புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 Poll_c10 
77 Posts - 36%
i6appar
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 Poll_c10 
2 Posts - 1%
prajai
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!


   
   

Page 14 of 24 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 24  Next

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 24, 2011 1:10 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே..!

இது பிரபலமானவர்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களின் தொகுப்பு.. இது போன்று முன்பே எதாவது திரி இருந்ததா என்பது தெரியவில்லை.. அவ்வாறு இருந்தால், நடத்துனர்கள் இந்த பதிவுகளையும் அத்துடன் இணைத்துக் கொள்ளலாம்..



உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர்
வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று "இந்தப் படத்தில் நீ
பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்" என்றார்.

உடன் வாலி, " என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது..
ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன் அல்லவா ?" என்றார்.
எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தார்..!



பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 14 0001-3

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Feb 28, 2011 6:19 pm

ஒரு முறை பள்ளியில் பேசும்போது, 'மாணவர்களே! கூட்டலுக்கும் பெருக்கலுக்கும்
வித்தியாசம் தெரியுமா?" என்று கேட்டார் கி.வா.ஜ.

மாணவர்கள் விடைதெரியாமல்
விழிக்க 'இரண்டும் ஒன்றுதான். என் வீட்டு வேலைக்காரிக்குக்கூடத் தெரியுமே! என்றார்.



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Feb 28, 2011 6:23 pm

சொல்லின் செல்லாதவர்!
வாரியாருக்கும் கி.வா.ஜா.வுக்கும் இடையே அன்பு மிகுதி. கி.வா.ஜ.வின் சிலேடைகளை வாரியார் ரசிப்பதுண்டு. வாரியாரின் தமிழ் நயம் செறிந்த சொற்பொழிவுகளை கி.வா.ஜ. வியப்பதுண்டு.

ஒருமுறை வாரியாரின் சொற்பொழிவைக் கேட்க வந்திருந்தார் கி.வா.ஜ. கடைசிவரை இருந்து கேட்டு விட்டுப் போகுமாறு வாரியார் கூறினார். 'இயன்றவரை கேட்கிறேன். எனக்கு வேறு பணி உள்ளது. இறுதிவரை இருக்க இயலுமா தெரியவில்லை' என்று சொல்லிவிட்டு கி.வா.ஜ. சொற்பொழிவு கேட்க அமர்ந்தார்.

சிலேடைச் செல்வரைப் பார்த்ததும் வாரியாருக்கும் அன்று சிலேடைத் தமிழில் உற்சாகம் ஏற்பட்டது. ராமாயணத்தின் இறுதிப் பகுதியை எடுத்துக் கூறிய வாரியார் பல சிலேடை வாக்கியங்களை இடையிடையே உதிர்த்தார். வாரியாரின் சொல்லாற்றலில் கட்டுண்ட கி.வா.ஜ. தம் பணிகளை மறந்து இறுதிவரை அமர்ந்திருந்தார். கூட்டம் முடிந்ததும் வாரியாரிடம் சென்றார் கி.வா.ஜ. 'கடைசிவரை இருந்து கேட்டீர்களே' என்று வாரியார் மகிழ்ச்சியடைந்தார்.

'உங்கள் சொற்பொழிவு அருந் தேன். அதை அருந்தேன் என்று எவன் சொல்வான்? அருந்தவே இருந்தேன். நீங்கள் சொல்லின் செல்வர்'' என்று வாரியாரைப் பாராட்டினார் கி.வா.ஜ.

வாரியாரோ ''சொல்லின் செல்வர் அல்ல நான். அது அனுமனுக்கு உள்ள பட்டமல்லவா?'' என்று அடக்கத்தோடு மறுத்தார்.

'உண்மை தான். நீங்கள் சொல்லின் செல்வர் அல்ல. நீங்கள் சொல்லின் எல்லோரும் செல்லாமல் இருந்தல்லவா கேட்கிறோம்! ' என்றார் கி.வா.ஜ.!



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Feb 28, 2011 6:24 pm

கி.வா.ஜ வீட்டு வேலைக்கார அம்மா விசாலம் என்பவர் வீடு பெருக்கிக்கொண்டிருந்தார்களாம்.. அந்த அம்மா கொஞ்சம் குண்டு. கி.வா.ஜவின் மணைவி கொஞ்சம் நகந்துக்குங்க, விசாலம் பெருக்கனும் என்றார்களாம்.. அதுக்கு கி.வா.ஜ இன்னுமா விசாலம் பெருக்கணும்என்று கேட்டாராம்..

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Feb 28, 2011 6:27 pm

ஒரு கடை முதலாளியின் வீட்டில் விருந்து. கி.வா.ஜ-வும் அதில் கலந்துகொண்டார். அனைவரும் உணவு உண்ண அமர்ந்திருக்க, கடையில் வேலை செய்யும் ஒரு பையன் மட்டும் இல்லாதது கண்டு, கி.வா.ஜ. அது பற்றி விசாரித்தார். “அவன் கடையைப் பூட்டிவிட்டு வந்து அடுத்த பந்தியில் கலந்துகொள்வான்” என்றார் முதலாளி.

ஓகோ! கடை சிப்பந்திக்குக் கடைசிப் பந்தியா?!” என்று கேட்டார் கி.வா.ஜ.


===========================================================
ஒரு நண்பர் வீட்டுக்கு கி.வா.ஜ. போயிருந்தபோது, நண்பரின் மனைவி விளாம்பழத்தில் வெல்லம் போட்டுப் பிசைந்து, அன்போடு கொண்டு வந்து உபசரித்தார். அதை வாங்கி உண்ட கி.வா.ஜ. “மாதுளங்கனி அருமை!” என்று பாராட்டினார்.
“மாதுளங்கனியா! நான் தந்தது விளாம்பழம் அல்லவோ!” என்று அந்த அம்மையார் குழப்பத்துடன் கேட்க,
“மாது உளம் கனிந்து கொடுத்த கனி என்று சொன்னேன்!” என்றார் கி.வா.ஜ.

======================================================
ஒருமுறை கி.வா.ஜெகந்நாதன் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசுவதற்காகச் சென்னையிலிருந்து கிளம்பி அதிகாலை நேரத்தில் தான் பேச வேண்டிய ஊருக்கு வந்து சேர்ந்தார்.

ரயில் நிலையத்தில் அவரை வரவேற்க வந்தவர்கள், அழகிய பூமாலை ஒன்றை அவருக்கு அணிவித்தார்கள். உடனே அவர், 'ஆஹா ! இந்த ஊரில் காலையிலேயே மாலை வந்து விட்டது' என்றாராம்.



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Feb 28, 2011 6:28 pm

பல்லாண்டுகளுக்கு முன் சென்னை வீனஸ் காலனியில் நடந்த வாரியாரின் புராணச் சொற்பொழிவின் இடையே ஒரு நாள் வாரியார் எழுதிய நூல் ஒன்றை வானதிப் பதிப்பகத்தினர் வெளியிட்டனர். பாராட்டுரை சொல்ல வந்த கி. வா. ஜ, பதிப்பாளர் வாரியார் சுவாமிகளுக்குப் பொன்னாடையைப் போர்த்தியதும் சிலேடையாக, 'நூல் தந்த வாரியாருக்கு பதிப்பாளர் ஆடை தருகிறார்' என்றார். அரங்கத்தில் கைதட்டல் எழுந்தது.


அடுத்து இறை வணக்கம் பாடிய சிறுமிக்கு கி. வா.ஜ. ஒரு பேனா பரிசளித்தார். இதைக் கண்ட வாரியார் உடனே தன் பங்குக்கு, "நாவால் பாடிய சிறுமியை கி.வா.ஜ. பேனாவால் கௌரவிக்கிறார்" என்றதும் மறுபடியும் கைதட்டல் வானைப் பிளந்தது.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Feb 28, 2011 6:39 pm

வ.உ.சியும் வாலேஸ்வரனும்
வ.உ.சி அவர்களுக்கு ஏழு குழந்தைகள்.அவர்களில் கடைசியாகப் பிறந்தவர் 'வாலேஸ்வரன்'
வ.உ.சி அவர்களின் பேரனாகிய செல்வராமன் அவர்களின் அப்பாவான வாலேஸ்வரனுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்று மற்றொரு பேரனாகிய சிதம்பரநாதன் கூறினார்..... சுவையாக இருந்தது அந்த விஷயம்.... சென்னையில் மயிலாப்பூரில் உள்ள சப்த சிவஸ்தலங்களான கபாலீஸ்வரர், காரணீஸ்வரர், மல்லீஸ்வரர், விருபாக்ஷீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர் மற்றும் வாலீஸ்வரர் ஆகிய பெயர்களில் ஒன்றான வாலீஸ்வரர் பெயரை வைத்திருப்பாரோ என்று எண்ணியிருந்த வேளையில், அவர் பெயர், வாலீஸ்வரன் அல்ல; வாலேஸ்வரன் என்று உரைத்தது.

ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய வ.உ.சி அவர்கள், வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டும் என்றும், சட்டம் பயின்ற அவர் வழக்கு மன்றம் ஏறாமலிருக்கும்படி அவரது ‘சன்னத்’தைப் பறித்தும் ஆங்கிலேய அரசாங்கம் அவருக்குத் தண்டனை அளித்தது. பின்னர் ஒரு நாள் அவரது சிறைத் தண்டனையைக் குறைத்தும் அவர் மீண்டும் வக்கீல் தொழிலில் ஈடுபடவும் வகை செய்து ஒரு ஆங்கிலேய நீதிபதி தீர்ப்பளித்தார். அவர் பெயர் "வாலஸ்". அவர் நினைவாக வ.உ.சி அவர்கள் தனது கடைசிக் குழந்தைக்கு இட்ட பெயர்தான் "வாலேஸ்வரன்".



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Mar 02, 2011 2:34 pm

அறிஞர் பெர்னார்ட்ஷாவும், வின்ஸ்டன் சர்ச்சிலும் எப்போதும் தமது கௌரவத்தை விட்டுக் கொடுக்காதவர்கள். ஒரு சமயம் அறிஞர் பெர்னார்ட்ஷா வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு கடிதம் அனுப்பியிருந்தார் இப்படி:

'இன்று ஒரு பெரிய விழாவில் நான் உரையாற்றவிருக்கிறேன். நீங்கள் உங்கள் நண்பர்களோடு வந்து கலந்துகொள்ளுங்கள் -அப்படி யாராவது உங்களுக்கு இருந்தால்."

சர்ச்சில் அனுப்பிய பதில்: 'இன்று எனக்கு வேறு ஒரு முக்கியமான நிகழ்ச்சி இருக்கிறது. உங்களது அடுத்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன் - இனிமேல் அப்படி எதுவும் நடந்தால்."



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Mar 02, 2011 2:34 pm

அரியக்குடி இராமானுஜ ஐயங்காரிடம் மரியாதையாக ஒருவர், ஐயாவுக்கு பழம், கிழம் ஏதாவது வேண்டுமா? என்று கேட்டிருக்கிறார். உறங்கப்போகும் நேரம். இவர் நக்கலாக, இங்கே கிழம் இருக்கு, பழம் வேணாக் கொண்டு வா! என்று சொல்லியிருக்கிறார்!



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Mar 02, 2011 2:35 pm

கி.வா.ஜா. சாப்பிட்டு எழுந்து கொள்ளும் சமயம்.
அவசரமாக விருந்தாளிப் பெண். 'ஐயா, இலை இருக்கட்டும்!' என்று சொல்லியிருக்கிறாள். பாவம், இலை எடுத்து சிரமப்பட வேண்டாமென்று. இப்படி கிவாஜாவிடம் சொல்லலாமோ?

'கவலை வேண்டாம்! அதையெல்லாம் சாப்பிடும் வழக்கமில்லை' என்று சொல்லி எழுந்திருக்கிறார்.



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 02, 2011 5:51 pm

அருமை சுதானந்தன் அவர்களே... தொடருங்கள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 14 of 24 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக