ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு Poll_c10பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு Poll_m10பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு Poll_c10 
ayyasamy ram
பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு Poll_c10பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு Poll_m10பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு Poll_c10 
mohamed nizamudeen
பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு Poll_c10பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு Poll_m10பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு Poll_c10 
VENKUSADAS
பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு Poll_c10பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு Poll_m10பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு Poll_c10 

Top posting users this month
heezulia
பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு Poll_c10பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு Poll_m10பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு Poll_c10 
ayyasamy ram
பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு Poll_c10பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு Poll_m10பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு Poll_c10 
mohamed nizamudeen
பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு Poll_c10பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு Poll_m10பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு Poll_c10 
VENKUSADAS
பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு Poll_c10பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு Poll_m10பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு

+3
SK
ARR
enganeshan
7 posters

Go down

பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு Empty பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு

Post by enganeshan Thu Jan 20, 2011 6:43 pm

சில பேர் கவிதைகள் எழுதினால் அதில் ஒரு பொருளை அர்த்தம் செய்து கொள்வதே மிகவும் கஷ்டம். வார்த்தை ஜாலங்கள் இருக்குமே ஒழிய என்ன தான் சொல்ல வருகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள பட்டிமன்றமே நடத்த வேண்டி வரும். ஆனால் பண்டைய தமிழகத்தில் வாழ்ந்த கவி காளமேகம் என்ற புலவர் ஒரே பாடலில் நேர் எதிரான இரு கருத்துகளைக் கூற வல்லவர்.

சோழ நாட்டில் பயணம் செய்து கொண்டிருந்த கவி காளமேகம் ஒரு நாள் பல இடங்கள் சுற்றி களைத்துப் போய் இரவு நேரத்தில் நாகப்பட்டினம் வந்து சேர்ந்தார். மிகுந்த பசி வேறு அவரை வாட்டியது. “எங்கு உணவு கிடைக்கும்?” என்று ஊராரிடம் விசாரித்த போது “காத்தான் சத்திரம் என்ற சத்திரத்திற்குச் சென்றால் உணவு கிடைக்கும் என்று சொன்னார்கள்.

காளமேகம் காத்தான் சத்திரம் சென்று சேர்ந்த சமயம் அகாலமானதால் அங்கு சமைத்திருந்த உணவு தீர்ந்து போயிருந்தது. ஆனாலும் இவருக்காக அவர்கள் சமைக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் உணவு தயாரிக்க நேரம் அதிகமானது. பசி தாங்காத காளமேகம் கோபத்தில் “நாகப்பட்டினத்தில் இருக்கும் காத்தான் சத்திரத்தில் மாலையில் தான் அரிசியே வரும். அதை சுத்தம் செய்து உலையில் போடும் போது நள்ளிரவாகி விடும்.அதை வடித்து ஓர் அகப்பை சோறை இலையில் பரிமாறுவதற்குள் பொழுது விடிந்து விடும்” என்று பொருள்பட பழித்துப் பின் வரும் பாட்டைப் பாடினார்.

கத்துகடல் சூழ்நாகைக் காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போது அரிசி வரும்-குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளி எழும்.

பின் அவருக்கு உணவு பரிமாறினார்கள். ருசியான உணவைத் திருப்தியாக அவர் உண்டு முடித்த பின் சத்திரத்து அதிகாரி அவரிடம் வந்து “உணவு சமைக்க குறைந்த பட்ச நேரமாவது ஆகும் அல்லவா? அதற்குப் போய் எங்கள் சத்திரத்தை இப்படிப் பழித்துப் பாடி விட்டீர்களே” என்று கூறி வருந்தினார். கவி காளமேகத்திற்கு மனம் நெகிழ்ந்தது.

ஆனால் சமயோசிதமாக தன் பாடலுக்கு வேறு விதமாக அவர் விளக்கம் அளித்தார். “ஐயா! என் பாடலை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள். நான் பாடிய பாடலின் பொருள் இது தான். “உலகமெங்கும் பஞ்சம் வந்தாலும் நாகப்பட்டினத்தில் இருக்கும் காத்தான் சத்திரத்தில் அரிசி வரும். உலை ஏற்றிய உடனேயே ஊராரின் பசி அடங்கும். இலையில் பரிமாறிய அன்னத்தின் வெண்ணிறத்தைப் பார்க்கையில் வெள்ளி உதயமாவது போல் இருக்கும்” இப்போது சொல்லுங்கள். உங்கள் சத்திரத்தை நான் பழித்துப் பாடாமல் பாராட்டி அல்லவா பாடி இருக்கிறேன்”

சத்திரத்து அதிகாரி மகிழ்ந்து போனார் என்பதைச் சொல்லவா வேண்டும்.

இந்தப் பாடலைக் கோபத்தில் திட்டிப் பாடினாலும் தன் சாதுரியத்தால் அதன் பொருளை அப்படியே திருப்பிப் போட்டு விட்டார் காளமேகப் புலவர். ஆனால் பாடுகையிலேயே இரண்டு விதமாகப் பொருள் வரும்படியாகப் பாட்டுவதிலும் அவர் வல்லவராக இருந்தார். அதற்கு இன்னொரு உதாரணம்-

அக்காலத்தில் புலவர்கள் திருமண வீட்டுக்குச் சென்றால் மணமக்களை வாழ்த்தி செய்யுள் பாடுவது வழக்கம். ஏதோ ஒரு தெய்வத்தின் பெயரைக் குறிப்பிட்டு அத்தெய்வம் மணமக்களைக் காக்கட்டும் என்று பாடுவார்கள். காளமேகமும் அப்படி ஒரு திருமணத்திற்குச் சென்ற போது மணமக்களை வாழ்த்தி செய்யுள் பாட வேண்டி வந்தது. அதில் தர்மசங்கடம் என்னவென்றால் அங்கு வைணவர்களும் இருந்தனர், சைவர்களும் இருந்தனர். அக்காலத்தில் அவர்களுக்கிடையே கடுமையான சண்டை இருந்தது. திருமாலை வைத்துப் பாடினால் சைவர்களுக்கு வருத்தம். சிவனைப் பாடினாலோ வைணவர்களுக்கு வருத்தம்.

காளமேகம் சற்று யோசித்து விட்டு சைவ மற்றும் வைணவ அடியார்கள் இருபாலாரையும் மகிழ்விக்கும் விதத்தில் ஒரு பாடல் பாடினார்.

சாரங்க பாணிய ரஞ்சக்கரத்தர் கஞ்சனைமுன்
ஓரங்கங் கொய்த உயர்வாளர்-பாரெங்கும்
ஏத்திடுமை யாக ரினிதா யிருவரும்மைக்
காத்திடுவ ரெப்போதும் காண்.

சிவனைப் பாடுவதாகப் பார்த்தால் கீழ்கண்ட பொருள் வரும்.

சாரங்கபாணியர் - மானேந்திய கையினர்
அஞ்சு அக்கரத்தர் – பஞ்சாட்சர சொரூபமானவர்
முன் கஞ்சனை ஓரங்கம் கொய்த உகிர்வாளர் – முன் காலத்தில் தாமரை வாசனாகிய பிரம்மனை ஒரு தலையினைக் கிள்ளிய நகத்தினை உடையவர்.
பாரெங்கும் ஏத்திடும் உமை ஆகர் – உலகமெல்லாம் போற்றுகின்ற உமை அம்மையைத் திருமேனியில் பாதியாகக் கொண்டவர்

அந்த ஈசன் உம்மை எப்போதும் காத்திடுவாராக!

திருமாலைப் பாடுவதாகப் பார்த்தால் கீழ்கண்ட பொருள் வரும்.

சாரங்கபாணியர் – சாரங்கமாகிய வில்லைக் கைக் கொண்டவர்
அஞ் சக்கரத்தார் – அழகிய சக்கரத்தை உடையவர்
முன் கஞ்சனை ஓர் அங்கம் கொய்த உகிர்வாளர் – முன்னாளில் மாமன் கம்சன் உடலைக் கிழித்த நகத்தினைக் கிழித்த நகத்தினை உடையவர்.
பாரெங்கும் ஏத்திடும் மையாகர் – உலகமெங்கும் போற்றிடும் கரிய மேனி உடையவர்

அந்த திருமால் உம்மை எப்போதும் காத்திடுவாராக!

அவர் பாடலில் இப்படி தங்களுக்கு ஏற்றது போல் பொருள் கொண்டு வைணவ அடியார்களும், சைவ அடியார்களும் மகிழ்ந்தனர்.

இப்படி தமிழைத் தனக்கு வேண்டியது போல் வளைத்து அழகான பாடல்களைப் பாடிய காளமேகம் அக்காலத்து மக்களால் ‘கவிராஜ காளமேகம்’ என்று அழைக்கப் பட்டார். இரட்டுற மொழிதல் என்றழைக்கப்பட்ட இது போன்ற இருவேறு கருத்துகளைப் பிரதிபலிக்கும் பாடல்கள் பாடுவது சுலபமல்ல. அதிலும் இரு வேறு கருத்துகளும் ஒன்றிற்கொன்று எதிர்மறையாக வேறு இருக்க முடிவது கவியின் திறமைக்கு சிகரமே அல்லவா? ஆனால் பின் தொடர்ந்த காலத்தில் இது போன்ற பாடல்கள் குறைந்து தற்போது இல்லாமலே போய் விட்டன என்பது வருத்தத்திற்கு உரிய அம்சம். இன்றைய தமிழறிஞர்கள் இது போன்ற பாடல்களை வளர்க்க ஆவன செய்வார்களா?

என்.கணேசன்
enganeshan
enganeshan
பண்பாளர்


பதிவுகள் : 123
இணைந்தது : 05/08/2010

http://enganeshan.blogspot.in/

Back to top Go down

பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு Empty Re: பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு

Post by ARR Fri Jan 21, 2011 12:47 am

அருமையான பதிவு..!

நாகைக் கவி அறிந்ததே.. சைவ வைணவ வெண்பா அறியாதது..

பகிர்வுக்கு நன்றி கணேசரே..
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு Empty Re: பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு

Post by SK Fri Jan 21, 2011 1:59 pm

அருமையான பதிவு


[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு Empty Re: பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு

Post by கலைவேந்தன் Fri Jan 21, 2011 7:35 pm

சிறந்த இரு சிலேடைப் பாடல்களை வழங்கி மகிழ்வித்தீர்கள் கணேசன்... நன்றி..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு Empty Re: பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Jan 21, 2011 9:35 pm

நல்லதொரு பதிவு..நன்றிகள்... [You must be registered and logged in to see this image.]


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
[You must be registered and logged in to see this link.]
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு Empty Re: பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு

Post by T.N.Balasubramanian Sat Jan 22, 2011 7:57 am

சாரங்கபாணி சிலேடை கேள்வி படாதது .
சேமிக்கவேண்டிய பதிவு.
பகிர்ந்தமைக்கு நன்றி. [You must be registered and logged in to see this image.]
ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு Empty Re: பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Nov 18, 2011 12:06 pm

மிகவும் நன்று... மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு Empty Re: பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum