில் பயிற்ச்சி பெறவேண்டும்.
அதில் தேர்ந்த பின் அதை தொடர்ந்து சாதகம் செய்யவேண்டும்
அதுவே வாழ்வாகஆகவேண்டும்

தான்வேறு வாழும் நிலைவேறு இல்லை எனும் மனநிலை தன்னுள்
உருவாகவேண்டும் .பின் தான் என்பது அதுவே ஆகவேண்டும் !

அத்வைதம் மலரவேண்டும் .

ஒருமைப்பாடு புலப்படவேண்டும் .

இதையே அஷ்டாக யோகம் என யோகத்தின் படிகளாக
நமக்கு உரைத்துச் சென்றனர் பதஞ்சலி போன்ற சித்தர் பெருமக்கள் ..

சாதாரண வாழ்க்கை வெவேறு ஆசைகளும் பேராசைகளும் திரும்பதிரும்ப
வந்துவட்டமடிக்கும் ஒரு நிலையாகும் .
இதில் படிபடியாக வட்டத்தில் இருந்து வெளிவரும் மார்கத்தை
குருவருளாலும் , சிறிது புருஷர்த்ததாலும் ,பெரும் பகுதி அவனருளாலும்
பெறவேண்டும் .அவனருள் பெற அவனருள் வேண்டி ஜன்மம் தோறும்
ஏங்கவேண்டும் .அத்தகைய விழிப்புணர்வு சிறிது சிறிதாக
ஓங்கும் போது அவனருள் வந்து அவனை உய்விக்க வாய்க்கும் .!

அப்படி இருக்கும் போது நாம் வாழும் தற்சமய வாழ்க்கை மிகவும் பொருள்
படைத்ததாகிறது ! இதை எப்படி எப்படியோ தாறுமாறாக வாழ்ந்தால்
.எப்படி நிகழ்காலம் வருங்காலத்தை இந்த வாழ்வில் நிர்ணயிக்கிரததோ,


அவ்வாறே நாம் வாழும் தற்கால வாழ்க்கை முழுவதும் ,நமது அடுத்தபிறவியின் வாழ்வை நிர்ணயிக்கிறது அது பாதிக்கிறது .

இந்த வாழ்வின் தொடர்ச்சியாகவே அடுத்த ஜன்ம வாழ்வு தொடர்கிறது .
ஆயினும் அதை உணரவோட்டமல் நாம் பூசிக்கொள்ளும்
இப்போது வாழும் வாழ்க்கையின் அனுபவங்களும் ,உறவுகளும்
நம்மை புதிய புதிய பொறுப்புகளிலே அதிக கவனம் செலுத்தி
நமது நீண்ட பயணத்தின் நீட்ச்சியை மறக்க செய்து விடுகிறது .

இவ்வாறு இல்லாமல் நாம் ஆற்றவேண்டிய சொந்த கடமைகளில்
கவனம் செலுத்த நாம் என்றும் நிலை குலையாத
சம நிலையில் இருத்தல் வேண்டும் .! தெளிந்த மனம் இருக்கும் போது தான்
அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற சரியான வழி புலப்படும் .

உதாரணமாக சொன்னால் நாம் பெரும் பாலும்
ஈடுபடும் ஒரு விஷயத்தை பார்ப்போம் !மனிதன் செய்யும் யோசனைகளில் பெரும்
பங்குவகிப்பது உணவைப்பற்றி தான் இருக்கும் ! என்ன சாப்பிடுவது ?
எப்போது சாப்பிடுவது ? போதிய அளவு சாப்பிடுவோமா ?
என பெரும்பாலும் யோசனை அமைகிறது .

உணவைப்பற்றிய பேராசையை வெல்லவேண்டுமானால் ,
உணவில் அக்கறை இல்லாத ஒரு சம நிலை வளர்க்கவேண்டும் .
உணவை வெறுப்பதோ ,ஒதுக்குவதோ அதை வெல்லும் வழி இல்லை !

உணவு கிடைத்தால் அதை நன்கு சாப்பிடு இல்லையென்றாலும் அதைப்பற்றிய கவலை
இல்லாமல் அது குறித்து அதிகம் வாடாமல் இருக்கவேண்டும் .
உணவு கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கை இருக்கும் போது கவலை ஏன் ?
நாம் என்னமோ உணவை நாம் தான் ஈட்டுவது போல் கவலை படுகிறோம் .நான்
எனும் தனமாத்திரை அந்தக்கரணம் வரும் போதுதான் கவலை எனும் தீய உணர்வு வந்து
நமது சம நிலையை குலைக்கிறது .

ஒரு துறவி நோன்பை பற்றியும் அதில் உணவை எப்படி ஒதுக்குவது என்று
எப்போதும் யோசித்து வந்தால் அதுவும் தவறே ! எப்படி உணவு வேண்டும் என்று
அதைப்பற்றியே சிந்திப்பது தவறோ அவ்வாறே அதை ஒதுக்கவேண்டும் என்று அதைப்பற்றியே
சிந்தித்து இருப்பதும் தவறுதான் .!

உள்ளத்தின் உள்ளே இருக்கும் ஆன்மாவுடன் நமக்கு தொடர்பு ஏற்பட்டுவிட்டால்
அப்போது இவைஎல்லாம் கோஷமும் முக்கியம் இல்லை

முக்கியமானதுதம்முள் இருக்கும் இறை நிலை ஒன்றைப் புரிதலே
என்பது தெரிந்து விடும் .
அப்படி வாழும் போது எல்லா பேராசைகளும் நம்முள் நிலைபெறாது
அத்தகைய புரிதலே நம்மை
உயர்த்திவிடும் ! எதற்கும் ஏங்க வைக்காது ,
கவலைபடவைக்காது ,ஆசைப்பட்டு துடிக்கவைக்காது ,
நடப்பது எல்லாம் நல்லதிற்கே என்பது புரியும் .

அப்போது நமக்கு எது நடந்தாலும் அது நல்லதா ?அவாறு எடுத்துக்கொண்டு

சும்மா இருக்கவேண்டுமா என்றால் முழுவதும் அப்படி இல்லை

சாதரண உணர்வில் இருக்கும் போது இது

சரியில்லை . இந்தநிலை ஆன்மாவை உணர்ந்தால் தான் !
இறைவனுக்கு தன்னை அர்ப்பணம் செய்து
பூரண சரணாகதி அடைத்தால்தான் வாய்க்கும்
சரணாகதி அடைதல் என்பதில் நேர்மை இருக்கவேண்டும்
அதில் எந்த பொய் இருந்தாலும்
நிச்சயம் அப்போது எது நடந்தாலும் நல்லதுஎன்பது இல்லை


நேர்மையான சுய அர்ப்பணம் செய்யும் போது கிடைக்கும்
வெகுமதி நடப்பது எல்லாம் நன்மைக்கே என்ற நிலை ,

எங்கும் பெறமுடியாத நிம்மதி , மக்ழ்சி பாதுகாப்பு !
ஆனால் நம்மில் நேர்மை அவசியம் !
எனவே சமநிலை என்பது நமது வாழ்வில் ஒரு அம்சமாக பழகவேண்டும் .
புறத்தில் நடக்கும் எந்த நிகழ்வும் நமது அக உணர்வை பாதிக்காத அளவு
பார்த்துக்கொள்ளவேண்டும் !

மற்றவர்களால்அவர்களது விருப்பு வெறுப்பால் நாம் அசைக்கப்பட முடியாதவர்களாக
இருப்பது நமக்கு பெருமைதானே !
நடக்கும் ந்கழ்சிகளும் உள்ளது உள்ளபடியே ,
அப்படியே ஏற்றுக்கொள்ளும் மன பக்குவம் வர வேண்டும் !
இதில் ஒரு உண்மை என்னவென்றால் நாம் பெரும் பாலும் அப்படிதான் இருக்கிறோம்
!அப்படியே தான் எதையும் ஏற்றுக்கொள்கிறோம் .
ஆனால் அதில் சம நிலை மட்டும் நம்மிடம் கிடையாது .!
ராக் துவேஷ் எனும் இருவேறு நிலை எப்போதும் நம்மில் உண்டு .
.ஒன்று வெறுப்போம் ! இல்லை தலையில் தூக்கிவைத்து ஆடுவோம் !

பாருங்கள் ! இந்தியாவில் பிறந்ததால் இந்தியன் என பெருமை பேசுகிறோம்
இதில் நமது தேர்வு ஏதாவது உண்டா ?
இந்துவாக பிறந்ததால் இந்து மதத்தைப்பற்றி ,அதன் சித்தாந்தம்
வேதாந்தம் பற்றி பேசுகிறோம் !
இதில் நமது தேர்வு ஏதாவது உண்டா ?
தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழ் பற்றி
பெருமை பேசிகொள்கிறோம் !
இதில் நமது தேர்வு ஏதாவது உண்டா ?
இதில் எதுவும் நாம் தேர்வு செய்ய வில்லை !
நமதிச்சையால் வந்தோமில்லை
முதல் இறுதி நம் வசம் இல்லை !
ஆனால் இதில் உயர்வு வெறுப்பு மட்டும் நம்மிடம் உண்டு !

பொதுவாகவே நாம் நமது வாழ்வில் எதையும் தேர்வு செய்வதில்லை !
வருவதை அப்படியேஏற்றுக்கொள்கிறோம் .ஆனால் நமது சுமையான மனம் ஒவ்வரு
நிகழ்ச்சியையும் ,தன்னிடம் உள்ள முந்தய அனுபவங்களுடன் ஒப்புநோக்கி ,அதற்க்கு
ஒரு சாயம் பூசி , அந்த நிகழ்ச்சியை
ஒரு சமநிலையில் பார்க்க விடாமல் அதன் மேல் ஒரு ராக் துவேஷ்
உண்டாக்கிவிடுகிறது ! அப்போதுதானே நாம் அந்த வட்டத்திலேயே இருப்போம் .!
வட்டத்தை விட்டு வெளியே வரவேண்டும் என்றால் முதலில் நமக்கு புற நிகழ்ச்சியால்
அக உணர்வு
பாதிக்காதை நிலை வர பயிலவேண்டும் .

அது சொல்லுவது போல் அத்தனை சுலபமல்லை .
அதற்க்கு பல நிபந்தனைகள் நிறைவேற்றப்படவேண்டும் .
அதற்குதான் தியானம் மிக அவசியம் ,
தியானம் கை கூட பிராண யாமம் கை கூடவேண்டும் .
இவை கை கூட வாழும் வாழ்க்கை
இரை மட்டும் தேடுவதாக இருக்கக்கூடாது .
தியானம் என்பது பலபூட்டுகளைத் திறக்கும் சாவியாக அமைகிறது .தியானத்தின்

அவசியத்தை எடுத்தியம்பவே இத்தனையும் விவாதிக்கவேண்டி இருக்கிறது .

எதையும் அதன் அவசியத்தை உணர்ந்தால் தான் அதைப்பெறவேண்டும் எனும் தீவிரம்

அமைகிறது ..தீவிரம் இல்லாமல் தீர்வு என்பது கிட்டாது .

அன்டுத்து சிலகருத்துக்களை அடுத்தப்பகுதியில் காண்போம் .

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்


sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Nov 11, 2011 10:23 pm

எனக்கு புரிந்தது இதுவே ! (39)-*

வேதத்தில் இருந்து கூறப்படும் 'தத்துவமசி' போன்ற மகா வாக்கியங்கள் போல்
புதுவை அன்னையின் மகா வாக்கியம் ஒன்று உள்ளது .அவர்கள் கூறிய அருளுரையில்
இருந்து இந்த வாக்கியத்தை மகாவாக்கியமாக நான் மதிக்கிறேன்
அது ' அகவுணர்வுகளின் வெளிப்பாடே நம்மை சுற்றிய புறச்செயல்கள் ' என்பதுவே
.ஆகும் .
இதுவே நம்மைச்சுற்றி நடக்கும் அனைத்து காரணங்களுக்கும் தகுந்த ஒரு சரியான
காரணத்தை கூறவல்லது ஆகும்

உண்மையில் எல்லோரும் சொல்வது போல் நாம் என்ன நினைக்கிறோமோ அதைப்பொருத்தோ ,நமது எண்ணங்களை பொறுத்தோ ,நமது தேவைகளின் பொறுத்தோ , நமது பிரார்த்தனைகளைப் பொறுத்தோமட்டும் நமக்கு நடக்கும் காரியங்கள் இருப்பதில்லை .நமது அறிவுக்கும் நடக்கும் காரியங்களுக்கும் தொடர்பில்லை .

ஆனால் நமது அக உணர்வின் தன்மையைப் பொறுத்தே
காரியங்கள் நடைபெறுகின்றன .உணர்வு என்பது அறிவல்ல !
வேண்டுமானால் அறிவின் விளைவு நிகழ்வைக்கூறலாம் .

எப்படி சந்தோஷமாக எப்ப்போதும் இருப்பது என தெரிந்திருந்தாலும் .,அந்த தெரிந்தது மட்டும் சந்தோசம் ஆகிவிடுமா ? .
சந்தோஷமாக உணரவேண்டும் .
அந்த உணர்வு எங்கிருந்து வருகிறது .
எது உணர்கிறது .
மூளையா ? மனதா ?

மனம் தான் உணரவேண்டும் .அதற்க்குமனத்திற்கு முன்பே சந்தோசம் என்பது என்ன என
தெரிந்திருக்கவேண்டும் .அப்போது தான்அதை உணரமுடியும் .
சக்கரையின் சுவை முன்பே தெரிந்தால் தான் சக்கரையை இனம் காண முடியும் .
முன்பே தெரிந்தது தான் வாசனை என்பது .அது ஒவ்வரு பிறவியிலும் ,ஒவ்வருநாளும்
பெறும் அனுபவத்தை சேகரம் செய்வது .


உறங்கி விழிப்பதுதானே சாக்காடு ,
மீண்டும் வரும் பிறவிகளும் சிறிது நீண்ட தூக்கம் தூங்கி எழும் புதிய நாள்போல்தான் ஆகிறது .
வாசனை குறிந்தும் ,விருத்தியை குறித்தும் ,மனம் என்பதின் பல கூறுகளைப்
பற்றியும் , சமஸகாரம் பற்றியும் முன்பே விரிவாக பார்த்திருக்கிறோம்.

இதில் அக உணர்வை வளர்த்துகொள்வதும் நல்ல உணர்வுகளை வளர்த்துக்கொள்வதும் மிக
முக்கியமானதாகும் .நல்ல உணர்வுகள்என்பது அன்பு ,பக்தி
சந்தோசம் , பரிவு ,பெருந்தன்மை , மன்னிக்கும் குணம் முதலியவையாகும் .
தீய உணர்வுகள் கோபம் பொறாமை , கருமித்தனம் ,சுயநலம் முதலியவையாகும் .

கோபம் பொறாமை , கருமித்தனம் ,சுயநலம் போன்றவற்றின் பலனை ஏறக்குறைய
நாம் உடனே உணர்ந்து விடலாம் .நாம் கோபமாக பேசினால் ,பதிலுக்கு என்ன கிடைக்கும்
சாதாரணமாக கோபமே,கோபம் கலந்த பேச்சே திருப்பிக் கிடைக்கும் .
நாம் பெறும் அனுபவங்கள் அறிவாக மனதில் சேமிக்கப்பட்டு முளையின் மூலமாக
அவை செயல் படுகிறது .

உணர்வு என்பது மனிதனின் ஆன்மாவிற்கு சொந்தமானது மட்டுமல்ல் .
ஆன்மாவின் இயல்பே உணர்வு தான் .

நாம் உணர்வில் செயல் படும் போது ஆன்மாவின் ஒளி அதன் மேல் படுகிறது .

ஆன்மா மட்டுமே உணர்வு பொருள் .
ஆன்மா விழிப்பின்றி உடலாலோ மனதாலோ செய்யப்படும் செயல்கள் எல்லாம்
தன்னுண்ர்வற்ற தன்னறிவற்ற நிலையிலேயே நடை பெறுகிறது .

உணர்வுடன் செய்யும் போதே அங்கே ஆன்மாவின் ஒளி படுகிறது .
பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துமே ,அதாவது நம்மை சுற்றி இருக்கும் ஸ்துல
பிரபஞ்சம் , நுண் பொருளாகிய மனம் ,இந்த உடல் இவையாவையுமே
உணர்வற்றவை .இது தோன்றா நிலையில் இருக்கும் மூலம் தான் .

ஸ்துல பிரபஞ்சம் , நுண் பொருளாகிய மனம் ,இவ்வை இரண்டுமே அதன் இரு
வெளிப்பாடுதான் .
ஆன்மாவின் ஒளி படும் போதுதான் அவை ஒளிருகின்றன .
அனால் ஆன்மா ஒரு சுயம் ஜோதி .
உணர்வையும் ,உணர்வின்மையும் வேறுபடுத்திக்காட்டியது பாரதத்தின் பெரும்
ஞானிகள்தான் .இது ஒரு சாதனைத்தான் .
இந்த வேற்றுமை உணர்வுதான் ஆன்மீக வாழ்விற்கு மிகவும் தேவைப்படுவது .

நம் உடலில் ரத்த ஓட்டம் ,உணவு ஜீரணித்தல் ,சக்தி உடலெங்கும் பரவுதல் முதலியன
நமது நினைவின்றி ,உணர்வின்றிதான் நடக்கிறது .

நமது மனத்தை ஊன்றி கவனித்தால் ,அதில் எழும் எண்ணங்கள் பெரும் பகுதி நமது
உணர்வின்றி நடப்பது புரியும் .

நாம் பேசுகிறோம் , கேட்கிறோம் ,நடக்கிறோம் , படிக்கிறோம் ,உண்கிறோம்
,கார் ஓட்டுகிறோம் இவற்றில் பெரும்பாலானவை தன்னறிவில்லாதுதான் செய்கிறோம் .
உணர்வு இருப்பதில்லை .

நாளில் பெரும் பகுதியை உணர்வற்று கழிக்கும் நாம் அதை மனதின் போக்கிற்கே
விட்டுவிடுகிறோம் .மனமோ அதில் இருக்கும் வாசனை ,சமஸகாரத்தின் படி உணர்வின்றி
,தன்னறிவிற்றி செயல்படுகிறது .
தியானத்தில் அமர்வதும் அத்தகைய ஒரு நிலையிலேயே அமைகிறது .
தியான வேளையில் அமர்ந்த உடனேமனம் அடங்கிவிடும் என எதிர்ப்பார்க்கிறோம் .அது
எப்படி இயலும்

நாம் தன்னுணர்வு மிக்கவர்களாக ஆவது நாம் எந்த அளவு ஆன்மாவை சார்ந்திருக்கிறோம்
என்பதை பொறுத்திருக்கிறது .


நாம் தன்னுணர்வு பெற்றவர்கள் ஆகும் போது நமது எண்ணங்களும் செயல்களும்
நமது கட்டுப் பாட்டில் வருகிறது .

இந்த உலகில் நாம் எதையாவது அடையவேண்டுமானால் அதற்கான குறிப்பிட்ட உணர்வு நிலையை அடைய வேண்டும் .
பாவித்தால் போதும் என்பது இதைத்தான் .

இந்த உணர்வு பகுதி ,உணர்வுறு பகுதி இவை அடங்கிய மனதை அதன் ஆற்றலை
பிராணனே நிர்ணயிக்கிறது .அதன் ஆற்றலே இயக்குகிறது .
பிராணன் இடகலை எனும் சந்திர நாடி வழியாக மேல் இழுவதும்
பிங்கலை வழியாக கிழே வருவதுமாக இயங்குகின்றது .
இதில் பெறும் ஆற்றலின் ஒரு பகுதி உடலையும் இயக்குகிறது .
மனதின் உணர்வு பகுதி ,உணர்வுறு பகுதி ஆகிய இருபகுதியையும் இயக்குகிறது .

பிராணன் இந்தப் பிரபஞ்சம் எங்கும் விரவி பரவி இருக்கிறது .அது வெறும் காற்று
அல்ல . பிராணாயாமத்தின் மூலம் இந்த நாடிகளை கட்டுப்படுத்தவும் இயைந்து செயல் படியும் இருக்கசெய்ய முடியும் .
தியானத்தின் மூலம் தன்னுணர்வில் இருக்க முடியும் .

பிராணன் கட்டுப்படும்போது சமஸகாரம் தூண்டப்படுவது குறைகிறது .
மனம் அமைதி பெறுகிறது தியானம் கைகூடுகிறது .நாம் ஆன்மாவிற்கு
அருகில் செல்ல முடிகிறது .
தீவர பக்தி ஆன்ம விசாரம் ,ஜபம் இவைகளின் மூலமும் மனதை அமைதியுற செய்ய முடியும்
.
ஜபமும் ஒரு வகையில் பிராணாயாமம் போன்றதே அப்போது மூச்சு மென்மையாகிறது .

இடகலையும் , பிங்கலையும் தண்டுவடத்தின் கிழுள்ள மூலாதாரத்தின் இட ,வல
பக்கத்தில் இருந்து தொடங்கி ஒன்றை ஒன்று பின்னி , இவ்வாறு வளையத்தை
ஒவ்வரு சக்கரத்தை சுற்றியும் உண்டாக்கி மேலே செல்கின்றன .
வழியில்அவை மூன்றுமுறை இணைகின்றன
இவ்வையே அரசமரத்தடியில் பின்னிய நாகங்களாக வடிவமைத்து வணங்கப்படுகின்றன .
இது கிரந்திகள் அல்லது முடிச்சுகள் எனப்படும் .

இவை பிராணனின் ஓட்டத்தை தடுக்கும் தடையாக கருதப் படுகிறது .
இந்த முன்று முடுச்சுகளும் மனதின் மூன்று நிலைகள் ,

மூன்று முடிச்சுகள் . .
முதலில் வருவது பிரம கிரந்தி
இது தொப்புளுக்கு கிழ் உள்ளது
பிராணன் இங்கு தேங்கி தடைபடும் போது
மனம் ஆசைகளுக்கும் ,பசி தாகம் முதலிய புலன் இச்சைகளுக்கும்
அடிமைப்படுகிறது .

இரண்டாவது விஷ்ணு கிரந்தி
இது இதயத்துக்கு கிழே உள்ளது
இதுதான் உணர்ச்சி மையம்
மனிதனின் உணர்ச்சிகள் இங்கிருந்துதான் பொங்கிப் பெருகுகிறது .

மூன்றாவது ருத்திர கிரந்தி
இது புருவமத்திக்கு கிழே உள்ளது .
இதுதான் அறிவின் மையம் .

பிராணன் உணர்ச்சி மையத்திர்க்கும அறிவு மையத்திர்க்கும மிகுதியாக போக
மனம் ஆசைகளுக்கும் ,பசி தாகம் முதலிய புலன் இச்சைகளுக்கும் அதிகம் செலவாகாமல்
மேலே செல்லவேண்டும் .

இந்த மூன்று முடிச்சும் வாழ்வை மூன்று நிலைகளாக
பிரிக்கிறது .

இயல்புணர்ச்சி வயப்பட்ட வாழ்வு .
உணர்ச்சி வயப்பட்ட வாழ்வு
அறிவு ( ஞானம் )உணர்வு வயப்பட்ட ஆன்மீக வாழ்வு


இதில்உணர்ச்சி ,வேறு உணர்வு என்பது வேறு என்பதை கவனிக்கவேண்டும் !


இயல்புணர்ச்சி, உணர்ச்சி அறிவு
இவ்வைகளுக்கு இடையே ஆன போராட்டம் அமைதி அடைந்த பின்பே பிராணன்
இரு நாடிகளிலும் தாராளமாக சென்று வர முடியும் .


அதன் பின்புதான் சுழு முனை நாடிஎன்பதை கண்டு பிடிக்கவும் ,அறியவும் முடியும் .
பின்புதான் ஆன்மீக வாழ்வு ஆரம்பம் ஆகும் .
இதற்க்கு பிராணாயாமம் மிக அவசியமாகும் .
பிராணாயாமம் இன்றி ஆன்மீக வாழ்வு கைகூடாது .
சிலருக்கு இயற்கையிலேயே சில பிராண ஓட்டம் அமைவதுண்டு .
தொடர்ச்சி அடுத்த பகுதி

சற்று கடினமாகத்தொன்றக்கூடும் ,ஆனால் உணர்வுடன் ,

நிகழ்காலத்தில் இருந்து இதை படித்தால் இதன் நுட்பங்கள் எளிதில் விளங்கக்கூடும் .

என்னால் இயன்றவரை புரியவைக்கவேண்டும் எனும் உணர்வுடனேயே ,பண்டிதத்தனம்

இலாது இயல்பாக எழுதவே முயல்கிறேன் .

இதில் ஏதாவது புரியவில்லை எனில் எனக்கு இன்னம் திறன் வளரவில்லை என்றப் பொருள் .

மீண்டும் விரைவில் சந்திப்போம் ,தொடரின் இறுதிப்பகுதிக்கு நெருங்கிக்கொண்டு இருக்கிறோம்

அன்புடன்

அண்ணாமலை சுகுமாரன்

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Thu Nov 17, 2011 11:07 pm

எனக்குப் புரிந்தது இதுவே ! (40 )*

உணர்வுகள் என்பது ஆன்மாவின் ஒளி என்று பார்த்தோம் .
மனிதன் சத்துவம் ,ரஜஸ்,தமஸ்
என்னும் முன்று குணங்களின் வடிவானவன்


இதில் சத்துவம் என்பது ஞான சேர்க்கை , ரஜஸ்என்பது கர்மாவின் சேர்க்கை ,
தமஸ்என்பது மயக்கத்தில் ஆழ்த்தும் மாயை

இந்த முன்று குணங்களில்மனிதர்கள் இருக்கும் நிலைக்கு தகுந்த படி அப்போது இருக்கும் உணர்வு
நல்லதாகவோ தீயதாகவோ மாறுகிறது .
குணம் என்பது இருக்கும் தன்மை ,சுழ்நிலை ,உண்ணும் உணவு ,விரதம் முதலியவை பொருத்ததாகும்
ஆயினும் என்றும் சத்துவ நிலையில் இருப்பது ஆன்மீக வாழ்வின் அவசியத தேவை

நமது தனிப்பட்ட வாழ்வு ,பிரபஞ்ச வாழ்வின் ஒரு பகுதியாகும் .
நாம் வாழும் வாழ்வு அமைதியையும் பாதுகாப்பையும்
பெறவேண்டுமானால் நமது வாழ்வு நம்மை சுற்றி இருக்கும் உலக வாழ்வுடன் ,பிரபஞ்ச வாழ்வுடன் இயைந்து இருக்கவேண்டும் .

தியானம் என்பது உணர்வை குவிப்பது, உடம்பினுள் உணர்வினை வளர்ப்பது அது மனதை சரிவர கையாளுவது .

ஆனால் தனிப்பட்ட வாழ்வு பிரபஞ்ச வாழ்வில் இருந்து வேறுபடுமானால் இது கடினம் ஆகிவிடும் .
மனதின் ஆற்றல் ,உடல் ஆரோகியம் இவை அனைத்திற்கும் தேவையான ஆற்றல் பிரபஞ்ச வாழ்விலும் பிரபஞ்ச மனத்திலும் அடங்கயுள்ளன .பிரபஞ்ச மனம் உலகின் மொத்த மனம் ஆகும் .
அவற்றை பயன்படுத்த வேண்டுமானால் ,அந்த எல்லையற்ற ஆற்றலுடன் இயந்து வாழத்தெரியவேண்டும்

சுலபமாக இதைச் சொன்னால் சுற்றி இருப்பவர்களுடன் இயந்து வாழத் தெரியவேண்டும் .
நம்மைப் பொறுத்தவரை நம்மை சுற்றி உள்ளவர்கள்தான் உலகம் .
சாதாரணமாக மனிதனின் மிகுதியான சக்தி பிறர் மேல் ஆதிக்கம் செலுத்துவதிலும் , பல பிற ஆற்றலுடன் போராடுவதிலும்தான் வீணாகிறது .
இந்தப்போராட்டங்கள் வீண் என நமக்கு சரித்திரம் தெரிவித்தாலும் ,நாம் போராடுவதில் இருந்து ஒய்வு பெறுவதில்லை .
உலகை சீர்திருத்துவது இதுவரை யாராலும் கைகூடவில்லையே !
அதைவிட நம்மை திருத்திக்கொள்வது ,சிறிது மாற்றிக்கொள்வது மிக சுலமம் என்பது புரிவதில்லை .!
ஓடும் நீரில் அதன் போக்கிலேயே மிதந்து செல்லும் சுகம் நமக்கு புரியவில்லை .!
அதனுடன் எதிர்த்து நீச்சல் அடித்து நமது சக்தியை வீணடித்தே வருகிறோம். அவ்வப்போது இயற்க்கை முணு முணுக்கும் , அறிவுச் செய்திகள் நம் செவியில் விழுவதில்லை .


நமது அந்தக்கரணம் ஆகிய மனம் ,சித்தி ,புத்தி அகங்காரம் நம்மை
இயந்து பிரபஞ்ச வாழ்வுடன் நடக்க விடுவதில்லை .
உலகை திருத்த முயலாமல் ,வாழ்க்கையின் புதிர்களுக்கு விடை காண முயல்வதும் ,அதன்
நியதிப்படி வாழ பழகுவதும் நமது ஆன்மீக வாழ்விற்கு துணை புரியும் .!

வீண் சண்டையிலேயே காலம் கழித்தால் ,நாம் சென்றடைய வேண்டிய இடத்தை எப்போது சென்றடைவது .


இப்போது நான் கூடஇந்த உலகை திருத்த இத்தொடரை எழுதவில்லை .எனது வாழ்வின் புதிர்களை விடுவிக்க சற்று உரக்க சிந்திக்கிறேன் . உங்களுடன் இணைந்து சிந்திக்கிறேன் .
அவைகளைப் பகிர்ந்து கொள்கிறேன் .

எப்பவுமே நன்மை -தீமை ., இன்பம் -துன்பம் .ஒளி -இருள் போன்று இருமை நிறைந்ததுதான் வாழ்க்கை . !
இந்த இணைகளில் ஒன்றை விட்டு ஒன்றை மாத்திரம் பற்றி வாழ முயன்றால் பிரபஞ்ச வாழ்வுடன் இயந்து வாழ முடியாது .

இந்த பிரபஞ்சமும் சுருங்கி விரிகிறது .
நமது வாழ்விலும் ஏற்ற இறக்கம் உண்டு !
பள்ளம் இருப்பதால் தான் மேடு என்று ஒன்று இருக்கிறது
இருள் இல்லை என்றால் வெளிச்சம் நமக்குத் தெரியுமா

ஒரு நாணயத்தின் ஒரு பக்கம் மட்டும் எப்படி நாணயமாகும் .
ஒரேப்பக்கம் கொண்ட காகிதிதம் எங்காவது இருக்கிறதா
நமது வாழ்வில் இயல்பு வேண்டுமானால்
இந்த இருமையை ஏற்றுக்கொண்டுதான் ஆகா வேண்டும் .

வாழ்க்கையில் போராடுவது இல்லையென்றால்தான்
வீணாகும் சக்தி ஆன்மீக வாழ்வுக்கு பாயும் .

இதை ஒப்புக்கொள்வது சரணாகதி !
இது கோழத்தனம் அல்ல
இது பக்குவப்பட்ட வாழ்க்கைத் தத்துவம் .

பொங்கும் மனத்துடன் எதையும் சாதிக்கமுடியாது .
இயந்து வாழ்தலின் ரகசியம் நம்முள்தான் இருக்கிறது
அதை நாம் எங்கோ வெளியில் தேடி பொழுது போக்குகிறோம் !
நம்மைச் சுற்றிய புறலகம் தொடந்து மாறிக்கொண்டே இருக்கிறது .
அதை கட்டுப்படுத்த நம்மால் முடியாது .நம்மால் யாரையும் மாற்ற முடியாது .

அவரவர்க்கு அவரவர்
வினை வழி விதி தனியே உள்ளது .!
அக்கம் பக்கம் பாராமல் முதலில் நம்மை ,
நமது அக உலகை
மாற்றுவதுதான் ,நமது முதல் பணி.

எதிலும்யாருடனும் போட்டி தேவையில்லை !
வாழ்க்கைஎனும் விளையாட்டிற்கு ,உலகம் எனும் மைதானம் மிகப் பரந்தது,மிகப் பெரியது !
ஒருவரைப் போல் இன்னொருவரில்லை !
ஒவ்வருவரும் தனிப் பாதை வகுத்துகொள்ளமுடியும் .


ஒரு பாதையில் எதிர் எதிரே இரண்டு நல்லவர்கள் வந்தால்
இரண்டு பாதை புதியதாக ஏற்ப்படும்

இருவருமே ஒதுங்கி புதியபாதை ஏற்ப்படுத்துவர் .அங்கேப் பாதையைப் பயன்படுத்தப் போட்டி இராது .இருவரும் தனித்தனிபுதியபபாதை ஏற்படுத்திக்கொள்வர்.

ஒரு நல்லவரும் ,ஒரு கெட்டவரும் எதிர் எதிரே வந்தால் ஒரே ஒரு புதிய பாதை ஏற்படும் !கெட்டவன் பழயபாதையில் செல்வான் .

நல்லவனோ ஒதிங்கிப் புதியபாதை ஏற்ப்படுத்திக் கொள்வான்


இரண்டு கெட்டவர்கள் எதிர் எதிரே வந்தால்
ஒருவருக்கும் பாதை இராது !

இருவரும் சண்டையிட்டு பாதிலேயே பயணத்தை விடுவார்கள் .

இருவருக்கும் பாதை இராது

உண்மையில் நல்லவர்கள் என்றால்
நன்றாக வாழத்தெரிந்தவர்கள்என்பதே !

நாம் எத்தையும் யாருக்கும் ஆளுமை செலுத்தி
அறிவிக்கத்தேவை இல்லை !
உண்மையை சொல்லப்போனால் நாம் சொல்லப் போவது அனைத்தும் முன்பே அவர்களுக்கு ஓரளவு தெரிந்ததால் தான் அவர்கள்
அதை காதுகொடுத்துக் கேட்க்கிறார்கள் அல்லது படிக்கிறார்கள் !

தெரிந்தவர்க்கு மட்டுமே சுவாரசியம் வருகிறது .

கம்ப ராமாயணம் படித்து ரசிக்கிறோம் .நண்பர்களிடம்
அதன் சிறப்பை சிலாகித்து மக்ழ்கிறோம் .
பிறகு சிறிது காலம் சென்று மீண்டும் கம்ப ராமாயணம்
படிக்கிறோம், புதியசுவை ,புதிய நயம் புலப்படுகிறது !
அனுபவித்து மக்ழ்கிறோம் ! என்ன கம்ப ராமமாயனத்தில்
புதிய பாடலோ ,பக்கமொவா இம்முறை புதிதாகச் சேர்ந்தது .

முன்பு பல முறை படித்த அதே பழைய கந்தல் புத்தகம் தான்
நாம் மாற்றம் அடையும் போதுஅதே புத்தகம் நமக்கு புதிய சுவை
தோன்றச் செய்கிறது ..
மாற்றம் புத்தகத்தில் இல்லை .
நம்மில் தான் ஏற்படுகிறது

நாம் மாறியதால் தான் ,நமக்கு அதில் இருக்கும் விஷயங்கள் முன்பே தெரிந்ததால் தான் அந்தப் புத்தகத்தை
தேடி படிக்கமுடிகிறது ரசிக்க முடிகிறது .!
அப்படியே தான் நாம் கூறும் விஷயங்களை
முன்பே தெரிந்தவர்கள் தான் ,அந்த
சுவை அறிந்தவர்கள் தான் அதை படிக்கவே செய்கிறார்கள் .!
அவர்களுக்கும் நாம் கூறும் விஷயம்
முன்பே தெரிந்ததால் தான்
ரசிக்க்கவும்செய்கிறார்கள் ..முன்பே தேடுபவர்களைத்தான் ,அந்த பக்குவம் உள்ளவர்களைத்தான் எந்தச் செய்தியும் போய்சேருகிறது .

உண்மையில் வெளியில் இருந்து வருவது
போல் இருக்கும் எந்த அறிவும் , உள்ளிருக்கும் அறிவை வெளிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமேயாகும்.

உண்மையில் தேவைப்படும் எதுவும் வெளியில் இல்லை !


நாம் பிறரைப் பற்றி கூறும் குறைகள் கூட
உண்மையில் அந்தக் குறை நம்மிடம் இருப்பதால் தான் நமக்குத் தெரிகிறது.நம்மிடமே அந்தக்குறை இல்லாவிடில் அடுத்தவர் குறையும் நமக்கு அத்தனை எளிதில் புலப்படாது .


எனவே எதையும் வெள்யில் தேடி அலையாமல்
நம்மிடம் புதைந்துள்ள அளவற்ற அருளாலளின்
கருணையான பரிபூரண ஞானத்தின் பெருமையை
உணர ,நம்மிடம் படிந்துள்ள மாசுகளை நீக்க
முயச்சித்தலே வாழ்வின் சிறந்த செயலாகும் .

சாதாரணக் கல்லும் ,நீக்கபடவேண்டியவைகளை செதுக்கி நீக்குவதாலேயே அழகிய சிலை ஆகிறது .

வாழ்தலில் உள்ள வேண்டாத குணங்களையும் ,பழக்க வழக்கத்தையும் நீகினாலேயே ,வாழ்க்கை சிறப்புடையதாக மாறும் .

இந்த வாழ்வும் இந்த குறிக்கோளை அடையும் பாதையும் சீராகவும் , இன்பமயமாகவும் இருக்கவேண்டும்.!
ஆனந்தமாக வாழ்வது நமது அடிப்படி உரிமை !

இந்த தொடரின் இடையே நான் இந்தத்தொடர் முடியும் போது ஆளுக்கு ஒரு அக்ஷய பாத்திரம் கிடைக்கும் எனக் கூறியிருந்தேன் .
உண்மையில் அதற்க்கு வேண்டிய வழியை நான்
பலமுறை இந்தத் தொடரில் கூறிவிட்டேன் .


ஆனால் தொடர்ந்து இந்தத் தொடரை இடைவெளி இல்லாது
எழுத இயலாதது என் தவறு தான்
.தயவு செய்து மீண்டும் ஒரு முறை முழுமையாக படித்துப் பாருங்கள் .

நாம் ஆனந்தமாக வாழப் படைக்கப்பட்டவர்கள் ,அதற்க்கு துணையான அத்தனை கருவிகளும் நம்முடனேயே படைக்கபட்டிருப்பதும் புரியும் .


உண்மையில் இந்தத் தொடரில் கூறப்பட்டது எல்லாம்
எனக்கு முற்றிலும் புரிந்தது இல்லை ! இவ்வளவு புரிந்தால்
நான் ஏன் இப்படி இருக்கிறேன் ,புரிதல் மட்டுல் போதாது ,அது உணர்வுடன் ஒன்றவேண்டும் .
ஆகவே ஆரம்பத்தில் சொன்னது போல்
நான் எழுதியது எல்லாம் முதலில் எனக்குத்தான் .
ஒரு மாணவனாகத்தான் சிந்தித்தேன் .

ஆளுக்கு ஒரு அஷய பாத்திரம் கிடைப்பதற்கு
வேண்டிய சில நடை முறை யுக்திகளை இன்னும் இரண்டு பகுதியாக எழுத எண்ணுகிறேன்
.

இதில் கடவுள்ளைப் பற்றி தனியே எதுவும் கூறவில்லையே
என ஒரு எண்ணம் எழுகிறது .

நமது உடலைப்பற்றியும் ,உடம்பின் தத்துவங்களைப்பற்றியும் ,மனதைபற்றியும் விரிவாகப் பார்த்தோம் .இத்தனை உயர்வான ஒரு

படைப்பைப் படைத்தவர் உயரியவராகத்தானே இருக்கமுடியும்

படைப்பே படைத்தவனின் உயர்வை பறைசாற்றும் .

நம்மை அறிந்தால் ,இறைவனையும் அறிந்தவனாக ஆவோம் .

.

நம் ஒவ்வொருவரிடமும் கடவுள் இருக்கிறார் .
ஆனால் நாம் ஒவ்வருவரும் கடவுள் அல்ல
அவர்தான் ஞானமாகவும் ,ஆன்மாவாகவும்நம்முள் இருந்து நம்மை வழி நடத்துகிறார் .


நம்மை பரிணாமத்தின் அடுத்தபடிக்கு
தயார் செய்வதுதான் இந்த வாழ்க்கை .
மனிதனை தேவனக்கும் முயற்சிதான் இந்த வாழ்க்கை பாதை .
ஆனால் அந்தப் பரிணாமம் தகுதி உடையவர்க்கு மட்டுமே
வாய்க்கும் என்பது மட்டும்நன்றாகப் புரிகிறது.

. இனி அடுத்ததில் சந்திப்போம்
அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்









T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 09, 2011 7:57 am

இவ்வளவு நாள் படிக்காமல் எப்படி தவறவிட்டேன் என்று தெரியவில்லை. மிகவும் அருமையான, தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். நன்றிகள் பல.

ரமணியன்.

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun Apr 08, 2012 8:01 pm

எனக்குப்புரிந்தது இதுவே பகுதி --5
-அண்ணாமலை சுகுமாரன்
வெற்றிக்கு சில முத்திரைகள்

முத்திரைக்கதைகள் ,வாழ்வில் முத்திரைப்பதித்த மனிதர்கள் என்று சிறப்பான கதைகளைகளையும் ,சாதனைப்படைத்த மனிதர்களையும் குறித்து கூறுவது வழக்கம் .ஆனால் வாழ்வின் வெற்றிக்கு சில முத்திரைகளும் ( விரல்களின் அபிநயம் )உதவுகிறது என்பது அதிகம் அறியப்படாத செய்தியே ஆகும் .
வேதத்தின் மகா வாக்கியங்களின் முக்கியமானஒன்றாகிய " அகம் பிரமமாஸ்மி-எனும் "நமக்குள்ளேயே இறைவன் இருக்கிறான் என்பதில் இறைவன் நம் ஒவ்வௌருவருள்ளும் இருக்கிறான் என்னும் நேரடிப்போருளுடன் ,அந்த இறைசக்தி தானிருக்கும் உடலையும் ,உடலை இயக்கும் மனத்தையும் சீர்செய்யும் ஆற்றலையும் ,நல்லனவையையும் ,தீயனையும் சமன் செய்யும் சக்தியும் தனக்குள்ளேயே கொண்டிருக்கிறது என்பதையும் சேர்த்தே சொல்கிறது .என்றுதான் எனக்குப்படுகிறது
இறைவன் குடிகொண்ட கோவிலான இந்த ஊண்உடம்பு ஆலயத்தை , சீர்செய்யும் ஆற்றலை உடம்பே தனக்குள்ளேயே பெற்றிருக்கிறது ..
பிற புறப்போருளான மருந்துகள் தேவைப்படாத அளவு உடம்பே ,உடம்பினைக்கொண்டே
தன்னை சீர் செய்து கொள்ளும் திறனைப் பெற்றிருக்கிறது .

சில மாதங்களுக்கு முன் வரை பரபரப்பாகப்பேசப்பட்டு வந்த போதிதர்மரைப் பற்றிய வரலாற்றில் ,போதிதர்மர் ,தமிழகத்தின் வரமக்கலையை சீனாவரை கொண்டுசென்றார்
என்று பலவாறு பேசப்பட்டது .
சித்தர்களின் ஆதி முதல்வருரும் ,தமிழுக்குக்குத்தலையாய அகத்தியர்
வர்மத்தைப்பற்றி சிறப்பான நூல் ஒன்று இயற்றி உள்ளார் .இன்னமும் வர்மத்தைப்பற்றி
வர்மகண்டி ,வர்மத்திறவு கோல்,வர்மகுடோரி வர்மசாரி ,வர்மபஞ்சவித பதிவடங்கள் ,லலாடசூத்திரம் வர்மபுலிப்பாணி,அகத்தியர் வர்ம திறவுகோல் , வர்ம முறிவு சாரி ,வர்மபொன்னூசி திறவுகோல் ,வர்மநிகண்டு ,போகர் வர்ம சூத்திரம் போன்ற இன்னமும்
பல நூல்கள் வழங்கி வந்ததாக அறியப்படுகிறது .ஆயினும் அவை தற்போது மறைவாக
வாசிப்புக்குக் கிட்டாமல் மறைந்து போயின .
தேடுவாரின்றி ஒளிந்து கொண்டன .
வர்மம் என்றாலே மர்மம் என்றுதான் பொருள் .
ஆனால் இன்று வர்மமே ஒரு மர்மமாகப்போய்விட்டது .

உடலிலே மர்மமாக மறைபொருளாக இருப்பதை விளக்குவதே வர்மம் எனும் மர்மம் .

காயம் என்று சொல்லப்படும் நமது உடலானது வாயுவாலேயே இயங்குகிறது .குழந்தை பிறந்ததும் விடும் முதல் முச்சு எனும் உள் செல்லும் காற்றின் துவக்கமே வாழ்வின் துவக்கம் .மனிதன் விடும் கடைசி மூச்சு எனும் வெளி செல்லும் மூச்சே வாழ்வின் இறுதி .அதுவே மரணம் .
பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் உள்ள இளைப்பு வாயுவின் மூலமே நடைபெறுகிறது .

மனிதாகளின் வாழ்வை அவன் விடும் மூச்சினால் அளப்பார் சித்தர் வழிவந்தோர் .
உடம்பை தசவாயு எனும் பத்துவித வாயுக்கள் இயக்குவதாகக்கண்டார்கள் நமது சித்தர் பெருமக்கள் .
இந்த தசவாயுக்கள் தத்தம் தொழிலில்மாறுபடும் போதே நோய்கள் ஏற்ப்படுகின்றன
உடல் நோய் மட்டுமல்ல .வறுமையும் ஒரு பிணிதானே ,பசியும் ஒரு பிணிதானே .
உட் கொள்ளும் மூச்சும் ,வெளிவரும் மூச்சும் சரிசமமானால் மனிதன் நூறு ஆண்டுகள் வாழ்வதும் சாத்தியமே .
சுவரில்லாது சித்திரம் வரைய இயலுமா
உடம்பு சீராக இல்லாது வாழ்வின் வெற்றிகளை துய்க்க இயலுமா ?
அஷ்ட லக்ஷுமியில் ஒன்று ஆரோக்கிய லட்சுமி ஆயிற்றே ?
அகத்தியர் கூறுகிறார் எத்தனையோ வர்மத்தைப்பற்றி

பாரப்பா படுவர்மம் 12ம
பாங்கான தொடுவர்மம் 96 ம
வேறப்பமெயதீண்டா க்காலம் ஒன்றும்
வெற்றி என்ற பச்சிலை
ஆரப்பா சொல்லுகிறேன் அறிந்து கேளே ,


அத்தனையும் அறிந்து கொள்வது அத்தனை சுலபமா எனன ?
அதற்குத்தான் எத்தனை நிபந்தனைகள் இடுகிறார் அகத்தியர் பெருமான்
என்று பாருங்கள் ? அத்தனையும் வாழ்வில் கடைபிடிப்பது
அத்தனை சாத்தியமா ? இன்றைய நாகரீகம் எனும் வாழ்வின் புதிய
வேகமான வாழ்வில் இவை சாத்தியமா எனும் ஏக்கப்பெரு மூச்சுதான் நமக்கு
வருகிறது
கேளப்பா மன்மதனை அடக்கவேண்டும்
கொடிதான கோபமெல்லாம் தொலைக்கவேண்டும்
பாரப்பா அனுமான பூஜை வேண்டும்
பத்திரமாய் ஐந்து எழுத்து சித்தி வேண்டும்
சீராடா சிதம்பர சக்கரத்தை சீர்
உலகில் ஐந்து எழுத்தில் தியானம் செய்யே

ஆரடா ஆறாகும் காலம் கொண்டால்
அப்பனே குருவருளைத் தேடவேண்டும்
செய்யப்பா மூலிஎல்லாம் சாபம் தீர்த்து
செயலான உபசரனைஎல்லாம் உண்டுபண்ணு

ஆனாலும் நம் சித்தர்கள் நமது தாயைப்போன்றவர்கள் ,சாலப்பரின்தூட்டுபவர்கள் ,
சிசுவின் பசி, அதன் நிலை அறிந்தவர்கள் எனவேதான் .அவைவரும் கைக்கொள்ளும் எளிய முறை முத்திரைகள் சிலவற்றையும் ,நம் தினசரி வாழ்வில் கடைபிடிக்க நமக்கு
விட்டுச் சென்றன .ஆனால் அவையும் ஏனோ இன்று ரகசியப்போருலாகப்போய்விட்டது .
எங்கோ சென்று மறைந்து விட்டது .
வெற்றிக்கு பயன்பட வேண்டிய முத்திரைகள் ,இன்று நாட்டியத்தில் மட்டும்
பயன் படும் சில அபிநயங்களாக மாறிப்போய்விட்டது .

அனைத்து நோய்களையும் விரட்டும் முத்திரைகளையும் ,வாழ்வின் வெற்றிக்கு வேண்டும் முத்திரைகளையும் இனி பார்க்கப்போகிறோம் .

"எனக்குப்புரிந்தது இதுவே "என சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய தொடரில் ,இந்தத்தொரை
படித்து முடிப்பதற்குள் ,படிக்கும் அனைவருக்க்கும் அவர்கள் வேண்டியதை , விருபியத்தை
தரும் அக்ஷயப்பாதிரம் ஒன்று நிச்சயம் கிடைத்து விடும் என்று எழுதினேன் .
முழுமையாகப்படித்தவர்களுக்கு கிடைத்ததோ என்னமோ ,ஆனால் இனி வரும் முத்திரைகள்
நிச்சயமாக வாழ்வில் விரும்பியதை பெற ஒரு எளிய மார்க்கம் என நமக்கு நமது முனோர்கள்
வழிக்காட்டி இருக்கிறார்கள் .

அடுத்த பகுதியில் நாம் முதலில் காணப்போவது பிராண முத்திரை
பிராணனை அகற்றி உடலும் மனதும் புத்துணர்ச்சி தரும் எளிய முத்திரை .
தேவை சில நிமிடங்களே ! கூடவே மனமும் தான் .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

(நேரமிருப்பின் "எனக்குப்புரிந்தது இதுவே "முந்தய இழைகளைப்படிப்பது புதிய நண்பர்களுக்கு
உதவக்கூடும் .அதில் முன்பே கூறி இருப்பதாக எண்ணி பல தகவல்களை நான் இதில் தவிர்த்துவிடும் சாத்தியங்கள் உண்டு .இடை இடையே இத்தொடரில் தாமதம் ஏற்படுகிறது .அது நிச்சயமாக அலட்சியத்தினாலோ அல்லது சோம்பளினாலோ மட்டும் இல்லை .தக்க சில காரணங்கள் உண்டு .அவை எனது தனிப்பட்ட சில அனுபவங்கள் .சமயம் வாய்ப்பின் பிறகுக் கூறுகிறேன் .
எனினும் தவறுக்கு உங்கள் அனைவரின் மன்னிப்பையும் கோருகிறேன் .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Apr 08, 2012 8:06 pm

தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
சூப்பருங்க
நன்றி நன்றி நன்றி



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



Page 10 of 13 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக