ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறை அச்சம்

2 posters

Go down

இறை அச்சம் Empty இறை அச்சம்

Post by Guest Sun Jan 23, 2011 11:11 am


அந்த கழுதையின் பிணத்தின் மாமிசத்தை திண்ணுங்கள்'!!

பெருமானார்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருச்சபையில் ‘மாயிஸ்’ (ரழி) என்ற
தோழர் வந்து, தான் ஒரு பெண்ணுடன் தவறான முறையில் நடந்து கொண்டதாகச்
சொன்னார். அவர்களின் சொல்லை நபிகள் (ஸல்) அவர்கள் புறக்கணித்தவர்களாக இருந்தார்கள். எனவே அவர்கள் மீண்டும் மீண்டும் சொன்னார்.

நான்கு தடவை சொல்லி முடித்தார்கள். அப்பொழுதும் பெருமானார் (ஸல்)
அவர்கள் எதுவும் பேசவில்லை. ஐந்தாவது முறை அவர்கள் சொல்லும்போது அவரிடம்
‘நீர் அவளுடன் உடலுறவு கொண்டீரா?’ என்று கேட்டார்கள். ‘ஆம்!’ என்றார்
அவர்கள்.

‘உன்னில் நின்றும் ‘அது’ அவளின் நின்றும் ‘அதிலே’ மறையுமளவுக்கு நடந்தீரா?’ என்று மீண்டும் வினவினார்கள்.
மறுபடியும் ‘ஆம்!’ என்றார் அவர்கள்.

அப்பொழுதும் அவரை குற்றவாளி என்று ஒப்ப பெருமானார் (ஸல்) அவர்களுக்கு மனம் வரவில்லை. மேலும் தொடர்ந்து பல கேள்விகள் கேட்டார்கள்.
‘சுர்மா புட்டியிலே சுர்மா குச்சி மறைவது போலவும்,
கிணற்றுக்குள்ளே கயிறு மறைவது போலவும் மறைந்ததா?’ என்று கேட்டார்கள்.
‘ஆம்!’ என்றே மறுபடியும் அவர்கள் கூறினார்கள்.

‘விபச்சாரம் என்றால் என்னவென்று தெரியுமா?’ என்று
கேட்டவுடன், அவர். விஷயத்தை படு பயங்கரமாக வெளிப்படுத்த விரும்பியவராக,
‘ஆம்! ஓர் ஆண்மகன் தன் மனைவியுடன் ‘ஹலாலாக’ நடந்து கொள்வானே அதே காரியத்தை
அப்பெண்ணுடன் நான் ‘ஹராமாக’ நடத்தி விட்டேன்’ என்றார்கள். ‘இவ்வாறு
சொல்வதன் மூலம் உமது நோக்கம் யாது?’ என்று இறுதியாகக் கேட்டார்கள்.

‘(இக்குற்றத்திற்கான தண்டனையை நிறைவேற்றுவதன் வாயிலாக)
என்னை தூய்மைப்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன்’ என்று அவர்கள்
பதிலளித்தார்கள்.

தாம் செய்த குற்றத்தை
தாமே மனமுவந்து விண்ணப்பித்து, தண்டனையை ஏற்றுக்கொள்ள முன்வந்து விட்ட
பிறகு வேறு வழியின்றி அவருக்கு விபச்சாரத்திற்குரிய தண்டனையை நிறைவேற்ற
அண்ணலார் (ஸல்) அவர்கள் ஆணையிட்டார்கள். அதன்படி நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் தோழர் இருவர் பேசிக் கொண்டிருப்பது நபி (ஸல்) அவர்களின்
செவிகளில் விழுகிறது. ஒருவர் சொல்கிறார், ‘பார்த்தீரா அவரை! அல்லாஹ்வே
அவரது குற்றத்தை மறைத்து விட்டான்.(வேறு யாரும் அவர் செய்ததை காணவில்லை)
எனினும் அவர் மனம் விடவில்லை. தாம் நடந்து கொண்டதை பகிரங்கமாக எடுத்துக்
கூறியதால் இப்போது நாயை அடிப்பது போல அடித்து
சாகடிக்கப்பட்டார்’ என்று பேசிக் கொண்டார்கள். இதைக் கேட்ட பெருமானார் (ஸல்) அவர்கள் ஒன்றும் பேசாமல் மவுனமாக இருந்து விட்டார்கள்.

சற்று நேரம் சென்றது. வழியில் ஒரு கழுதை செத்துப்போய்
அதன் வயிறு ஊதிய வண்ணம் காலைத் தூக்கிக் கொண்டு பார்ப்பதற்கே அவலட்சணமாகக்
காட்சியளித்தது. அதைக்கண்ட அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் இன்னாரும் இன்னாரும் எங்கே? என்று சற்று முன் பேசிக் கொண்டிருந்த
அவ்விருவரையும் அழைத்தார்கள். இருவரும் அருகில் வந்தவுடன், ''நீங்கள்
இருவரும் அந்தப்
பள்ளத்தில் இறங்கி அந்த கழுதையின் பிணத்தின் மாமிசத்தைத் திண்ணுங்கள்!''
என்று நபிகளார் (ஸல்) அவர்கள் நவின்றதும், அதிர்ந்து போன அவ்விருவரும், ''நாயகமே! இதை யாராவது சாப்பிடுவார்களா?’ என்று பதறிப்போய் கேட்டார்கள்.

அண்ணலம் பெருமானார் (ஸல்) அவர்கள்
அமைதியாக அவர்களிடம், ''நீங்களிருவரும் சற்று முன்னர் உங்களின் சகோதரரைப்
பற்றி பேசிக் கொண்டிருந்தது, அந்த கழுதையின் பிணத்தை திண்பதை விடவும் மிகக்
கொடியதாகும். எனது ஆன்மா எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது அணையாக இப்பொழுது
அவர் (விபச்சாரம் செய்ததற்குப் பரிகாரமாக கொல்லப்பட்டவர்)
சுவனத்தின் ஆறுகளில் மூழ்கி ஆனந்தித்துக் கொண்டிருக்கிறார்'' என்று
கூறினார்கள்.

ஹளரத் அபூஹுரைரா (ரழி) அறிவிக்கும் இந்த செய்தியை
இமாம் அபூதாவூது (ரஹ்) அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். (நூல்: மிஷ்காத் -
பக்கம் 316)

சகோதர சகோதரிகளே!
விபச்சாரத்திற்குரிய தண்டனை பெற்றவர் உலகின்
கண்களுக்கு கேவலமாகவும், இழிவாகவும் காட்சியளிக்கலாம். ஆனால், அவர்
தவறிலிருந்து தூய்மை பெற்று விடுகின்றார். மரணத்திற்குப்பின்
சுவர்க்கவாசியாகி விடுகிறார் என்பது இங்கே ஒரு முக்கியமான விஷயமாகும்.

அடுத்து, ஒருவரைப்பற்றி இழிவாகப் பேசுவது கழுதையின் அழுகிப்போன பிணத்தை திண்பதைவிட கேடுகெட்டதாகும். இதை நாம் புரிந்து திருந்துவோமா?
''புறம்பேசுவது என்றால் என்னவென்று அறிவீர்களா?''
என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வினவ, தோழர்கள்
''அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று கூறினார்கள். உன்
சகோதரன் அருகில் இல்லாதபோது அவன் கேள்விப்பட்டால் வருந்தக்கூடிய
செய்திகளைப் பேசுவதுதான் ''புறம் என்பது'' எனப் பெருமானார் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

நாயகமே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நான் அவரிடம்
இருப்பதைத்தானே பேசுகிறேன். அதுவும் புறம் ஆகுமா? என ஒருவர் அடுத்துக்
கேட்க, ''ஆம்! அவரிடம் உள்ளதைக் கூறினால் தான் புறம். இல்லாததைக் கூறினால்
அது அவதூறு எனும் பெரும் குற்றமாகிவிடும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் விளக்கினார்கள்.

கழுதையின் பிணத்தைவிட
மோசமான உணவைத் திண்ணுவதற்கு எவரேனும் விரும்புவோமா? என்ன! எனவே இனியாவது
தவ்பா செய்து, புறம் மற்றும் அவதூறு பேசுவதை நிறுத்திக் கொள்வோம். நமது
நாவைப் பேணுவோம்! நல்வழி நடப்போம். அல்லாஹ் அருள்புரிவானாக, ஆமீன்.

"எங்கள் இறைவனே! எங்களையும், விசுவாசம்
கொள்வதில் எங்களை முந்திவிட்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக!
ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை
ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; மிக்க
கருணையுடையவன்". (அல் குர்ஆன் - 59:10)





avatar
Guest
Guest


Back to top Go down

இறை அச்சம் Empty Re: இறை அச்சம்

Post by ரபீக் Sun Jan 23, 2011 11:15 am

அல்ஹம்துலில்லாஹ் ,தகவலுக்கு நன்றி நண்பரே


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இறை அச்சம் Empty Re: இறை அச்சம்

Post by ரிபாஸ் Sun Jan 23, 2011 11:22 am

மிக அருமயான பதிவு நண்பா நன்றி அன்பு மலர்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இறை அச்சம் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இறை அச்சம் Empty Re: இறை அச்சம்

Post by Guest Sun Jan 23, 2011 11:28 am

இறை அச்சம் 678642 இறை அச்சம் 678642
avatar
Guest
Guest


Back to top Go down

இறை அச்சம் Empty Re: இறை அச்சம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum