புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10குடிசைகளை அகற்றும் அரசு Poll_m10குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10குடிசைகளை அகற்றும் அரசு Poll_m10குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10 
284 Posts - 45%
heezulia
குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10குடிசைகளை அகற்றும் அரசு Poll_m10குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10குடிசைகளை அகற்றும் அரசு Poll_m10குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10குடிசைகளை அகற்றும் அரசு Poll_m10குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10குடிசைகளை அகற்றும் அரசு Poll_m10குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10 
19 Posts - 3%
prajai
குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10குடிசைகளை அகற்றும் அரசு Poll_m10குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10குடிசைகளை அகற்றும் அரசு Poll_m10குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10குடிசைகளை அகற்றும் அரசு Poll_m10குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10குடிசைகளை அகற்றும் அரசு Poll_m10குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10 
7 Posts - 1%
mruthun
குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10குடிசைகளை அகற்றும் அரசு Poll_m10குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிசைகளை அகற்றும் அரசு


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Jan 24, 2011 2:40 pm

சென்னையை எப்படியாவது சீர்மிகு சிங்கார சென்னையாக மாற்றிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி களம் இறங்கியிருக்கும் முதல்வர் கருணாநிதியும், துணை முதல்வர் மு.க.சுடாலினும் அதற்காக முதலில் கை வைத்தது சென்னையில் உள்ள குடிசைகள் மீதுதான்.

சென்னை நகரில் பொருத்தவரையில் அதிவிரைவு மேம்பால நெடுஞ்சாலை(துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை) அதிவேக நெடுஞ்சாலை(அடையாறு ஆற்றிலிருந்து போரூர் நந்தம்பாக்கம் பாலம் வரை) வெளிவட்டச் சாலை(வண்டலூரிலிருந்து மீஞ்சூர் வரை), கடலோர மேம்பாலச்சாலை(திருவொற்றியூரிலிருந்து எண்ணூர் வரை) ஆறுவழிச்சாலை, கூவத்தைச் சுத்தப்படுத்துதல் போன்ற அதி முக்கியமான சென்னை நகரை அழகுபடுத்தி, போக்குவரத்தை விரிவாக்கி சீர்மிகு சிங்காரச் சென்னையாக மாற்றுவதற்கு இந்தத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் வெளியேற்றப்பட்ட சேரி மக்கள், குன்றத்தூர் திருப்பெரும்புதூர் நெடுஞ்சாலையில் குன்றத்தூரில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் நல்லூர், பழைய மகாபலிபுரம் சாலையில் துரைப்பாக்கத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் கண்ணகி நகர், பெருங்குளத்தூர் அருகே எருமையூர் கூட்டு சாலை செல்லும் வழியில் தாம்பரத்திலிருந்து 4.கி.மீ. தொலைவில் கன்னடபாளையம் என்று குடியமர்த்தப்பட்டுள்ளனர். கண்ணகி நகரில் 15 ஆயிரத்து 656 வீடுகள் கட்டி முடித்திருப்பதாகக் கூறி, 14 ஆயிரத்து 509 வீடுகளை இதுவரை ஒதுக்கியிருக்கிறார்கள். இன்னும் எட்டாயிரம் வீடுகள் கட்டப்போவதாகவும் அரசு தரப்பில் கூறிவருகிறார்கள்.

நகரின் மேம்பாட்டுத் திட்டத்திற்காக சேரி மக்களை நகருக்கு வெளியே எங்காவது தூக்கி எறியும் துணை முதல்வர் மு.க.சுடாலினுடைய நடவடிக்கையை நமது நடுத்தர, மேல்வர்க்க மக்கள் வரவேற்கவே செய்கின்றனர். முனைவர் இராதாகிருட்டிணன் சாலையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வரும் விதிமுறை மீறிக் கட்டப்பட்ட ஒரு நட்சத்திர விடுதியால் நீதிமன்ற உத்தரவை மீறியும் பிரம்மாண்டமாக இன்றும் நிற்கமுடிகிறது! இதையெல்லாம் கண்டுகொள்ளாத ஒட்டுமொத்த நகரவாசிகள், சேரிகளால்தான் சென்னை நகரின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்கிறார்கள்.

‘நகரம் வளர்ச்சி அடைய சேரி மக்களை விரட்டுவதில் என்ன தவறு’ என்று கேட்கிறார்கள். கூவத்தைச் சாக்கடையாக்கி, நகரின் தூய்மையைக் கெடுப்பவர்கள்தேனே சேரி மக்கள் என்று படித்த நடுத்தர, மேல்தட்டு மக்களின் புத்திக்குள் ஏற்றப்பட்டிருக்கிறது. கூவம் உண்மையில் சேரி மக்களால்தான் கெட்டுப் போனதா? யமுனை நதிக் கரையில் வாழ்கிற மூன்று இலட்சம் குடிசைவாசிகளால் அந்நதியில் சேரும் மாசு வெறும் 0.33 சதவிகிதம் மட்டும்தான். மீதமுள்ள 99.67 சதவிகித மாசு மற்றவர்களால் தொழிற் சாலைகளால் ஏற்படுகின்றன. (ஆதாரம்: மாசுதீங்கு ஆய்வு மையம் வெளியிட்ட புள்ளி விவரம்) கூவத்துக்கும் இது பொருந்தும்தானே.

நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகையால் அடுக்குமாடி கட்டடங்களால் வெளியேறும் கழிவுகள், உணவுவிடுதிக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள், குப்பைகள் என கூவத்தில் கொட்டப்படுபவை குறித்து என்றைக்குமே இந்த நடுத்தர, மேல்தட்டு மக்கள் கவலைப்பட்டது கிடையாது. பொதுவாக ஆறு ஆறாக இருக்கும் வரை அதன் கரைகளில் வாழ்பவர்களால் அந்த ஆற்றுக்கு என்ன தீங்கு வந்துவிடப் போகிறது? காவிரி ஆற்றின் கரைகளில் இன்றும் வீடுகள் இருக்கின்றன. அதில் மக்கள் வசித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.

இவர்களை ஆக்கிரமித்து இருக்கிறார்கள் என்று காரணம் காட்டி அகற்றுகிறார்கள் என்றால், சென்னையில் தியாகராயர் நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட துணிக்கடைகள், வணிக வளாகங்கள், கல்யாண மண்டபங்களை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும் அந்த உத்தரவை அரசு நிறைவேற்றாமல் இருப்பது ஏன்?

நகரில் வசித்து வந்த குடிசை வாழ் மக்கள் வளர்ச்சிப் பணி என்கிற பெயரில் இங்கிருந்து அகற்றப்பட்டு எங்கோ ஒரு மூலையில் குடியமர்த்தப்படுகிறார்கள். இதனால் இடம் பெயரும் மக்களின் சமூக, பொருளாதார வாழ்க்கை எப்படியெல்லாம் பாதிக்கப்படும் என்று சிந்திக்கப்படுவதே இல்லை. நகரம் என்பதை பணக்காரர்களும் அரசியல்வாதிகளும் வாழ்வதற்கான இடமாக மாற்றுகிறார்கள்.

குடிசைகளை அகற்றிவிட்டு அதில் வசித்த மக்களை எந்த அடிப்படை வசதியும் இல்லாத பகுதிகளில் நகருக்கு வெளியே குடியமர்த்தப்படும் சேரி மக்கள், தினமும் அங்கிருந்து கூலி வேலைக்காக நகரை நோக்கி வந்து செல்வதால் அவர்களின் வருமானத்தில் பெரும் பகுதி பயணத்துக்கே போய்விடுகிறது. எந்த வளர்ச்சித் திட்டத்திற்காக அவர்கள் வெளியேற்றப்பட்டார்களோ அந்தத் திட்டத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும் அரசு அதையொட்டி வெளியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய எந்த நிதி ஒதுக்கீடும் செய்வதில்லை என்பதுதான் வேதனையான உண்மை.

நகருக்கு ஒதுக்குபுறத்தில் இவர்கள் குடியமர்த்தப்படும் இடங்களில் பள்ளிகளோ அரசு மருத்துவமனைகளோ இல்லை. ஒரு தலைமுறையை கல்வி அறிவு அற்றதாக உருவாக்குவதில் இந்த அரசுக்கு அப்படியென்ன மகிழ்ச்சியோ தெரியவில்லை. சென்னை எழும்பூரில் கூவம் கரையில் இருந்து அகற்றப்பட்ட குடிசைவாசிகளுக்கு நகருக்கு வெளியே இடம் ஒதுக்கப்பட்டது. எழும்பூரில் இந்தச் சேரிக் குழந்தைகள் படித்து வந்த மாநகராட்சிப் பள்ளியும் மாணவர்கள் யாரும் வருவதில்லை என்ற காரணத்தால் மூடப்பட்டுவிட்டது. அந்தக் குழந்தைகள புதிதாக வசிக்கப் போன இடத்தில் பள்ளிக்கூடங்கள் கிடையாது. சேரி மக்களின் பெரும்பாலானோர் தலித்துகள்.

ஆண்டுக்கு 100 நாட்கள் கூட நடக்காத, அப்படியே நடந்தாலும் அதனால், ஏழை, எளிய பாமர மக்களுக்குப் பயன்படாத சட்டப்பேரவை கூட்டத்திற்கான பிரமாண்ட கட்டடம் நகரின் மத்தியில் கட்டப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்துச் சிக்கல், பாதுகாப்பு ஏற்பாடுகளால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் பற்றியெல்லாம் அரசுக்கு கவலையில்லை. சட்டப் பேரவை கட்டடத்தை நகரில் இருந்து தொலைவில் வண்டலூருக்கு அருகே கட்டியிருந்தால் என்ன குறைந்து போய்விடும்?

2001ம் ஆண்டு கணக்கின்படி குடிசைவாழ் மக்களின் எண்ணிக்கை 10 இலட்சத்து 79 ஆயிரம் பேர். (உலகமயமாதலால், விவசாயிகளுக்கு எதிரான விவசாயக் கொள்கை, சிறப்புப் பொருளாதாரா மண்டலங்கள் போன்ற திட்டங்களால் கிராம மக்கள் அவர்களின் சொந்த நிலத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு சென்னை பொன்ற பெரு நகரங்களில் நடைபாதை வாசிகளாக, சேரிவாசிகளாக ஆக்கப்பட்டு வருவதால் இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டேதானிருக்கிறது)

குடிசை மாற்று வாரியம் மூலம் இதுவரை சேரி மக்களுக்கு நிறைவேற்றப்பட்ட ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதுவும் இல்லை. ஆனால் சேரி மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கும் யவர்கர்லால் நேரு தேசிய நகர்புறப் புனரமைப்புத் திட்டத்தின் பலகோடி ரூபாய் நிதியை நகரை அழகுபடுத்துவதற்கே இந்த அரசு பயன்படுத்தி வருகிறது என்று தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

சென்னை குடிசைப் பகுதிகளில் தீ விபத்துகள் மற்றும் இடம்பெயர்த்துக் குடியமர்த்தப்பட்டவர்களின் வாழ்நிலை குறித்த உண்மையறியும் குழு(ஆ.மார்க்சு தலைமையில்) அளித்துள்ள அறிக்கையில்,

1. வளர்ச்சித் திட்டங்களுக்காகவோ, கார்ப்பரேட்களுக்காகவோ குடிசைப் பகுதி மக்கள் இடம் பெயர்த்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். தவிர்க்க முடியாத நிலையில் ஏற்கெனவே வசித்த இடங்களில் இருந்து 5கி.மீ. தூரத்தில் குடியிருப்பு, வசதி செய்து தரப்பட வேண்டும்.
2. குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் குடிநீர், பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம், நியாயவிலைக்கடை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
3. இப்போது வாழும் சுகாதாரக் கேடான அடிப்படை வசதிகளற்ற நிலையிலேயே அவர்கள் தொடர்வதா என்கிற கேள்வி எழுகிறது. கோட்பாடுகளின் அடிப்படையில் இந்தக் கேள்விக்கு ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட முடியாது. இவை எல்லாவற்றையும் விட அடிப்படை வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு முதலியன அமையாதபோது அவை இரண்டாம் பட்சமாகிவிடுகிறது.
4. தீப்பற்றை எரிந்த இடங்கள் அனைத்திலும் மக்கள் வெளியேற்றப்படுவது குறித்து மறைமுகமாகவும் நேரடியாகவும் காலி செய்யுமாறு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆதாரங்கள் இல்லாதபோதும் இரசாயனப் பொடி ஏதோ பாவிக்கப்பட்டு தீ உண்டாக்கப்பட்டிருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.
5. தீ முற்றாக அனைத்தையும் அழித்துவிடுகிறது. பாடநூல்கள், சீருடைகள், குடும்ப அட்டை, வரி கட்டிய ரசீது, ஓட்டுநர் உரிமம் முதலான அடிப்படை ஆவணங்கள் அழிந்துள்ளன.
6. சென்னை நகரில் திட்டமிடப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள், இதனால் ஏற்பட உள்ள பாதிப்புகள், பாதிக்கப்படுவோர் குறித்த மதிப்பீடு, மாற்றுத் திட்டங்கள் ஆகியன குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
எனக் கோரியுள்ளது.

நகரை அழகுபடுத்த, வளர்ச்சிக்கு உட்படுத்த குடிசைகள் இல்லாத நகரம் அமைப்போம் என்பதை கருணாநிதி அரசு கொள்கையாகக் கொண்டிருக்குமேயானால், முதலில் நகரின் அழகைக் கெடுக்கும் வகையில் கருணாநிதி, அழகிரி, சுடாலின், கனிமொழி ஆகியோருக்கு உடன்பிறப்புகள் வைக்கும் பிளக்சு போர்டுகளுக்குத் தடை விதிக்கட்டுமே! முடியுமா இவர்களால்…

முடியாவிட்டால், குடிசைகளில் பற்றும் தீ, கோட்டை கோபுரங்களுக்குப் பரவும் நாள் வந்தே தீரும்!


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jan 24, 2011 2:55 pm

நிசாந்தன் wrote:நகரை அழகுபடுத்த, வளர்ச்சிக்கு உட்படுத்த குடிசைகள் இல்லாத நகரம் அமைப்போம் என்பதை கருணாநிதி அரசு கொள்கையாகக் கொண்டிருக்குமேயானால், முதலில் நகரின் அழகைக் கெடுக்கும் வகையில் கருணாநிதி, அழகிரி, சுடாலின், கனிமொழி ஆகியோருக்கு உடன்பிறப்புகள் வைக்கும் பிளக்சு போர்டுகளுக்குத் தடை விதிக்கட்டுமே! முடியுமா இவர்களால்…

முடியாவிட்டால், குடிசைகளில் பற்றும் தீ, கோட்டை கோபுரங்களுக்குப் பரவும் நாள் வந்தே தீரும்!


அதெல்லாம் முடியாது அதை கேட்க யாருக்கும் உரிமை இங்கு வழங்கப்படவில்லை

குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Mon Jan 24, 2011 3:07 pm

கட் அவுட் வைக்கும் கலாச்சாரம் ஒழியட்டும்



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக