ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

“இண்டர்லோக்” பாடநூல் எரிக்கப்படும்; அமைச்சர்கள் பதவி துறக்க வேண்டும்

Go down

“இண்டர்லோக்” பாடநூல் எரிக்கப்படும்; அமைச்சர்கள் பதவி துறக்க வேண்டும் Empty “இண்டர்லோக்” பாடநூல் எரிக்கப்படும்; அமைச்சர்கள் பதவி துறக்க வேண்டும்

Post by சிவா Wed Jan 05, 2011 10:43 am

“இண்டர்லோக்” பாடநூல் எரிக்கப்படும்; அமைச்சர்கள் பதவி துறக்க வேண்டும், இந்திய அமைப்புகள் கூட்டணி எச்சரிக்கிறது

“இண்டர்லோக்” பாடநூல் எரிக்கப்படும்; அமைச்சர்கள் பதவி துறக்க வேண்டும் Interlok11

இடைநிலைப் பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்படும் “இண்டர்லோக்” என்னும் ஓர் இலக்கியப் பாடநூலை கல்வி அமைச்சு மீட்டுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், நாடு முழுவதும் எதிர்ப்புக் கூட்டங்கள் நடத்தப்படுவதோடு அதன் பிரதிகளுக்கு எரியூட்டப்படும் என்று அரசு சாரா இந்திய அமைப்புக்கள் கூட்டணி இன்று எச்சரிக்கை விடுத்தது.

மேலும், இப்பாட நூல் கல்வி அமைச்சால் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு இந்திய அமைச்சர்களுக்கும் துணை அமைச்சர்களுக்கும் பங்குண்டு. அதற்குப் பொறுப்பேற்று அவர்கள் பதவி துறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

“இண்டர்லோக் என்ற இந்த இலக்கிய நூல் இந்திய சமூகத்தைச் சிறுமைப்படுத்துகிறது. இந்நூலில் கூறப்பட்டுள்ள கருத்துகள் உள்நோக்கம் கொண்டவை. அவை இந்திய சமூகத்தின் உணர்ச்சிகளைத் தாக்குகின்றன. இதனை நாங்கள் ஒரு மிகக் கடுமையான விவகாரமாக கருதுகிறோம்”, என்று 107 மலேசிய அரசு சார்பற்ற இந்திய அமைப்புகள் கூட்டணியின் தலைவர் அ. வைத்திலிங்கம் இன்று கோலாலம்பூரில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இம்மாதிரியான உணர்ச்சிவசப்படக் கூடிய விவகாரங்களில் அரசாங்கம் துரிதமான நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டிய அவர், “இண்டர்லோக்” பாடநூலை அரசாங்கம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அதிரிட்டுக் கூறினார்.

ஏன் 2011 இல்?

இந்த இலக்கிய பாடநூலில் கூறப்பட்டுள்ள “பறையா” போன்ற சொற்கள் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியவை என்பதோடு கதை முடிந்து விடுவதில்லை. இப்புத்தகத்தின் உள்நோக்கம் என்ன? அது ஏன் 2011 இல் இளம் மாணவர்களுக்கு கதையாக கூறப்படுகிறது என்பதை விளக்கி இந்து சங்கத்தின் முன்னாள் தலைவரான டாக்டர் ஆறு. நாகப்பன் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“இந்தியர்களும் சீனர்களும் வந்தேறிகள் என்பதை விரிவாகவும் இழிவாகவும் மாணவர்களின் உள்ளத்தில் விதைப்பதுதான் இந்நூலின் உள்நோக்கம். இது திட்டமிட்ட செயலாகும்”, என்றாரவர்.

இந்நாட்டு சீன மற்றும் இந்திய சமூகத்தினர் எவ்வளவு இழிவானவர்கள் என்ற தவறான கருத்தை மாணவர்களின் சிந்தனையில் திணிப்பதோடு அவர்களில் ஒரு சாரரை தாழ்ந்தவர்களாகவும் ஏளனத்திற்குரியவர்களாகவும் சித்தரித்து மற்றவர்களை உயர்ந்தவர்கள் என்று கருதிக்கொள்வதற்கு இந்நூல் வழிவகுக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

“இவ்வாறான போதனையால் ஒருமைப்பாடு வளராது. ஏற்றத்தாழ்வுதான் உருவாகும்”, என்று நாகப்பன் கூறினார்.

இந்நூலை மேலோட்டமாக பார்த்து விட்டு, சில சொற்களை அகற்றி விட்டால் போதும் என்று எண்ணுவது இந்நூலின் உள்நோக்கத்தை தடுத்து நிறுத்தி விடாது என்று அவர் எச்சரித்தார்.

“அமைச்சர்கள் பதவி துறக்க வேண்டும்”

இந்த “இண்டர்லோக்” இலக்கிய நூல் ஒரே மலேசியாவுக்கு வித்திடாது. “இது உயர்ந்த, தாழ்ந்த மலேசியாவைத்தான் உருவாக்கும். இந்நூல் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கல்வி அமைச்சு இதனைச் செய்யத் தவறினால், நாடு முழுவதும் எதிர்ப்புக் கூட்டங்கள் நடத்தப்படும்”, என்று மலேசிய தமிழ் அறவாரியத்தின் தலைவர் கா.உதயசூரியன் கூறினார்.

ஒரே மலேசியா பற்றி பேசும் பிரதமர் நஜிப்பும் கல்வி அமைச்சர் முகைதினும் இந்நூலைப் படிக்க வேண்டும். படித்து விட்டு, இதுதான் ஒரே மலேசியாவை உருவாக்குவதற்கான வழியா என்பதை விளக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இழிவுபடுத்தப்பட்டுள்ள இரண்டு சமூகங்களின் இள மாணவர்கள் உள்ளத்தில் இது எத்தகையப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை எவரும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

“இது ஒரே மலேசியாவுக்கான வழியல்ல. இதை நான் கடுமையாக எதிர்க்கிறேன்”, என்று உதயசூரியன் திட்டவட்டமாக கூறினார்.

“மேலும், இந்நூல் பாடநூலாக கல்வி அமைச்சால் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு அமைச்சரவையில் அங்கம் பெற்றுள்ள இந்திய அமைச்சர்களுக்கும் பொறுப்புண்டு. இந்நூலை அவர்களின் அரசாங்கம் திரும்பப் பெறுவதற்கு அவர்கள் ஆவன செய்யத் தவறினால், இந்திய அமைச்சரும் துணை இந்திய அமைச்சர்களும் பதவி துறக்க வேண்டும்”, என்று உயதய சூரியன் வலியுறுத்தினார்.

“இண்டர்லோக் எரியூட்டப்படும்”


“இண்டர்லோக்” பாடநூல் எரிக்கப்படும்; அமைச்சர்கள் பதவி துறக்க வேண்டும் Interlok4
நாட்டின் இரு சமூகங்களை இழிவுபடுத்தி அதனை அச்சமூகங்களின் மாணவர்களுக்கே போதிக்கும் ஒரு பாடநூலுக்கு எவ்வாறு கல்வி அமைச்சும் தேவான் பகசா டான் புஸ்தகாவும் அனுமதி அளித்தன என்று வினவினார் அரசு சாரா இந்திய அமைப்புகள் கூட்டணியின் செயலாளர் ஜி. குணராஜ்.

இதில் வீண்பேச்சுக்கு இடமில்லை. இந்நூல் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு முழு ஆதரவு வழங்குவதாக கூறிய அவர், “இந்நூல் திரும்பப் பெறாவிட்டால் நாடு முழுவதும் நடக்கும் எதிர்ப்புக் கூட்டங்களில் இந்நூலுக்கு எரியூட்டப்படும்”, என்று எச்சரித்தார்.

இந்தியர்களின் உயிரும் உடலும் உரமாக்கப்பட்டன

“இண்டர்லோக்” என்ற பாடநூலுக்கான கடும் எதிர்ப்பு “பறையா” போன்ற சொற்கள் அந்நூலில் காணப்படுகின்றன என்பதற்காக அல்ல. ஓர் இனத்தை இவ்வளவு இழிவாக வர்ணிக்கபடுவதும் அது இளைய தலைமுறையினர் மீது ஏற்படுத்தப்போகும் தாக்கம்தான் இந்த எதிர்ப்புக்கு அடிப்படைக் காரணம் என்று இக்கூட்டணியின் கூட்டுத் தலைவரான கா. ஆறுமுகம் கூறினார்.

“இத்தகைய மோசமான ஓர் இலக்கிய நூல் நஜிப்பின் தலைமையத்துவத்தின் கீழ் ஏன் படைக்கப்பட வேண்டும்?”, என்று அவர் வினவினார்.

“மலேசியாவுக்கு இந்நூல் ஓர் அறிவுப் பேரழிவு” என்று ஆறுமுகம் கூறினார்.

இந்தியர்களைப் பற்றி பல புள்ளிவிபரங்களை வழங்கிய ஆறுமுகம், 1838-1924 ஆண்டுகளுக்கிடையில் இந்நாட்டிற்கு 1.75 மில்லியன் இந்தியர்கள் வந்து காடான இந்நாட்டை நாடாக்கினர். பலரை பணக்காரர்களாக்கினர். ஆனால், அவர்கள் ஏழைகளாகவே வாழ்ந்தனர்.

“கிட்டத்தட்ட ஒரு மில்லியன் இந்தியர்கள் தங்களுடைய உயிரையும் உடலையும் இந்நாட்டிற்கு உரமாகத் தந்தனர்”, என்பது வரலாறு என்றாரவர்.

“அன்று முதல் இன்று வரையில் கூட்டணிக்கும் தேசிய முன்னணிக்கும் வாக்களித்தே தேய்ந்துபோய் இருக்கும் இந்தியர்களை ஏன் ஏளனம் செய்கிறீகள்”, என்று அவர் கேட்டார்.

“அவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் அவர்களுக்குப் ‘பறையா’ என்ற பட்டத்தைப் பெறுவதற்கும் அவர்களுடையப் ‘பாதுகாப்பற்ற’ பெண்கள் பொதுச் சொத்து என்று பறைசாற்றப்படுவதற்காவும் தானா?”, என்று அவர் மேலும் வினவினார்.

“நாங்கள் கெட்டவர்களா?

“இண்டர்லோக்” பாடநூல் எரிக்கப்படும்; அமைச்சர்கள் பதவி துறக்க வேண்டும் Interlok21
ஒரு வாரத்துக்குள் அந்தக் கூட்டமைப்பின் கோரிக்கைக்குச் செவி சாய்க்க அமைச்சு தவறினால், மலேசியாவில் பல்வேறு பகுதிகளில் நிகழும் பேரணிகளில் அந்தப் புத்தகத்திற்கு எரியூட்டப்படும் என்பதை வைத்திலிங்கம் மீண்டும் நினைவுறுத்தினார்.

“அந்தப் புத்தகம் மீட்டுக் கொள்ளப்படாவிட்டால் நாங்கள் தீவிரமான நடவடிக்கை எடுப்போம். நாங்கள் மலேசியா முழுவதும் விளக்கக் கூட்டங்களை நடத்துவோம். அந்தப் புத்தகத்தை எரிப்போம்”, என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

அந்தப் புத்தகம் இந்திய சமூகத்தைச் சித்தரிக்கும் முறை பற்றி, குறிப்பாக இந்திய ஆண்கள் தங்களது துணைவியரை நடத்தும் முறை குறித்து அதில் காணப்படும் உள்ளடக்கம் பற்றி கூட்டமைப்பு ஏமாற்றம் அடைந்துள்ளது.

சீன, இந்திய சமூகங்கள் குடியேற்றக்காரர்கள் என்னும் எண்ணத்தையும் அந்தப் புத்தகம் பள்ளிப்பிள்ளைகளிடையே ஏற்படுத்துகிறது என்றும் வைத்திலிங்கம் சொன்னார்.

“அந்தப் புத்தகம் எங்களை கெட்டவர்களாகத் தோற்றமளிக்கச் செய்கிறது. எங்களை ‘பறையா’ என்றும் தரக்குறைவாக குறிப்பிடுகின்றது. நாங்கள் போராடும் ஏழைகள் என்றும் நாங்கள் குடியேற்றக்காரர்கள் என்றும் சொல்கிறது”, என்றார் அவர்.

மேல் இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கான அந்தப் புத்தகம், பள்ளிப் பிள்ளைகளிடையே சமூகத்தைப் பற்றித் தவறான காண்ணோட்டத்தை ஏற்படுத்தி விடும் என்றும் வைத்திலிங்கம் குறிப்பிட்டார்.

“அது கற்பனைப் புத்தகம் என்றால் அது பரவாயில்லை. ஆனால் அதனை உண்மையாக்கி அதனைப் பிள்ளைகள் கற்பதற்கு இலக்கியப் புத்தகமாக்குவது? இது சரியான வழி அல்ல,” என்றார் அவர்.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் கல்வி அமைச்சருமான துணைப் பிரதமர் முஹடின் யாசினும் கருத்துக்கள் தெரிவிப்பதற்கு முன்பு அந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்றும் வைத்திலிங்கம் கேட்டுக் கொண்டார்.

நஜிப்பின் ஒரே மலேசியாக் கோட்பாட்டை அந்தப் புத்தகம் பிரதிபலிக்கவில்லை என்றும் அவர் சொன்னார்.


மலேசியாஇன்று!http://www.malaysiaindru.com/?p=62499


“இண்டர்லோக்” பாடநூல் எரிக்கப்படும்; அமைச்சர்கள் பதவி துறக்க வேண்டும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» இண்டர்லோக் பாடநூல் மீட்டுக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு
» 6 புதிய அமைச்சர்கள் இன்று பதவி ஏற்பு
» முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் விழா, 6 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர்
» புதுச்சேரி அமைச்சர்கள் பதவி ஏற்பு : 'ஒன்றியம்' சர்ச்சைக்கு விளக்கம் சொல்கிறார் தமிழிசை!
» “இண்டர்லோக்” நாவலில் இந்தியர்களின் சாதிகள் பற்றி கூறப்பட்டுள்ளது மாற்றப்பட வேண்டும், மஇகா !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum