புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடிவுதராத புத்தாண்டுகளே தமிழருக்குத் தொடர்கின்றன Poll_c10விடிவுதராத புத்தாண்டுகளே தமிழருக்குத் தொடர்கின்றன Poll_m10விடிவுதராத புத்தாண்டுகளே தமிழருக்குத் தொடர்கின்றன Poll_c10 
5 Posts - 63%
heezulia
விடிவுதராத புத்தாண்டுகளே தமிழருக்குத் தொடர்கின்றன Poll_c10விடிவுதராத புத்தாண்டுகளே தமிழருக்குத் தொடர்கின்றன Poll_m10விடிவுதராத புத்தாண்டுகளே தமிழருக்குத் தொடர்கின்றன Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
விடிவுதராத புத்தாண்டுகளே தமிழருக்குத் தொடர்கின்றன Poll_c10விடிவுதராத புத்தாண்டுகளே தமிழருக்குத் தொடர்கின்றன Poll_m10விடிவுதராத புத்தாண்டுகளே தமிழருக்குத் தொடர்கின்றன Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடிவுதராத புத்தாண்டுகளே தமிழருக்குத் தொடர்கின்றன


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Jan 09, 2011 11:43 am

யாழ். குடாவில் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், கொள்ளைகள் என பதட்டமான பாது காப்பற்ற சூழல் நிலவுவதாக அங்கிருந்துவரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.இவை ஒருபுறமிருக்க, தென்னிலங்கையில், புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்என்று தலைப்பிட்டு புத்தக வெளியீடுகளும் நடைபெறுகின்றன.

இவ்விதமான இரண்டு வகைப்பட்ட முரண் நிலைப் போக்குகளுக்கிடையே தமிழ் இளைஞர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பூசா முகாமில் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கும் நாடகங்களும் அரங்கேறுகின்றன
.

அதேவேளை சரித்திரப் பிராந்திய பாதுகாப்பு வலயத்துள் இலங்கையை உள்ளடக்கிவிட வேண்டுமென அவசரப்படும் இந்தியப் பேரரசு, தொடர்ச்சியாக தனது இராஜதந்திரிகளை அனுப்பிக் கொண்டிருக்கிறது
.

இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் அவர்கள், தமிழ் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த இங்கு வரவில்லை என்பது புரியக்கூடிய விடயம்
.
வடக்கு கிழக்கில் வாழும் பூர்வீக தமிழ் பேசும் மக்களின் வாழ் நிலங்கள் திட்டமிட்ட குடியேற்றங்களால் அபகரிக்கப்படும் இவ்வேளையில், பன்னாட்டு நிறுவனங்களும் பிராந்திய வல்லரசுகளும் தமது பங்கினைப் பெற்றுக் கொள்ள, பயணங்களை மேற்கொள்வது போல் தெரிகிறது
.

வன்னியில் வீடு கட்டித் தருவதாக அரியாலையில் அடிக்கல் நாட்டியவர்கள், கடல் பரப்பில் கூட்டு நடவடிக்கையில் ஈடுபடும் ஒப்பந்தத்தினை ஏற்படுத்த காத்திருக்கின்றார்கள்.வெலிஓயாவில் 500 ஏக்கர் நிலம், சிங்களக் குடியேற்றத்திற்கு ஒதுக்கப்பட்டிருப்பதனையிட்டு கவலையடையும் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. அதிபருக்கு கடிதம் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்
.

நாவற்குழியிலிருந்து வேகமாகப் பரவிய இந்நோய் அம்பாறை வரை விரிந்து செல்வதை, கண்டன அறிக்கைகள் மூலம் தடுத்திட முடியாது. இந்த கடிதங்களுக்கு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் குணதாஸ அமரசேகரவும் ஜாதிக ஹெல உறுமயவின் சம்பிக்க ரணவக்கவும் விமல் வீரவன்ஸவும் பதிலளிப்பதால் ஜனாதிபதி தரப்பிலிருந்து எதுவுமே கூறப்படுவதில்லை.எவரும் எங்கும் வாழலாம், எல்லோரும் ஒருதாய் பெற்ற பிள்ளைகள் என்பதன் தாற்பரியம் இப்போதுதான் சிலருக்கும் புரிகிறது
.

சிறுபான்மை தேசிய இனங்கள், ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்படும் ஒரு நாட்டில் சிறுபான்மை இனத்தவரை நீதிக்குப் பொறுப்பான அமைச்சராக்கி, ஒடுக்குதலை நியாயப்படுத்தும் புதிய இராஜதந்திரத்தையும் இலங்கையிலேயே காணலாம்
.

ஒடுக்கும் இயந்திரம் பலமாக இருக்கும் போது, போராடிப் பயணில்லை என்கிற அடிபணிவு அரசியலை அரவணைத்துக் கொள்வது தான், நாடாளுமன்ற நாற்காலியை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ளும் என்று சிலர் முடிவெடுத்து விட்டார்கள்.வேறு தெரிவற்ற மக்களும் தம்மையே தெரிவு செய்வார்கள் என்கிற திடமான நம்பிக்கையில் மக்களிடமிருந்து அந்நியமாகி இருக்கும் போக்கே காணப்படுகிறது
.

ஸ்ரீ லங்கா என்பது சிங்களத்தைக் குறிக்கும். இது ஒரு பௌத்த நாடு. எந்த ஆட்சியாளரும் இந்த உண்மையை மறுக்க முடியாது. இதனை மறுப்பவர்கள், 24 மணி நேரத்திற்கு மேலாக தமது ஆட்சியை நீடிக்க முடியாது
.

ஸ்ரீலங்காவானது சிங்களவர்களிற்கான பௌத்த நாடென்பதை கண்டிய ஒப்பந்தம் உறுதிப்படுத்துகிறது என்று சிறில் மத்தியூ அன்று பிரகடனம் செய்த விடயமே இன்று நினைவிற்கு வருகின்றது
.

இலங்கையை சிலோன், லங்கா என்று அழைக்காமல் ஸ்ரீலங்கா என்று அழைக்க வேண்டுமாம்.சிங்கள தேசிய கீதம், ஸ்ரீலங்கா போன்ற விவகாரங்கள், அடுத்த கட்டமாக, சிங்களம் மட்டும் என்கிற நிலைப்பாட்டினை அடைய, வெகு தூரம் இல்லை போன்று தெரிகிறது
.

தமிழ் மக்களின் கருத்து குறித்து நான் கவலை கொள்ளவில்லை. அவர்களின் வாழ்வு குறித்தோ அல்லது சிந்தனை பற்றியோ நான் நினைத்துப் பார்க்கவில்லை. வட பகுதி மக்கள் மீது நாம் செலுத்தும் அதிகளவு அழுத்தமே, இங்கு வாழும் சிங்கள மக்களை மகிழ்ச்சிப்படுத்தும். தமிழர்களைப் பட்டினி போட்டால், சிங்களவர்கள் ஆனந்தமடைவார்கள் இப்படிச் சொன்னவர் வேறுயாருமல்ல
.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை உருவாக்கி, அதன் முதல் அதிபராக பதவியேற்ற .தே. கட்சியைச் சார்ந்த ஜே.ஆர். ஜெயவர்தன என்பவர்தான்.அவரது பேனவாதச் சிந்தனைப் பாதையை, இற்றைவரை எவரும் மாற்றவுமில்லை.மறுத்தலிக்கவுமில்லை
.

அநகாரிக தர்மபால முதல் குணதாஸ அமரசேகர வரை நிராகக்கப்படாத போற்றிப் பாதுகாக்கப்படும் ஒரு இன வெறித் தத்துவமாக இது இருந்து வருகிறது என்பதை மறுக்க முடியாது.அனைத்துலக அளவில் பேசப்படும், சுயாதீன போர்க்குற்ற விசாரணை ஓரங்கட்டப்படுமாயின் பல ஜே.ஆர். களின் குரல்களை மறுபடியும் தமிழ் மக்கள் செவிமடுப்பார்கள். அடக்கி வாசித்தாலும் ஒடுக்கு முறைகளும் நில ஆக்கிரமிப்புக்களும் குறைவில்லாமல் சிங்களத்தால் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது
.

தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடற்பரப்பையும் இந்து சத்திரப் பிராந்திய கடல் பிரதேசத்தையும் தனது கேந்திர முக்கியத்துவமிக்க பகுதிகளாகக் கருதும் சீனா, அமெரிக்கா, இந்தியா போன்ற வல்லரசாளர்கள், இலங்கையில் பூர்வீக தேசிய இனமொன்று நசுக்கப்படுவது குறித்து கவலைப்படாது.போர் அற்ற சூழலை உருவாக்க, பயங்கரவாதமென்கிற அளவு கோலால் விடுதலைப் போராட்டத்தை அழித்தார்கள்.ஆனால் இன்று தமக்குள் மோதியவாறு, ஆதிக்கப் போட்டியில் குதித்துள்ளார்கள்
.

இலங்கையில் சாந்தியும், சமாதானம் நிலைபெற வேண்டுமென்பதற்காக ஸ்ரீலங்கா அரசிற்கு இராணுவ உதவி புரிந்ததாகக் கூறுபவர்கள், ஆயுதப் போராட்டம் முடிவடைந்த பின்னரும், ஆயுதங்களை வழங்குவது எதற்காக என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்
.

இப்புத்தாண்டில், பலமாற்றங்கள், ஆசியப் பிராந்தியத்தில் நிகழும் சாத்தியப்பாடுகள் தென்படுகின்றன
.
ஆப்கானிஸ்தானில் ஏற்படும் ஸ்திரமற்ற தன்மை, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் புதிய அணிகளை உருவாக்கலாம்.அத்தோடு கொரிய வளைகுடாவில் உருவாகும் முறுகல் நிலை, சீனாவின் இறுக்கமான போக்கினை அதிகரிக்கச் செய்யும்
.

சீன வட கொரிய உறவு ஜப்பானிற்கு அச்சுறுத்தலாக அமைவது போன்று, சீன பாகிஸ்தான் இணைவு இந்தியாவிற்கு ஆபத்தாக இருக்குமென்று ஜப்பானிய அறிவுஜீவிகள் எச்சரிக்கின்றனர்.அத்தோடு தனது இறுக்கமான அமெரிக்க உறவுச் சமன்பாட்டில், இந்தியாவும் இணைய வேண்டுமென்பதே ஜப்பானின் எதிர்பார்ப்பாகவிருக்கிறது
.

வட கொரியாவிற்கெதிராக கிழக்குச் சீனக் கடலில் தென் கொரியா மற்றும் அமெரிக்கா வோடு அணி சேர்ந்துள்ள ஜப்பான், இந்தியாவையும் அந்த அணிக்குள் இணைப்பதனூடாக ஆசியாவில் சீனாவிற்கெதிரான வலுவான முகாம் ஒன்றினை அமைக்க முயல்வதைக் காணலாம்
.

ஆனால் இந்தியாவின் தெரிவோ, ரஷ்யாவை உள்வாங்கிய அணியொன்றினை நோக்கிய நகர்வாக அமைகிறது.தன்னைத் தவிர்த்து, அணுமின் உலைகளை அமைக்கும் திட்டத்தை, இந்து சமுத்திர பிராந்திய இந்தியா கருதுவதாக அந்நாட்டின் தினசரி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது
.

ஆனாலும் ஏற்கனவே ரஷ்யாவும் பங்களாதேசும், 3 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இரண்டு அணு உலைகளை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தில் கடந்த வருடம் மே மாதம் கைச்சாத்திட்ட விவகாரத்தை கவனிக்க வேண்டும்
.

ஆகவே தன்னைச் சுற்றிவர உள்ள நாடுகளில் சீனாவின் பொருண்மிய ஆக்கிரமிப்பினைத் தடுப்பதற்கு ரஷ்யாவுடன் இணைந்து செல்ல இந்தியா முயல்வதை இனிவரும் நாட்களில் காணக்கூடியதாகவிருக்கும்
.

இந்தியா ரஷ்யாவின் கூட்டு நகர்வுகள், ஸ்ரீலங்கா அரசின் சீன சார்பு நிலைப்பாட்டில் பல சிக்கல்களை நிச்சயம் உருவாக்குமென எதிர்பார்க்கலாம்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக