புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
19 Posts - 3%
prajai
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jan 20, 2011 6:31 pm

‘என்னைத் தேட வேண்டாம்’
என்று எழுதப்பட்ட குறிப்பொன்று
அந்தக் கோடை இரவைத்
தன் நாவால் துழாவி நடுங்கியபடி
படபடத்துக்கொண்டிருக்கிறது

அது கடைசியாகப் படிக்கப்பட்ட
ஒரு புத்தகத்தின்
கடைசியாகப் படிக்கப்பட்ட பக்கத்தில்
சொருகப்பட்டிருக்கிறது

வேகமாகச் சுழலும்
மின்விசிறியின்
வெப்பக் காற்று
அதை வேறு எங்காவது
இடம்மாற்றிவிடத் துடிக்கிறது

ஆனால் அது பிடிவாதமுள்ள
ஒரு வாக்கியம்
அது வேண்டுகோள்கூட அல்ல
அது ஒரு உத்தரவு
அல்லது சவால்

அது ஒரு பென்சிலால்
ஒரு பழைய டைரியின்
அக்டோபர் 5, 2007 என்று
குறிக்கப்பட்ட காகிதத்தைக் கிழித்து
அவ்வளவு மங்கலாக எழுதப்பட்டிருக்கிறது
அது அங்கேயே காத்திருக்கிறது

அது எந்தக் குற்றச் சாட்டையும்
முன் வைக்கவில்லை
தன்னைத்தானே
பழித்துக்கொள்ளவும் இல்லை
தூங்கும் குழந்தையை முத்தமிடுவதுபோல
அவ்வளவு மிருதுவாக
சப்தமில்லாமல்
சகலத்தையும் முத்தமிட்டு அது விலகுகிறது

அதற்குக் கீழே ஒரு கையொப்பமிருக்கிறது
அந்தக் கையொப்பத்தை இடும் கணத்தில்
கொஞ்சம் தண்ணீர் அருந்தியிருக்கலாம்
கடிகாரத்தில் நேரத்தைக் கவனித்திருக்கலாம்
மீண்டும் ஒருமுறை
சிறு நீர் கழிக்கத் தோன்றியிருக்கலாம்
தொண்டையில் உருளும் கசப்பின் பந்து
ஒரு கண்ணீர் திவலையாகவோ
ஒரு அடக்க முடியாத கேவலாகவோ
மாறியிருக்கலாம்
அல்லது
அது ஒரு மெல்லிய புன்னகையாகவோ
சிறு தலையசைப்பாகவோகூட
அந்தக் கணம் இருந்திருக்கலாம்

நீங்கள் அதை முதலில் கவனிக்கவே மாட்டீர்கள்
அவ்வளவு தாமதமாகப் படிப்பீர்கள்
உங்களுக்கு முதலில்
அது அவ்வளவாகப் புரியாத ஒன்றாக
இருக்கும் என்பதால்
அதை திரும்பத் திரும்பப் படிப்பீர்கள்
அதற்கு மேலும் கீழும்
வேறு ஏதேனும் எழுதப்பட்டிருக்கலாம் என
வீணே நம்புவீர்கள்

ஒற்றை வாக்கியங்களை எழுதுபவர்கள்
உங்களை ஒரு அந்தரமான
பாலைவனத்தில் விடுகிறார்கள்
அங்கே உங்களுக்கு வழிகாட்ட
யாருமே இருப்பதில்லை
உங்கள் கையில்
எந்த வரைபடமும் இருப்பதில்லை

நீங்கள் அந்தக் காகிதத்தின் பின்பக்கத்தில்
ஏதாவது எழுதப்பட்டிருக்கலாம் என்று
திருப்பிப் பார்க்கிறீர்கள்
அந்தக் காகிதம் கிழிக்கப்பட்ட
டைரியைத் தேடி எடுத்துப் படிக்கிறீர்கள்
பிறகு
இன்னொரு குறிப்புக்கூட இருக்கலாம்
என்று அந்தப் புத்தகத்தை உதறுகிறீர்கள்
ஒற்றை வாக்கியங்கள்
இறுதி வாக்கியங்கள் என்பதை
நீங்கள் அறிவதில்லை

அறுபட்ட விரலிலிருந்து
சலனமற்றுப் பெருகும் குருதியைப் போல
அந்த வாக்கியம் உங்கள் கைகளில்
பெருகுகிறது
அந்தக் கையெழுத்து உங்களுக்குப் பரிச்சயமானது
அந்த ரத்தம் உங்களுக்குப் பரிச்சயமானது

நீங்கள்
அந்த வாக்கியத்தை மறுக்கவேண்டும்
என்றுதான் விரும்புகிறீர்கள்
ஆனால்
உங்களுக்குத் தெரியும்
ஒரு நீண்ட உரையையோ
ஒரு வாக்குவாதத்தையோ மறுப்பதுபோல
ஒரு ஒற்றை வாக்கியத்தை ஒரு போதும்
மறுக்க முடியாது என்று.
அதில் உங்களுக்குப் பற்றிக்கொள்ள எதுவுமே
இருப்பதில்லை
அந்த வாக்கியத்திற்குப் பின்னே
நிழல்கள் விழுவதில்லை

நீங்கள் அதன் முன்
இப்போது வெறுமனே மண்டியிடுகிறீர்கள்
அதன் முடிவற்ற சாத்தியங்களை வியந்தபடி
அதன் கருணையற்ற தீர்மானத்தின் மேல்
உங்கள் முகத்தைப்
புதைத்துக்கொள்கிறீர்கள்

நன்றி : உயிர்மை.கொம்...


ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Jan 20, 2011 11:00 pm

மிக நெருங்கிய உறவொன்று பிரிவதைப் போன்று ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது கவிதை..

அதேவேளையில், பிரிவால் பாதிக்கப்பட்டோர் கவனிக்கமுடியாத சில சாத்தியக்கூறுகளையும் நிகழ்ந்திருக்கக்கூடியவற்றையும் சொல்லி மூன்றாவது மனிதனின் பார்வையில் வர்ணிக்கிறது..

வித்தியாசமான கவிதை.. சொல் அலங்காரங்கள் இல்லாது விரியும் காட்சிப்பொருளாய் மனக்கண்ணில் தேங்கி நிற்கிறது கடைசி பிம்பம்..

பகிர்வுக்குப் பாராட்டுகள் அருண்..


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 20, 2011 11:08 pm

கிட்டத்தட்ட ஒரு பதைபதைக்கும் கதையை வாசித்த உணர்வே எனக்கும் கிடைத்தது. எழுதப்பட்ட எழுத்துக்களை விட தொக்கி நிற்கும் வினாக்குறிகளும் வியப்புக்குறிகளுமே நம்மை வாயடைத்து இருக்கச்செய்யும் என்பதை உணராமல் உணர்த்திய கவிதை இது...!

’பகீர்’ந்தமைக்கு நன்றி அருண்..!
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Jan 20, 2011 11:14 pm

”பகீர்”ந்தமை..

நல்ல சொல்லாடல் கலை..!


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 20, 2011 11:22 pm

ARR wrote:”பகீர்”ந்தமை..

நல்ல சொல்லாடல் கலை..!

ஹிஹி... உங்க தொண்டரடிப்பொடி தானுங்ணா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Jan 20, 2011 11:25 pm

குருவுக்கு மிஞ்சிய சீடர் நீங்கள் ஒருவர்தானே..!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 20, 2011 11:27 pm

உணமைதான் .... இந்த குருவுக்கு ’மிஞ்சிய’ சீடன் நான் ஒருவன் மட்டும் தான்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Jan 20, 2011 11:46 pm

ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! 733974

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jan 22, 2011 6:07 pm

படித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள் பல... பாராட்டுக்கள் அனைத்தும் எழுதியவருக்கே... மகிழ்ச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jan 22, 2011 6:11 pm

கலை wrote:கிட்டத்தட்ட ஒரு பதைபதைக்கும் கதையை வாசித்த உணர்வே எனக்கும் கிடைத்தது. எழுதப்பட்ட எழுத்துக்களை விட தொக்கி நிற்கும் வினாக்குறிகளும் வியப்புக்குறிகளுமே நம்மை வாயடைத்து இருக்கச்செய்யும் என்பதை உணராமல் உணர்த்திய கவிதை இது...!

’பகீர்’ந்தமைக்கு நன்றி அருண்..!

மிக்க நன்றி அண்ணா!! படித்து ஊக்கமளித்தற்கு!!! மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக