புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நரகத்திலிருந்து ஓர் அபாயக் குரல்! Poll_c10நரகத்திலிருந்து ஓர் அபாயக் குரல்! Poll_m10நரகத்திலிருந்து ஓர் அபாயக் குரல்! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
நரகத்திலிருந்து ஓர் அபாயக் குரல்! Poll_c10நரகத்திலிருந்து ஓர் அபாயக் குரல்! Poll_m10நரகத்திலிருந்து ஓர் அபாயக் குரல்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நரகத்திலிருந்து ஓர் அபாயக் குரல்! Poll_c10நரகத்திலிருந்து ஓர் அபாயக் குரல்! Poll_m10நரகத்திலிருந்து ஓர் அபாயக் குரல்! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
நரகத்திலிருந்து ஓர் அபாயக் குரல்! Poll_c10நரகத்திலிருந்து ஓர் அபாயக் குரல்! Poll_m10நரகத்திலிருந்து ஓர் அபாயக் குரல்! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நரகத்திலிருந்து ஓர் அபாயக் குரல்! Poll_c10நரகத்திலிருந்து ஓர் அபாயக் குரல்! Poll_m10நரகத்திலிருந்து ஓர் அபாயக் குரல்! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
நரகத்திலிருந்து ஓர் அபாயக் குரல்! Poll_c10நரகத்திலிருந்து ஓர் அபாயக் குரல்! Poll_m10நரகத்திலிருந்து ஓர் அபாயக் குரல்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நரகத்திலிருந்து ஓர் அபாயக் குரல்! Poll_c10நரகத்திலிருந்து ஓர் அபாயக் குரல்! Poll_m10நரகத்திலிருந்து ஓர் அபாயக் குரல்! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
நரகத்திலிருந்து ஓர் அபாயக் குரல்! Poll_c10நரகத்திலிருந்து ஓர் அபாயக் குரல்! Poll_m10நரகத்திலிருந்து ஓர் அபாயக் குரல்! Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரகத்திலிருந்து ஓர் அபாயக் குரல்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jan 23, 2011 4:09 pm

குர்ஆன் சுன்னாவுக்கு வேட்டு வைத்து மார்க்கத்துக்கு முரண்பட்ட விடயங்களையும் விவகாரங்களையும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

மூட நம்பிக்கைகளையும் அனாசாரங்களையும் அரங்கேற்றிவிட்டு அதற்கு இஸ்லாமிய முத்திரை குத்தி வழிபாடு செய்வதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
மக்கள் மத்தியில் மலிந்து போயுள்ள ஷிர்க், பித்அத்களை கண்டித்து தூய்மையான குர்ஆன் சுன்னாவை போதிக்கின்ற போது பகிரங்கமாகவே மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள். சில ஆலிம்களும் உலமாக்களும் அதற்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள்.

பரம்பரையாக செய்து வந்ததை உஸ்தாதுமார்கள் சொல்லி தந்ததை மூதாதையர்கள் காட்டி தந்ததை இன்று விட்டுவிடமுடியுமா என்றுநியாயம் கேட்கிறார்கள். குர்ஆனில் சுன்னாவில் இருப்பதற்கு மாற்றமாக மூதாதையர் உஸ்தாதுமார்கள் சொன்ன செய்த காரியம் உள்ளதே என்று எடுத்துக்காட்டினாலும் கேட்கமாட்டேன் என்கிறார்கள்.

மார்க்கம் என்ற பெயரில் எந்தவொரு காரியத்தைச் செய்வதானாலும் அதற்கு ஆதாரம் காட்ட வேண்டும். குர்ஆனில் ஆதாரம் இருக்கிறதா? அல்லது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் (சுன்னாவில்) ஆதாரம் இருக்கிறதா? என்று பார்த்துத் தான் பின்பற்ற வேண்டும். குர்ஆனிலும் சுன்னாவிலும் இல்லாத எந்தவொரு காரியத்தைப் பின்பற்றுவதானாலும் அதற்கு எந்த நன்மையும் கிடைக்காது. அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு சென்றுள்ளார்கள் என்று நாம் பிரசாரம் செய்கின்றபோது இந்த ஆலிம்களும் பாமர மக்களும் கேட்கும் கேள்வி என்ன தெரியுமா? ”எங்களது முன்னோர்கள் பெரியார்கள் உஸ்தாதுமார்கள் எல்லோரும் ஒரு காரியத்தை இஸ்லாத்தின் பெயரால் செய்திருக்கும் போது அது தப்பு என்று சொல்கிறீர்களா? என்று கேட்கிறார்கள்.

”அல்லாஹ்வின் தூதரிடத்தில் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது” (33:21) என்று அல்லாஹ் கூறுகிறான். எந்தவொரு விடயத்தை செய்வதானாலும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையிலிருந்துதான் ஆதாரம் காட்ட வேண்டும். நபி (ஸல்) அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். நாங்கள் எதை பின்பற்ற வேண்டும் எப்படி பின்பற்ற வேண்டும்? எதை பின்பற்றக் கூடாது ஏன் பின்பற்றக் கூடாது என்பதையெல்லாம் நபி (ஸல்) அவர்கள் மூலம் காட்டித் தந்துள்ளான்.

எனவே ஒரு முஸ்லிமை பொறுத்தவரையில் செய்கின்ற காரியத்திற்கு நபி (ஸல்) அவர்களின் சுன்னாவிலிருந்துதான் ஆதாரம் காட்ட வேண்டுமே தவிர மூதாதையர்களை பெரியார்களை உஸ்தாதுமார்களை ஆதாரம் காட்டக் கூடாது. இவர்களை முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ் கூறவில்லை. இவர்கள் கூட அல்லாஹ்வின் தூதரை பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.

ஒவ்வொரு சமுதாயமும் வழிகெட்டு போனதற்கு பிரதான காரணம் அந்தந்தச் சமுதாயம் நபிமார்களின் போதனைகளைச் செவிமடுக்காமல் மூதாதையர்களை பின்பற்றி வாழ்ந்ததுதான் காரணம் என்பதை அல்லாஹ் குர்ஆனில் தெளிவுபடுத்துகிறான்.

மூஸா நபி ஹாரூன் நபி தெளிவான சான்றுகளை அவர்களது சமுதாய மக்களிடம் கொண்டு வந்த போது அதனை மக்கள் நிராகரித்தனர். மூதாதையர்களை ஆதாரம் காட்டினர்.

”எங்கள் முன்னோர்கள் எதில் இருக்க கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்புவதற்காகவும் இப்பூமியில் உங்கள் இருவருக்கும் பெருமை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் எங்களிடம் வந்திருக்கிறீர்களா? நாங்கள் உங்கள் இருவரையும் நம்பிக்கை கொள்பவர்களல்ல என்று கூறினார்கள். (10:78)

இப்றாஹீம் நபி தமது சமுதாய மக்களை சிலை வணக்கத்திலிருந்து தூரப்படுத்தி அல்லாஹ்வை மட்டும் வணங்கிட வேண்டும் என்ற பிரசாரம் செய்த போது அதனை ஏற்றுக் கொள்ள மக்கள் மறுத்தனர். மூதாதையர்களை ஆதாரம் காட்டினர்.

”நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன? என்று அவர் (இப்றாஹீம்) தமது தந்தையிடமும் தமது சமுதாயத்திடமும் கேட்ட போது ‘எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம் என்று அவர்கள் கூறினர்.

நீங்களும் உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள் என்று அவர் கூறினார். (21:52-54)

இவ்வாறே எந்த ஊருக்கும் எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பும் போதெல்லாம் எங்கள் முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம். நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்கள் என்று அவ்வூரில் சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை.

உங்கள் முன்னோர்களை எதில் கண்டீர்களோ அதைவிட நேர்வழியை நான் கொண்டு வந்தாலுமா? எனக் கேட்பீராக எதனுடன் நீங்கள் அனுப்பப் பட்டீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்களே என்று அவர்கள் கூறினர். (43:23-24)

மூதாதையர்கள் மேல் வைத்திருந்த பக்தியின் காரணமாக அல்லாஹ்வுடைய கட்டளையை மீறி நபிமார்களின் போதனைகளை அந்த மக்கள் துச்சமாக கருதினார்கள். சத்தியத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களும் தமது சமுதாய மக்களிடம் குர்ஆனைப் பின்பற்றுங்கள் என்னை நபியாக ஏற்றுப் பின்பற்றுங்கள் என்று கூறியபோது அந்த மக்களும் நிராகரித்தனர்.

”அல்லாஹ் அருளியதை (குர்ஆனை) நோக்கி வாருங்கள். இத்தூதரை (முஹம்மது நபியை) நோக்கி வாருங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும் என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும் நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவீர்கள்?) (5:104)

அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்படும் போது எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம் என்று கூறுகின்றனர். ஷைத்தான் நரகத்தின் வேதனையை நோக்கி அவர்களை அழைத்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவீர்கள்?) (31:21)

மூதாதையர்கள் பெரியார்கள் நேர்வழியின் பால் போனார்களா? வெற்றி அடைந்தார்களா என்பதை யாராலும் கூறமுடியாது என்பதை அல்லாஹ் இவ்வசனங்கள் மூலம் அறிவூட்டுகிறான்.

குர்ஆனைப் பின்பற்றுங்கள் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றுங்கள் என்று மக்களிடம் கூறும்போது அன்றைக்கு நிராகரித்த மக்கள் எதனை கூறினார்களோ அதனையே இன்றைய முஸ்லிம்களும் கூறுகிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறான போக்கு என்பதை சிந்திக்க வேண்டும்.

மூதாதையர்களுக்காக நாம் துஆ செய்வோம்.அவர்களின் முடிவை அல்லாஹ்விடம் விடுவோம். அவர்களுகளுடைய விடயங்களில் எல்லை மீறுவதை விட்டும் தவிர்ந்து கொள்வோம். அவர்களை மதிப்பது என்பது வேறு பின்பற்றுவது என்பது வேறு. அவர்களுடைய வாழ்விலும் தவறுகள் நடந்திரக்கலாம் சில ஆதாரங்கள்-ஆதார நூற்கள்- கிடைக்காமல் போயிருக்கலாம் என்று நல்லெண்ணம் வைப்போம்.அவர்களுடைய முடிவைபற்றி தர்க்கம் புரிவதை விட்டும் தவிர்ந்து கொள்வோம்.

மார்க்கம் மூதாதயர்களுடையதல்ல அல்லாஹ்வுடையது என்பதை ஆழமாக புரிந்து செயற்படுவோம்.

இல்லை! இல்லை! எங்கள் முதாதையர்கள், பெரியார்கள், உஸ்தாதுமார்களின் வழிமுறைகளை விட்டுவிட மாட்டோம் என அடம்பிடித்தால் பின்வரும் வசனங்களை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கட்டும்.

”அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் ‘நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதர் (முஹம்மது நபி)க்கு கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? எனக் கூறுவார்கள்.

எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர் எனவும் கூறுவார்கள்.

எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையை அளிப்பாயாக அவர்களை மிகப் பெரிய அளவுக்கு சபிப்பாயாக எனவும் கூறுவார்கள். (33:66-68)

நரகத்தில் வேதனையை அனுபவிக்கின்ற போதுதான் மூதாதையர்களை பெரியார்களை பின்பற்றியது தப்பு. அவர்கள் மீது பக்தி கொண்டு அவர்கள் பின்னால் சென்றது தப்பு என்று அபாயக் குரல் எழுப்புகின்றனர். அவர்களும் வழிகெட்டு எங்களையும் வழிகெடுத்து நாசமாக்கிவிட்டார்களே.

இந்த அவல நிலையிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி மார்க்க விடயத்தில் மூதாதையர்களைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு அல்குர்ஆனையும் நபிவழியையும் ஆதாரமாகக் கொண்டு பின்பற்றுவதுதான்!

-உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி





"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jan 23, 2011 7:37 pm

பயனுள்ள நல்ல பதிவுக்கு நன்றி ரஃபீக்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக