ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
heezulia
அன்பின் நிறம் சிவப்பு ? Poll_c10அன்பின் நிறம் சிவப்பு ? Poll_m10அன்பின் நிறம் சிவப்பு ? Poll_c10 
ayyasamy ram
அன்பின் நிறம் சிவப்பு ? Poll_c10அன்பின் நிறம் சிவப்பு ? Poll_m10அன்பின் நிறம் சிவப்பு ? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பின் நிறம் சிவப்பு ?

2 posters

Go down

அன்பின் நிறம் சிவப்பு ? Empty அன்பின் நிறம் சிவப்பு ?

Post by mkamal Sat Jan 22, 2011 8:17 am

அன்பின் நிறம் சிவப்பு !
(பீ.எம். கமால், கடையநல்லூர்)

அன்பே!
இறைமையின்
பண்புப்பெயரே !

நீதான்
தாய்மையை
அர்த்தப்படுத்துகிறாய் !
உள்ளங்களில் உன் திரி
எரியாவிடிலோ
ஞான விடியல்களின்
கருத்தரிப்பே நடக்காது !

இதய அகலில்
எரியும் உனது
சுடர் ஒளியால் தான்
எங்களை நாங்கள்
படித்துக்கொள்கிறோம் !

அன்பே !
நீ உடைத்தாயின்
எல்லாம் உடையோம் !
நீ உடைந்தாயின்
எல்லாம் உடைத்தோம் !

நீ சிலநேரம்
கருப்பாய் எரிந்து
கண் சிமிட்டும்போது
எங்கள்
உதடுகளின் உச்சரிப்பில்
அர்த்த பேதங்கள்
உண்டாகின்றன !
வார்த்தைகளோ
அழுக்கின் நெடியுடன்
அழுகி விடுகின்றன !

அன்பே !
வேதனை வெயில்கூட
உன்
வெளிச்ச நிழலில்
இளைப்பாறி விடுகிறது !

அன்பே ! நீ
இதய வாக்கியத்தின்
உயிரெழுத்தோ ?

நீயின்றி எங்கள்
நாவுத்தறிகள் அசைந்தாலோ
ஒட்டடையைக்கூட
நெய்ய முடியாது !

எங்களின் உயிர்
மெய்யாவதற்கு
நீதான் உன்னைத்
தானம் செய்கிறாய் !

உன் சிதையிலோ
எங்கள்
உயிர்ப்புக்கள் செத்து
அநாதை ஆகிவிடும் !

அன்பே ! உன்
மையூற்றி
எழுதப்படாத கடிதங்கள்
யாராலும் படிக்கப்படுவதில்லை !
நீ அதன்
முகவரி என்பதால் !

அன்பே ! உன்
மீசையில் மண்
ஓட்டுவதே இல்லை !-
உனக்கு
தோல்வியே இல்லையதால் !

நீ
பந்தயமின்றியே
ஜெயித்துவிடும் பலசாலி !
நீயே வெற்றி என்பதால் !

அன்பே !
உள்ளம் உனது
வீடென்றால்
வார்த்தைகள் உனது
வாசல்கள்
விழிகளோ உனது
ஜன்னல்கள் !
உறவுகள் உனது
தலைவாசல் படிகள் !
சத்தியம் உன்னைத்
திறக்கும் சாவி !

அன்பிற்கும் உண்டோ
அடைக்கும் தாழ் ?
உண்டு -
சாவி சில நேரம்
தொலைந்து விடும்போது !

அன்பே !
பிரிவுத்தராசில் நீ
உட்காரும்போது
உன்
எடைக்கு எடை போட
எவராலும் முடியாது !

கடல் குளம் நதியாய்க்
கண்களை நீதான்
காட்டிக்கொடுக்கிறாய் !

அன்பே !
பிரிவின்போது
கட்டிய மனைவியின்
காதல் கண்களில்
நிறமற்ற உப்புத்திரவமாய்
நீ மாறுகின்றாய் !
தாயின் கண்களிலோ
சிவப்பாகிப் போகின்றாய் !
அங்கே நீ
குருதியாய் உருமாறி
உன்
நிறத்தை மட்டுமல்ல-
கனத்தையும் அங்கே
காட்டிவிடுகின்றாய் !
mkamal
mkamal
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 17/01/2011

Back to top Go down

அன்பின் நிறம் சிவப்பு ? Empty Re: அன்பின் நிறம் சிவப்பு ?

Post by கலைவேந்தன் Sat Jan 22, 2011 9:39 am

சற்றே நீளமாயினும் பொறுமையாய்ப் பத்தி பிரித்து பதட்டப்படாமல் வாசித்து மகிழ்ந்தேன்..

அன்பின் அனைத்துப்பரிமாணங்களையும் இக்கவிதை தன் வயிற்றில் சுமந்து அன்பின் பிரம்மாண்ட உருவத்தைப் பிரசவித்து உள்ளது.

அன்பே தாய்மை.. அதுவே தூய்மை... அதன் பெயர்தான் வாய்மை என்று அழகாக முழக்கமிட்டு அன்பின் அளவிலாப் பெருமையைப் பறைசாற்றிச்செல்லும் இக்கவிதை என் மனதுக்கு மிக நெருக்கமாய் அமைந்துவிட்டது..!

இத்தனை நாள் எங்கே சென்றீர்கள் என் அருமைக் கவிஞரே..?

ஈகரைக்கு ஒரு கவிதைப் பகலவன் முளைத்துவிட்டான் என்று அறைகூவத் தோன்றுகிறது..

- வியந்து நிற்கும் கலை நன்றி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum