Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று ஹனுமத் ஜெயந்தி :)
4 posters
Page 1 of 1
இன்று ஹனுமத் ஜெயந்தி :)
அஸாத்ய ஸாதக ஸ்வாமிந்
அஸாத்யம் தவ கிம் வதா
ராம து‘த கிருபாஸ’ந்தோ
மத் கார்யம் ஸாதய ப்ரபோ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி
ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று ஹனுமத் ஜெயந்தி :)
நின்னட்ரோஜு காதா ஹனுமந்த் ஜெயந்தி?
ஏண்ட்டி சுமதி நேடா???
படம் மிக அருமைப்பா... வடைமாலை சார்த்தி இருப்பது மிக அழகு...
அன்பு நன்றிகள்பா ஸ்லோகன்க்கு...
வீரமாருதி கம்பீர மாருதி
தீரமாருதி அதி தீர மாருதி
கீத மாருதி சங்கீத மாருதி
தூத மாருதி ராம தூத மாருதி
ஏண்ட்டி சுமதி நேடா???
படம் மிக அருமைப்பா... வடைமாலை சார்த்தி இருப்பது மிக அழகு...
அன்பு நன்றிகள்பா ஸ்லோகன்க்கு...
வீரமாருதி கம்பீர மாருதி
தீரமாருதி அதி தீர மாருதி
கீத மாருதி சங்கீத மாருதி
தூத மாருதி ராம தூத மாருதி
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: இன்று ஹனுமத் ஜெயந்தி :)
லேது, இ ரோ ஜே (4 ஜனவரி ) அமாவாசை . மார்கழி அமாவாசை தான் ஹனுமத் ஜெயந்தி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று ஹனுமத் ஜெயந்தி :)
இரண்டெழுத்தில் நம் மூச்சிருக்கும் : ராமபக்தியில் சிறந்தவர்களை எண்ணிக்கையில் அடக்கமுடியாது. கோடிக்கணக்கான ஜீவன்கள் ராமநாமத்தை ஜெபித்து மோட்ச கதியைப் பெற்றிருக்கின்றனர். மிகவும் புனிதமானது "ராம' என்னும் இரண்டெழுத்து நாமம். "ராம' என்று சொன்னவருக்கு பாவம் விலகி புண்ணியம் வந்து சேரும். பக்த ரத்தினமான அனுமன் எங்கெல்லாம் ராமநாமம் சொல்லப்படுகிறதோ, எங்கெல்லாம் ராமனின்வரலாறு பேசப்படுகிறதோ அங்கெல்லாம் ஆனந்தக் கண்ணீருடன் மெய்சிலிர்த்தபடி கேட்டுக் கொண்டிருப்பார் என்பது ஐதீகம். அதனால், ராமாயணத்தைப் பாராயணம் செய்பவர்கள் அனுமனுக்கு தனியாக ஒரு மணையை (பலகை) போடுவர். கண்ணுக்கு புலனாகாமல் சூட்சும உடலுடன் அனுமன் அந்த மணையில் அமர்ந்து ராமநாமத்தைக் கேட்பார். வேதாந்த தேசிகன் என்பவர், சங்கல்பசூரியோதயம் என்னும் நூலில்,""அனுமனிடம் நம்மை ஒப்படைத்து விட்டால் பரம்பொருளான ராமசந்திர மூர்த்தியிடம் நிச்சயம் சேர்த்துவிடுவான்'' என்று நம்பிக்கையூட்டுகிறார்.ராமாவதாரம் முடிந்து அனைவரையும் வைகுண்டத்திற்கு அனுப்பி தானும் கிளம்பினார் ராமர். ஆனால், ராமநாமம் ஒலிக்காத வைகுண்டத்திற்குச் செல்ல விரும்பாமல் பூலோகத்திலேயே இருந்து ராமநாமத்தை ஜெபிப்பது என்று தீர்மானித்தார் அனுமன். ராமபிரானும், ""ராமாயணமும், ராமநாமமும் இவ்வுலகில் இருக்கும்வரை என்றென்றும் நீ சிரஞ்சீவியாக இருப்பாயாக!'' என்று வாழ்த்தி வைகுண்டம் கிளம்பினார்.
பத்து கை ஆஞ்சநேயர்: விநாயகருக்கு ஐந்து கரம். பத்து கரம் உள்ளவர் யார்? ஆஞ்சநேயர் தான். இரண்டு கைகள் கொண்ட ஆஞ்சநேயரைத் தான் நீங்கள் தரிசித்திருப்பீர்கள். ஆனால், பத்து கைகள், மூன்று கண்கள் கொண்ட ஆஞ்சநேயரைத் தரிசிக்க வேண்டுமானால், நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அருகிலுள்ள அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி கோயிலுக்குச் செல்ல வேண்டும்.
பத்து கை ஆஞ்சநேயர்: விநாயகருக்கு ஐந்து கரம். பத்து கரம் உள்ளவர் யார்? ஆஞ்சநேயர் தான். இரண்டு கைகள் கொண்ட ஆஞ்சநேயரைத் தான் நீங்கள் தரிசித்திருப்பீர்கள். ஆனால், பத்து கைகள், மூன்று கண்கள் கொண்ட ஆஞ்சநேயரைத் தரிசிக்க வேண்டுமானால், நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அருகிலுள்ள அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி கோயிலுக்குச் செல்ல வேண்டும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று ஹனுமத் ஜெயந்தி :)
தல வரலாறு: இலங்கையில் யுத்தம் முடிந்து ராமர் அயோத்தி திரும்பும் வழியில் பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்கினார். அப்போது அங்கே வந்த நாரதர் ராமனிடம்,""இலங்கையில் யுத்தம் இன்னும் முடிவடையவில்லை. உனது வில்லுக்கு இன்னும் வேலை உள்ளது. அரக்கர்களின் வாரிசுகள் சிலர் உயிருடன் உள்ளனர். அவர்கள் ராவணனின் அழிவால் மிகுந்த கோபத்துடன் உள்ளனர். பழிக்குப்பழி வாங்கும் வகையில் உன்னை அழிப்பதாக சபதம் செய்துள்ளனர். இரக்கபிந்து, இரக்தராட்சகன் என்ற அசுரர்கள் கடலுக்கடியில் தவம் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த தவம் பூர்த்தியானால் இறந்து போன அனைத்து அசுரர்களும் உயிர் பெறுவார்கள். எனவே நீ அவர்களை அழித்து தவத்தை முற்றுப்பெறாமல் செய்ய வேண்டும்,''என்றார்.உடனே ராமன், ""மகரிஷியே! அந்த அரக்கர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் தான். ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் அயோத்தி திரும்பாவிட்டால் தம்பி பரதன் தீக்குண்டத்தில் இறங்கி உயிரை விட்டு விடுவான். எனவே நீங்கள் வேறு யார் மூலமாவது அசுரர்களை அழிக்க ஏற்பாடு செய்யுங்கள்'' என்றார். அதற்கு நாரதர் தன்னுடன் லட்சுமணனை அனுப்பும்படி கேட்டார். "லட்சுமணன் என் நிழல் போன்றவன். அவனை அனுப்ப என்னால் முடியாது. இதற்கெல்லாம் சரியான நபராக ஒருவர் இருக்கிறார். அழியா வரம் பெற்றவரும், அளவிலா ஆற்றல் பெற்றவரும், அஷ்டமா சித்திகள் கற்றவருமானஅனுமனைஅனுப்புகிறேன்,'' என்றார்.
திருமால் அனுமனுக்கு சங்கு, சக்கரத்தை கொடுத்தார். பிரம்மா பிரம்ம கபாலத்தை கெடுத்தார். ருத்ரன் மழு (கோடரி)தந்தார். ராமன் வில்லையும் அம்பையும் கொடுத்தார். இந்திரன் வஜ்ராயுதத்தை கொடுத்தார். கருடன் தனது பங்கிற்கு இறக்கைகளை கொடுத்தார். இப்படி தெய்வங்கள் வழங்கிய ஆயுதங்களுடன் ஆஞ்சநேயர் பத்து கரங்களில் பத்து விதமான ஆயுதங்களுடன் காட்சிதந்தார். சிவன், தனது சிறப்புக்குரிய நெற்றிக்கண்ணை வழங்கினார். இந்த ஆயுதங்களுடன் அனுமன் புறப்பட்டு கடலுக்கடியில் தவமிருந்த அசுரர்களை அழித்து அயோத்தி திரும்பினார். திரும்பும் வழியில் கொண்டு சென்ற ஆயுதங்களுடன் ஆனந்தமயமாக இத்தலத்தில்தங்கியதால் "ஆனந்தமங்கலம்' என பெயர் பெற்றது. நாளடைவில் அனந்தமங்கலம் ஆனது.
அனுமனின் சிறப்பு: அனுமன் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர். தலைவன் இட்ட பணியை சிறப்பாக முடித்தவர். அனுமனைப்போல் ஒரு செயல் வீரனை இந்த உலகில் பார்ப்பது கடினம். அனுமனை வழிபாடு செய்பவர்களுக்கு எந்த கிரக பாதிப்பும் தோஷமும் இருக்காது. இவருக்கு வெண்ணெய்க் காப்பு சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் நமது குறைகள் வெண்ணை உருகுவது போல் உருகி விடும்.
கோயில் அமைப்பு: மூலவர் வாசுதேவபெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் அருள்பாலிக்கிறார். உற்சவர் ராஜகோபால சுவாமி பாமா, ருக்மணியுடன் வீற்றிருக்கிறார். செங்கமலவல்லி தாயார் இங்கு அருள் செய்கிறாள். தெற்கு நோக்கி தனி சன்னதியில் "திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர்' எழுந்தருளியுள்ளார். கோயிலுக்கு வெளியே தனி கோயிலில் சதுர்புஜ ஆஞ்சநேயர், மான் வாகனத்துடன் அருள்பாலிக்கிறார். பத்து கையானைதுதித்திடு மனமே, பரமானந்தம் கிடைத்திடும் தினமே என்று இவ்வூர் அனுமனைப் பாடுவர்.
திருவிழா: அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி. அமாவாசையன்று சிறப்பு பூஜை உண்டு.
பூஜை நேரம்: காலை 8- 1 மணி, மாலை 4- 8 மணி.
இருப்பிடம்:மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் வழியாக நாகப்பட் டினம் செல்லும் வழியில் அனந்தமங்கலம் (25 கி.மீ.,) உள்ளது.போன்: 04364- 289 888, 256 221
செல்வம் பெருக்கும் ஸ்லோகம்: சுந்தர காண்டத்தில் அனுமன் கடலைத்
தாண்டுவதற்கு முன் சொன்ன ஸ்லோகத்திற்கு ஜெய பஞ்சகம் என்று பெயர். இதைச் சொல்லி அனுமனை வழிபட்டால், வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
""ஜயத்யதிபலோ ராமோ லக்ஷ்மணஸ்ச மஹாபல:
ராஜாதி ஜயதி சுக்ரீவோ ராகவேன அபி பாலித:
தாஸோஹம் கோஸலேந்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்ட கர்மன:
ஹனுமான் சத்ரு வைத்யாநாம் நிஹந்த்ர மாருதாத்மஜ:
ராவண ஸஹஸ்ரம்மே யுத்தே ப்ரதி பலம் பவேத்
ஸலாபிஸ்து ப்ரஹரத; பாத வைச்ச ஸஹஸ்ரஸ:''
வெற்றி தரும் ஸ்லோகம்: அனுமன் சீதாதேவியை கண்டுபிடிக்க அசோகவனத்திற்கு செல்வதற்கு முன் சொன்ன ஸ்லோகத்தைக் கூறி, எந்தச் செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி உண்டாகும்.
""நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ்யை ச தஸ்யை ஜன காத்மஜாயை!
நமோஸ்து ருத்ரேந்திர யமாலி னேப்யோ
நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்யப்!!''
திருமால் அனுமனுக்கு சங்கு, சக்கரத்தை கொடுத்தார். பிரம்மா பிரம்ம கபாலத்தை கெடுத்தார். ருத்ரன் மழு (கோடரி)தந்தார். ராமன் வில்லையும் அம்பையும் கொடுத்தார். இந்திரன் வஜ்ராயுதத்தை கொடுத்தார். கருடன் தனது பங்கிற்கு இறக்கைகளை கொடுத்தார். இப்படி தெய்வங்கள் வழங்கிய ஆயுதங்களுடன் ஆஞ்சநேயர் பத்து கரங்களில் பத்து விதமான ஆயுதங்களுடன் காட்சிதந்தார். சிவன், தனது சிறப்புக்குரிய நெற்றிக்கண்ணை வழங்கினார். இந்த ஆயுதங்களுடன் அனுமன் புறப்பட்டு கடலுக்கடியில் தவமிருந்த அசுரர்களை அழித்து அயோத்தி திரும்பினார். திரும்பும் வழியில் கொண்டு சென்ற ஆயுதங்களுடன் ஆனந்தமயமாக இத்தலத்தில்தங்கியதால் "ஆனந்தமங்கலம்' என பெயர் பெற்றது. நாளடைவில் அனந்தமங்கலம் ஆனது.
அனுமனின் சிறப்பு: அனுமன் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர். தலைவன் இட்ட பணியை சிறப்பாக முடித்தவர். அனுமனைப்போல் ஒரு செயல் வீரனை இந்த உலகில் பார்ப்பது கடினம். அனுமனை வழிபாடு செய்பவர்களுக்கு எந்த கிரக பாதிப்பும் தோஷமும் இருக்காது. இவருக்கு வெண்ணெய்க் காப்பு சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் நமது குறைகள் வெண்ணை உருகுவது போல் உருகி விடும்.
கோயில் அமைப்பு: மூலவர் வாசுதேவபெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் அருள்பாலிக்கிறார். உற்சவர் ராஜகோபால சுவாமி பாமா, ருக்மணியுடன் வீற்றிருக்கிறார். செங்கமலவல்லி தாயார் இங்கு அருள் செய்கிறாள். தெற்கு நோக்கி தனி சன்னதியில் "திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர்' எழுந்தருளியுள்ளார். கோயிலுக்கு வெளியே தனி கோயிலில் சதுர்புஜ ஆஞ்சநேயர், மான் வாகனத்துடன் அருள்பாலிக்கிறார். பத்து கையானைதுதித்திடு மனமே, பரமானந்தம் கிடைத்திடும் தினமே என்று இவ்வூர் அனுமனைப் பாடுவர்.
திருவிழா: அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி. அமாவாசையன்று சிறப்பு பூஜை உண்டு.
பூஜை நேரம்: காலை 8- 1 மணி, மாலை 4- 8 மணி.
இருப்பிடம்:மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் வழியாக நாகப்பட் டினம் செல்லும் வழியில் அனந்தமங்கலம் (25 கி.மீ.,) உள்ளது.போன்: 04364- 289 888, 256 221
செல்வம் பெருக்கும் ஸ்லோகம்: சுந்தர காண்டத்தில் அனுமன் கடலைத்
தாண்டுவதற்கு முன் சொன்ன ஸ்லோகத்திற்கு ஜெய பஞ்சகம் என்று பெயர். இதைச் சொல்லி அனுமனை வழிபட்டால், வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
""ஜயத்யதிபலோ ராமோ லக்ஷ்மணஸ்ச மஹாபல:
ராஜாதி ஜயதி சுக்ரீவோ ராகவேன அபி பாலித:
தாஸோஹம் கோஸலேந்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்ட கர்மன:
ஹனுமான் சத்ரு வைத்யாநாம் நிஹந்த்ர மாருதாத்மஜ:
ராவண ஸஹஸ்ரம்மே யுத்தே ப்ரதி பலம் பவேத்
ஸலாபிஸ்து ப்ரஹரத; பாத வைச்ச ஸஹஸ்ரஸ:''
வெற்றி தரும் ஸ்லோகம்: அனுமன் சீதாதேவியை கண்டுபிடிக்க அசோகவனத்திற்கு செல்வதற்கு முன் சொன்ன ஸ்லோகத்தைக் கூறி, எந்தச் செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி உண்டாகும்.
""நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ்யை ச தஸ்யை ஜன காத்மஜாயை!
நமோஸ்து ருத்ரேந்திர யமாலி னேப்யோ
நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்யப்!!''
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஐந்தே நிமிடத்தில் சுந்தரகாண்டம் படியுங்க
சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும். நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும். எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். வாழ்வில் நம்பிக்கை ஏற்படும். நோய்கள் விலகும். ராமச்சந்திர மூர்த்தியையும், ராமபக்தனான அனுமனையும் மனதில் தியானித்து, இந்த எளிய சுந்தரகாண்டத்தைப் படிப்போருக்கு வாழ்வில் எல்லா நன்மைகளும் வந்துசேரும்.
சுந்தர காண்டம் என்று பெயர் சொல்லுவார்
இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்
கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன
கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது.
அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே
ஆயத்தமாகி நின்றான், அனைத்து வானரங்களும்
அங்கதனும், ஜாம்பவானும் அன்புடன்
விடை கொடுத்து வழியனுப்பினரே!
வானவர்கள் தானவர்கள் வருணாத் தேவர்கள்
வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!
மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க
மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து
சுரசையை வெற்றி கண்டு ஹிம்சை வதம் செய்து
சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சேர்ந்தான்.
இடக்காகப் பேசிய இலங்கையின் தேவதையை
இடக்கையால் தண்டித்து இலங்கையைக் கலக்கினான்.
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை அங்கும்
இங்கும் தேடியே அசோக வனத்தை அடைந்தான்.
கிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனைத் தியானம் செய்யும்
சீதா பிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்.
ராவணன் வெகுண்டிட, ராட்சசியர் அரண்டிட
வைதேகி கலங்கிட, வந்தான் துயர் துடைக்க
கணையாழியைக் கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி
சூடாமணியைப் பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர்
அன்னையின் கண்ணீர் கொண்டு, அரக்கர் மேல் கோபம்
கொண்டு, அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.
பிரம்மாஸ்திரத்தால் பிணைத்திட்ட ஆஞ்சநேயர்
பட்டாபிராமன் பெயர் சொல்ல
வெகுண்ட இலங்கை வேந்தன் வையுங்கள் தீ
வாலுக்கென்றான். வைத்த நெருப்பினால் வெந்ததே
இலங்கை நகரம். அரக்கனின் அகந்தையை அழித்திட்ட
அனுமானும் அன்னை ஜானகியிடம்
அனுமதி பெற்றுக் கொண்டு
ஆகாய மார்க்கத்தில் தாவி வந்தான்.
அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.
ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ரீராமனிடம் ஆஞ்சநேயர்
"கண்டேன் சீதையை' என்றான்.
வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி
சொல்லின் செல்வன் ஆஞ்சநேயர் சூடாமணியைக்
கொடுத்தான், மனம் கனிந்து மாருதியை
மார்போடணைத்து ஸ்ரீராமர் மைதிலியை சீறை மீட்க சித்தமானார்.
ஆழ்கடலில் அற்புதமாய் அணை கட்டி படைகள் சூழ
அனுமானும், இலக்குவனும் உடன் புறப்பட்டனர்.
அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான்
அதர்மத்தை அயோத்தி சென்று ஸ்ரீராமர்
அகிலம் புகழ ஆட்சி செய்தான். அவனை சரண்
அடைந்தோருக்கு அவன் அருள் என்றும் உண்டு.
எங்கே எங்கே ரகுநாத கீர்த்தனமோ அங்கே அங்கே
சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து
ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சநேயா!
உன்னைப் பணிகின்றோம், பன்முறை உன்னை
பணிகின்றோம், பன்முறை உன்னைப் பணிகின்றோம்.
சுந்தர காண்டம் என்று பெயர் சொல்லுவார்
இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்
கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன
கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது.
அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே
ஆயத்தமாகி நின்றான், அனைத்து வானரங்களும்
அங்கதனும், ஜாம்பவானும் அன்புடன்
விடை கொடுத்து வழியனுப்பினரே!
வானவர்கள் தானவர்கள் வருணாத் தேவர்கள்
வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!
மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க
மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து
சுரசையை வெற்றி கண்டு ஹிம்சை வதம் செய்து
சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சேர்ந்தான்.
இடக்காகப் பேசிய இலங்கையின் தேவதையை
இடக்கையால் தண்டித்து இலங்கையைக் கலக்கினான்.
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை அங்கும்
இங்கும் தேடியே அசோக வனத்தை அடைந்தான்.
கிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனைத் தியானம் செய்யும்
சீதா பிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்.
ராவணன் வெகுண்டிட, ராட்சசியர் அரண்டிட
வைதேகி கலங்கிட, வந்தான் துயர் துடைக்க
கணையாழியைக் கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி
சூடாமணியைப் பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர்
அன்னையின் கண்ணீர் கொண்டு, அரக்கர் மேல் கோபம்
கொண்டு, அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.
பிரம்மாஸ்திரத்தால் பிணைத்திட்ட ஆஞ்சநேயர்
பட்டாபிராமன் பெயர் சொல்ல
வெகுண்ட இலங்கை வேந்தன் வையுங்கள் தீ
வாலுக்கென்றான். வைத்த நெருப்பினால் வெந்ததே
இலங்கை நகரம். அரக்கனின் அகந்தையை அழித்திட்ட
அனுமானும் அன்னை ஜானகியிடம்
அனுமதி பெற்றுக் கொண்டு
ஆகாய மார்க்கத்தில் தாவி வந்தான்.
அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.
ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ரீராமனிடம் ஆஞ்சநேயர்
"கண்டேன் சீதையை' என்றான்.
வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி
சொல்லின் செல்வன் ஆஞ்சநேயர் சூடாமணியைக்
கொடுத்தான், மனம் கனிந்து மாருதியை
மார்போடணைத்து ஸ்ரீராமர் மைதிலியை சீறை மீட்க சித்தமானார்.
ஆழ்கடலில் அற்புதமாய் அணை கட்டி படைகள் சூழ
அனுமானும், இலக்குவனும் உடன் புறப்பட்டனர்.
அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான்
அதர்மத்தை அயோத்தி சென்று ஸ்ரீராமர்
அகிலம் புகழ ஆட்சி செய்தான். அவனை சரண்
அடைந்தோருக்கு அவன் அருள் என்றும் உண்டு.
எங்கே எங்கே ரகுநாத கீர்த்தனமோ அங்கே அங்கே
சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து
ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சநேயா!
உன்னைப் பணிகின்றோம், பன்முறை உன்னை
பணிகின்றோம், பன்முறை உன்னைப் பணிகின்றோம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று ஹனுமத் ஜெயந்தி :)
படமும் ஸ்லோகமும் தந்தருளிமைக்கு, Krishnaama
அவர்களுக்கு. மிக்க நன்றி.
பெயரில் Krishnaama . கூறியதும் ராமநாமா .என்னே ஒற்றுமை.!
ரமணியன் .
அவர்களுக்கு. மிக்க நன்றி.
பெயரில் Krishnaama . கூறியதும் ராமநாமா .என்னே ஒற்றுமை.!
ரமணியன் .
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: இன்று ஹனுமத் ஜெயந்தி :)
நன்றி கிருஷ்ணம்மா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» இன்று ஹனுமத் ஜெயந்தி !
» இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014
» 21st. Dec.ஹனுமத் ஜெயந்தி ...என் 29000 வது பதிவு - கிருஷ்ணாம்மா :)
» இன்று அனுமன் ஜெயந்தி
» இன்று கிருஷ்ண ஜெயந்தி
» இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014
» 21st. Dec.ஹனுமத் ஜெயந்தி ...என் 29000 வது பதிவு - கிருஷ்ணாம்மா :)
» இன்று அனுமன் ஜெயந்தி
» இன்று கிருஷ்ண ஜெயந்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|