ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "

+26
chinnavan
ani63
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
curesure4u
றினா
T.N.Balasubramanian
kitcha
shivaca
கே. பாலா
அப்துல்
gnanammm
RAJESH KANNAN.R
ஜு4லியன்
varsha
positivekarthick
இளமாறன்
nandhtiha
krishnaamma
SK
பிரகாசம்
சிவா
அன்பு தளபதி
ARR
கலைவேந்தன்
sugumaran
30 posters

Page 2 of 13 Previous  1, 2, 3, ... 11, 12, 13  Next

Go down

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 2 Empty எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "

Post by sugumaran Mon Jan 24, 2011 11:07 pm

First topic message reminder :

அன்பு நண்பர்களே
இரண்டு ஆண்டுகளுக்கு முன் மின் தமிழ் குழுமத்தில்
எனக்குப் புரிந்தது இதுவே ! என்ற பெயரில் மனித மனத்தின் மாண்புகளைப்பற்றியும் ,சித்தர்கள்மனித உடலைப் பற்றி கூறிய தத்துவங்களையும் , உண்மைகளைப்பற்றியும் தொடராக சுமார் நாற்பது பகுதிகள் எழுதினேன் .

அதை மீள்பதிவாக நண்பர்களுக்கு வழங்கி பின் ,இதைத் தொடர எண்ணி இருக்கிறேன் .

தொடர் குறித்து அன்பர்கள் தங்கள் கருத்துக்களை வழங்கலாம் .

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்


எனக்குப் புரிந்தது இதுவே !---1
---அண்ணாமலை சுகுமாரன்


யாருடனும் உன்னை ஒப்பிடாதே !
ஒவ்வொருவரும் அவரவர்
நிலையில் தனித்தனியே !
நீயும் உன் மகனும்
கூட வேறு வேறுதான்
அவரவர் வினையைப்
போக்கி ஞானம் பெறவே
அவரவர் வருகிறார்கள் !

உன் கடமை
உனது பாத்திரம் இப்போது தந்தை !
கொஞ்ச நாளுக்கு முன் நீயே
மகன்எனும் பாத்திரத்தில் இருந்தாய் !
இருக்கும் வரை கொடுத்த பாத்திரத்தை
குறைவரச் செய்வதே சுதர்மம் !

இதில் மற்றவருடன் உன்னை
ஒப்பிடுவது நாடகத்தில் அடுத்தவர்
வசனத்தை நீ பேசுவது போல் !,
அது உன் பணி அன்று !
அது உன்னையே நீ
அவமதித்துக் கொள்வது ஆகும் !

சுதர்மத்தில் வரும் தடைகளை
எண்ணி அதிகம் கலங்காதே !
எங்காவது சாவி இல்லாது
பூட்டுச் செய்கிறார்களா ?

எந்த பிரச்னையும் தீர்வுடன்தான்
வருகிறது ! சில சமயம் சாவியை
மறந்து விட்டுத் தேடுவது போல் ,
பல சமயம் நாம் தீர்வைத் தேடி அலைகிறோம் !
எப்போதும் தீர்வு ,பிரச்சனைக்கு
அருகில்தான் இருக்கும் !
பிரச்சினையை ஊன்றிப் பார் !

நீ சோகமாக இருந்தால்
வாழ்க்கை உன்னைப்
பார்த்துச் சிரிக்கிறது !
கையால் ஆகாதவன் என்று !

நீ சந்தோஷமாக இருந்தால்
வாழ்க்கை உன்னைப் பார்த்து
மகிழ்கிறது ! நீ மற்றவரை
சந்தோஷப் படுத்தினால்
வாழ்க்கை உன்னை
வாழ்த்துகிறது ! வணங்குகிறது !

ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனின்
பின்னணியிலும் அவன் ஏறி வந்த
ஒரு கடினமான சோகக் கதை இருக்கும் !
ஒவ்வொரு துயரக் கதையிலும்
நிச்சயம் ஒரு வெற்றிகரமான
முடிவிருக்கும் !நீ அந்தச் சுழற்சியில்
எங்கு இருக்கிறாயோ ! கஷ்டத்தை
ஒப்புக்கொள் ! வெற்றிக்குத் தயார் ஆகு !

மற்றவர் செய்யும் தவறுகளைப்
பேச நமக்கு ரொம்ப ஆசைதான் !
ஆனால் நம் தவறுகளை நாம்
உணர நமக்கு நேரமில்லை !
அதைத் தெரிந்து கொள்ளும் கடைசி ஆளாக
நாம்தான் இருப்போம் !
அனைவருக்கும் தெரிந்த பிறகுதான்
நமக்குப் புரியும் நம் தவறுகள் !
அப்போது தெரிந்து கொண்டும் பலன் இராது !
சுற்றி யாரும் இருக்க மாட்டர்கள் நம்மைத்
தொந்தரவு செய்ய !
தனிமையில்தான் இனிமை காணவேண்டி இருக்கும் !!

உஷாராக நாம் காலுறை அணிவதுதான்
புத்திசாலித்தனம் !
சாலை முழுவதும் முள் இல்லாது கமபளம்
விரிக்க முடியுமா ?
ஊரைத் திருத்தப் போவதை விட
நம்மை திருத்திக் கொள்வது
மிகச் சுலபம் !

யாரும் பின்னால் சென்று நடந்த
நிகழ்வின் ,மோசமான ஆரம்பத்தை
மாற்ற முடியாது !
எனவே சென்றதை எண்ணிச்
செயலிழக்க வேண்டாம் !
ஆனால் யாராலும் புதிய ஒரு மாற்றத்தால்
ஒப்பில்லாத சந்தோஷ முடிவை அடைய முடியும் !
முடிந்து விட்ட பிரச்னையைப் பற்றி
வருந்தி என்ன பயன் ?
ஒரு பிரச்சனை முடியாது என்றால்
அதைக் குறித்துப் புலம்பி என்ன பயன் !

நம்மைத் தேடி வரும் பிரச்னையை
மகிழ்வுடன் எதிர்கொண்டு
சந்தோஷத்துடன் வழியனுப்பு !
அதில் நீ மட்டும் பட்டும் படாமல் இருக்கப்
பயின்று கொள் !

தவற விட்ட வாய்ப்புகளை எண்ணிக்
கண்ணீரால் கண்களை குளமாக்காதே !
எதிரில் வந்து நிற்கும் நல்ல ஒரு
புதிய வாய்ப்பை அந்தக் கண்களின்
கண்ணீர் மறைத்து விடக்கூடும் !

முகத்தை மட்டும் மாற்றினால்
ஏதாவது மாற்றம் வருமா ?
மாற்றத்தை எதிர் கொள்ளும்
முகம்தான் மறுமலர்ச்சி தரும்
யாரைப் பற்றியும் குறையில்லை ,
நாம் மாறினால் போதும் ,
வாழ்வின் இனிமைக்கு
பிறரைச் சார்ந்து இராதீர்கள் !

மற்றவர் அபிப்ராயம் உங்களுக்கு,
உங்கள் மன நிம்மதிக்கு
நிச்சயம் தேவையானால்
நீங்கள் மகிழ்ச்சி கொள்ள வாய்ப்பே இல்லை !
மற்றவர்களுக்கு வேறு பல வேலை உண்டு
உங்களை மகிழ்விப்பதைத் தவிர !
-------------------------------------------


*இது முதலில் கவிதை அன்று !
கருத்துக்களை சுருக்கமாக சொன்னதால்
கவிதையாகிவிடாது .
நான் நடந்து வந்த பாதையில்
கண்டெடுத்த கற்கள் இவை ! பாதத்தில்
தைத்ததில் சில வைரக் கற்களும் உண்டு !
இந்தக் கருத்துக்கள் எதுவும் புதியன இல்லை !
பலரும் பகர்ததுவே !
கொள்வோர் இருப்பின் தொடரும்
உத்தேசம் உண்டு !

அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down


எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 2 Empty Re: எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "

Post by கலைவேந்தன் Mon Jan 31, 2011 10:01 pm

மேலும் ஒரு நாளுக்கு ஒரு கட்டுரை என்னும் அளவில் தாருங்கள்... மொத்தமாகத் தரும்போது வாசிக்க மலைப்பு வரவாய்ப்புண்டு..!!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 2 Empty Re: எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "

Post by sugumaran Mon Jan 31, 2011 10:14 pm

எனக்குப்புரிந்தது இதுவே --(6)

*சரம் பார்த்துச் செயல் புரிதல் *

வெளிவரும் மூச்சு வலப்பக்கம்
வெளிவரும் போது சரம் பார்த்துச்
செய்யும் பணிகள் சிறப்புற அமையும் -
உணவு உட்கொள்ள , நீராட,
மலம் கழிக்க ,முக்கியமானவரைக் காண ,
ஆய்வு எழுத ,கடினத் தொழில், விஞ்ஞான- கணித ஆய்வு, பணம் கோரிப்பெற

தன் பொருளை விற்பது ,நோய் தீர,
மருந்து உட்கொள்ள, போதிக்க
தீராத வழக்கைத் தீர்க்க இவை
அத்தனையும் சூரிய கலையில்
சுலபமாகத் தீரும் .

பாங்குடனே இடப்பக்கம் சரம்
பாயும் போதே ,அருந்துவது ,
தாகம் தீர்க்க ,பொருள் வாங்க,
சொத்து வாங்க ,பதிவு செய்ய ,
வீடு கட்ட, கடைகால் தோண்ட , புது
மனை புகுதல் அலங்கரித்தல்
சிகை திருத்தல் ,ஆடை ஆபரணம்
வாங்குதல் ,விவசாய ஆரம்பம்
நாற்று நட ,தாலிக்குப் பொன் வாங்க ,
தாலி கட்ட, கிணறுவெட்ட ,புதிய படிப்பு
இவை அத்தனையும் சிறப்புற
அமையும் இடப் புற சரத்தில்,
மூச்சு நிலவிடும் போதிலே !

இந்தசீரிய முறை தமிழ் சித்தர்களின் சரம்
அறிதல் எனும் கலையாகும் .
ஆதாரம் கேட்போர் அனுபவித்து ,
உணரலாம் !

தோல்வியடைய வாய்ப்பிருதால்
தோல்வி நிச்சயம் என்பது அமெரிக்காவின்
புகழ்வாயய்ந்த மர்பி யின் சட்டம் -- வெற்றி வேண்டுவோர்
தோல்வியின் துளைகளை அடைத்தல் அவசியம் . !
செய்யும் வேலையில் வெற்றி நிச்சயம்;
தேவை எனில் வெற்றிக்கு வேண்டிய
அனைத்தும் செய்தல் விரைவு வழி !
இதற்க்கு நம் தமிழ் சித்தர்கள் வகுத்த சீரிய வழி சரம் பார்த்தல் எனும் சுலபவழி !

இன்னும் அது ரகசியமாக இருக்கலாமா ?
பழங்கதைகள் பேசி நாம் பொழுதை கழிக்கிறோம்
என பெயர் பெறலாமா ?

தமிழர் அனைவரும் செய்யும் செயல்
அனைத்திலும் வெற்றி பெற ,எண்ணிய எண்ணியாங்கு
வாழ்ந்திட இன்னும் கொஞ்சம் அறிந்து கொள்ளுங்கள்
சீரிய வழியான சரம் பார்த்தலை
தக்க ஒரு குருவின் தயவாலே !
அண்ணாமலை சுகுமாரன்
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 2 Empty Re: எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "

Post by அன்பு தளபதி Mon Jan 31, 2011 10:22 pm

மிக அற்புதமான திரி தொடருங்கள் மூச்சின் பெருமையை அறிந்த முன்னோர்கள் பற்றியும் மேலும் கூறுங்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 2 Empty Re: எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "

Post by சிவா Tue Feb 01, 2011 8:44 am

நேரமின்மையால் இப்பொழுதுதான் படிக்கத் துவங்கியுள்ளேன். மிகவும் அருமையாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். தமிழர்கள் பயன்பெறட்டும்!


எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 2 Empty Re: எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "

Post by sugumaran Tue Feb 01, 2011 9:07 am

எனக்குப்புரிந்தது இதுவே --(7)


*சித்தர் கூறும் சரத்தின் ரகசியங்கள் *

நமது தினசரி வாழ்வின் நன்மை தீமை
மூச்சின் இயக்கத்தால் இறுதியாகிறது;
இடப்பக்கத்து நாசியில் வரும் இடைகலை
அமுதம் என்கின்றனர் சித்தர் பலர் !

அது எப்பொருளையும் உண்டாக்கும்
ஆற்றல் கொண்டது; நிறம் கருப்பு
இது திர ராசி ! பெண்ணின் இனமாகும்;
வலப் பக்கம் பாயும் பிங்கலை;
பரிசுத்த வெண்மை இது சர ராசியாகும்;
ஆணின் தன்மை.

இரண்டு நாசியிலும் பாயும் நடு மூச்சு
சுழுமுனை ,அழிவின் ஆற்றல்,
நெருப்பின் நிறம், உபய ராசி, இது
அலி இனமாகும்.அது யோகம் பயில ஒன்றிற்கே உரியது .
அதீத சக்திவாய்ந்தது ..

எந்த ஒரு பயணத்தையும் சந்திர கலையில்
தொடங்கி சூரியகலை நடக்கும் பொது செல்ல
வேண்டிய இடம் சென்றால் ,சென்ற காரியம்
நிச்சயம் வெற்றி !

சரம் என்னும் மூச்சின் இயக்கம்
இயங்கும் பக்கம் பூரணம் எனவும் ,
சரம் ஓடாத பக்கம் சூன்யம் எனப்படும் !
நம் வழக்கில் நாம் வெற்றி பெற,
நம்மைப் பார்க்க வருபவரை சூன்ய பாகத்தில் நிறுத்தி
அதாவது நமது மூச்சு ஓடாத பக்கம்
நிறுத்திப் பேச ,நாமே வெல்லலாம்.

சந்திரகலை நடக்கும் போது
மேற்கும் தெற்கும் நோக்கிப் போனால்
காரியம் அனைத்திலும் வெற்றி !
வடக்கும் கிழக்கும் சூரியனுக்கு !
நாசியின் வலப் பக்கம் ஓடும் போது
வடக்கும் கிழக்கும் செல்ல
செல்லும் காரியம் வெற்றி !

சரத்தை மாற்ற ஆற்றலிலா நண்பர்கள்
மாறி வருகின்ற சுவாசத்தை சாதகமான
பகுதியில் இழுத்து ,சிறிது நேரம் சுவாசப் பையில் வைத்துக்
காரியம் தொடங்கலாம்.

வெளியே விடும் மூச்சு சிவம்;
உள்ளே புகும் காற்று சக்தி.
சுழுமுனைக்கோ அழிவின் ஆற்றல்,
யோக சமாதி ஒன்றிக்கே உரியது !

மூச்சு உள்ளே போகும் போது வேண்டிய
விருப்பம் நினைக்க அவை கை கூடும்; .
மூச்சு வெளியே செல்லும் போது நமக்கு வேண்டாதையும்
வெளியே தள்ள நினைக்கலாம் !
வறுமையே போ! சினமே போ !
சரம் பார்ப்பான், பரம் பார்ப்பான் -
இது சித்தர் மொழி ! சிறிது முயன்று பார்ப்பதில்
தவறு இல்லையே ! இதுவே சித்தர்களின் ரகசிய முறை !
நம் நாட்டுக்கே உரிய முறை !

அண்ணாமலை சுகுமாரன்
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 2 Empty Re: எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "

Post by sugumaran Tue Feb 01, 2011 9:11 am

அன்பின் காலை ,
நான் இன்றுமுதல் ஒரு வாரம் பயணத்தில் இருக்கிறேன் எனவே எனக்கு இணய இணைப்பு அப்போது கிட்டாது .எனவேதான் சில பகுதிகளை முன்பே போட்டுவிட்டேன் .
மேலும் இந்தத் தொடர் விரைவில் புத்தகமாக வர இருக்கிறது அதற்க்கு முன் நண்பர்களின் விமரிசனம் .ஆலோசனை பெற நினைத்தேன் .
அன்புடன்
சுகுமாரன்
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 2 Empty Re: எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "

Post by சிவா Tue Feb 01, 2011 9:23 am

sugumaran wrote:அன்பின் காலை ,
நான் இன்றுமுதல் ஒரு வாரம் பயணத்தில் இருக்கிறேன் எனவே எனக்கு இணய இணைப்பு அப்போது கிட்டாது .எனவேதான் சில பகுதிகளை முன்பே போட்டுவிட்டேன் .
மேலும் இந்தத் தொடர் விரைவில் புத்தகமாக வர இருக்கிறது அதற்க்கு முன் நண்பர்களின் விமரிசனம் .ஆலோசனை பெற நினைத்தேன் .
அன்புடன்
சுகுமாரன்

பயணத்தை இனிதே முடித்துத் திரும்ப வாழ்த்துகள் ஐயா!


எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 2 Empty Re: எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "

Post by sugumaran Sat Feb 05, 2011 6:38 pm

எனக்குப் புரிந்தது இதுவே --8

பிரணாயாமம்- வெற்றிக்கு ஒரே வழி !*

இத்துணை சிறப்புறும் மூச்சுதனை
சீராகப் பேண அமைந்தது பிரணாயாமம் !
பிரணாயாமப் பயிற்சி மூச்சு விடுதல் மட்டுமன்று;
பிராணனையும் தன்வயப் படுத்தல் அதுவே ஆகும் .!

இது குருவின் மூலம் நேரடி பயிற்சி பெறச் சிறப்பு;
பிரணாயாமம் செய்யச் செய்ய மனத்தில் ஊக்கம் கிடைக்கும்
முகத்தில் தேஜஸ் பிரகாசிக்கும் ! ஓஜஸ் மிகும் !
நினைத்ததைச் சாதிக்கும் திறன் மிகும் .!

புலனடக்கமும் தேக ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும்
பெற யோகிக்குக் கை கொடுப்பது பிரணாயாமம !
மூச்சு வெறும் காற்று நுரையீரலுடன் சென்று திரும்மும்செயல் மட்டுமல்ல
அது பிராணன் ஆறு ஆதாரத்திலும் காலக்கணக்குடன் சென்று மீளும் ஆன்மீகக் கடமையாகும் -

மூலாதார சுவாசம் 600
சுவாதிஷ்டானம் 6000
மணி பூரகம் 6000
அனாஹதம் 6000
விசுத்தியில் 1000
ஆக்ஞையில் 1000
நாதாந்தத்தில் 1000
-------------------
ஆக மொத்தம் 21600

பிரம்ம முகூர்த்தத்தில் மூச்சு நாதாந்தத்தில் ,ஆக்ஞையில் உலவும்
அப்போது செய்வன எல்லாம் சிறக்கும் !
பிரணாயாமப் பயிற்சிக்கும் அதுவே நேரம் !

பிரணாயாமம் உடலை வருத்தி செய்யும் கலை அன்று;
பிரணாயாமம் செய்து முடித்ததும் உடல் களைப்படையக் கூடாது.
லகுவாக உணர்தல் சிறப்பு ! பிரணாயாமத்திற்கு முன்
கட்டாயம் நாடி சுத்தி செய்தல் தேவை !

இடது நாசியால் மூச்சை முழுவதும் இழுத்து,
உடனே இடது நாசியை மூடிக்கொண்டு
வலது நாசியால் முழுவதும் வெளிப்படுத்திப் பின்
வலது நாசியால் மூச்சை இழுத்து இடது நாசியால் வெளியிட
இது ஒரு சுற்று ! தினமும் விடியல், உச்சி, மாலை
இவ்வேளைகளில் ஐந்து முறை செய்ய நாடி சுத்தி ஏற்படும் !
இதனால் பிராணாயாமப் பயிற்சி எளிதாகும் !

காலையில் கிழக்கு முகமாகவும்,
மாலையில் மேற்கு முகமாகவும்
சூரிய ஒளி முகத்தில் பட செய்ய
கதிரவனின் ultra violet சக்தி பிராணனுடன் சீராகச் சேரும் !

பிரணாயாமம் மூச்சைக் கணக்கிட்டுச் செய்வது;
இதுவே பல சித்த சக்திகளுக்கு மூலம் ,
குரு அருளுடன் ,குரு முன்பில் செய்ய சித்திக்கும் !
முறையுடன் பயின்றால் உடம்பும், உள்ளமும், அறிவும்
வளமுறுதல் நிச்சயம் ! வெற்றிக்கு மூலம் இதுவே !

பிரணாயாமம் செய்யாமல் வாழ்வில் வெற்றி
கல்வியில் சிறப்பு ,தொழிலில் மேன்மை ,
அடைதல் அரிது !உயிரின் மூலம் பிராணனே !
அதன் ஆக்கப் பயிற்சியே பிரணாயாமம் !

அண்ணாமலை சுகுமாரன்
--
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 2 Empty Re: எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "

Post by கலைவேந்தன் Sat Feb 05, 2011 8:15 pm

மிகவும் அருமையான பகுதிகள் ஐயா... தொடருங்கள்.. உங்கள் ஒருவாரப்பயணம் இனிதாகத் துலங்கிட என் வேண்டுதல்கள்..

புத்தகமாய் வெளியிடும் போது தகவல் தாருங்கள் ஐயா...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 2 Empty Re: எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "

Post by sugumaran Sat Feb 05, 2011 9:55 pm

எனக்குப் புரிந்தது இதுவே --9

தேகத்தின் தத்துவங்கள்*

வாழ்வெனும் சமரில் நமக்கு அளிக்கப்பெற்ற
சக்தி வாய்ந்த ஆயுதம் நமது தேகம் ஆகும் !
இத்தேகத்தில் 96 வகைச் செயல்பாடுகள் நடைபெறுகின்றன;இவை தேகத்தின் 96 தத்துவம் எனப்படும்!

பூதங்கள் 5
ஞான இந்திரியங்கள் 5
கர்ம இந்திரியங்கள் 5
புலன்கள் 5
அந்தக்கரணம் 4
இந்த 24 தத்துவமும் ஆத்ம தத்துவம் ஆகும்

வித்தியா தத்துவம் 7
சிவ தத்துவம் 5
இந்த 12 தத்துவமும் சேர்த்து 36 தத்துவமும் உட்கருவிகள் ஆகும்

புறக் கருவிகள்

ஆதாரம் 6
மண்டலங்கள் 3
நாடிகள் 10
வாயுக்கள் 10
குணம் 3
தோஷம் 3
ராகம் 8
அவஸ்தை 5
ஏடணை 3
கோசம் 5
மலம் 3
அறிவு 1

ஆகமொத்தம் இந்த 60 புறக் கருவிகளையும்
சேர்த்து தேகத்தின் தத்துவங்கள் 96 .



இனி இந்த தத்துவங்கள் ஒவ்வன்றின் பிரிவைப் பார்க்கலாம்

*பூதங்கள் 5*
ஆகாயம் ,வாயு , தேயு, அப்பு , பிருத்திவி

*ஞான இந்திரியங்கள் 5*
மேனி ,நாக்கு ,மூக்கு ,கண் , செவி

*கர்ம இந்திரியங்கள் 5*
வாக்கு பாதம் ,பாணி ( கை )குதம் ,குய்யம்

*புலன்கள் 5*
சப்தம் (ஒலி), ஸ்பரிசம் (தொடு உணர்வு), ரூபம் (காட்சி), ரஸம் ( சுவை ), கந்தம் (மணம்),

*அந்தக்கரணம் 4*
(இது பார்க்க முடியாது ஆனால் உணர முடியும் )

மனம், புத்தி ,சித்தம், அகங்காரம்

*வித்தியா தத்துவம் 7*
காலம் ,கலை ,நியதி ,ராகம் ,வித்தை ,மாயை, புருடன்

*சிவ தத்துவம் 5 *
சிவம் ,சக்தி ,நாதம் ,விந்து, சுத்த வித்யை

*ஆதாரம் 6 *

மூலாதாரம்
ஸ்வாதிஷ்டானம்
மணிபூரகம்
அநாஹதம்
விசுத்தி
ஆக்ஞை

* மண்டலங்கள் 3*
அக்னி மண்டலம்
சூரிய மண்டலம்
சந்திர மண்டலம்

*நாடிகள் 10*

இடகலை ,பிங்கலை, சுழுமுனை ,சிங்குவை,
புருடன் ,காந்தாரி ,அக்னி அலம்புவி, சங்குனி ,
குணா

*வாயுக்கள் 10*

பிராணன் ,அபானன் வியானன் ,சமானன்
உதானன் ,நாகன் ,கூர்மன் கிருகரன்
தேவதத்தன் , தனஞ்ஜயன்

*குணம் 3*
சத்துவ குணம் , ரஜோ குணம் , தமோ குணம்

*தோஷம் 3
வாதம் ,பித்தம் ,சிலேத்துமம்

*ராகம் 8*

காமம் ,குரோதம் ,லோபம் ,மோகம் ,
மதம் ,மாத்ஸர்யம், பொய், களவு

*அவஸ்தை 5*
ஜாகிரத் ,ஸவப்னம் ,சுழுத்தி , துரியம் ,அதி துரியம்

*ஏடணை (விருப்பம் ) 3*
அர்த்த ஏடணை , புத்திர ஏடணை, தார ஏடணை

*கோசம் 5*
அன்னமய கோசம் ,பிராணமய கோசம் ,மனோமய கோசம் ,
விக்ஞானமய கோசம் ,ஆனந்தமய கோசம்

*மலம் 3*
கன்மம், , ஆணவம், மாயை

*அறிவு 1*

முப்பது முப்பது முப்பத்தறுவரும்
செப்பு மதிலுடை கோயிலில் வாழ்வார்
செப்பு மதிலுடை கோயிலும் சிதைத்தபின்
ஒப்பிலனைவரும் ஒட்டேடுத்தாரே
--திரு மந்திரம்

மேலும் ஒப்பிலா அற்புதங்கள் நிறைந்த
ஒப்பற்றவனின் ஒப்பற்ற படைப்பான இத் தேகத்தின் விந்தைதனை மேலும் விரிவாகக் காண்போம்.

அண்ணாமலை சுகுமாரன்
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 2 Empty Re: எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 13 Previous  1, 2, 3, ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum