புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_m10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10 
19 Posts - 51%
mohamed nizamudeen
ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_m10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10 
5 Posts - 14%
heezulia
ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_m10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_m10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10 
3 Posts - 8%
T.N.Balasubramanian
ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_m10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10 
3 Posts - 8%
Raji@123
ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_m10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_m10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_m10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_m10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_m10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_m10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_m10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_m10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_m10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_m10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_m10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_m10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிகம் காட்டும் வாழ்வு


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jan 17, 2011 5:40 am

“ஆன்மிகத்துக்கு ஏற்ற வயது எது?” என்று கேட்டார் ஒருவர். “நலமாக வாழ்வதற்கு ஏற்ற வயது எது என்று நீங்கள் கருதுகிaர்களோ, அதுவே ஆன்மிகத்துக்கு ஏற்ற வயது” என்று பதில் கூறினேன்.

ஆன்மிகத்தை நரைத்த தலை, தள்ளாத வயது ஆகியவற்றுடன் தொடர்புபடுத்துவது வழக்கமாகிவிட்டது. இதற்கு ஆன்மிகத்தின் அடிப்படையை சரிவர அறியாததே காரணம். ஆன்மிக வாழ்வு என்பது அக வாழ்க்கைத் தரத்தைச் சார்ந்தது. சிறு வயது முதலே நலமாக வாழ விரும்புகிறோம்தானே? இதேபோல் ஆன்மிக வாழ்வையும் சிறு வயதிலேயே தொடங்குவது உத்தமம். ஆன்மிக வாழ்வை... வாழ்வதன் மூலம் சொல்லிக் கொடுக்க வேண்டிய கடமை பெற்றோருக்கு உண்டு.

எப்படி வாழ வேண்டும் என்று தெரிந்து வாழ்வதே ஆன்மிக வாழ்க்கை. ஆன்மா என்ற சொல்லுக்கு ‘நான்’ என்று பொருள். ஆன்மநலனை போதிப்பது ஆன்மிகம். உடல் நலம், மன நலம், அறிவு நலம், சொல் நலம், செயல் நலம், உறவு நலம், பொருள் நலம் என அனைத்து நலன்களும் இணைந்ததே ஆன்ம நலம். இவற்றைப் பாதுகாக்கும் அறிவுபூர்வ வாழ்வுக்குப் பெயர்... ஆன்மிக வழ்க்கை.

அறுபது வயதுக்குப் பிறகே ஆன்மிகம் என்பவர்கள், இந்த வயதைக் கடந்ததும் இவற்றையெல்லாம் பற்றி கேள்விப்பட்டு பெருமூச்சு விடுவது மட்டுமே சாத்தியம். சொல்லப்போனால் ஒவ்வொரு மனிதனும் சமூகத்துடன் இணைந்து வாழும் போது, ‘எப்படி வாழ வேண்டும்?’ என்ற விழிப்பு உணர்வுடன் இருப்பதே ஆன்மிக வாழ்க்கை.

தான் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று தெரிந்து அந்த நிம்மதிக்காக ஒவ்வொரு நொடியும் உழைப்பதே ஆன்மிக வாழ்க்கை, ‘அறிவையும், மனதையும், சொல்லையும், செயலையும் ஒருங்கிணைக்கும் பயிற்சியே ஆன்மிகம்’ என்றார் காஞ்சி மகா பெரியவர்.

அழகிய தோட்ட வீடு ஒன்றை தன்னுடைய மகனுக்குப் பரிசளித்தார் தந்தை. அந்தத் தோட்டத்தில் தந்தை வியர்வை சிந்தி கடுமையாக உழைத்திருந்தார். அவரது உழைப்பை உறிஞ்சிய அந்தத் தோட்டத்துச் செடி, கொடிகள் இதை அங்கீகரித்து பூக்களைச் சொரிந்தன. உயர்ந்த மரங்களில் பறவைகள் கூடுகட்டி இசை பரப்பின. காய், கனிகளும் எட்டிப்பார்த்தன. நீண்ட நாள் யாத்திரை சென்று வீடு திரும்பிய தந்தை, கவனிப்பாரற்றுக் கிடந்த தோட்டத்தைக் கண்டார். இலைகள் வாடி வதங்கி, ஒரு சொட்டுத் தண்ணீருக்காக ஏங்கிக் கொண்டிருந்தன. இந்தச் செடி ஏன் பூக்கவில்லை? இந்த மரம் நீங்கள் சென்ற பிறகு ஏன் காய்க்கவில்லை? என்று கேள்விகளை அடுக்கினான் மகன்.

தந்தை பதில் கூறினார். மகனே இந்த வீட்டின் மீது உரிமை கொண்டாடுவதில் உனக்கிருந்த அக்கறை இதை பண்படுத்துவதிலும் பராமரிப்பதிலும் இல்லை. இப்படித்தான் வீட்டைக் கட்டி முடித்த கையுடன் அப்படியே விட்டு விடுகின்றனர் பலரும். பராமரிக்க வேண்டும் எனும் சிந்தனை இருப்பதே இல்லை.

பரிசு பெறுவதில் பலருக்கும் ஆவல், ஆனால் அதைப் பராமரிப்பதில் இல்லை. கடவுள் நமக்கு உடல், மனம், புத்தி, பேச்சுத் திறன், செயலாற்றும் திறன், உறவுகள், பொருள் என எத்தனையோ பரிசுகளை அளித்துள்ளார்.

அக்கறையுடன் அவற்றைப் பராமரித்து, தன்னைப் பண்படுத்தும் முயற்சியே ஆன்மிகப் பயிற்சி. தூய்மை மற்றும் உறுதியுடன் உடலை வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு உணவு, உடற்பயிற்சி, உழைப்பு, உறக்கம் ஆகிய நான்கையும் உடலுக்கு தர வேண்டும்.

எதற்கு வாழ்கிறோம் என்றே தெரியாமல் வாழ்ந்து மிருகங்களைப் போல் மடிவதற்காக நமக்கு இந்த அரிய மனித உடல் கொடுக்கப்படவில்லை. இந்த உடலில் வாழும் போதுதான் நாம் நமது உண்மையான இயல்பையும் கடவுளின் உண்மையான இயல்பையும் அறிந்து பிறவிப் பெரும்பயனை எய்த முடியும்.

மனம் குறித்த சரியான விழிப்பு உணர்வு வேண்டும். மனதை முட்காடாக வைத்திருப்பதும், பூஞ்சோலையாக மாற்றுவதும் நம் கையில்தான் இருக்கிறது. உணர்ச்சிப் போராட்டங்களில் இருந்து விடுபட வேண்டும் எனில், இறை நாமத்தால் உள்ளத்தைக் கழுவி அறிவாகிய விளக்கை ஏற்றிவைக்க வேண்டும். சூரியன் உலகை ஒளிர்விப்பது போல் தெளிந்த ஆன்மிக அறிவொளியில் உடல், மனம், சொற்கள், செயல்கள், உறவுகள், பொருள் அனைத்தும் ஒளிர வேண்டும்.

செங்கதிர்தேவன் ஒளியினைத் தேர்கின்றோம் அவன்

எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக

என்று காயத்ரி மந்திரத்தை தமிழில் அற்புதமாக மொழி பெயர்த்திருக்கிறார் பாரதியார். ஒளியை வழிபடுவதன் மூலம் நாம் அறிவை வழிபடுகிறோம்.

வேத புராணங்கள், இதிகாசங்கள் திருக் குறள் முதலானவை... நம்மை நாம் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுக்கின்றன. அறிவில் தெளிவைப் பெற நல்ல நூல்களை அனுதினமும் படிப்பதே ஆன்மிக வாழ்வின் முதல்படி.

கற்றலுடன் நின்று விடுவதில்லை. ஆன்மிகப் பயிற்சி அதன்படி நிற்றலில்தான் அது நிறைவுறுகிறது. படிப்பதுடன் கடைப்பிடிப்பதும் மிக அவசியம். நூலறிவு, பட்டறிவுடன் இணையும் போது அது நுண்ணிறிவாக மாறுகிறது. உள்ளத்தில் விதைத்த நல்ல எண்ணங்கள் நல்ல சிந்தனைகளாகப் பூத்துக் குலுங்கி, சொற்களிலும், செயல்களிலும் வெளிப்பட வேண்டும். சரியான திசை நோக்கிப் பயணிக்கும் அளவான தரமான எண்ணங்கள் சொல், செயல் என அனைத்தும் நம் வாழ்க்கையை தெய்வ நிலைக்கு உயர்த்துகின்றன.

கர்ம யோகத்தால் தன் வாழ்வை மலரச் செய்கிறான் ஆன்மிகவாதி, செயல்கள் அனைத்தையும் இறைவனின் திருவடியில் மலர்களாக்கி மகிழ்கிறான். இதனால் வரும் பலன்களை இறைப் பிரசாதமாக ஏற்று திருப்தி அடைகிறான். இவனது வாழ்க்கையே நீண்ட தொரு வழிபாடாகத் திகழ்கிறது. இறைவனுடன் தனக்கு இருக்கும் அசைக்க முடியாத தொடர்பை அவன் உணர்ந்து கொள்கிறான். உறவுகளையும் உலகையும் கையாளும் கலை, அவனுக்கு கை வருகிறது. நிம்மதியின் விலாசம் அவனுக்குத் தெரிகிறது. அந்த நிம்மதி தன்னிடமே இருப்பது புரிகிறது. சுருக்கமாகச் சொன்னால், அவன் தன்னை ஆளும் ஆற்றல் உடையவனாகத் திகழ்கிறான்.

இந்த உலகத்தில் எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழக்கூடாது? புத்தியை, மனதை, பேச்சை, கைகால், அசைவுகளை, செயல்களை, பணத்தை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? எப்படி வைத்துக் கொள்ளக்கூடாது? என்பது குறித்து இடையறாது சிந்தித்து நடப்பதே ஆன்மிகம்.

ஆன்மிகவாதி அனைத்து உயிர்களிலும் தன்னையே தரிசிக்கிறான். ஆன்மிக வாழ்வு எனில் முகத்தை எப்போதும் சீரியஸாக வைத்திருக்க வேண்டும் என அர்த்தமில்லை. தெளிந்த அறிவு, ஆழ்மன அமைதி, பொங்கித்ததும்பும் உற்சாகம்... இவையே ,}மிக அடையாளங்கள். உலகில் உண்மையிலேயே நிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வது தெளிவான அறிவு கொண்ட ஆன்மிகவாதி மட்டுமே. மற்றவர்கள் இன்பமாக இருப்பது போல தோற்றமளிக்கிறார்கள் அவ்வளவுதான்.

இன்பத்தைத் தேடி உலகெங்கும் சுற்றி அலைபவன்... வித விதமான உணவுகளை சுவைத்துப் பார்க்கிறான். புலன்களே மரத்துப் போகும் அளவுக்கு புலனின்பப் பொருட்களை அனுபவிக்கிறான். அனைத்தும் கானல் நீர், போலி என வாழ்வின் கடைசி விளிம்பிலேனும் அறிகிறானா? தெரியவில்லை. ஆனால் இன்பத்துக்காக உலகைச் சார்ந்திருப்பதில்லை. ஆன்மிகவாதி தன்னில்தான் இன்பம் என நிலைத்து நிற்கிறான். நிம்மதி என்பதன் முழு பொருளும் இவனுக்கே விளங்குகிறது. அவன் பூ ஒன்று உதிர்வது போல் சத்தமின்றி வலியின்றி இந்த உலக வாழ்வை நிறைவு செய்கிறான்.


சுவாமி ஓங்காரநந்தர்...





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக