ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_m10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10 
heezulia
கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_m10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10 
mohamed nizamudeen
கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_m10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10 
VENKUSADAS
கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_m10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_m10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10 
heezulia
கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_m10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10 
mohamed nizamudeen
கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_m10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10 
VENKUSADAS
கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_m10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொட்டும் மழையில் மனித சங்கிலி

Go down

கொட்டும் மழையில் மனித சங்கிலி Empty கொட்டும் மழையில் மனித சங்கிலி

Post by Guest Sat Oct 25, 2008 8:19 am

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை எதிர்த்து, கொட்டும் மழையிலும் மனிதச் சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது. சென்னை கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய போராட்டம், அச்சிறுபாக்கம் வரை 40 கி.மீ., தொலைவுக்கு நீண்டிருந்தது. முதல்வர் கருணாநிதி, காரில் இருந்தபடியே மனிதச் சங்கிலி போராட்டத்தைப் பார்வையிட்டார்.


இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து, நேற்று பகல் 3 மணியளவில், சென்னை கலெக்டர் அலுவலகம் முன் மனிதச் சங்கிலி போராட்டம் துவங்கியது. பகல் 1 மணி வரை வெயில் கொளுத்தியது. 1.30 மணியளவில் மழை பெய்யத் துவங்கியது. மனிதச் சங்கிலி போராட்டம் துவங்கும் நேரத்தில் மழை "கொட்டோ கொட்டு' என கொட்டியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், குறித்த நேரத்தில் போராட்டம் துவங்கியது.


நிதியமைச்சர் அன்பழகன், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி இந்த போராட்டத்தை துவக்கிவைத்து, மாலை 5 மணி வரை போராட்டத்தில் கலந்துகொண்டனர். பார்வையாளர்கள் குடையை எடுத்துச் சென்ற போது, இரு அமைச்சர்களும் வேண்டாம் எனக் கூறி, நனைந்தபடியே நின்று கொண்டிருந்தனர். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லகண்ணு, தா. பாண்டியன், மார்க்சிஸ்ட் ரங்கராஜன், நடிகை ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் அமைச்சர்களுடன் போராட்டத்தில் கலந்துகொண்டனர். கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர் சங்கத்தினர் என பல்வேறு அமைப்புகள், மனிதச் சங்கிலியில் பங்கேற்று, கொட்டும் மழையில் நனைந்தபடி நின்றிருந்தனர். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பேனர்களை பிடித்தவண்ணம் கோஷங்கள் எழுப்பினர். தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ச.ம.க., மற்றும் பல்வேறு கட்சித் தொண்டர்கள் கோஷமிட்டபடி போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
avatar
Guest
Guest


Back to top Go down

கொட்டும் மழையில் மனித சங்கிலி Empty Re: கொட்டும் மழையில் மனித சங்கிலி

Post by Guest Sat Oct 25, 2008 8:20 am

சென்னை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுபாக்கம் வரை மனிதச் சங்கிலி நீண்டிருந்தது. மக்கள் நடமாட்டமில்லாத, குடியிருப்புகள் இல்லாத, புறநகர்ப் பகுதிகளில் மனிதச் சங்கிலி இல்லை. மேலும், காங்கிரஸ் இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இது, 20 ஆண்டுகளுக்குப் பின், தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்பட்ட மனிதச் சங்கிலியாகும். செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல்: சென்னை நகரின் பிரதான சாலையாக இருந்துவரும் அண்ணா சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகம் இருக்கும். மழை பெய்தால் கடும் நெரிசல் ஏற்படும். மழை, மனிதச் சங்கிலி இரண்டும் நேற்று சேர்ந்து கொண்டதால், பாரிமுனை முதல் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ், கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மனிதச் சங்கிலியில் ஈடுபட்டவர்கள் சாலை ஓரமாக நிற்காமல் நடுரோட்டில் நின்றுகொண்டதால், அவர்களை ஒழுங்குபடுத்த முடியாமல் போலீசார் திணறினர்.


கிண்டி முதல் தாம்பரம் வரை: சென்னை கிண்டியில் இருந்து தாம்பரம் வரை பெரும்பாலான இடங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது. போராட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்ற தலைவர்கள், கட்சியினர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுநல சங்கத்தினர், ஆசிரியர் கழகத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி மாணவ, மாணவியரும் மழையில் நனைந்தபடி பங்கேற்றனர். மனிதச் சங்கிலியை முதல்வர் கருணாநிதி பல்லாவரம் வரையிலும், அமைச்சர் ஸ்டாலின் செங்கல்பட்டு வரையிலும் பார்வையிட்டு உற்சாகப்படுத்தினர். மாலை 5 மணிக்குமேலும் மனிதச் சங்கிலி போராட்டம் நீடித்தது. மறைமலைநகர், சிங்கப்பெருமாள்கோவில் ஆகிய பகுதிகளில் அரசியல் கட்சியினர் பெரும்திரளாக கலந்து கொண்டனர். பரனூரிலிருந்து செங்கல்பட்டு வரை சாலையின் இருபுறமும் மக்கள் கைகோர்த்து நின்றனர். கடலூர், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க.,வினர் வாகனங்களில் வந்து கலந்துகொண்டனர். மனிதச் சங்கிலி போராட்டத்தை, திறந்த ஜீப்பில் சென்றபடி உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்.


திரைத்துறையினர் பங்கேற்பு: தேனாம்பேட்டையில் திரைத்துறையினர் மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சிக்னலில் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் நடிகர்கள் சத்யராஜ், அவரது மகன் சிபிராஜ், புலிகளுக்கு ஆதரவாக பேசி சர்ச்சையில் சிக்கிய இயக்குனர் சீமான், அமீர் உட்பட பலர் நின்றிருந்தனர். திரைத்துறையினர் பலர் அங்கு மனிதச் சங்கிலியில் பங்கேற்றனர்.
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics
» கொட்டும் மழையில் நெகிழவைத்த காவல்துறையினர்
» சிஏஏ.,வை எதிர்த்து கேரளாவில் 620 கி.மீ., மனித சங்கிலி
» பிஹாரில் மது விலக்குக்கு ஆதரவாக 11 ஆயிரம் கிமீ தொலைவுக்கு உலகின் மிக நீளமான மனித சங்கிலி:
» கொட்டும் மழையில் கர்ப்பிணி மனைவியை கையில் ஏந்தி 40 கி.மீ ஓடி வந்த கணவர்
» மேட்டூரில் கொட்டும் மழையில் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு ஆயுதங்களுடன் ரவுடிகள் மோதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum