புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியா Poll_c10புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியா Poll_m10புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியா Poll_c10 
366 Posts - 49%
heezulia
புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியா Poll_c10புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியா Poll_m10புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியா Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியா Poll_c10புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியா Poll_m10புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியா Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியா Poll_c10புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியா Poll_m10புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியா Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியா Poll_c10புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியா Poll_m10புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியா Poll_c10 
25 Posts - 3%
prajai
புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியா Poll_c10புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியா Poll_m10புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியா Poll_c10 
6 Posts - 1%
sugumaran
புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியா Poll_c10புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியா Poll_m10புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியா Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியா Poll_c10புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியா Poll_m10புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியா Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியா Poll_c10புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியா Poll_m10புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியா Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியா Poll_c10புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியா Poll_m10புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியா Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியா


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Jan 15, 2011 9:02 am

கடந்த முப்பதாண்டு கால ஆயுதப்போரில் ஈழத்தமிழர் பட்ட இன்னல்களை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. சிங்கள இராணுவத்திடம் மட்டுமா ஈழத்தமிழர்கள் போரிட்டார்கள்… ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட இந்திய இராணுவம் ஈழத்தில் மூன்றாண்டுகளாக செய்த கொடுமைகளைத்தான் வார்த்தைகளால் சொல்லிவிட முடியுமா…தமிழர்களை அழிக்க உலக நாடுகள் ஆயுத மற்றும் பண உதவிகளை சிங்கள காடையர்களுக்கு அள்ளிக்கொடுத்தது. ஏதோ ஜனநாயக வழிமுறையில் தமிழர்களின் உரிமையை வென்றெடுக்கலாம் என்றுதானோ என்னவோ புலிகள் தமது ஆயுதங்களை மே 17இ 2009-இல் மௌனிப்பதாக அறிவித்தார்கள்.
அன்றிலிருந்து இன்றுவரை ஒரு தோட்டாவாவது சிறிலங்காவில் வெடித்ததுண்டா? அப்படியாக ஒரு தோட்டாவும் வெடிக்கவில்லை. பகைவர்கள் துணிச்சலுடன் உயிருடன் வலம்வருவதுடன், தமிழர்களை ஏளனம் செய்து கொண்டிருக்கிறார்கள். இது இப்படியிருக்க கடந்த சில மாதங்களாக இந்திய ஆட்சியாளர்கள் புலனாய்வுத்துறையூடாக புலி நாட்டுக்குள் வந்துவிட்டதாக புரளியை கிளப்பிவிட்டுள்ளார்கள்.

ருசிகண்ட பூனை சும்மா இருக்காது என்கிற பழமொழிக்கேற்ப, இந்திய அரசியல்வாதிகளும் இதுவரை காலமும் புலியைச்சாட்டி அரசியல் செய்துவந்தார்கள். மே 2009-இலிருந்து புலியின் வரவே இல்லாததையறிந்து இந்தியா கவலை கொண்டுள்ளதைத்தான்; புலிகளைப் பற்றிய எச்சரிக்கை அறிக்கைகள் எடுத்துக்காட்டுகிறது. தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் கதை வசனத்தில்தான் மத்திய புலனாய்வுத்துறையின் அறிக்கைகள் வருகிறது என்பது மட்டும் உண்மை. புலிகளைக் காரணம்காட்டி 2011-இல் இடம்பெற இருக்கும் தமிழக சட்டசபைக்கான தேர்தலை சந்திப்பது உட்பட கருணாநிதியின் அரசு மீது சுமத்தப்பட்டிருக்கும் பல ஊழல் புகார்களிலிருந்தும் எப்படியேனும் தப்பித்துவிடலாமென்று மனப்பால் குடிக்கின்றார் கலைஞர் போலும்.

கார்கில் போரில் ஈடுபட்ட வீரர்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்ததில் ஊழல், காமன்வெல்த் போட்டிகள் நடத்துவதில் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், வீட்டுமனைப்பட்டா ஒதுக்கீட்டில் கலைஞர் செய்த ஊழல், தி.மு.கவின் ராசா உட்பட பல மந்திரிகள் செய்த ஊழல்களென பல நூறு ஊழல் சம்பவங்கள் காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. மன்னிக்கவும்…இந்தியா என்கிற இறைமையுள்ள நாட்டில் இடம்பெறும் அரசியல் சம்பவங்களைப்பற்றியோ அல்லது அந்த நாட்டின் அரசியல்வாதிகளைப்பற்றியோ நாம் விமர்சிப்பது அரசியல் நாகரிகமில்லை. இருப்பினும் அவர்கள் இன்னொரு நாட்டில் வாழும் மக்களைப்பற்றி பொய்யான செய்திகளை பரப்பி அவப்பெயரை உண்டுபண்ண விளையும்போது அவற்றை எதிர்கொள்ள நாமும் எமது நியாயத்தை எடுத்துச் சொல்வதில் தப்பில்லையென்றே கருதுகிறோம்.

இந்தியாவின் உள்நாட்டு அரசியல் வெற்றி தோல்விகளில் கடந்த முப்பதாண்டுகாலமாக ஈழத்தமிழரின் போராட்டம் இடம்பிடித்திருந்தது என்பது உண்மை. ராஜீவ் படுகொலைக்கு முன்னர் தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் ஈழத்தமிழ் போராளிக்குழுக்களை தமது பக்கம் வைத்துக்கொண்டு அரசியல் பிரச்சாரங்களை மேற்கொண்டார்கள். புலிகளின் முக்கிய பிரமுகர்கள் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் பிரச்சார வண்டிகளில் ஏற்றப்பட்டு பிரச்சாரத்திற்காக தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டார்கள். போராளிக்குழுக்களுக்கென போட்டி போட்டு பணத்தை வசூலித்தார்கள். ராஜீவ் மரணத்திற்கு பின்னர் புலிகளை எதிர்த்து பிரச்சாரம் செய்து வாக்குகளை தமதாக்கும்வண்ணம் பிரதான கட்சிகள் பிரச்சாரங்களை செய்தன. இன்றும் இதே கதை தொடர்கதையாகவே இருக்கிறது.

தமிழகத்தின் மற்றக்கட்சிகள் புலிகளைப்பற்றியோ அல்லது ஈழத்தமிழர்பற்றியோ தமது கொள்கைகளை அறிவிக்குமுன்னரே, எப்படியேனும் முந்திவிட வேண்டும் என எண்ணியே கருணாநிதியின் திராவிட முன்னேற்ற கழக அரசு மத்திய உளவுத்துறையின் மூலமாக புலிகள் பற்றிய புதுக்கதைகளை கட்டவிழ்த்தி விட்டிருக்கிறது. தொடர்ந்து துன்பங்களை அனுபவிப்பவனே மீண்டும் மீண்டும் வரும் சோதனைகளை சந்திப்பான் என்பதற்கிணங்க, ஈழத்தமிழரும் மென்மேலும் பல நெருக்கடிகளை சந்திக்க இப்படியான அறிக்கைகள் வளி அமைத்துக்கொடுக்கும்.

தமிழர்கள் ஒருபோதும் விடியலைக் காணக்கூடாது என்று கருதும் தமிழின விரோதிகளின் சூழ்ச்சி தொடர்கதையாகவே உள்ளது. தமிழர்கள் இருட்டறைக்குள் இருக்கும்வரை அவர்களை வைத்து பிழைப்பு நடத்தலாம் என்று கங்கணம்கட்டி ஆட்சி செய்யும் நயவன்சகர்களின் தலைமையில் தமிழ்நாடு இருப்பதுவே தமிழர்களின் சாபக்கேடு.

எதிரியுடன் கைகோர்க்கும் நாட்டுடன் தோழமை

ராஜீவ் மரணத்திற்குப் பின்னர் சிறிலங்கா அரசியலில் நேரடித் தலையீட்டிலிருந்து ஒதுங்கிக் கொண்டதாக இந்தியா கூறிவந்தாலும் அதன் உளவுத்துறை மற்றும் வெளியுறவுத்துறையைச் சார்ந்த அதிகார வர்க்கம் தொடர்ந்தும் திரைமறைவு செயற்பாடுகளில் ஈடுபட்டே வந்துள்ளது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் இந்தியாவின் ஆளுகையை நிலை நிறுத்துவதற்காகவும் இந்திய அதிகார வர்க்கம் அன்று தொட்டு இன்று வரை மேற்கொண்டு வந்த சதி நடவடிக்கைகள் ஏராளமானவை. இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் ராஜதந்திரிகள் குறிப்பாக ஜே.என்.டிக்ஸிட், எம்.கே.நாராயணன் மற்றும் மேனன் போன்ற தமிழின விரோதிகளின் தவறுதலான வழிகாட்டுதலில் இந்திய மத்திய அரசுகளும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டே வந்தது. ஈழத்தமிழர் மீதான இந்தியாவின் கொள்கையில் சிறிதளவேனும் மாற்றத்தை இதுநாள் வரை காணக்கூடியதாக இல்லை.

அரசியல் மற்றும் ராஜதந்திரிகளின் கூற்றுப்படி ஏதோ இந்தியா சிறிலங்கா விடயத்தில் சில கொள்கை மாற்றங்களை செய்யும் என்று கூறினார்கள். இவர்களின் கூற்று பொய்த்துப் போய்விட்டது. இந்தியாவின் பரம எதிரி நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானுடன் சிறிலங்கா நல்லுறவைப் பேணிவருவதுடன் பல உடன்பாடுகளையும் செய்கிறது. இந்த நாடுகளின் செயற்பாடுகள் இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகவே கருத வேண்டியிருந்தும், இந்தியா தொடர்ந்தும் சிறிலங்காவுடன் நட்புறவை பேணிவருகிறது.

சிறிலங்காவுடன் பரஸ்பர நட்புறவை பேணிவருவதுடன் ஈழத்தமிழர்களின் அறவழிப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வேலைகளிலும் இறங்கியுள்ளது. இந்தியாவின் இச்செயல்கள் இன்று நேற்று நடப்பவையல்ல. ஏறத்தாள இரு தசாப்தங்களாக இப்படியான செயற்பாடுகள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு மீண்டும் விடுதலைப்புலிகளின் தளமாகிவிட்டதைப் போல் பொய்யான ஒரு தோற்றத்தை உருவாக்கி தமிழ்நாட்டுத் தமிழர்களை அச்சுறுத்தி அவர்களை ஈழத்தமிழரின் போராட்டத்துக்கு ஆதரவாக குரல்கொடுத்து விடாமல் வாயடைக்கச் செய்யவே இப்படியான சதி நாடகங்கள் அரங்கேற்றப்படுகிறது.

பல புலனாய்வு அமைப்புக்கள் மற்றும் ஆராட்சி நிறுவனங்கள் சீனாவின் ஆதிக்கம் இந்திய உபகண்டத்தில் பெருகிவருவது இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் என்று கூறிய பின்னரும் இந்தியா அதனைக் கவனத்தில் எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. பிரச்சினைகளை வளரவிட்ட பின்னர் தீர்வு காண்பதென்பது சிக்கலானதொன்று என்பதை இந்தியா இன்னும் உணராமலுள்ளதா என வினாவுகின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.
இந்தியாவின் மக்கள் தொகையைவிட அதிக மக்கள் தொகையைக் கொண்ட அதன் பரம எதிரியான சீனா என்கிற மாபெரும் வல்லரசுடன் உறவைப்பேணும் சிங்கள ஆட்சியாளர்களுடன் கைகோர்த்து நிற்கும் இந்தியாவுக்கு, நாற்பது லட்சமுள்ள ஈழத்தமிழர்களுக்காக போராடும் புலிகள் மட்டும் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக தெரிகிறதா?


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக