Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Today at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Today at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
சிவா |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈரானில் போயிங் விமானம் விபத்தில் சிக்கியது- 72 பேர் பலி
4 posters
Page 1 of 1
ஈரானில் போயிங் விமானம் விபத்தில் சிக்கியது- 72 பேர் பலி
டெஹரான்: ஈரானைச் சேர்ந்த 105 பேருடன் சென்ற போயிங் விமானம், விபத்தில் சிக்கி மூன்று துண்டாக உடைந்து விழுந்தது. இதில் 72 பேர் இறந்தனர்.
இந்த விமான விபத்துக்கு அமெரிக்காவையும் ஒரு காரணமாகக் கூறலாம். ஈரான் மீது அடுக்கடுக்காக பல்வேறு தடைகளைப் போட்டு வைத்திருக்கிறது அமெரிக்கா. குறிப்பாக ஈரான் விமானங்களுக்குத் தேவையான உதிரி பாகங்களைத் தர அது மறுத்து வருகிறது. மற்ற நாடுகளையும் கூட கொடுக்க விடாமல் தடுத்து வருகிறது.
தற்போது விபத்துக்குள்ளான ஈரான் விமானம் போயிங் 727 ரக விமானமாகும். இதில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட என்ஜினே பொருத்தப்பட்டுள்ளது. இந்த விமானம் மோசமான வானிலை காரணமாக விபத்தில் சிக்கியதாக கருதப்பட்டாலும் கூட என்ஜின் பழுதும் ஒரு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
விபத்து குறித்து ஈரான் செம்பிறைச் சங்க துணைத் தலைவர் ஹைதர் ஹெயாத்ரி கூறுகையில், விமானத்தில் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 32 பேர் காயமடைந்துள்ளனர் என்றார்.
அதேசமயம் பார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், 72 பேர் உயிரிழந்துள்ளனர். 33 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மேற்கு அஜர்பைஜான் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஒருமியா என்ற இடத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 7.45 மணிக்கு விபத்து நடந்துள்ளது.
டெஹரானிலிருந்து ஒருமியாவுக்கு இந்த விமானம் சென்று கொண்டிருந்தது. ஒரு மணி நேரம் தாமதமாக விமானம் கிளம்பியது. ஒருமியாவை நெருங்கியபோது திடீரென விமானம் தனது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பைத் துண்டித்தது. அதன் பின்னர் அது மூன்று துண்டாக உடைந்து விழுந்து நொறுங்கியது. இருப்பினும் விமானம் தீப்பிடிக்கவில்லை. இதனால் அனைவரும் உயிரிழக்கும் அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளது.
விமானம் மூன்று துண்டாக உடைந்து சிதறி விழுந்ததை கிராமத்தினர் நேரில் பார்த்துள்ளனர். விமானம் விழுந்ததும் சில பணிகள் காயத்துடன் தாங்களாகவே வெளியேறி வந்துள்ளனர். அவர்களை கிராமத்தினர் மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விபத்து நடந்த பகுதியில் கடும் பனி கொட்டி வருவதால் மீட்புப் பணிகள் கடுமையான பாதிப்பை சந்தித்தன.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் காரணமாக கடந்த பத்து வருடத்திற்கும் மேலாக ஈரான் விமானத்துறை கடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. நவீன விமானங்களை வாங்க முடியாமல், பழைய விமானிகளை பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. உதிரி பாகங்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் நிலவுகிறது. இதனால் ஈரான் விமானங்கள் போதிய பாதுகாப்பில்லாமல் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் தற்போது வைத்துள்ள பெரும்பாலான பயணிகள் விமானங்கள் அறுதப் பழசானவை. முறையான பராமரிப்பும் இல்லை.
கடந்த 2003ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஈரானில் நடந்த விமான விபத்தில் 302 பேர் உயிரிழந்தனர். இதுதான் அந்த நாட்டில் நடந்த மிகப் பெரிய விபத்தாகும். அந்த விபத்தில் இருந்த அனைவரும் ஈரான் புரட்சிப் படை வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கு.
அதேபோல கடந்த 2009ம் ஆண்டு சோவியத் நாட்டுத் தயாரிப்பான டுபலோவ் என்ற விமானம் நடு வானில் தீப்பிடித்து விழுந்தது. இதில் 168 பேர் உயிரிழந்தனர்.
2005ம் ஆண்டு டிசம்பரில் டெஹ்ரான் அருகே குடியிருப்புகளின் மீது வி்மானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 108 பேர் கொல்லப்பட்டனர்.
அதேபோல 2006ம் ஆண்டு நடந்த ராணுவ விமான விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடை காரணமாக ஈரானில் தொடர்ந்து விமானங்கள் விபத்துக்குள்ளாகி தொடர் உயிரிழப்புகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஈரானில் கைதான அமெரிக்க உளவாளி விடுதலை?
இதற்கிடையே, ஈரானில் உளவு பார்த்துக் கைதாகி தற்போது விடுவிக்கப்பட்டுள்ள அமெரிக்க உளவாளி ஹால் என்ற 55 வயது அமெரிக்கப் பெண்மணி ஆர்மீனியா நோக்கி செல்வதாக தகவல்கள் கூறுகின்றன.
ஹால், அமெரிக்காவுக்காக ஈரானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் இவர் பிடிபட்டார். ஈரான்-ஆர்மீனிய எல்லைப் பகுதியில், முறையான விசா இல்லாமல் ஈரான் பகுதிக்குள் நுழைந்தபோது இவர் கைது சதெய்யப்பட்டார். அவரிடம் உளவு பார்ப்பவர்களுக்குரிய சில சாதனங்கள் இருந்ததாக ஈரான் தெரிவித்தது. அவரது பல்லில் மைக்ரோபோன் இருந்ததாகவும் ஈரான் தெரிவித்தது.
இந்த நிலையில், அவர் விடுதலை செய்யப்பட்டு விட்டதாகவும், அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும், ஆர்மீனியாவுக்கு அவர் சென்றிருக்கலாம் என்றும் நேற்று ஈரான் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேசமயம், சனிக்கிழமையன்று பேட்டி அளித்த எல்லைப் பாதுகாப்பு போலீஸ் படைப் பிரிவின் துணைத் தலைவர் அகமது கெராவந்த் கூறுகையில், கைதான பெண்ணுக்கு 34 வயதாகும். அவரிடம் முறையான விசா இல்லாததால் கைது செய்யப்பட்டார். அவரிடம் ஒரு வீடியோ கேமரா இருந்தது. டிசம்பர் 5ம் தேதி இவரைக் கைது செய்தோம். அவர் ஒரு ரகசிய சிஐஏ ஏஜென்ட் ஆவார். உளவு பார்க்கவே தான் வந்ததாக அவர் கூறியுள்ளார் என்று கூறியிருந்தார்.
இருப்பினும் இந்தப் பெண் குறித்த விவரம் தங்களிடம் இல்லை என்று அமெரிக்காவும், அப்பெண் ஆர்மீனியாவுக்குள் வந்ததாகத் தெரியவில்லை என்று அந்த நாடும் கூறியுள்ளதால் இதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தட்ஸ்தமிழ்!
இந்த விமான விபத்துக்கு அமெரிக்காவையும் ஒரு காரணமாகக் கூறலாம். ஈரான் மீது அடுக்கடுக்காக பல்வேறு தடைகளைப் போட்டு வைத்திருக்கிறது அமெரிக்கா. குறிப்பாக ஈரான் விமானங்களுக்குத் தேவையான உதிரி பாகங்களைத் தர அது மறுத்து வருகிறது. மற்ற நாடுகளையும் கூட கொடுக்க விடாமல் தடுத்து வருகிறது.
தற்போது விபத்துக்குள்ளான ஈரான் விமானம் போயிங் 727 ரக விமானமாகும். இதில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட என்ஜினே பொருத்தப்பட்டுள்ளது. இந்த விமானம் மோசமான வானிலை காரணமாக விபத்தில் சிக்கியதாக கருதப்பட்டாலும் கூட என்ஜின் பழுதும் ஒரு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
விபத்து குறித்து ஈரான் செம்பிறைச் சங்க துணைத் தலைவர் ஹைதர் ஹெயாத்ரி கூறுகையில், விமானத்தில் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 32 பேர் காயமடைந்துள்ளனர் என்றார்.
அதேசமயம் பார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், 72 பேர் உயிரிழந்துள்ளனர். 33 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மேற்கு அஜர்பைஜான் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஒருமியா என்ற இடத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 7.45 மணிக்கு விபத்து நடந்துள்ளது.
டெஹரானிலிருந்து ஒருமியாவுக்கு இந்த விமானம் சென்று கொண்டிருந்தது. ஒரு மணி நேரம் தாமதமாக விமானம் கிளம்பியது. ஒருமியாவை நெருங்கியபோது திடீரென விமானம் தனது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பைத் துண்டித்தது. அதன் பின்னர் அது மூன்று துண்டாக உடைந்து விழுந்து நொறுங்கியது. இருப்பினும் விமானம் தீப்பிடிக்கவில்லை. இதனால் அனைவரும் உயிரிழக்கும் அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளது.
விமானம் மூன்று துண்டாக உடைந்து சிதறி விழுந்ததை கிராமத்தினர் நேரில் பார்த்துள்ளனர். விமானம் விழுந்ததும் சில பணிகள் காயத்துடன் தாங்களாகவே வெளியேறி வந்துள்ளனர். அவர்களை கிராமத்தினர் மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விபத்து நடந்த பகுதியில் கடும் பனி கொட்டி வருவதால் மீட்புப் பணிகள் கடுமையான பாதிப்பை சந்தித்தன.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் காரணமாக கடந்த பத்து வருடத்திற்கும் மேலாக ஈரான் விமானத்துறை கடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. நவீன விமானங்களை வாங்க முடியாமல், பழைய விமானிகளை பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. உதிரி பாகங்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் நிலவுகிறது. இதனால் ஈரான் விமானங்கள் போதிய பாதுகாப்பில்லாமல் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் தற்போது வைத்துள்ள பெரும்பாலான பயணிகள் விமானங்கள் அறுதப் பழசானவை. முறையான பராமரிப்பும் இல்லை.
கடந்த 2003ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஈரானில் நடந்த விமான விபத்தில் 302 பேர் உயிரிழந்தனர். இதுதான் அந்த நாட்டில் நடந்த மிகப் பெரிய விபத்தாகும். அந்த விபத்தில் இருந்த அனைவரும் ஈரான் புரட்சிப் படை வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கு.
அதேபோல கடந்த 2009ம் ஆண்டு சோவியத் நாட்டுத் தயாரிப்பான டுபலோவ் என்ற விமானம் நடு வானில் தீப்பிடித்து விழுந்தது. இதில் 168 பேர் உயிரிழந்தனர்.
2005ம் ஆண்டு டிசம்பரில் டெஹ்ரான் அருகே குடியிருப்புகளின் மீது வி்மானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 108 பேர் கொல்லப்பட்டனர்.
அதேபோல 2006ம் ஆண்டு நடந்த ராணுவ விமான விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடை காரணமாக ஈரானில் தொடர்ந்து விமானங்கள் விபத்துக்குள்ளாகி தொடர் உயிரிழப்புகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஈரானில் கைதான அமெரிக்க உளவாளி விடுதலை?
இதற்கிடையே, ஈரானில் உளவு பார்த்துக் கைதாகி தற்போது விடுவிக்கப்பட்டுள்ள அமெரிக்க உளவாளி ஹால் என்ற 55 வயது அமெரிக்கப் பெண்மணி ஆர்மீனியா நோக்கி செல்வதாக தகவல்கள் கூறுகின்றன.
ஹால், அமெரிக்காவுக்காக ஈரானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் இவர் பிடிபட்டார். ஈரான்-ஆர்மீனிய எல்லைப் பகுதியில், முறையான விசா இல்லாமல் ஈரான் பகுதிக்குள் நுழைந்தபோது இவர் கைது சதெய்யப்பட்டார். அவரிடம் உளவு பார்ப்பவர்களுக்குரிய சில சாதனங்கள் இருந்ததாக ஈரான் தெரிவித்தது. அவரது பல்லில் மைக்ரோபோன் இருந்ததாகவும் ஈரான் தெரிவித்தது.
இந்த நிலையில், அவர் விடுதலை செய்யப்பட்டு விட்டதாகவும், அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும், ஆர்மீனியாவுக்கு அவர் சென்றிருக்கலாம் என்றும் நேற்று ஈரான் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேசமயம், சனிக்கிழமையன்று பேட்டி அளித்த எல்லைப் பாதுகாப்பு போலீஸ் படைப் பிரிவின் துணைத் தலைவர் அகமது கெராவந்த் கூறுகையில், கைதான பெண்ணுக்கு 34 வயதாகும். அவரிடம் முறையான விசா இல்லாததால் கைது செய்யப்பட்டார். அவரிடம் ஒரு வீடியோ கேமரா இருந்தது. டிசம்பர் 5ம் தேதி இவரைக் கைது செய்தோம். அவர் ஒரு ரகசிய சிஐஏ ஏஜென்ட் ஆவார். உளவு பார்க்கவே தான் வந்ததாக அவர் கூறியுள்ளார் என்று கூறியிருந்தார்.
இருப்பினும் இந்தப் பெண் குறித்த விவரம் தங்களிடம் இல்லை என்று அமெரிக்காவும், அப்பெண் ஆர்மீனியாவுக்குள் வந்ததாகத் தெரியவில்லை என்று அந்த நாடும் கூறியுள்ளதால் இதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தட்ஸ்தமிழ்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈரானில் போயிங் விமானம் விபத்தில் சிக்கியது- 72 பேர் பலி
உயிர் இழந்த அனைத்து பயணிகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்.
அவர்கள் ஆத்மா சாந்தி அடையவும், உயிரோடு இருப்பவர்கள் வெகு விரைவில் நலம் பெறவும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
அவர்கள் ஆத்மா சாந்தி அடையவும், உயிரோடு இருப்பவர்கள் வெகு விரைவில் நலம் பெறவும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈரானில் போயிங் விமானம் விபத்தில் சிக்கியது- 72 பேர் பலி
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Similar topics
» வட மாநில வெள்ளம்: இதுவரை 207 பேர் பலி ; மீட்பு விமானம் விபத்தில் சிக்கியது
» சூடானில் ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது : நீதிபதிகள் உள்பட 18 பேர் உயிரிழப்பு
» ரஷ்யாவில் போயிங் 737 ரக விமானம் தரையிரங்கும் போது விபத்து: 59 பேர் பலி
» எத்தியோப்பியாவில் போயிங் 737 விமானம் விழுந்து விபத்து நேரிட்டதில் 157 பேர் உயிரிழப்பு
» பிலிப்பைன்சில் ராணுவ விமானம் நொறுங்கியது: 29 பேர் பலி; 40 பேர் மீட்பு
» சூடானில் ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது : நீதிபதிகள் உள்பட 18 பேர் உயிரிழப்பு
» ரஷ்யாவில் போயிங் 737 ரக விமானம் தரையிரங்கும் போது விபத்து: 59 பேர் பலி
» எத்தியோப்பியாவில் போயிங் 737 விமானம் விழுந்து விபத்து நேரிட்டதில் 157 பேர் உயிரிழப்பு
» பிலிப்பைன்சில் ராணுவ விமானம் நொறுங்கியது: 29 பேர் பலி; 40 பேர் மீட்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|