புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_vote_lcapஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_voting_barஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_vote_lcapஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_voting_barஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_vote_rcap 
1 Post - 25%
viyasan
ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_vote_lcapஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_voting_barஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_vote_lcapஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_voting_barஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_vote_lcapஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_voting_barஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_vote_lcapஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_voting_barஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_vote_lcapஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_voting_barஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_vote_lcapஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_voting_barஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_vote_lcapஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_voting_barஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_vote_lcapஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_voting_barஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_vote_lcapஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_voting_barஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_vote_lcapஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_voting_barஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_vote_lcapஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_voting_barஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல்


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Jan 22, 2011 10:43 am

First topic message reminder :

அனைவருக்கும் வணக்கம்
தினமலரி. ஒரு வாசகர் எழுதிய கடிதம் ஸ்பெக்ட்ரம் 2 ஜி பற்றி விளக்கமாக உள்ளது, ஈகரை அன்பர்களுக்கு உதவும் என்ற எண்ணத்தில் பதிவிடுகிறேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=171021


Sivakumar.M - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

2011-01-22 00:24:52 IST Report Abuse



"2G ஸ்பெக்ட்ரம்"
ஒரு இந்தியன் மூலம் செய்யபட்ட முறைகேடு, ஊழல் ஒவ்வொரு இந்தியனையும் வெகுவாக
பாதித்துள்ளது. அதில் தலித், முதலியார், பிராமிணர், வன்னியர், முஸ்லிம்,
கிறித்துவன் என்று பாகுபாடு இல்லை. ஊழல் செய்தவருக்கே தான் செய்யபோகும்
இந்த ஊழல் தன்னை சார்ந்த ஜாதி மக்களையும் சேர்த்துதான் பாதிக்கும் என்பதை
தெள்ள தெளிவாக தெரிந்துகொண்டுதான் இந்த ஊழலை சுயநலத்துடன் செய்துள்ளார்.
அப்படி இருக்கையில் எங்கிருந்து தனியாக வந்தது "தலித்" என்னும் மந்திர
சொல். மன்னிக்கவும் தந்திர சொல். அனைத்து தகுதிகளுடனும், போதிய அனுபவமும்
உள்ள S.Tel நிறுவனம் சுமார் 13,000 கோடிக்கு வங்கி காசோலை கொடுத்து 2G
உரிமத்தை வாங்க முன்வந்தது. கிடைக்காமல் பிரதமர் அலுவலகத்துக்கே நியாயம்
கேட்டு கடிதம் எழுதி உள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இருந்து நியாயமோ அல்லது
பதில் கடிதமோ வரவில்லை. இதனால்தான் அந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தை அணுகி
நியாயம் கேட்டுள்ளது. அதன் பின்னர் தான் பத்திரிகைகள், எதிர்கட்சிகள்,
பொதுநல அமைப்புகள், CAG ,PAC போன்றவை முழித்தனர் . பல தகுதி இல்லாத
நிறுவனங்களுக்கு விதிகளுக்கு முரணாக உரிமங்கள் வழங்கபட்டுள்ளது. அதுவும்
வெறும் 1200, 1300,1650 கோடிகளுக்கு வழங்கபட்டுள்ளது. உண்மை இவ்வாறு
இருக்க சில அரசியல் தேசதுரோகிகள் 2G - யில் ஊழல் செய்யப்படவில்லை
கைபேசியில் பேசுவதற்கு உண்டான கட்டணம் குறைக்கபட்டு புரட்சி
செய்யபட்டுள்ளது என்று பொய்களை மக்களிடம் பரப்புவது தெரிந்தே தவறு
செய்வதில் நல்ல புலமை அடைந்தவர்கள் என்பது நிரூபணம் ஆகிறது. மக்களை பற்றியோ
நாட்டை பற்றியோ எள்ளளவும் கவலை படாதவர்கள் என்பது நன்கு புலப்படுகிறது.
இந்த கட்டணம் குறைந்தது சந்தையில் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியின்
காரணம் என்பது படித்த அறிவார்ந்த மக்களுக்கு நன்றாக தெரியும். அதை போதிய
விளக்கங்களுடன் விவரிக்க விரும்புகிறேன்.

இதை 1999 ஆண்டில் இருந்து ஆரம்பம் செய்வது நல்லது. இந்த ஆண்டில்
தான் தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று வெறும் பணம்
படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின் எண்ணிக்கை
மிக குறைவு. பலலட்சங்கள், சில கோடிகள் மட்டுமே. தொழில் நுட்பவளமான 1G
அல்லது 2G அலைவரிசை மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது.
ஆனால் உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை
கொடுத்து உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு
ரூபாய் 1.40 கட்டணம் வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க
வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தான் வாதி படைத்தவர்களாச்சே
என்று இஷ்டத்திற்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள்
விரையம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.
நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற
அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை
தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின்
எண்ணிக்கை அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. 2010
நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும்
மேல். இதற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள்
அரசிடம் இன்றும் உள்ளனர். ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60
கோடிதான். 122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது.
தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி
டெபொசிட் அது மட்டும் இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை
தொடங்க வேண்டும். இந்த குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால்
உதவும். டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம்
வாங்கியுள்ளனர். இதோடு அந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து
கொள்ளுங்கள்.

நியாய கணக்கு:

இந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல்
உள்ளது. எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது
கைபேசியை ஒரு நாளைக்கு வெறும் ஐந்து நிமிடங்கள் பயன்படுத்துவதாக
வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம். அப்போ 5x0.40 =2.0
ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x2 = 120
கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30x120 = 3600 கோடிகள்.
ஒரு வருடத்திற்கு 365x3600 = 13,14,000 கோடிகள். 2008 இல் 2G ஏலம்
விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ குறைந்தபட்ச
வருமானம் இன்றுவரை 26,28,000 கோடிகள். இதுதான் கணக்கு. இது ஒரு நாளைக்கு
வெறும் ஐந்து நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு
கிடைத்திருக்கும் வருமானம். இதோடு SMS, MMS, ISD மற்றும் ஐந்து
நிமிடத்திற்கு அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி
கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.
என்னால் கணக்கிடவே முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி
காண்பிப்பது "INFINITIVE". இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு
கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும்.
கிடைத்ததா? மக்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு
மக்களும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்திற்கு
புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சில
ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது. விலைவாசி உயரும்.
பொருளாதாரம் நாசாகும். "Above middle Class" மக்கள் நடுத்தர மக்களாகவும்,
நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் மேலும் பரம ஏழைகளாகவும்
மாறுவார்கள்.

துரோகம்-1: உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும்
அதிகம் பொறுமானம் உள்ள(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு வாங்க
முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300
,1650 கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டிய,
மக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.
துரோகம்-2: பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி
நாட்டு நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால்
அரசுக்கு அதாவது பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில
சுய நல தனி மனிதர்களை சென்று அடைந்துள்ளது.
துரோகம்-3: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான
நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan" போன்ற லெட்டர் பேட்
நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை
என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி
இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்ற
பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர்
பேட் நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இவைகள் சேவையை தொடங்கி
இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது
இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு
"S.TEL போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம்
தெளிவாக எழுகிறது.
துரோகம்-4: MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில்
அலைகற்றைகளை ஒதுக்கி போதிய ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில்
பேசும் கட்டணம் நிமிடத்திற்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள்
அரசினால் பயன் அடைந்து இருப்பார்கள்.
துரோகம்-5: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது
பங்குகளை பல வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான்
போன்ற நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும்
பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய
அச்சுறுத்தல்.
துரோகம்-6: நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG ,தொலைதொடர்பு
சம்பந்தபட்ட, கைபற்றபட்ட ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள்
புறகணிப்பு, சட்ட,நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள்
புறகணிப்பு இப்படி கோடி கணக்கில் ஆதாரங்கள், சாட்சிகள் சுளையாக இருந்தும்
குற்றவாளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காதது மக்களுக்கு இழைக்கபட்ட ஆறாவது
துரோகம். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள்
வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில்லை. அதிலும் முறைகேடு.
துரோகம்-7: இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த
தவறை ஒப்பு கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய்
பிரச்சாரம் செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன்
உச்சகட்டம்தான் 2G யில் ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய
அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி
வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள் என்ற ஆணவ நினைப்பு.
துரோகம்-8: நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை
பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி
மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.
துரோகம்-9: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள்
பெரும்பாலானவை இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய
நாடுகளில்,வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம்
அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால் ஏராளமான அரசு கல்லூரிகள், பள்ளிகள்,
பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என்று உருவாக்கி அனைவருக்கும்
கல்வி,வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத
நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை கண்டிருக்கலாம்.
துரோகம்-10: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற இனத்தை
சேர்ந்த ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு
வாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்து. ஒரு
முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு
செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும்
துன்பங்களுக்கு இதை விட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால்
வலையில் தங்காது. இதுதான் ஊழலின் விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும்
கொசுக்கள் மாதிரி. நம்மிடம் உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டும் இல்லை
அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும் நமது ரத்தத்தில் விட்டு செல்கின்றனர்.

இப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது.
இந்த ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுத்தி சுத்தி
அடிக்கும். எப்படி? ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு
விலைக்கு வாங்கப்பட்டு அதை பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து
விற்கப்படுகிறது. ஒரு ஏக்கரை குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை
வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட
வாங்க முடியவில்லை. இதுதான் ஊழலின் விளைவு. இப்போது புரிந்து இருக்கும்
ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்று. இது மட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து
அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து
அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான் செய்கின்றனர். அவர்கள்
சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல. அனைத்தும் மிக மிக
செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை மூடி
மறைக்கும் செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து
பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும்
பணக்காரர்கள் ஆவார்கள். அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள்
மேலும் ஏழைகளாக ஆவார்கள். இந்த ஏழை, பணக்காரன் இடை வெளியை குறைக்கத்தான்
அரசாங்கம் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். இன்று ஆளும் வர்க்கத்தினரே
அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள். சொல்லபோனால் அரசின் கடமைகளை
அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களும்
தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின் செல்கின்றனர். இலவசம் வாங்கும்
மக்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் உழைப்பு என்னும்
மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் நீங்கள்
ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள் வாழ்கை தரமும் உயரபோவதில்லை.
இலசவசம் கொடுக்க தேவையான வரிபணத்தை செலுத்தும் உழைக்கும் மக்களின் வாழ்கை
தரமும் உயரபோவதில்லை. இது நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது. இலவசம்
மாறவில்லை என்றால் உங்கள் வாழ்கை தரமும் மாறபோவதில்லை.

மக்கள்தொகை நாளுக்கு நாள் பெருகுகிறது. ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம்
அதை விட அதிகமாகிறது. ஊழலை ஒழிக்காமல் 5 %, 6 % வளர்ச்சி என்று அரசு
கூறுவது ஒரு வகையிலும் இந்தியாவை வல்லரசாக்காது. இந்த எண்ணிக்கையிலும்
எவ்வளவு உண்மை உள்ளதோ! இறைவனுக்கே வெளிச்சம்.

எனது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள்
என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும்
நண்பர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான். எனவே
தெரிந்துகொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும்
தெரியபடுத்துங்கள். நன்றி.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 23, 2011 7:49 am

கருணாநிதி ஆதாயம் இல்லாமல் எதையும் செய்யாதவர். தயாநிதி மந்த்ரியாக இருக்கையில் அடித்த பணத்தில் சரியான பங்கு தரவில்லை என்று ராஜா மந்திரி ஆனவுடன் தான் தெரிந்தது. ஆகவே தான் டெலிகாம் பதவி வேண்டும் என்று டில்லியில் உட்கார்ந்து பேரம் பேசி வாங்கினார். அப்படி அடித்த பணம் யார்யாருக்கு போனது என்பது யாவருக்கும் புரிந்த உண்மை. காங்ரஸ்ஸும் ஜெ‌பி‌சி வேண்டாம் என்று கூறுவதில் இருந்து புரிந்து கொள்ளவேண்டிய உண்மை. மிஸ்டர்.கிளீன் வாய்மூடி மௌனம் காக்கவேண்டிய அவசியம்.
தன் பெயர் கெடக் கூடாது என்றால் ராஜினாமா செய்யவேண்டியது தானே! மிஸ்டர் க்ளீன் இப்போது இல்லையோ?
ரமணீயன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 25, 2011 6:16 am

மேலும் ஜூனியர் விகடன் ஆதார செய்தி பகிர்கிறேன்.

ரமணீயன்.
2ஜி ஸ்பெக்ட்ரம் – சர்வதேச பகீர் உண்மைகள்!

ற்றியெரியும் ஸ்பெக்ட்ரம் 2ஜி ஒதுக்கீடு தொடர்பாக முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி ஒருவர், புதுசாக ஒரு பொறியை நம்மிடம் கொளுத்திப் போட்டார். ”இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் யார் யார் என்று ஆதியோடு அந்தமாகத் தோண்டிப் பாருங்கள். அப்போதுதான் இந்த முறைகேட்டின் பின்னால் இருக்கும் தொடர்புகளின் நெட்வொர்க் புரியும்!” என்பது பொறி கொளுத்தும்முன் அந்த அதிகாரி கொடுத்த முன்னுரை!


”ஆ.ராசா, கருணாநிதி, தி.மு.க., காங்கிரஸ் என்ற பேச்சுகளோடு இந்த விவகாரம் திசை திரும்பிவிட வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் மேலிடம் நினைக்கிறது. தி.மு.க-விலிருந்து ஆ.ராசாவை நீக்குவதோ… தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதோ மட்டுமே இதற்கு முழுப் பரிகாரம் ஆகிவிடாது. பதவியில் உள்ள அரசியல்வாதிகளுக்கு மாபெரும் ‘கட்டிங்’ கொடுத்துவிட்டு, அதற்கு

ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 P12இணையாக லாபத்தில் கொழிக்கும் கம்பெனிகளின் நிஜ முகங்களும் வெளியில் வரவேண்டும். அப்போதுதான் நாட்டுக்கான இழப்பு பற்றிய முழு உண்மையும் வெளியில் வரும்!” என்றும் அந்த அதிகாரி சொன்னார்!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் காரணமாக அரசுக்கு ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 Rupee_symbol 1.76 லட்சம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறையின் அறிக்கை தெளிவுபடுத்துகிறது. ”இந்த ஒதுக்கீட்டில் சுமார் ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 Rupee_symbol 22 ஆயிரம் கோடி வரை, ‘சாதித்துக் கொடுத்தவர்களுக்கு’ சன்மானமாகக் கைமாறியிருக்கிறது!” என்று மத்திய விஜிலென்ஸ் கமிஷனர் கணக்கிட்டு பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். இதன் அடிப்படையில் சி.பி.ஐ. இதை வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவரது வீட்டை சி.பி.ஐ. ரெய்டு செய்துள்ளது. இரண்டு நாட்கள் சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அவர் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார். இந்தக் காலகட்டத்தில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு உள்கையாகச் செயல்பட்ட தொலைத்தொடர்புத் துறை அமைச்சகத்தின் அனைத்து அதிகாரிகளின் வீட்டிலும் ரெய்டும் விசாரணையும் நடந்து முடிந்திருக்கின்றன. இதுவரை நடந்ததெல்லாம் நாடு முழுக்கப் பரபரப்பைக் கிளப்பியது. ஊழலுக்கு எதிராக இரும்புக் கரம் உயர்ந்துவிட்டது போன்ற தோற்றத்தை மக்களுக்கு ஏற்படுத்தியது. ஆனால், இதற்குப் பிறகு சி.பி.ஐ. என்ன செய்யப் போகிறது?

பிப்ரவரி 10-ம் தேதிக்குள் ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைவரிசை தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 P12bசெய்ய வேண்டும் என்று சி.பி.ஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. அத்தோடு, 2001-ம் ஆண்டு முதல் அலைவரிசை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து, அதிலும் முறைகேடுகள் நடந்திருக்கிறதா என்பதை சோதனை நடத்திச் சொல்லவேண்டும் என்றும் கோர்ட் கட்டளை போட்டிருக்கிறது. இந்தக் கட்டளையை முன்னிறுத்தி, சி.பி.ஐ. கூடுதல் அவகாசத்தை நீதிமன்றத்திடம் கேட்க முடிவு செய்திருக்கிறதாம். ”கடைசியாக நடந்த ஒதுக்கீடு தொடர்பாக மட்டுமே எங்களால் விசாரணையை முடிக்க முடிந்தது. 2001-ம் ஆண்டு முதல் உள்ள ஆவணங்களை சரிபார்க்க மேலும் 6 மாதங்கள் தேவை!” என்று சி.பி.ஐ. சொல்லுமாம். ஒருவேளை, சுப்ரீம் கோர்ட் 6 மாத அவகாசம் தர விரும்பாவிட்டாலும், மூன்று மாதங்களாவது தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே மாத விடுமுறை முடிந்து ஜூலை மாதம்தான் சுப்ரீம் கோர்ட் மீண்டும் திறக்கும். அதற்குள் தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும்.

நம்மிடம் பேசிய அதிகாரி, ”தமிழ் நாடு, மேற்குவங்கம், கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங் களின் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் நேரத்தில் ஸ்பெக்ட்ரம் தொடர்பான எந்த விசாரணையும் வெளிப்படையாக நடந்து, இதையும் தாண்டி உள்ள சில அந்தரங்கத் தகவல்கள் வெளியில் கசிவதை காங்கிரஸ் மேலிடம் விரும்பவில்லை. இதற்காகவே முடிந்த அளவு இழுத்தடிப்பதும் அதற்குப் பின்னால் ஆறப்போடுவதுமான காரியங்களைப் பார்க்கஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 P12aஆரம்பித்திருக்கிறார்கள். மத்திய அமைச்சரவையில் 5 அமைச்சர்கள் இந்த விவகாரம் நடந்த காலத்திலும், அதற்குப் பின்னரும் சம்பந்தப்பட்டுள்ளார்கள். இவர்களில் ஒருவர் தவிர மற்ற நான்கு பேரும் காங்கிரஸ்காரர்கள்! இந்த ஐவர் தவிர, சோனியாவுக்கு அருகில் இருந்து ஆலோசனைகள் சொல்லி வரும் இரும்புத் தனமான நபர் மற்றும் தமிழக காங்கிரஸ் வட்டாரங்களைக் கட்டுப் படுத்தக்கூடிய பிரபலமான மற்றொரு டெல்லி மனிதர் ஆகிய இருவரும் இந்த விஷயம் தொடர்பாக அமைச்சர் ஆ.ராசாவுக்கு துணையாக இருந்திருக்கிறார்கள். இந்த ஏழு நபர்களைத் தாண்டி ஸ்பெக்ட்ரம் விசாரணையை சி.பி.ஐ-யால் சுதந்திரமாக நடத்த முடியாது. அவர்களை சி.பி.ஐ-யால் நெருங்கவும் முடியாது!” என்று குண்டு போடுகிறார்.

அந்த சி.பி.ஐ. அதிகாரியே மேலும், ”சோனியாவுக்கு நெருக்கமான அரசியல் ஆலோசகரிடம் பேசிய நீரா ராடியா, ‘என் மீது விசாரணை நடத்துவதை ஒரு கட்டம் வரைக்கும்தான் நான் அனுமதிப்பேன். அதன் பிறகு நான் பேச ஆரம்பித்தால்… ஸ்பெக்ட்ரம் விஷயத்தைவிட இன்னும் பல பகீர் ரகசியங்கள் வெளியில் வரும். நாடே கலகலத்துப் போகும்!’ என்று சொன்னதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து சோனியாவின் அரசியல் ஆலோசகர் மூலமாக காங்கிரஸ் மேலிடம் வரை பெரும் பதற்றம் உண்டாகி இருக்கிறது. ஆ.ராசா ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தபோது, ‘மூன்று மாதங்கள் மட்டும் பொறுங்கள். எல்லாப் புயலும் அடங்கிவிடும். அதன் பிறகு மீண்டும் நீங்கள் மந்திரி ஆவதற்கு நான் உதவுவேன்!’ என்று சோனியாவுக்குஅருகில் இருக்கும் ஒரு பிரமுகர் வாக்குறுதி கொடுத்து உற்சாகப் படுத்தினார். அவரும் நீரா ராடியாவின் கொதிப்பு வார்த்தைகளைக் கேட்டு ஆடிப் போயிருக்கிறார்…” என்று கூறுகிறார்.

இதில் காங்கிரஸ் அதிகமாக பயப்படுவதற்குக் காரணம், இது வெறும் ஊழல் வழக்கு மட்டுமல்ல. ஸ்பெக்ட்ரம் 2ஜி உரிமங்களைப் பெற்ற கம்பெனிகள், அதை அவர்களிடம் இருந்து வாங்கிய கம்பெனிகள், இதில் முதலீடு செய்திருப்பவர்கள்… என்று பட்டியல் எடுத்த சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு, வருவாய்ப் புலனாய்வு மற்றும் ரா அதிகாரிகள் அனை வருமே ஆடிப் போயிருக்கிறார்களாம். லைசென்ஸ் பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் உரிமையாளர் சாகித் உஸ்மான் பல்வாவுக்கும் மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய தாவூத் இப்ராஹி முக்கும்நெருக்கமான தொடர்புகள் இருப்பதாக சி.பி.ஐ. நினைக்கிறது.

ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 P13

ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 P14a

மேலும், இந்தியாவின் பரம எதிரி நாடான பாகிஸ் தானின் வர்த்தகத் தொடர்புள்ள கம்பெனிகளும் இதற்குள் இருக்கின்றன. சீனா லிபரேஷன் ஆர்கனை சேஷன் அமைப்பின் தொடர்புகளும் இதில் இருக் கின்றன. அரபு நாடுகளின் மதத் தீவிரவாதிகளும், இந்தியாவுக்கு எதிரான தேச விரோத சக்திகளும்கூட இதில் அங்கம் வகிப்பதாக சி.பி.ஐ-க்கு சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறதாம்.

”இந்த தகவல்கள் எல்லாம் வெளியில் வந்தால்… இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த காங்கிரஸ் கட்சியே, இந்தியாவின் பாதுகாப்பை பல லட்சம் கோடிக்கு அடகு வைத்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் எரிமலையாகப் பொங்கும். அதனால்தான் ஆ.ராசா சம்பந்தப்பட்ட ஒரு விஷயமாக மட்டுமே இந்த விவகாரங்களை முடித்துவிட சிலர் துடியாகத் துடிக் கிறார்கள். தி.மு.க-வின் கூட்டணியை காங்கிரஸ் உதறுமா என்பதுகூட சந்தேகம்தான். மத்தியில் தொடர்ந்து ஆட்சி செய்வதற்குத் தேவையான எம்.பி-க்களை தி.மு.க. அளிக்கிறது என்பது மட்டும் இதற்குக் காரணம் இல்லை. காங்கிரஸ் கட்சியின் பெருந்தலைகளுக்குத் தெரிந்தது எல்லாமே ஆ.ராசாவுக்குத் தெரியும்… அவருடைய தலைவருக்கும் தெரியும். இதுவும்தான் காங்கிரஸ் பம்முவதற்குக் காரணம்!” என்று அந்த சி.பி.ஐ. அதிகாரி சொல்லி முடித்தபோது, நமக்கு தலை கிறுகிறுவென தட்டாமாலை சுற்றியது.

ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 P14

ஸ்பெக்ட்ரம் 2ஜி லைசென்ஸ் உரிமங்களைப் பெற்ற கம்பெனிகளின் உரிமையாளர்கள் பற்றிய விவரங்கள் இப்போது கசிய ஆரம்பித்திருக்கிறது!

1.ஸ்வான்: சாகித் பல்வா குடும்பமும் வினோத் கோயங்கா குடும்பமும் இணைந்து நடத்தும் கம்பெனி. மும்பையில் ரியல் எஸ்டேட் துறையில் கொடிகட்டிப் பறக்கும் பலே கம்பெனி. ”இந்திய உளவுத் துறை எடுத்துவைத்திருக்கும் சான்றுகளின்படி இதன் முக்கியத் தொடர்பில் தற்போது கராச்சியில் வசிக்கும் – பகீர் மனிதர் ஒருவரும் இருக்கிறார்!” என்றும் சொல்லப்படுகிறது.
கம்பெனி உரிமையாளரான சாகித் உஸ்மான் பல்வா உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 937-வது நபராக இருக்கிறார். இவரது இருப்பிடம் மும்பை. இதே கம்பெனியின் இன்னொரு சேர்மனான வினோத் கே.கோயங்கா இருப்பதும் மும்பையில்தான்.

2.சிஸ்டமா ஷியாம் டெலிகாம்: எம்.டி.எஸ். குரூப்புடன் இணைந்த நிறுவனம் இது. டவர் 334, உதயோக் பவன், குர்ஹான், ஹரியானா மாநிலம் என்ற முகவரியில் திடீரென முளைத்த நிறுவனம் இது. இதன் இயக்குநர்களில் இந்தியர்கள் யாரும் இல்லை!

3.லூப் டெலிகாம்: இதன் இந்திய இயக்கு நராக சந்தீப் பாசு என்பவரும் பங்குதாரராக அய்லோன் என்பவரும் இருக்கிறார்கள். மும்பை மாகிம் வெஸ்ட் பகுதியில் இவர்கள் இருந்திருக்கிறார்கள். 2ஜி விண்ணப்பத்தை உத்யோக் விஹார், குர்ஹான் பகுதியில் இருந்து அனுப்பியிருந்தார்கள். இதன் நிஜஉரிமை யாளர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாம்!

4.யூனிடெக்: ஒன்பது உரிமையாளர்கள் கொண்ட நிறுவனமாக இது உள்ளது. ரமேஷ் சந்திரா (சேர்மன்), அஜய்சந்திரா (எம்.டி., எச்.ஆர்.டி), சஞ்சய் சந்திரா (எம்.டி., அட்மின்), சஞ்சய் பகதூர், அனில் ஹரீஸ், ரவீந்தர் சின்கானியா, அம்ப்வானி, மினோத் பாஷி, மகந்தி ஆகிய ஒன்பது பேர்தான் சூத்திரதாரிகள். ”இந்த நிறுவனத்துக்கு முழுக்க முழுக்க நீரா ராடியா ஏஜென்டாக செயல்பட்டுள்ளார். இதுதான் மிகப்பெரிய வெளிநாட்டு நிறுவனத்தின் துணைப் பெயரில் உருவானது!” என்கிறது சி.பி.ஐ.

5.எஸ்.டெல் நிறுவனம்: ‘ஸ்டெர்லிங்’ சிவசங்கரன் என்றால் முன்பு தமிழகம் நன்கு அறியும். முரசொலி மாறனின் நண்பராக இருந்தவர். மெர்கன்டைல் வங்கியை வாங்கிய பிரச்னையில் இவர் செம ஹாட்டாக நியூஸில் அடிபட்டார். இன்றைய ‘கலைஞர்’ டி.வி-யின் உருவாக்கத்திலும் இவரது பங்கு நிறைய இருந்ததாகச் சொல்வார்கள். நிலம் விவகாரம் ஒன்றில் புகார்கள் கிளம்பி அவர் தவிர மற்ற பல நிர்வாகிகளும் கைதான பழங்கதையும் உண்டு. அந்த சிவசங்கரனின் நிறுவனம்தான் இது. சிவசங்கரன் (சேர்மன்), வி.சீனிவாசன் (சி.இ.ஓ), பி.சுவாமிநாதன் (தலைவர்)… மற்றும் இயக்குநர்களான பீட்டர் கலிபோல்ஸ், எஸ்.சரவணன், எஸ்.நடராஜன், அலி யூசுப், அப்துல் ரஹ்மான் ரஷிம், டாக்டர் காசன் முராத் ஆகியோர் அடங்கிய டீம் இந்த நிறுவனத்தை நடத்துகிறது.

6.ஐடியா செல்லுலார்: இதன் இந்திய உரிமையாளர்களாக 12 பேரின் பெயர்கள் உள்ளன. குமாரமங்கலம் பிர்லா இதன் சேர்மனாக இருக்கிறார். ராகேஷ் ஜெயின், பிஸ்வாஜித் அன்னசுப்பிரமணியம், பிரகாஷ், தர்ஜானி வாகிப், பி.முராரி, ஜான் விட்டலங்க நவரோ, ராஜஸ்ரீ பிர்லா, சூரிபுத்த அன்ஸா, அருண் தியாகராஜன், சஞ்சய் அஹா, பார்கவா (இயக்குநர்கள்) ஆகியோர் பெயர்கள் உள்ளன. குஜராத் மாநிலம் காந்திநகர் முகவரியில் இருந்து இந்நிறுவனம் செயல்பட்டுள்ளது. இவர்கள் தங்களது பங்குகளை வெளிநாட்டுக்கு விற்றுள்ளனர்.

7. வீடியோகான்: வேணுகோபால் என்.தத் என்பவர் இதன் சேர்மன். பிரதீப் என்.தத், கே.சி.ஸ்ரீவத்சவா, சத்யபால் தல்வார், எஸ்.பத்மநாபன், மேஜர் ஜெனரல் எஸ்.சி.என். ஜட்டார், அருன் எல்.போங்னிவார், ராடி ஷியாம் அகர்வால், குனிலா நார்ஸம், பி.என்.சிங், அஜய் சாப் ஆகியோர் பெயர்கள் இதன் முக்கிய நிர்வாகிகள் பட்டியலில் உள்ளன. இதற்கான தலைமை அலுவலகம் டெல்லியில்!

8. ரிலையன்ஸ் டெலிகாம்: அனில் அம்பானி – அதிகம் சொல்ல வேண்டியதில்லை!

9. டாடா டெலிகாம்: ரத்தன் டாடா – தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.



- டெல்லி ஜூத்

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Jan 25, 2011 10:24 am

அருமையான விளக்கம் ... நன்றி ஈகரை உறவுகளே ......

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 25, 2011 11:25 am

உங்கள் கட்டுரையின் மூலம் நான் 2ஜி ஊழல் பற்றி மிக நன்றாக தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.............




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
Guest
Guest

PostGuest Tue Jan 25, 2011 11:34 am

ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 677196 ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 677196 ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி ஒரு வாசகர் தினமலருக்கு எழுதிய மடல் - Page 2 56667

வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Tue Jan 25, 2011 12:05 pm

ஜூ வி தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!

விஷயங்களை அளவுக்கு மீறி மிகைப்படுத்தி ஜூவி சொல்கிறதோ எனத் தோன்றுகிறது.

1) பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தங்கள் பங்குகளை யாருக்கும் விற்கலாம். வெளிநாட்டினருக்கோ வெளிநாட்டு நிறுவனங்களுக்கோ பங்குகளை உரிய ஆணையத்தின் அனுமதியின்றி விற்கமுடியாது. அப்படியிருக்க இந்த பங்கு விற்பனை குறித்து சிபிஐ தங்கள் முறையீட்டினை செபியிடம் முன்பே தெரிவித்துள்ளனரா?

2) 2ஜி நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் உரிமத்தை, அலைக்கற்றையை, பொதுமக்கள் தகவல் தொடர்புக்கு மட்டும் பயன்படுத்தியுள்ளனர். இதில் தேசியப்பாதுகாப்புக்கு குந்தகம் வரும்வகையில் அதன் பங்குதாரர்கள் என்ன செய்ய இயலும்? பொதுமக்கள் பேசும் தொலைபேசிப்பேச்சில் என்ன பாதுகாப்பு பின்னடைவு வரும்? . அப்படியே வந்தாலும் அதற்கு பங்குதாரர் என்ன வச்தி செய்து தர இயலும்?

3) தேசிய பாதுகாப்பு ரகசியங்கள் சம்பந்தப்பட்ட தொடர்புகள் அனைத்தும் என்கிரிப்ட் செய்யப்பட்டு அவர்களுக்கென உள்ள தனித் தொடர்பு வசதி மூலம் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. அவற்றைக் கைப்பற்றுவதே எதிரியினரின் குறிக்கோள் என்றால் அதற்கு 2ஜி உரிமத்தைக்கோரவேண்டிய அவசியம் இல்லை. அதற்கு டில்லியின் வடக்கு, தெற்கு பிளாக்குகளில் சில கரன்சிகளை அள்ளித்தெளித்தாலே போதுமே.

4) சைபர் அட்டாக் எனப்படும் கணினித்தாக்குதல் மிகுந்துவிட்ட இக்காலத்தில், பங்குதாரர்கள் என்னென்ன உதவிகள் செய்வார்களோ அவற்றை, இந்நிறுவனங்களில் பணி புரியும் சில கறுப்பு ஆடுகளின் துணை கொண்டு எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு செய்துவிடலாமே. அதற்கு கோடிகளை செலவழித்து பங்குகளை வாங்கி செயல்படவேண்டியதில்லை. இது கொக்கு தலையில் வெண்ணை வைத்துபிடிப்பதைப் போன்றது.


ஆக, தேசியப்பாதுகாப்பு குந்தகம் என்பதெல்லாம் புருடா.

வருமானம், அதன் பாதுகாப்பு என்பதே உண்மை.

வைரத்தை கண்ணாடிக்கல் விலையில் பொதுவில் விற்றுவிட்டனர். விற்றபின் வைரத்தின் விலையை தனியே வாங்கி கொண்டனர். அதுவே உண்மை.

ஜூவி கட்டுரையில் நீரா ரடியா கூறிதாக இதோ:
”சோனியாவுக்கு நெருக்கமான அரசியல் ஆலோசகரிடம் பேசிய நீரா ராடியா, ‘என் மீது விசாரணை நடத்துவதை ஒரு கட்டம் வரைக்கும்தான் நான் அனுமதிப்பேன். அதன் பிறகு நான் பேச ஆரம்பித்தால்… ஸ்பெக்ட்ரம் விஷயத்தைவிட இன்னும் பல பகீர் ரகசியங்கள் வெளியில் வரும். நாடே கலகலத்துப் போகும்!’ என்று சொன்னதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது””

எனக்கென்னவோ இந்த வார்த்தைகளை திமுக தலைமையே காங்கிரஸ் தலைமையிடம் தெரிவித்திருக்குமோ என தோன்றுகிறது.

அதன் விளைவுதான்
1) மூக்குடைபட்டும் மன்மோகன்சிங் கருணாநிதியை பார்த்துப்பேசிவிட்டு கூட்டணி தொடரும் என அறிவித்திருப்பது.
2) கபில் சிபல் இப்போது ஏறுக்கு மாறாக உளறிக்கொட்டுவது.
3) தமிழ்நாட்டில் சமீபத்தில் அலப்பறை செய்துவந்த ராகுல்காந்தி இப்போது இருக்குமிடமே தெரியாமல் முடங்கிக் கிடப்பது.
4) சிதம்பரம் பிரணாப் என அனைவரும் உறவு கொண்டாடுவது
5) திமுக தலைகள் 2ஜியை ரேஷன் அரிசியோடு ஒப்பிட்டுப் பேசுவது, ஊருக்கு ஊர் விளக்கக்கூட்டம் போடுவது.
6) சீச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்ற ரீதியில் ஜெயலலிதா பேச ஆரம்பித்திருப்பது
7) நேற்றுமுதல் தவளைபோல கத்திக்கொண்டிருந்த இளங்கோவனின் ஃபியூசை பிடுங்கியது

என அடுக்கிக்கொண்டே போகலாம்.


பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும். திமுகவோடு சேர்ந்த காங்கிரஸும் விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்யும்



சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jan 25, 2011 12:07 pm

அடேங்கப்பா ... இதுல இத்தனை விடயங்கள் இருக்கா...

- அறிவிலி கலை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Tue Jan 25, 2011 12:27 pm

மக்களுக்கு ஊழல் என்பதே மறத்துவிட்டது.

அட என்னப்பா யாரும் செய்யாதையா இவர்கள் செய்துவிட்டார்கள் என்ற அலட்சியப்போக்கு வந்துவிட்டது.

இது ஊழல் இல்லை தேசியப்பாதுகாப்பு விஷயம் என்ற கோணத்தில் திசை திருப்பினால் மக்களிடம் ஒரு விழிப்புணர்வு, உத்வேகம் வராதா என்ற நோக்கத்தில் ஜூவி கட்டுரை எழுதப்பட்டதாகவே உணர்கிறேன். அதுவும் நல்ல நோக்கமே!!!!



சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 26, 2011 7:58 am

தேசிய பாதுகாப்பு பாதிப்பு என்பது புருடா என்று கருதிட முடியாது.

சமீபத்தில் BLACKBURY லைசென்சு விஷயத்தில் தனி நபர் பேசும் பேச்சின் தகவல் பெறும் வசதி அனுமதிக்க முடியாது என்று அந்த நிறுவனம் கூறியதால் அதற்கு லைசென்சு மறுக்கப் பட்டு, தேசிய நலன் கருதி அது அவசியம் என்று வலியுறுத்தப்பட்ட பின் அந்த நிறுவனம் அந்த வசதி செய்து தர உடன்பட்டது. இந்த அலைவரிசைகள் எல்லாம் ராணுவம் வசம் உள்ளன. அவர்களிடம் இருந்து பெறப்பட்டு வேறு அலைவரிசைகளில் மக்கள் புழக்கத்திர்க்கு விடப்பட்டுள்ளன. தேர்ந்த நிபுணர் குழாம் மூலம் என்ன என்ன விஷயங்கள் பேசப்பட்டன என்பதை அறியமுடியும். இதை தேச விரோதிகள் சம்பந்தப்பட்டவர் கையில் கிடைத்தால் நாம் நாட்டிற்கு நல்லது இல்லை. நமக்கு வெளியில் தெரிவிக்கப்பட்ட விஷயங்கள் சில. மறைக்கப்பட்டுள்ள விஷயங்கள் பல.
ராணுவ நிபுணர் குழாம் வாய் திறந்தால்தான் நாட்டின் பாதுகாப்பு பற்றி தெரியும் . ஒரு துளி தான் நமக்கு தெரியும்.
ரமணீயன்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக