ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "

+26
chinnavan
ani63
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
curesure4u
றினா
T.N.Balasubramanian
kitcha
shivaca
கே. பாலா
அப்துல்
gnanammm
RAJESH KANNAN.R
ஜு4லியன்
varsha
positivekarthick
இளமாறன்
nandhtiha
krishnaamma
SK
பிரகாசம்
சிவா
அன்பு தளபதி
ARR
கலைவேந்தன்
sugumaran
30 posters

Page 11 of 13 Previous  1, 2, 3 ... 10, 11, 12, 13  Next

Go down

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 11 Empty எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "

Post by sugumaran Mon Jan 24, 2011 11:07 pm

First topic message reminder :

அன்பு நண்பர்களே
இரண்டு ஆண்டுகளுக்கு முன் மின் தமிழ் குழுமத்தில்
எனக்குப் புரிந்தது இதுவே ! என்ற பெயரில் மனித மனத்தின் மாண்புகளைப்பற்றியும் ,சித்தர்கள்மனித உடலைப் பற்றி கூறிய தத்துவங்களையும் , உண்மைகளைப்பற்றியும் தொடராக சுமார் நாற்பது பகுதிகள் எழுதினேன் .

அதை மீள்பதிவாக நண்பர்களுக்கு வழங்கி பின் ,இதைத் தொடர எண்ணி இருக்கிறேன் .

தொடர் குறித்து அன்பர்கள் தங்கள் கருத்துக்களை வழங்கலாம் .

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்


எனக்குப் புரிந்தது இதுவே !---1
---அண்ணாமலை சுகுமாரன்


யாருடனும் உன்னை ஒப்பிடாதே !
ஒவ்வொருவரும் அவரவர்
நிலையில் தனித்தனியே !
நீயும் உன் மகனும்
கூட வேறு வேறுதான்
அவரவர் வினையைப்
போக்கி ஞானம் பெறவே
அவரவர் வருகிறார்கள் !

உன் கடமை
உனது பாத்திரம் இப்போது தந்தை !
கொஞ்ச நாளுக்கு முன் நீயே
மகன்எனும் பாத்திரத்தில் இருந்தாய் !
இருக்கும் வரை கொடுத்த பாத்திரத்தை
குறைவரச் செய்வதே சுதர்மம் !

இதில் மற்றவருடன் உன்னை
ஒப்பிடுவது நாடகத்தில் அடுத்தவர்
வசனத்தை நீ பேசுவது போல் !,
அது உன் பணி அன்று !
அது உன்னையே நீ
அவமதித்துக் கொள்வது ஆகும் !

சுதர்மத்தில் வரும் தடைகளை
எண்ணி அதிகம் கலங்காதே !
எங்காவது சாவி இல்லாது
பூட்டுச் செய்கிறார்களா ?

எந்த பிரச்னையும் தீர்வுடன்தான்
வருகிறது ! சில சமயம் சாவியை
மறந்து விட்டுத் தேடுவது போல் ,
பல சமயம் நாம் தீர்வைத் தேடி அலைகிறோம் !
எப்போதும் தீர்வு ,பிரச்சனைக்கு
அருகில்தான் இருக்கும் !
பிரச்சினையை ஊன்றிப் பார் !

நீ சோகமாக இருந்தால்
வாழ்க்கை உன்னைப்
பார்த்துச் சிரிக்கிறது !
கையால் ஆகாதவன் என்று !

நீ சந்தோஷமாக இருந்தால்
வாழ்க்கை உன்னைப் பார்த்து
மகிழ்கிறது ! நீ மற்றவரை
சந்தோஷப் படுத்தினால்
வாழ்க்கை உன்னை
வாழ்த்துகிறது ! வணங்குகிறது !

ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனின்
பின்னணியிலும் அவன் ஏறி வந்த
ஒரு கடினமான சோகக் கதை இருக்கும் !
ஒவ்வொரு துயரக் கதையிலும்
நிச்சயம் ஒரு வெற்றிகரமான
முடிவிருக்கும் !நீ அந்தச் சுழற்சியில்
எங்கு இருக்கிறாயோ ! கஷ்டத்தை
ஒப்புக்கொள் ! வெற்றிக்குத் தயார் ஆகு !

மற்றவர் செய்யும் தவறுகளைப்
பேச நமக்கு ரொம்ப ஆசைதான் !
ஆனால் நம் தவறுகளை நாம்
உணர நமக்கு நேரமில்லை !
அதைத் தெரிந்து கொள்ளும் கடைசி ஆளாக
நாம்தான் இருப்போம் !
அனைவருக்கும் தெரிந்த பிறகுதான்
நமக்குப் புரியும் நம் தவறுகள் !
அப்போது தெரிந்து கொண்டும் பலன் இராது !
சுற்றி யாரும் இருக்க மாட்டர்கள் நம்மைத்
தொந்தரவு செய்ய !
தனிமையில்தான் இனிமை காணவேண்டி இருக்கும் !!

உஷாராக நாம் காலுறை அணிவதுதான்
புத்திசாலித்தனம் !
சாலை முழுவதும் முள் இல்லாது கமபளம்
விரிக்க முடியுமா ?
ஊரைத் திருத்தப் போவதை விட
நம்மை திருத்திக் கொள்வது
மிகச் சுலபம் !

யாரும் பின்னால் சென்று நடந்த
நிகழ்வின் ,மோசமான ஆரம்பத்தை
மாற்ற முடியாது !
எனவே சென்றதை எண்ணிச்
செயலிழக்க வேண்டாம் !
ஆனால் யாராலும் புதிய ஒரு மாற்றத்தால்
ஒப்பில்லாத சந்தோஷ முடிவை அடைய முடியும் !
முடிந்து விட்ட பிரச்னையைப் பற்றி
வருந்தி என்ன பயன் ?
ஒரு பிரச்சனை முடியாது என்றால்
அதைக் குறித்துப் புலம்பி என்ன பயன் !

நம்மைத் தேடி வரும் பிரச்னையை
மகிழ்வுடன் எதிர்கொண்டு
சந்தோஷத்துடன் வழியனுப்பு !
அதில் நீ மட்டும் பட்டும் படாமல் இருக்கப்
பயின்று கொள் !

தவற விட்ட வாய்ப்புகளை எண்ணிக்
கண்ணீரால் கண்களை குளமாக்காதே !
எதிரில் வந்து நிற்கும் நல்ல ஒரு
புதிய வாய்ப்பை அந்தக் கண்களின்
கண்ணீர் மறைத்து விடக்கூடும் !

முகத்தை மட்டும் மாற்றினால்
ஏதாவது மாற்றம் வருமா ?
மாற்றத்தை எதிர் கொள்ளும்
முகம்தான் மறுமலர்ச்சி தரும்
யாரைப் பற்றியும் குறையில்லை ,
நாம் மாறினால் போதும் ,
வாழ்வின் இனிமைக்கு
பிறரைச் சார்ந்து இராதீர்கள் !

மற்றவர் அபிப்ராயம் உங்களுக்கு,
உங்கள் மன நிம்மதிக்கு
நிச்சயம் தேவையானால்
நீங்கள் மகிழ்ச்சி கொள்ள வாய்ப்பே இல்லை !
மற்றவர்களுக்கு வேறு பல வேலை உண்டு
உங்களை மகிழ்விப்பதைத் தவிர !
-------------------------------------------


*இது முதலில் கவிதை அன்று !
கருத்துக்களை சுருக்கமாக சொன்னதால்
கவிதையாகிவிடாது .
நான் நடந்து வந்த பாதையில்
கண்டெடுத்த கற்கள் இவை ! பாதத்தில்
தைத்ததில் சில வைரக் கற்களும் உண்டு !
இந்தக் கருத்துக்கள் எதுவும் புதியன இல்லை !
பலரும் பகர்ததுவே !
கொள்வோர் இருப்பின் தொடரும்
உத்தேசம் உண்டு !

அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down


எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 11 Empty Re: எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "

Post by கே. பாலா Sun Apr 08, 2012 8:53 pm

அண்ணாமலை சுகுமாரன் நீங்கள் செய்வது மிகச்சிறந்த பணி .
தொடர்ந்து படித்துவருகிறேன் ...மிகச்சிறந்த திரி ..நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 11 Empty Re: எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "

Post by curesure4u Sun Apr 08, 2012 9:16 pm

படிப்பதற்கு நன்றாக உள்ளது ...சேவை தொடருங்கள்


இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
curesure4u
curesure4u
பண்பாளர்


பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012

http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Back to top Go down

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 11 Empty Re: எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Apr 08, 2012 9:27 pm

தொடருங்கள் சுகுமாரன்...உங்களின் பணி சிறக்கட்டும். வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 11 Empty Re: எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "

Post by யினியவன் Sun Apr 08, 2012 10:34 pm

நல்லது எதுவுமே நமக்கு லேட்டாத் தான் கண்ணுல படும்.

நல்ல பதிவு - தொடருங்கள் சுகுமாரன். கண்டிப்பா படிக்க முயற்சிக்கிறேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 11 Empty Re: எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "

Post by sugumaran Tue Feb 26, 2013 11:35 pm

நண்பர்களே ,
சென்ற ஆண்டு முழுவதும் இணையத்தில் எழுதவில்லை .
ஆனால் முழு ஆண்டும் மூலத்தைத் தேடும் பயணமாக அமைந்தது .
மிகச் சிறந்த சந்திப்புகள் ,சீரிய வழிக்காட்டல்கள் அனைத்தும் அமைத்தது .
பொதிகைமலை ,சதுரகிரி என நிறைவான பயணங்கள் அமைந்தது .
இனி மீண்டும் நான் பெற்றதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .
இனி இத் தொடர் தடைபடாது தொடர சித்தர்களின் அருளை வேண்டி
ஆரபிக்கிறேன் .
அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 11 Empty Re: எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "

Post by ani63 Wed Feb 27, 2013 10:36 am

கிரேட் ரொம்பவே நல்லா இருக்கு உங்கள் பதிவு .... இது தமிழில் மட்டும்தான் புத்தகமாக வருமா ?என்னுடைய வடநாட்டு சிநேகிதிக்கு translate பண்ண கஷ்டமாக இருக்கு சார்.
avatar
ani63
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 11 Empty Re: எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "

Post by chinnavan Wed Feb 27, 2013 11:47 am

சாலை முழுவதும் முள் இல்லாது கமபளம்
விரிக்க முடியுமா ?
ஊரைத் திருத்தப் போவதை விட
நம்மை திருத்திக் கொள்வது
மிகச் சுலபம் !
அருமையான வரிகள் அன்பு மலர் தொடர்ந்து பகிருங்கள்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 11 Empty Re: எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "

Post by sugumaran Wed Feb 27, 2013 11:19 pm


எனக்குப் புரிந்தது இதுவே -38
-அண்ணாமலை சுகுமாரன்

எப்படியோ தொடரின் அடுத்த பகுதிக்கு வர மிக நீண்ட நாட்கள் ஆகிவிட்டது .
மீண்டும் மன்னிப்பு கோருகிறேன் .


இறக்கைக்கட்டிப்பறக்க பறக்க என்ன இது மர்ம நாவலா ?
வாழ்க்கையின் மர்மம் விளங்க சற்று மெதுவாக ,ஆனாலும் ஸ்திரமாக அடிவைத்து
முன்னே முன்னே செல்வதில் தவறில்லைத்தான் .

அறிவது எல்லாம் அனுபவம் ஆகிவிடுகிறதா என்ன ?
ஒருமுறைத் தவறிவிழுந்தால் ,திரும்பித்திரும்பி தொடர்ந்துஅதேப்போல் தவறிவிழுவதையே செய்வதுதான் அனுபவமா ?

நாற்ப்பதாண்டு அனுபவம் என்றால் நாற்ப்பதாண்டில்
நடைபெற்றது எல்லாம் அனுபவம் ஆகிவிடுமா ?
செயலின் கோர்வை எல்லாம் அனுபவம் இல்லை .
நாற்ப்பதாண்டில் நடந்தவற்றில் இருந்து அறிந்தது தானே
அனுபவம் எனப்படும் .அறிந்தவைகள் மட்டும் அனுபவமா ?
அதுவே புரிந்து உடலில் கலந்து அநுபூதி ஆவது தானே
அனுபவத்தின் பயன் >

நமக்கு வயது நாற்ப்பதாண்டு ஆகிறது என்றால் , நாம் உறுதியாக அறிந்தது,சரியாகப் புரிந்தது என்னவென்றால் நாம் நாற்ப்பதாண்டுக்கு முன் இல்லைஎன்பதுவும்
அதேப்போல் நிச்சயம் நமக்குத்தெரிந்தது நாம் சில ஆண்டுகளுக்குப்பின் இருக்கப்போவதில்லை என்பதுவும் .

அதற்க்கு இடைப்பட்டக காலம் தான் வாழ்க்கை .
அப்போது நடைபெறும் சம்பவங்களின் கோர்வைதான் வாழ்க்கை .
சம்பவங்கள் இன்பமாக இருந்தால் இன்பமான வாழ்க்கை .
சம்பவங்கள் துன்பமாக இருந்தால் துன்பமான வாழ்க்கை .
ஆனால் ,இன்பமும் துன்பமும் கலந்த வாழ்வில்
நாம் அறியவேண்டியதை அறிந்தால் தான்
புரியவேண்டியதைப் புரிந்தால்தான்
அது அறிவார்ந்த வாழ்க்கை .
பயனுள்ள வாழ்க்கை

வாழ்ந்த காலம் முடிந்து காலன் வந்து தருவதுதான் மரணம் .
அப்போதே அனுபவங்களும் முடிவு பெறுகின்றன .
அறிவும் ,புரிதலும் முடிவு பெறுகின்றது .

முதலும் .இறுதியும் நம்வசம் நிச்சயம் இல்லை .
ஆனால் அறிதலும் புரிதலும் நிச்சயம் நம் வசம் உண்டு .

வாழ்தலின் நோக்கம் தான் என்ன ?
மீண்டும் வாழாமையே .
அதற்க்கு வழிகண்டுபிடித்த்லே .

நான்காம் வகுப்பில் படிப்பது ஏன் எனில் மீண்டும்
நான்காம் வகுப்பில் படிக்காமல் இருக்கத்தானே ?


பிறத்தலின் நோக்கம் மீண்டும் பிறவாமல்
இருப்பதை அறிந்து பிறவாமல் இருப்பதே .

நான் எதோ "take it for granted " ஆகா சொல்வதாக நினைக்கவேண்டாம் .

பட்டினத்தார் தனது திருத்தில்லை -16இல்

"பிறவாதிருக்க வரம் வேண்டும் ,பிறந்து விட்டால்
இறவாதிருக்க மருந்துண்டுகாண் "

பிறந்தால் ஏன் இறவாதிருக்கவேண்டும் என்கிறார் .?
பிறவாமை கேட்டவவர் ஏன் இறவாமைக் கேட்க்கிறார் ?
முரண்பாடாக இருக்கிறதே ?என்கிறீர்களா ?
மீண்டும் பிறவாமல் இருப்பதை அதன் அறிவை தெரிந்து கொள்ளும் வரை
இறவாமல் இருக்க வேண்டும் என்கிறார் .

பிறப்பறுக்க என்ன வேண்டும் ?
திருவள்ளுவர் என்ன சொல்கிறார் தெரியுமா ?

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் ,மற்று
நிலையாமை காணப்படும்

பற்று எனும் பாசக்கட்டில் இருந்து விடுப்பட்டாலேத்தான்
பிறவாமை எனும் பேறு கிடைக்கும் என்கிறார் .

இறந்தப்பின் முக்தி எனும் விடுதலை பெறும் வாய்ப்பு இல்லை
சொர்க்கம் எனும் இன்புலகம் கிடைக்கலாம் அல்லது சிறிது காலம் நரகம் என்னும்
துன்புறு உலகம் கிடைக்கலாம்
ஆனால் அங்கும் சிறிது காலம் இருந்த பின் மீண்டும் பிறப்பு என்பது
உண்டுதான் .

மீண்டும் வினைவழியே பிறந்து ,பாசங்களில் பற்றுக்கொண்டு ,
உலகில் பிரார்ர்ததையும் ,சஞ்சித கர்மத்தையும் ,கொண்டு வேதனைப்பட்டு ,மீண்டும்
புத்துப்புது கருமத்தையும் ,வினைகளையும் கூட்டிக்கொண்டும் ,புதிய உறவுகளைப்பூண்டுக்கொண்டும் மேலும் சுமையைக் கூட்டிக்கொள்ளவேண்டியதுதான் .

இதுவரை முந்திய அத்தியாங்கலிலே, உடல் என்றால் என்ன ,அந்தக்கரணங்கள் ,
மனத்தின் மாட்சி ,உடலின் தத்துவங்கள் இவைகளைப் பற்றி சிந்தித்தோம் .
இப்போது பிறத்தலின் பயன் பற்றியும் ,பிறவாமையின் வழிக்குரித்தும்
இன்னும் சிலவற்றைப்பற்றி சேர்ந்தே சிந்தித்து .,பின் அதை அடையும்
வழிகள் ,அறிவு இவைகளைப்பற்றி சிந்திப்போம் .

கூடைப்பந்து ஆடுகையில் ,ஆட்டம் ஆரபித்த உடனேயே பந்தை கூடையில்
போட்டுவிட்டால ,ஆடுபருக்கும் ,ஆட்டத்தை பார்ப்பவருக்கும் எந்த
ஈடுபாடும் கிட்டாது .
பந்தை மைதானம் முழுவதும் தட்டித்தட்டி சுற்றிச் சுற்றி பின் பந்தை
கூடையில் போடுவதுபோல் நாமும் மைதானம் எனும் வாழ்வின்
பல பக்கத்தையும் ,சுற்றி சற்று ஆட்டம் ஆடிவிட்டு ,தட்டித்தட்டி
பின் கூடையில் பந்தைப் போடுவது போல் ,நம் குறிக்கோளையும்
அடைய சேர்ந்தே பயணிப்போம் .
நன்றி
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 11 Empty Re: எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "

Post by ராஜா Thu Feb 28, 2013 11:16 am

தொடர்வது மிக்க மகிழ்ச்சியை கொடுக்கிறது ஐயா.

நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 11 Empty Re: எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "

Post by sugumaran Thu Feb 28, 2013 11:22 am

நன்றி திரு ராஜா, உங்களை மாதிரி ஆர்வமுள்ள நல்ல இதயங்களுக்காகத்தான்
நான் இன்னும் எழுத இருக்கிறேன் .
"எழுதுவதால் வரும் பாவம் படிப்பவரால் தான் போகும் /"
எப்படி புது மொழி ?
நன்றி
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 11 Empty Re: எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 13 Previous  1, 2, 3 ... 10, 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum