ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை

Go down

சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Empty சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை

Post by இளவரசன் Tue Aug 25, 2009 10:00 am

சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Ilangovan-Ramani150_25082009


சென்னை: சென்னை நீலாங்கரையில் ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன் மற்றும் அவரது மனைவி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகளும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தனர்.






கொலைச் செயலை நிகழ்த்திய நபரை அக்கம் பக்கத்தினர் மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

நேற்று மாலையில், சென்னையை அதிர வைத்த இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு...

நீலாங்கரையை அடுத்த பனையூர் 11-வது அவென்யுவில் வசித்து வந்தவர் இளங்கோவன் (69). ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன். மீனவர் சங்கத் தலைவர் அன்பழகனின் உறவினர் ஆவார்.

4 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த வீடு கட்டி இங்கு குடியேறினார். இவரது மனைவி பெயர் ரமணி (62).

இவர்களுக்கு வித்யாசங்கர், நேமிநாதன், முகுந்த் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். நேமிநாதன், முகுந்த் இருவரும் சென்னையில் வாழ்கிறார்கள்.

வித்யாசங்கர், பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் என்ஜினீயராக பணியாற்றுகிறார். வித்யா சங்கரின் மனைவி பெயர் வசந்தி (40).இவர்களுடைய குழந்தைகள் பிரவீன் (12), பிரியங்கா (8). இவர்கள் பாரிசீல் படிக்கிறார்கள்.

பெற்றோரை பார்ப்பதற்காக வித்யா சங்கர் ஒரு வாரத்துக்கு முன்பு குடும்பத்தோடு சென்னை வந்தார். நேற்று மாலை 4 மணி அளவில் வித்தியா சங்கர் தனது நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக சென்னை விமான நிலையம் சென்று விட்டார்.

வீட்டில் இளங்கோவன், அவரது மனைவி ரமணி மற்றும் வசந்தி, அவரது குழந்தைகள் பிரவீன், பிரியங்கா ஆகியோர் இருந்தனர்.

அப்போது, மர்ம நபர் ஒருவன் அங்கு வந்தான். அவன் அங்கிருந்த காவலாளியை துப்பாக்கி முனையில் மிரட்டி நிற்க வைத்தான். பின்னர், கதவை பலமாக தட்டியுள்ளான். மேலும், வீட்டின் இடது பக்க கண்ணாடி ஜன்னலை துப்பாக்கியால் அடித்து உடைத்தான்.

இதையடுத்து இளங்கோவன் வந்து கதவை திறந்தார். அப்போது அந்த மர்ம நபர், இளங்கோவனின் நெஞ்சுக்கு நேராக துப்பாக்கியை நீட்டி, சத்தம் போட்டால் சுட்டு கொன்று விடுவேன். அனைத்து பீரோக்களையும் திறந்து காட்டு என்று மிரட்டினான்.

பயந்து போன இளங்கோவன் பீரோக்களை திறந்து காட்டினார். படுக்கையறைக்கு சென்று அங்குள்ள பீரோவையும் மர்ம ஆசாமி உடைத்து திறந்தான்.

இதையடுத்து இளங்கோவன் அவனைப் பிடிக்க முயன்றார்.

இதையடுத்து அந்த நபர், இளங்கோவனை துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் கீழே விழுந்தார் இளங்கோவன். இதைப் பார்த்து ஓடி வந்த ரமணி, மருமகள் வசந்தி ஆகியோரையும் அந்த நபர் சுட்டான். பயந்து நடுங்கியபடி இருந்த குழந்தைகளையும் ஈவு இரக்கம் இல்லாமல் கத்தியால் தாக்கினான்.

அரை மணி நேரம் ராட்சனாக மாறி நடத்திய வெறியாட்டத்தைத் தொடர்ந்து அந்த நபர் வெளியே ஓடி வந்தான்.

இந்த அமளியால் ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். கையில் துப்பாக்கியுடன் வந்த அந்த நபரை துணிகரமாக மடக்கிப் பிடித்தனர். போலீஸாருக்கும் தகவல் போனது.

கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள், போலீஸார் விரைந்து வந்தனர். வீட்டுக்குள் போய்ப் பார்த்தபோது, இளங்கோவனும், ரமணியும் பிணமாகிக் கிடந்தனர். உயிருக்குப் போராடி வந்த வசந்தி மற்றும் இரு குழந்தைகள் மீட்கப்பட்டு அடையார் மலர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பிடிப்பட்ட நபரை நீலாங்கரை காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்ற போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

அவனது பெயர் சண்முகராஜன், சைதாப்பேட்டையைச் சேர்ந்த பிரபலமான கிரானைட் தொழிலதிபர். அவன் வந்த ஹூண்டாய் கார், .32 ரக பிஸ்டல் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» நக்சல் தலைவர் சுட்டுக் கொலை
» சென்னையில் பயங்கரம்: இளம்பெண் காரில் எரித்து கொலை- உடல் எலும்புக்கூடான பரிதாபம்
» சென்னையில் ஆடிட்டர், மனைவி கொலை: மூட்டை மூட்டையாக நகைகள் கொள்ளை
» எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கு : இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
» ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum