ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
இண்டர்லோக் இலக்கியப் புத்தகம் இந்தியத் தாய்மார்களின் தூய்மையை இழிவுபடுத்துகிறது  Poll_c10இண்டர்லோக் இலக்கியப் புத்தகம் இந்தியத் தாய்மார்களின் தூய்மையை இழிவுபடுத்துகிறது  Poll_m10இண்டர்லோக் இலக்கியப் புத்தகம் இந்தியத் தாய்மார்களின் தூய்மையை இழிவுபடுத்துகிறது  Poll_c10 
Dr.S.Soundarapandian
இண்டர்லோக் இலக்கியப் புத்தகம் இந்தியத் தாய்மார்களின் தூய்மையை இழிவுபடுத்துகிறது  Poll_c10இண்டர்லோக் இலக்கியப் புத்தகம் இந்தியத் தாய்மார்களின் தூய்மையை இழிவுபடுத்துகிறது  Poll_m10இண்டர்லோக் இலக்கியப் புத்தகம் இந்தியத் தாய்மார்களின் தூய்மையை இழிவுபடுத்துகிறது  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இண்டர்லோக் இலக்கியப் புத்தகம் இந்தியத் தாய்மார்களின் தூய்மையை இழிவுபடுத்துகிறது

4 posters

Go down

இண்டர்லோக் இலக்கியப் புத்தகம் இந்தியத் தாய்மார்களின் தூய்மையை இழிவுபடுத்துகிறது  Empty இண்டர்லோக் இலக்கியப் புத்தகம் இந்தியத் தாய்மார்களின் தூய்மையை இழிவுபடுத்துகிறது

Post by சிவா Wed Jan 05, 2011 10:59 am

இண்டர்லோக் இலக்கியப் புத்தகம் இந்தியத் தாய்மார்களின் தூய்மையை இழிவுபடுத்துகிறது  Interlok1

தேசிய விருது பெற்ற எழுத்தாளரால் மாணவர்களுக்காக எழுதப்பட்டு இந்த ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இலக்கியப் பாடநூல் இண்டர்லோக் இந்தியர்களை “பறையா” என்று வர்ணித்துள்ளது. அச்சொல்லும் அதுபோன்ற இதர சொற்களும் அகற்றப்பட்டால் போதுமானது. அப்புத்தகம் தடை செய்யப்பட வேண்டியதில்லை என்று சில இந்திய அரசியல் தலைவர்கள் மன்றாடுகிறார்கள்.

“பறையா” என்று சொல் ஒரு புறமிருக்கட்டும். இப்புத்தகத்தை எழுதிய தேசிய விருது பெற்ற ஆசிரியர் இந்நாட்டு இந்தியர்கள் ஒவ்வொருவரின் பிறப்பை, தன்மானத்தை, தாயின் மானத்தை, கற்பைக் கேள்விக்குறியாக்கி இழிவுபடுத்தி விட்டார்.

இப்பாட நூலைப் படிக்கப்போகும் ஒவ்வொரு இந்திய மாணவனின் தகப்பன் யார் என்ற கேள்வியை எழுப்பும் இலக்கியப் படைப்பு இது.

இதோ ஒன்று:

“Maniam seperti orang India yang lain, tidak pernah khuatir tentang keselamatan isterinya”
(பக்கம் 218).

மற்ற இந்தியர்களைப்போல தன் மனைவியின் பாதுகாப்பைப்பற்றி மணியமும் கவலைப்பட்டதே இல்லை.

இதன் கருத்து என்ன? உள்நோக்கம் என்ன? இது இந்தச் சொல், அந்தச் சொல் பற்றிய விவகாரம் அல்ல.

இதுபோன்ற இன்னும் சிலவற்றை கிள்ளான் அருண் பட்டியலிட்டுள்ளார். அவற்றைப் படியுங்கள்:



“இண்டர்லோக் – INTERLOK – இழிவின் மாற்றுருவம்”

2011-ஆம் ஆண்டு முதல் ஐந்தாம் படிவத்திற்கான மலாய்மொழி இலக்கியப்பாட நூல்கள் மாற்றப்பட்டுள்ளன. “இண்டர்லோக்” (INTERLOK) என்னும் தலைப்பில் அமைந்துள்ள நூல் மலாய் இலக்கியப் பாடத்திற்குரிய நூலாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டு முதற்கொண்டு மலாய் இலக்கியப்பாட மாணவர்கள் இந்நூலைப் படித்து ஆய்வு செய்வர். மலாயாவிற்கு வந்த தென்னிந்தியர்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் அடங்கிய குறுநாவல் ஒன்று இந்நூலுள் உள்ளது. “மணியம் குடும்பத்தார்” (Keluarga Maniam) என்னும் தலைப்பில் இக்குறுநாவல் எழுதப்பட்டுள்ளது. எழுபத்தைந்து பக்கங்களைக் கொண்ட இக்குறுநாவல் தமிழர்களை இழிவுபடுத்தும் நோக்கத்திற்காக எழுதப்பட்டுள்ளது.

அப்துல்லா உசேன் (Abdullah Hussain) என்பவர் இந்நாவலை எழுதியுள்ளார். அப்துல்லா உசேன் இந்நாட்டின் தேசிய இலக்கியவாதிகளுள் Sasterawan Negara yang kelapan – 1996) ஒருவராவார். இந்நாவல் பல்வேறு வடிவங்களில் தமிழர்களின் எதிர்ப்பை எதிர்நோக்கியுள்ளது. தமிழர்களின் வாழ்வியலை இடித்துரைக்கும் நோக்கில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளதாகப் பலர் சொல்கின்றனர். தமிழினத்தை ஒட்டுமொத்தமாக இழிவு செய்கின்றது என்னும் கருத்தும் சொல்லப்படுகின்றது.

இண்டர்லோக்கில் உள்ள குறுநாவலால் இந்நாட்டுத் தமிழர்களின் மனம் ஒட்டுமொத்தமாகப் பாதிப்புற்றுள்ளதை மறுப்பதற்கில்லை. ஒரே மலேசியா, ஒரே இனம், ஒரே பண்பாடு, ஒற்றுமையே நம் வாழ்வு என்றெல்லாம் ஓதிக்கொண்டிருக்கும் இந்நாட்டில் இத்தகைய நாவல் எழுதப்பட வேண்டியதன் தேவையென்ன? இத்தகைய நாவலைப் பள்ளி மாணவர்களுக்குரிய பாடநூலாக்குவதற்கான தேவையென்ன? ஒன்றுமே புரியவில்லை, என்னும் குரல்தான் உரக்க ஒலிக்கின்றது.

சாதியம் தொடர்பான செய்திகள் இந்நாவலுள் விரவியுள்ளன. இஃது இந்நாட்டுத் தமிழர்களை இழிவுபடுத்கின்றதென தமிழ்ச் சார்புடய ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால், இந்நாவலுள் சாதியம் மட்டுமே குறிக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக, பல்வேறு கோணங்களில் தமிழர்களின் வாழ்வியலும் பண்பாட்டுக்கூறுகளும் இழிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. இதற்குரிய சான்றாக இந்நாவலுள் குறிக்கப்பட்டுள்ள செய்திகள் கீழுள்ளவாறு தொகுக்கப்பட்டுள்ளன:

Mereka yang dari arah ke utara sedikit bercakap bahasa Malayalam atau Telugu, tetapi hampir semuanya tahu bahasa Tamil. Malayalam dan Telugu pun berasal dari satu rumpun bahasa Dravidia. Satu perkara besar yang membuatkan mereka senang berkaul adalah kerana mereka tergolong dalam satu kasta Paria. (பக்கம் 211)

மலையாளிகளும் தெலுங்கர்களும் வடக்குப் பகுதியிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்குத் தமிழ்மொழி தெரியும். மலையாளமும் தெலுங்கும் திராவிடமொழிக் குடும்பத்தைச் சார்ந்தனவாகும். இவர்கள் அனவரும் இயல்பாகப் பழகுவதற்குரிய காரணம்; இவர்கள் எல்லாரும் பறையர் சாதியச் சேர்ந்தவர்களாகும்.

Mereka tidak perlu takut akan mengotori sesiapa kalau bersentuhan. (பக்கம் 211)

யாரையும் தொட்டால் தீட்டாகுமென இவர்கள் பயப்பட வேண்டியதில்லை.

Mereka berasak-asak seperti kambing . (பக்கம் 211)

ஆடுகளைப்போல முண்டியடித்தனர்.

Disini, pekerjaan yang membezakan kasta tidak ada. (பக்கம் 216)

சாதி வேறுபாட்டை உணர்த்தும் வேலைகள் இங்கில்லை.

Kuli-kuli Cina itulah yang lebih banyak mendapat kesempatan. Maniam mengakui bahawa mereka lebih pantas bekerja dan sedikit bicara. (பக்கம் 218)

சீனக் கூலிகளுக்கு அதிகமான வாய்ப்புக் கிட்டுகின்றது. அவர்கள் சுறுசுறுப்புடன் வேலை செய்வதோடு குறைவாகவும் பேசுகின்றனர் என்பதை மணியம் ஒப்புக் கொண்டான்.

Maniam seperti orang India yang lain, tidak pernah khuatir tentang keselamatan isterinya. (பக்கம் 218)

மற்ற இந்தியர்களைப்போல தன் மனைவியின் பாதுகாப்பைப்பற்றி மணியமும் கவலைப்பட்டதே இல்லை.

Dia gembira hidup di negeri ini kerana untuk pertama kali dalam hidupnya dia berasa dirinya sebagai manusia seperti orang lain. (பக்கம் 218)

தன் வாழ்வில் முதல் முறையாகத் தானொரு மனிதன் என்பதை உணர்ந்ததால் அவன் இந்நாட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்தான்.

Disini dia tidak sahaja bebas bercampur gaul dengan orang lain sama sebangsanya, malah dia tidak takut dengan pantang larang yang terdapat di negaranya apabila seorang India daripada kasta rendah menyentuh orang India daripada kasta tinggi. (பக்கம் 218 – 219)

இங்கு அவன் தன் இனத்தாருடன் சுதந்திரமாகப் பழகுவதோடு தன் நாட்டிலுள்ள சமூகக் கட்டுப்பாடுகளுக்கு அச்சமுற வேண்டியதில்லை. அங்குக் கீழ்சாதியினர் உயர்சாதியினருடன் பழகுவதில்லை.

Dia tidak sahaja dimaki hamun dengan kata-kata yang kesat, malah disisihkan daripada masyarakat sehingga dirinya dan orang-orang yang sekasta dengannya menjadi lebih hina daripada. (பக்கம் 219)

கடுஞ்சொற்களால் ஏசுவதுமின்றி அவனையும் அவன் சாதியினையும் ஒதுக்கிவிடுவர். மிருகங்களைப்போல இழிவுபடுத்திடுவர்.

Di negeri ini, orang daripada keturunan kasta tinggi, kasta Brahma memakai punul yang melintang di tubuh, tetapi dia tidak takut menyentuh orang itu. (பக்கம் 219)

இந்நாட்டில் உயர்சாதி மக்களான பிராமணர்கள் பூணூல் அணிந்திருப்பர். ஆனால், இவர்களைத் தொடுவதற்கு அவன் அஞ்சுவதில்லை.

Dia boleh membeli barang daripada penjaja dengan memberikan wang dari tangan ke tangan; tidak seperti seperti di negaranya, dia mesti meletakkan wang itu di suatu tempat dan penjaja itu akan menyiram wang itu dengan air sebelum diambil dan dimasukkan ke dalam petinya. (பக்கம் 219)

வணிகனிடமிருந்து பொருள் வாங்கும்போது கையாலேயே பணத்தைக் கொடுக்கலாம். அவன் நாட்டில் அவ்வாறில்லை. பணத்ததக் குறிப்பிட்ட ஓரிடத்தில் வைத்துவிட வேண்டும். பின்னர் வணிகன் அப்பணத்தின் மீது தண்ணீர் ஊற்றித் தூய்மை செய்தபிறகு பெட்டிக்குள் போட்டான்.

Apatah pula lembu ialah binatang suci bagi orang Hindu; dan kalau binatang itu mati, seperti ibunya sendiri yang mati. (பக்கம் 220)

இந்துக்கள் மாட்டினைப் புனிதமாக எண்ணுகின்றனர். அம்மிருகம் இறந்தால் தம் தாய் இறந்ததுபோல கருதுகின்றனர்.

Tidak makan tengah hari tidak mendatangkan masalah, asalkan dia dapat mengunyah sirihnya seperti lembu atau kambing memamah biak. (பக்கம் 224)

பகல் உணவு உண்ணாவிடில் சிக்கல் ஏதுமில்லை. ஆடு, மாடுகளைப்போல அசைபோடுவதற்கு வெற்றிலை கிடைத்தால் போதும்.


Setelah menjalani beberapa upacara yang meletihkan, maka pesta perkhawinan Maniam dan Malini pun berakhir. (பக்கம் 229)

சோர்வு ஏற்படுத்தும் சடங்குகளுக்குப் பின்னர் மணியம் மாலினி இருவரின் திருமணம் நிறைவுற்றது.


Dia gertak sahaja, orang kulit hitam ini tentu takut kecut. (பக்கம் 253)

அவன் (வெள்ளைக்காரன்) மிரட்டினால் போதும் இந்தக்ழன்) பயந்துவிடுவான்.

Suppiah menerpa ke hadapan dan sujud di kaki orang putih…… Lantas, dia menendang Suppiah. Suppiah terjungkir. (பக்கம் 256)

முன்னே வந்து வெள்ளக்காரன் காலில் விழுந்து கும்பிட்டான் சுப்பையா…… வெள்ளக்காரன் சுப்பையாவை எட்டி உதைத்ததால் அவன் சுருண்டு விழுந்தான்.

Dia berasa bangga kerana anjing orang putih itu jinak dengannya. (பக்கம் 276)

வெள்ளக்காரனின் நாய் தன்னுடன் சாதுவாகப் பழகுவது அவனுக்குப் பெருமையாக இருந்தது.

1900-ஆம் ஆண்டிலிருந்து நாடு விடுதலைப் பெற்றது வாயிலாக மலாய்க்காரர், தமிழர், சீனர் ஆகிய மூவினத்தாரிடயே நிலவிய தொடர்பினையும் ஒற்றுமையினையும் தெளிவுறுத்தும் நோக்கத்திற்காக இந்நாவல் எழுதப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால், அடிப்பட நோக்கம் அஃதன்று என்னும் உண்மையை மேற்காணும் குறிப்புகளின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். ஓர் இனத்தாரையும் அவர்கள் சார்ந்துள்ள பண்பாட்டினையும் இழிவு செய்வதற்கு இவ்வளவு போதாதா? இதற்கு என்ன சாக்குப்போக்குச் சொல்லவிருக்கின்றனர்?

ஒற்றுமையே நம் வாழ்வு, நம் பண்பாடு, என முழங்கிக் கொண்டிருக்கும் இந்நாட்டின் கல்வியகங்களில் எத்தகைய சிந்தனகள் புகுத்தப்பட வேண்டுமென்னும் தெளிவற்றிருக்கின்றோம். இது வியப்பிலும் வியப்பாக இருக்கின்றது.

ஒரு நூலைப் பள்ளிப்பாட நூலாகத் தேர்வு செய்வதற்கு எத்தனைத் தரப்பினர் எவ்வளவு காலம் உத்தேசித்திருக்க வேண்டுமென்னும் தெளிவு நமக்கு உண்டு. கல்வி அமைச்சர் முதற்கொண்டு பள்ளிப் பாடநூல் தேர்வுக்குழுவினர் வரையிலாக இதில் ஈடுபட்டுள்ளனர். எத்தனை அதிகாரிகள் இந்நாவலைப் படித்திருப்பர்? எத்தனனப் படிநிலைகளைத் தாண்டி இந்நாவல் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்நாவல் தேர்வு தொடர்பாக ஈடுபட்டிருந்தோருக்கு நாவலின் உள்ளடக்கம் தமிழர்களின் வாழ்வியலையும் மனதையும் பாதிக்குமெனத் தோன்றவில்லையா!

ஏதோவொன்று எங்கோ இடிக்கின்றதல்லவா? வாழ்க ஒரே மலேசியா! வளர்க நம் ஒற்றுமை! பெருகத் தமிழர்களின் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை¨!

இண்டர்லோக் இலக்கியப் புத்தகம் இந்தியத் தாய்மார்களின் தூய்மையை இழிவுபடுத்துகிறது  Logo


இண்டர்லோக் இலக்கியப் புத்தகம் இந்தியத் தாய்மார்களின் தூய்மையை இழிவுபடுத்துகிறது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இண்டர்லோக் இலக்கியப் புத்தகம் இந்தியத் தாய்மார்களின் தூய்மையை இழிவுபடுத்துகிறது  Empty Re: இண்டர்லோக் இலக்கியப் புத்தகம் இந்தியத் தாய்மார்களின் தூய்மையை இழிவுபடுத்துகிறது

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Jan 05, 2011 11:57 am

நம் இனத்தை தவிர மற்ற என்ட இனதிடமும் இல்லை விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை ..ஒரு வேலை அதனால் தான் நம்ம இன்னும் சர்வதேச அடிமையோ ?
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

இண்டர்லோக் இலக்கியப் புத்தகம் இந்தியத் தாய்மார்களின் தூய்மையை இழிவுபடுத்துகிறது  Empty Re: இண்டர்லோக் இலக்கியப் புத்தகம் இந்தியத் தாய்மார்களின் தூய்மையை இழிவுபடுத்துகிறது

Post by சிப்பி Wed Jan 26, 2011 6:51 pm

எனக்குத் தெரிந்து இருப்பதிலேயே மானம், ஈனம் கெட்ட ஒரே இனம் தமிழினம் தான். ஏதோ படத்துல வடிவேலு சொல்லுவாரே அது போல எவ்ளோ அடிச்சாலும் தாங்கிற ஆளுக நாம தான்னு நினைக்கிறேன்.
சிப்பி
சிப்பி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 19/01/2011

Back to top Go down

இண்டர்லோக் இலக்கியப் புத்தகம் இந்தியத் தாய்மார்களின் தூய்மையை இழிவுபடுத்துகிறது  Empty Re: இண்டர்லோக் இலக்கியப் புத்தகம் இந்தியத் தாய்மார்களின் தூய்மையை இழிவுபடுத்துகிறது

Post by அன்பு தளபதி Wed Jan 26, 2011 6:58 pm

எங்கே போனார்கள் தமிழினகாவலர்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இண்டர்லோக் இலக்கியப் புத்தகம் இந்தியத் தாய்மார்களின் தூய்மையை இழிவுபடுத்துகிறது  Empty Re: இண்டர்லோக் இலக்கியப் புத்தகம் இந்தியத் தாய்மார்களின் தூய்மையை இழிவுபடுத்துகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum