Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீர்வு சொல்லவா? தீயை மூட்டவா?
3 posters
Page 1 of 1
தீர்வு சொல்லவா? தீயை மூட்டவா?
சரியாக ஓராண்டு இடைவெளிக்கு பிறகு பக்கத்து மாநில வீட்டின் கூரையில் மீண்டும் பற்றி எரிகிறது நெருப்பு. ஓராண்டுக்கு முன்னர் இதேபோலதான் தெலுங்கானா விவகாரம் விசுவரூபம் எடுத்தது. ‘தெலுங்கானா ராசுட்ரியா சமிதி’ கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் உண்ணாவிரதம் இருக்க… முதலில் இதை மத்திய-மாநில அரசுகள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள.. பிறகு, ராவின் உண்ணாவிரதம் தீவிரமடைய… அங்குள்ள உசுமேனியா பல்கலைக்கழகம் போராட்டக் களமாக மாற… ஏதாவது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டுமென்கிற கட்டாயம் ஏற்பட்டது.
2009-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி “தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படுவதற்கான வேலைகள் உரிய முறையில் துவங்கப்படும்” என மத்திய அரசு அறிவித்தது. வெறும் அறிவிப்பு அல்ல. நள்ளிரவு 12 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியானதுதான் தாமதம். தெலுங்கானா அப்பாடா என்றது. ஆனால், சீமாந்திரா(ராயசலீமா மற்றும் கடலோரா ஆந்திரா)வுக்கு கோபம் கொப்பளித்துவிட்டது. வன்முறை, கலவரம், ஆர்ப்பாட்டம் என ஆரம்பமானது. உள்துறை அமைச்சராக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம் இந்த அறிவிப்பு செய்ததுகூட ஆந்திராக்காரர்களுக்கு கோபம். பொட்டி சிறீராமுலு செய்ததற்கு பதிலடி தரப்படுகிறதோ என்று நினைத்தார்களோ என்னவோ… சிதம்பரத்தின் உருவ பொம்மையெல்லாம் கூட எரித்து ஆத்திரத்தை தீர்த்தனர்.
அவசரத்தில் முடிவு எடுத்து விட்டோமோ என்று கூட மத்திய அரசு நினைக்கும் அளவுக்கு கலவரங்களும் எதிர்ப்புகளும் கிளம்பவே அடிக்கப்பட்டது அந்தர் பல்டி. அதே டிசம்பர் மாதம் 23-ம் தேதி, “தெலுங்கானா குறித்து ஒருமித்த கருத்து இன்னும் தீவிரமாக அலோசித்து முடிவெடுக்கப்படும். அதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டமும் நடக்கும்” என்று அரசு அறிவித்தது. இப்போது சீமாந்திராவுக்கு சீற்றம் குறைய தெலுங்கானாவுக்கோ திரும்பவும் கோபம். மத்திய அரசுக்கோ தலைவலி.
எதையுமே செய்ய முடியவில்லை எனில் ஒரு கமிட்டியை போட வேண்டுமென்று அரசியல் கலையின் பிதாமகன் சாணக்கியர் ஏதும் சொல்லி வைத்துவிட்டுப் போனாரோ தெரியாது. போடப்பட்டது சிறிகிருசுணா கமிட்டி. பிப்ரவரி 3 ஆரம்பித்து, டிசம்பர் 31-ம் தேதி முடிக்கவும் உத்தேசிக்கப்பட்டது. திட்டமிட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே கடந்த நிசம்பர் 30-ம் தேதி அன்று அறிக்கையை சிதம்பரத்திடம் சமர்பித்தார் கிருசுணா. ஒரு வாரம் காலக்கெடு எடுத்துக் கொண்ட உள்துறை அமைச்சகம், இந்த அறிக்கையைப் பற்றி பேசுவோம் வாருங்கள் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு அழைப்பு விடுத்தது. முறுக்கிக் கொண்டே இருக்கும் தெலுங்கானா ராசுடிரிய சமிதி, பி.சே.பி., தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டத்திற்கு வரமுடியாது என்று கூறிவிடவே, ஒருவழியாக கடந்த 6-ம் தேதி அன்று அறிக்கை வெளியிடப்பட்டது.
ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு கமிட்டி போட்டால், அது தீர்வைச் சொல்ல வேண்டும். ஆனால், சிறிகிருசுணா கமிட்டியோ, என்னென்ன வழிகள் இருக்கின்றனவோ அதை எல்லாமே கூறிவிட்டது. இருக்கும் வழிகள் எல்லாமே எல்லாருக்கும் முன்னமே தெரியும்தானே? அதில் எந்த வழி சரியானதாக இருக்கும் என்பதுதானே கேள்வி. அந்தக் கேள்விக்கும் ஒன்றிரண்டு பதிலை சொல்லாமல் வழுக்கி… வளைந்து… நழுவி… எல்லா தரப்பினரிடமும் நல்லபிள்ளை என பெயர் வாங்க ரொம்பவே மெனக்கெட்டுள்ளது சிறிகிருசுணா கமிட்டி.
பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்று கேட்டதற்கு, பஞ்சாயத்துக்கு வந்த மூன்று பேருக்குமே, “ஆளுக்கு கொஞ்சம் கொஞ்சம் வைத்துக் கொள்ளுங்கள்” என்ற ’டைபாலிக்’கான தீர்ப்பை அலகாபாத் நீதிபதிகள் அளித்தனர். அந்தக் கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு சில மாதங்களுக்கு முன் வெளிவந்து இன்னும் ஞாபகத்தில் இருந்து மறையவில்லை. அந்தத் தீர்ப்புக்கு பிறகு அமைதி நிலவுவதாக வெளியில் தெரிந்தாலும், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அந்த பிரச்சனை இருக்குமோ தெரியாது. ஒருவர் கூட திருப்தி அடையாமல் மூன்று பேருமே மேல்முறையீட்டுக்காக நீதிமன்றத்தில் உள்ளனர். அலகாபாத் நீதிபதிகலுக்கு கொஞ்சமும் சளைகாதவர்கள் போல் சிறிகிருசுணா கமிட்டிகாரர்களும் செய்துள்ளனர்.
நீதிமன்றங்களும் கமிட்டிகளும் பல பிரச்சனைகளில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று கூற முன்வர மறுக்கின்றன. ஏதாவது சொல்ல… அது பெரிய பிரச்சனை ஆகும் என்ற பயமா? தன்னை நம்பி ஒப்படைத்துள்ள அரசாங்கத்திற்கு தலைவலி தந்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையா? எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். பிரச்சனைக்கு என்னதான் தீர்வு? எப்போதுதான் தீர்வு? யார்தான் சொல்வார்கள்? இதுபோன்ற சென்சிடிவ் பிரச்சனைக்கு வெகுஎளிதில் தீர்வு சொல்லிவிடமுடியாது என்று அறிவுயீவிகள் கூறலாம். அரை நூற்றாண்டாக இருந்து வரும் பிரச்சனைக்கு இன்னொரு கால் நூற்றாண்டு எடுத்துக் கொள்ள வேண்டுமா?
ஆந்திராவின் முக்கிய கட்சிகள் காங்கிரசு, தெலுங்குதேசம், தெலுங்கான ராசுடிரிய சமிதி, கம்யூனிட்டுகள், சிரஞ்சீவி கட்சி மற்றும் முசுலீம் லீக். இவற்றில் மற்ற கட்சிகள் எல்லாமே தங்களுடைய நிலைப்பாடு இதுதான் என எடுத்து – அது சரியோ தவறொ அதில் உறுதி காட்டுகின்றன. ஆனால், எந்த நிலையும் எடுக்காமல் உள்ள ஒரே கட்சி காங்கிரசுதான். பிற கட்சிகள் தெலுங்கானா வேண்டும் என்ற குரலை பலமாக ஒலித்தால், உடனே பதிலுக்கு தெலுங்கானா பகுதி காங்கிரசு எம்.பி.க்களும் ஓங்கி குரல் கொடுப்பர். உடனே சீமாந்திராவைச் சேந்த காங்கிரசு எம்.பி.க்கள் ஒன்றுபட்ட ஆந்திரா வேண்டுமென அதை எதிர்த்து குரல் கொடுப்பர். இருபகுதி காங்கிரசு எம்.பி.க்கலுமே தத்தமது மக்களுக்காக குரல் கொடுப்பதுபோல, சீன் காட்டப்படும். இறுதி முடிவு சொல்ல வேண்டிய அக்கட்சியின் டெல்லி தலைமையோ எதுவும் பேசாது. தங்கள் எம்.பி.க்களை இரண்டு பக்கமும் பேச விட்டுவிட்டு மவுனசாமிபோல இருக்கும். அதுதான் டெல்லியின் ஸ்பெசாலிட்டி.
இந்த லட்சணத்தில் ஏதாவது ஒரு தீர்வை சொல்லுங்கள் என்று கேட்டால், இருக்கின்ற எல்லா வழிகளையும் கூறி இன்னமும் குழப்பவே செய்துள்ளது இந்த கிருசுணா கமிட்டி. “தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரிப்பதை தவிர்க்க முடியாதாம்; அதேசமயம் ஒன்றுபட்ட ஆந்திராவாக நீடிப்பதே சிறந்ததாம்.” என்ன யோசனை இது?
ஆந்திரா பற்றி எரிந்தபோதுதான் சிறிகிருசுணா கமிட்டி அறிவிக்கப்பட்டது. இப்போது அதன் முடிவுகள் வெலியே வந்திருக்கும் நிலையிலும் ஆந்திரா பற்றி எரிகிறதே? அப்படியானால் இந்த கமிட்டி தீர்வு சொல்லவா? அல்லது தீயை மீண்டும் மூட்டவா? சாம்பலைத்தான் சாதித்திருக்கிறது சிறிகிருசுணா கமிட்டி!
நன்றி: தமிழக அரசியல்
2009-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி “தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படுவதற்கான வேலைகள் உரிய முறையில் துவங்கப்படும்” என மத்திய அரசு அறிவித்தது. வெறும் அறிவிப்பு அல்ல. நள்ளிரவு 12 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியானதுதான் தாமதம். தெலுங்கானா அப்பாடா என்றது. ஆனால், சீமாந்திரா(ராயசலீமா மற்றும் கடலோரா ஆந்திரா)வுக்கு கோபம் கொப்பளித்துவிட்டது. வன்முறை, கலவரம், ஆர்ப்பாட்டம் என ஆரம்பமானது. உள்துறை அமைச்சராக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம் இந்த அறிவிப்பு செய்ததுகூட ஆந்திராக்காரர்களுக்கு கோபம். பொட்டி சிறீராமுலு செய்ததற்கு பதிலடி தரப்படுகிறதோ என்று நினைத்தார்களோ என்னவோ… சிதம்பரத்தின் உருவ பொம்மையெல்லாம் கூட எரித்து ஆத்திரத்தை தீர்த்தனர்.
அவசரத்தில் முடிவு எடுத்து விட்டோமோ என்று கூட மத்திய அரசு நினைக்கும் அளவுக்கு கலவரங்களும் எதிர்ப்புகளும் கிளம்பவே அடிக்கப்பட்டது அந்தர் பல்டி. அதே டிசம்பர் மாதம் 23-ம் தேதி, “தெலுங்கானா குறித்து ஒருமித்த கருத்து இன்னும் தீவிரமாக அலோசித்து முடிவெடுக்கப்படும். அதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டமும் நடக்கும்” என்று அரசு அறிவித்தது. இப்போது சீமாந்திராவுக்கு சீற்றம் குறைய தெலுங்கானாவுக்கோ திரும்பவும் கோபம். மத்திய அரசுக்கோ தலைவலி.
எதையுமே செய்ய முடியவில்லை எனில் ஒரு கமிட்டியை போட வேண்டுமென்று அரசியல் கலையின் பிதாமகன் சாணக்கியர் ஏதும் சொல்லி வைத்துவிட்டுப் போனாரோ தெரியாது. போடப்பட்டது சிறிகிருசுணா கமிட்டி. பிப்ரவரி 3 ஆரம்பித்து, டிசம்பர் 31-ம் தேதி முடிக்கவும் உத்தேசிக்கப்பட்டது. திட்டமிட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே கடந்த நிசம்பர் 30-ம் தேதி அன்று அறிக்கையை சிதம்பரத்திடம் சமர்பித்தார் கிருசுணா. ஒரு வாரம் காலக்கெடு எடுத்துக் கொண்ட உள்துறை அமைச்சகம், இந்த அறிக்கையைப் பற்றி பேசுவோம் வாருங்கள் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு அழைப்பு விடுத்தது. முறுக்கிக் கொண்டே இருக்கும் தெலுங்கானா ராசுடிரிய சமிதி, பி.சே.பி., தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டத்திற்கு வரமுடியாது என்று கூறிவிடவே, ஒருவழியாக கடந்த 6-ம் தேதி அன்று அறிக்கை வெளியிடப்பட்டது.
ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு கமிட்டி போட்டால், அது தீர்வைச் சொல்ல வேண்டும். ஆனால், சிறிகிருசுணா கமிட்டியோ, என்னென்ன வழிகள் இருக்கின்றனவோ அதை எல்லாமே கூறிவிட்டது. இருக்கும் வழிகள் எல்லாமே எல்லாருக்கும் முன்னமே தெரியும்தானே? அதில் எந்த வழி சரியானதாக இருக்கும் என்பதுதானே கேள்வி. அந்தக் கேள்விக்கும் ஒன்றிரண்டு பதிலை சொல்லாமல் வழுக்கி… வளைந்து… நழுவி… எல்லா தரப்பினரிடமும் நல்லபிள்ளை என பெயர் வாங்க ரொம்பவே மெனக்கெட்டுள்ளது சிறிகிருசுணா கமிட்டி.
பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்று கேட்டதற்கு, பஞ்சாயத்துக்கு வந்த மூன்று பேருக்குமே, “ஆளுக்கு கொஞ்சம் கொஞ்சம் வைத்துக் கொள்ளுங்கள்” என்ற ’டைபாலிக்’கான தீர்ப்பை அலகாபாத் நீதிபதிகள் அளித்தனர். அந்தக் கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு சில மாதங்களுக்கு முன் வெளிவந்து இன்னும் ஞாபகத்தில் இருந்து மறையவில்லை. அந்தத் தீர்ப்புக்கு பிறகு அமைதி நிலவுவதாக வெளியில் தெரிந்தாலும், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அந்த பிரச்சனை இருக்குமோ தெரியாது. ஒருவர் கூட திருப்தி அடையாமல் மூன்று பேருமே மேல்முறையீட்டுக்காக நீதிமன்றத்தில் உள்ளனர். அலகாபாத் நீதிபதிகலுக்கு கொஞ்சமும் சளைகாதவர்கள் போல் சிறிகிருசுணா கமிட்டிகாரர்களும் செய்துள்ளனர்.
நீதிமன்றங்களும் கமிட்டிகளும் பல பிரச்சனைகளில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று கூற முன்வர மறுக்கின்றன. ஏதாவது சொல்ல… அது பெரிய பிரச்சனை ஆகும் என்ற பயமா? தன்னை நம்பி ஒப்படைத்துள்ள அரசாங்கத்திற்கு தலைவலி தந்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையா? எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். பிரச்சனைக்கு என்னதான் தீர்வு? எப்போதுதான் தீர்வு? யார்தான் சொல்வார்கள்? இதுபோன்ற சென்சிடிவ் பிரச்சனைக்கு வெகுஎளிதில் தீர்வு சொல்லிவிடமுடியாது என்று அறிவுயீவிகள் கூறலாம். அரை நூற்றாண்டாக இருந்து வரும் பிரச்சனைக்கு இன்னொரு கால் நூற்றாண்டு எடுத்துக் கொள்ள வேண்டுமா?
ஆந்திராவின் முக்கிய கட்சிகள் காங்கிரசு, தெலுங்குதேசம், தெலுங்கான ராசுடிரிய சமிதி, கம்யூனிட்டுகள், சிரஞ்சீவி கட்சி மற்றும் முசுலீம் லீக். இவற்றில் மற்ற கட்சிகள் எல்லாமே தங்களுடைய நிலைப்பாடு இதுதான் என எடுத்து – அது சரியோ தவறொ அதில் உறுதி காட்டுகின்றன. ஆனால், எந்த நிலையும் எடுக்காமல் உள்ள ஒரே கட்சி காங்கிரசுதான். பிற கட்சிகள் தெலுங்கானா வேண்டும் என்ற குரலை பலமாக ஒலித்தால், உடனே பதிலுக்கு தெலுங்கானா பகுதி காங்கிரசு எம்.பி.க்களும் ஓங்கி குரல் கொடுப்பர். உடனே சீமாந்திராவைச் சேந்த காங்கிரசு எம்.பி.க்கள் ஒன்றுபட்ட ஆந்திரா வேண்டுமென அதை எதிர்த்து குரல் கொடுப்பர். இருபகுதி காங்கிரசு எம்.பி.க்கலுமே தத்தமது மக்களுக்காக குரல் கொடுப்பதுபோல, சீன் காட்டப்படும். இறுதி முடிவு சொல்ல வேண்டிய அக்கட்சியின் டெல்லி தலைமையோ எதுவும் பேசாது. தங்கள் எம்.பி.க்களை இரண்டு பக்கமும் பேச விட்டுவிட்டு மவுனசாமிபோல இருக்கும். அதுதான் டெல்லியின் ஸ்பெசாலிட்டி.
இந்த லட்சணத்தில் ஏதாவது ஒரு தீர்வை சொல்லுங்கள் என்று கேட்டால், இருக்கின்ற எல்லா வழிகளையும் கூறி இன்னமும் குழப்பவே செய்துள்ளது இந்த கிருசுணா கமிட்டி. “தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரிப்பதை தவிர்க்க முடியாதாம்; அதேசமயம் ஒன்றுபட்ட ஆந்திராவாக நீடிப்பதே சிறந்ததாம்.” என்ன யோசனை இது?
ஆந்திரா பற்றி எரிந்தபோதுதான் சிறிகிருசுணா கமிட்டி அறிவிக்கப்பட்டது. இப்போது அதன் முடிவுகள் வெலியே வந்திருக்கும் நிலையிலும் ஆந்திரா பற்றி எரிகிறதே? அப்படியானால் இந்த கமிட்டி தீர்வு சொல்லவா? அல்லது தீயை மீண்டும் மூட்டவா? சாம்பலைத்தான் சாதித்திருக்கிறது சிறிகிருசுணா கமிட்டி!
நன்றி: தமிழக அரசியல்
நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
Re: தீர்வு சொல்லவா? தீயை மூட்டவா?
தீர்வு சொல்லவா? அல்லது தீயை மீண்டும் மூட்டவா?
சரியான கேள்வி
சரியான கேள்வி
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: தீர்வு சொல்லவா? தீயை மூட்டவா?
என்ன பண்றது மனைவிக்கும் அம்மாவுக்கும் மனக்கசப்பு வரும்போது எப்படி இருப்பமோ அதே போல் தான் இதுவும் .கண்டும் காணாததுபோல் சில சமயம் இருக்க வேண்டியுள்ளது
ராம்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
தீர்வு சொல்லவா? தீயை மூட்டவா?
இதில் அம்மா யார், மனைவி யார் என்று கூறுங்கள் தோழரே
நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
Re: தீர்வு சொல்லவா? தீயை மூட்டவா?
இதற்கு என்ன அற்தம் என்றால் இரண்டு பக்கத்திலும் சில நியாயங்கள் இருக்கும் அதுபோல் ஆந்திராவை பிரித்தாளும் நலம் ,பிரிக்காவிட்டாலும் நலம் ,பிரித்தால் சில பிரச்சினைகள் ,பிரிக்காவிட்டாலும் சில பிரச்சினைகள்
ராம்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஒரு உண்மை சொல்லவா…?!
» “பேரைச் சொல்லவா?” தமிழக போலீஸ் நடுக்கம்!
» ''அஜீத் பற்றி ரகசியம் சொல்லவா?''
» புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா
» கவலை எனும் காட்டு தீயை அணைக்கும் ஒரே தண்ணீர் …!!
» “பேரைச் சொல்லவா?” தமிழக போலீஸ் நடுக்கம்!
» ''அஜீத் பற்றி ரகசியம் சொல்லவா?''
» புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா
» கவலை எனும் காட்டு தீயை அணைக்கும் ஒரே தண்ணீர் …!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|