ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர்

2 posters

Go down

காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Empty காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர்

Post by சிவா Tue Jan 18, 2011 12:36 pm


காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர், கடலில் குளிக்க தடை; போக்குவரத்து மாற்றம்



காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் 5 லட்சம் மக்கள் திரண்டனர். பொருட்காட்சி, பூங்காக்களிலும் திருவிழாபோல் கூட்டம் இருந்தது. மெரினா கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அப்பகுதியில் போக்குவரத்தும் மாற்றிவிடப்பட்டது.


காணும் பொங்கல்

காணும் பொங்கலையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால் திருவிழாபோல் களை கட்டியது. நேற்று காலை 11 மணி முதலே மெரினா கடற்கரையில் அதிகளவில் மக்கள் குவிய தொடங்கினர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடும்பத்துடன் வந்து இறங்கினர்.

எங்கும் பார்த்தாலும் மனித தலைகள் தென்படும் அளவிற்கு மக்கள் கூட்டமாக கூட்டமாக கடற்கரையில் நின்றிருந்தனர். எம்.ஜி.ஆர். சமாதி, அண்ணாசதுக்கம், உழைப்பாளர் சிலை அருகில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். பலர் கட்டுச்சோறுடன் வந்து, மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்டனர்.


குழந்தைகள் உற்சாகம்

ஆட்டோ, கார், வேன், பஸ் என்று பல்வேறு வாகனங்களில் ஏராளமானவர்கள் மெரினா கடற்கரைக்கு வந்தனர். பள்ளி, கல்லூரி மாணவிகள் தங்கள் தோழிகளுடன் வந்து காணும் பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர்.

பெற்றோருடன் மெரினா கடற்கரைக்கு வந்திருந்த குழந்தைகள் குதூகலத்துடன் அங்கும், இங்கும் கடற்கரை மணலில் ஓடியாடி விளையாடினார்கள். நேரம் செல்ல செல்ல மெரினாவில் மக்கள் கூட்டம் அதிகரித்தது. நேற்று மாலைக்குள் சுமார் 5 லட்சம் மக்கள் திரண்டனர். இதனால் மெரினா கடற்கரை சாலையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வாகனங்கள் வேறுபாதையில் திருப்பி விடப்பட்டன.


கடலில் குளிக்க தடை

மெரினா கடற்கரையில் கூட்டம் குவிந்ததால், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடலில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

உற்சாகமிகுதியால் கடலில் இறங்கி முயன்றவர்களை போலீசார் எச்சரிக்கை செய்தும், அடித்தும் விரட்டினர். ஆங்காங்கே, கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து, பொதுமக்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்தனர். அவ்வப்போது ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தபடி இருந்தனர்.


படகில் ரோந்து

காணும் பொங்கலில் காணாமல் போன நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை போலீசார் கண்டுபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இதற்காக மெரினா கடற்கரையில் ஆங்காங்கு போலீஸ் பூத் அமைக்கப்பட்டு இருந்தது.

கடலோர காவல் படையினரும் ஹெலிகாப்டர் மற்றும் அதிவிரைவு படகில் ரோந்து வந்து பொதுமக்கள் கடலில் இறங்காத வண்ணம் கண்காணித்தனர். காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா கடற்கரையில் ஆங்காங்கு முளைத்திருந்த சிறு கடைகளில் வியாபாரமும் படு ஜோராக நடைபெற்றது. சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை மெரினா கடற்கரைக்கு நேற்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.



பொருட்காட்சி

இதேபோல், தீவுத்திடலில் நடைபெற்று வரும் சுற்றுலா பொருட்காட்சியை காணவும் நேற்று காலையில் இருந்தே கூட்டம் அலைமோத தொடங்கியது. நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் சுற்றுலா பொருட்காட்சியை கண்டுகளித்துள்ளனர்.

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே புதிதாக திறக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவிலும் நேற்று கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. சுமார் 16 ஆயிரம் பேர் ஒரே நாளில் செம்மொழி பூங்காவுக்கு வந்திருந்தனர்.


வண்டலூர் பூங்கா

காணும் பொங்கலையொட்டி, வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நேற்று காலை 10 மணி முதல் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வந்து குவியத் தொடங்கினர். கூட்ட நெரிசலை தவிர்க்க 25 சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. பூங்கா நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.20-ம், சிறுவர்களுக்கு ரூ.10-ம் வசூல் செய்யப்பட்டது.

பூங்காவின் நுழைவு வாயிலில் பார்வையாளர்கள் கொண்டு வரும் பொருட்களை தீவிர சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பிளாஸ்டிக், பாலித்தீன், பீடி, சிகரெட் போன்ற பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.


வெள்ளை புலிக்குட்டி

பூங்காவில் கடந்த 2006-ம் ஆண்டு டெல்லியில் இருந்து கொண்டுவரப்பட்ட வெள்ளை புலி அனு, பீஷ்மர் ஆகியவை 4 குட்டிகளுடன், தண்ணீரில் இறங்கி விளையாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வெள்ளை புலி குட்டிகள் தண்ணீரில் நீந்தும் தாய் புலி மீது தொங்கியபடி பயணம் செய்ததை குழந்தைகள் ரசித்து பார்த்தனர்.

பூங்காவில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர் காவல் படையினர், வனத்துறை காவலர்கள், அதிகாரிகள் மற்றும் பள்ளி, கல்லூரி என்.எஸ்.எஸ்., என்.சி.சி. மாணவர்கள் என 750-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காணும் பொங்கலை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்னை, ஆவடி, பூந்தமல்லி அண்ணாநகர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், திருப்போரூர், கோவளம் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


கிண்டி சிறுவர் பூங்கா

காணும் பொங்கலையொட்டி, கிண்டி சிறுவர் பூங்காவிலும் நேற்று கூட்டம் அலைமோதியது. இங்கு உள்ள பாம்பு பண்ணை, முதலைப்பண்ணை, மற்றும் புள்ளிமான்கள் கூட்டத்தை பொதுமக்கள் ரசித்து பார்த்தனர்.

சிறுவர் பூங்காவை பார்வையிடுவதற்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்டது. பொதுமக்கள் வசதிக்காக 8 கவுண்டர்கள் திறக்கப்பட்டிருந்தது.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திலும் காணும் பொங்கலையொட்டி கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரே நாளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.


பொதுமக்கள் வருகை விவரம்


மெரினா கடற்கரை - 5 லட்சம்
சுற்றுலா பொருட்காட்சி - 1 லட்சத்து 40 ஆயிரம்
வண்டலூர் உயிரியல் பூங்கா - 57 ஆயிரம்
கிண்டி சிறுவர் பூங்கா - 20 ஆயிரம்
செம்மொழி பூங்கா - 16 ஆயிரம்
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் - 15,500.


காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Empty Re: காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர்

Post by krishnaamma Tue Jan 18, 2011 1:57 pm

அப்ப வீட்ல டி‌வி பார்க்க ஆளே இல்லயா? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மெரினா கடற்கரையில் 2 பெண்களின் சடலங்கள் மீட்பு
» மெரினா கடற்கரையில் ஒருநாள் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுவுக்கு ஐகோர்ட் அனுமதி
» மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை உடனேஅகற்ற சென்னை ஹைகோர்ட் உத்தரவு
» மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
» திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் 3½ லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum